Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#bjp - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Wed, 08 Nov 2023 12:31:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ’’துப்பு இல்­லாத பா.ஜ.க..!’’ மலையகத் தமிழர் 200 குறித்து முரசொலி தலையங்கம் https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%9c-%e0%ae%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2581-%25e0%25ae%2587%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%25b2%25e0%25ae%25be%25e0%25ae%25a4-%25e0%25ae%25aa%25e0%25ae%25be-%25e0%25ae%259c-%25e0%25ae%2595 https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%9c-%e0%ae%95/#respond Wed, 08 Nov 2023 12:29:39 +0000 https://madrasmurasu.com/?p=7456 மலையகத் தமிழர் 200  இலங்­கை­யில் மலை­ய­கத்­தில் தமி­ழர் குடி­யேறி -– அந்த மண்ணை வாழ்­வித்து 200 ஆண்­டு­கள் ஆகி­விட்­டது. இந்த நிலை­யில் மலை­ய­கத் தமிழ் மக்­க­ளுக்கு தனது மன­மார்ந்த வாழ்த்­து­க­ளைத் தெரி­வித்­துக் கொண்­டுள்­ளார் மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள். இத­யத்­தின் அடி­யா­ழத்­தில் இருந்து அன்­பு­ட­னும் அக்­க­றை­யு­ட­னும் தெரி­வித்த வாழ்த்­து­கள் ஆகும் இவை. *மனி­தன் வாழ்ந்­தி­ராத மலைக்­கா­டு­களை மலை­ய­கத் தோட்­டங்­­களாக மாற்­றி­ய­வர்­கள் மலை­ய­கத் தமி­ழர்­கள் ஆவார்­கள். மலை­ய­கத் தமிழ்த் தொழி­லா­ளர்­க­ளின் வர­லாறு இலங்­கை­யில் காப்பி பயிர் செய்­யப்­பட்ட ஆரம்­ப­கட்­டத்­தில் […]

The post ’’துப்பு இல்­லாத பா.ஜ.க..!’’ மலையகத் தமிழர் 200 குறித்து முரசொலி தலையங்கம் first appeared on Madras Murasu.

]]>
மலையகத் தமிழர் 200 

இலங்­கை­யில் மலை­ய­கத்­தில் தமி­ழர் குடி­யேறி -– அந்த மண்ணை வாழ்­வித்து 200 ஆண்­டு­கள் ஆகி­விட்­டது. இந்த நிலை­யில் மலை­ய­கத் தமிழ் மக்­க­ளுக்கு தனது மன­மார்ந்த வாழ்த்­து­க­ளைத் தெரி­வித்­துக் கொண்­டுள்­ளார் மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள். இத­யத்­தின் அடி­யா­ழத்­தில் இருந்து அன்­பு­ட­னும் அக்­க­றை­யு­ட­னும் தெரி­வித்த வாழ்த்­து­கள் ஆகும் இவை.

*மனி­தன் வாழ்ந்­தி­ராத மலைக்­கா­டு­களை மலை­ய­கத் தோட்­டங்­­களாக மாற்­றி­ய­வர்­கள் மலை­ய­கத் தமி­ழர்­கள் ஆவார்­கள்.

மலை­ய­கத் தமிழ்த் தொழி­லா­ளர்­க­ளின் வர­லாறு இலங்­கை­யில் காப்பி பயிர் செய்­யப்­பட்ட ஆரம்­ப­கட்­டத்­தில் இருந்து தொடங்­கு­கி­றது.

*இது இலங்­கைப் பொரு­ளா­தா­ரத்­தில் மகத்­தான மாற்­றத்தை உரு­வாக்­கி­யது. பின்­னர், ரப்­பர், தென்னை என அனைத்­துப் பணப் பயிர்­களது உற்­பத்­தி­யும் மலை­ய­கத் தமி­ழர்­க­ளது உழைப்­பால் உரு­வா­ன­து­தான்.

*பயி­ரி­டப்­ப­டாத நிலத்தை பயி­ரிட்­டும் -– காடு­க­ளாக இருந்த நிலத்தை காசுப் பயிர்­க­ளாக விளை­வித்­தும் பின் தங்­கிய பொரு­ளா­தா­ரத்தை முன்­னணி பொரு­ளா­தா­ர­மாக ஆக்­கி­ய­வர்­கள் மலை­ய­கத் தோட்­டத் தொழி­லா­ளர்­கள் ஆவார்­கள்.

*இலங்கை நாட்­டுக்­காக தங்­க­ளது உழைப்பை வழங்­கி­ய­வர்­கள் மலை­ய­கத் தமி­ழர்­கள். இலங்கை நாடு உயர உழைத்­த­வர்­கள். தங்­க­ளது ரத்­தத்­தை­யும் வியர்­வை­யை­யும் காலத்­தை­யும் கட­மை­யை­யும் அந்த நாட்­டுக்­கா­கவே ஒப்­ப­டைத்­த­வர்­கள்.

– – என்று அந்த மக்­க­ளின் மகத்­தான உழைப்­பைப் பாராட்டி இருந்­தார் முத­ல­மைச்­சர் அவர்­கள்.

“இத்­த­கைய மலை­யக மக்­க­ளின் நீதி­யும் உரி­மை­யும் நிலை­நாட்­டப்­பட வேண்­டும் என்று கேட்­டுக் கொள்­கி­றேன். கல்வி, சுகா­தா­ரம், வாழிட உரி­மை­கள், பொரு­ளா­தார உத­வி­கள், சமூக உரி­மை­கள் அனைத்­தும் வழங்­கப்­பட வேண்­டும்.”என்­ப­தை­யும் வலி­யு­றுத்தி இருந்­தார் முத­ல­மைச்­சர் அவர்­கள். ஏனென்­றால் அம்­மக்­க­ளின் நிலைமை என்­பது பெரி­தாக மாறி­வி­ட­வில்லை. இலங்­கையை உயர்த்­திய, மேம்­ப­டுத்­திய அவர்­க­ளது வாழ்க்கை மேலும் முன்­னேற வேண்­டும் என்­பதை வலி­யு­றுத்­தும் வித­மாக முதல்­வர் அவர்­கள் வலி­யு­றுத்தி இருந்­தார்.

முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் உரை, இலங்­கை­யில் நடை­பெ­றும் விழா­வுக்­காக தயா­ரிக்­கப்­பட்­டது ஆகும். இலங்­கை­யில் குடி­ய­மர்த்­தப்­பட்ட மலை­ய­கத் தமி­ழர்­க­ளது 200 ஆவது ஆண்­டு­வி­ழாவை முன்­னிட்டு ஒரு விழா ஏற்­பாடு செய்­யப்­பட்­டது.“நாம் 200 – – ஒற்­றுமை, பன்­மு­கத்­தன்மை மற்­றும் பாரம்­பர்­யத்­தின் முழக்­கம்”என்­பது இந்த நிகழ்ச்­சி­யின் பெயர். இந்த நிகழ்ச்­சியை இலங்கை மலை­ய­கத் தமி­ழர்­க­ளுக்­காக இலங்­கை­யின் உள்­நாட்டு தோட்­டத் தொழில் துறை மற்­றும் அரசு தொழில் துறை அமைச்­ச­கம் முன்­னெ­டுத்­தது. அந்த விழா ஏற்­பாட்­டா­ளர்­கள் கேட்­டுக் கொண்­ட­தால் தயா­ரிக்­கப்­பட்ட உரை இது. ஆனால் அந்த உரை, விழா­வில் ஒளி­ப­ரப்­பப்­ப­ட­வில்லை.

இது குறித்து ‘தி இந்து’ ஆங்­கில நாளி­தழ் வெளி­யிட்­டுள்ள செய்­தி­யில்,‘தமிழ்­நாடு முத­ல­மைச்­ச­ரின் உரையை ஒளி­ப­ரப்­பக் கூடாது என்று இந்­திய பா.ஜ.க. அரசு தடை போட்­டு­விட்­டது’என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதை விட ஜன­நா­யக மறுப்பு, தமி­ழர் விரோ­தச் செய்கை இருக்க முடி­யாது.

முத­ல­மைச்­சர் உரை­யைத் தடை செய்­வ­தன் மூல­மாக, மலை­ய­கத் தமி­ழர்­கள் மீதான தி.மு.க.வின் பற்­று­தலை மறைக்­கும் சதிச் செயலை ஒன்­றிய பா.ஜ.க. அரசு செய்­துள்­ளது.

இதே நிகழ்­வில் இன்­னொரு சதி­யை­யும் ஒன்­றிய பா.ஜ.க. அரசு செய்­துள்­ளதை தமிழ்­நாடு நிதி அமைச்­சர் தங்­கம் தென்­ன­ரசு அவர்­கள் அம்­ப­லப்­ப­டுத்தி இருக்­கி­றார்­கள்.

“அந்த விழா­வில் மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் அவர்­கள் கலந்­து­கொள்ள வேண்­டும் என்­றும் முறை­யான அழைப்பு தமிழ்­நாடு அர­சிற்கு அனுப்­பப்­­ பட்டது. முத­ல­மைச்­சர் அவர்­கள் அந்த நிகழ்­வில் கலந்து கொள்ள இய­லாத நிலை­யில், என்னை அந்த விழா­வில் கலந்து கொள்­ளு­மாறு அவர்­கள் பணித்­தி­ருந்­தார்­கள். இலங்கை பய­ணம் மேற்­கொள்­வ­தற்­காக ஒன்­றிய அர­சின் வெளி­வி­வ­கா­ரத் துறை­யி­லி­ருந்து உரிய அனு­ம­தி­யினை பெறு­ வ­தற்கு கடந்த மாதம் 28-ஆம் தேதி உரிய வழி­மு­றைப்­படி விண்­ணப்­பம் நம்­மு­டைய பொதுத்­து­றை­யால் அனுப்­பப்­பட்­டு­விட்­டது. political clearance என்று சொல்­லக்­கூ­டிய வெளி­வி­வ­கா­ரத்­தின் அனு­மதி கிடைப்­ப­தற்­காக நான் காத்­துக் கொண்­டி­ருந்­தேன்,

அக்­டோ­பர் 28 ஆம் தேதி அன்று பொதுத் துறை­யின் வாயி­லாக ஒன்­றிய அர­சிற்கு அனுப்­பப்­பட்­டது. விழா நவம்­பர் 2-ஆம் தேதி மதி­யம். ஆனால் 1-ஆம் தேதி இரவு எட்­டரை மணி வரை வர­வில்லை. ஒன்­றிய அர­சி­ட­மி­ருந்து அனு­மதி இது­வரை வராத கார­ணத்­தால் நான் பய­ணத்தை மேற்­கொள்ள இய­லாத நிலை­யில் இருப்­பதை சுட்­டிக்­காட்டி, என்­னு­டைய பயண ஏற்­பா­டு­களை நான் இரத்து செய்­து­விட்டு வீடு திரும்­பி­னேன். அதற்­குப்­பி­றகு ஒன்­ப­தரை மணிக்கு மேல் அனு­மதி வந்­தி­ருக்­கி­றது. ஆனால் அதற்கு முன்­ன­தாக நான் பயண ஏற்­பா­டு­களை எல்­லாம் இரத்து செய்­து­விட்ட கார­ணத்­தி­னால், இரவு 8.30 மணிக்கு மேல் அத்­த­கைய அனு­மதி கிடைப்­ப­தற்கு வாய்ப்பு இல்லை என்று கருதி, முறைப்­படி விழா ஏற்­பாட்­டா­ளர்­க­ளி­டம் இதனை தெரி­வித்­து­விட்டு பயண ஏற்­பா­டு­களை எல்­லாம் இரத்து செய்­து­விட்­டோம்.”என்று சொல்லி இருக்­கி­றார் அமைச்­சர் தங்­கம் தென்­ன­ரசு.

வெளி­நாட்­டில் நடை­பெ­றும் விழா­வுக்கு அனு­மதி தரு­வ­தில் ஒன்­றிய அரசு எப்­படி நடந்து கொண்­டுள்­ளது என்­ப­தன் மூல­மாக – எத­னால் இப்­படி நடந்து கொண்­டது என்­ப­தை­யும் தெரிந்து கொள்­ள­லாம்.

குடி­யு­ரி­மைச் சட்­டத்­தின் மூல­மாக இலங்­கைத் தமி­ழர்­களை குடி­யு­ரிமை அற்­ற­வர்­க­ளாக ஆக்­கிய பா.ஜ.க., இப்­போது மலை­ய­கத் தமி­ழர்­கள் விழா­வில் எத்­த­கைய சதிச்­செ­யல்­க­ளில் ஈடு­ப­டு­கி­றது என்­பது புரி­கி­றது. இந்த நிலை­யில் மலை­ய­கத் தமி­ழர் மாநாட்­டில் கலந்து கொள்ள பா.ஜ.க. அமைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன் இலங்கை சென்­றி­ருக்­கி­றார்.

இன்­ன­மும் இந்­திய மீன­வர்­கள், படும் துன்ப துய­ரங்­க­ளுக்கு முற்­றுப்­புள்ளிவைக்­கத் துப்பு இல்­லாத பா.ஜ.க. இலங்­கைக்­குப் போய் மலை­யக மக்­களை ஏமாற்­ற­லாம் என்று நினைப்­பது காலக் கொடு­மையே ஆகும்.

The post ’’துப்பு இல்­லாத பா.ஜ.க..!’’ மலையகத் தமிழர் 200 குறித்து முரசொலி தலையங்கம் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%9c-%e0%ae%95/feed/ 0
’’அண்ணாமலை பற்றி டி.ஜெயக்குமார் சொன்னது என்ன..?’’ அதிரடி சரவெடி பேட்டி முழு விபரம் https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%25a3%25e0%25ae%25be%25e0%25ae%25ae%25e0%25ae%25b2%25e0%25af%2588-%25e0%25ae%25aa%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25ae%25bf-%25e0%25ae%259f%25e0%25ae%25bf-%25e0%25ae%259c%25e0%25af%2586%25e0%25ae%25af%25e0%25ae%2595 https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%95/#respond Tue, 19 Sep 2023 04:50:16 +0000 https://madrasmurasu.com/?p=6371 அதிமுக தலைவர்கள் குறித்து பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை பேச்சுக்கள் அதிமுகவினரை பொங்கி எழ வைத்துள்ளது. எனவே, அதிரடி பேட்டி அளித்துள்ளார் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார். அந்த பேட்டியின் முழு விபரம் வருமாறு: இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மாவை விமர்சனம் செய்த அண்ணாமலையை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார்கள். கழக பொதுசெயலாளர் எடப்பாடியார் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒரு கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதனை பத்திரிக்கையில் கழகப் பொதுச்செயலாளர் வாசித்தார். […]

The post ’’அண்ணாமலை பற்றி டி.ஜெயக்குமார் சொன்னது என்ன..?’’ அதிரடி சரவெடி பேட்டி முழு விபரம் first appeared on Madras Murasu.

]]>
அதிமுக தலைவர்கள் குறித்து பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை பேச்சுக்கள் அதிமுகவினரை பொங்கி எழ வைத்துள்ளது. எனவே, அதிரடி பேட்டி அளித்துள்ளார் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார். அந்த பேட்டியின் முழு விபரம் வருமாறு:

இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மாவை விமர்சனம் செய்த அண்ணாமலையை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார்கள். கழக பொதுசெயலாளர் எடப்பாடியார் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒரு கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதனை பத்திரிக்கையில் கழகப் பொதுச்செயலாளர் வாசித்தார். கடுமையான அளவுக்கு அம்மாவை விமர்சனம் செய்து எங்களுடைய கண்டனத்தை தெரிவித்த பிறகு ஏதே அண்ணாமலை திருந்திவிட்டார் என்ற வகையில் பார்க்கும்போது தொடர்ந்து தன்னை முன்னிலைப்படுத்திவருகிறார். பிஜேபி என்பதைவிட அண்ணாமலை என்கின்ற பிம்பம் தமிழகத்தில் இருக்கவேண்டும் என்பதற்காக தன்னை முன்னிலைப்படுத்தவேண்டும் என்பதற்காக செயல்படுகிறார். அம்மாவை விமர்சனம் செய்தபிறகு எங்களிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்டு அதன்பிறகு ஒரு அந்தர் பல்டி அடித்தார்.

நான் அம்மாவை பெரிதும் மதிக்கின்றேன். நான் அம்மாவை அதுபோல சொல்லவில்லை என்ற தகவலை சொல்லி மன்னிப்பு கேட்டுவிட்டு அதன்பிறகு அண்ணா குறித்து பேசுகிறார். அண்ணாவின் வரலாறு என்ன? அண்ணா உலகம் முழுவதும் போற்றக்கூடிய மிகப்பெரிய அறிஞர். எந்த கேள்வி எப்போது கேட்டாலும், எந்த மொழியில் கேட்டாலும் பதில் சொல்லக்கூடியவர், பன்மொழி தன்மை வாய்ந்தவர். முதலமைச்சராக வந்து தாழ்ந்த நிலையில் இருந்த தமிழகத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டுசென்றவர். நாங்கள் தெய்வமாக வணங்கக்கூடியவர். எங்கள் கழகமே அண்ணாவின் பெயரை தாங்கி இருக்கும் நிலையில், அண்ணாவைப்பற்றி சிறுமைப்படுத்தும் வகையிலே அவர் கூறிய அந்த கருத்துக்கு, கடுமையான அளவுக்கு கண்டனத்தை தெரிவித்த நிலையில் அதற்கும் திருந்தாமல், திரும்பவும் தன்னை முன்னிலைப்படுத்தவேண்டும் என்பதற்காக நேற்றைய தினம் பேட்டியில் பெரியார் குறித்தும், மற்ற விஷயங்கள் குறித்தும் கூட்டணியில் இருந்துகொண்டு கூட்டணி தர்மத்தை மீறி பேசுகின்ற செயலை தன்மானம் உள்ள கழக தொண்டன் எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ள மாட்டான்.

சிட்டு குருவிக்கு பட்டை கட்டினால் அது திமிரு பிடித்து ஆடும். வீட்டில் உள்ள பண்ட பாத்திரங்களில் வந்து டொக், டொக் என்று கொத்தும். அது சிட்டு குருவிக்கே உள்ள புத்தி அது. அதுபோல தகுதிக்கு மீறிய பதவி. ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து எதற்கு விருப்ப ஓய்வு பெற்றார் என்று எனக்கு தெரியாது. அது குறித்து கிளறினால்தான் இவரைப்பற்றி தெரியும். அரசியல் தலைவருக்கே லாயக்கு இல்லாத, ஒரு பாஜக தலைவருக்கு லாயக்கு இல்லாத, ஒரு சிறுமை புத்தி கொண்ட, தன்னை முன்னிலைப்படுத்தவேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்படுகிறார். கழகம் என்பது ஒரு சிங்க கூட்டம். அந்த சிங்க கூட்டத்தை பார்த்து சிறுநரி அண்ணாமலை ஊளையிடுகிறது.

ஊளையிடுகின்ற சிறுநரி தனியாக சென்று நிற்கட்டும். நோட்டாகவுக்கு கீழே அண்ணாலை ஒட்டு வாங்குவரே தவிர நோட்டாவை தாண்ட மாட்டார். அப்படிதான் உள்ளது உங்களின் செல்வாக்கு.நீங்கள் பெரியார் குறித்து பேசுகிறீர்கள்.பெரியார் குறித்து பேச உங்களுக்கு என்ன தகுதி உள்ளது. கழகப் பொதுசெயலாளர் குறித்து பேச என்ன தகுதி இருக்கிறது. அம்மா குறித்து பேச என்ன தகுதி இருக்கிறது. புரட்சித்தலைவர் குறித்து பேச என்ன தகுதி உள்ளது. தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அண்ணாலை வாழ்க என்று சொல்லவேண்டுமாம். தோழமை கட்சியை, கூட்டணி கட்சியை அதனை விமர்ச்சனம் செய்துவிட்டு தன்னை முன்னிலைப்படுத்தவேண்டும் என்று சொன்னால் நிச்சயமாக கழக தொண்டன் ஏற்றுக்கொள்ள மாட்டான். பல முறை எச்சரிக்கை அளித்தோம். பேச்சை இதோடு நிறுத்தி கொள்ளுங்கள் என்று எச்சரித்தோம்.

இனிமேல் எங்கள் கழக தொண்டர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். தாறுமாறாக விமர்சனம் செய்வார்கள். நீங்கள் ஒரு கருத்தை தெரிவித்தால் ஓராயிரம் கருத்து அண்ணாமலை குறித்து, அவரின் சிறுமைபுத்தி குறித்து, எதிர்க்கருத்து உங்களுக்கு பதிலடியாக வரும். இது குறித்து மேலிடத்திலும் சொன்னோம். நாங்கள் உங்கள் கூட்டணியில் இருக்கிறோம் இவரை திருத்துங்கள் என்று தெரிவித்தோம். கூட்டணி கட்சியில் இருந்துகொண்டு இப்படி பேசினால் கட்சியினர் எப்படி தேர்தல் வேலை செய்வார்கள். கழகத்தின் கூட்டணியை பாஜக தொண்டர்கள் விரும்புகிறார்கள். ஆனால் அண்ணாமலை விரும்பவில்லை. எங்கள் தலைமையிலான கூட்டணியில் இருந்துகொண்டு இதுபோன்ற விமர்சனங்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமா? உங்களை சுமக்கவேண்டிய அவசியம் எங்களுக்கு என்ன இருக்கிறது.

யார் மீதாவது சுமந்துதான் நீங்கள் போகவேண்டும். உங்களுக்கு கால்களே கிடையாது. பாஜக இங்கே கால் ஊன்ற முடியாது. அப்படிப்பட்ட நிலைமை உள்ளது. உங்கள் வாக்கு வங்கி எந்த அளவுக்கு உள்ளது என்பது தெரியும். எங்களை வைத்துதான் உங்களுக்கு அடையாளமே. தன்மானம் உள்ள தொண்டன் இதனை ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையில் இது குறித்து நாங்கள் டெல்லி மேலிடத்திலும் சொல்லிவிட்டோம். கண்டித்து வையுங்கள் என்று சொன்னால், திரும்ப திரும்ப இப்படி பேசினால் இனியும் பொருத்து கொள்வதாக இல்லை. கழக கூட்டணியில் தற்போது பாஜக இல்லை. கூட்டணி குறித்து தேர்தல் வரும்போதுதான் முடிவு செய்ய முடியும். இதுதான் எங்களுடைய நிலைபாடு. இனிமேல் அண்ணாமலை எங்கள் தலைவர்கள் குறித்து விமர்சனம் செய்தால் கடுமையான விமர்ச்சனங்களை அண்ணாமலை சந்திக்க நேரிடும். துப்பாக்கி, துப்பாக்கி என்கிறார். அவரின் புகழை பாடுவதைதான் வேலையாக வைத்துவருகிறார். அவர் சார்ந்த கட்சியை வளர்ப்பது அவர் வேலையாக இல்லை.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதில் அளித்தார்.

கேள்வி: இது உங்களின் தனிப்பட்ட கருத்தா, கட்சியின் கருத்தா?

பதில்: என்றைக்கு தனிப்பட்ட கருத்தாக நான் பேசியது கிடையாது. கட்சி என்ன முடிவு எடுக்கின்றதே அது குறித்துதான் பேசுவேன். கட்சியின் முடிவு என்பது இப்போதைக்கு கூட்டணி கிடையாது. பொதுச்செயலாளர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலே கண்டன தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதற்கு பிறகும் அண்ணாவை விமர்சனம் செய்வது, பெரியாரை விமர்சனம் செய்வது, கழக பொதுச்செயலாளரை விமர்சனம் செய்கிறார் என்றால் எப்படி நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியும்.

அண்ணாலை விமர்சனம் செய்வதை நாங்கள் டெல்லி தலைமையிடம் சொல்லியிருக்கின்றோம். மாநில தலைவர்களாக எவ்வளவே தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். அப்போது இதுபோன்ற பிரச்சனை இருந்ததா? ஆதி காலத்தில் நடைபெற்றதை இப்போது தேவையற்ற முறையில் பேசி வருகிறார். இவர் என்ன தொல்லியல் துறையை சேந்தவரா? தொல்லியல் துறையில் இருக்கவேண்டியவர். தகுதி இல்லாத ஒரு தலைவர். நான்கு பேர் சேர்ந்து தலைவர் என்று கத்திவிட்டால் தலை கனம் ஏறிவிடுகிறது. அந்த தலை கனம்தான் இதுபோன்ற முடிவு எடுக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது.

கேள்வி: தேசிய தலைவர்கள் ஆதரவோடுதான் அவர் இப்படி பேசுகிறார் என்று நினைக்கின்றீர்களா?

பதில்: எங்களுக்கு இதனை ஆராய்ச்சி செய்யவேண்டிய வேலை இல்லை. எங்களின் முன்னோடிகளை விமர்சனம் செய்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். விமர்சனத்திற்கு தக்க பதிலடியை எங்கள் கட்சியினர் கண்டிப்பாக கொடுப்பார்கள். மேலே சொல்லியும் இவர் அடங்கவில்லை என்றால் மேலே சொல்லிதான் நடக்கிறது என்றுதானே அர்த்தம். இதுபோன்ற நிலையில் எங்களுக்கு இழப்பு இல்லை. உங்களுக்குதான் இழப்பு. பாஜக எங்களுக்கு வேஸ்ட் லக்கேஜ். அனைவரையும் அரவணைத்து போகவேண்டும் என்பதால் டெல்லியில் தலைவர்களை சந்தித்துவிட்டு வந்தோம். எதற்கும் ஒரு எல்லை உள்ளது இல்லையா. எப்படி தொண்டர்கள் வேலை செய்வார்கள். 2024 ல் எப்படி தேர்தல் வேலை செய்ய முடியும். அவர்களால் ஒன்றும் கிழிக்க முடியாது.

அண்ணாலையின் பேச்சை அவர்களின் கட்சியினரே ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் அனைவரும் இன்றைக்கு சந்தோஷப்படுவார்கள். ஏன் என்றால் மூத்த தலைவர்கள் அனைவரையும் ஓரம் கட்டிவிட்டு ஒன் மேன் ஷோ வா இருந்தார். தற்போது தனி மரமாக நிற்பார். எந்த பூச்சாண்டிக்கு கழகம் பயப்படாது. கோப்பு, பைல் என்று நாங்கள் எத்தனையோ பார்த்துவிட்டோம். நீங்கள் கோப்பு என்ன என்று தெரியாத ஆள். அவர் தனியாக நின்று ஓட்டு வாங்க முடியுமா? நோட்டாவைதான் அவர் வெற்றி பெற முடியும்.அண்ணாமலையின் விமர்சனங்களை எங்கள் கட்சி தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தோழமையில் இருந்துகொண்டு கூட்டணி தர்மத்தை மதிக்காத ஒரு நிலையில் கூட்டணியில் நீடிக்கவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? ஏற்கனவே இதுபோன்று பேசிகொண்டிருந்தால் கூட்டணி குறித்து மறுபரீசிலனை செய்யவேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டோம். இப்போது பரிசீலனை செய்து அறிவித்துவிட்டோம்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

The post ’’அண்ணாமலை பற்றி டி.ஜெயக்குமார் சொன்னது என்ன..?’’ அதிரடி சரவெடி பேட்டி முழு விபரம் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%95/feed/ 0
’’இந்த நேரத்தில் சில விஷயங்களை நம் கழகத்தினருக்குத் தெளிவுபடுத்த வேண்டியது என் கடமை..!’’ உதயநிதி ஸ்டாலின் அறிக்கை https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b7/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4-%25e0%25ae%25a8%25e0%25af%2587%25e0%25ae%25b0%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%25b2-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b7 https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b7/#respond Thu, 07 Sep 2023 04:59:49 +0000 https://madrasmurasu.com/?p=6166 ‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில், தான் பேசிய கருத்துகளை பா.ஜ.கவினர் திரித்து அவதூறு பரப்பி வருவது, அதற்கு கழகத்தினர் பலர் ஆங்காங்கே வழக்கு, உருவ பொம்மை எரிப்பு போன்ற செயல்களில் ஈடுபடுவது குறித்து திமுக இளைஞர் அணிச் செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளதாவது: டிசம்பர் 17-ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ள கழக இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டுக்கு […]

The post ’’இந்த நேரத்தில் சில விஷயங்களை நம் கழகத்தினருக்குத் தெளிவுபடுத்த வேண்டியது என் கடமை..!’’ உதயநிதி ஸ்டாலின் அறிக்கை first appeared on Madras Murasu.

]]>
‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில், தான் பேசிய கருத்துகளை பா.ஜ.கவினர் திரித்து அவதூறு பரப்பி வருவது, அதற்கு கழகத்தினர் பலர் ஆங்காங்கே வழக்கு, உருவ பொம்மை எரிப்பு போன்ற செயல்களில் ஈடுபடுவது குறித்து திமுக இளைஞர் அணிச் செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளதாவது:

டிசம்பர் 17-ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ள கழக இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டுக்கு இளைஞர்களைத் தயார்படுத்தும் வகையில் வருவாய் மாவட்டந்தோறும் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்துவது, கழக மூத்த முன்னோடிகளுக்கு மாவட்டக் கழகங்களின் சார்பில் பொற்கிழி வழங்குவது, மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் அரசின் நலத்திட்டப் பணிகள் குறித்து, ஆய்வுக் கூட்டத்தை நடத்துவது… இந்த மூன்று விஷயங்களை மையமாகக் கொண்டே என் சமீபகால மாவட்டச் சுற்றுப்பயணங்களை அமைத்துக்கொள்கிறேன்.

அந்த வகையில், இந்த மாதம் 4-ஆம் தேதி மதியத்துக்கு மேல் தூத்துக்குடி, 5-ஆம் தேதி தென்காசி ஆகிய மாவட்டங்களுக்குச் செல்ல முடிவு செய்தோம். 4-ஆம் தேதி காலை தலைமைச் செயலகத்தில், சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கடந்த ஆண்டு சாதனை படைத்த வீரர்-வீராங்கனையர்கள் 134 பேருக்கு உயரிய ஊக்கத்தொகையாக 2 கோடியே 24 லட்சம் ரூபாயை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கிய நிகழ்ச்சியில் பங்கேற்றோம்.

அதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு தேசிய அளவில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி வீரர்-வீராங்கனையர் 52 பேருக்கு உயரிய ஊக்கத் தொகையாக ஒரு கோடியே 80 லட்சம் ரூபாயை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினோம். ‘தேசிய அளவில் சாதனை படைக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் உயரிய ஊக்கத் தொகைகளை வழங்க வேண்டும்’ என்பது, அவர்களின் 20 ஆண்டுகாலக் கோரிக்கை. அதன் தீர்வாக, ‘சீனியர்-ஜூனியர் பிரிவுகளில் தேசிய அளவில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களைப் பெறுபவர்களுக்கு முறையே தலா 5, 3, 2 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத் தொகையாக வழங்கப்படும்’ என்று வரலாற்றுச் சிறப்புமிக்க அரசாணையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சமீபத்தில் வெளியிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பிறகு, சென்னையில் இருந்து தூத்துக்குடி பயணமானோம். தூத்துக்குடி விமான நிலையத்தில் கழகத்தினரின் வரவேற்பை பெற்றுக்கொண்டு வெளியே வரும்போது சகோதரர் ஜஸ்டின் என்னை சந்தித்து இளைஞர் அணி மாநாட்டு நிதியாக ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார். ஜஸ்டினைப் பற்றி நாம் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்வது அவசியம். ஜஸ்டின் ஒரு மாற்றுத்திறனாளி. தன்னுடைய வாழ்க்கையைத் தானே மாற்றும் வல்லமை படைத்த ஒரு திறனாளி. அவருக்குத் தேவை ஓர் உந்துதல். அதற்காக என்னைக் காண இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்திருந்தார். அவருக்கு தூத்துக்குடி மாநகரில் பழச்சாறு விற்கும் கடையை இளைஞர் அணியின் சார்பில் அமைத்துத் தந்தோம். இன்று அவர் பிறருக்கு உதவி செய்யும் இடத்துக்கு வந்ததில் மகிழ்ந்தேன்.

விமான நிலையம் அருகிலேயே புதுக்கோட்டை நல்லமலைப் பகுதியில் அமைந்துள்ள கழக இளைஞர் அணியின் துணைச் செயலாளர் ஜோயல் அவர்களின் இல்லத்தில் கழகக் கொடியை ஏற்றிவைத்தோம். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சூழ்ந்து நின்று வரவேற்றனர். அங்கிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றோம். தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில், அரசு நலத்திட்ட உதவிகளைப் பயனாளிகளுக்கு வழங்கினோம். அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுலவகத்தில் ஆய்வுக் கூட்டம்.
ஒவ்வொரு துறையிலும் மேற்கொள்ளப்படும் மக்கள் நலப் பணிகள், அதன் தற்போதைய நிலை… எனத் தரவுகளின் அடிப்படையில் ஒவ்வொரு துறையாகப் பார்த்து அதற்கான விளக்கங்களை அதிகாரிகளிடம் பெறுவது, என மிக விரிவாக மூன்று மணி நேரம் ஆய்வுக் கூட்டத்தை நடத்தினோம். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வழியில் செயல்படும் நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தீட்டும் மக்கள் நலத்திட்டங்கள் கடைக்கோடி மக்கள் வரை சென்று சேரவேண்டும் என்றால், இதுபோன்ற ஆய்வுக் கூட்டங்கள் அவசியம்.

அதை முடித்துக்கொண்டு, `மாணிக்கம் மஹால்’ திருமண மண்டபத்தில் நடைபெற்ற கழக மூத்த முன்னோடிகளுக்கு, பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றோம். இந்தப் பொற்கிழி நிகழ்ச்சி என் அடையாளங்களில் ஒன்றாகவே மாறிவிட்டது. நம் கழக முன்னோடிகள் என்னைப் பார்த்ததும் கைகளைப் பிடித்துக்கொண்டு தங்களின் கழகப் பணிகள் அத்தனையையும் என்னிடம் சொல்லிவிடவேண்டும் என்ற தவிப்பு, அவர்களிடம் தெரியும். அப்படி அன்று தூத்துக்குடி வடக்கு-தெற்கு மாவட்டக் கழகங்களின் சார்பில், மொத்தம் 1,000 கழக முன்னோடிகளுக்குத் தலா ரூ.10 ஆயிரம் வழங்கி வாழ்த்து பெற்றோம்.

“இந்தக் கழகத்தின் அச்சாணியே நீங்கள்தான். பெரியார்-அண்ணா-கலைஞர்-பேராசிரியர் ஆகியோரின் மறு உருவாகத்தான் உங்களைப் பார்க்கிறேன். உங்களுக்குப் பொற்கிழி வழங்குவது என்பது எங்கள் கடமை” என்று அவர்களின் மீதான என் அன்பை உரையாகப் பேசி முடித்தேன்.

அடுத்து தூத்துக்குடியில் புதுக்கோட்டைப் பகுதியில் நடைபெற்ற இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம். பிரம்மாண்டமான ஏற்பாடு. கூட்டம் நடந்த இடத்தின் வாசலில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வரவேற்றனர். “கடந்த மாதம் 20-ஆம் தேதி மதுரையில் அ.தி.மு.க. மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் அக்கட்சியின் கொள்கை குறித்தோ, தமிழ்நாட்டின் நலன் குறித்தோ ஏதாவது பேசப்பட்டதா? விவாதிக்கப்பட்டதா? ஒரு மாநாடு எப்படி நடத்தக்கூடாது என்பதற்கான உதாரணம்தான் அந்த மாநாடு. ஆனால், நூற்றாண்டு வரலாறு கொண்ட ஒரு இயக்கத்தின் இளைஞர் அணி நடத்தக்கூடிய நம் மாநாடு, ஒரு மாநாடு எப்படி இருக்க வேண்டும், எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருக்க வேண்டும். அதற்கு உங்களின் வருகையை உறுதி செய்வது அவசியம்” என்று உரையாற்றி அவர்களை மாநாட்டுக்கு அழைத்தேன்.

தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்ததுடன் மாநாட்டுக்கு நிதியும் வழங்கிய மாண்புமிகு அமைச்சர்கள் அக்கா கீதாஜீவன், அண்ணன் அனிதா ராதாகிருஷ்ணன் இருவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல் துணைச் செயலாளர்கள் ஜோயல், இன்பா ரகு-வுக்கும், நிதியளித்த மாவட்ட இளைஞர் அணியினருக்கும் என் அன்பும் வாழ்த்தும்.

மறுநாள், தென்காசி மாவட்ட நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைத்துச் செல்ல மாண்புமிகு அமைச்சர்கள் அண்ணன் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்களும் அண்ணன் தங்கம் தென்னரசு அவர்களும் தூத்துக்குடி வந்திருந்தனர். இரவு 10.30 மணி ஆனபோதும் ஆலங்குளத்தில் ஆயிரக்கணக்கானோருடன் காத்திருந்து, என்னை வரவேற்ற தென்காசி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் அண்ணன் ஜெயபாலன் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

அடுத்த நாள் 5-ம் தேதி காலை தென்காசி மாவட்டத் தலைமை மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டோம். நோயாளிகளைக் கனிவுடன் நடத்தி, அவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிப்பதையும், மருத்துவமனையைச் சுகாதாரமாகப் பராமரிப்பதையும் உறுதிப்படுத்துமாறு அறிவுறுத்தினோம்.

அதைத்தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினோம். அதன்பிறகு ஆய்வுக் கூட்டத்தை நடத்தினோம். கூட்டத்தின் நிறைவாக, “மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான இந்தத் திராவிட மாடல் அரசு செயல்படுத்தும் திட்டங்களின் பலன்கள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்துக்குள் மக்களுக்குச் சென்று சேரும் வகையில் உழைத்து, இந்த அரசுக்கும் மக்களுக்கும் இடையில் ஒரு பாலமாக இருந்து, அரசுக்கு நற்பெயரை பெற்றுத்தரவேண்டும்” என்று அரசு அலுவலர்களைக் கேட்டுக்கொண்டேன்.

அதைத்தொடர்ந்து, சிவந்தி நகரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள தென்காசி தெற்கு மாவட்டக் கழகத்துக்கான அலுவலக வாசலில் அமைக்கப்பட்டுள்ள கழகக் கொடியை ஏற்றிவைத்து மகிழ்ந்தேன். மதிய உணவுக்குப் பிறகு, தென்காசி, `இசக்கி மஹால்’வளாகத்தில் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி. தென்காசி வடக்கு மற்றும் தெற்கு மாவட்டக் கழகங்களில் உள்ள முன்னோடிகளில் ஆயிரத்து 500 பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் பொற்கிழியாக வழங்கி மகிழ்ந்தோம். இதுவரை தமிழ்நாடு முழுவதும் கழக முன்னோடிகளுக்கு மாவட்டக் கழகங்களின் சார்பில் 40 கோடி ரூபாய்க்கும் மேல் பொற்கிழியாக வழங்கப்பட்டுள்ளதைத் தெரிவித்து, இளைஞர் அணி அறக்கட்டளை சார்பிலும் உதவக் காத்திருக்கிறோம். கோரிக்கைகளை அன்பகத்துக்கு அனுப்பலாம் என்பதையும் சொல்லி விடைபெற்றோம்.

அடுத்து இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம். திரும்பிய திசையெங்கும் எழுச்சி என்று சொல்லும் அளவுக்குக் கட்டுக்கடங்காத இளைஞர்கள் கூட்டம். “9 ஆண்டுகளாக நாங்கள் இதெல்லாம் சாதனைகளைச் செய்துள்ளோம் என்று சொல்வதற்குக்கூட எதுவும் செய்யாத ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசு, சனாதன ஒழிப்பு மாநாட்டில் நான் பேசியதைத் திரித்து அரசியல் செய்கிறது. 28 எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணிக்குப் பயந்து நாட்டின் பெயரையே ‘பாரத்’ என்று மாற்றி, தான் செய்த ஊழலையும், மணிப்பூரில் செய்த இனக்கலவரத்தையும் மறைக்க முயலும் ஒன்றிய பா.ஜ.க.வையும், மோடியையும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஓடஓட விரட்ட வேண்டும். அதற்கான முதல் படியாக நம் இளைஞர் அணி மாநில மாநாடு அமையவேண்டும். அதற்கு, உங்கள் ஒவ்வொருவரின் வருகையும் அவசியம்” என்பதை எடுத்துரைத்து உரையாற்றினேன்.

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்த மாவட்ட பொறுப்பு அமைச்சர் அண்ணன் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்களுக்கும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்த மாவட்டச் செயலாளர் சகோதரர் ராஜா, மாவட்டப் பொறுப்பாளர் அண்ணன் ஜெயபாலன் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இளைஞர் அணி துணைச் செயலாளர் சகோதரர் ஜி.பி.ராஜா, கூட்டத்துக்கு இளைஞர்களைத் திரட்டி, நிதி வழங்கிய மாவட்ட அமைப்பாளர்களுக்கு என் அன்பும் வாழ்த்தும். மாவட்ட ஆய்வுப் பணிகளை ஒருங்கிணைத்த சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் செயலாளர் மருத்துவர் தாரேஷ் அகமது ஐ.ஏ.எஸ் அவர்களுக்கும் நன்றி.

தூத்துக்குடி, தென்காசியையும் சேர்த்து, இதுவரை 23 மாவட்டக் கழகங்களுக்கான இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தி முடித்துள்ளோம். தென்காசியில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மதுரைக்கு வந்து, விமானம் மூலம் நள்ளிரவில் சென்னை வந்து சேர்ந்தோம்.

அடுத்தடுத்த சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும். இந்த நேரத்தில் கழகத்தினருக்கும், இளைஞர் அணி நிர்வாகிகளுக்கும் ஒரு வேண்டுகோள். கழக நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிப்பது, ஃப்ளெக்ஸ் பேனர் வைப்பது, சால்வை – பொன்னாடை அணிவிப்பதை அறவே தவிர்க்கவும். இவற்றுக்குப் பதிலாக புத்தகங்களையோ, கழகத்தின் கருப்பு-சிவப்பு கரை வேட்டிகளையோ, இளைஞர் அணி வளர்ச்சி நிதியோ தாருங்கள். அவை மற்றவர்களுக்குப் பயன்படும்.

இந்த நேரத்தில் சில விஷயங்களை நம் கழகத்தினருக்குத் தெளிவுபடுத்த வேண்டியது என் கடமை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்-கலைஞர்கள் சங்கம்’கடந்த 2-ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்த ‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினேன்.

‘கடந்த 9 ஆண்டுகளாக வாயிலேயே வடை சுட்டுக்கொண்டிருக்கிறீர்களே. எங்களின் நலனுக்காகச் செய்த திட்டங்கள் என்ன’ என்று ஒட்டுமொத்த இந்தியாவும் ஓரணியில் திரண்டு நின்று, நிராயுதபாணியாக நிற்கும் ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசைக் கேள்வி கேட்க தொடங்கியுள்ள நிலையில், த.மு.எ.க.ச மாநாட்டில் நான் பேசிய பேச்சை, ‘இனப்படுகொலை செய்யத் தூண்டினேன்’ என்று திரித்து அதையே மக்களிடம் இருந்து தங்களைக் காத்துக்கொள்ளும் ஆயுதமாக நினைத்து காற்றில் கம்பு சுற்றிக்கொண்டு இருக்கின்றனர் பா.ஜ.க. தலைவர்கள்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால், அமித்ஷா போன்ற ஒன்றிய அரசின் அமைச்சர்கள், பா.ஜ.க. ஆளும் மாநில முதலமைச்சர்கள் என யார்யாரோ இந்த அவதூறை மையமாக வைத்து, என் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.
நியாயமாகப் பார்த்தால், மதிப்புக்குரிய பொறுப்பில் இருந்துகொண்டு அவதூறு பரப்பும் இவர்கள் மீது நான்தான் கிரிமினல் வழக்கு, நீதிமன்ற வழக்குகளைத் தொடுக்க வேண்டும். ஆனால், இவர்களுக்குப் பிழைப்பே இதுதான், இதைவிட்டால், பிழைப்பதற்கு அவர்களுக்கு வேறு வழி தெரியாது என்பதால், ‘பிழைத்துப் போகட்டும்’ என்று விட்டுவிட்டேன்.

தந்தை பெரியாரிடம் இருந்து வந்த பேரறிஞர் அண்ணாவால் நிறுவப்பட்ட தி.மு.கழகத்தின் இரண்டு கோடி தொண்டர்களில் நானும் ஒருவன். நாங்கள் எந்த மதத்துக்கும் எதிரி இல்லை என்பதை அனைவரும் அறிவார்கள்.
மதங்களைப் பற்றி அண்ணா அவர்கள் கூறியது இன்றும் பொருத்தமாக இருப்பதால் அதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். “எப்போது ஒரு மதம் மக்களை சமத்துவத்தை நோக்கி வழிநடத்துகிறதோ, அவர்களுக்கு சகோதரத்துவத்தை கற்பிக்கிறதோ, அப்போது நானும் ஆன்மிகவாதிதான். எப்போது ஒரு மதம் சாதியின் பெயரால் மக்களை பிளவுபடுத்துகிறதோ, அவர்களுக்கு தீண்டாமையையும் அடிமைத்தனத்தையும் கற்பிக்கிறதோ, அப்போது அந்த மதத்தை எதிர்த்து நிற்கும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்” என்றார் அண்ணா.
`பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதை கற்பிக்கும் மதங்கள் அனைத்தையும் நாங்கள் மதிக்கிறோம்.

ஆனால், இவை எதையும் புரிந்துகொள்ள விரும்பாமல், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் அவதூறை மட்டுமே நம்பி களமிறங்கியுள்ள மோடி அண்ட் கோவை பார்க்கும்போது ஒரு பக்கம் பரிதாபமாகவும் இருக்கிறது. ‘சும்மா இருக்கிறதுன்னா சும்மாவா’ என திரைப்பட நடிகர் அண்ணன் வடிவேலு அவர்கள் ஏற்று நடித்த கதாபாத்திரத்திடம் போட்டி போடும் அளவுக்கு மோடி அவர்கள் கடந்த 9 ஆண்டுகளாக சும்மாவே இருந்துள்ளார். இடையிடையே பணத்தை மதிப்பிழக்கச் செய்வது, குடிசைகளை மறைத்து சுவர் எழுப்புவது, புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டுவது, அங்கு செங்கோல் நடுவது, நாட்டின் பெயரை மாற்றி விளையாடுவது, எல்லையில் நின்றபடி வெள்ளைக்கொடிக்கு வேலை வைப்பது… என வடிவேலு அண்ணனின் `23-ஆம் புலிகேசி’ கதாபாத்திரத்தோடு போட்டிபோட்டு நகைச்சுவை செய்துகொண்டுள்ளார்.

திரையில் வடிவேலு அண்ணனை ரசிக்க முடிந்தது. நிஜத்தில் இவர்களை… மக்களின் வாக்குகளைப் பெற எந்தளவுக்கும் சென்று, இவர்கள் நாடக அரசியலைச் செய்வார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது.

நான் இதை நகைச்சுவைக்காக மட்டும் சொல்லவில்லை, ஏழை எளிய மக்களின் வாழ்வை உயர்த்தும் ‘புதுமைப்பெண்’ திட்டம் போன்றோ, முதலமைச்சரின் காலைச் சிற்றுண்டி திட்டம் போன்றோ, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் போன்றோ ஏதாவது ஒரு முற்போக்குத் திட்டம் கடந்த 9 ஆண்டுகால ஒன்றிய அரசிடம் இருந்து வந்திருக்கிறதா? மதுரை எய்ம்ஸை கட்டினார்களா? கலைஞர் நூற்றாண்டு நூலகத்தைப் போன்று ஏதாவது அறிவியக்கத்தை முன்னெடுத்தார்களா?
‘சனாதனம் என்றால் என்ன’ என்பதை வீட்டினுள் பத்திரமாக அடுக்கிவைத்திருக்கும் புத்தகங்களில் இருந்து தேடிக்கொண்டிருக்கும் எடப்பாடி அவர்களே, கொடநாடு கொலை-கொள்ளை வழக்குகளிலும், ஊழல் வழக்குகளில் இருந்தும் தப்பிக்க, நீங்கள் ஆட்டுத் தாடிக்குப்பின் நீண்டநாள் ஒழிந்திருக்க முடியாது. ஆடு ஒருநாள் காணாமல் போகும்போது, நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

‘என்ன வாய் மட்டும் வேலை செய்யுது’ என்பது போல, மீடியாவை சந்திப்பது மட்டுமே மக்கள் பணி என நினைக்கும் சிலர் நான் பேசாததைப் பேசியதாகத் திரிக்கும் அவதூறுகளை வைத்து, வாயை வாடகைக்கு விட்டுப் பிழைப்பு நடத்தி வருகின்றனர். அவர்களின் பிழைப்பில் நான் மண் அள்ளிப்போட விரும்பவில்லை, பிழைத்துப்போகட்டும்.

நாம் எதிர்க்கட்சியாக இருந்தபோது கொரோனா காலத்தில் அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நலத்திட்ட உதவியாக வழங்க வீடு வீடாக ஏறிக்கொண்டிருந்தோமே அப்போது அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் என்ன செய்தன? மணி அடித்தபடியும், விளக்கு பிடித்தபடியும் கொரோனா கிருமியை ஒழிக்கப் போராடிக் கொண்டு இருந்தன.

இன்று நாம் ஆளுங்கட்சி. இன்றும் நாம் கலைஞரின் நூற்றாண்டை மக்களுக்குப் பயனுள்ள வகையில் கொண்டாட, நலத்திட்ட உதவிகளை வழங்க வீடு வீடாக ஏறி இறங்கிக்கொண்டு இருக்கிறோம். அ.தி.மு.க.வோ ஆடலும் பாடலும் பின்னணியில், புளி சாத மாநாடுகளை நடத்திக்கொண்டு, விழுவதற்குக் கால்கள் கிடைக்காதா, ஊர்ந்து போக ஏதாவது ஃபர்னிச்சர் கிடைக்காதா எனத் தேடிக் கொண்டிருக்கிறது.
ஒன்றிய பிரதமர் மோடியோ கொரோனா நிதியாகத் திரட்டிய ‘பி.எம். கேர்ஸ்’க்கு கணக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றபடி, 7.5 லட்சம் கோடி ரூபாய் என்ன ஆனது என்ற சி.ஏ.ஜி. கேள்விக்குப் பதிலளிக்காமல், ஊரில் இருந்தால், மணிப்பூர் பற்றிக் கேள்வி கேட்பார்களே என்று பயந்து நண்பர் அதானியை அழைத்துக்கொண்டு ஊர் ஊராகச் சுற்றிக்கொண்டு இருக்கிறார். உண்மையைச் சொல்வது என்றால், மக்களின் அறியாமைதான் இவர்களின் நாடக அரசியலுக்கான மூலதனம்.

மணிப்பூர் கலவரத்தைத் தூண்டிவிட்டு 250-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்படக் காரணமாக இருந்தது, 7.5 லட்சம் கோடி ரூபாய் ஊழல்… போன்றவற்றைத் திசை திருப்பத்தான் மோடி அண்ட் கோ இப்படி சனாதன கம்பை சுற்றிக்கொண்டு இருக்கிறது. இவர்களின் கைகளில் தான் மொத்தமாக சிக்கியுள்ளதால், ‘ஒரே நாடு ஒரே தேர்தலா… நடத்திடுவோம் எஜமான்’, ‘பாரதம்னு மாத்துறீங்களா… மாத்திடுங்க ஓனர்’ என்று மோடியின் நாடகத்தையே இங்கே அரங்கேற்றிக்கொண்டு இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்.
சாமியார்களுக்குத்தான் இந்தக் காலத்தில் அதிக விளம்பரம் தேவைப்படுகிறது. அப்படி ஒரு சாமியார் இடையில் புகுந்து என் தலைக்கு 10 கோடி ரூபாய் விலை வைத்துள்ளார். என் தலையைவிட ‘முற்றும் துறந்தவரிடம் எப்படி 10 கோடி’ என்பதுதான் எனக்கு வியப்பாக இருக்கிறது. தவிர பலர் என் மீது நாட்டின் பல்வேறு காவல் நிலையங்களிலும், மாண்பமை நீதிமன்றங்களிலும் புகார் அளித்து வருவதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், ‘கொலை மிரட்டல் விடுத்த அந்தச் சாமியாரை கைது செய்ய வேண்டும்’ என்று கோரி நம் கழகத்தினர் தமிழ்நாட்டின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்து வருவதாகவும், அந்தச் சாமியாரின் உருவ பொம்மையை எரிப்பது, அவரின் படத்தைக் கொளுத்துவது, கண்டன சுவரொட்டிகளை ஒட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் தெரிகிறது.
நாம் பிறருக்கு நாகரிகம் கற்றுத் தருபவர்கள். நம் தலைவர்கள் நம்மை அப்படித்தான் வளர்த்தெடுத்துள்ளனர். எனவே, அதுபோன்ற காரியங்களை நம் இயக்கத் தோழர்கள் அறவே தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தவிர, நமக்கு இயக்கப் பணி, மக்கள் பணி என எண்ணிலடங்கா பணிகள் காத்திருக்கின்றன.
முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டை முன்னிட்டு அரசின் சார்பிலும், கழகத்தின் சார்பிலும் பல பணிகளை நம் மாண்புமிகு முதலமைச்சர்-கழகத் தலைவர் அவர்கள் நமக்கு வழங்கியுள்ளார்கள். இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டுக்கான பணிகள், நாடாளுமன்றத் தேர்தல் பணிகள்… என ஏராளமான பணிகள் நமக்கு முன் உள்ளன.

இவ்வளவு வேலைகள் இருக்கும்போது சாமியாரின் மீது வழக்கு போடுவது, உருவ பொம்மையை எரிப்பது.. போன்ற, நேரத்தை வீணடிக்கக்கூடிய பணிகளில் நம் கழகத்தினர் எவரும் ஈடுபடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.
என் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை, கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலும், தலைமைக் கழகத்தின் ஆலோசனையைப் பெற்று சட்டத்துறையின் உதவியுடன் சட்டப்படி எதிர்கொள்வேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனக்கு ஆதரவு தெரிவித்து கருத்துகளைப் பகிர்ந்த தோழமை கட்சியின் தலைவர்களுக்கும், மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் ‘சனாதன தர்மம்’ எதை வலியுறுத்துகிறது, அதில் அப்படி என்னதான் சொல்லப்பட்டுள்ளது’ என்பதை நாடு தழுவிய அளவில் ஒரு பேசுபொருளாக மாற்ற காரணமாக அமைந்த ‘சனாதன ஒழிப்பு மாநாட்டுக்கு’ம், அதை ஒருங்கிணைத்த த.மு.எ.க.ச தோழர்களுக்கும் இந்த நேரத்தில் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அம்மாநாட்டுக்கு நான் செல்ல காரணமாக இருந்த அண்ணன் ‘புதுகை பூபாளம்’ பிரகதீஸ்வரன் அவர்களுக்கு என் அன்பு.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், இனமான பேராசிரியர் புகழ் ஓங்கட்டும். தொடர்ந்து அவர்களின் கொள்கை வழியில் நடக்க உறுதியேற்போம்.

நன்றி, வணக்கம்.
உங்கள்
உதயநிதி

The post ’’இந்த நேரத்தில் சில விஷயங்களை நம் கழகத்தினருக்குத் தெளிவுபடுத்த வேண்டியது என் கடமை..!’’ உதயநிதி ஸ்டாலின் அறிக்கை first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b7/feed/ 0
’’பாஜகவின் நவீன ஊழல் கூடாரங்கள் பெயர் சூட்டும் மறியல் போராட்டம்..!’’ வாலிபர் சங்கம் அழைப்பு  https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b5%e0%af%80%e0%ae%a9-%e0%ae%8a%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%82/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%259c%25e0%25ae%2595%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25b5%25e0%25af%2580%25e0%25ae%25a9-%25e0%25ae%258a%25e0%25ae%25b4%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%2582 https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b5%e0%af%80%e0%ae%a9-%e0%ae%8a%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%82/#respond Wed, 30 Aug 2023 11:38:48 +0000 https://madrasmurasu.com/?p=6086 டிஒய்எப்ஐ (வாலிபர் சங்கம்) மாநில தலைவர் எஸ்.கார்த்திக், மாநில செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: சமீபத்தில் வெளியான சி.ஏ.ஜி அறிக்கை மோடி அரசின் ஊழல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. அதில் முக்கியமான ஒன்று “டோல் கேட்” ஊழல். செங்கல்பட்டு – பரனூர் டோல் கேட் அதிகமான வாகனங்கள் கடந்து செல்லும் பொதுப் பணத்தில் அமைக்கப்பட்டசாலையில் உள்ள டோல் கேட். அதன் வழியாக ஆகஸ்ட் 2019 லிருந்து ஜூன் 2020 வரையிலான காலத்தில் 1, 17, 08, 438 வாகனங்கள் கடந்து சென்றுள்ளன. அவற்றில் 62,37,152 வாகனங்கள் டோல் கட்டணம் செலுத்தாமல் போனதாககணக்குகள் வெளியாகியுள்ளது. அதேபோல் ஆத்தூர் டோல் கேட்டில் 36 சதவீதம் வாகனங்களும் , கப்பலூர் டோல் கேட்டில் 25 சதவீத வாகனங்கள்இலவசமாக சென்றதாக கணக்குகள் வெளியாகியுள்ளன. ஏறக்குறைய பொதுப் பணத்தில் அமைக்கப்பட்டசாலைகளில் உள்ள அனைத்து டோல் கேட்டுகளிலும் இதுவே நடந்துள்ளது . தனியார் முகவர்கள் மூலம் நடைபெற்ற அந்த சுங்க வசூல் அரசாங்கத்திற்கு நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான கோடிரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நாங்கள் ஊழலற்றவர்கள் என்று மார்தட்டிய மோடி தலமையிலான பாஜக அரசு நவீன ஊழலின் அடையாளமாகமாறியுள்ளது. இப்படி திட்டமிட்டு தொடர்ச்சியான கொள்ளையை நேரடியாக மக்களிடம் இருந்து நடத்திக் கொண்டிருந்த பாஜகஅரசு பதவி விலக வேண்டும். இது குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்திட வேண்டும். இதனை வலியுறுத்தி பாஜகவின் நவீன ஊழலின் கூடாரங்கள் என்னும் பெயர்களை வைக்கும் மறியல் போராட்டத்தைஇந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வருகிற செப்டம்பர் 1 நடத்திட உள்ளது. இப்போராட்டம் பரனூர் டோல்கேட் , கப்பலூர் டோல்கேட் , கோவை , கன்னியாகுமரி , திருச்சி , விழுப்புரம் ஆகியஇடங்களில் நடைபெறும். இப்போராட்டத்தில் ஊழலுக்கு எதிராக செயல்படத் துடிக்கும் அனைத்து பொது மக்களும், இளைஞர்களும் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

The post ’’பாஜகவின் நவீன ஊழல் கூடாரங்கள் பெயர் சூட்டும் மறியல் போராட்டம்..!’’ வாலிபர் சங்கம் அழைப்பு  first appeared on Madras Murasu.

]]>
டிஒய்எப்ஐ (வாலிபர் சங்கம்) மாநில தலைவர் எஸ்.கார்த்திக், மாநில செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:

சமீபத்தில் வெளியான சி.ஏ.ஜி அறிக்கை மோடி அரசின் ஊழல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. அதில் முக்கியமான ஒன்று “டோல் கேட்” ஊழல்.

செங்கல்பட்டு – பரனூர் டோல் கேட் அதிகமான வாகனங்கள் கடந்து செல்லும் பொதுப் பணத்தில் அமைக்கப்பட்டசாலையில் உள்ள டோல் கேட். அதன் வழியாக ஆகஸ்ட் 2019 லிருந்து ஜூன் 2020 வரையிலான காலத்தில் 1, 17, 08, 438 வாகனங்கள் கடந்து சென்றுள்ளன. அவற்றில் 62,37,152 வாகனங்கள் டோல் கட்டணம் செலுத்தாமல் போனதாககணக்குகள் வெளியாகியுள்ளது.

அதேபோல் ஆத்தூர் டோல் கேட்டில் 36 சதவீதம் வாகனங்களும் , கப்பலூர் டோல் கேட்டில் 25 சதவீத வாகனங்கள்இலவசமாக சென்றதாக கணக்குகள் வெளியாகியுள்ளன. ஏறக்குறைய பொதுப் பணத்தில் அமைக்கப்பட்டசாலைகளில் உள்ள அனைத்து டோல் கேட்டுகளிலும் இதுவே நடந்துள்ளது .

தனியார் முகவர்கள் மூலம் நடைபெற்ற அந்த சுங்க வசூல் அரசாங்கத்திற்கு நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான கோடிரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

நாங்கள் ஊழலற்றவர்கள் என்று மார்தட்டிய மோடி தலமையிலான பாஜக அரசு நவீன ஊழலின் அடையாளமாகமாறியுள்ளது.

இப்படி திட்டமிட்டு தொடர்ச்சியான கொள்ளையை நேரடியாக மக்களிடம் இருந்து நடத்திக் கொண்டிருந்த பாஜகஅரசு பதவி விலக வேண்டும். இது குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்திட வேண்டும்.

இதனை வலியுறுத்தி பாஜகவின் நவீன ஊழலின் கூடாரங்கள் என்னும் பெயர்களை வைக்கும் மறியல் போராட்டத்தைஇந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வருகிற செப்டம்பர் 1 நடத்திட உள்ளது.

இப்போராட்டம் பரனூர் டோல்கேட் , கப்பலூர் டோல்கேட் , கோவை , கன்னியாகுமரி , திருச்சி , விழுப்புரம் ஆகியஇடங்களில் நடைபெறும். இப்போராட்டத்தில் ஊழலுக்கு எதிராக செயல்படத் துடிக்கும் அனைத்து பொது மக்களும், இளைஞர்களும் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

The post ’’பாஜகவின் நவீன ஊழல் கூடாரங்கள் பெயர் சூட்டும் மறியல் போராட்டம்..!’’ வாலிபர் சங்கம் அழைப்பு  first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b5%e0%af%80%e0%ae%a9-%e0%ae%8a%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%82/feed/ 0
”தி.மு.க.வை மோடி­யும் – பா.ஜ.க.வின­ரும் குறி­வைக்­கி­றார்­கள்..!” திருச்சி என்.சிவா https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%81-%e0%ae%95-%e0%ae%b5%e0%af%88-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%9c-%e0%ae%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25ae%25bf-%25e0%25ae%25ae%25e0%25af%2581-%25e0%25ae%2595-%25e0%25ae%25b5%25e0%25af%2588-%25e0%25ae%25ae%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25be-%25e0%25ae%259c-%25e0%25ae%2595 https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%81-%e0%ae%95-%e0%ae%b5%e0%af%88-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%9c-%e0%ae%95/#respond Mon, 14 Aug 2023 03:45:49 +0000 https://madrasmurasu.com/?p=5954 மாநில உரி­மை­க­ளைக் காப்­ப­தி­லும், எதிர்க்­கட்­சி­களை ஒருங்­கி­ணைப்­ப­தி­லும் முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் முனைப்­பு­டன் செயல்­ப­டு­வ­தால் தி.மு.க.வை மோடி­யும் – பா.ஜ.க.வின­ரும் குறி­வைக்­கி­றார்­கள் என்று மாநி­லங்­க­ளவை கழ­கக் குழுத் தலை­வர் திருச்சி என்.சிவா செய்­தி­யா­ளர்­க­ளுக்கு பேட்டி அளிக்­கை­யில் கடும் குற்­றச்­சாட்­டி­யுள்­ளார். சென்னை அண்ணா அறி­வா­ல­யத்­தில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் மாநி­லங்­க­ளவை கழ­கக் குழுத் தலை­வர் திருச்சி சிவா, செய்­தி­யா­ளர்­க­ளுக்கு அளித்த பேட்டி வரு­மாறு:– மணிப்­பூர் விவ­கா­ரம் குறித்­தும், டெல்லி மாநில அர­சின் அதி­கா­ரத்­தைப் பறிக்­கும் சட்­டத்தை எதிர்த்­தும் நாடா­ளு­மன்­றத்­தில் தி.மு.க. குரல் எழுப்­பி­யது. […]

The post ”தி.மு.க.வை மோடி­யும் – பா.ஜ.க.வின­ரும் குறி­வைக்­கி­றார்­கள்..!” திருச்சி என்.சிவா first appeared on Madras Murasu.

]]>
மாநில உரி­மை­க­ளைக் காப்­ப­தி­லும், எதிர்க்­கட்­சி­களை ஒருங்­கி­ணைப்­ப­தி­லும் முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் முனைப்­பு­டன் செயல்­ப­டு­வ­தால் தி.மு.க.வை மோடி­யும் – பா.ஜ.க.வின­ரும் குறி­வைக்­கி­றார்­கள் என்று மாநி­லங்­க­ளவை கழ­கக் குழுத் தலை­வர் திருச்சி என்.சிவா செய்­தி­யா­ளர்­க­ளுக்கு பேட்டி அளிக்­கை­யில் கடும் குற்­றச்­சாட்­டி­யுள்­ளார்.

சென்னை அண்ணா அறி­வா­ல­யத்­தில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் மாநி­லங்­க­ளவை கழ­கக் குழுத் தலை­வர் திருச்சி சிவா, செய்­தி­யா­ளர்­க­ளுக்கு அளித்த பேட்டி வரு­மாறு:–

மணிப்­பூர் விவ­கா­ரம் குறித்­தும், டெல்லி மாநில அர­சின் அதி­கா­ரத்­தைப் பறிக்­கும் சட்­டத்தை எதிர்த்­தும் நாடா­ளு­மன்­றத்­தில் தி.மு.க. குரல் எழுப்­பி­யது. மணிப்­பூர் விவ­கா­ரத்­தில் ஒன்­றிய பா.ஜ.க. அரசு மிகுந்த அலட்­சி­யத்­து­டன் நடந்து கொண்­டது, நாட்­டில் ஏற்­ப­டும் உயிர்­சே­தங்­க­ளுக்கு பதி­ல­ளிக்க வேண்­டி­யது பிர­த­ம­ரின் கடமை. மணிப்­பூர் விவ­கா­ரம் குறித்து எதிர்க்­கட்­சி­கள் எழுப்­பிய எந்­தக் கேள்­வி­க­ளுக்­கும் பிர­த­மர் மோடி பதி­ல­ளிக்­க­வில்லை.

எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் இல்லை!

அவை நிகழ்­வு­க­ளை­யெல்­லாம் ஒத்­தி­வைத்­து­விட்டு மணிப்­பூர் தொடர்­பாக பிர­த­மர் ஒரு அறிக்கை தர வேண்­டும். நாங்­கள் விவா­தத்­தில் வைத்­தி­ருக்­கின்ற கருத்­துக்­களை, எங்­கள் தரப்­பில் இருக்­கின்ற குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு பதில் சொல்ல வேண்­டும். இது­தான் நாடா­ளு­மன்ற ஜன­நா­ய­கம் என்று சொன்­னோம். ஆனால், பிர­த­மர் அவைக்கு வர மறுத்­தார், மாறாக உள்­துறை அமைச்­சர வர வைக்­கி­றோம். நீங்­கள் இரண்­டரை மணி நேரம் குறு­கிய கால விவா­தம் எடுத்­துக்­கொள்­ளுங்­கள் என்­கி­றார்­கள். ஆனால், நாங்­கள் அதற்கு இசைவு தெரி­விக்­க­வில்லை, கார­ணம் பிர­த­மர் என்­ப­வர் இந்த நாட்­டின் உட்­ச­பட்ச பொறுப்­பில் இருப்­ப­வர், ஒரு பகு­தி­யில் ஒரு உயி­ருக்­குச் சேதம் என்­றால்­கூட பதற வேண்­டிய பொறுப்பு பிர­த­ம­ருக்கு உண்டு.

பா.ஜ.க.வை எதிர்கொள்ளும் திறன் நம் முதல்வருக்கு உண்டு!

நாடா­ளு­மன்­றத்­தில் விவா­தம் நடத்­தா­மல் முக்­கிய மசோ­தாக்­களை ஒன்­றிய அரசு நிறை­வேற்­றி­ யுள்­ளது. இது நாடா­ளு­மன்ற நடை­மு­றை­க­ளுக்கு எதி­ரா­னது. மாநில உரி­மை­க­ளைக் காப்­ப­தி­லும் எதிர்க்­கட்­சி­களை ஒருங்­கி­ணைப்­ப­தி­லும் முனைப்­பு­டன் செயல்­ப­டு­வ­தால் தி.மு.க.வை பிர­த­ம­ரும் பா.ஜ.க. வின­ரும் குறி­வைக்­கின்­ற­னர். இந்­தியா என்ற பெய­ரில் எதிர்க்­கட்­சி­கள் அமைத்­துள்ள கூட்­டணி ஒற்­று­மை­யா­க­வும் வலி­மை­யா­க­வும் உள்­ளது. தேர்­த­லுக்கு முன்பே சாணக்­கி­யத்­த­ன­மாக அர­சி­யல் செய்து எதிர்க்­கட்­சி­களை ஒன்று சேர்த்­த­வர் முதல்­வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்­கட்­சி­களை ஒருங்­கி­ணைத்து, பா.ஜ.க.வை எதிர்­கொள்­ளும் திறன் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளுக்கு உண்டு.

நாடா­ளு­மன்­றத்­தில் எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­கள் பேசி­ய­போ­து­கூட சன்­சத் தொலைக்­காட்சி காட்­ட­வில்லை. பிர­த­மர் மோடி பேசி­ய­போது எதிர்க்­கட்­சி­கள் தெரி­வித்த எதிர்ப்பை சன்­சத் தொலைக்­காட்சி ஒளி­ப­ரப்­ப­வில்லை. நாடா­ளு­மன்­றத்­தில் எதிர்க்­கட்­சி­கள் செய்­வது சரியா? தவறா? என்­பதை மக்­கள் முடிவு செய்­து­கொள்­ளட்­டும். மக்­க­ளவை, மாநி­லங்­க­ள­வை­யில் சட்­டம் ஒரே நாளில் நிறை­வேற்­றப்­பட்­ட­தாக வர­லாற்­றில் இல்லை.

‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வரும்!

இந்­தியா கூட்­டணி நிச்­ச­யம் ஆட்­சிக்கு வரும். அப்­போது ‘நீட்’ தேர்வு முடி­வுக்கு வரும். ஜெய­ல­லிதா விவ­கா­ரம் குறித்து ஒன்­றும் அறி­யா­மல் நிர்­மலா சீதா­ரா­மன் பேசி வரு­கி­றார். ஜெய­ல­லிதா மருத்­து­வ­ம­னை­யில் இருந்­த­போ­து­தான் நிர்­மலா சீதா­ரா­மன் அமைச்­ச­ராக இருக்­கி­றார் என்­பதே தெரி­ய­வந்­தது. மத்­திய அமைச்­சர்­கள் நாடா­ளு­மன்­றத்­தில் எதை வேண்­டு­மா­னா­லும் பேசு­வார்­கள். எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­கள் பேசு­வதை உரி­மைக் குழு­வுக்கு அனுப்­பு­வ­தன் மூலம் ஒன்­றிய பா.ஜ.க. அரசு மிரட்­டல் விடுக்­கி­றது. மணிப்­பூர் மாநி­லத்­தில் 100 நாட்­க­ளுக்கு மேலாக பதட்­டம் நில­வு­கி­றது. 150-க்கும் மேற்­பட்ட மக்­கள் கொல்­லப்­பட்­டுள்­ள­னர். 1 லட்­சம் பேர் இடம் பெயர்ந்து பதுங்கி வாழ்­கின்­ற­னர். இப்­போது ஒரு தக­வல் வெளி­வந்­துள்­ளது. மணிப்­பூரை சேர்ந்த 230 பேர் மியான்­மர் காடு­க­ளில் தவிக்­கின்­ற­னர்.

கவலைப்படாத பிரதமர்!

மணிப்­பூர் விவ­கா­ரத்­தில் பிர­த­ம­ரின் விளக்­கம் தேவை என்­பதே எதிர்க்­கட்­சி­க­ளின் ஒரு­மித்த கோரிக்­கை­யாக இருந்­தது. ஆனால் பிர­த­மர் மோடி 2 நிமி­டம் மட்­டுமே மணிப்­பூர் பற்றி பேசி உள்­ளார். பெண்­கள் அவ­மா­னப்­ப­டுத்­தப்­பட்­டது பற்றி விளக்­கம் அளிக்­க­வில்லை. மணிப்­பூர் பிரச்­சினை முடிந்து விட்­டது போல நாடா­ளு­மன்­றத்­தில் ஒன்­றிய அரசு விளக்­கம் அளிக்­கி­றது. மணிப்­பூர் பற்றி பிர­த­மர் மோடி ஒரு ­நா­ளும் கவ­லைப்­ப­ட­வில்லை. தி.மு.க.வை கண்டு பிர­த­மர் மோடி, உள் துறை அமைச்­சர் அமித்ஷா அச்­சம் அடைந்­துள்­ள­னர்.

நாடா­ளு­மன்­றத்­தில் விவா­தம் நடத்­தா­மல் மசோ­தாக்­கள் நிறை­ வேற்­றப்­ப­டு­கின்­றன. பல குற்­றங்­க­ளுக்கு தண்­ட­னை­கள் குறைப்பு, 42 சட்­டங்­க­ளில் திருத்­தங்­கள் கொண்­டு­வந்­துள்­ளது பா.ஜ.க. அரசு. எதிர்க்­கட்­சி­களை விமர்­சிக்­கும் அர­சாக மட்­டுமே பா.ஜ.க. செயல்­பட்டு வரு­கி­றது. மணிப்­பூர் கல­வ­ரத்­தில் பலர் உயி­ரி­ழந்­துள்­ள­னர், பலர் காடு­க­ளில் பதுங்கி வாழ்ந்து வரு­கின்­ற­னர். மணிப்­பூர் கல­வ­ரம் குறித்து நாடா­ளு­மன்­றத்­தில் விளக்­கம் அளிக்­கா­மல் பொறுப்­பற்ற முறை­யில் பிர­த­மர் மோடி செயல்­ப­டு­ கி­றார். நாட்­டின் பிரச்­சி­னை­களை தீர்க்­கா­மல், அலட்­சி­ய­மாக செயல்­பட்டு வரு­கி­றார் பிர­த­மர் மோடி.

பா.ஜ.க.வுக்கு அச்சம்!

உள்­துறை அமைச்­சர் அமித்ஷா மணிப்­பூர் சென்­று­வந்­தால் பிரச்சி்னை முடிந்­து­விட்­ட­தாக ஒன்­றிய அரசு கூறு­ கி­றது. இந்­தியா கூட்­டணி பெயரை கேட்­டாலே பா.ஜ.க. அர­சுக்கு கோபம் வரு­கி­றது. நாடா­ளு­மன்­றத்தை முடக்க வேண்­டும் என்­பது எங்­கள் நோக்­கம் அல்ல; மணிப்­பூர் கொடூ­ரம் குறித்து பிர­த­மர் மோடி பேச வேண்­டும் என்­ப­தற்­கா­கவே குரல் எழுப்­பி­னோம். மாநில கட்­சி­யான தி.மு.க. மீது நாடா­ளு­மன்­றத்­தில் பிர­த­மர், உள்­துறை அமைச்­சர் விமர்­ச­னம் வைக்­கி­றார்­கள் என்­றால் அவர்­க­ளுக்கு அச்­சம் இங்­கு­தான் உள்­ளது. தமிழ்­நாட்­டில் அவர்­கள் நினைத்­ததை சாதிக்க முடி­யாது என்­பதை கடந்த காலத்­தில் நிரூ­பித்­துள்­ளோம், வரும் தேர்­த­லி­லும் நிரூ­பிப்­போம்.

இவ்­வாறு திருச்சி சிவா எம்.பி. பேட்டி­ய­ளித்­தார்.

The post ”தி.மு.க.வை மோடி­யும் – பா.ஜ.க.வின­ரும் குறி­வைக்­கி­றார்­கள்..!” திருச்சி என்.சிவா first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%81-%e0%ae%95-%e0%ae%b5%e0%af%88-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%9c-%e0%ae%95/feed/ 0
”அன்பு சகோதரி குஷ்பு அவர்களுக்கு வணக்கம்..!” ஜனநாயக மாதர் சங்கம் https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%9a%e0%ae%95%e0%af%8b%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%af%81%e0%ae%b7%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2581-%25e0%25ae%259a%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%25a4%25e0%25ae%25b0%25e0%25ae%25bf-%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25b7%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2581-%25e0%25ae%2585%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25af%258d https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%9a%e0%ae%95%e0%af%8b%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%af%81%e0%ae%b7%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/#respond Tue, 20 Jun 2023 04:39:42 +0000 https://madrasmurasu.com/?p=4212 அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மாநிலப் பொதுச் செயலாளர் ஏ.ராதிகா அறிக்கை:  அன்பு சகோதரி குஷ்பு அவர்களுக்கு வணக்கம்… உங்கள் ஊடகப் பேட்டியை பார்த்தேன். தங்களை மிக மோசமாக விமர்சித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் பேச்சாளர் சிவாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய உங்கள் கோபம் மிக நியாயமானது. பொதுவெளியில் இயங்கும் பெண்களை அவதூறாகப் பேசுவதையோ இழிவுபடுத்துவதையோ ஒருபோதும் அனுமதிக்கக் முடியாது. அப்படிப்பட்ட கயவர்களுக்கு சட்ட ரீதியாக அவர் சார்ந்திருக்கிற கட்சியின் ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் […]

The post ”அன்பு சகோதரி குஷ்பு அவர்களுக்கு வணக்கம்..!” ஜனநாயக மாதர் சங்கம் first appeared on Madras Murasu.

]]>
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மாநிலப் பொதுச் செயலாளர் ஏ.ராதிகா அறிக்கை: 

அன்பு சகோதரி குஷ்பு அவர்களுக்கு வணக்கம்…

உங்கள் ஊடகப் பேட்டியை பார்த்தேன். தங்களை மிக மோசமாக விமர்சித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் பேச்சாளர் சிவாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய உங்கள் கோபம் மிக நியாயமானது.

பொதுவெளியில் இயங்கும் பெண்களை அவதூறாகப் பேசுவதையோ இழிவுபடுத்துவதையோ ஒருபோதும் அனுமதிக்கக் முடியாது. அப்படிப்பட்ட கயவர்களுக்கு சட்ட ரீதியாக அவர் சார்ந்திருக்கிற கட்சியின் ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மாதர் சங்கமும் வலியுறுத்தி வருகிறது.

இன்னும் கூட ஒரு விஷயத்தை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
கற்பு குறித்து நீங்கள் தெரிவித்த ஒரு கருத்திற்காக தமிழகம் முழுவதும் சங்கிகள் குறிப்பாக பாஜக தலைவர் எச்.ராஜா உங்கள் மீது சேற்றை வாரி இறைத்தது போல விஷமத்தை கக்கியபோது அதற்கு எதிராக முதல் எதிர்ப்புக்குரல் கொடுத்ததும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்.

துரதிஷ்டம் பாருங்கள் இப்போது அக்கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கிறீர்கள்.
ஆனால் அன்றும் இன்றும் என்றும் பெண்களை இழிவுபடுத்த ஆபாசமாக பேசும் எந்த ஒரு செயலையும் யார் செய்தாலும் எந்த சமரமும் இன்றி முதல் எதிர்ப்புக் குரலை கொடுப்பது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் என்பதை நாடறியும்.
ஆனால் உங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு உடனடியாக எதிர்வினையாற்றிய அதேவேகத்தில் உங்களிடம் சில கேள்விகளை முன் வைக்க விரும்புகிறேன்.

சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் பயிலும் மாணவிகள் பேராசிரியர் ஹரிபத்மன் என்பவரால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்ட செய்தி தமிழகத்தை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய போது அமைதியாகவே கடந்து போனீர்கள்.
டெல்லியில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனைகள் நீங்கள் பொறுப்பு வகிக்கும் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூசன் சரண் சிங் என்ற கயவனால் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் பெண்கள் அமைப்புகள் போராட்டத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்து இருந்தபோதும் நீங்கள் இது குறித்து பேச மறுத்துவிட்டீர்கள்.

தேசிய பெண்கள் ஆணையத்தின் உறுப்பினர் என்ற முறையில் தமிழகத்தில் முன்னெடுத்த பெண்கள் நலன் காக்கும் நடவடிக்கைகள் என்ன?

மேற்கண்ட கேள்விகளுக்கு எல்லாம் உங்களிடம் பதில் இருக்காது என்பது நன்கு தெரியும்.

ஏனென்றால் நீங்கள் சாந்திருக்கும் பாஜக எந்தக் காலத்திலும் நியாயத்தின் பக்கம் நிற்கும் கட்சி அல்ல.

எல்லாவற்றிலும் சுய லாபம் தேடும் பாஜகவில் அங்கம் வகிக்கும் உங்களைப் போன்றோரின் நாடக அரசியலை மக்கள் நன்கு அடையாளம் கண்டு வைத்துள்ளனர்.

The post ”அன்பு சகோதரி குஷ்பு அவர்களுக்கு வணக்கம்..!” ஜனநாயக மாதர் சங்கம் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%9a%e0%ae%95%e0%af%8b%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%af%81%e0%ae%b7%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/feed/ 0
’’உலகமே இப்போது இந்தியா சொல்வதைக் உன்னிப்பாக கவனிக்கிறது..!’’ பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் https://madrasmurasu.com/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%ae%e0%af%87-%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2589%25e0%25ae%25b2%25e0%25ae%2595%25e0%25ae%25ae%25e0%25af%2587-%25e0%25ae%2587%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%258b%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%2587%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25be https://madrasmurasu.com/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%ae%e0%af%87-%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/#respond Mon, 19 Jun 2023 11:15:57 +0000 https://madrasmurasu.com/?p=4183 லக்னோவில் ஜூன் 18, 2023 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் யுபிஎஸ்சி குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்றவர்களிடையே  உரையாற்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: வளர்ந்த இந்தியா என்ற எண்ணம் இப்போது வெறும் கனவு அல்ல, அது பிரதமரின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் நிஜமாகி வருகிறது. இப்போது அமெரிக்கா போன்ற ஒரு வல்லரசு, இந்தியப் பிரதமரை வரவேற்கவும், விருந்தளிக்கவும் விடாமுயற்சியுடன் தயாராகி வருவதாகவும், நாட்டின் வெற்றிக் கதையைப் பற்றி வெளிநாட்டு ஊடகங்கள் பேசுகின்றன. […]

The post ’’உலகமே இப்போது இந்தியா சொல்வதைக் உன்னிப்பாக கவனிக்கிறது..!’’ பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் first appeared on Madras Murasu.

]]>
லக்னோவில் ஜூன் 18, 2023 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் யுபிஎஸ்சி குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்றவர்களிடையே  உரையாற்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

வளர்ந்த இந்தியா என்ற எண்ணம் இப்போது வெறும் கனவு அல்ல, அது பிரதமரின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் நிஜமாகி வருகிறது. இப்போது அமெரிக்கா போன்ற ஒரு வல்லரசு, இந்தியப் பிரதமரை வரவேற்கவும், விருந்தளிக்கவும் விடாமுயற்சியுடன் தயாராகி வருவதாகவும், நாட்டின் வெற்றிக் கதையைப் பற்றி வெளிநாட்டு ஊடகங்கள் பேசுகின்றன.

2047 ஆம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை எடுத்துரைத்த பாதுகாப்பு அமைச்சர் அத்தகைய தேசத்தைக் கட்டியெழுப்புவதில் இளம் அரசு ஊழியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. அரசு ஊழியர்கள் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதன் மூலமும், அவர்களுடன் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலமும் மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும்.

ஒரு காலத்தில் சமூகத்தில் அதிகார கலாச்சாரம் இருந்தது, இப்போது நியாயம் செய்தல் கலாச்சாரம் அதிகார கலாச்சாரத்தை முந்தியுள்ளது, ஏனெனில் குடிமக்கள் கல்வி மற்றும் புதிய தகவல்தொடர்பு வழிமுறைகளின் வருகையுடன் அதிக விழிப்புணர்வைக் கொண்டுள்ளனர்.

உங்கள் பகுதியில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுடன் நெருக்கமாக பணியாற்ற வேண்டும். இளம் அரசு ஊழியர்கள் மக்கள் நலனுக்காக எந்த முடிவையும் எடுக்கும்போது சமூகத்தின் கடைசி நபரைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

The post ’’உலகமே இப்போது இந்தியா சொல்வதைக் உன்னிப்பாக கவனிக்கிறது..!’’ பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%ae%e0%af%87-%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/feed/ 0
”எங்கள் குரல் துணிச்சலாக ஒலிக்கும்..! அண்ணாமலை https://madrasmurasu.com/%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%258e%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25b0%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25a3%25e0%25ae%25bf%25e0%25ae%259a%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25b2%25e0%25ae%25be%25e0%25ae%2595 https://madrasmurasu.com/%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95/#respond Sat, 17 Jun 2023 05:08:33 +0000 https://madrasmurasu.com/?p=4034 தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை: தமிழக பாஜக மாநிலச் செயலாளர் SG சூர்யா, நேற்று இரவோடு இரவாக கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கதக்கது. சமூகப் பிரச்சினைகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியின் இரட்டை வேட நிலைப்பாட்டினை விமர்சித்ததற்காகக் கைது செய்திருக்கிறார்கள். விமர்சனங்களை கருத்தால் எதிர்கொள்ளத் திறனற்ற திமுக, எதிர்க்கருத்துக்கள் கூறுபவர்களைக் கைது செய்து, அவர்கள் குரலை முடக்கப் பார்க்கிறது. அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பவர்களை எல்லாம் கைது செய்யும் ஜனநாயக விரோதப் போக்கு தமிழகத்தில் […]

The post ”எங்கள் குரல் துணிச்சலாக ஒலிக்கும்..! அண்ணாமலை first appeared on Madras Murasu.

]]>
தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை:

தமிழக பாஜக மாநிலச் செயலாளர் SG சூர்யா, நேற்று இரவோடு இரவாக கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கதக்கது. சமூகப் பிரச்சினைகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியின் இரட்டை வேட நிலைப்பாட்டினை விமர்சித்ததற்காகக் கைது செய்திருக்கிறார்கள்.

விமர்சனங்களை கருத்தால் எதிர்கொள்ளத் திறனற்ற திமுக, எதிர்க்கருத்துக்கள் கூறுபவர்களைக் கைது செய்து, அவர்கள் குரலை முடக்கப் பார்க்கிறது. அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பவர்களை எல்லாம் கைது செய்யும் ஜனநாயக விரோதப் போக்கு தமிழகத்தில் நிலவுகிறது.

கருத்துச் சுதந்திரத்தின் காவலர்கள் போல் தங்களைக் காட்டிக் கொண்டு, எதிர்க் குரல்களை எல்லாம் நசுக்க நினைக்கும் முயற்சி நீண்ட நாளைக்குச் செல்லாது என்பதை திமுக அரசு நினைவில் கொள்ள வேண்டும்.

விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் இது போல தொடர்ந்து பாஜக தொண்டர்களைக் கைது செய்வது எதேச்சதிகாரப் போக்கு பாஜக தொண்டர்களை, இது போன்ற அடக்குமுறைகளால் முடக்கி விட முடியாது. எங்கள் குரல், மக்களுக்காக எப்போதும் துணிச்சலாக ஒலித்துக்கொண்டிருக்கும்.

The post ”எங்கள் குரல் துணிச்சலாக ஒலிக்கும்..! அண்ணாமலை first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95/feed/ 0
”இது தான் பாஜக..!” சு. வெங்கடேசன் எம்.பி., https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95-%e0%ae%9a%e0%af%81-%e0%ae%b5%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%25a4%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%259c%25e0%25ae%2595-%25e0%25ae%259a%25e0%25af%2581-%25e0%25ae%25b5%25e0%25af%2586%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%259f%25e0%25af%2587 https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95-%e0%ae%9a%e0%af%81-%e0%ae%b5%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%87/#respond Mon, 12 Jun 2023 11:14:34 +0000 https://madrasmurasu.com/?p=3765 மதுரை மார்க்சிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் அறிக்கை: தமிழர் எதிர்காலத்தில் பிரதமராக வருவார் என்று கூறும் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களே! உங்கள் அமைச்சகம் இந்தியை விதிகளை மீறி தமிழ்நாட்டில் திணிப்பதை முதலில் நிறுத்துங்கள். உங்கள் பொறுப்பில் உள்ள அலுவல் மொழி அமலாக்கம் எப்படி நடைபெறுகிறது பாருங்கள்! அரசு நிறுவனமான நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை அலுவல் மொழி விதிகள் விதி எண் 5 ஐ 100 % அமலாக்கச் சொல்லி இந்தி […]

The post ”இது தான் பாஜக..!” சு. வெங்கடேசன் எம்.பி., first appeared on Madras Murasu.

]]>
மதுரை மார்க்சிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் அறிக்கை:

தமிழர் எதிர்காலத்தில் பிரதமராக வருவார் என்று கூறும் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களே!

உங்கள் அமைச்சகம் இந்தியை விதிகளை மீறி தமிழ்நாட்டில் திணிப்பதை முதலில் நிறுத்துங்கள்.

உங்கள் பொறுப்பில் உள்ள அலுவல் மொழி அமலாக்கம் எப்படி நடைபெறுகிறது பாருங்கள்!

அரசு நிறுவனமான நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை அலுவல் மொழி விதிகள் விதி எண் 5 ஐ 100 % அமலாக்கச் சொல்லி இந்தி பயன்பாட்டை வலியுறுத்துகிறது.

ஆனால் அலுவல் மொழி விதிகள் பிரிவு 1 (ii) மிகத் தெளிவாக தமிழ்நாட்டிற்கு அது பொருந்தாது என்று கூறுவதை தாண்டி 5 வது பிரிவை பேசும் கபடம் அரங்கேறுகிறது.

G.S.R 1052 – In exercise of the powers conferred by section 8, read with sub-section(4) of section 3 of the Official Languages Act, 1963 (19 of 1963), the Central Government hereby makes the following rules, namely ;
1) Short title, extent and commencement –
i) These rules may be called the Official Languages (Use for Official Purposes of the Union) Rules, 1976.
ii) They shall extend to the whole of India, except the State of Tamilnadu.
iii) They shall come into force on the date of their publication in the Official Gazette.

தமிழைக் காவு கொடுத்து விட்டு தமிழர் பிரதமர் ஆவார் என்று உங்கள் ஆசை வார்த்தைகளுக்கு தமிழை நேசிக்கிற ஒரு தமிழர் கூட ஏமாற மாட்டார்.

முதலில் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவன அதிகாரிகளுக்கும், உங்கள் அலுவல் மொழி அமலாக்க குழுவிற்கும் ஒன்றை சொல்லுங்கள்.

“அலுவல் மொழி விதி 1 (ii) காட்டி தமிழ்நாட்டிற்குள் நுழையாதீர்கள்” என்று.
தமிழ்நாட்டில் உள்ள இந்தி அமலாக்க செல்களை கலையுங்கள்.

இவ்வாறு சு.வெங்கடேசன் எம்.பி., கூறியுள்ளார்.

The post ”இது தான் பாஜக..!” சு. வெங்கடேசன் எம்.பி., first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95-%e0%ae%9a%e0%af%81-%e0%ae%b5%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%87/feed/ 0
‘’நான் கேட்ட கேள்விக்கு எதற்கும் பதில் தரவில்லை..!’’ சேலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி https://madrasmurasu.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%95%e0%af%87%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%2587%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f-%25e0%25ae%2595%25e0%25af%2587%25e0%25ae%25b3%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581-%25e0%25ae%258e https://madrasmurasu.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%95%e0%af%87%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e/#respond Mon, 12 Jun 2023 06:52:26 +0000 https://madrasmurasu.com/?p=3740 முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாய பெருமக்கள் குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணையிலிருந்து இன்று (12.6.2023) தண்ணீர் திறந்து வைத்து, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி. தமிழ்நாடு அரசு இன்று அறிவித்த குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தினால், நடப்பாண்டில் ஐந்து இலட்சம் ஏக்கருக்கும் அதிகமாக குறுவை நெல் சாகுபடி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உழவர்கள் மற்றும் வேளாண் தொழிலாளர் நலன் காக்க நம்முடைய அரசு எந்நாளும் தொடர்ந்து பாடுபடும் என்று மீண்டும் ஒருமுறை […]

The post ‘’நான் கேட்ட கேள்விக்கு எதற்கும் பதில் தரவில்லை..!’’ சேலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி first appeared on Madras Murasu.

]]>
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாய பெருமக்கள் குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணையிலிருந்து இன்று (12.6.2023) தண்ணீர் திறந்து வைத்து, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி.

தமிழ்நாடு அரசு இன்று அறிவித்த குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தினால், நடப்பாண்டில் ஐந்து இலட்சம் ஏக்கருக்கும் அதிகமாக குறுவை நெல் சாகுபடி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உழவர்கள் மற்றும் வேளாண் தொழிலாளர் நலன் காக்க நம்முடைய அரசு எந்நாளும் தொடர்ந்து பாடுபடும் என்று மீண்டும் ஒருமுறை உங்கள் மூலமாக நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

கேள்வி: அதிமுக கொண்டுவந்த திட்டங்களுக்கு திமுக பெயர் வைக்கிறது என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி சொல்கிறாரே?

முதலமைச்சர்: தொடர்ந்து நாங்கள் இதற்கு விளக்கம் சொல்லிக்கொண்டே இருக்கிறோம். இருந்தாலும் இப்போதும் கேட்கிறீர்கள். இதுமாதிரி நடந்து கொள்வது அதிமுக-வின் கலை, அவர்கள் பாணி தான் இது. சென்னையில் திமுக ஆட்சியில் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது கோயம்பேடு பேருந்து நிலையத்தை ஆசியாவிலேயே ஒரு மிகப்பெரிய பேருந்து நிலையமாக கட்டினோம். ஆனால் கட்டி முடித்து திறப்பு விழாவிற்கு முன்பு ஆட்சி மாற்றம். ஜெயலலிதா அம்மையார் அவர்களது பெயரை வைத்துக்கொண்டு அதை திறந்து வைத்தார்கள், நாங்கள் அதற்குக் கவலைப்படவில்லை.

அதே மாதிரி ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தலைமைச் செயலகத்தை திமுக ஆட்சியில்தான் புதிதாக கட்டினோம். அதை ஆட்சிக்கு வந்து அதிமுக என்ன செய்தது? அதை அரசு மருத்துவமனையாக மாற்றி அரசியல் செய்தது. சென்னையில் இன்றைக்கு ஓடிக்கொண்டிருக்கக்கூடிய மெட்ரோ ரயில் திட்டத்தை நாங்கள் தான் தொடங்கி வைத்தோம். கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது நான் துணை முதலமைச்சராக இருந்தேன். நானே ஜப்பான் நாட்டிற்குச் சென்று அங்கே நிதி உதவியைப் பெற்று அதன் மூலமாகத்தான் ஒன்றிய அரசினுடைய உதவியைப் பெற்று அதை நாம் தொடங்கி வைத்தோம். அன்றைக்கு அதை எதிர்த்தவர்கள் யார் என்று கேட்டீர்களானால், மறைந்த அம்மையார் ஜெயலலிதா . முதலமைச்சராக இருந்தபோது அதை அவர்கள் எதிர்த்தார்கள், மெட்ரோ தேவையில்லை என்று வெளிப்படையாகவே சொன்னார்கள். பின்னர் அதன் திறப்புவிழாவின் போது தன்னுடைய பெயரை பொறித்துக்கொண்டு கல்வெட்டையும் திறந்து வைத்தார்கள்.

அதே மாதிரி கோட்டூர்புரத்தில் இருக்கக்கூடிய பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை திமுக ஆட்சியில்தான் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோதுதான் கட்டித் திறந்து வைத்தார். ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு அதை பாழ்படுத்தவேண்டும் என்று அதை எப்படியெல்லாம் சீரழித்தார்கள் என்று உங்களுக்கெல்லாம் தெரியும். அதற்குப் பிறகு நீதிமன்றத்திற்குச் சென்று வாதாடி, போராடி அதை நிலைநாட்டி இருக்கிறோம். இப்படியே சொல்லிக்கொண்டு சென்றால், அந்தப் பட்டியல் இன்னும் போகும். இந்த வரலாறுகள் எல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு தெரியாது என்று நினைக்கிறேன். இதையெல்லாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

அதேபோல, அம்மா உணவகம். ஆட்சிக்கு வந்தவுடன் அதை மூடிவிடுவார்கள், மூடிவிடுவார்கள் என்று திட்டமிட்டு ஒரு பொய் பிரச்சாரமே செய்தார்கள். அதை இதுவரைக்கும் மூடவில்லை, அது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
இன்னொன்று சொல்ல வேண்டுமென்றால், பள்ளிக்கூடத்திற்கு செல்லும் பிள்ளைகளின் புத்தகப்பையில் அவர்கள் ஆட்சியில் அம்மையார் ஜெயலலிதா அவர்களின் படமும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி படமும் போட்டு அன்றைக்கு மாணவர்களுக்கெல்லாம் கொடுத்தார்கள். அதில் நாம் ஆட்சிக்கு வந்த நேரத்தில் சிறிது மீதம் வந்திருந்தது. அந்த நேரத்தில் அரசு அதிகாரிகளெல்லாம் என்னிடத்தில் வந்து கேட்டார்கள், இதை மாற்றி விடலாம். ஏனென்றால், ஏற்கனவே இருந்த முதலமைச்சர் படம் இருக்கிறது, எனவே உங்கள் படத்தை போடுகிறோம் என்று சொன்னார்கள். யார் படமும் போடவேண்டாம், இருப்பது அப்படியே இருக்கட்டும். இதை மாற்றினீர்கள் என்றால், பல கோடி ரூபாய் இழப்பு வரும், அந்த இழப்பை அரசு ஏற்றுக் கொள்ளாது, எனவே அப்படியே இருக்கட்டும் என்று சொன்னவன்தான் நான்.
எனவே இதையெல்லாம், இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கக்கூடிய எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு நான் நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

கேள்வி: அமித் ஷா தமிழ்நாடு வந்தார், இரண்டு முறை தமிழர் ஒருவர் பிரதமர் ஆவதை திமுக தான் தடுத்தது என்று கூறியிருக்கிறாரே…

முதலமைச்சர்: அதை வெளிப்படையாக அவர் சொன்னாரென்றால், அதற்கு உரிய விளக்கத்தை நம்மால் சொல்லமுடியும். அதனால் அதற்கு விளக்கமாக இப்போது பதில் சொல்ல முடியாது. இருந்தாலும், தமிழரை பிரதமராக ஆக்கப் போகிறேன் என்று சொன்னது உள்ளபடியே மகிழ்ச்சியாக இருக்கிறது. மோடி மேல் என்ன கோபம் என்று தெரியவில்லை. 2024-ல் பாஜக-வின் பிரதமர் வேட்பாளராக தமிழர் வரவேண்டும் என்ற எண்ணம் இருந்தால், தமிழிசை இருக்கிறார்கள், முருகன் இருக்கிறார், ஒருவேளை அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.

கேள்வி: கர்நாடக அரசு மேதாது அணை கட்டுவதற்கு மும்முரமாக இருக்கிறார்கள், அதற்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

முதலமைச்சர்: அதை எதிர்ப்பதில் நாங்களும் மும்முரமாக இருக்கிறோம்.

கேள்வி: கடந்த 50 ஆண்டு காலமாக நிலுவையில் உள்ள சரபங்கா திட்டத்தை செயல்படுத்துவது குறித்து…
முதலமைச்சர் : அது ஆய்வில் இருக்கிறது.

கேள்வி: தமிழ்நாட்டிற்கு ஏராளமான திட்டங்களை பாஜக அரசு கொடுத்திருப்பதாக அமித் ஷா ஒரு பட்டியலை வெளியிட்டிருக்கிறார்…
முதலமைச்சர்: நான் சேலத்தில் நடந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் தெளிவாக பேசியிருக்கிறேன். அதாவது, பாஜக ஆட்சி இருந்தபோது, எந்த சிறப்புத் திட்டமும் இந்த ஒன்பது வருடங்களில் தமிழ்நாட்டிற்கு வரவில்லை. ஆனால் ஏற்கனவே காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருந்த திமுக அப்போது ஆட்சியில் இருந்த திரு. மன்மோகன் சிங் தலைமையில் இருந்த ஆட்சியில் என்னென்ன சிறப்புத் திட்டங்கள் வந்தது என்பதை பட்டியல் போட்டு நான் காண்பித்து இருக்கிறேன். அவர் அதைப் படிக்கவில்லையா? இல்லை அதைப் படித்து அதை யாரும் எடுத்துச் சொல்லவில்லையா? என்பதுதான் எனக்கு சந்தேகம். பாஜக-வினுடைய ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் என்ன செய்திருக்கிறது என்று கேள்வி கேட்டேன். அந்தக் கேள்விக்கு எந்த பதிலும் கிடையாது.

ஆனால், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், அன்றைக்கு தமிழ்நாட்டிற்குக் கிடைத்ததை சொல்ல வேண்டுமென்றால், சென்னைக்கு புதிதாக கிடைத்த மெட்ரோ ரயில், தமிழுக்கு செம்மொழி தகுதி, தமிழ் செம்மொழி உயராய்வு நிறுவனம், சேது சமுத்திர திட்டம், ஒரகடத்தில் தேசிய மோட்டார் வாகன சோதனை ஆராய்ச்சி மையம், தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம், சேலத்தில் புதிய ரயில்வே கோட்டம், சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை, நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், ஒகேனக்கல்லில் கூட்டுக் குடிநீர்த் திட்டம், சென்னைக்கு அருகில் கடல்சார் தேசிய பல்கலைக்கழகம், திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம், கரூர், ஈரோடு, சேலம் ஆகிய மூன்று இடங்களில் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர் தொழில்நுட்ப ஜவுளிப் பூங்கா. இவையெல்லாம் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தான் வந்தது.

இதேபோல தமிழ்நாட்டிற்கு என்ன சிறப்புக்களை கொண்டு வந்திருக்கிறது என்பதுதான் என் கேள்வி. எனவே எந்தத் திட்டத்திற்கும் தொடர்ச்சியாக நிதி ஒதுக்கீடு செய்வதை நான் கேட்கவில்லை. அனைத்து மாநிலத்திற்கும் செய்யப்படும் பொதுவான இடத்தில் தமிழ்நாடு இணைக்கப்பட்டிருப்பதைப் பற்றி நான் கேட்கவில்லை.

இன்றைக்கு ஜிஎஸ்டி-யில் ஒவ்வொரு மாநிலமும் ஒன்றிய அரசிற்கு நிதி கொடுத்துக் கொண்டிருக்கிறது. அந்த ஜிஎஸ்டி-யில் தமிழ்நாட்டிலிருந்து அதிகமாகக் கொடுத்திருக்கிறோம். ஆனால் தமிழ்நாட்டிற்குத் தான் இன்றைக்கு ஒன்றிய அரசு நிதி கொடுப்பதில் மிகவும் குறைவாக கொடுத்துக் கொண்டிருக்கிறது, மற்ற மாநிலங்களுக்கெல்லாம் அதிகமாக கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதைத்தான் அடிப்படையாக வைத்துக் கேட்டேன்.

அதேபோல, மதுரையில் 1200 கோடி ரூபாய் மதிப்பில் பிஜேபி ஆட்சிக்கு வந்தவுடன் அன்றைக்கு நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி பாராளுமன்றத்தில் அதற்கு உறுதி கொடுத்தார், அறிவித்தார்கள். அது என்ன ஆகியது? பிரதமர் வந்து அடிக்கல் நாட்டினார். அதற்குப் பின் பலமுறை அமித் ஷா தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார்கள். வந்தபோது, பணி 50 சதவீதம் முடிந்துவிட்டது, 75 சதவீதம் முடிந்துவிட்டது என்று சொல்லிவிட்டுச் சென்றாரே தவிர இதுவரைக்கும் எந்தப் பணியும் நடைபெறவில்லை என்பதுதான் என்னுடைய குற்றச்சாட்டு. அதையெல்லாம் மூடி மறைத்து அவர் பேசிவிட்டுச் சென்றிருக்கிறாரே தவிர, நான் கேட்ட கேள்விக்கு எதற்கும் பதில் தரவில்லை.

கேள்வி: டாஸ்மாக்கில் பத்து ரூபாய் ஊழல் புகார் குறித்து…
முதலமைச்சர்: அதெல்லாம் திட்டமிட்டு செய்யக்கூடிய பிரச்சாரங்கள்.

கேள்வி: எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவராததற்கு திமுக தான் பதில் சொல்ல வேண்டும் என்று அமித் ஷா சொல்லியிருக்கிறாரே?
முதலமைச்சர்: திமுக ஆட்சியில் இருந்தபோது, எய்ம்ஸ் என்று ஒரு மருத்துவமனை தேவையே படவில்லை. ஏனென்றால் நம்முடைய மருத்துவக் கட்டமைப்புகள் அதிக அளவில் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது. இருந்தாலும், இதை அறிவித்தது யார்? திமுக-வா அறிவித்தது, அறிவித்தது ஒன்றிய அரசு. அவர்கள் தான் இதைச் செய்ய வேண்டும். இந்தக் கேள்வியைக் அவர் கேட்பதே ஒரு பொறுப்புள்ள உள்துறை அமைச்சருக்கு அழகல்ல.

கேள்வி: திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஊழல் பெரிய அளவில் நடந்தது என்று சொல்கிறார்கள்…
முதலமைச்சர்: ரஃபேல் ஊழல், அதானி ஊழல். இன்றைக்கு இந்தியாவே தலைகுனிந்து நிற்கிறது. முதலில் அதற்கு பதில் சொல்லட்டும், அதற்குப் பின் இதைப் பேசுவோம்.

கேள்வி: அத்திக்கடவு – அவினாசி திட்டம் எந்த அளவுக்கு இருக்கிறது.
முதலமைச்சர்: முடியக்கூடிய நிலையில் இருக்கிறது, விரைவில் திறக்கப்படும்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்தார்.

The post ‘’நான் கேட்ட கேள்விக்கு எதற்கும் பதில் தரவில்லை..!’’ சேலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%95%e0%af%87%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e/feed/ 0