Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#dmk - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Mon, 29 Jul 2024 04:45:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ’’ இது எந்த விதத்தில் நியாயம்? ’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம் https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%258e%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25a4%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25bf%25e0%25ae%25af https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af/#respond Mon, 29 Jul 2024 04:45:55 +0000 https://madrasmurasu.com/?p=9452 ’’ஒட்டுமொத்தமாகச் சொல்லவேண்டும் என்றால், தமிழ்நாட்டுக்குப் புதிய திட்டங்களைத் அறிவிக்கவில்லை என்பதோடு – ஏற்கனவே நடைபெற்று வரும் திட்டங்களுக்கான நிதியையும் குறைக்கும் வஞ்சக முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது இந்த ஒன்றிய அரசு’’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: வணக்கம்! இந்நேரம் டெல்லியில் நடைபெறும், பிரதமர் தலைமையிலான ‘நிதி ஆயோக்’ கூட்டத்தில் பங்கெடுத்திருக்க வேண்டிய நான் – ஒன்றிய பா.ஜ.க. அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை கொண்ட நிதிநிலை அறிக்கையால், நீதி கேட்டு, மக்கள் […]

The post ’’ இது எந்த விதத்தில் நியாயம்? ’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம் first appeared on Madras Murasu.

]]>
’’ஒட்டுமொத்தமாகச் சொல்லவேண்டும் என்றால், தமிழ்நாட்டுக்குப் புதிய திட்டங்களைத் அறிவிக்கவில்லை என்பதோடு – ஏற்கனவே நடைபெற்று வரும் திட்டங்களுக்கான நிதியையும் குறைக்கும் வஞ்சக முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது இந்த ஒன்றிய அரசு’’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:

வணக்கம்! இந்நேரம் டெல்லியில் நடைபெறும், பிரதமர் தலைமையிலான ‘நிதி ஆயோக்’ கூட்டத்தில் பங்கெடுத்திருக்க வேண்டிய நான் – ஒன்றிய பா.ஜ.க. அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை கொண்ட நிதிநிலை அறிக்கையால், நீதி கேட்டு, மக்கள் மன்றமான உங்கள் முன் பேச வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன். தமிழ்நாட்டில் நடைபெறும் உங்களின் திராவிட மாடல் அரசு, கடந்த மூன்றாண்டு காலமாக எத்தகைய முற்போக்கு மற்றும் தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டு வருகிறதென்று, உங்கள் எல்லோருக்குமே நன்கு தெரியும்!

நமது அரசின் திட்டங்களின் பயன்கள், ஒவ்வொரு குடும்பத்துக்கும் – ஒவ்வொரு குடிமகனுக்கும் நேரடியாகக் கிடைக்கிறது! அதனால்தான், தி.மு.க.வுக்கு வெற்றி மேல் வெற்றி குவிகிறது! “நாள்தோறும் திட்டங்கள்! மக்கள் மனந்தோறும் மகிழ்ச்சி!” இதுதான் நமது அரசின் எண்ணம்! இப்படிப்பட்ட நமது எண்ணங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்களை ஒன்றிய அரசு தொடர்ந்து செய்துகொண்டு வருகிறது! ஒரு அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான இலக்கணத்தை – நான் அடிக்கடி சொல்லிக்கொண்டு வருகின்றேன். ஒரு நல்ல அரசு என்பது வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்ல – வாக்களிக்க மறந்த மக்களுக்கும் சேர்ந்தே பாடுபட வேண்டும்!
இப்படித்தான் தமிழ்நாடு அரசு பணியாற்றிக் கொண்டு இருக்கிறது! ஏன், மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு வருவதற்கு முன்பு இருந்த எல்லா ஒன்றிய அரசுகளும்கூட அப்படித்தான் இருந்தன. ஆனால், இந்தப் பெருந்தன்மை ஒன்றிய பா.ஜ.க. அரசிடம் இல்லை! இவர்கள் மட்டும்தான் அரசியல் நோக்கத்துடன் அரசை நடத்துகிறார்கள்.

அதற்கு அடையாளம்தான், கடந்த 23-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்! நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களுக்கு எதிராக நடந்து கொண்ட பா.ஜ.க.வைப் பல்வேறு மாநில மக்களும் புறக்கணித்தார்கள்! அப்படி புறக்கணித்த மாநிலங்களை – அந்த மாநில மக்களைப் பழிவாங்குகிற பட்ஜெட்டாகத்தான், ஒன்றிய நிதி அமைச்சர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் அமைந்துள்ளது! ஒட்டுமொத்த இந்திய மக்களுக்காகவும் உருவாக்க வேண்டிய பட்ஜெட்டை – ‘இந்தியா’ கூட்டணிக்கு வாக்களித்த மக்களைப் பழிவாங்க உருவாக்கி இருக்கிறார். இது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்பால், அவர் ஏற்றுக்கொண்ட பதவிப் பிரமாணத்துக்கே முரணானது!

ஒன்றிய பாஜக அரசானது, தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டைப் புறக்கணித்துக் கொண்டு வருகிறது! தமிழ்நாட்டுக்கு என்று அவர்கள் அறிவித்த ஒரே ஒரு சிறப்புத் திட்டம் என்றால், அது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைதான்! ஆனால் அதுவும் பத்தாண்டுகள் ஆகியும் என்ன நிலைமையில் இருக்கிறதென உங்களுக்கே நன்றாகத் தெரியும்! தமிழ்நாட்டுக்கென எந்தச் சிறப்புத் திட்டத்தையும் கொடுக்காமல், தமிழ்நாட்டு மக்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க வேண்டும் என எப்படித்தான் எதிர்பார்க்கிறார்களோ தெரியவில்லை!

மூன்றாவது முறையாக பா.ஜ.க ஆட்சி அமைத்துள்ளது! ஆனால், இந்திய மக்கள் அந்தக் கட்சிக்குப் பெரும்பான்மை அளிக்கவில்லை! ஒரு சில மாநிலக் கட்சிகளின் ஆதரவு இல்லையென்றால், பா.ஜ.க.வால் ஆட்சி அமைத்திருக்க முடியாது! இப்படிப்பட்ட நிலையில், தங்களின் சறுக்கலுக்கு என்ன காரணம் என்று உணர்ந்து, பா.ஜ.க. திருந்தியிருக்கும் என நினைத்தேன்! ஆனால், ஏமாற்றம்தான் மிஞ்சியுள்ளது!

பட்ஜெட்டுக்கு இரண்டு நாளுக்கு முன்பு கூட, நமது தமிழ்நாட்டுக்கான தேவைகள் என்னவென்று, சமூக ஊடகங்கள் மூலமாகவே ஒன்றிய ஆட்சியாளர்களுக்குத் தெரியப்படுத்தினேன். ஆனால், அதில் இருந்து ஒன்றைக்கூட நிதி அமைச்சர் அறிவிக்கவில்லை! அவ்வளவு ஏன்? ‘தமிழ்நாடு’ என்ற சொல்லே பட்ஜெட்டில் இல்லை! இவ்வளவு ஆண்டுகளாகச் சும்மா ஒப்புக்காகவாவது ஒரு திருக்குறளைச் சொல்லி, பட்ஜெட் வாசிப்பார்கள். இந்த முறை திருவள்ளுவரும் கசந்துவிட்டார் போல… இப்படிப்பட்ட பட்ஜெட்டில், திருக்குறள் இடம்பெறாதது ஒருவகையில் நிம்மதிதான்!

இந்த பட்ஜெட்டில் நாம் மிகவும் எதிர்பார்த்தது… சென்னை மெட்ரோ இரயில் திட்ட இரண்டாம் கட்டப் பணிகளுக்கான ஒன்றிய அரசின் நிதி! 2020-ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றுக் காலத்திலேயே – மாண்புமிகு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள், அவசரமாக வந்து அடிக்கல் நாட்டிய திட்டம் அது. “தமிழ்நாடு அரசும், ஒன்றிய அரசும் இணைந்து, 63 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவோம்” என்று 2021-ஆம் ஆண்டு ஒன்றிய பட்ஜெட்டில் அறிவித்தார்கள்! ஆனால், இப்போது தமிழ்நாடு அரசுதான் இந்தத் திட்டப்பணிகளை முடுக்கிவிட்டுச் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறது! ஒன்றிய அரசோ, தன்னோட பங்காக ஒரு ரூபாய் கூட விடுவிக்காமல், வேண்டுமென்றே மூன்று ஆண்டுகளாகக் காலம் தாழ்த்திக் கொண்டு இருக்கிறது!

கேட்டால், ‘இது மாநில அரசின் திட்டம்’ என நாடாளுமன்றத்திலேயே பதில் சொல்கிறார்கள்… அப்படி என்றால், இரயில்வே துறையை மாநில அரசுக்குக் கொடுத்துவிடுவீர்களா? கோவை, மதுரை மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான ஒப்புதல் அளிப்பதைப் பற்றி மூச்சே விடவில்லை! ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் இதே ஒன்றிய அரசு, நமது நகரங்களைவிடப் பல சிறிய நகரங்களுக்கான மெட்ரோ இரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து – நிதி உதவியும் வாரி வழங்கியிருக்கிறது. இது எந்த விதத்தில் நியாயம்?

கடந்த ஆண்டு இரண்டு முறை புயல்கள் தாக்கி, கடும் இயற்கைப் பேரிடர்களைத் தமிழ்நாடு சந்தித்தது! இதற்கு நிவாரணமாக, 37 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டோம். ஆனால், ஆண்டுதோறும் வழக்கமாக வழங்கப்பட வேண்டிய 276 கோடி ரூபாய் நிதியை அளித்துவிட்டு, ஏமாற்றிவிட்டார்கள். சரி, இந்த பட்ஜெட்டிலாவது வெள்ள நிவாரண அறிவிப்பு வெளியாகுமெனக் காத்திருந்தோம். ஆனால், தங்களின் பதவி நாற்காலிக்கு, கால்களாக இருக்கும் மாநிலங்களுக்குப் பத்தாயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் நிதியை அள்ளி வழங்கியிருக்கிறார் ஒன்றிய நிதி அமைச்சர்.

ஒட்டுமொத்தமாகச் சொல்லவேண்டும் என்றால், தமிழ்நாட்டுக்குப் புதிய திட்டங்களைத் அறிவிக்கவில்லை என்பதோடு – ஏற்கனவே நடைபெற்று வரும் திட்டங்களுக்கான நிதியையும் குறைக்கும் வஞ்சக முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது இந்த ஒன்றிய அரசு. இது எல்லாவற்றையும்விடக் கொடுமையான விஷயம் என்னவென்றால்.. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையை முடக்கும் வகையில், இருபது ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்படுத்தப்பட்டு வரும் ‘அனைவருக்கும் கல்வி இயக்கம்’ திட்டத்தின்கீழ், வழக்கமாக விடுவிக்கப்பட வேண்டிய நிதியைக் கூட நிறுத்தி வைத்துள்ளார்கள். தேசிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்துவோம் எனக் கையெழுத்து போட்டால்தான் நிதியை விடுவிப்போம் என்று அடம்பிடிக்கிறது ஒன்றிய அரசு. மாணவ – மாணவிகளின் கல்வி பாழாகுமே… அவர்களுக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை வருமே என ஒரு துளி கவலை கூட இல்லாமல், தங்களின் கொள்கைத் திணிப்பையும் இந்தித் திணிப்பையும் மட்டுமே முன்னிறுத்தக் கூடியதாகத்தான் பா.ஜ.க. அரசு இருக்கிறது.

அடுத்து, பட்ஜெட் உரையில் இன்னொன்றும் சொல்லியிருக்கிறார்கள்… மாநிலங்களால் விதிக்கப்படும் முத்திரைத் தாள் கட்டணத்தைக் குறைப்போம் என மாநிலங்களைக் கலந்தாலோசிக்காமலேயே பட்ஜெட்டில் அறிவிக்கிறார், ஒன்றிய நிதி அமைச்சர். ஏற்கெனவே ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையைக் கொண்டு வந்து, மாநிலங்களின் வரி விதிப்பு உரிமையை எடுத்துக்கொண்டார்கள். நான் கேட்பது என்னவென்றால், ஜி.எஸ்.டி.யால் தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பைச் சரிக்கட்டுவதற்கான 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீட்டையே இன்னும் அளிக்காத இந்த ஒன்றிய அரசுக்கு, மாநிலங்களின் வரிவிதிப்பு முறையை மாற்றி அமைக்கும் அதிகாரத்தை யார் கொடுத்தது?

கடந்த பத்தாண்டுகளாக வருமானச் வரிச்சலுகை இன்றித் தவித்துக்கொண்டு இருக்கும் நடுத்தரக் குடும்பங்களுக்கு, வெறும் 17 ஆயிரத்து 500 ரூபாய் சலுகையை மட்டும் வழங்கி, அந்தச் சலுகையும் பெரும்பான்மையோருக்குக் கிடைக்காமல் செய்துகொண்டு, பெரும் வரிச்சலுகை கொடுத்ததாக மார்தட்டிக் கொள்கிறது இந்த ஒன்றிய அரசு. இது தமிழ்நாட்டைப் பழிவாங்கும் பட்ஜெட் மட்டுமல்ல – ஒட்டுமொத்த இந்திய நாட்டு மக்களையே பழிவாங்கும் பட்ஜெட்! சுயநலத்துக்காக – நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்ளப் போட்டுக்கொண்ட பட்ஜெட் இது! ஒன்றிய அரசுக்குத் தமிழ்நாட்டு மக்களின் குரலாக – ஏன், இந்திய நாட்டு மக்களின் குரலாக ஒன்று சொல்கிறேன்… மேலும் மேலும் தவறு செய்கிறீர்கள்! மேலும் மேலும் தோல்விகளைச் சந்திப்பீர்கள்! இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கொந்தளிப்பதுபோல, இந்திய மக்களின் மனங்களும் கொந்தளிப்பில் இருக்கிறது! இதற்கு பா.ஜ.க. பதில் சொல்லியே தீர வேண்டும்!

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post ’’ இது எந்த விதத்தில் நியாயம்? ’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af/feed/ 0
”IGNO – இக்னோ பல்கலை.யில் மாணவர் சேர்க்கை தேதி நீட்டிப்பு https://madrasmurasu.com/igno-%e0%ae%87%e0%ae%95%e0%af%8d%e0%ae%a9%e0%af%8b-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88-%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=igno-%25e0%25ae%2587%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%25a9%25e0%25af%258b-%25e0%25ae%25aa%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b2%25e0%25af%2588-%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25a3%25e0%25ae%25b5%25e0%25ae%25b0 https://madrasmurasu.com/igno-%e0%ae%87%e0%ae%95%e0%af%8d%e0%ae%a9%e0%af%8b-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88-%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0/#respond Mon, 25 Mar 2024 11:26:43 +0000 https://madrasmurasu.com/?p=8905 இந்திரா காந்தி திறந்தநிலை (இக்னோ- IGNO) பல்கலைக்கழகத்தில் ஜனவரி பருவ மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரிந்து கொண்டிருப்போர், அஞ்சல் வழியில் படிக்கும் வகையில் இந்த பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. வீட்டில் இருக்கும் மகளிர், தங்கள் கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்ள இந்த தொலை தூர கல்வி படிப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். இதுதொடர்பாக மத்திய அரசு பல்கலைக்கழகமான ‘இக்னோ’வின் சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் […]

The post ”IGNO – இக்னோ பல்கலை.யில் மாணவர் சேர்க்கை தேதி நீட்டிப்பு first appeared on Madras Murasu.

]]>
இந்திரா காந்தி திறந்தநிலை (இக்னோ- IGNO) பல்கலைக்கழகத்தில் ஜனவரி பருவ மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரிந்து கொண்டிருப்போர், அஞ்சல் வழியில் படிக்கும் வகையில் இந்த பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. வீட்டில் இருக்கும் மகளிர், தங்கள் கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்ள இந்த தொலை தூர கல்வி படிப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதுதொடர்பாக மத்திய அரசு பல்கலைக்கழகமான ‘இக்னோ’வின் சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் கே.பன்னீர்செல்வம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (இக்னோ –IGNO) தொலைதூரக்கல்வி வாயிலாக பல்வேறு பாடப்பிரிவுகளில் சான்றிதழ், டிப்ளமா, பட்டம், முதுநிலை பட்டப்படிப்புகளை வழங்கி வருகிறது. இக்னோவில் பிஏ, பிஎஸ்சி, பிகாம் படிப்புகளில் சேரும் தகுதியுள்ள எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு கல்விக்கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது.

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஜனவரி பருவ சேர்க்கை மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொலைதூரக்கல்வி படிப்புகளில் சேர விரும்புவோர் https://ignouadmission.samarth.edu.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைனில் சேரலாம். மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.ignou.ac.in) அறிந்துகொள்ளலாம். மேலும், சென்னை வேப்பேரி பெரியார் திடலில் இயங்கும் இக்னோ மண்டல அலுவலகத்தை 044-26618040 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு ‘இக்னோ’வின் சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் கே.பன்னீர்செல்வம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்த பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பயிலலாம். கூடுதல் விவரங்களுக்கு https://ignouadmission.samarth.edu.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

The post ”IGNO – இக்னோ பல்கலை.யில் மாணவர் சேர்க்கை தேதி நீட்டிப்பு first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/igno-%e0%ae%87%e0%ae%95%e0%af%8d%e0%ae%a9%e0%af%8b-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88-%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0/feed/ 0
’’துப்பு இல்­லாத பா.ஜ.க..!’’ மலையகத் தமிழர் 200 குறித்து முரசொலி தலையங்கம் https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%9c-%e0%ae%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2581-%25e0%25ae%2587%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%25b2%25e0%25ae%25be%25e0%25ae%25a4-%25e0%25ae%25aa%25e0%25ae%25be-%25e0%25ae%259c-%25e0%25ae%2595 https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%9c-%e0%ae%95/#respond Wed, 08 Nov 2023 12:29:39 +0000 https://madrasmurasu.com/?p=7456 மலையகத் தமிழர் 200  இலங்­கை­யில் மலை­ய­கத்­தில் தமி­ழர் குடி­யேறி -– அந்த மண்ணை வாழ்­வித்து 200 ஆண்­டு­கள் ஆகி­விட்­டது. இந்த நிலை­யில் மலை­ய­கத் தமிழ் மக்­க­ளுக்கு தனது மன­மார்ந்த வாழ்த்­து­க­ளைத் தெரி­வித்­துக் கொண்­டுள்­ளார் மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள். இத­யத்­தின் அடி­யா­ழத்­தில் இருந்து அன்­பு­ட­னும் அக்­க­றை­யு­ட­னும் தெரி­வித்த வாழ்த்­து­கள் ஆகும் இவை. *மனி­தன் வாழ்ந்­தி­ராத மலைக்­கா­டு­களை மலை­ய­கத் தோட்­டங்­­களாக மாற்­றி­ய­வர்­கள் மலை­ய­கத் தமி­ழர்­கள் ஆவார்­கள். மலை­ய­கத் தமிழ்த் தொழி­லா­ளர்­க­ளின் வர­லாறு இலங்­கை­யில் காப்பி பயிர் செய்­யப்­பட்ட ஆரம்­ப­கட்­டத்­தில் […]

The post ’’துப்பு இல்­லாத பா.ஜ.க..!’’ மலையகத் தமிழர் 200 குறித்து முரசொலி தலையங்கம் first appeared on Madras Murasu.

]]>
மலையகத் தமிழர் 200 

இலங்­கை­யில் மலை­ய­கத்­தில் தமி­ழர் குடி­யேறி -– அந்த மண்ணை வாழ்­வித்து 200 ஆண்­டு­கள் ஆகி­விட்­டது. இந்த நிலை­யில் மலை­ய­கத் தமிழ் மக்­க­ளுக்கு தனது மன­மார்ந்த வாழ்த்­து­க­ளைத் தெரி­வித்­துக் கொண்­டுள்­ளார் மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள். இத­யத்­தின் அடி­யா­ழத்­தில் இருந்து அன்­பு­ட­னும் அக்­க­றை­யு­ட­னும் தெரி­வித்த வாழ்த்­து­கள் ஆகும் இவை.

*மனி­தன் வாழ்ந்­தி­ராத மலைக்­கா­டு­களை மலை­ய­கத் தோட்­டங்­­களாக மாற்­றி­ய­வர்­கள் மலை­ய­கத் தமி­ழர்­கள் ஆவார்­கள்.

மலை­ய­கத் தமிழ்த் தொழி­லா­ளர்­க­ளின் வர­லாறு இலங்­கை­யில் காப்பி பயிர் செய்­யப்­பட்ட ஆரம்­ப­கட்­டத்­தில் இருந்து தொடங்­கு­கி­றது.

*இது இலங்­கைப் பொரு­ளா­தா­ரத்­தில் மகத்­தான மாற்­றத்தை உரு­வாக்­கி­யது. பின்­னர், ரப்­பர், தென்னை என அனைத்­துப் பணப் பயிர்­களது உற்­பத்­தி­யும் மலை­ய­கத் தமி­ழர்­க­ளது உழைப்­பால் உரு­வா­ன­து­தான்.

*பயி­ரி­டப்­ப­டாத நிலத்தை பயி­ரிட்­டும் -– காடு­க­ளாக இருந்த நிலத்தை காசுப் பயிர்­க­ளாக விளை­வித்­தும் பின் தங்­கிய பொரு­ளா­தா­ரத்தை முன்­னணி பொரு­ளா­தா­ர­மாக ஆக்­கி­ய­வர்­கள் மலை­ய­கத் தோட்­டத் தொழி­லா­ளர்­கள் ஆவார்­கள்.

*இலங்கை நாட்­டுக்­காக தங்­க­ளது உழைப்பை வழங்­கி­ய­வர்­கள் மலை­ய­கத் தமி­ழர்­கள். இலங்கை நாடு உயர உழைத்­த­வர்­கள். தங்­க­ளது ரத்­தத்­தை­யும் வியர்­வை­யை­யும் காலத்­தை­யும் கட­மை­யை­யும் அந்த நாட்­டுக்­கா­கவே ஒப்­ப­டைத்­த­வர்­கள்.

– – என்று அந்த மக்­க­ளின் மகத்­தான உழைப்­பைப் பாராட்டி இருந்­தார் முத­ல­மைச்­சர் அவர்­கள்.

“இத்­த­கைய மலை­யக மக்­க­ளின் நீதி­யும் உரி­மை­யும் நிலை­நாட்­டப்­பட வேண்­டும் என்று கேட்­டுக் கொள்­கி­றேன். கல்வி, சுகா­தா­ரம், வாழிட உரி­மை­கள், பொரு­ளா­தார உத­வி­கள், சமூக உரி­மை­கள் அனைத்­தும் வழங்­கப்­பட வேண்­டும்.”என்­ப­தை­யும் வலி­யு­றுத்தி இருந்­தார் முத­ல­மைச்­சர் அவர்­கள். ஏனென்­றால் அம்­மக்­க­ளின் நிலைமை என்­பது பெரி­தாக மாறி­வி­ட­வில்லை. இலங்­கையை உயர்த்­திய, மேம்­ப­டுத்­திய அவர்­க­ளது வாழ்க்கை மேலும் முன்­னேற வேண்­டும் என்­பதை வலி­யு­றுத்­தும் வித­மாக முதல்­வர் அவர்­கள் வலி­யு­றுத்தி இருந்­தார்.

முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் உரை, இலங்­கை­யில் நடை­பெ­றும் விழா­வுக்­காக தயா­ரிக்­கப்­பட்­டது ஆகும். இலங்­கை­யில் குடி­ய­மர்த்­தப்­பட்ட மலை­ய­கத் தமி­ழர்­க­ளது 200 ஆவது ஆண்­டு­வி­ழாவை முன்­னிட்டு ஒரு விழா ஏற்­பாடு செய்­யப்­பட்­டது.“நாம் 200 – – ஒற்­றுமை, பன்­மு­கத்­தன்மை மற்­றும் பாரம்­பர்­யத்­தின் முழக்­கம்”என்­பது இந்த நிகழ்ச்­சி­யின் பெயர். இந்த நிகழ்ச்­சியை இலங்கை மலை­ய­கத் தமி­ழர்­க­ளுக்­காக இலங்­கை­யின் உள்­நாட்டு தோட்­டத் தொழில் துறை மற்­றும் அரசு தொழில் துறை அமைச்­ச­கம் முன்­னெ­டுத்­தது. அந்த விழா ஏற்­பாட்­டா­ளர்­கள் கேட்­டுக் கொண்­ட­தால் தயா­ரிக்­கப்­பட்ட உரை இது. ஆனால் அந்த உரை, விழா­வில் ஒளி­ப­ரப்­பப்­ப­ட­வில்லை.

இது குறித்து ‘தி இந்து’ ஆங்­கில நாளி­தழ் வெளி­யிட்­டுள்ள செய்­தி­யில்,‘தமிழ்­நாடு முத­ல­மைச்­ச­ரின் உரையை ஒளி­ப­ரப்­பக் கூடாது என்று இந்­திய பா.ஜ.க. அரசு தடை போட்­டு­விட்­டது’என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதை விட ஜன­நா­யக மறுப்பு, தமி­ழர் விரோ­தச் செய்கை இருக்க முடி­யாது.

முத­ல­மைச்­சர் உரை­யைத் தடை செய்­வ­தன் மூல­மாக, மலை­ய­கத் தமி­ழர்­கள் மீதான தி.மு.க.வின் பற்­று­தலை மறைக்­கும் சதிச் செயலை ஒன்­றிய பா.ஜ.க. அரசு செய்­துள்­ளது.

இதே நிகழ்­வில் இன்­னொரு சதி­யை­யும் ஒன்­றிய பா.ஜ.க. அரசு செய்­துள்­ளதை தமிழ்­நாடு நிதி அமைச்­சர் தங்­கம் தென்­ன­ரசு அவர்­கள் அம்­ப­லப்­ப­டுத்தி இருக்­கி­றார்­கள்.

“அந்த விழா­வில் மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் அவர்­கள் கலந்­து­கொள்ள வேண்­டும் என்­றும் முறை­யான அழைப்பு தமிழ்­நாடு அர­சிற்கு அனுப்­பப்­­ பட்டது. முத­ல­மைச்­சர் அவர்­கள் அந்த நிகழ்­வில் கலந்து கொள்ள இய­லாத நிலை­யில், என்னை அந்த விழா­வில் கலந்து கொள்­ளு­மாறு அவர்­கள் பணித்­தி­ருந்­தார்­கள். இலங்கை பய­ணம் மேற்­கொள்­வ­தற்­காக ஒன்­றிய அர­சின் வெளி­வி­வ­கா­ரத் துறை­யி­லி­ருந்து உரிய அனு­ம­தி­யினை பெறு­ வ­தற்கு கடந்த மாதம் 28-ஆம் தேதி உரிய வழி­மு­றைப்­படி விண்­ணப்­பம் நம்­மு­டைய பொதுத்­து­றை­யால் அனுப்­பப்­பட்­டு­விட்­டது. political clearance என்று சொல்­லக்­கூ­டிய வெளி­வி­வ­கா­ரத்­தின் அனு­மதி கிடைப்­ப­தற்­காக நான் காத்­துக் கொண்­டி­ருந்­தேன்,

அக்­டோ­பர் 28 ஆம் தேதி அன்று பொதுத் துறை­யின் வாயி­லாக ஒன்­றிய அர­சிற்கு அனுப்­பப்­பட்­டது. விழா நவம்­பர் 2-ஆம் தேதி மதி­யம். ஆனால் 1-ஆம் தேதி இரவு எட்­டரை மணி வரை வர­வில்லை. ஒன்­றிய அர­சி­ட­மி­ருந்து அனு­மதி இது­வரை வராத கார­ணத்­தால் நான் பய­ணத்தை மேற்­கொள்ள இய­லாத நிலை­யில் இருப்­பதை சுட்­டிக்­காட்டி, என்­னு­டைய பயண ஏற்­பா­டு­களை நான் இரத்து செய்­து­விட்டு வீடு திரும்­பி­னேன். அதற்­குப்­பி­றகு ஒன்­ப­தரை மணிக்கு மேல் அனு­மதி வந்­தி­ருக்­கி­றது. ஆனால் அதற்கு முன்­ன­தாக நான் பயண ஏற்­பா­டு­களை எல்­லாம் இரத்து செய்­து­விட்ட கார­ணத்­தி­னால், இரவு 8.30 மணிக்கு மேல் அத்­த­கைய அனு­மதி கிடைப்­ப­தற்கு வாய்ப்பு இல்லை என்று கருதி, முறைப்­படி விழா ஏற்­பாட்­டா­ளர்­க­ளி­டம் இதனை தெரி­வித்­து­விட்டு பயண ஏற்­பா­டு­களை எல்­லாம் இரத்து செய்­து­விட்­டோம்.”என்று சொல்லி இருக்­கி­றார் அமைச்­சர் தங்­கம் தென்­ன­ரசு.

வெளி­நாட்­டில் நடை­பெ­றும் விழா­வுக்கு அனு­மதி தரு­வ­தில் ஒன்­றிய அரசு எப்­படி நடந்து கொண்­டுள்­ளது என்­ப­தன் மூல­மாக – எத­னால் இப்­படி நடந்து கொண்­டது என்­ப­தை­யும் தெரிந்து கொள்­ள­லாம்.

குடி­யு­ரி­மைச் சட்­டத்­தின் மூல­மாக இலங்­கைத் தமி­ழர்­களை குடி­யு­ரிமை அற்­ற­வர்­க­ளாக ஆக்­கிய பா.ஜ.க., இப்­போது மலை­ய­கத் தமி­ழர்­கள் விழா­வில் எத்­த­கைய சதிச்­செ­யல்­க­ளில் ஈடு­ப­டு­கி­றது என்­பது புரி­கி­றது. இந்த நிலை­யில் மலை­ய­கத் தமி­ழர் மாநாட்­டில் கலந்து கொள்ள பா.ஜ.க. அமைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன் இலங்கை சென்­றி­ருக்­கி­றார்.

இன்­ன­மும் இந்­திய மீன­வர்­கள், படும் துன்ப துய­ரங்­க­ளுக்கு முற்­றுப்­புள்ளிவைக்­கத் துப்பு இல்­லாத பா.ஜ.க. இலங்­கைக்­குப் போய் மலை­யக மக்­களை ஏமாற்­ற­லாம் என்று நினைப்­பது காலக் கொடு­மையே ஆகும்.

The post ’’துப்பு இல்­லாத பா.ஜ.க..!’’ மலையகத் தமிழர் 200 குறித்து முரசொலி தலையங்கம் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%9c-%e0%ae%95/feed/ 0
’’எந்த இடத்திலும் நின்று விடாமல், தொடர்ந்து முன்னேற வேண்டும்..!’’ பிரதமர் மோடி https://madrasmurasu.com/%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%258e%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4-%25e0%25ae%2587%25e0%25ae%259f%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25af%2581 https://madrasmurasu.com/%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81/#respond Thu, 02 Nov 2023 06:58:37 +0000 https://madrasmurasu.com/?p=7322 “மாற்றுத் திறனாளிகள் விளையாட்டில் வெற்றி பெறுவது என்பது விளையாட்டில் மட்டும் உத்வேகம் அளிக்கும் விசயம் அல்ல – அது வாழ்க்கையில் உத்வேகம் அளிக்கும் விசயம். ஒவ்வொரு போட்டியிலும் நீங்கள் பங்கேற்பது மனிதக் கனவுகளின் வெற்றி. நாம் நமது பெருமைகளுடன் நிறுத்திக் கொள்ளாமல் எந்த இடத்திலும் நின்று விடாமல், தொடர்ந்து முன்னேற வேண்டும்” என்று ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற இந்திய விளையாட்டு வீரர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். புதுதில்லியில் உள்ள மேஜர் தயான்சந்த் தேசிய விளையாட்டு […]

The post ’’எந்த இடத்திலும் நின்று விடாமல், தொடர்ந்து முன்னேற வேண்டும்..!’’ பிரதமர் மோடி first appeared on Madras Murasu.

]]>
“மாற்றுத் திறனாளிகள் விளையாட்டில் வெற்றி பெறுவது என்பது விளையாட்டில் மட்டும் உத்வேகம் அளிக்கும் விசயம் அல்ல – அது வாழ்க்கையில் உத்வேகம் அளிக்கும் விசயம். ஒவ்வொரு போட்டியிலும் நீங்கள் பங்கேற்பது மனிதக் கனவுகளின் வெற்றி. நாம் நமது பெருமைகளுடன் நிறுத்திக் கொள்ளாமல் எந்த இடத்திலும் நின்று விடாமல், தொடர்ந்து முன்னேற வேண்டும்” என்று ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற இந்திய விளையாட்டு வீரர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார்.

புதுதில்லியில் உள்ள மேஜர் தயான்சந்த் தேசிய விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட இந்தியக் குழுவினருடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் சிறந்த சாதனை படைத்த விளையாட்டு வீரர்களைப் பாராட்டவும், எதிர்கால போட்டிகளுக்கு அவர்களை ஊக்குவிக்கவும் பிரதமரின் ஒரு முயற்சியாக இந்த செயல்பாடு அமைந்துள்ளது.

மோடி நன்றி தெரிவித்தார்

பாரா விளையாட்டு வீரர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, அவர்களைச் சந்திக்கவும், அவர்களின் அனுபவங்களைக் கேட்கவும் ஆவலாக இருப்பதாகக் கூறினார். வீரர்கள் இங்கு வரும்போதெல்லாம் புதிய நம்பிக்கைகளையும் புதிய உற்சாகத்தையும் கொண்டு வருவதாகப் பிரதமர் கூறினார். தாம் இங்கு வந்திருப்பது ஒரு விஷயத்திற்காக மட்டுமே என்றும், அது பாரா தடகள வீரர்களின் வெற்றிகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக எனவும் அவர் தெரிவித்தார். ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளின் முன்னேற்றங்களை மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வந்ததாக அவர் கூறினார். இந்திய வீரர்களின் பங்களிப்புகளைப் பாராட்டிய பிரதமர், அவர்களின் பயிற்சியாளர்கள் மற்றும் குடும்பத்தினரையும் பாராட்டினார். நாட்டின் 140 கோடி மக்கள் சார்பாக அவர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.

மிகப்பெரிய சாதனை

விளையாட்டுகள் மிகவும் போட்டித்தன்மை கொண்டவை எனக் கூறிய பிரதமர் மோடி, விளையாட்டு வீரர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிடும்போது தங்களுக்குள் ஏற்படும் போட்டி குறித்து எடுத்துரைத்தார். விளையாட்டு வீரர்களின் மிக உயர்ந்த பயிற்சி மற்றும் அர்ப்பணிப்பை அவர் பாராட்டினார். வீரர்கள் அனைவரும் இங்கிருந்து சென்று சிலர் வெற்றியாளர்களாக திரும்பி வந்துள்ளனர் என்றும் மேலும் சிலர் கற்றுக் கொண்டு வந்துள்ளதாகவும் அவர் கூறினார். ஆனால் யாரும் தோல்வியடைந்து திரும்பி வரவில்லை என்று பிரதமர் தெரிவித்தார். விளையாட்டில் தோல்வி என்பது இல்லை எனவும் வெற்றி அல்லது கற்றுக் கொள்ளுதல் மட்டுமே உண்டு என்றும் பிரதமர் குறிப்பிட்டார். 140 கோடி மக்களிடையே இந்த வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பாரா தடகள வீரர்களுக்கு மிகப்பெரிய சாதனை என்றும் அவர் கூறினார். இந்த வீரர்களின் வெற்றி முழு நாட்டிற்கும் உத்வேகம் அளிப்பதுடன் மக்கள் மத்தியில் ஒரு பெருமித உணர்வையும் ஏற்படுத்துகிறது என்று திரு நரேந்திர மோடி கூறினார்.

வெற்றிகரமான பதக்க எண்ணிக்கை

இந்த 111 பதக்கங்கள் வெறும் எண்கள் அல்ல எனவும் 140 கோடி மக்களின் கனவுகள் என்றும் அவர் கூறினார். இந்த எண்ணிக்கை 2014 ஆம் ஆண்டில் வென்ற பதக்கங்களின் எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகம் என்றும், தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை பத்து மடங்கு அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டார். அதேபோல் பதக்கப் பட்டியலில் இந்தியா 15 வது இடத்திலிருந்து முதல் 5 இடத்திற்கு முன்னேறியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களில் விளையாட்டுத் துறையில் இந்தியாவின் சாதனைகளை எடுத்துரைத்த பிரதமர், பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வீரர்கள் பெற்ற வெற்றி மிகப் பெரிய வெற்றி என்றார். ஆகஸ்ட் மாதம் புத்தபெஸ்டில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் ஆண்கள் அணியின் முதல் தங்கப் பதக்கம், டேபிள் டென்னிஸில் பெண்கள் இணையின் முதல் பதக்கம், ஆண்கள் பேட்மிண்டன் அணியின் தாமஸ் கோப்பை வெற்றி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 28 தங்கப் பதக்கங்கள் உள்பட 107 பதக்கங்கள் மற்றும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் மிகவும் வெற்றிகரமான பதக்க எண்ணிக்கை ஆகியவற்றை அவர் குறிப்பிட்டார்.

மீண்டும் உற்சாகப்படுத்தும்

பாரா விளையாட்டுகளின் சிறப்புத் தன்மையை எடுத்துரைத்த பிரதமர், மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு வெற்றி என்பது விளையாட்டில் மட்டும் உத்வேகமளிக்கும் விசயம் அல்ல என்றும் அது வாழ்க்கையில் உத்வேகம் அளிக்கும் விசயம் என்றும் குறிப்பிட்டார். விரக்தியின் பிடியில் எவ்வளவு ஆழமாக இருந்தாலும் செயல்திறன் எந்தவொரு நபரையும் மீண்டும் உற்சாகப்படுத்தும் என்று பிரதமர் கூறினார். விளையாட்டு சமூகமாக இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம் குறித்தும், விளையாட்டு கலாச்சாரம் குறித்தும் பிரதமர் எடுத்துரைத்தார். 2030-ம் ஆண்டு இளைஞர் ஒலிம்பிக் மற்றும் 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா முயற்சிக்கிறது என்று அவர் கூறினார்.

விளையாட்டில் குறுக்குவழிகள் எதுவும் இல்லை என்று கூறிய பிரதமர், வீரர்கள் தங்கள் சொந்த திறன்களை நம்புகிறார்கள் என்றார். ஆனால் ஒரு சிறிய உதவி பன்மடங்கு பலன்களை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்தார். குடும்பங்கள், சமூகம், நிறுவனங்கள் மற்றும் பிற ஆதரவுச்சூழல்கள் இணைந்து கூட்டு ஆதரவு வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

டாப்ஸ் எனப்படும் ஒலிம்பிக் பதக்கம்

சமூகம் முந்தைய காலங்களைப் போலல்லாமல், இப்போது விளையாட்டை ஒரு தொழில்முறையாக அங்கீகரிக்கத் தொடங்கியுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். அரசுக்காக விளையாட்டு வீரர்கள்’ என்ற நிலை மாறி விளையாட்டு வீரர்களுக்கான அரசு என்ற அணுகுமுறையில் தற்போதைய அரசு மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக அவர் தெரிவித்தார். விளையாட்டு வீரர்களின் கனவுகளை அரசு அங்கீகரிப்பதை, அதன் கொள்கைகள், அணுகுமுறை மற்றும் சிந்தனையில் காணலாம் என்று பிரதமர் கூறினார். முந்தைய அரசுகள் விளையாட்டு வீரர்களுக்கான உள்கட்டமைப்பு, பயிற்சி வசதிகள் மற்றும் பண உதவி போன்றவற்றை முறையாக வழங்காததால் வீரர்கள் வெற்றியை எட்டுவதில் பெரும் தடை ஏற்பட்டது என்று அவர் தெரிவித்தார். கடந்த 9 ஆண்டுகளில், நாடு பழைய முறைகள் மற்றும் பழைய அணுகுமுறையிலிருந்து மாறியுள்ளது என்று பிரதமர் கூறினார். அரசின் இன்றைய அணுகுமுறை விளையாட்டு வீரர்களை மையமாகக் கொண்டது என்று கூறிய பிரதமர், அது தடைகளை அகற்றி அவர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது என்பதை சுட்டிக் காட்டினார். ஆற்றலுடன் இணைந்த தளம் செயல்திறனை வெளிப்படுத்தும் என்று அவர் கூறினார். ஆற்றல் என்பது தேவையான தளத்தைப் பெறும்போது செயல்திறன் ஊக்கம் பெறுகிறது என்று அவர் குறிப்பிட்டார். விளையாட்டு வீரர்களை அடித்தள நிலையில் இருந்து அடையாளம் கண்டு அவர்களின் திறமையை வளர்ப்பதன் மூலம் வெற்றிக்கு வழிவகுக்கும் கேலோ இந்தியா திட்டத்தைப் பிரதமர் குறிப்பிட்டார். டாப்ஸ் எனப்படும் ஒலிம்பிக் பதக்க இலக்குத் திட்ட முன்முயற்சி மற்றும் மாற்றுத் திறனாளிகள் விளையாட்டுப் பயிற்சி மையம் ஆகியவற்றையும் அவர் குறிப்பிட்டார்.

பெருமை சேர்ப்பார்கள்

சிரமங்களை எதிர்கொள்ளும் விளையாட்டு வீரர்களின் மீள்திறன் நாட்டுக்கு மிகப்பெரிய பங்களிப்பாகும் என்று பிரதமர் கூறினார். வீரர்கள் இதுவரை கடக்க முடியாத தடைகளை கடந்துவிட்டதாக அவர் தெரிவித்தார். இந்த உத்வேகம் எல்லா இடங்களிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் பாராட்டினார். சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் பாரா தடகள வீரர்களிடமிருந்து உத்வேகம் பெறுகிறார்கள் என அவர் தெரிவித்தார். ஒவ்வொரு போட்டியிலும் இந்த வீரர்கள் பங்கேற்பது மனித கனவுகளின் வெற்றி என அவர் குறிப்பிட்டார். இந்த வீரர்கள் கடினமாக உழைத்து நாட்டிற்கு மேலும் பெருமை சேர்ப்பார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த அரசு விளையாட்டு வீரர்களுடன் உள்ளது எனவும் நாடும் வீரர்களுடன் உள்ளது என்றும் பிரதமர் கூறினார்.

வளரந்த இந்தியாவாக மாறும்

நாம் நமது பெருமைகளுடன் நிறுத்திக் கொள்ளாமல் எந்த இடத்திலும் நின்று விடாமல், தொடர்ந்து முன்னேற வேண்டும் என்று அவர் கூறினார். நாம் உலகின் முதல் 5 பொருளாதாரங்களில் ஒன்றாக முன்னேறியுள்ள சூழலில் அடுத்த பத்து ஆண்டிற்குள் முதல் 3 பொருளாதாரங்களில் ஒன்றாக முன்னேறுவோம் என அவர் தெரிவித்தார். 2047-ம் ஆண்டில் இந்த நாடு வளரந்த இந்தியாவாக மாறும் என உறுதியாகக் கூறுவதாகத் தெரிவித்துப் பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், இந்திய பாராலிம்பிக் குழுத் தலைவர் தீபா மாலிக், மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சர் அர்ஜுன் முண்டா, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை இணையமைச்சர் நிசித் பிரமானிக் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

2018-ம் ஆண்டு செயல்திறனைவிட 54 சதவீதம் அதிகம்

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 29 தங்கப் பதக்கங்கள் உள்பட மொத்தம் 111 பதக்கங்களை வென்றது. அண்மையில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் மொத்த பதக்க எண்ணிக்கை முந்தைய 2018-ம் ஆண்டு செயல்திறனைவிட 54 சதவீதம் அதிகமாகும். 29 தங்கப் பதக்கங்களை இப்போட்டியில் இந்தியா வென்றுள்ளது. இது 2018-ல் வென்றதை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம். நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர்கள், அவர்களின் பயிற்சியாளர்கள், இந்திய பாராலிம்பிக் கமிட்டி மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் அதிகாரிகள், தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post ’’எந்த இடத்திலும் நின்று விடாமல், தொடர்ந்து முன்னேற வேண்டும்..!’’ பிரதமர் மோடி first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81/feed/ 0
’’ரூ.1200 கோடி மதிப்பு ரயில்வே நிலத்தை தனியாருக்கு தாரைவார்க்க முயற்சி..! சு.வெங்கடேசன் எம்பி குற்றச்சாட்டு https://madrasmurasu.com/%e0%ae%b0%e0%af%82-1200-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b0%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b0%25e0%25af%2582-1200-%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25ae%25bf-%25e0%25ae%25ae%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2581-%25e0%25ae%25b0%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%25b5 https://madrasmurasu.com/%e0%ae%b0%e0%af%82-1200-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b0%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5/#respond Tue, 17 Oct 2023 09:43:48 +0000 https://madrasmurasu.com/?p=6938 மதுரையில் சுமார் 1200 கோடி மதிப்பிலான ரயில்வே நிலத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சி நடக்கிறது. ரயில்வே நிர்வாகம் உடனடியாக இம்முயற்சியை கைவிட வேண்டும்’’ என்று – சு.வெங்கடேசன், எம்.பி., வலியுறுத்தியுள்ளார். சு.வெங்கடேசன், எம்.பி., மதுரையில் அளித்த பேட்டி: இந்திய ரயில்வேக்கு சொந்தமான இடங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியில் இரயில்வே நிர்வாகம் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்தியாவின் முக்கியமான நகரங்களில் எல்லாம் மையமான இடங்களில் இருக்கும் ரயில்வே நிலங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் […]

The post ’’ரூ.1200 கோடி மதிப்பு ரயில்வே நிலத்தை தனியாருக்கு தாரைவார்க்க முயற்சி..! சு.வெங்கடேசன் எம்பி குற்றச்சாட்டு first appeared on Madras Murasu.

]]>
மதுரையில் சுமார் 1200 கோடி மதிப்பிலான ரயில்வே நிலத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சி நடக்கிறது. ரயில்வே நிர்வாகம் உடனடியாக இம்முயற்சியை கைவிட வேண்டும்’’ என்று – சு.வெங்கடேசன், எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.

சு.வெங்கடேசன், எம்.பி., மதுரையில் அளித்த பேட்டி:

இந்திய ரயில்வேக்கு சொந்தமான இடங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியில் இரயில்வே நிர்வாகம் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்தியாவின் முக்கியமான நகரங்களில் எல்லாம் மையமான இடங்களில் இருக்கும் ரயில்வே நிலங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் இந்த முடிவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறோம். இந்நிலையில் இப்பொழுது மதுரையில் உள்ள ரயில்வே நிலத்திற்கு ஆபத்து வந்துள்ளது. அரசரடியில் உள்ள ரயில்வே மைதானத்திற்கும், ரயில்வே காலனியில் உள்ள நிலத்திற்கும் ஆபத்து வந்துள்ளது. வணிக பயன்பாட்டிற்காக தனியாருக்கு வழங்க இந்நிலங்களை தங்கள் வசம் ஒப்படைக்குமாறு “ரயில்வே நில மேம்பாட்டு ஆணையம்” (RLDA) மதுரை ரயில்வே கோட்டத்தை கேட்டுக் கொண்டுள்ளது. அதனடிப்படையில் இரண்டு கட்டங்களாக ரயில்வே நிலத்தை தனியாருக்கு தாரை வார்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அறிகிறேன்.

முதல் கட்டமாக அரசரடி ரயில்வே மைதானம், இதன் அளவும் 11.45 ஏக்கர். இரண்டாவது கட்டமாக ரயில்வே காலனியில் உள்ள மூன்று பகுதி நிலம். இதன் அளவு 29.16 ஏக்கர். மொத்தம் 40.61 ஏக்கர். இதன் இன்றைய சந்தை மதிப்பு சுமார் 1200 கோடியாகும். இவ்வளவு பெரும் சொத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் பணியில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இரயில்வேயின் சொத்து மக்களின் சொத்து, தேசத்தின் சொத்து. அதனை தனி நபர்களுக்கு தாரை வார்ப்பதை அனுமதிக்க மாட்டோம். அரசரடி ரயில்வே மைதானம் மதுரையில் பல்லாயிரம் வீரர்களை உருவாக்கிய மைதானம், விளையாட்டு வீரர்களும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் நாள் தோறும் பயன்படுத்தும் மைதானம். இந்த மைதானமும், ரயில்வே காலனியும் மதுரையின் மிக முக்கிய பகுதிகளாகும்.
அதேப்போல மதுரை நகரத்திற்குள் சுமார் 1550 மரங்கள் இருக்கிற இடம் ரயில்வே காலனி, இன்னும் கூடுதலாக சொல்வதானால் மதுரையினுடைய நுரையீரல் மதுரை ரயில்வே காலனி.

இவற்றை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை இரயில்வே நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும் எனக்கேட்டுக் கொள்கிறேன். இம்முடிவினை கைவிட இரயில்வே நிர்வாகம் மறுத்தால் இந்நிலத்தை பாதுகாக்க மதுரை மக்கள் மாபெரும் போராட்ட இயக்கத்தை முன்னெடுப்பார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு சு.வெங்கடேசன் எம்பி., கூறினார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் உடன் துணை மேயர் டி.நாகராஜன், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜயராஜன், மாவட்ட செயலாளர் மா.கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வை.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கெடுத்தனர்.

The post ’’ரூ.1200 கோடி மதிப்பு ரயில்வே நிலத்தை தனியாருக்கு தாரைவார்க்க முயற்சி..! சு.வெங்கடேசன் எம்பி குற்றச்சாட்டு first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%b0%e0%af%82-1200-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b0%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5/feed/ 0
’’இத்தகைய பொற்காலத்தை உருவாக்கித் தரத்தான் நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகிறது..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%af%88%e0%ae%af-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%89%e0%ae%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%2595%25e0%25af%2588%25e0%25ae%25af-%25e0%25ae%25aa%25e0%25af%258a%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2588-%25e0%25ae%2589%25e0%25ae%25b0 https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%af%88%e0%ae%af-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%89%e0%ae%b0/#respond Mon, 18 Sep 2023 05:33:13 +0000 https://madrasmurasu.com/?p=6353 ’’இத்தகைய பொற்காலத்தை உருவாக்கித் தரத்தான் நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகிறது. இந்தியாவைக் காக்க இந்தியா கூட்டணியை வெல்ல வைக்க வேண்டியது நம்முடைய அரசியல் கடமை மட்டுமல்ல! கொள்கைக் கடமையும்தான்’’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். வேலூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் விருதுகளை வழங்கி, முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்தியாவின் முதல் விடுதலைப் போர் நடப்பதற்கு 50 ஆண்டுக்கு முன்பே, இங்கு நம்முடைய பொதுச்செயலாளரும், பொருளாளரும் குறிப்பிட்டதைப்போல, விடுதலைக் கனல் தெறித்த ஊர் இந்த வேலூர். […]

The post ’’இத்தகைய பொற்காலத்தை உருவாக்கித் தரத்தான் நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகிறது..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.

]]>
’’இத்தகைய பொற்காலத்தை உருவாக்கித் தரத்தான் நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகிறது. இந்தியாவைக் காக்க இந்தியா கூட்டணியை வெல்ல வைக்க வேண்டியது நம்முடைய அரசியல் கடமை மட்டுமல்ல! கொள்கைக் கடமையும்தான்’’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

வேலூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் விருதுகளை வழங்கி, முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

இந்தியாவின் முதல் விடுதலைப் போர் நடப்பதற்கு 50 ஆண்டுக்கு முன்பே, இங்கு நம்முடைய பொதுச்செயலாளரும், பொருளாளரும் குறிப்பிட்டதைப்போல, விடுதலைக் கனல் தெறித்த ஊர் இந்த வேலூர். இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்டம் என்று 1857-இல் நடந்த சிப்பாய்க் கலகத்தைச் சொல்வார்கள். ஆனால், 1806-ஆம் ஆண்டு, ஜூலை 10-ஆம் நாள் வேலூர் கோட்டையில் நிகழ்ந்த புரட்சியின் தொடக்கம்தான் இந்தியர்கள் இனியும் அடிமையாக வாழத் தயாராக இல்லை என்பதை பிரிட்டிஷ் ஆட்சிக்கு உணர்த்தியது. அத்தகைய வீரம் விளைந்த ஊரில் இந்த ஆண்டுக்கான கழக முப்பெரும் விழா நடைபெறுகிறது.

இங்கு சிப்பாய்க் கலகத்தின் நினைவுத் தூணைக் கலைஞர் நிறுவினார். வேலூர் நகராட்சியை மாநகராட்சி ஆக்கினார். திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துக்கு மிகப் பெரிய கட்டடம் கட்டித் தந்ததும், வேலூர் மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு வந்ததும் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்தான்! அத்தகைய தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டில் வேலூரில் முப்பெரும் விழாவை நடத்துவது மிகமிக பொருத்தமானது.
அதிலும் குறிப்பாக, நம்முடைய பொதுச் செயலாளர் – அருமை அண்ணன் துரைமுருகன் அவர்களின் சொந்த மாவட்டம் இந்த வேலூர்! காந்தி இருக்கிறார். ஜெகத்ரட்சகன் இருக்கிறார். அவர்களுக்கும் அந்த உரிமை உண்டு. அதேபோல பல முன்னோடிகளும் அந்த உரிமையை கொண்டாட முடியும். ஆனால் அதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்ததுபோல அண்ணன் துரைமுருகன் அவர்கள் இந்த மாவட்டத்தோடு எவ்வாறு ஒன்றி, பிணைந்து, இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என்பதை எல்லோரும் அறிவார்கள். அவரே மேடைகளில் சொல்வார்… என்னைக் கால்சட்டைப் பையனாக பார்த்தேன்… இன்று தலைவராக பார்க்கிறேன் என்று சொல்வார். அப்படிப்பட்ட நான் இப்போது கழகத் தலைவராவும் – அவர் கழகத்தின் பொதுச் செயலாளராவும் இருப்பது பெருமைக்குரியது. இருவருமே தலைவர் கலைஞரால் வளர்க்கப்பட்டவர்கள் – வார்ப்பிக்கப்பட்டவர்கள் என்பதுதான் எங்களுக்குக் கிடைத்த பெருமை!

தலைவர் கலைஞர் அவர்களும் – இனமானப் பேராசிரியர் அவர்களும் அடுத்தடுத்து நம்மை விட்டுப் பிரிந்த நேரத்தில் – இருவருமாக இருந்து எனக்கு அறிவுத் துணையாகவும் – அருமைத் துணையாகவும் ஆலோசனைகளை வழங்கிக் கொண்டு இருக்கக் கூடியவர்தான் அண்ணன் துரைமுருகன் அவர்கள். அனுபவத்தைவிட சிறந்த பாடப்புத்தகம் வேறு எதுவும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட அனுபவப் பாடத்தை அவர் எனக்கு தொடர்ந்து வழங்கிக்கொண்டு வருகிறார். மிக முக்கியமான பிரச்சினை எதுவாக இருந்தாலும் – பழைய செய்தி அல்லது பழைய நிகழ்ச்சியை அவர் நினைவூட்டி வழிநடத்துவார். அப்படிப்பட்ட கழகப் பொதுச்செயலாளரின் மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான முப்பெரும் விழா மாநாடுபோல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதைச் சீரோடும் – சிறப்போடும் – எழுச்சியோடும் – பிரம்மாண்டமாகவும் ஏற்பாடு செய்திருக்கும் வேலூர் மாவட்டக் கழகச் செயலாளர் நம்முடைய அருமை நண்பர் நந்தகுமார் அவர்களையும் – அவருக்குத் துணை நின்றிருக்கும் மாவட்டக் கழக நிர்வாகிகளையும் நான் மனதார வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன். நந்தகுமார் சுறுசுறுப்பாகவும், துறுதுறு என்றும் பணியாற்றுபவர். சிரித்த முகத்தோடு சீரிய பணிகளை ஆற்றக் கூடியவர்.

அதேபோல நம்முடைய மாநகரச் செயலாளர் கார்த்திகேயன் இல்லாமல் இங்கு மட்டுமில்லை, எங்கேயும் நாம் மாநாடு நடத்த முடியாது. அந்தளவுக்கு அவரது ஒலிபெருக்கிதான் கழகத்தின் குரலை கம்பீரமாக கொண்டு சேர்த்துக்கொண்டு இருக்கிறது. வேலூர் இரட்டையர்களாக இருந்து இருவண்ணக் கொடியைக் கட்டிக் காத்துக்கொண்டு வருகிற நந்தகுமார் – கார்த்திகேயன் ஆகிய இருவருக்கும் உங்கள் அனைவரின் சார்பில் கழகத் தலைவர் பொறுப்பை நான் ஏற்றிருக்கின்ற காரணத்தால் என்னுடைய நன்றியை, வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் – காஞ்சி தந்த வள்ளுவன் பேரறிஞர் அண்ணா – ஆகியோர் பிறந்த நாளையும் – தமிழினத்தின் விடிவெள்ளியாக உதித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்க நாளையும் இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாட வேண்டும் என்று 1985-ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அறிவித்தார். அன்று முதல் இன்று வரை தொடர்ந்து நாம் இந்த விழாவை ஒவ்வொரு ஆண்டும் நடத்திக்கொண்டு வருகிறோம்.

இந்த ஆண்டுக்கு இன்னும் இரண்டு கூடுதல் சிறப்புகள் இருக்கிறது. நம்மையெல்லாம் ஆளாக்கிய தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை நாம் கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம். அதேபோல இந்த மாபெரும் இயக்கத்தின் பவளவிழா இன்றிலிருந்து தொடங்குகிறது.

”நான் சாமானியன் – மிகமிகச் சாமானியன். எனக்கடுத்த தளநாயகர்கள் எத்தனை பேர் வேண்டும்? இதோ எண்ணிக் கொள்!” – என்று சொல்லி தனது தம்பிமார்கள் பட்டாளத்துக்கு திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயர் சூட்டினார் பேரறிஞர் அண்ணா அவர்கள். கொட்டும் மழையில் பிறந்ததால் என்னவோ, உடனே வளர்ந்தது கழகம். இன்று ஆலமரமாக வளர்ந்திருக்கும் கழகத்தின் பவளவிழாவை வரும் ஓராண்டுக்கு நாம் கொண்டாடப்போகிறோம். அந்த வகையில் பார்த்தால், இது ஐம்பெரும் விழா என்று சொல்லத்தக்க வகையில் சிறப்பாக இன்றைக்கு நடந்துக்கொண்டு இருக்கிறது.

ஒரு அரசியல் இயக்கம் 75 ஆண்டு காலம் நின்று நிலைத்திருப்பது சாதாரணமானது இல்லை. பெரிய பெரிய தலைவர்கள் உருவாக்கிய இயக்கமெல்லாம் அவர்கள் மறைந்தபோது – அவர்களோடு சேர்ந்து மறைந்த எத்தனையோ வரலாறுகளை நாம் படித்திருக்கிறோம். ஆனால், தோன்றிய காலத்தில் எப்படி இருந்ததோ – அதே இளமையோடு – அதே வேகத்தோடு – அதே விவேகத்தோடு – அதே உழைப்போடு – அதே உணர்வோடு இன்று வரை – இந்த 75-ஆவது ஆண்டிலும் கழகம் செழிப்போடு இருக்கக் காரணம் – எதிரே அமர்ந்திருக்கும் நீங்களும், தமிழ்நாடெங்கும் இருக்கும் கோடிக்கணக்கான கழகத் தொண்டர்களும்தான்! இந்த வேலூர் கோட்டை முதல் – குமரிக் கடல் வரைக்கும் இந்தக் கழகத்தைக் கட்டி ஆள்பவர்கள் தொண்டர்கள்தான்.
உங்கள் எல்லோரையும் ‘தம்பி‘ என்று அழைத்தார் பேரறிஞர் அண்ணா.

‘உடன்பிறப்பே‘ என்று அழைத்தார் கலைஞர். நான் உங்களில் ஒருவன். நான் வேறு – நீங்க வேறு இல்லை. உங்களால் உருவாக்கப்பட்டவன் நான். தொண்டர்களால் தலைவனாவும் – தொண்டர்களால் முதலமைச்சராவும் ஆக்கப்பட்டவன் நான். கழகத்தின் எந்தப் பொறுப்புக்கும் ஆசைப்படாமல் – அதிகாரத்தின் எந்தப் பதவியையும் அனுபவிக்காமல் – கருப்புச் சிவப்புக் கொடியைப் பிடித்திருந்தால் போதும் – கருப்பு சிவப்பு வேட்டியைக் கட்டியிருந்தால் போதும் – என்ற உணர்வோடு உயிர்வாழும் தொண்டர்கள் இருக்கும் திசைநோக்கி நான் வணங்குகிறேன்.

இந்த இயக்கத்தை நீங்களும், உங்கள் குடும்பமும் சேர்ந்துதான் வாழ வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அதனால்தான் நாம் கம்பீரத்தோடு இன்றைக்கு பவள விழா கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இன்னும் சிறப்பாக நூற்றாண்டு விழாவையும் நாம் கொண்டாடுவோம். அதில் எந்த மாற்றம் இல்லை. எந்தக் கட்டடமும் கட்டுவதுக்கு முன்பு எடுத்து வைக்கப்படுவது செங்கல்தான். நான் சொல்லும் செங்கல் வேறு, நீங்கள் வேறு எதையும் நினைத்துவிடாதீர்கள். ஆனால், அது திறப்பு விழாவின்போது வெளியில் தெரியாது. மலர் மாலைகள்தான் தெரியும். அந்த மாலைகள் உதிர்ந்திடும். ஆனால், செங்கல்கள்தான் கடைசி வரையிலும் காப்பாற்றும். அத்தகைய அடித்தளம்தான் கழகத்தின் கோடிக்கணக்கான உடன்பிறப்புகள். அடித்தளத்தை நானும் மறக்க மாட்டேன். யாரும் மறந்துவிடக் கூடாது. அதனால்தான் மூத்த முன்னோடிகளுக்கு, அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு செய்துகொண்டே இருக்கிறோம்.

ஒரு குடும்பத்துக்குத் தாய் – தகப்பனைப் போன்றவர்கள்தான் இந்த இயக்கத்தின் மூத்த முன்னோடிகளும். அவர்களை இந்த பவள விழா ஆண்டில் போற்றுங்கள் – பாராட்டுங்கள் என்று எல்லா மாவட்டக் கழகச் செயலாளர்களையும் நான் இந்த விழாவின் மூலமாக கேட்டுக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். அவர்களின் கடந்த காலத் தொண்டுக்கு இணையாக நாம் எதையும் கொடுத்துவிட முடியாது. அவர்களைப் பாராட்டுவது மூலமாக நாம் நன்றிக்குரியவர்களாக ஆகிறோம். அவர்களைப் பாராட்டுவது மூலமாக நம்முடைய மதிப்பு உயரும் என்பதை மறந்துவிடாதீர்கள். பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்ன தளநாயகர்கள் அவர்கள்தான். தலைவர் கலைஞர் அவர்கள் சொன்ன ரத்தநாளங்கள் அவர்கள்தான்.

இவர்களைப் பார்த்துப் புதிய புதிய தளநாயகர்கள் உருவாக வேண்டும். உருவாக்க வேண்டும். இந்த பவளவிழா ஆண்டில் இயக்கத்தின் தலைவராக நான் இருக்கிறேன். இன்று இரண்டு கோடி உறுப்பினர்கள் இயக்கத்தில் இருக்கிறார்கள் என்றால், இரண்டு கோடிப் பேர் என்ற எண்ணிக்கை தேவையில்லை. இரண்டு கோடி கொள்கைவாதிகள் நிரம்பிய கோட்டை திராவிட முன்னேற்றக் கழகம். இதைவிட எனக்கு என்ன பெருமை வேண்டும்? இது கனவுகள் நிறைவேறும் காலம். அதனால்தான் நான் கம்பீரமாக நிற்கிறேன். மகிழ்ச்சியுடன் – மனநிறைவுடன் நிற்கிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முகவரியாவும் – முகமாகவும் இருக்கிறவர்கள் தந்தை பெரியார்! பேரறிஞர் அண்ணா! தலைவர் கலைஞர்! இனமானப் பேராசிரியர்! பாவேந்தர் பாரதிதாசன்! ஆகிய ஐம்பெரும் ஆளுமைகள்! இவர்கள் தனிமனிதர்கள் இல்லை! தத்துவத்தின் அடையாளங்கள்! தந்தை பெரியாரின் சமூகநீதியும் – பேரறிஞர் அண்ணாவின் மாநில உரிமையும் – முத்தமிழறிஞர் கலைஞரின் ஒடுக்கப்பட்டோர் உரிமையும் – இனமானப் பேராசிரியரின் இனமானமும் – பாவேந்தரின் மொழிப்பற்றும்தான் நம்மை வழிநடத்துகிறது. அவர்கள் கொள்கையை நாம் பின்பற்றுவதும் – அவர்கள் வழிநடக்கும் தளகர்த்தர்களைத் தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் விருதுகள் வழங்குவதும் நம்முடைய இயக்கத்தின் மாபெரும் கடமை!
இந்த ஆண்டுக்கான பெரியார் விருது – கி.சத்தியசீலன் அவர்களுக்கும், அண்ணா விருது – முன்னாள் அமைச்சர் சுந்தரம் அவர்களுக்கும், கலைஞர் விருது – துணைப் பொதுச் செயலாளர், இந்நாள் அமைச்சர் மாண்புமிகு ஐ. பெரியசாமி அவர்களுக்கும், பேராசிரியர் விருது – ந.ராமசாமி அவர்களுக்கும், பாவேந்தர் விருது – திருமதி. மலிகா கதிரவன் அவர்களுக்கும் வழங்கப்படுகிறது. விருதுகள் பெற்ற ஐந்து பேரையும் வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன், போற்றுகிறேன்!

பெரியார் விருது பெற்றிருக்கும் மயிலாடுதுறை கி.சத்தியசீலன் அவர்கள் 1956-ஆம் ஆண்டு முதல் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு தொடர்ந்து இன்றுவரை பணியாற்றிக் கொண்டிருப்பவர். கிளைக் கழகச் செயலாளர் முதல் மாவட்டக் கழகப் பொறுப்பாளர் வரை உயர்ந்தவர். இப்போது அவருக்கு 85 வயது. ஆனாலும் நெஞ்சுறுதியோடு காட்சி அளிக்கிறார் என்றால் கலைஞர் அவருக்கு அளித்த பாராட்டுப் பத்திரம்தான் காரணம். “சத்தியம் தவறாத சத்தியசீலன்” என்று கலைஞர் இவருக்கு மகுடம் சூட்டி இருக்கிறார். தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளை உதட்டளவில் இல்லாமல், உள்ளார்ந்த ஈடுபாட்டோடு கடைப்பிடித்த சத்தியசீலன் இந்த ஆண்டுக்கான பெரியார் விருதை பெறுகிறார்.
முன்னாள் அமைச்சர் மீஞ்சூர் க.சுந்தரம் அவர்கள் அண்ணா பெயரிலான விருதை பெற்றிருக்கிறார். அமைதியாக பணியாற்றுபவர்களுக்கு எடுத்துக்காட்டு வேண்டும் என்றால் அது க.சுந்தரம் அவர்கள்தான். எந்தப் பொறுப்பை வகித்தாலும் அதில் அமைதியாவும் – ஆக்கபூர்வமாவும் செயல்படக் கூடியவர் அவர். அவரை நான் பாராட்டுகிறேன்.

கலைஞர் பெயரிலான விருதை தலைவர் கலைஞர் நூற்றாண்டில் பெற்றிருப்பவர் நம்முடைய அன்புக்குரிய அமைச்சர் – கழகத் துணைப் பொதுச் செயலாளர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி அவர்கள். 1980-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கருப்பு மீசையோடு கம்பீரமாக அவரை பார்த்தேன். இப்போது வெள்ளை மீசையோடு கம்பீரமாகப் பார்க்கிறேன். அன்று முதல் இன்று வரை உற்சாகம் குறையாமல் கழகத்துக்காக உழைத்துக்கொண்டு இருக்கிறவர் நம்முடைய ஐ.பி. அவர்கள். நானும் அவரும் ஒரே ஆண்டில் பிறந்தவர்கள். என்னைவிட இரண்டு மாதம் மூத்தவர் அவர். கல்லூரி மாணவராக இருந்தபோதே கழகச் செயல்வீரராக செயல்பட்டவர். 20 ஆண்டுகாலமாக மாவட்டச் செயலாளராக இருந்து திண்டுக்கல் மாவட்டத்தை மட்டுமல்ல, தென் மாவட்டங்களையே கழகக் கோட்டையாக மாற்றி அமைத்தவர் அமைச்சர் ஐ.பி. அவர்கள். 7 முறை சட்டமன்ற உறுப்பினர் – 3-ஆவது முறையாக அமைச்சர் என்று அசைக்க முடியாத சிறப்புகளுக்குச் சொந்தக்காரர் ஐ.பி. ‘லட்சியவாதி என் தம்பி ஐ.பி.’ என்று தலைவர் கலைஞரால் பாராட்டப்பட்டவர். கலைஞர் பெயரிலான விருது பெற்றிருக்க கூடிய இவரை பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால், ’இவர் கலைஞரின் வெறியர்’ என்பதுதான்.

அடுத்து, பாவேந்தர் பெயரிலான விருதை திருமதி. மலிகா கதிரவன் அவர்கள் பெறுகிறார். கதிரவனும் – மலிகாவும் இணைந்து கழகப் பணியாற்றியவர்கள் என்று தென்காசி வட்டாரத்து மக்களுக்கு நன்றாக தெரியும். ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டச் செயலாளராக பணியாற்றிய கதிரவன் அவர்கள் மறைந்த பிறகும் – தன்னுடைய கழகப் பணிகளை தொடர்ந்து ஆற்றி, பாவேந்தர் வழிகாட்டிய புரட்சிப் பெண்ணாக திகழ்பவர்தான் மலிகா அவர்கள். கழக குடும்பத்து மகளிர்களுக்கு ஒரு எடுத்துகாட்டாய்ச் செயல்பட்டு வருகிறவர் தென்காசி மலிகா அவர்கள்.
பேராசிரியர் அவர்கள் பெயரிலான விருதை பெங்களூரைச் சேர்ந்த ராமசாமி அவர்களுக்கு வழங்கி இருக்கிறோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல் மாநாடு 1951-ஆம் ஆண்டு சென்னையில் நடந்தபோது அதில் கலந்து கொள்வதற்காக பெங்களூரில் இருந்து வந்தவர் என்ற பெருமைக்கு உரியவர் இவர். கர்நாடக மாநில தி.மு.க.வை வளர்த்தெடுக்க பாடுபட்டவர், பணியாற்றியவர். இன்னும் பணியாற்றிக் கொண்டிருப்பவர். தமிழ்நாட்டுத் தலைவர்கள் அனைவரையும் அழைத்து கர்நாடக மாநிலத்தில் பொதுக்கூட்டங்கள் நடத்தி, கழகப் பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டவர். இன்னொரு மாநிலத்தில் கழகம் வளர்ப்பது எவ்வளவு சிரமம் என்று எல்லோருக்கும் தெரியும். அதை சிரமமாக நினைக்காமல் சிறப்பாக செய்து காட்டியவர் ராமசாமி அவர்கள்.

விருதுகள் பெற்றுள்ள அனைவரையும் தலைமைக் கழகத்தின் சார்பில் மட்டுமில்ல, தனிப்பட்ட முறையிலும் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன், போற்றுகிறேன். உங்களது ரத்தத்தால், வியர்வையால், தியாகத்தால், தொண்டால் வளர்ந்த இயக்கம் இது. உங்களுக்கு விருதுகள் தருவது மூலமாக நாங்கள் எங்கள் நன்றியை காட்டுகிறோமே தவிர – உங்கள் தொண்டுக்கு பரிசு வழங்குகிறோம் என்று பொருள் இல்லை. உங்கள் உழைப்பு விலைமதிக்க முடியாதது. உங்கள் தொண்டு அளவிட முடியாதது. இத்தோடு உங்கள் பொறுப்பும், கடமையும் முடிந்துவிடவில்லை. எங்களுக்குத் தொடர்ந்து வழிகாட்டுங்கள். இன்றைய இளைஞர்களை வழிநடத்துங்கள் என்று விருதாளர்கள் அனைவரையும் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.
ஏன் என்றால், மிக மிக முக்கியமான காலக்கட்டத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்தியாவில் ஜனநாயகத்தைக் காக்கின்ற போர்க்களத்தை நோக்கிய பயணத்திற்கிடையே இந்த முப்பெரும் விழாவை நாம் கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம்.

1949-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் உதயம் ஆனது. 75 ஆண்டுகளாக தமிழ்ச் சமுதாயத்தின் காவல் அரணாக கழகம் செயல்பட்டு வருகிறது. 1967-ஆம் ஆண்டு முதன் முதலாக நாம் ஆட்சிக்கு வந்தோம். 1971, 1989, 1996, 2006, 2021-என்று மொத்தம் ஆறு பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து வருகிறோம்.

ஒரு பக்கம் ஆட்சி – இன்னொரு பக்கம் கட்சி இரண்டின் மூலமாகவும் தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களைவிட தலைசிறந்த மாநிலமாக மாற்றிக்கொண்டு வருகிறோம். அனைத்துத் துறைகளிலும் தலைசிறந்த மாநிலமாக உருவாக்கி வருகிறோம். இடையிடையே கொள்கையற்ற அ.தி.மு.க. கூட்டத்தின் ஆட்சி வந்து தமிழ்நாட்டைச் சீரழித்தாலும் – அதையும் திருத்தி – தமிழ்நாட்டை வளர்த்தெடுத்து வருகிறோம்.
இன்றைக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சி – தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சி – தமிழினத்தின் வளர்ச்சி – பலருக்கும் பொறாமை ஏற்படுத்தும் வளர்ச்சியாக இருக்கிறது. தமிழ்நாடு என்ற மாநிலத்தை – அதற்கான உரிமைகளை சிதைப்பது மூலமாக, நம்முடைய மாநில மக்களின் வாழ்க்கையை அழிக்கப் பார்க்கிறார்கள். அதைத்தான் பட்டவர்த்தனமாக பாரதீய ஜனதா கட்சி செய்துகொண்டு வருகிறது.

ஜி.எஸ்.டி. மூலமாக மாநில உரிமையை பறித்தார்கள். ஒரு மாநில அரசை நடத்துவதற்கு மிக முக்கியமான நிதி ஆதாரம் என்பது வரி வருவாய்தான். அந்த வரி வருவாயைக் கபளீகரம் செய்ததன் மூலமாக மாநில அரசை செயல்பட விடாமல் முடக்குகிறார்கள். மக்களுடன் நேரடியான தொடர்பைக் கொண்டது மாநில அரசுகள்தான். மக்களுக்கு தேவையான கல்வி – சுகாதாரம் – குடிநீர் – சாலை வசதிகள் – கடன்கள் – மானியங்கள் – பெண்கள் முன்னேற்றம் – விளிம்புநிலை மக்களுக்கான உதவிகள் – இவை எல்லாவற்றையும் வழங்க வேண்டிய கடமை மாநில அரசுகளுக்குத்தான் இருக்கிறது. இதை செய்து தருவதற்கு நிதி வேண்டாமா? அப்படிப்பட்ட நிதி ஆதாரங்களை கிடைக்கவிடாமல் செய்வதற்காகவே ஜி.எஸ்.டி.யை கொண்டு வந்து நிதி வருவாய் வாசல்களை அடைத்தார்கள். நான் கேட்பது, நிதியை வசூல் செய்கிறீர்களே, அதை முறையாகப் பிரித்துக் கொடுக்கிறீர்களா அதுவும் இல்லை.

அதேபோல கல்வி மிக முக்கியமான ஒரு துறை. ஒவ்வொரு மாநில அரசும் – அங்கு வாழும் பெரும்பான்மை மக்களின் பண்பாடு, அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப கல்வியை வழங்கும். புதிய கல்விக் கொள்கை – என்று சொல்லி, பொதுவான கல்வி முறை என்ற பெயரில், நமது மாநிலத்தின் கல்வி வளர்ச்சியை தடுக்கப் பார்க்கிறார்கள். ஒன்றிய அரசாங்கம் சொல்லும் கல்வி வளர்ச்சியை – தமிழ்நாடு எப்போதோ எட்டிவிட்டது. கல்வியில் சிறந்த மாநிலமான தமிழ்நாட்டை முடக்குவதற்கான முயற்சிதான் அவர்கள் கொண்டு வரும் கல்விக் கொள்கை.

நீட் தேர்வைப் பற்றி சொல்லவே அவசியமில்லை. மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவர்களின் கனவைச் சிதைப்பதற்காக கொண்டுவரப்பட்டதுதான் நீட் தேர்வு. லட்சக்கணக்கில் செலவு செய்தால்தான் தேர்ச்சி பெற முடியும் என்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள். சில தனியார் கோச்சிங் செண்டர்களின் லாபத்துக்காகவே இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. அனிதா முதல் ஜெகதீஸ்வரன் வரை ஏராளமான மாணவர்கள் நீட் தேர்வால் உயிரிழந்திருக்கிறார்கள். இத்தகைய உயிரிழப்புகள் இப்போது வட மாநிலங்களிலும் நடக்க ஆரம்பித்திருக்கிறது. கடந்த 14-ஆம் தேதி ஜார்கண்டைச் சேர்ந்த மாணவி, ராஜஸ்தானில் தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வுக்கு படிப்பதற்காக வந்தவர் அவர். ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் கடந்த ஆண்டு, 22 மாணவர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள். இத்தனை தற்கொலைகள் நடக்கிறதே, இதற்கான காரணத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு ஆராய்ந்ததா? இரக்கமற்ற அரசாகத்தானே மோடி அரசு இருக்கிறது.

ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் எத்தளை வாக்குறுதி கொடுத்தார்கள்? நிறைவேற்றினார்களா? நேற்று ஒரு தாய்மார் கேட்கிற மாதிரி, போனில் மீம்ஸ் பார்த்தேன். ”எங்கள் முதல்வர் சொன்ன 1000 ரூபாய் வந்தாச்சு… பிரதமர் சொன்ன 15 லட்சம் என்னாச்சு?” – இது வைரல் ஆகிவிட்டது.

நாம் பிரதமரைப் பார்த்து என்ன கேட்கிறோம்? இதைச் செய்யுங்கள் என்று… அதைச் செய்யுங்கள் என்று புதிதாக எந்த வாக்குறுதியையும் கேட்கவில்லை. புதிதாக எந்த கோரிக்கையையும் வைக்கவில்லை. நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டியிருக்கீர்களா? இல்லையா என்றுதான் கேட்கிறேன்.
தமிழ்நாட்டுக்கு வந்து பல வாக்குறுதிகளை கொடுத்தார். அந்த வாக்குறுதிகளையாவது நிறைவேற்றினாரா? இல்லை. உதாரணத்துக்கு ஒன்று கேட்கிறேன். மதுரையில எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்போம் என்று 2015-ஆம் ஆண்டு சொன்னார்கள். இப்போதுதான் டெண்டரே விட்டிருக்கிறார்கள். இவை அனைத்தையும் யாரும் நினைவுபடுத்திவிடக் கூடாது என்றுதான் மற்ற பிரச்சினைகளைக் கிளப்பிக் குளிர்காயப் பார்க்கிறார்கள்.

சரி என்ன சாதனை இந்த ஒன்பது வருடத்தில் செய்திருக்கிறார்கள் என்று பார்த்தால், 2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வரும்போது சமையல் சிலிண்டர் விலை 420 ரூபாய். இதை 1100 ரூபாய்க்கு உயர்த்தியதுதான் மோடியின் சாதனை. மூன்று மடங்கு உயர்த்தினார்கள். தேர்தல் வருவதால் கண்துடைப்பு நாடகமாக இப்போது 200 ரூபாயை மட்டும் குறைத்திருக்கிறார்கள். இதை மக்கள் நம்புவார்களா? 2014-ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வரும்போது பெட்ரோல் ஒரு லிட்டர் 71 ரூபாய். இப்போது ஒரு லிட்டர் 102 ரூபாய். ஒன்றிய அரசின் வரியை மூன்று மடங்கு உயர்த்தி இருக்கிறார்கள். மோடி ஆட்சிக்கு வரும்போது டீசல் ஒரு லிட்டர் 55 ரூபாய். இப்போது ஒரு லிட்டர் 94 ரூபாய். ஒன்றிய அரசின் வரியை ஏழு மடங்கு உயர்த்தி இருக்கிறார்கள். கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் 100 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி இருக்கிறது பா.ஜ.க. அரசு. இவர்கள் ஆட்சிக்கு வரும்போது இந்தியாவுக்கு இருந்த கடன் 55 லட்சம் கோடி ரூபாய்தான். அது, இந்த 9 ஆண்டுகாலத்தில் 155 லட்சம் கோடி ரூபாய் ஆகிவிட்டது. பெரிய நிறுவனங்களுக்கு 14 லட்சம் கோடி ரூபாய் பணத்தை வாராக் கடன் என்று சொல்லி தள்ளுபடி செய்திருக்கிறது பா.ஜ.க. அரசு. பணவீக்கம் அதிகமாகி இருக்கிறது. இப்படி வேதனையை மட்டுமே மக்களுக்குத் தந்த பா.ஜ.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

அண்மையில் வெளியான சி.ஏ.ஜி அறிக்கையின்படி மட்டும் 7.50 லட்சம் கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்திருக்கிறது. ஊழல் குற்றச்சாட்டில் அதிகம் சிக்கி இருப்பது சி.பி.ஐ. அதிகாரிகள்தான் என்று மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையமே புள்ளிவிவரம் கொடுத்திருக்கிறது. இத்தகைய ஊழல் முகத்தை மறைக்கப் பார்க்கிறார்கள். இந்த ஊழல் முகத்தைக் கிழித்தெறிய வேண்டும். இதுதான் நம் முன் இருக்கும் முக்கியக் கடமை. பா.ஜ.க.வின் ஊழல் முகத்தைப் பொதுமக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி ஆக வேண்டும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், நமது கூட்டணிதான் புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் நாம்தான் வெற்றி பெறப்போகிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. அதில் சந்தேகமே இல்லை. தமிழ்நாட்டில் மட்டும் நாம் வெற்றி பெற்றால் போதாது. இந்தியா முழுமைக்கும் வெற்றி பெற்றாக வேண்டும். அதனால்தான் இந்தியா கூட்டணியை உருவாக்கி இருக்கிறோம். நம்முடைய ஆட்சி ஒன்றியத்தில் அமைந்தால் 15 மாதத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டி எழுப்ப முடியுமா? முடியாதா? நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியுமா? முடியாதா? தமிழ்நாட்டுக்குத் தேவையான ரயில்வே திட்டங்களை ஏராளமாகக் கொண்டு வர நம்மால் முடியும். புதிய விமான நிலையங்கள் – மெட்ரோ ரயில்களை இயக்க முடியும். இவை எல்லாமே நம்முடைய இந்தியா கூட்டணி ஆட்சி அமையுமானால் தமிழ்நாட்டுக்கு கொண்டு வர முடியும். இந்தியா முழுமைக்கும் சமூகநீதியை உருவாக்கித் தர நம்மால் முடியும்.
இங்கு நாம் அமல்படுத்தி வரும் திராவிட மாடல் திட்டங்களை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்குக் கொண்டு சேர்க்க முடியும். இத்தகைய பொற்காலத்தை உருவாக்கித் தரத்தான் நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகிறது. இந்தியாவைக் காக்க இந்தியா கூட்டணியை வெல்ல வைக்க வேண்டியது நம்முடைய அரசியல் கடமை மட்டுமல்ல! கொள்கைக் கடமையும்தான்!

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவில் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழி என்பது நாடாளுமன்றத் தேர்தலில் 40-க்கு 40 இடங்களையும் வெற்றி பெற்றே தீருவோம் என்பதுதான். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பவள விழா ஆண்டில் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழி என்பது இந்திய நாடாளுமன்றத்தில் ஆட்சி அதிகாரத்தை செலுத்தும் கூட்டணிக் கட்சியாக நம்முடைய இயக்கத்தை உயர்த்துவோம் என்பதுதான்.

அன்பு உடன்பிறப்புகளே! உங்களின் ஒருவன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அழைக்கிறேன். நாற்பதுக்கு நாற்பது வெல்வோம்! இந்தியாவைக் காப்போம்! இந்தியா கூட்டணி வெற்றிக்கு முழுமையாகப் பாடுபடுவோம்! என்று இந்த வேலூர் மண்ணில் நடைபெறும் முப்பெரும் விழாவில் உறுதியேற்போம்… உறுதியேற்போம்… உறுதியேற்போம்… நன்றி, வணக்கம்!

The post ’’இத்தகைய பொற்காலத்தை உருவாக்கித் தரத்தான் நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகிறது..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%af%88%e0%ae%af-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%89%e0%ae%b0/feed/ 0
’’இம்மானுவேல் சேகரனார் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம்..! முதல்வர் மு.க.ஸ்டாலின் https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%95%e0%ae%b0%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25ae%25e0%25af%258d%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25af%2581%25e0%25ae%25b5%25e0%25af%2587%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25af%2587%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25ae%25a9%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25a4 https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%95%e0%ae%b0%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4/#respond Mon, 11 Sep 2023 05:06:15 +0000 https://madrasmurasu.com/?p=6231 ’’தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களுக்கு இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்படும்’’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதலமைச்சரின் அந்த அறிவிப்பில் மேலும் கூறியுள்ளதாவது: தியாகி இம்மானுவேல் சேகரனார் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில் தேவேந்திர குல வேளாளர் கல்வியாளர் குழு, தேவேந்திரர் பண்பாட்டுக் கழகம், இம்மானுவேல் சேகரனாரின் மகள் சூரிய சுந்தரி பிரபா […]

The post ’’இம்மானுவேல் சேகரனார் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம்..! முதல்வர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.

]]>
’’தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களுக்கு இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்படும்’’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முதலமைச்சரின் அந்த அறிவிப்பில் மேலும் கூறியுள்ளதாவது:

தியாகி இம்மானுவேல் சேகரனார் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில் தேவேந்திர குல வேளாளர் கல்வியாளர் குழு, தேவேந்திரர் பண்பாட்டுக் கழகம், இம்மானுவேல் சேகரனாரின் மகள் சூரிய சுந்தரி பிரபா ராணி மற்றும் அன்னாரது பேரன் சக்கரவர்த்தி ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து இக்கோரிக்கையினை வலியுறுத்தினர்.

தியாகி இம்மானுவேல் சேகரனார் 1924-ஆம் ஆண்டு அக்டோபர் 9 அன்று பிறந்தார். இவரது சொந்த ஊர் முதுகுளத்தூர் வட்டம், செல்லூர் கிராமம் ஆகும். இவர் 1942-இல் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறைவாசம் சென்றார். மேலும், ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்காகவும் போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையில், தியாகி இம்மானுவேல் சேகரனார் சமூக பங்களிப்பினைப் போற்றும் வகையில் அவரது பிறந்தநாள் நூற்றாண்டினையொட்டி அன்னார் நல்லடக்கம் செய்யப்பட்ட இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சுமார் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் இம்மானுவேல் சேகரனார் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தமிழ்நாடு அரசின் சார்பில் கட்டப்படும்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

The post ’’இம்மானுவேல் சேகரனார் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம்..! முதல்வர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%95%e0%ae%b0%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4/feed/ 0
’’ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் விடியலை ஏற்படுத்தித் தர வேண்டும்..!’’ முதல்வர் மு.க.ஸ்டாலின் https://madrasmurasu.com/%e0%ae%92%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2592%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258a%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4-%25e0%25ae%2587%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b1 https://madrasmurasu.com/%e0%ae%92%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1/#respond Sat, 09 Sep 2023 06:47:21 +0000 https://madrasmurasu.com/?p=6203 ’’தமிழ்நாடும் கேரளமும் நாட்டைக் காக்கின்ற முயற்சியில் இரட்டைக்குழல் துப்பாக்கியாக செயல்பட்டு ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் விடியலை ஏற்படுத்தித் தர வேண்டும்’’ என்று சென்னையில் நடந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 8.9.2023 அன்று சென்னையில் நடைபெற்ற கேரள மீடியா அகாடமியின் “மீடியா மீட் 2023” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதாவது: என்ட பிரியப்பட்ட மலையாள சகோதரர்களுக்கு ஸ்டாலின்ட சிநேகம் நிறைஞ்ச நமஸ்காரம். சில நாட்களுக்கு முன்பு, ஓணம் திருநாளைக் கொண்டாடிய நமது மலையாள மொழிச் […]

The post ’’ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் விடியலை ஏற்படுத்தித் தர வேண்டும்..!’’ முதல்வர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.

]]>
’’தமிழ்நாடும் கேரளமும் நாட்டைக் காக்கின்ற முயற்சியில் இரட்டைக்குழல் துப்பாக்கியாக செயல்பட்டு ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் விடியலை ஏற்படுத்தித் தர வேண்டும்’’ என்று சென்னையில் நடந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 8.9.2023 அன்று சென்னையில் நடைபெற்ற கேரள மீடியா அகாடமியின் “மீடியா மீட் 2023” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதாவது:

என்ட பிரியப்பட்ட மலையாள சகோதரர்களுக்கு ஸ்டாலின்ட சிநேகம் நிறைஞ்ச நமஸ்காரம். சில நாட்களுக்கு முன்பு, ஓணம் திருநாளைக் கொண்டாடிய நமது மலையாள மொழிச் சொந்தங்களுக்கு, மலையாளத்தில் என்னுடைய வாழ்த்துகளைச் சொன்னேன். இதற்கு முன்பு கேரளாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றிலும் நான் மலையாளத்தில் பேசியிருக்கிறேன்.

நாம் ஒரே மொழி குடும்பத்தைச் சார்ந்தவர்கள். அதாவது திராவிட மொழி குடும்பத்தை சார்ந்தவர்கள். சமத்துவத்திற்கு எதிராக இருக்கக்கூடியவர்களுக்கு இன்றைக்கு ‘திராவிடம்’ என்று சொல் ஒரு எரிச்சலாகவே இருக்கிறது.

கேரள அரசின் கீழ் இயங்கக்கூடிய தன்னாட்சி பெற்ற நிறுவனமாக கேரளா மீடியா அகாடமி செயல்பட்டு வருகிறது. சார்புத் தன்மை இல்லாத மதச்சார்பின்மையை போற்றுகின்ற ஊடகவியலாளர்களை உருவாக்குவதற்கு இந்த அகாடமி பங்காற்றி வருகிறது. இன்றைய நிலைமையில் இது மிகவும் தேவையான ஒன்று. ஊடகத்தினர் சுதந்திரமாக செயல்பட்டால் தான் நாட்டின் ஜனநாயகம் உயிர்ப்போடு இருக்கும். அந்த வகையில் மிக சிறப்பான நீண்ட அனுபவம் மிக்க ஊடகவியலாளர்களால் நிர்வகிக்கப்படும் இந்த அகாடமி எதிர்காலத்திலும் அத்தகைய ஊடகவியலாளர்களை உருவாக்குவதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கேரள மீடியா அகாடமி சார்பில் நடைபெறும் இந்த சிறப்பான விழாவில் பங்கெடுத்து உங்களை எல்லாம் சந்திக்கக்கூடிய வாய்ப்பை பெற்றமைக்கு நான் பெருமை அடைகிறேன்.

இந்த விழாவில் பங்கெடுக்க வேண்டும் என்று, அருமை நண்பர் அருண்ராம் என்னை அழைத்தார்கள். தலைவர் கலைஞர் -க்கும் நெருக்கமான பத்திரிக்கையாளர்களில் ஒருவராக இருந்தவர் நம்முடைய அருமையான நண்பர் அருண்ராம். அதேபோல் என் மீதும் அன்பு காட்டக் கூடியவர்தான் அருண்ராம். அந்த வகையில் அவரது அழைப்பை ஏற்று இங்கு நான் வருகை தந்துள்ளேன்.

ஏசியாநெட்டின் நிறுவனர் சஷி குமார் இங்கு வருகை தந்துள்ளார். நடிப்பு – திரைப்படத் தயாரிப்பு – திரைக்கதை எழுதுதல் எனப் பன்முக ஆற்றலைப் பெற்றவர் இவர், இப்போது சென்னை ஆசிய இதழியல் கல்லூரியின் தலைவராக இருக்கிறார்.
மரியாதைக்குரிய மூத்த பத்திரிக்கையாளர் பி.ஆர்.பி.பாஸ்கர் எழுதிய ‘THE CHANGING MEDIASCAPE’ என்ற முக்கியமான நூலை வெளியிடுவதில் நான் மிகுந்த பெருமைப்படுகிறேன். அவருக்கு வயது 91.

70 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத் துறையில் செயல்பட்டு வருவதைப் பார்க்கும் போது எழுத்தின் மீதும், ஊடகத் துறையின் மீதும், அதையும் தாண்டி இந்த நாட்டு மக்கள் மீதும் அவர் கொண்டுள்ள உண்மையான அக்கறையை நமக்கு எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கிறது. தி இந்து பத்திரிக்கையில் 1952-ஆம் ஆண்டு சேர்ந்து அங்கு ஆறு ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார்.

* தி ஸ்டேட்ஸ்மேன் –
* பேட்ரியாட்-
* யு.என்.ஐ செய்தி நிறுவனம்
* தி டெக்கான் ஹெரால்டு
* ஏசியா நெட் – எனப் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.

செய்தி நிறுவனங்களுக்காக இந்தியாவின் பல்வேறு நகரங்களில் அவர் பணியாற்றி இருக்கிறார். உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்றும் இருக்கிறார். எனவே இந்த நூலை படித்துப் பார்த்தால் உலகம் முழுக்க பயணம் செய்யும் அனுபவம் நமக்கு ஏற்படும்.

அச்சு ஊடக காலம் தொட்டு ஊடகங்களின் இன்றைய மாற்றம் வரை அவர் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை இந்த நூலில் பதிவு செய்துள்ளார் பாஸ்கர். அவருடைய கட்டுரைகள், செய்திகளுக்கு பின்னால் இருக்கும் ஆர்வம், அணுகுமுறை, தெளிவான சிந்தனை ஆகியவை இன்றைய பத்திரிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய பாடமாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

அவசர நிலைக்காலம் குறித்த அவரது பதிவுகள் மிக முக்கியமானதாக உள்ளது. மிசாவில் கைதாகி ஓராண்டு காலம் சென்னை சிறையில் இருந்தவன் நான். எனவே அந்த உரிமையோடு இதை நான் இங்கே குறிப்பிட்டு காட்டியிருக்கிறேன்.
மனித உரிமைகள் மீதான பாஸ்கர் ஆர்வம் இதன்மூலம் வெளிப்படுகிறது. இந்த துறைக்கு தான் வந்த காலத்தில் பெண் பத்திரிக்கையாளர்கள் குறைவாக இருந்தது குறித்து பதிவு செய்துள்ளார். ஆனால் இன்று ஏராளமான பெண் பத்திரிக்கையாளர்கள் வந்து விட்டார்கள். அவர்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருவதையும் பார்க்கிறோம்.

மேலும், தலித் பத்திரிக்கையாளர்களின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவாக இருக்கிறது என்ற அவரது ஆதங்கமானது சமூகநீதிக் குரலாக வெளிப்பட்டுள்ளது. இது ஓரளவு உண்மைதான்.

இதனை உணர்ந்துதான் ஒடுக்கப்பட்ட சமூகத்து இளைஞர்கள், அரசுப் பள்ளிகளில் படித்தவர்களில் இதழியல் ஆர்வம் கொண்டவர்களுக்கு இலவசமாக இதழியல் பயிற்சியை லயோலா கல்லூரியுடன் இணைந்து தமிழ்நாடு அரசு வழங்கியது.
‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற திராவிட மாடல் ஆட்சியின் நோக்கத்தை நான் சொல்லி வருகிறேன் என்றார். சமூகநீதி எந்தளவுக்கு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்தும் – மண்டல் ஆணையத்தின் பரிந்துரையை பிரதமர் வி.பி.சிங் அவர்கள் அமல்படுத்திய பிறகும் சமூகநீதிக்கு எத்தகைய தடைகள் விழுந்தன என்பதையும் இந்நூலில் சுட்டிக் காட்டி இருக்கிறார்.

இத்தகைய சமூக நீதிக்காகத்தான் நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம் என்பதை நான் இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்த நூலில் திராவிட முன்னேற்றக் கழகம் பற்றி ஏதாவது வருகிறதா என்பதை ஆர்வத்துடன் தேடிப் பார்த்தேன். பத்திரிக்கையாளர் பாஸ்கரிடம் 1957-ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகத்தைச் சார்ந்த ஒரு பெண்மணி கேட்டுள்ளார்…

“நீங்கள் தென்னகத்தில் இருந்து வருகிறீர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பற்றிச் சொல்லுங்கள்” என்று கேட்டிருக்கிறார்.

“1957 தேர்தலில் திமுக சிறப்பாக செயல்பட்டது. அவர்களது பணி தேர்தலோடு நின்றுவிடவில்லை. அதன் தொண்டர்கள் இப்போதும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள். இந்த வேகத்தில் தொடர்ந்து செயல்பட்டால், இன்னும் 10 அல்லது 15 ஆண்டுகளில் அவர்கள் ஆட்சிக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை” என்று சொல்லி இருக்கிறார் பாஸ்கர்.

அவர் சொன்னது போல பத்து ஆண்டுகளில் – அதாவது 1967-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தது. திமுக மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்று பாஸ்கர் சொன்னதை அந்த அதிகாரி ரசிக்கவில்லையாம். பேரறிஞர் அண்ணா, திராவிட நாடு கேட்டுக் கொண்டிருந்த காலம் அது. அதனை மனதில் வைத்து, ‘தெற்கு பிரிந்து விடும் என்று சொல்கிறீர்களா?” என்று அவர் கேட்டிருக்கிறார். அந்த சிந்தனையிலும் மாறுதல் வரும் என்றும் பாஸ்கர் சொல்லி இருக்கிறார்கள். அவரது தொலைநோக்கு சிந்தனையை இதன் மூலமாக அறியலாம்.

இந்தியாவைக் காப்பாற்றுவதற்காக, இந்தியாவின் பாதுகாப்பே முக்கியம் எனப் பேரறிஞர் அண்ணா, திராவிடநாடு கோரிக்கையைக் கைவிட்டார்கள்.
அந்நிய நாட்டால் இந்தியாவுக்கு ஆபத்து வந்த காலம் அது. வீடு இருந்தால்தான் ஓடு மாற்ற முடியும் என்று விளக்கம் அளித்து இந்த நிலைப்பாட்டை எடுத்தார் பேரறிஞர் அண்ணா. இதே போன்றுதான் இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு இன்று ஆபத்து வந்திருக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற தத்துவத்துக்கு ஆபத்து வந்திருக்கிறது. மதச்சார்பின்மைக்கு ஆபத்து வந்திருக்கிறது. சமூகநீதியை சிதைக்கப் பார்க்கிறார்கள். இவை அனைத்தையும் சிதைப்பதன் மூலமாக இந்தியாவை சிதைக்கப் பார்க்கிறார்கள். இதனை அரசியல் தளத்தில் அரசியல் இயக்கங்களாகிய நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.

இந்தியாவைக் காப்பாற்றும் பணியில் ஊடகங்களும் தங்களது பங்களிப்பைச் செலுத்த வேண்டும் என்று இந்த நிகழ்ச்சியின் மூலமாக நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். ஆட்சிப்பொறுப்பிற்கு வந்தபிறகு ‘இந்திய அரசியலமைப்புச் சட்டம்தான் என்னுடைய வேதம்’ என்று சொல்லி நாடாளுமன்றத்தையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் வணங்கியவர் பிரதமர். இப்போது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவே செயல்பட்டு கொண்டிருக்கிறார். இதனை நாட்டிலுள்ள அனைத்து மக்களும் உணர்ந்து இந்த போக்கை எதிர்க்க வேண்டும்.

இங்கு கூடியிருக்கும் எனது மலையாள சொந்தங்களுக்கும் கேரளத்தில் வாழக்கூடிய சொந்தங்களுக்கும் நான் சொல்லிக்கொள்வது, தமிழ்நாடும் கேரளமும் நாட்டைக் காக்கின்ற முயற்சியில் இரட்டைக்குழல் துப்பாக்கியாக செயல்பட்டு ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் விடியலை ஏற்படுத்தித் தர வேண்டும். அதேபோல் ஊடகங்களும், பொய்பரப்புரைகளுக்கும் திசை திருப்புபவர்களுக்கும் முக்கியத்துவம் தராமல் விடுதலைப் போராட்டக் காலத்தில் செயல்பட்டதைப் போல மீண்டும் செயல்பட வேண்டும் என்று கேட்டு இந்த சிறப்பான நிகழ்ச்சியில் உங்கள் அனைவரையும் சந்திக்கின்ற வாய்ப்பினை பெற்றமைக்காக நான் மீண்டும் ஒருமுறை எனது இதயபூர்வமான நன்றியை, வணக்கத்தை தெரிவித்து, என் உரையை நிறைவு செய்கிறேன்.

The post ’’ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் விடியலை ஏற்படுத்தித் தர வேண்டும்..!’’ முதல்வர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%92%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1/feed/ 0
’’மோடி கேள்விக்கு மோகன் பகவத் பதில்..!” முரசொலி https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%af%87%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25ae%25bf-%25e0%25ae%2595%25e0%25af%2587%25e0%25ae%25b3%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581-%25e0%25ae%25ae%25e0%25af%258b%25e0%25ae%2595%25e0%25ae%25a9%25e0%25af%258d https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%af%87%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d/#respond Sat, 09 Sep 2023 04:51:39 +0000 https://madrasmurasu.com/?p=6195 மோடி கேள்விக்கு மோகன் பகவத் பதில் என்று முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது. மணிப்பூருக்கு போய் பார்க்காத -– அதானி ஊழல்கள் பற்றி பதில் சொல்லாத -– 7.5. லட்சம் கோடி ரூபாய் முறைகேடுகள் பற்றி விளக்கம் அளிக்காத -–- பிரதமர் நரேந்திரமோடி, சனாதனம் பற்றி வாயைத் திறந்துள்ளார். ஒன்றிய அமைச்சர்களுக்கு சனாதன கதாகாலட்சேபம் நடத்த உத்தரவிட்டுள்ளார். ஒன்றிய அமைச்சர்கள் பேசுவதற்கு தமிழில் நிறைய வீடியோக்கள் இருக்கிறது. அதனை யாராவது மொழி பெயர்த்து அனுப்பி வைக்கலாம். சனாதனம் குறித்து […]

The post ’’மோடி கேள்விக்கு மோகன் பகவத் பதில்..!” முரசொலி first appeared on Madras Murasu.

]]>
மோடி கேள்விக்கு மோகன் பகவத் பதில் என்று முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.

மணிப்பூருக்கு போய் பார்க்காத -– அதானி ஊழல்கள் பற்றி பதில் சொல்லாத -– 7.5. லட்சம் கோடி ரூபாய் முறைகேடுகள் பற்றி விளக்கம் அளிக்காத -–- பிரதமர் நரேந்திரமோடி, சனாதனம் பற்றி வாயைத் திறந்துள்ளார். ஒன்றிய அமைச்சர்களுக்கு சனாதன கதாகாலட்சேபம் நடத்த உத்தரவிட்டுள்ளார். ஒன்றிய அமைச்சர்கள் பேசுவதற்கு தமிழில் நிறைய வீடியோக்கள் இருக்கிறது. அதனை யாராவது மொழி பெயர்த்து அனுப்பி வைக்கலாம்.

சனாதனம் குறித்து பிரதமர் மோடி எழுப்பும் கேள்விகளுக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் விரிவாக விளக்கமாக பதில் அளித்துவிட்டார். “இரண்டாயிரம் ஆண்டுகளாக சாதி ரீதியிலான பாகுபாடு இருக்கிறது” என்பதை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஒப்புக்கொண்டு விட்டார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு பேசும் போது, “சமூக அமைப்பில் சக மனிதர்களை நாம் பின்தங்க வைத்துள்ளோம். இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்த நிலை தொடர்கிறது. நாம் அவர்களுக்கு சமத்துவத்தை வழங்கும்வரை, இட ஒதுக்கீடு போன்ற சில சிறப்பு சலுகைகள் வழங்க வேண்டும். எனவே, இத்தகைய பாகுபாடு இருக்கும் வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும். அரசியலமைப்பு சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதனை ஆர்.எஸ்.எஸ். ஆதரிக்கும்” என்றும் மோகன் பகவத் சொல்லி விட்டார். ஒன்றிய அமைச்சர்கள், மோகன் பகவத் பேச்சைப் படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

On reservations, RSS chief Mohan Bhagwat says, “We kept our own fellow human beings behind in the social system…We did not care for them, and this continued for almost 2,000 years…Until we provide them equality, some special remedies have to be done…Reservations are one of them. Reservations should continue till there is such discrimination. The Sangh gives complete support to the reservations provided in the Constitution.” – ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

மோகன் பகவத் இப்படி பேசியதும் அவரை இணையத் தளங்களில் திட்டிக் கொண்டு இருக்கிறார்கள். ‘நீங்களே இப்படிப் பேசலாமா?’ என்று சனாதனத்தை மறைக்கும் சக்திகள் அவரை விமர்சித்து பதிவுகள் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். மாண்புமிகு அமைச்சர் உதயநிதி அவர்கள் பேசியதைத் திரித்தும், ‘சனாதனம் என்றால் ஒற்றுமைதான்’ என்றும் பொய் சொன்ன கூட்டம், இப்போது மோகன் பகவத்தும் அதைச் சொன்னதும் அவரையும் திட்டத் தொடங்கி இருக்கிறது.

இந்தக் கருத்தை மோகன் பகவத் தொடர்ந்து சொல்லி வருகிறார்.

மும்பை ரவீந்தர் மந்திர் வளாகத்தில் நடந்த புனிதர் சிரோன்மணி ரோஹிதாஸின் 647 ஆவது பிறந்த நாளில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சொன்னார்:

“இந்து மதத்தில் சாதிகள் கிடையாது. உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி வேறுபாடுகள் கிடையாது. மேல் சாதி, கீழ் சாதி என்ற அடிப்படை அற்ற பழக்கத்தை உருவாக்கியவர்கள் பண்டிட்டுகளே” (6.2.2023) என்று பேசினார். உடனே மோகன் பகவத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. அவரது பேச்சை பூரி சங்கராச்சாரியார் கண்டித்தார். பீகார் மாநிலம் முசாபர்பாத் நீதிமன்றத்தில் மோகன் பகவத் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு விளக்க அறிக்கை கொடுத்தது. “பண்டிட்டுகள் என்று மோகன் பகவத் குறிப்பிட்டது எந்த ஒரு பிரிவினரையும் அல்ல. ஜாதி படி நிலைகளை ஏற்றுக் கொண்டவர்களைத்தான் அப்படிச் சொன்னார்” என்று விளக்கம் அளித்தார்கள். இவரது பேச்சு முக்கிய இணைய தளங்களிலும் வீடியோவாக உள்ளது.

“நாட்டில் அனைவரும் சாதி வர்ண பேதங்களை மறந்து விட வேண்டும். யாரேனும் இதைப்பற்றிக் கேட்டால் சமுதாய நலனில் அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் வர்ண மற்றும் சாதி அமைப்புகள் கடந்த கால விஷயம் எனவும், அதை அனைவரும் மறந்து விட வேண்டும்” என்று 8.10.2022 அன்று மோகன் பகவத் பேசி இருக்கிறார். ( தந்தி டி.வி.)

டாக்டர் மதன் குல்கர்னி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் ரேணுகா போகரே ஆகியோர் எழுதிய புத்தக வெளியீட்டு விழா நாக்பூரில் நடந்தது. அப்போது பேசிய மோகன் பகவத், “இப்போது யாராவது சாதி, வர்ணம் குறித்து கேள்வி கேட்டால் அவை கடந்து போனவை, அவைகள் மறக்கப்பட வேண்டும் என்று சொல்லுங்கள். பாகுபாடுகளை உருவாக்கும் அனைத்தும் மறுக்கப்பட்டு, தடுக்கப்பட வேண்டும். பாகுபாடு செய்பவை அனைத்தும் பூட்டப்பட வேண்டும். உலகின் எல்லா இடங்களிலும் முன்னோர்கள் தவறு செய்திருக்கிறார்கள். இந்தியாவும் அதற்கு விதிவிலக்கு அல்ல” என்று பேசினார். (8.10.2022)

அகமதாபாத் ஜி.எம்.டி.சி. மைதானத்தில் சமாஜ் சக்தி சங்கம் விழாவில் கலந்து கொண்டு மோகன் பகவத் பேசினார். “நியாயமான மற்றும் சமத்துவமான சமுதாயத்தை உருவாக்காமல் அரசியல் மற்றும் பொருளாதார சுதந்திரத்தை இந்தியா அடைய முடியாது என்று அம்பேத்கர் சொன்னார். அதை அடைய நம் சமூகத்தில் இருக்கும் வேறுபாடுகளை அகற்ற வேண்டும். நாம் கடந்த காலத்தில் ஒற்றுமையான சமூகமாக இருந்தோம். பின்னர் இந்த சாதிகள் மற்றும் வகுப்புகளை உருவாக்கினோம். இது நமக்குள் வேறுபாடுகளை உருவாக்கியது. இந்தச் சூழலை அன்னிய சக்திகள் பயன்படுத்திக் கொண்டார்கள். இந்த தீய சுழற்சியில் இருந்து நாம் முழுமையாக வெளியே வந்து ஒன்றுபட வேண்டும்” என்று வெளிப்படையாகவே பேசினார் மோகன் பகவத். (14.4.2023)

வர்ண -– சாதி அமைப்புகள் குறித்து மோகன் பகவத் சொன்னதுதான், பிரதமர் மோடிக்கு நமது பதில்கள் ஆகும். இந்த விளக்கத்தை ஒன்றிய அமைச்சர்கள் அனைவரும் உள்வாங்கிக் கொள்ளக் கேட்டுக் கொள்கிறோம்.

The post ’’மோடி கேள்விக்கு மோகன் பகவத் பதில்..!” முரசொலி first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%af%87%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d/feed/ 0
’’சனாதன ஒழிப்பு மாநாட்டில் தலைவர்கள் பேசியது என்ன..?’’ https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9-%e0%ae%92%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259a%25e0%25ae%25a9%25e0%25ae%25be%25e0%25ae%25a4%25e0%25ae%25a9-%25e0%25ae%2592%25e0%25ae%25b4%25e0%25ae%25bf%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2581-%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25bf https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9-%e0%ae%92%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/#respond Thu, 07 Sep 2023 10:17:51 +0000 https://madrasmurasu.com/?p=6182 தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் 2.9.2023 அன்று சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. காலை நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி மாநாட்டைத் தொடங்கிவைத்து எழுச்சியுரையாற்றினார். தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துரை ஆற்றினார். இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக சனாதனத்தை ‘அரசியல் களத்தில் முறியடித்தல்’ எனும் தலைப்பில் அரசியல் கட்சித் தலைவர்கள் பேசியதன் சுருக்கம் வருமாறு: அமைச்சர் க.பொன்முடி தமிழ்நாடு […]

The post ’’சனாதன ஒழிப்பு மாநாட்டில் தலைவர்கள் பேசியது என்ன..?’’ first appeared on Madras Murasu.

]]>
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் 2.9.2023 அன்று சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. காலை நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி மாநாட்டைத் தொடங்கிவைத்து எழுச்சியுரையாற்றினார். தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துரை ஆற்றினார். இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக சனாதனத்தை ‘அரசியல் களத்தில் முறியடித்தல்’ எனும் தலைப்பில் அரசியல் கட்சித் தலைவர்கள் பேசியதன் சுருக்கம் வருமாறு:

அமைச்சர் க.பொன்முடி

தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி பேசுகையில், “பார்ப்பனர்களை அல்ல, பார்ப்பனி யத்தைதான் எதிர்க்கிறோம். சனாதனத்தை நிலை நிறுத்த ஒன்றிய பாஜக அரசு முயற்சிக்கிறது. புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் குலக்கல்வியை புகுத்துகின்றனர். சனாதனத்திற்கு எதிராகத்தான் அனைத்து ஜாதியினரும் அர்ச்சக ராகலாம் என்ற சட்டம்கொண்டு வரப்பட்டது. சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சமத்துவம் ஏற்பட வேண்டும். ஜாதியின் தாக்கம் அனைத்து இடங்களிலும் பரவி இருப்பதை அகற்ற வேண்டும். இளந்தலை முறையினரிடம் வாசிக்கும் பழக்கம் குறைந்துள்ளது. சனாதன ஒழிப்பு கருத்துகளை மாணவர்கள், இளைஞர்களிடம் படைப்பாளிகள் கொண்டு சேர்க்க வேண்டும். சனா தனத்தை எதிர்க்க ‘இந்தியா’ அணி வெல்ல வேண்டும். என்றார்.

கே.பாலகிருஷ்ணன்ன் (மார்க்சிஸ்ட்)

மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிராக பிரதமரும், ஒன்றிய அரசும் செயல்படுவதை சுட்டிக்காட்டிப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ‘இந்தியா’ கூட்டணியின் செயல்பாடுகளால் பதற்றமடைந்துள்ள ஒன்றிய பாஜக அரசு, நவம்பர் மாதம் நடத்த வேண்டிய குளிர் காலக் கூட்டத் தொடரை செப்டம்பர் மாதத்தில் நடத்துகிறது. “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்தை கொண்டு வந்து எதிர்க் கட்சிகளிடம் உள்ள மாநில ஆட்சிகளை பறிக்க நினைக்கிறது. அதனை அதிமுக ஆதரிக்கிறது. சனாதனம் எங்கும் பரவி நிற் கிறது” என்றார்.

“மார்க்சிய இயக்கங்கள், பெரி யாரிய, அம்பேத்கரிய இயக்கங் களின் தொடர் போராட்டத்தால் ஓரளவு சனாதனம் கட்டுப்படுத் தப்படடுள்ளது. சனாதனம் இட ஒதுக்கீடு, மாநில உரிமைகளை பறி க்கிறது. முதலாளித்துவத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது. முதலாளித்துவம் சனாதனத்தை பாதுகாக்கிறது. எனவே, சனாதனத்தை கருத்தியல் ரீதியாக மட்டும் ஒழிக்க முடியாது. பொருளாதார கொள்கைகளோடும் இணைத்து நடத்த வேண் டும். அதுதான் இந்தியாவின் அனுபவமாக உள்ளது” என்றும் அவர் கூறினார்.

“வர்ணாசிரமம், சனாதனம் மக்களை ஜாதி ரீதியாக பிரித்து சொத்துடமையை பாதுகாக்கிறது. இதற்கெதிராக உழைப்பாளி மக்களை ஒன்று சேர்த்து போராடுகிறோம். ஜாதிய, சமூக ஒடுக்கு முறை, பொருளாதார சுரண்டல் ஆகியவற்றை ஒன்றிணைத்து போராட வேண்டும். பாஜகவின் பாசிச கொள்கைகளை எதிர்த்த ‘இந்தியா’ அணி வெற்றி பெற வேண்டும். மாநாடு நிறைவேற்றிய தீர்மானங்கள் செயல்படுத்த களத்தில் மார்க்சிஸ்ட் கட்சி நிற்கும்” என்றும் பாலகிருஷ்ணன் கூறினார்.

தொல்.திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்)

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் மக்களவை உறுப் பினர் தொல்.திருமாவளன் பேசுகையில், “பிறப்பின் அடிப் படையில் உயர்வு தாழ்வு என்ற ஜாதிய கட்டமைப்பு நிலையானது, மாறாதது என்பதுதான் சனாதனம். உழைப்புச்சுரண்டல், அதி காரம், ஆதிக்கம், ஒடுக்கு முறை கூடாது என்கிறது கம்யூனிசம். கம்யூனிசத்திற்கு நேர் விரோதமானது சனாதனம். சனாதன கருத்தியலை பார்ப்பனர்கள் கைக்கொண்டுள்ளதால் அதை பார்ப்பனீயம் என்கி றோம்.

“இந்தியாவில் ஜாதியும் வர்க்க மும் ஒன்றோடு ஒன்றாக பின்னி பிணைந்துள்ளது. உயர் பொறுப்புகள், அதிகாரங்களை பறித்துக் கொண்டுள்ள பார்ப்பனியத்தின் மீது பிற்படுத்தப்பட்ட சமூகம் கோபப்பட வேண்டும். மாறாக, கீழ்நிலையில் உள்ள தாழ்த்தப்பட்டவர்களை எதிரியாக பார்க்கின்றனர். இதுதான் சனாதனத்தின் சூழ்ச்சி. பார்ப்பனியத்திற்கு எதிராக பிற்படுத்தப் பட்ட மக்கள் நகரும் போதுதான் சனாதனத்தை ஒழிக்க முடியும். காலங்காலமாக பிராமனியத்திற்கு எதிரான குரல் ஒலித்து வருகிறது. அதை இந்துத்துவா நீர்த்துப்போகச் செய்கிறது. சனா தனத்தை காப்பாற்றி வரும் பாஜக விற்கு எதிராக மக்கள் திரும்ப வேண்டும். இதனை புரிந்து கொள்வதில் உள்ள தேக்கத்தை படைப்பாளிகள் உடைக்க வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

எஸ்.பீட்டர் அல்போன்ஸ் (தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி)

“சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் ஆகியவற்றிற்கு விரோதமான அனைத்தும் சனாதனம்தான். வெளிநாடுகளுக்கு செல்லும் பிரதமர் போப்பாண்டவர், சவுதி மன்னரை கட்டிப் பிடித்து அணைத்துக்கொள்கிறார். இந்தியாவில் ஒரு சங்கராச் சாரியாரை அவரால் கட்டிப்பிடிக்க முடியுமா? அதுதான் சனாதனம்” என்று தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறினார் “சனாதனத்திற்கு எதிராக பல நூற்றாண்டுகளாக போராடினாலும் ஒழிக்க முடிய வில்லை. சனாதனத்தின் வேர் அறுபடாமல் உள்ளது. சனாத னத்தை அமல்படுத்துகிறவராக பிரதமர் உள்ளார். சனாதனத்தில் அடையாளமாக உள்ள மோடியை வீழ்த்த வேண்டும். அரசியல் களத்தில் சனாதனத்தின் பிம்பங்களை, தத்துவங்களை கூறி பாஜகவை வீழ்த்த வேண்டும்.” என்றும் அவர் கூறி னார்.

மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன் குறிப்பிடுகையில், “ஜாதி, உயர்ஜாதி என் போருக்கு சொர்க்கமாகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நரகமா கவும் உள்ளது. ஜாதி, மதங்களை கேள்விக்குள்ளாக்காமல் கல்லூ ரிகள், பல் கலைக் கழகங்கள் கடந்து செல்கின்றன. கல்வித்துறை யில், மாணவர்களிடத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” என்றார். “சனாதனவாதிகளுக்கு இந்திய அரசமைப்பு சட்டம் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. எனவே, அதை நீர்த்துப்போகச் செய்கின்றனர். இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்க நினைக்கும் பாஜகவை, ‘இந்தியா’ அணி வீழ்த்தும். ஜனநாய கத்தை காக்கும் பெரும்போரில் கூட்டாக செயல்படுவோம்” என்றார்.

மதுக்கூர் ராமலிங்கம் (தமுஎகச மாநிலத் தலைவர்)

இந்நிகழ்விற்கு தலைமை தாங்கி பேசிய தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம், “சனாதனத்திற்கு எதிராக பெரும் யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறோம். இது தலைமுறை கடந்து தொடரும். பெண்ணடிமைத்தனம், ஜாதிய பாகுபாடு, மூடநம் பிக்கை, சடங்கு என்ற பெயரில் மக்கள் சுரண்டப்படுகிறார்கள். இவை யெல்லாம்தான் சனாதன கலாச்சாரம் என்றால், அதை எதிர்ப்போம்” என்றார். மநுநீதியில் கூட குற்றங்களுக்கு அனை வருக்கும் ஒரே மாதிரி தண்டனை இல்லை. ஆனால், பொது சிவில் சட்டம் குறித்து பேசுகிறார்கள். ஒரேநாடு, ஒரேமதம் என்றெல்லாம் கூறி ஒரே தேர்தல் என்பதில் வந்து நிற்கிறார்கள். சனாதன எதிர்ப்பின் உச்ச நட்சத்திரமாக வள்ளலார் இருந்தார். “யாதும் ஊரே யாரும் கேளிர்”, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க் கும்” என்பவை எல்லாம் சனாதனத்திற்கு எதிரானது என்றும் அவர் கூறினார்.

சனாதன எதிர்ப்பில் கலைஞர்கள்தான் எப்போதும் முன் னின்று இருக்கிறார்கள். நாடகத்தில் முருகன் வேடம் ஏற்று விஸ்வநாததாஸ் நடித்தார். அவருடன் நடிக்க பலரும் மறுத்த போது, கம்யூனிஸ்ட் தலைவர் கே.பி.ஜானகி அம்மாள்தான் சேர்ந்து நடித்தார். மீனவரான சிந்தனை சிற்பி சிங்கார வேலர் வழக்குரைஞர் ஆனதை சக வழக்குரைஞர்கள் எள்ளி நகையாடினர்.

மறுநாள், வலைக்குள் சட்டப் புத்தகங்களை கட்டிக்கொண்டு நீதிமன்றம் சென்றார். அந்த சட்டம் உனக்கு மட்டுமல்ல, எனது வலைக்கும் சிக்கும் எனக் கூறியது போன்றவற்றை அவர் நினைவுகூர்ந்தார். அரசியல், ஆன்மிகம், அறிவியல், பண்பாடு, கலை என அனைத்து தளங்களிலும் சனாதனத்திற்கு எதிரான போரை தொடர்ந்து நடத்துவோம்.

The post ’’சனாதன ஒழிப்பு மாநாட்டில் தலைவர்கள் பேசியது என்ன..?’’ first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9-%e0%ae%92%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/feed/ 0