acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ”உலகக் கோப்பையையும் வெல்லுமா இங்கிலாந்து அணி..?” first appeared on Madras Murasu.
]]>1992-க்குப் பிறகு, 2015 வரை இரு முறை மட்டுமே உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றுக்கு இங்கிலாந்து தகுதி பெற்றது. 1996, 2011 என இரண்டு முறையும் காலிறுதிச் சுற்றில் தோல்வியடைந்தது. 2015-ல் லீக் சுற்றுடன் வெளியேறியது.
2015 படுதோல்வி இங்கிலாந்தைப் பெரிதளவில் பாதித்தது. இதன் எதிரொலியாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் புரட்சியை உண்டாக்கிய இயான் மார்கன் தலைமையிலான இங்கிலாந்து, 2019-ல் லார்ட்ஸில் உலகக் கோப்பையை ஏந்தியது. வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து வாய்ப்புகளை அளித்தது, ஸ்டிரைக் ரேட்டை அதிகரித்தது, நிறைய வெள்ளைப் பந்து ஆட்டங்கள் விளையாடியது என இயான் மார்கன் தலைமையில் அதிரடியான மாற்றங்கள் செய்யப்பட்டன. இதற்கான பலனையும் இங்கிலாந்து அனுபவித்தது.
இயான் மார்கன் ஓய்வுக்குப் பிறகும் இதே பாணியைக் கடைப்பிடித்து வரும் ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து, கடந்தாண்டு டி20 உலகக் கோப்பையை வென்றது. இதே முனைப்புடன் உலகக் கோப்பையையும் வெல்லுமா?
கடந்த உலகக் கோப்பைக்குத் தயார் ஆனதைப்போல இந்த முறை இங்கிலாந்து தயாராகவில்லையோ என்கிற எண்ணம் வருகிறது. மற்ற அணிகள் உலகக் கோப்பைக்காக 50 ஓவர் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்தபோது இங்கிலாந்து, நியூசிலாந்துக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடத் திட்டமிட்டது. பிறகு உலகக் கோப்பைக்காக ஒரு டி20 ஆட்டம் குறைக்கப்பட்டு, ஒருநாள் தொடரில் கூடுதலாக ஒரு ஆட்டம் சேர்க்கப்பட்டது.
இங்கிலாந்தின் வெள்ளைப் பந்து அணிகளின் பயிற்சியாளராக மேத்யூ மாட் நியமிக்கப்பட்டதிலிருந்து இருநாடுகளுக்கு இடையிலான தொடர்களின் முடிவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை.
ஆஸ்திரேலிய அணி கடந்த இரு மாதங்களில் மட்டும் தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியாவுக்கு எதிராக 8 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியது. நியூசிலாந்து அணி இங்கிலாந்துக்கும், வங்கதேசத்துக்கும் எதிராக 7 ஆட்டங்களில் விளையாடியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் ஆசியக் கோப்பையை விளையாடிவிட்டு வருகின்றன.
இங்கிலாந்தோ கடந்த 13 மாதங்களில் வெறும் 9 ஒருநாள் ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ளது.
காயம் காரணமாக இடைவெளி எடுத்துக்கொண்ட ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட் உள்ளிட்டோர் கடந்தாண்டு ஜூலையில் தென்னாப்பிரிக்காவுடனான தொடருக்குப் பிறகு, நியூசிலாந்து தொடரில்தான் ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ளார்கள். ஓய்விலிருந்து திரும்பி வந்துள்ள பென் ஸ்டோக்ஸும் கடைசியாக கடந்தாண்டு ஜூலையில் நடைபெற்ற அதே தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடருக்குப் பிறகு நியூசிலாந்து தொடரில் தான் விளையாடினார்.
2015 – 2019 உலகக் கோப்பைகள் இடையே 88 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடிய இங்கிலாந்து, 2019 – 2023 உலகக் கோப்பைகள் இடையே வெறும் 43 ஒருநாள் ஆட்டங்களில்தான் விளையாடியுள்ளது. கடைசியாக நடைபெற்ற 3 ஆட்டங்கள் கொண்ட அயர்லாந்துக்கு எதிரான தொடரில் உலகக் கோப்பைக்குத் தேர்வான வீரர்கள் விளையாடவில்லை.
கடந்த உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்காக அதிக ரன்கள் எடுத்த ஜோ ரூட் 2015 – 2019 உலகக் கோப்பைகள் இடையே 78 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடினார். இதே ஜோ ரூட் 2019 உலகக் கோப்பைக்குப் பிறகு வெறும் 19 ஒருநாள் ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ளார்.
இந்த மாற்றம் வீரர்களின் செயல்பாடுகளிலும் வெளிப்பட்டுள்ளது. நியூசிலாந்து தொடரில் 3 ஆட்டங்களில் விளையாடிய பேர்ஸ்டோ மொத்தம் 19 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஜோ ரூட் 4 ஆட்டங்களில் 39 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஒருநாள் போட்டியில் பழைய ஃபார்மை மீட்டெடுப்பதற்காக, அயர்லாந்துக்கு எதிரான தொடரின் முதல் ஆட்டத்தில் மட்டும் சேர்த்துக்கொள்ளும்படி தாமாக கேட்டுக்கொண்டார் ஜோ ரூட். ஆனால், மழை காரணமாக அந்த ஆட்டமும் கைவிடப்பட்டது. இந்தியாவுடனான பயிற்சி ஆட்டமும் மழையால் கைவிடப்பட்டது. வங்கதேசத்துக்கு எதிராக களத்தில் நேரத்தை செலவிட்ட ரூட், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 40 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார்.
இருந்தபோதிலும் பென் ஸ்டோக்ஸ் வருகை, மிக நீண்ட பேட்டிங் வரிசை, வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர்கள், சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர்கள் எனப் பெரும் படையை வைத்துள்ளதால் இங்கிலாந்தும் அபாயகரமான அணியாகவே உள்ளது.
டேவிட் மலான் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் 92.33 சராசரியில் 277 ரன்கள் குவித்துள்ளார். தொடக்க பேட்டிங்கில் சிக்கல் ஏற்பட்டால் கடைசி நேரத்தில் ஜேசன் ராய்-க்குப் பதில் மாற்று வீரராக சேர்க்கப்பட்ட இங்கிலாந்தின் புதிய நட்சத்திரம் ஹாரி புரூக் அதிரடி காட்ட உள்ளார்.
பென் ஸ்டோக்ஸ் ஓய்விலிருந்து திரும்பி வந்ததுபோல் அல்லாமல் நியூசிலாந்துடனான மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் 182 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். அவர் முழுநேர பேட்டராக மட்டுமே விளையாடுகிறார். என்றாலும்கூட அணியின் பட்டியலில் இவரது பெயர் இடம்பெற்றிருப்பதே எதிரணிக்கு அழுத்தத்தை உண்டாக்கும்.
மொயீன் அலி, லியம் லிவிங்ஸ்டன் ஆகியோர் பேட்டிங்கில் கைகொடுப்பது மட்டுமில்லாமல் சுழற்பந்துவீச்சில் ஒத்துழைக்கவுள்ளார்கள். லிவிங்ஸ்டன் சூழலுக்கு ஏற்ப ஆஃப் ஸ்பின், லெக் ஸ்பின் என இரண்டையும் வீசக் கூடியவர். பேட்டிங்கிலும் இவர் நல்ல ஃபார்மில் உள்ளார்.
இந்தியாவில் நடைபெறவுள்ளதால் பிரதான சுழற்பந்துவீச்சாளர் அடில் ரஷித் இந்த அணியில் மிக முக்கியமான தாக்கத்தை உண்டாக்கப் போகிறார். அனைத்து வகையான ஸ்பின் வகைகளும் இருப்பது இங்கிலாந்துக்குக் கூடுதல் பலம்.
பந்துவீச்சில் இங்கிலாந்து அணி பெரும்பாலும் ஒவ்வொரு பணிக்கும் இருவரை வைத்துள்ளது. வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர்களாக சாம் கரண், கிறிஸ் வோக்ஸ் இருக்கிறார்கள். இடக்கை வேகப்பந்துவீச்சுக்கு டேவிட் வில்லி, ரீஸ் டாப்லே இருக்கிறார்கள். சூழலுக்கு ஏற்ப வீரர்களைத் தேர்வு செய்துகொள்வதற்கான வாய்ப்புகளைத் தருகிறது.
அதிவேகப்பந்துவீச்சுக்கு மார்க் வுட் இருக்கிறார். இந்தியாவில் நடைபெறுவதால் இவரது வேகம் இங்கிலாந்துக்கு நிச்சயமாக நடு ஓவர்களில் உதவும். உலகக் கோப்பைக்கான அணியில் இல்லாதபட்சத்திலும் ஜோஃப்ரா ஆர்ச்சர் மாற்று வீரராக அணியுடன் பயணிக்கிறார்.
விளையாடிய ஆட்டங்களின் எண்ணிக்கைகளைக் கொண்டு பார்த்தால் தயார் நிலையில் இல்லாத அணியாகத் தோற்றமளித்தாலும், உலகக் கோப்பையை வெல்வதற்குத் தேவையான மிக நீண்ட பேட்டிங் வரிசை, ஆல்-ரவுண்டர்கள் என பலம் வாய்ந்த அணியாகவே இங்கிலாந்து உள்ளது.
இங்கிலாந்து அணி:
ஜானி பேர்ஸ்டோ, டேவிட் மலான், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), லியம் லிவிங்ஸ்டன், மொயீன் அலி, சாம் கரண், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், மார்க் வுட், ஹாரி புரூக், டேவிட் வில்லி, ரீஸ் டாப்லே, கஸ் அட்கின்சன்.
இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு எதிராக அக்டோபர் 29-ம் தேதி லக்னௌவில் விளையாடுகிறது. இதுதவிர, இங்கிலாந்து விளையாடும் பெரும்பாலான ஆடுகளங்கள் மும்பை, கொல்கத்தா, தரம்சாலா என பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளங்களாகவே உள்ளன.
சூழல்களைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு உலகக் கோப்பையைத் தக்கவைக்குமா இங்கிலாந்து..?
The post ”உலகக் கோப்பையையும் வெல்லுமா இங்கிலாந்து அணி..?” first appeared on Madras Murasu.
]]>The post ”ஆடவர் அணிகளுக்கு நிகராக மகளிர் அணிகளுக்குப் பரிசுத்தொகை..!” ஐசிசி first appeared on Madras Murasu.
]]>ஐசிசி போட்டிகளில் ஆண்களுக்கு நிகரான பரிசுத்தொகை மகளிர் அணிகளுக்கும் வழங்கப்படவுள்ளது. கிரிக்கெட் வரலாற்றில் இது குறிப்பிடத்தக்க தருணம். சம அளவிலான பரிசுத்தொகை வழங்குவதை இலக்காகக் கொண்டு 2017 முதல் ஐசிசி போட்டிகளில் மகளிர் கிரிக்கெட்டுக்கு ஆண்டுதோறும் பரிசுத்தொகை அதிகரிக்கப்பட்டு வருகிறது. இனிமேல் ஐசிசி ஆடவர் உலகக் கோப்பைப் போட்டியில் வழங்கப்படும் பரிசுத்தொகையே மகளிர் உலகக் கோப்பைப் போட்டிக்கும் வழங்கப்படும். இந்த நடைமுறை டி20 உலகக் கோப்பை, யு-19 உலகக் கோப்பைக்கும் பொருந்தும்.
கிரிக்கெட் அனைவருக்குமான விளையாட்டு. கிரிக்கெட்டில் ஒவ்வொருவரின் பங்களிப்பையும் சமமாகக் கொண்டாடி, மதிப்பளித்திடுவதற்கு ஐசிசியின் இந்த முடிவு வலுசேர்க்கிறது என்றார். சமீபத்தில் நடைபெற்ற ஆடவர் டி20 உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணிக்கு ரூ. 13 கோடியும் மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு ரூ. 8.20 கோடியும் பரிசுத்தொகையாகக் கிடைத்தன.
இதுதவிர டெஸ்ட் கிரிக்கெட்டில் குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்துவீசாதபோது விதிக்கப்படும் அபராதங்களிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நேரத்தைத் தாண்டி ஓவர் வீசும்போது, ஒவ்வொரு வீரருக்கும் ஆட்ட ஊதியத்திலிருந்து ஓவருக்கு 5 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படும். அதிகபட்சமாக ஆட்ட ஊதியத்தில் 50 சதவிகிதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிலிருந்தே அமலுக்கு வருகிறது.
80 ஓவர்களில் புதிய பந்தை மாற்றிக்கொள்ளும் நடைமுறை இருப்பதால், ஓர் அணி 80 ஓவர்களுக்குள் ஆட்டமிழக்கும்பட்சத்தில் இந்த அபராதம் விதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ”ஆடவர் அணிகளுக்கு நிகராக மகளிர் அணிகளுக்குப் பரிசுத்தொகை..!” ஐசிசி first appeared on Madras Murasu.
]]>The post இந்தியா, விளையாட்டில் அரசியலைக் கொண்டு வருகிறது என்று பாகிஸ்தான் விளையாட்டுத் துறை அமைச்சர் எசான் மசாரி விமர்சித்துள்ளார். first appeared on Madras Murasu.
]]>The post இந்தியா, விளையாட்டில் அரசியலைக் கொண்டு வருகிறது என்று பாகிஸ்தான் விளையாட்டுத் துறை அமைச்சர் எசான் மசாரி விமர்சித்துள்ளார். first appeared on Madras Murasu.
]]>The post குப்பையை புதையலாக மாற்றும் வித்தை தெரிந்தவர் தோனி: ஹைடன் புகழாரம்! first appeared on Madras Murasu.
]]>The post குப்பையை புதையலாக மாற்றும் வித்தை தெரிந்தவர் தோனி: ஹைடன் புகழாரம்! first appeared on Madras Murasu.
]]>The post மும்பைக்கு இனிப்பான வெற்றி-உபயம் சூர்யகுமார் first appeared on Madras Murasu.
]]>மும்பையின் வான்கடேவில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். காயம் காரணமாக ஆர்ச்சர் ஐபிஎல் போட்டியிலிருந்து விலக, அவருக்குப் பதிலாக கிறிஸ் ஜோர்டான் மும்பை அணியில் இணைந்தார். அதேபோல, கரண் சர்மாவுக்குப் பதிலாக வைஷாக் பெங்களூர் அணிக்குத் திரும்பினார்.
பெஹ்ரன்டார்ஃப் அட்டகாசமாக முதல் ஓவரை வீசினார். நான்காவது பந்திலேயே டு ப்ளஸியின் கேட்ச்சைத் தவறவிட்டார் வதேரா. அதற்கான பலனை மும்பை அணி அனுபவித்தது. எனினும் அதே ஓவரில் ஒரு ரன்னில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் கோலி.
சாவ்லா வீசிய 2-வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை டு ப்ளஸி விளாசினார். அதற்கு முட்டுக்கட்டை போடும் விதத்தில் 3-வது ஓவரில் ராவத்தை ஆட்டமிழக்கச் செய்தார் பெஹ்ரன்டார்ஃப்.
கிரீனின் 4-வது ஓவரில் டு ப்ளஸி 2 பவுண்டரிகளை அடிக்க, பவர்பிளேயில் 56 ரன்களை எட்டியது பெங்களூர். பவர்பிளே முடிந்தாலும் அடுத்தடுத்த ஓவர்களிலும் மேக்ஸ்வெல் – டு பிளஸி இணையின் அதிரடி தொடர்ந்தது. ஜோர்டான் வீசிய 7-வது ஓவரில் இரண்டு பவுண்டரிகள், ஒரு சிக்ஸரை அடித்தார் மேக்ஸ்வெல். 25 பந்துகளில் மேக்ஸ்வெல் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார்.
10 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 104 ரன்கள் எடுத்தது. டு ப்ளஸி 30 பந்துகளில் அரை சதம் அடித்தார். 62 பந்துகளில் 120 ரன்களைக் குவித்து மும்பை பந்துவீச்சைப் பந்தாடியது இந்தக் கூட்டணி. ஐபிஎல் 2023 போட்டியில் இருவரும் நான்கு முறை 100+ ரன்கள் கூட்டணி அமைத்துள்ளார்கள்.
33 பந்துகளில் 68 ரன்கள் குவித்த மேக்ஸ்வெல் ஆட்டமிழக்க, கார்த்திகேயா வீசிய 14-வது ஓவரில் 1 ரன்னுடன் விக்கெட்டைப் பறிகொடுத்தார் லோம்ரோர். மற்றொரு பக்கம் நிலைத்து ஆடிய டு ப்ளஸி 65 ரன்களில் கிரீன் ஓவரில் ஆட்டமிழந்தார்.
நீண்ட காலத்துக்குப் பிறகு ஐபிஎல் போட்டிக்குத் திரும்பிய கேதார் ஜாதவ் பவுண்டரியுடன் தனது இன்னிங்ஸை தொடங்கினார். கார்த்திகேயா வீசிய 18-வது ஓவரில் இரு பவுண்டரிகள், ஒரு சிக்ஸரை விளாசிய தினேஷ் கார்த்திக் 30 ரன்களில் அவுட் ஆனார்.
19-வது ஓவரில் ஹஸரங்கா 2 பவுண்டரிகளை அடித்தார். பெங்களூர் 200 ரன்களை எட்டுமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி ஓவரை அட்டகாசமாக வீசிய மத்வால் 6 ரன்களை மட்டுமே கொடுத்தார். இறுதியில் 199 ரன்களைக் குவித்தது பெங்களூர்.
சிராஜ் வீசிய முதல் ஓவரை பவுண்டரியுடன் தொடங்கினார் இஷான் கிஷன். கடந்த இரண்டு ஆட்டங்களிலும் டக் அவுட்டான ரோஹித் இந்த ஆட்டத்தில் தான் சந்தித்த முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தார்.
ஹேசில்வுட் வீசிய ஓவரில் இரண்டு பவுண்டரிகளையும், சிராஜ் வீசிய 3-வது ஓவரில் இரண்டு சிக்ஸர்களையும் பறக்கவிட்டார் இஷான் கிஷன். 5-வது ஓவரில் இஷான் கிஷன், ரோஹித் சர்மாவின் விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஹஸரங்கா.
அதன் பின்னர் பெங்களூரின் சோதனைக்காலம் தொடங்கியது. சூர்யகுமார் யாதவ் – வதேரா இணை அமர்க்களமாக விளையாடியது. 10 ஓவர்கள் முடிவில் 99 ரன்களை எடுத்தது மும்பை.
ஹஸரங்கா வீசிய 11-வது ஓவரில் ஆளுக்கொரு சிக்ஸரை விளாசினர். அடுத்த ஓவரில் சூர்யகுமார் யாதவ் இரண்டு பவுண்டரிகளை அடித்தார். 10 ஓவர்களுக்குப் பிறகு பவுண்டரிகளும் சிக்ஸர்களும் தொடர்ந்து அடிக்கப்பட்டன. சூர்யகுமாரின் அதிரடியைக் கட்டுப்படுத்த முடியாமல் பெங்களூர் பந்துவீச்சாளர்கள் திணறினர். 26 பந்துகளில் அரை சதம் எடுத்தார் சூர்யகுமார்.
11 -16 ஓவர்களில் எடுக்கப்பட்ட ரன்கள்
15, 10, 17, 13, 20, 19 (16-வது ஓவர்).
35 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் மறக்க முடியாத ஐபிஎல் ஆட்டத்தை வழங்கி 83 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் சூர்யகுமார் யாதவ். டிம் டேவிட் டக் அவுட் ஆனாலும் மும்பை அணி, 16.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வதேரா 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். புள்ளிகள் பட்டியலில் 3-ம் இடத்துக்கு முன்னேறியது மும்பை. மேலும் கடந்த 4 ஆட்டங்களில் 3 முறை 200+ ரன்கள் இலக்கை வெற்றிகரமாக எட்டியுள்ளது.
The post மும்பைக்கு இனிப்பான வெற்றி-உபயம் சூர்யகுமார் first appeared on Madras Murasu.
]]>