acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ”உலகக் கோப்பையையும் வெல்லுமா இங்கிலாந்து அணி..?” first appeared on Madras Murasu.
]]>1992-க்குப் பிறகு, 2015 வரை இரு முறை மட்டுமே உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றுக்கு இங்கிலாந்து தகுதி பெற்றது. 1996, 2011 என இரண்டு முறையும் காலிறுதிச் சுற்றில் தோல்வியடைந்தது. 2015-ல் லீக் சுற்றுடன் வெளியேறியது.
2015 படுதோல்வி இங்கிலாந்தைப் பெரிதளவில் பாதித்தது. இதன் எதிரொலியாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் புரட்சியை உண்டாக்கிய இயான் மார்கன் தலைமையிலான இங்கிலாந்து, 2019-ல் லார்ட்ஸில் உலகக் கோப்பையை ஏந்தியது. வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து வாய்ப்புகளை அளித்தது, ஸ்டிரைக் ரேட்டை அதிகரித்தது, நிறைய வெள்ளைப் பந்து ஆட்டங்கள் விளையாடியது என இயான் மார்கன் தலைமையில் அதிரடியான மாற்றங்கள் செய்யப்பட்டன. இதற்கான பலனையும் இங்கிலாந்து அனுபவித்தது.
இயான் மார்கன் ஓய்வுக்குப் பிறகும் இதே பாணியைக் கடைப்பிடித்து வரும் ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து, கடந்தாண்டு டி20 உலகக் கோப்பையை வென்றது. இதே முனைப்புடன் உலகக் கோப்பையையும் வெல்லுமா?
கடந்த உலகக் கோப்பைக்குத் தயார் ஆனதைப்போல இந்த முறை இங்கிலாந்து தயாராகவில்லையோ என்கிற எண்ணம் வருகிறது. மற்ற அணிகள் உலகக் கோப்பைக்காக 50 ஓவர் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்தபோது இங்கிலாந்து, நியூசிலாந்துக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடத் திட்டமிட்டது. பிறகு உலகக் கோப்பைக்காக ஒரு டி20 ஆட்டம் குறைக்கப்பட்டு, ஒருநாள் தொடரில் கூடுதலாக ஒரு ஆட்டம் சேர்க்கப்பட்டது.
இங்கிலாந்தின் வெள்ளைப் பந்து அணிகளின் பயிற்சியாளராக மேத்யூ மாட் நியமிக்கப்பட்டதிலிருந்து இருநாடுகளுக்கு இடையிலான தொடர்களின் முடிவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை.
ஆஸ்திரேலிய அணி கடந்த இரு மாதங்களில் மட்டும் தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியாவுக்கு எதிராக 8 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியது. நியூசிலாந்து அணி இங்கிலாந்துக்கும், வங்கதேசத்துக்கும் எதிராக 7 ஆட்டங்களில் விளையாடியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் ஆசியக் கோப்பையை விளையாடிவிட்டு வருகின்றன.
இங்கிலாந்தோ கடந்த 13 மாதங்களில் வெறும் 9 ஒருநாள் ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ளது.
காயம் காரணமாக இடைவெளி எடுத்துக்கொண்ட ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட் உள்ளிட்டோர் கடந்தாண்டு ஜூலையில் தென்னாப்பிரிக்காவுடனான தொடருக்குப் பிறகு, நியூசிலாந்து தொடரில்தான் ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ளார்கள். ஓய்விலிருந்து திரும்பி வந்துள்ள பென் ஸ்டோக்ஸும் கடைசியாக கடந்தாண்டு ஜூலையில் நடைபெற்ற அதே தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடருக்குப் பிறகு நியூசிலாந்து தொடரில் தான் விளையாடினார்.
2015 – 2019 உலகக் கோப்பைகள் இடையே 88 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடிய இங்கிலாந்து, 2019 – 2023 உலகக் கோப்பைகள் இடையே வெறும் 43 ஒருநாள் ஆட்டங்களில்தான் விளையாடியுள்ளது. கடைசியாக நடைபெற்ற 3 ஆட்டங்கள் கொண்ட அயர்லாந்துக்கு எதிரான தொடரில் உலகக் கோப்பைக்குத் தேர்வான வீரர்கள் விளையாடவில்லை.
கடந்த உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்காக அதிக ரன்கள் எடுத்த ஜோ ரூட் 2015 – 2019 உலகக் கோப்பைகள் இடையே 78 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடினார். இதே ஜோ ரூட் 2019 உலகக் கோப்பைக்குப் பிறகு வெறும் 19 ஒருநாள் ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ளார்.
இந்த மாற்றம் வீரர்களின் செயல்பாடுகளிலும் வெளிப்பட்டுள்ளது. நியூசிலாந்து தொடரில் 3 ஆட்டங்களில் விளையாடிய பேர்ஸ்டோ மொத்தம் 19 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஜோ ரூட் 4 ஆட்டங்களில் 39 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஒருநாள் போட்டியில் பழைய ஃபார்மை மீட்டெடுப்பதற்காக, அயர்லாந்துக்கு எதிரான தொடரின் முதல் ஆட்டத்தில் மட்டும் சேர்த்துக்கொள்ளும்படி தாமாக கேட்டுக்கொண்டார் ஜோ ரூட். ஆனால், மழை காரணமாக அந்த ஆட்டமும் கைவிடப்பட்டது. இந்தியாவுடனான பயிற்சி ஆட்டமும் மழையால் கைவிடப்பட்டது. வங்கதேசத்துக்கு எதிராக களத்தில் நேரத்தை செலவிட்ட ரூட், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 40 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார்.
இருந்தபோதிலும் பென் ஸ்டோக்ஸ் வருகை, மிக நீண்ட பேட்டிங் வரிசை, வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர்கள், சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர்கள் எனப் பெரும் படையை வைத்துள்ளதால் இங்கிலாந்தும் அபாயகரமான அணியாகவே உள்ளது.
டேவிட் மலான் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் 92.33 சராசரியில் 277 ரன்கள் குவித்துள்ளார். தொடக்க பேட்டிங்கில் சிக்கல் ஏற்பட்டால் கடைசி நேரத்தில் ஜேசன் ராய்-க்குப் பதில் மாற்று வீரராக சேர்க்கப்பட்ட இங்கிலாந்தின் புதிய நட்சத்திரம் ஹாரி புரூக் அதிரடி காட்ட உள்ளார்.
பென் ஸ்டோக்ஸ் ஓய்விலிருந்து திரும்பி வந்ததுபோல் அல்லாமல் நியூசிலாந்துடனான மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் 182 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். அவர் முழுநேர பேட்டராக மட்டுமே விளையாடுகிறார். என்றாலும்கூட அணியின் பட்டியலில் இவரது பெயர் இடம்பெற்றிருப்பதே எதிரணிக்கு அழுத்தத்தை உண்டாக்கும்.
மொயீன் அலி, லியம் லிவிங்ஸ்டன் ஆகியோர் பேட்டிங்கில் கைகொடுப்பது மட்டுமில்லாமல் சுழற்பந்துவீச்சில் ஒத்துழைக்கவுள்ளார்கள். லிவிங்ஸ்டன் சூழலுக்கு ஏற்ப ஆஃப் ஸ்பின், லெக் ஸ்பின் என இரண்டையும் வீசக் கூடியவர். பேட்டிங்கிலும் இவர் நல்ல ஃபார்மில் உள்ளார்.
இந்தியாவில் நடைபெறவுள்ளதால் பிரதான சுழற்பந்துவீச்சாளர் அடில் ரஷித் இந்த அணியில் மிக முக்கியமான தாக்கத்தை உண்டாக்கப் போகிறார். அனைத்து வகையான ஸ்பின் வகைகளும் இருப்பது இங்கிலாந்துக்குக் கூடுதல் பலம்.
பந்துவீச்சில் இங்கிலாந்து அணி பெரும்பாலும் ஒவ்வொரு பணிக்கும் இருவரை வைத்துள்ளது. வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர்களாக சாம் கரண், கிறிஸ் வோக்ஸ் இருக்கிறார்கள். இடக்கை வேகப்பந்துவீச்சுக்கு டேவிட் வில்லி, ரீஸ் டாப்லே இருக்கிறார்கள். சூழலுக்கு ஏற்ப வீரர்களைத் தேர்வு செய்துகொள்வதற்கான வாய்ப்புகளைத் தருகிறது.
அதிவேகப்பந்துவீச்சுக்கு மார்க் வுட் இருக்கிறார். இந்தியாவில் நடைபெறுவதால் இவரது வேகம் இங்கிலாந்துக்கு நிச்சயமாக நடு ஓவர்களில் உதவும். உலகக் கோப்பைக்கான அணியில் இல்லாதபட்சத்திலும் ஜோஃப்ரா ஆர்ச்சர் மாற்று வீரராக அணியுடன் பயணிக்கிறார்.
விளையாடிய ஆட்டங்களின் எண்ணிக்கைகளைக் கொண்டு பார்த்தால் தயார் நிலையில் இல்லாத அணியாகத் தோற்றமளித்தாலும், உலகக் கோப்பையை வெல்வதற்குத் தேவையான மிக நீண்ட பேட்டிங் வரிசை, ஆல்-ரவுண்டர்கள் என பலம் வாய்ந்த அணியாகவே இங்கிலாந்து உள்ளது.
இங்கிலாந்து அணி:
ஜானி பேர்ஸ்டோ, டேவிட் மலான், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), லியம் லிவிங்ஸ்டன், மொயீன் அலி, சாம் கரண், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், மார்க் வுட், ஹாரி புரூக், டேவிட் வில்லி, ரீஸ் டாப்லே, கஸ் அட்கின்சன்.
இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு எதிராக அக்டோபர் 29-ம் தேதி லக்னௌவில் விளையாடுகிறது. இதுதவிர, இங்கிலாந்து விளையாடும் பெரும்பாலான ஆடுகளங்கள் மும்பை, கொல்கத்தா, தரம்சாலா என பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளங்களாகவே உள்ளன.
சூழல்களைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு உலகக் கோப்பையைத் தக்கவைக்குமா இங்கிலாந்து..?
The post ”உலகக் கோப்பையையும் வெல்லுமா இங்கிலாந்து அணி..?” first appeared on Madras Murasu.
]]>The post ”பாகிஸ்தானை சுருட்டி வீசியது இந்தியா..!” கோலி, ராகுல், குல்தீப் யாதவ் ’அசத்தல்’ first appeared on Madras Murasu.
]]>பவர்பிளே ஓவர்களில் ஷாஹீன் ஷா அஃப்ரிடியை தீரமுடன் எதிர்கொண்ட கில் பவுண்டரிகளாக விரட்டினார். முதலில் நிதானமாகத் தொடங்கிய ரோஹித் சர்மா, பவர்பிளே ஓவர்கள் முடிந்தவுடன் அதிரடி ஆட்டத்தைத் தொடங்கினார். லெக் ஸ்பின்னர் ஷதாப் கான் பந்துகளை நாலாபுறமும் விரட்டிய அவர் கடைசியில் அவருடைய பந்திலேயே ஆட்டமிழந்தார். 52 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உடன் 58 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
தொடக்க ஓவர்களில் ரன்களை ஷாஹீன் அஃப்ரிடியை அடித்து விளையாடிய கில், அவருடைய அடுத்த ஸ்பெல்லில் 58 ரன்களில் ஆட்டமிழந்தார். 24.1 ஓவர்களில் கன மழை பெய்யத் தொடங்கியதால் ஆட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. மழை நிற்காமல் பெய்ததால் மாற்று நாளான திங்களன்று ஆட்டம் தொடங்குமென அறிவிக்கப்பட்டது. திங்கள் ஆட்டத்தைத் தொடங்கிய கோலி – ராகுல் இணை அபாரமாக விளையாடியது.
தன்னுடைய உடற்தகுதியை நிரூபிக்கும் கட்டாயத்தில் இருந்த ராகுல் 60 பந்துகளில் அரைசதம் அடித்தார். மறுபுறம் சிக்ஸர் மழை பொழிந்த கோலி, 55 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். காயம் காரணமாக ஹாரிஸ் ராஃப் பந்துவீசாததால் பாகிஸ்தான் அணி இந்திய பேட்டர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறுகிறது. இஃப்திகார் அஹமதின் பந்துவீச்சை கோலி – ராகுல் இணை சிதறடித்தது.
இறுதிக்கட்ட ஓவர்களில் இருவரும் ருத்ரதாண்டவம் ஆட இந்தியா கடைசி 25.5 ஓவர்களில் 209 ரன்களைக் குவித்தது. சரியாக 100 பந்துகளில் சதமடித்த ராகுல், கடைசிவரை ஆட்டமிழக்காமல் 111 ரன்கள் குவித்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் 13000 ரன்களை எட்டிய கோலி, 83 பந்துகளில் தனது 43வது சதத்தை எட்டினார். 9 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் உடன் 122 ரன்கள் குவித்த அவர் கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை. இந்தியா 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 356 ரன்களைக் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன், ஷதாப் கான் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
357 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான், இந்திய வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. ஓர் அட்டகாசமான ஸீம் பந்தின் மூலம் தொடக்க பேட்டர் இமாம் உல் ஹக் விக்கெட்டை வீழ்த்தினார் பும்ரா. பாகிஸ்தானின் நட்சத்திர பேட்டரும் கேப்டனுமான பாபர் ஆஸம், பாண்டியாவின் கிராஸ் ஸீம் பந்து எந்தப் பக்கம் திரும்புகிறது என்பதைக் கணிக்க முடியாமல் 10 ரன்களில் தனது ஸ்டம்புகளைப் பறிகொடுத்தார்.
மழை குறுக்கீட்டிற்குப் பிறகு ஆட்டம் தொடங்கிய உடனே துணை கேப்டன் ரிஸ்வானை 2 ரன்களுக்கு பெவிலியன் அனுப்பினார் ஷார்துல். அதன்பிறகு சீட்டுக் கட்டைப் போல பாகிஸ்தான் விக்கெட்டுகள் சரிந்தன. தாக்குப் பிடித்து 27 ரன்கள் எடுத்த ஸமானை ஒரு ஃபிலாட்டர் பந்தின் மூலம் குல்தீப் யாதவ் வெளியேற்றினார். நடு ஓவர்களில் குல்தீப் யாதவின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் பேட்டர்கள் சரணடைந்தனர்.
சல்மான், இஃப்திகார் அஹ்மது ஆகியோர் மட்டுமே ஓரளவுக்கு சமாளித்து ரன் சேர்த்தனர். சைனாமேனா கூக்ளியா என்ற குழப்பத்திலேயே பாகிஸ்தான் பேட்டர்கள் தங்களுடைய விக்கெட்டைப் பறிகொடுத்தனர். 32வது ஓவரில் கடைசி பந்தில் ஆல்ரவுண்டர் ஃபஹீமை போல்டாக்கிய குல்தீப், தனது ஐந்தாவது விக்கெட்டைக் கைப்பற்றினார். காயம் காரணமாக நசீம் ஷா, ஹாரிஸ் ராஃப் பேட்டிங் செய்ய முன்வராததால் இந்தியா 228 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
களமிறங்கிய 9 பாகிஸ்தான் பேட்டர்களில் மூவர் மட்டுமே 20 ரன்களைத் தாண்டினர். இந்திய அணித் தரப்பில் குல்தீப் 5 விக்கெட்டுகளையும் பும்ரா, பாண்டியா, ஷார்துல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். ஒருநாள் கிரிக்கெட்டில் 13000 ரன்களை எட்டிய, தனது 77வது சர்வதேச சதத்தை அடித்த கோலி ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்திய அணி செவ்வாயன்று நடக்கும் சூப்பர் 4 ஆட்டத்தில் இலங்கையை சந்திக்கிறது.
The post ”பாகிஸ்தானை சுருட்டி வீசியது இந்தியா..!” கோலி, ராகுல், குல்தீப் யாதவ் ’அசத்தல்’ first appeared on Madras Murasu.
]]>The post ”சுனில் காவஸ்கர் 74..!” கிரிக்கெட் ஜாம்பவான் பிறந்தநாள் first appeared on Madras Murasu.
]]>இவர் கிரிக்கெட் வாழ்க்கையை மும்பை ஆடுகளங்களில் தொடங்கியிருந்தாலும், மேற்கிந்தியத் தீவுகளின் சவால்கள் நிறைந்த சீறிப்பாயும் ஆடுகளங்களில் சாதித்துக்காட்டியதால் ஜாம்பவான் என்ற அந்தஸ்தைப் பெற்றார். 233 சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களில் மொத்தம் 13,214 சர்வதேச ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்கள் எடுத்த முதல் பேட்டர் என்ற சாதனையைப் படைத்தவர் காவஸ்கர்.
தன்னுடைய பேட்டிங் மூலம் பல தலைமுறைகளை கிரிக்கெட்டினுள் ஈர்த்திருக்கிறார். சச்சின் முறியடிக்கும் வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் (34 சதங்கள்) அடித்தவர் என்ற சாதனையை காவஸ்கர் தன்வசப்படுத்தியிருந்தார். மைக்கேல் ஹோல்டிங், ஆண்டி ராபர்ட்ஸ், ஜோயல் கார்னர், ஜெஃப் தாம்ப்சன், டென்னிஸ் லில்லீ போன்ற மிரட்டல் வேகப்பந்துவீச்சாளர்கள் கோலோச்சியபோது பேட்டிங்கில் சாதித்துக் காட்டியவர்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இவரது சாதனைகள் இன்றும் பேசப்படும் அளவுக்குப் பெரியது. கிரிக்கெட் உலகை மிரட்டி வந்த வேகப்பந்துவீச்சாளர்கள் இருந்த காலகட்டத்திலேயே மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 27 டெஸ்டில் விளையாடி, 13 சதங்களை விளாசியிருக்கிறார். குறிப்பாக 1971-ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான அறிமுகத் தொடரிலேயே இரட்டை சதம் அடித்தது உள்பட மொத்தம் 774 ரன்கள் எடுத்தார்.
விக்கெட் கீப்பர்களுக்கு அப்பாற்பட்டு, டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 கேட்சுகளைப் பிடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தவரும் காவஸ்கர்தான். ஓய்வுக்குப் பிறகு வர்ணனையாளராக கலக்கி வருகிறார். வீரர்கள் குறித்த விமர்சனமாக இருந்தாலும் சரி, அணித் தேர்வு குறித்த விமர்சனமாக இருந்தாலும் சரி, இவரது பேட்டிங்கைப் போல இவரது சொற்களுக்கும் பெரும் மதிப்பு உண்டு
The post ”சுனில் காவஸ்கர் 74..!” கிரிக்கெட் ஜாம்பவான் பிறந்தநாள் first appeared on Madras Murasu.
]]>The post இந்தியா, விளையாட்டில் அரசியலைக் கொண்டு வருகிறது என்று பாகிஸ்தான் விளையாட்டுத் துறை அமைச்சர் எசான் மசாரி விமர்சித்துள்ளார். first appeared on Madras Murasu.
]]>The post இந்தியா, விளையாட்டில் அரசியலைக் கொண்டு வருகிறது என்று பாகிஸ்தான் விளையாட்டுத் துறை அமைச்சர் எசான் மசாரி விமர்சித்துள்ளார். first appeared on Madras Murasu.
]]>The post ’’தோனி விரும்பிச் சாப்பிட்ட உணவு..!’’ கேரள சமையல் கலைஞர் சுரேஷ் பிள்ளை first appeared on Madras Murasu.
]]>ஐபிஎல் 2023 சாம்பியன் கோப்பை போட்டி முடிவடைந்ததும் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துகளை, நினைவுகளை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்த ஐ.பி.எல் தொடரில் அதிமானோர் தோனியை பற்றியே பேசியும் எழுதியும் வருகிறார்கள். இந்நிலையில், ‘ரெஸ்டாரென்ட் செப் பிள்ளை’ என்ற உணவகத்தை கேரளாவில் நடத்தி வரும் சுரேஷ் பிள்ளை தனது டுவிட்டர் பக்கத்தில் தோனி-யை சந்தித்த பசுமையான தருணங்களை எழுதியுள்ளார். அந்தப் பதிவு இப்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. உலகம் முழுவதும் பலரால் பகிரப்பட்டு வருகிறது. அதன் விபரம்:
‘’ஐபிஎல் 2023 இறுதி ஆட்டத்துக்குப் பிறகு முழு உலகமும் இந்திய கிரிக்கெட்டின் மகத்தான சாதனையாளரான தோனியைக் கொண்டாடும் போது, 5 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு உணவு பரிமாறும் பாக்கியம் எனக்கு கிடைத்ததைப் பிரமிப்போடு நினைத்துப் பார்க்கிறேன். அக்டோபர் 31, 2018. இந்தியா – மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான ஆட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.

நான் பணிபுரிந்து வந்த ஹோட்டலில் தான் வீரர்கள் தங்கியிருந்தனர். பேருந்திலிருந்து வீரர்கள் இறங்கியபோது எனது கண்கள் அவரைத் தான் தேடின. தனக்கே உரித்தான புன்னகையுடன் எங்களைக் கடந்து தனது அறைக்குச் சென்றார் தோனி. தனது ஹீரோவைப் பார்த்த குழந்தை போல மாறியிருந்தேன் நான். தோனியைப் பார்த்த யாருக்குத்தான் அப்படி இருக்காது?
ஓய்வுக்குப் பிறகு வீரர்கள் இரவு 7 மணி முதல் தங்களுக்கான உணவு ஆர்டர்களை அளித்தனர். பெரும்பாலும் கடல்சார் உணவுகளைக் கேட்டிருந்தார்கள். இரவு 9.30 மணிக்குள் கிட்டத்தட்ட அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. ஆனால் நான் காத்திருந்த அழைப்பு 10 மணிக்கு வந்தது. தோனி அறையில் எனக்காகக் காத்திருப்பதாக என்னிடம் கூறப்பட்டது.
ஒரு கணம் உறைந்து போனேன். தொலைக்காட்சியில் அவரைப் பார்த்து சந்தோஷப்படும் என்னைத் தனது அறைக்கு அழைத்தார் தோனி. லிஃப்ட்டுக்குக் கூடக் காத்திராமல் எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டு மூன்றாவது மாடியில் இருந்த அவரது அறைக்கு ஓடினேன். என்னை அமைதிப்படுத்திக் கொள்ள ஒரு கணம் எடுத்துக்கொண்ட பிறகு, கதவைத் தட்டினேன்.

ஹாய், எப்படி இருக்கிறீர்கள், சாப்பிட என்ன இருக்கிறது என ஹிந்தி கலந்த தமிழில் கேட்டார். கடல் உணவு வகைகளை அவருக்கு விளக்கினேன். அப்போது, என்னால் கடல் உணவு சாப்பிட முடியாது. எனக்கு அதில் ஒவ்வாமை உண்டு. சிக்கன் குழம்பும் சாதமும் கிடைக்குமா? எனக்குத் தொண்டை வலி இருப்பதால் காரமான ரசம் வேண்டும் என்றார். பூண்டு ரசம் கிடைக்குமா எனத் தமிழில் கேட்டார்.
சுமார் 20 நிமிடங்களில் அறை எண் 302-க்கு உணவுடன் திரும்பினேன். செட்டிநாடு சிக்கன், பாசுமதி அரிசி, அப்பளம், ரசம் ஆகியவை பரிமாறப்பட்டன. மறுநாள் காலை, ஜிம்முக்குச் செல்லும் வழியில், என்னைப் பார்த்து இரவு உணவு பிடித்திருந்ததாகக் கூறினார். நான் விண்வெளியில் இருப்பதைப் போல உணர்ந்தேன். அந்த உணர்வை விவரிக்கவே முடியாது.
நான்கு நாள்கள் தான் என்றாலும், நான் பெரிதும் மதிக்கும் என்னுடைய நாயகனுக்கு உணவு பரிமாறவும் அதன்மூலம் அவரை மகிழ்ச்சியடையச் செய்யவும் முடிந்தது. இது என்னுடைய சமையல் வாழ்க்கையில் என்றென்றைக்குமான சிறப்பம்சமாக இருக்கும். நேற்று இன்று மட்டுமல்ல என்றும் எங்களுடைய தல நீங்கள். உங்களுக்கு வாழ்த்துகள். மீண்டும் உங்களுக்கு உணவு பரிமாறக் காத்திருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தல தோனியை விரும்பாதவர்கள் யாருமுண்டோ..!
The post ’’தோனி விரும்பிச் சாப்பிட்ட உணவு..!’’ கேரள சமையல் கலைஞர் சுரேஷ் பிள்ளை first appeared on Madras Murasu.
]]>The post தோனி ஐந்தாவது முறையாக கோப்பையை பெற்றுத்தருவரா? first appeared on Madras Murasu.
]]>2022 ஐபிஎல்-லில் சிஎஸ்கே அணி புள்ளிகள் பட்டியலில் 9-வது இடத்துக்குத் தள்ளப்பட்டது.”அடுத்த ஆண்டு கடினமாக உழைத்து மீண்டு வருவோம்” என்று தோனி கூறினார். சொல்லி வைத்தது போலவே இந்த ஆண்டு குஜராத்தை முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு சிஎஸ்கே முன்னேறியுள்ளது. 14 பருவங்களில் 10 முறை இறுதிச்சுற்றுக்கு சென்றது என்பது உண்மையில் அசாத்திய சாதனை!
இந்த வருடம் தோல்வியுடன்தான் ஆரம்பித்தது சிஎஸ்கே. பெரும் தொகை கொடுத்து வாங்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் ஒரு சில ஆட்டங்களில் மட்டுமே தலையைக் காட்டினார். மொயீன் அலி, ஜடேஜா, ராயுடு போன்றவர்கள் பேட்டிங்கில் கைகொடுக்கவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மர்ம சுழலர் தீக்ஷனா இந்தப் பருவம் முழுக்கவே ஃபார்ம் இல்லாமல் தடுமாறினார்.
காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஹங்கர்கேகர் இரு ஆட்டங்களில் மட்டுமே விளையாடினார். பதிரனா, தேஷ்பாண்டே போன்ற இளம் வேகப்பந்து வீச்சாளர்களை வைத்துக் கொண்டே விளையாட வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டார் தோனி. இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தோனி சிஎஸ்கேவை இறுதிச்சுற்றுக்கு எப்படி அழைத்துச் சென்றார்?
இந்தப் பருவத்தில் முதல் சில ஆட்டங்களில் அணித் தேர்வில் சில பரீட்சார்த்த முயற்சிகளை தோனி மேற்கொண்டார். ஆனால் அதற்குப் பிறகு கடைசி 9 ஆட்டங்களில் அவர் அணியில் மாற்றங்கள் எதையும் செய்யவில்லை. ஒரு கேப்டனாக தோனியின் வெற்றிக்கு காரணம் அணி வீரர்கள் மீது அவர் வைக்கும் முழு நம்பிக்கை. உதாரணமாக தீபக் சஹாரை எடுத்துக் கொள்வோம். முதல் நான்கு ஆட்டங்களில் அவர் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. அவருடைய எகானமி ரேட் 10.38. ஆனாலும் தோனி அவரைக் கைவிடவில்லை.
அதன்பிறகு நடைபெற்ற ஆட்டங்களில் ஓவருக்கு 7.21 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் சஹார். வேறு எந்தவொரு அணியாக இருந்தாலும் நான்கு ஆட்டங்களில் ஒரு விக்கெட் கூட எடுக்காதவரை அணியில் வைத்திருக்காது. அம்பதி ராயுடுவும் தீக்ஷனாவும் ஃபார்மில் இல்லாத போதும் தொடர்ந்து வாய்ப்பளித்தார் தோனி. குஜராத்துக்கு எதிரான குவாலிஃபையரில் இருவருமே அணியின் வெற்றிக்குப் பங்களித்தார்கள்.
எந்தவொரு சூழ்நிலையிலும் பதற்றப்படாமல் ஆட்டத்தை நிதானமாக அணுகுவது தோனியின் இன்னொரு வெற்றி ரகசியம். லீக் சுற்றில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இலக்கை விரட்டும்போது தோனி விளையாடிய விதம் ஒரு நல்ல உதாரணம். கடைசி ஐந்து ஓவர்களில் கூட தாறுமாறாக ஆட முற்படாமல் யாரைக் குறிவைத்து தாக்கவேண்டும் என்ற திட்டத்துடன் விளையாடினார் அவர். அந்த ஆட்டத்தில் சென்னை வெற்றி பெறமுடியாவிட்டாலும் தோனியின் வியூகமும் விவேகமும் எதிரணி ரசிகர்களையும் கவர்ந்தது.
குஜராத்துக்கு எதிரான இந்த ஆட்டத்தையோ எடுத்துக்கொள்வோம். கான்வே ஆரம்பம் முதலே சரியான டைமிங் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்தார். வேறொரு கேப்டனாக இருந்திருந்தால் “ரிஸ்க் எடுத்து விளையாடு” என்று பேட்டருக்குத் தகவல் அனுப்பியிருப்பார். ஆனால் தோனி அதைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல் கான்வேவை அவர் போக்கில் விளையாடுவதற்கு அனுமதித்தார். சுழலுக்குச் சாதகமான ஆடுகளத்தில் கான்வேவின் அந்த 40 ரன்கள் எவ்வளவு முக்கியம் என்பது ஆட்டத்துக்குப் பிறகுதான் தெரிந்தது.
தோனியின் வெற்றி ரகசியங்களில் முக்கியமானது, அணி வீரர்கள் மீது அவர் செலுத்துகின்ற அக்கறை. குஜராத்துக்கு எதிராக குவாலிஃபையர் ஆட்டத்தைப் பார்ப்பதற்காக சிஎஸ்கே சீருடையில் வந்திருந்தார் ராபின் உத்தப்பா. கேகேஆர், ராஜஸ்தான் போன்ற அணிகளில் விளையாடியிருந்தாலும் அவர் தன்னை ஒரு சிஎஸ்கே வீரராகவே இன்றும் உணர்கிறார். உத்தப்பா மட்டுமல்ல ஃபாப் டு ப்ளஸி தன்னுடைய சுயசரிதையில் தன் மகள் உடல் நலமில்லாமல் இருந்த சமயத்தில் சிஎஸ்கே அணி நிர்வாகம் எப்படித் தனக்கு உறுதுணையாக இருந்தது என்று எழுதியிருக்கிறார்.
சிஎஸ்கேவின் வெற்றிக்கு முக்கியக் காரணம் தோனி வீரர்களுக்கு கொடுக்கும் தெளிவான ரோல் டெஃபனிசன் (Role definition) என்கிறார் கிரிக்கெட் அனலிஸ்ட் ஃபிரெடி வைல்ட். இந்த ஆண்டில் ஸ்பின் ஹிட்டராக துபேவை அவர் பயன்படுத்திய விதம் ஒரு நல்ல உதாரணம். ‘டெத் ஓவர்’ ஸ்பெஷலிஸ்டாக பதிரனாவை அவர் கையாண்ட விதம் உண்மையிலேயே தோனியின் மாஸ்டர்கிளாஸ்!
ஐபிஎல் போன்ற பரபரப்பான கிரிக்கெட் போட்டியில் ஒரு கேப்டன் சமயோஜிதமாகச் செயல்பட வேண்டியது மிகவும் அவசியம். நேற்றைய ஆட்டத்தில் பாண்டியா பேட்டிங் செய்தபோது லெக் சைடில் இருந்த ஜடேஜாவை பாயிண்ட் திசையில் நிற்கவைத்தார் தோனி. கைமேல் பலனாக அதே ஃபீல்டரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் பாண்டியா. பதிரனா, போதிய நேரம் களத்தில் இல்லை என்பதால் அவர் பந்துவீச முடியாது என்று நடுவர் கூறியபோது, தோனி கையாண்ட தந்திரம் பலரையும் ஆச்சர்யப்படுத்தியது.
பரிசளிப்பு விழாவில் தோனி கூறியதுபோல ஐபிஎல்-லில் இறுதிச் சுற்றுக்கு செல்வது என்பது சாதாரண விஷயமல்ல. அதுவும் பத்தாவது முறையாக! இன்னும் ஓர் ஆட்டம்தான் மீதமுள்ளது. ஐந்தாவது முறையாக கோப்பையைக் கையில் ஏந்துவாரா தோனி?
The post தோனி ஐந்தாவது முறையாக கோப்பையை பெற்றுத்தருவரா? first appeared on Madras Murasu.
]]>The post கிரிக்கெட்டின் 9 வகையான டக் அவுட் first appeared on Madras Murasu.
]]>இருப்பினும், சில நேரங்களில் அதே தவிர்க்க முடியாதது. ஒரு பந்தில் வெளியேறுவது எவ்வளவு மோசமானது, விளையாட்டில் பல வகையான டக் அவுட் உள்ளன.
குறிப்பாக, கிரிக்கெட்டில் ஒன்பது வகையான வெவ்வேறு டக் அவுட் உள்ளன. வீணாக வெளியேறுவது டக் அவுட் என்று அழைக்கப்படுகிறது, மேலும் ‘0’ என்ற எண் வாத்து முட்டையை ஒத்திருப்பதால் அது அழைக்கப்படுகிறது. இந்த கட்டுரையில், கிரிக்கெட்டில் உள்ள பல்வேறு வகையான டக் அவுட் முறைகளை பார்ப்போம்.
1. Golden Duck (கோல்டன் டக்)
அனேகமாக இதுவே எல்லாவற்றிலும் மிகவும் பிரபலமான டக் அவுட், கோல்டன் டக், பேட்டர் தனது இன்னிங்ஸில் அவர் எதிர்கொள்ளும் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தால் அது கோல்டன் டக். கோல்டன் டக்கை நேரடியாக அனுபவித்த பல துரதிர்ஷ்டவசமான பேட்டர்கள் உள்ளனர்.
2. Silver Duck (சில்வர் டக்)
சில்வர் டக் என்பது விளையாட்டில் மிகவும் பிரபலமான சொற்களில் ஒன்றாகும். பேட்டர் பூஜ்ஜிய ரன்களுக்கு பெவிலியனுக்கு திருப்பி அனுப்பப்பட்டு, அவர் எதிர்கொள்ளும் இரண்டாவது பந்தில் வெளியேறுவதை இது குறிக்கிறது.
3. Bronze Duck (வெண்கல டக்)
பெயரில் குறிப்பிடுவது போல, அவர் தனது இன்னிங்ஸில் எதிர்கொள்ளும் மூன்றாவது பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தவர் வெண்கல டக். கோல்டன் அல்லது சில்வர் டக் மோசமாக இருந்தால், வெண்கல டக் மிக மோசமானதாக இருக்கும்.
4. Diamond Duck (வைர டக் அவுட்)
இது ஒரு தனித்துவமான வகை டக் அவுட், மேலும் அவை அனைத்திலும் மிகவும் மோசமானது. டயமண்ட் டக் என்பது ஒரு பேட்டர் ரன் அவுட்ஆவதை குறிக்கும். சட்டப்பூர்வமாக பந்தை எதிர்கொள்ளாமல் எதிர்முனையில் ரன்னராகவே இருந்து வெளியேறுவது வைர டக் அவுட் என்று அழைக்கப்படுகிறது.
5. Royal Duck
கிரிக்கெட்டில் ராயல் டக் விளையாட்டு வரலாற்றில் மிகப்பெரிய டெஸ்ட் தொடர்களில் ஒன்றான ஆஷஸ் உடன் தொடர்புடையது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மார்கியூ தொடரில் முதல் பந்திலேயே ஆட்டமிழந்த தொடக்க வீரர்களுக்கான ராயல் டக் லேபிள்.
6. Laughing Duck (சிரிக்கும் டக் அவுட்)
கிரிக்கெட்டில் சிரிக்கும் டக் அவுட் என்பது துடுப்பாட்ட வீரர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து, அவரது விக்கெட்டுடன் இன்னிங்ஸ் முடிவடையும் போது. இத்தகைய தனித்துவமான சூழ்நிலையை சிரிக்கும் டக் அவுட் என்று குறிப்பிடுவார்கள்.
7. A Pair (இணை டக் அவுட்)
அதே ஆட்டத்தின் இரண்டு இன்னிங்ஸிலும் எந்த விதமான ரன்களையும் எடுக்காமல் பேட்டரை பெவிலியனுக்குத் திருப்பி அனுப்பும் டக் அவுட், கிரிக்கெட்டில் ‘இணை டக் அவுட்’ என்று குறிப்பிடப்படுகிறது.
8. King Pair (இணை கோல்டன் டக்)
ஒரு இணை கோல்டன் டக் என்பது மிகவும் அசாதாரணமான சூழ்நிலையாகும், அதே ஆட்டத்தின் இரண்டு இன்னிங்ஸிலும் பேட்டர் முதலில் ஒப்பேனர்ஆக இறங்கி றன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழப்பது.
9. Batting Hattrick (ஹாட்ரிக் டக் அவுட்)
அனேகமாக இவற்றில் அரிதானது பேட்டிங் ஹாட்ரிக். எந்தவொரு தொடர்ச்சியான டெஸ்ட் இன்னிங்ஸிலும் மூன்று பந்துகளில் மூன்று பேட்டர்கள் தொடர்ந்து ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆவது தொகுப்பு ஹாட்ரிக் டக் அவுட் என்று குறிப்பிடப்படுகிறது.
The post கிரிக்கெட்டின் 9 வகையான டக் அவுட் first appeared on Madras Murasu.
]]>