acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ”பயங்கரவாதத்திற்கு எதிராக சமரசமற்ற கொள்கையை இந்தியா கடைப்பிடிக்கிறது..!” உள்துறை அமைச்சர் அமித் ஷா first appeared on Madras Murasu.
]]>ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் இன்று நடைபெற்ற 75-வது ஆர்ஆர் தொகுப்பு ஐபிஎஸ் பயிற்சி நிறைவு அணிவகுப்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் இன்று (27.10.2023) நடைபெற்ற 75-வது ஆர்.ஆர் தொகுப்பு ஐபிஎஸ் அதிகாரிகளின் பயிற்சி நிறைவு அணிவகுப்பில் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநர், மத்திய உள்துறை செயலாளர், உளவுத் துறை இயக்குநர், சிபிஐ இயக்குநர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அமித் ஷா பேசுகையில், 75-வது ஆர் ஆர் தொகுப்பு பயிற்சி அதிகாரிகளுக்கு இன்று மிகவும் முக்கியமான நாள் என்று கூறினார். நாட்டின் சுதந்திரத்தின் நூற்றாண்டின் போது நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பின் பொறுப்பு அவர்களின் கைகளில் இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் அமிர்தகால தீர்மானத்தை நிறைவேற்றும் திசையில் 75 ஆர்ஆர் தொகுப்பு பயிற்சி அதிகாரிகள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று அவர் கூறினார்.
நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல சர்தார் படேல் மிகவும் சிந்தனையுடன் இந்த அகாடமிக்கு அடித்தளம் அமைத்தார் என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். நமது நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை நிறைவு செய்து அமிர்தகால காலத்திற்குள் நுழைந்துள்ள நிலையில் தீர்மானங்களை எடுத்துக்கொண்டு அவற்றைச் சாதனைகளாக மாற்ற பிரதமர் அழைப்பு விடுத்துள்ளதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
பூடான், மாலத்தீவு, மொரீஷியஸ், நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 20 வெளிநாட்டு அதிகாரிகள் உட்பட 175 பேர் அடிப்படை படிப்பை முடித்துவிட்டு இன்று இங்கிருந்து தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இந்த 175 பேரில் 34 பேர் பெண் அதிகாரிகள் என்று அவர் கூறினார்.
வரும் நாட்களில் உள்நாட்டு பாதுகாப்பைக் கையாள்வதில் தொழில்நுட்பம் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். இந்திய காவல்துறையை தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உலகிலேயே மிகவும் சிறந்ததாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

இன்று ஒரு பெண் அதிகாரி சிறந்த பயிற்சி அதிகாரிக்கான விருதைப் பெற்றுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக அமித் ஷா தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், பெண்கள் தலைமையிலான வளர்ச்சியில் நாடு வேகமாக முன்னேறி வருகிறது என்று அவர் கூறினார். நாட்டின் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்வதற்காக மோடி அரசு சமீபத்தில் 33 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
பயங்கரவாதம், இடதுசாரி தீவிரவாதம் மற்றும் நக்ஸலைட் வன்முறை போன்ற சவால்களை நாடு நீண்ட காலமாக எதிர்கொண்டு வருவதாகவும், ஆனால் கடந்த 10 ஆண்டுகளில், நமது துணிச்சலான காவல்துறையினரின் முயற்சியால், அவற்றைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி கிடைத்துள்ளது என்றும் திரு அமித் ஷா கூறினார்.

நமது சவால்கள் இன்னும் முடிவடையவில்லை என்று கூறிய அவர், திட்டமிட்ட குற்றங்கள், இணையதள குற்றங்கள், மாநிலங்களுக்கு இடையிலான குற்றங்கள், சர்வதேச நிதி மோசடிகளில் போன்ற பல புதிய சவால்கள் இன்று நம் முன் நிற்கின்றன என்றும் அவர் கூறினார். போதைப்பொருள் கடத்தல், கிரிப்டோ கரன்சி, ஹவாலா வர்த்தகம் போன்ற சவால்களுக்கு எதிராக அதே வீரியத்துடன் நாம் போராட வேண்டும் என்று அவர் கூறினார்.
நாட்டின் ஏழைகள் மற்றும் நலிந்த பிரிவினரின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அக்கறை கொண்டவர்களாக காவல் துறை அதிகாரிகள் நடந்துகொள்ள வேண்டும் என்று அமித்ஷா கேட்டுக்கொண்டார். பணியமர்த்தப்படும் இடத்தின் உள்ளூர் மொழி, பாரம்பரியம் மற்றும் வரலாற்றை மதித்து, அந்த மக்களின் உணர்வைப் புரிந்துகொண்டு செயலாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் கடந்த 9 ஆண்டுகளில் உள்நாட்டு பாதுகாப்பு பெரிய அளவில் மேம்பட்டுள்ளது என்று அவர் கூறினார். வடகிழக்கு மாநிலங்கள், இடதுசாரி தீவிரவாத பகுதிகள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய நாட்டின் மூன்று முக்கியப் பகுதிகளில் சட்டம் ஒழுங்கு நிலைமையை மேம்படுத்துவதில் அரசு மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிராக சமரசமற்ற கொள்கையை இந்தியா கடைப்பிடிப்பதாக அவர் கூறினார். தரவுத்தளங்கள் மற்றும் பகுப்பாய்வு கருவிகளின் துணையுடன் பணியாற்றுமாறும், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துமாறும் உள்துறை அமைச்சர் அமித் ஷா காவல்துறை அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.
The post ”பயங்கரவாதத்திற்கு எதிராக சமரசமற்ற கொள்கையை இந்தியா கடைப்பிடிக்கிறது..!” உள்துறை அமைச்சர் அமித் ஷா first appeared on Madras Murasu.
]]>The post ‘தேவையற்ற ஆபத்தை தவிர்க்க வேண்டும்..!’’ கவர்னர் ஆர்.என்.ரவிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுரை first appeared on Madras Murasu.
]]>இதற்கிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று இரவு அதிரடி உத்தரவு பிறப்பித்தார். தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சரவையின் பரிந்துரையின்றி அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்கி கவர்னர் பிறப்பித்த உத்தரவு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அரசியலமைப்பு விதிகளை மீறி கவர்னர் ஆர்.என்.ரவி செயல்பட்டதாக திமுக குற்றஞ்சாட்டியுள்ளது. அதேபோல், காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்பட பல்வேறு கட்சிகளும் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியுன் தன்னிச்சையான நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தன.

அதேவேளை, ’’சட்டவிரோத பண பரிமாற்றம், வேலை வாங்கி தருவதாக பணம் பெற்றது உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழக்குகளில் குற்ற நடவடிக்கைகளை அமைச்சர் செந்தில் பாலாஜி எதிர்கொள்கிறார். அமைச்சர் பதவியை துஷ்பிரயோகம் செய்துகொண்டு விசாரணைக்கு இடையூறு செய்கிறார். செந்தில் பாலாஜி தொடர்ந்து அமைச்சரவையில் நீடித்தால் அவர் மீதான சட்ட நடவடிக்கைகள், நேர்மையான விசாரணை போன்றவற்றை கடுமையாக பாதிக்கும். இவை மாநிலத்தில் அரசியல் சாசன எந்திர முறிவை ஏற்படுத்தும். இதன் காரணமாக செந்தில்பாலாஜியை உடனடியாக அமைச்சரவையில் இருந்து நீக்குகிறேன்’’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை சட்டப்படி சந்திப்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனே தெரிவித்தார். இந்நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்த 5 மணி நேரத்திற்குள் தனது உத்தரவில் இருந்து கவர்னர் பின்வாங்கினார். உள்துறை அமைச்சகத்திடமிருந்து அறிவுத்தல் வந்ததால் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கும் முடிவை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி மீண்டும் கடிதம் எழுதினார்.

அந்தக் கடிதத்தில், ’’செந்தில்பாலாஜி பதவி நீக்க விவகாரத்தில், தேவையற்ற ஆபத்தை தவிர்க்க முடிவு எடுப்பதற்கு முன் (prudent) மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரின் கருத்து கேட்க வேண்டும் என்று உள்துறை மந்திரி எனக்கு அறிவுறுத்தியுள்ளார். ஆகையால் நான் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரின் கருத்தை கேட்க உள்ளேன். அதுவரை செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி பிறப்பித்த உத்தரவு அடுத்த உத்தரவு வரும் வரை நிறுத்திவைக்கப்படுகிறது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ‘தேவையற்ற ஆபத்தை தவிர்க்க வேண்டும்..!’’ கவர்னர் ஆர்.என்.ரவிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுரை first appeared on Madras Murasu.
]]>The post ’’பேரழிவால் ஒருவர் கூட உயிரிழக்கக் கூடாது..!’’ உள்த்துறை அமைச்சர் அமித்ஷா first appeared on Madras Murasu.
]]>மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பேரிடர் மேலாண்மை அமைச்சர்களுடன் புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் ஜூன் 13- ம் தேதி ஆலோசனை நடத்தினார். 2047-ம் ஆண்டு அடிப்படையிலான பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின்படி, பேரழிவைத் தாங்கக்கூடிய வல்லமை கொண்ட நாடாக இந்தியாவை மாற்றும் நோக்கில் நாட்டில் பேரழிவு அபாயக் குறைப்பு முறையை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் அது குறித்து விவாதிக்கும் நோக்கிலும் இன்றைய (13-06-2023) கூட்டம் நடைபெற்றது.
நாட்டில் பேரிடர் மேலாண்மை தொடர்பாக ரூ.8,000 கோடி மதிப்பிலான மூன்று முக்கியத் திட்டங்களை இக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா அறிவித்தார்:
1. மாநிலங்களில் தீயணைப்பு சேவைகளை விரிவுபடுத்தவும், நவீனப்படுத்தவும் ரூ.5,000 கோடி மதிப்பிலான திட்டம்.
2) மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத் மற்றும் புனே ஆகிய ஏழு அதிக மக்கள் தொகை கொண்ட பெருநகரங்களில் நகர்ப்புற வெள்ள அபாயத்தைக் குறைக்க ரூ.2,500 கோடி மதிப்பிலான திட்டம் செயல்படுத்தப்படும்.
3. 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிலச்சரிவு ஆபத்தைத் தணிப்பதற்காக தேசிய நிலச்சரிவு அபாய தணிப்புத் திட்டம் ரூ. 825 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும்.
ஆகிய முக்கிய அறிவிப்புகளை உள்துறை அமைச்சர் வெளியிட்டார்.

பேரழிவால் ஒருவர் கூட உயிரிழக்கக் கூடாது என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கை எனவும் இந்த இலக்கை அடைவதற்கு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் திரு அமித் ஷா கூறினார்.
கடந்த ஒன்பது ஆண்டுகளில் பேரிடர் மேலாண்மையில் பல மைல்கற்கள் எட்டப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், ஆனால் நாம் மெத்தனமாக இருக்கக் கூடாது என்று கூறினார். பேரழிவுகளின் தன்மை மாறிவிட்டதாகவும் தற்போது அவற்றின் தீவிரம் அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இவற்றைச் சமாளிக்க தயார்நிலையை நாம் மேலும் அதிகரித்து விரிவுபடுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
கொவிட் -19 தொற்றுபாதிப்பு, பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் வெற்றிகரமாக எதிர்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், நாட்டில் 220 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் இலவசமாக செலுத்தப்பட்டதையும், கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கு உணவு தானியங்கள் வழங்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த 9 ஆண்டுகளில், பேரிடர் தொடர்பான முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள், பேரிடர் தடுப்பு நடவடிக்கைகள், தயார்நிலை அடிப்படையிலான பேரிடர் மேலாண்மை ஆகியவற்றில் புதிய அணுகுமுறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அதிக ஆபத்துகளை எதிர்கொள்ளக் கூடிய 350 மாவட்டங்களில் சுமார் ஒரு லட்சம் இளைஞர் தன்னார்வலர்களை தயார்படுத்துவதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

2005-06 முதல் 2013-14 வரையிலான 9 ஆண்டுகளையும், 2014-15 முதல் 2022-23 வரையிலான 9 ஆண்டுகளையும் ஒப்பிடுகையில், மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு ஒதுக்கப்பட்ட நிதி மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். முந்தைய 9 ஆண்டுகளில் ரூ.35,858 கோடி நிதி ஒதுக்கப்பட்டதாகவும் தற்போது அது ரூ.1,04,704 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ரூ.354 கோடி செலவில் குறுஞ்செய்தி மூலம் பொது எச்சரிக்கை வழங்கும் நடைமுறையை செயல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். பேரிடர் மேலாண்மைத் துறையில் பங்களித்த தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் வெள்ளத் தடுப்பு மற்றும் மேலாண்மைக்காக வடகிழக்கு மாநிலங்களில் 271 சதுப்பு நிலங்கள் இஸ்ரோவால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். முந்தைய காலங்களில், இந்திய வானிலை ஆய்வு மையம் மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்படும் மழை மற்றும் வெள்ளம் குறித்து மூன்று நாட்கள் முன்கூட்டியே முன்னறிவிப்பு அளித்து வந்ததாக அவர் தெரிவித்தார். ஆனால், இப்போது 5 நாட்களுக்கு முன்பே அந்த முன்னறிவிப்புகள் வெளியிடப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இது தயார் நிலைக்கு கூடுதல் கால அவகாசத்தை வழங்குகிறது என்று கூறிய அவர், அடுத்த ஆண்டுக்குள் 7 நாட்களுக்கு முன்பே முன்னெச்சரிக்கைத் தகவல்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். வெள்ளம் ஏற்படக்கூடிய 13 முக்கிய நதிகளின் கரைகளில் மரக்கன்றுகளை நடுவதன் மூலம் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருநிலை மாற்ற அமைச்சகம் வெள்ளத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை எடுத்துள்ளதாக உள்துறை அமைச்சர் கூறினார்.
8 மாநிலங்களில் உள்ள 87 மாவட்டங்களில் மாவட்ட பேரிடர் மேலாண்மைத் திட்டங்களைத் தயாரிக்கும் பணிகள் இன்னும் நிலுவையில் உள்ளதாகக் கூறிய அவர் அதை விரைவில் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். மின்னல் காரணமாக உயிர்கள் எதுவும் பறிபோகாத வகையில் மாநில அரசுகள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். கடும் குளிர் மற்றும் மூடுபனி போன்றவை குறித்த மாநில அளவிலான செயல் திட்டத்தை மத்திய அரசு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பியுள்ளதாகவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
இக்கூட்டத்தில், பேரிடர் தடுப்பு முன்னேற்பாடு, அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு, முன் எச்சரிக்கை மற்றும் பேரிடர் மேலாண்மை நிதியைப் பயன்படுத்துதல், மாநில பேரிடர் மீட்புப் படைகள் (எஸ்.டி.எம்.ஏ), மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (எஸ்.டி.எம்.ஏ), மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரிகளை நியமித்தல் போன்றவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் பிரதிநிதிகள் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள், அமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள், பேரிடர் மேலாண்மைத் துறையின் மூத்த அதிகாரிகள், மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post ’’பேரழிவால் ஒருவர் கூட உயிரிழக்கக் கூடாது..!’’ உள்த்துறை அமைச்சர் அமித்ஷா first appeared on Madras Murasu.
]]>The post ”இது தான் பாஜக..!” சு. வெங்கடேசன் எம்.பி., first appeared on Madras Murasu.
]]>தமிழர் எதிர்காலத்தில் பிரதமராக வருவார் என்று கூறும் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களே!
உங்கள் அமைச்சகம் இந்தியை விதிகளை மீறி தமிழ்நாட்டில் திணிப்பதை முதலில் நிறுத்துங்கள்.
உங்கள் பொறுப்பில் உள்ள அலுவல் மொழி அமலாக்கம் எப்படி நடைபெறுகிறது பாருங்கள்!

அரசு நிறுவனமான நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை அலுவல் மொழி விதிகள் விதி எண் 5 ஐ 100 % அமலாக்கச் சொல்லி இந்தி பயன்பாட்டை வலியுறுத்துகிறது.
ஆனால் அலுவல் மொழி விதிகள் பிரிவு 1 (ii) மிகத் தெளிவாக தமிழ்நாட்டிற்கு அது பொருந்தாது என்று கூறுவதை தாண்டி 5 வது பிரிவை பேசும் கபடம் அரங்கேறுகிறது.
G.S.R 1052 – In exercise of the powers conferred by section 8, read with sub-section(4) of section 3 of the Official Languages Act, 1963 (19 of 1963), the Central Government hereby makes the following rules, namely ;
1) Short title, extent and commencement –
i) These rules may be called the Official Languages (Use for Official Purposes of the Union) Rules, 1976.
ii) They shall extend to the whole of India, except the State of Tamilnadu.
iii) They shall come into force on the date of their publication in the Official Gazette.
தமிழைக் காவு கொடுத்து விட்டு தமிழர் பிரதமர் ஆவார் என்று உங்கள் ஆசை வார்த்தைகளுக்கு தமிழை நேசிக்கிற ஒரு தமிழர் கூட ஏமாற மாட்டார்.
முதலில் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவன அதிகாரிகளுக்கும், உங்கள் அலுவல் மொழி அமலாக்க குழுவிற்கும் ஒன்றை சொல்லுங்கள்.
“அலுவல் மொழி விதி 1 (ii) காட்டி தமிழ்நாட்டிற்குள் நுழையாதீர்கள்” என்று.
தமிழ்நாட்டில் உள்ள இந்தி அமலாக்க செல்களை கலையுங்கள்.
இவ்வாறு சு.வெங்கடேசன் எம்.பி., கூறியுள்ளார்.
The post ”இது தான் பாஜக..!” சு. வெங்கடேசன் எம்.பி., first appeared on Madras Murasu.
]]>The post ‘’நான் கேட்ட கேள்விக்கு எதற்கும் பதில் தரவில்லை..!’’ சேலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி first appeared on Madras Murasu.
]]>தமிழ்நாடு அரசு இன்று அறிவித்த குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தினால், நடப்பாண்டில் ஐந்து இலட்சம் ஏக்கருக்கும் அதிகமாக குறுவை நெல் சாகுபடி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உழவர்கள் மற்றும் வேளாண் தொழிலாளர் நலன் காக்க நம்முடைய அரசு எந்நாளும் தொடர்ந்து பாடுபடும் என்று மீண்டும் ஒருமுறை உங்கள் மூலமாக நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
கேள்வி: அதிமுக கொண்டுவந்த திட்டங்களுக்கு திமுக பெயர் வைக்கிறது என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி சொல்கிறாரே?
முதலமைச்சர்: தொடர்ந்து நாங்கள் இதற்கு விளக்கம் சொல்லிக்கொண்டே இருக்கிறோம். இருந்தாலும் இப்போதும் கேட்கிறீர்கள். இதுமாதிரி நடந்து கொள்வது அதிமுக-வின் கலை, அவர்கள் பாணி தான் இது. சென்னையில் திமுக ஆட்சியில் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது கோயம்பேடு பேருந்து நிலையத்தை ஆசியாவிலேயே ஒரு மிகப்பெரிய பேருந்து நிலையமாக கட்டினோம். ஆனால் கட்டி முடித்து திறப்பு விழாவிற்கு முன்பு ஆட்சி மாற்றம். ஜெயலலிதா அம்மையார் அவர்களது பெயரை வைத்துக்கொண்டு அதை திறந்து வைத்தார்கள், நாங்கள் அதற்குக் கவலைப்படவில்லை.
அதே மாதிரி ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தலைமைச் செயலகத்தை திமுக ஆட்சியில்தான் புதிதாக கட்டினோம். அதை ஆட்சிக்கு வந்து அதிமுக என்ன செய்தது? அதை அரசு மருத்துவமனையாக மாற்றி அரசியல் செய்தது. சென்னையில் இன்றைக்கு ஓடிக்கொண்டிருக்கக்கூடிய மெட்ரோ ரயில் திட்டத்தை நாங்கள் தான் தொடங்கி வைத்தோம். கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது நான் துணை முதலமைச்சராக இருந்தேன். நானே ஜப்பான் நாட்டிற்குச் சென்று அங்கே நிதி உதவியைப் பெற்று அதன் மூலமாகத்தான் ஒன்றிய அரசினுடைய உதவியைப் பெற்று அதை நாம் தொடங்கி வைத்தோம். அன்றைக்கு அதை எதிர்த்தவர்கள் யார் என்று கேட்டீர்களானால், மறைந்த அம்மையார் ஜெயலலிதா . முதலமைச்சராக இருந்தபோது அதை அவர்கள் எதிர்த்தார்கள், மெட்ரோ தேவையில்லை என்று வெளிப்படையாகவே சொன்னார்கள். பின்னர் அதன் திறப்புவிழாவின் போது தன்னுடைய பெயரை பொறித்துக்கொண்டு கல்வெட்டையும் திறந்து வைத்தார்கள்.
அதே மாதிரி கோட்டூர்புரத்தில் இருக்கக்கூடிய பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை திமுக ஆட்சியில்தான் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோதுதான் கட்டித் திறந்து வைத்தார். ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு அதை பாழ்படுத்தவேண்டும் என்று அதை எப்படியெல்லாம் சீரழித்தார்கள் என்று உங்களுக்கெல்லாம் தெரியும். அதற்குப் பிறகு நீதிமன்றத்திற்குச் சென்று வாதாடி, போராடி அதை நிலைநாட்டி இருக்கிறோம். இப்படியே சொல்லிக்கொண்டு சென்றால், அந்தப் பட்டியல் இன்னும் போகும். இந்த வரலாறுகள் எல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு தெரியாது என்று நினைக்கிறேன். இதையெல்லாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
அதேபோல, அம்மா உணவகம். ஆட்சிக்கு வந்தவுடன் அதை மூடிவிடுவார்கள், மூடிவிடுவார்கள் என்று திட்டமிட்டு ஒரு பொய் பிரச்சாரமே செய்தார்கள். அதை இதுவரைக்கும் மூடவில்லை, அது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
இன்னொன்று சொல்ல வேண்டுமென்றால், பள்ளிக்கூடத்திற்கு செல்லும் பிள்ளைகளின் புத்தகப்பையில் அவர்கள் ஆட்சியில் அம்மையார் ஜெயலலிதா அவர்களின் படமும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி படமும் போட்டு அன்றைக்கு மாணவர்களுக்கெல்லாம் கொடுத்தார்கள். அதில் நாம் ஆட்சிக்கு வந்த நேரத்தில் சிறிது மீதம் வந்திருந்தது. அந்த நேரத்தில் அரசு அதிகாரிகளெல்லாம் என்னிடத்தில் வந்து கேட்டார்கள், இதை மாற்றி விடலாம். ஏனென்றால், ஏற்கனவே இருந்த முதலமைச்சர் படம் இருக்கிறது, எனவே உங்கள் படத்தை போடுகிறோம் என்று சொன்னார்கள். யார் படமும் போடவேண்டாம், இருப்பது அப்படியே இருக்கட்டும். இதை மாற்றினீர்கள் என்றால், பல கோடி ரூபாய் இழப்பு வரும், அந்த இழப்பை அரசு ஏற்றுக் கொள்ளாது, எனவே அப்படியே இருக்கட்டும் என்று சொன்னவன்தான் நான்.
எனவே இதையெல்லாம், இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கக்கூடிய எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு நான் நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

கேள்வி: அமித் ஷா தமிழ்நாடு வந்தார், இரண்டு முறை தமிழர் ஒருவர் பிரதமர் ஆவதை திமுக தான் தடுத்தது என்று கூறியிருக்கிறாரே…
முதலமைச்சர்: அதை வெளிப்படையாக அவர் சொன்னாரென்றால், அதற்கு உரிய விளக்கத்தை நம்மால் சொல்லமுடியும். அதனால் அதற்கு விளக்கமாக இப்போது பதில் சொல்ல முடியாது. இருந்தாலும், தமிழரை பிரதமராக ஆக்கப் போகிறேன் என்று சொன்னது உள்ளபடியே மகிழ்ச்சியாக இருக்கிறது. மோடி மேல் என்ன கோபம் என்று தெரியவில்லை. 2024-ல் பாஜக-வின் பிரதமர் வேட்பாளராக தமிழர் வரவேண்டும் என்ற எண்ணம் இருந்தால், தமிழிசை இருக்கிறார்கள், முருகன் இருக்கிறார், ஒருவேளை அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.
கேள்வி: கர்நாடக அரசு மேதாது அணை கட்டுவதற்கு மும்முரமாக இருக்கிறார்கள், அதற்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?
முதலமைச்சர்: அதை எதிர்ப்பதில் நாங்களும் மும்முரமாக இருக்கிறோம்.
கேள்வி: கடந்த 50 ஆண்டு காலமாக நிலுவையில் உள்ள சரபங்கா திட்டத்தை செயல்படுத்துவது குறித்து…
முதலமைச்சர் : அது ஆய்வில் இருக்கிறது.
கேள்வி: தமிழ்நாட்டிற்கு ஏராளமான திட்டங்களை பாஜக அரசு கொடுத்திருப்பதாக அமித் ஷா ஒரு பட்டியலை வெளியிட்டிருக்கிறார்…
முதலமைச்சர்: நான் சேலத்தில் நடந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் தெளிவாக பேசியிருக்கிறேன். அதாவது, பாஜக ஆட்சி இருந்தபோது, எந்த சிறப்புத் திட்டமும் இந்த ஒன்பது வருடங்களில் தமிழ்நாட்டிற்கு வரவில்லை. ஆனால் ஏற்கனவே காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருந்த திமுக அப்போது ஆட்சியில் இருந்த திரு. மன்மோகன் சிங் தலைமையில் இருந்த ஆட்சியில் என்னென்ன சிறப்புத் திட்டங்கள் வந்தது என்பதை பட்டியல் போட்டு நான் காண்பித்து இருக்கிறேன். அவர் அதைப் படிக்கவில்லையா? இல்லை அதைப் படித்து அதை யாரும் எடுத்துச் சொல்லவில்லையா? என்பதுதான் எனக்கு சந்தேகம். பாஜக-வினுடைய ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் என்ன செய்திருக்கிறது என்று கேள்வி கேட்டேன். அந்தக் கேள்விக்கு எந்த பதிலும் கிடையாது.
ஆனால், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், அன்றைக்கு தமிழ்நாட்டிற்குக் கிடைத்ததை சொல்ல வேண்டுமென்றால், சென்னைக்கு புதிதாக கிடைத்த மெட்ரோ ரயில், தமிழுக்கு செம்மொழி தகுதி, தமிழ் செம்மொழி உயராய்வு நிறுவனம், சேது சமுத்திர திட்டம், ஒரகடத்தில் தேசிய மோட்டார் வாகன சோதனை ஆராய்ச்சி மையம், தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம், சேலத்தில் புதிய ரயில்வே கோட்டம், சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை, நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், ஒகேனக்கல்லில் கூட்டுக் குடிநீர்த் திட்டம், சென்னைக்கு அருகில் கடல்சார் தேசிய பல்கலைக்கழகம், திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம், கரூர், ஈரோடு, சேலம் ஆகிய மூன்று இடங்களில் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர் தொழில்நுட்ப ஜவுளிப் பூங்கா. இவையெல்லாம் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தான் வந்தது.
இதேபோல தமிழ்நாட்டிற்கு என்ன சிறப்புக்களை கொண்டு வந்திருக்கிறது என்பதுதான் என் கேள்வி. எனவே எந்தத் திட்டத்திற்கும் தொடர்ச்சியாக நிதி ஒதுக்கீடு செய்வதை நான் கேட்கவில்லை. அனைத்து மாநிலத்திற்கும் செய்யப்படும் பொதுவான இடத்தில் தமிழ்நாடு இணைக்கப்பட்டிருப்பதைப் பற்றி நான் கேட்கவில்லை.
இன்றைக்கு ஜிஎஸ்டி-யில் ஒவ்வொரு மாநிலமும் ஒன்றிய அரசிற்கு நிதி கொடுத்துக் கொண்டிருக்கிறது. அந்த ஜிஎஸ்டி-யில் தமிழ்நாட்டிலிருந்து அதிகமாகக் கொடுத்திருக்கிறோம். ஆனால் தமிழ்நாட்டிற்குத் தான் இன்றைக்கு ஒன்றிய அரசு நிதி கொடுப்பதில் மிகவும் குறைவாக கொடுத்துக் கொண்டிருக்கிறது, மற்ற மாநிலங்களுக்கெல்லாம் அதிகமாக கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதைத்தான் அடிப்படையாக வைத்துக் கேட்டேன்.
அதேபோல, மதுரையில் 1200 கோடி ரூபாய் மதிப்பில் பிஜேபி ஆட்சிக்கு வந்தவுடன் அன்றைக்கு நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி பாராளுமன்றத்தில் அதற்கு உறுதி கொடுத்தார், அறிவித்தார்கள். அது என்ன ஆகியது? பிரதமர் வந்து அடிக்கல் நாட்டினார். அதற்குப் பின் பலமுறை அமித் ஷா தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார்கள். வந்தபோது, பணி 50 சதவீதம் முடிந்துவிட்டது, 75 சதவீதம் முடிந்துவிட்டது என்று சொல்லிவிட்டுச் சென்றாரே தவிர இதுவரைக்கும் எந்தப் பணியும் நடைபெறவில்லை என்பதுதான் என்னுடைய குற்றச்சாட்டு. அதையெல்லாம் மூடி மறைத்து அவர் பேசிவிட்டுச் சென்றிருக்கிறாரே தவிர, நான் கேட்ட கேள்விக்கு எதற்கும் பதில் தரவில்லை.
கேள்வி: டாஸ்மாக்கில் பத்து ரூபாய் ஊழல் புகார் குறித்து…
முதலமைச்சர்: அதெல்லாம் திட்டமிட்டு செய்யக்கூடிய பிரச்சாரங்கள்.
கேள்வி: எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவராததற்கு திமுக தான் பதில் சொல்ல வேண்டும் என்று அமித் ஷா சொல்லியிருக்கிறாரே?
முதலமைச்சர்: திமுக ஆட்சியில் இருந்தபோது, எய்ம்ஸ் என்று ஒரு மருத்துவமனை தேவையே படவில்லை. ஏனென்றால் நம்முடைய மருத்துவக் கட்டமைப்புகள் அதிக அளவில் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது. இருந்தாலும், இதை அறிவித்தது யார்? திமுக-வா அறிவித்தது, அறிவித்தது ஒன்றிய அரசு. அவர்கள் தான் இதைச் செய்ய வேண்டும். இந்தக் கேள்வியைக் அவர் கேட்பதே ஒரு பொறுப்புள்ள உள்துறை அமைச்சருக்கு அழகல்ல.
கேள்வி: திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஊழல் பெரிய அளவில் நடந்தது என்று சொல்கிறார்கள்…
முதலமைச்சர்: ரஃபேல் ஊழல், அதானி ஊழல். இன்றைக்கு இந்தியாவே தலைகுனிந்து நிற்கிறது. முதலில் அதற்கு பதில் சொல்லட்டும், அதற்குப் பின் இதைப் பேசுவோம்.
கேள்வி: அத்திக்கடவு – அவினாசி திட்டம் எந்த அளவுக்கு இருக்கிறது.
முதலமைச்சர்: முடியக்கூடிய நிலையில் இருக்கிறது, விரைவில் திறக்கப்படும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்தார்.
The post ‘’நான் கேட்ட கேள்விக்கு எதற்கும் பதில் தரவில்லை..!’’ சேலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி first appeared on Madras Murasu.
]]>