acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ’’தனியாரின் கைகள், ரயில்வே துறையின் மீது சுதந்திரமாக படர்கிறது..!’’ சு.வெங்கடேசன் எம்.பி., first appeared on Madras Murasu.
]]>இதுகுறித்து, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அறிக்கை:
சென்னை தாம்பரத்தில் இருந்து திருச்சி மதுரை திருநெல்வேலி வழியாக திருவனந்தபுரத்துக்கு தனியார் நிறுவனம் ஒன்று ரயிலை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது போல் விளம்பரம் வெளியிட்டுள்ளது. இது பாரத் கௌரவ் திட்டத்தின் கீழ் அவர்கள் வாங்கி வைத்துள்ள வண்டி தொடரை வைத்து இயக்க உள்ளதாக தெரிகிறது.
ஆனால், தென்னக ரயில்வேயின் தலைமை அதிகாரிகள் அப்படி ஒரு ரயில் இயக்க நாங்கள் எந்த அனுமதியும் தரவில்லை என்று எனக்கு பதில் கூறியுள்ளனர்.
அனுமதி வாங்காமல் விளம்பரம் செய்யக்கூடாது என்று விதி இருந்தும் அனுமதி வாங்காமல் விளம்பரம் செய்துள்ள நிறுவனத்தின் மீது ரயில்வே நிர்வாகமே
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரயில்வே துறையின் மீதுள்ள நம்பகத்தன்மை தொடர்ந்து கேள்விக்குறியாகி வரும் சூழலில் தனியார் நிறுவனம் தனது விருப்பப்படி பெரும் கட்டணக்கொள்ளையில் ரயில் இயக்கப்படும் என்று விளம்பரம் தருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
முன்பெல்லாம் ரயில்வே நிர்வாகம் திருவிழாக் காலங்களில் அன்றாட ரயில்களின் கட்டணத்தில் சிறப்பு ரயில்களை இயக்கி பயணிகளுக்கு வசதி செய்து கொடுத்தது. கொரோனாவிற்கு பின்பு சிறப்பு ரயில்களை சிறப்புக் கட்டண சிறப்பு ரயில்கள் என்று பெயர் வைத்து பெரும் கட்டணத்தை ரயில்வே வசூலிக்கிறது. பொதுமக்களின் அவசரத் தேவையை அதீத லாபத்திற்கான வாய்ப்பாக பார்க்கிறது.
இந்திய ரயில்வேயின் அன்றாட ரயில்களிலும் மூத்த குடிமக்களுக்கான சலுகையை ரத்து செய்து விட்டார்கள். தட்கல் பிரிமியம் என்று கட்டணத்தை அன்றாட ரயில் வண்டிகளிலும் கடும் உயர்வை ஏற்படுத்தி விட்டார்கள். டிக்கெட் விற்று பெருலாபம் சம்பாதித்து சலித்துப்போய் இப்போது ரயில் தடத்தை விற்று லாபம் சம்பாதிப்பதில் தீவிரம் காட்டுகின்றனர். இதன் விளைவு தனியாரின் கைகள் ரயில்வே துறையின் மீது சுதந்திரமாக படர்கிறது. இது ரயில்வேயின் நலனுக்கும் மக்களின் நலனுக்கும் எதிரானது.
The post ’’தனியாரின் கைகள், ரயில்வே துறையின் மீது சுதந்திரமாக படர்கிறது..!’’ சு.வெங்கடேசன் எம்.பி., first appeared on Madras Murasu.
]]>The post ’’ரயில்வேயைத் தனியார்மயமாக்குவது பேரழிவினை ஏற்படுத்திடும்..!’’ மார்க்சிஸ்ட் எச்சரிக்கை first appeared on Madras Murasu.
]]>புதுதில்லியில் உள்ள ஹர்கிசன்சிங் சுர்ஜித் பவனில் 2023 ஜூலை 18 அன்று மின்வாரியம் மற்றும் ரயில்வே ஆகியவற்றைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதற்கு எதிராக சிஐடியு சார்பில் சிறப்பு மாநாடு நடைபெற்றது. அப்போது ரயில்வே தனியார்மயப் பிரச்சனை தொடர்பாக முன்வைக்கப்பட்ட குறிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.
அதன் முக்கிய சாராம்சங்கள் வருமாறு:
இந்திய ரயில்வே நம் பொருளாதாரத்தின் உயிர் நாடியாகும். நம் மக்களில் பெரும்பாலானவர்களின் பொருளாதாரம் மற்றும் சமூக வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒரு பகுதியாகும். நாடு முழுதும் சுமார் 13452 பயணிகள் ரயில்கள் 7,300 ரயில்வே நிலை யங்களைக் கொண்டிருக்கின்றன. இந்த ரயில்களில் ஒவ்வொரு நாளும் 2 கோடியே 40 லட்சம் பயணிகள் பயணம் செய்துகொண்டிருக்கிறார்கள். இத்துடன் இந்திய ரயில்வேயில் 9141 சரக்கு ரயில்கள் (goods trains) மூலமாக, சுமார் 1.42 பில்லயன் மெட்ரிக் டன் அளவுள்ள, உணவு தானியங்கள் மற்றும் இதர பொருள்கள்; சாமானிய மக்களுக்கும், விவசாயம் மற்றும் தொழில்துறைக்கும் தேவையான சரக்குகள் மற்றும் இதர பொருள்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.
மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் இத்தகைய சிறப்புமிகு பொதுப் போக்குவரத்துத் துறையைத்தான் ஒழித்துக்கட்ட விரும்புகிறது. இதனை பெரும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைத்திட தீர்மானித்திருக்கிறது. தனியார் கார்ப்ப ரேட்டுகள் எவருமே இதன் உள்கட்டமைப்பு வசதி களை உருவாக்கியதில் எவ்விதமான முதலீட்டையும் இதுவரை செலுத்தாதவர்கள். மக்களின் பணத்தில் கட்டப்பட்ட ரயில்வேயைக் கொண்டே மக்களைச் சூறையாடவும், கொள்ளை லாபம் ஈட்டவும் அவர்களுக்கு வழிவகை செய்துதர மோடி அரசாங்கம் துடித்துக் கொண்டிருக்கிறது. தனியார்மயம் என்பது நவீன தாராளமயக் கொள்கையின் முக்கியமான கூறுகளில் ஒன்று.
இந்திய ரயில்வேயைத் தனியாருக்குத் தாரை வார்த்திடும் முயற்சிகளும் நவீன தாராளமயக் கொள்கையின் ஒரு பகுதியேயாகும். மோடி ஆட்சிக்கு வந்த பின் அமைக்கப்பட்ட விவேக் தேவ்ராய் குழு (Bibek Debroy Committee) அளித்திட்ட பரிந்துரை களின்படி ரயில்வே செங்குத்தாகவும் நீள்வாட்டத்தி லும் (vertically and horizontally) துண்டாகும் செயல்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ரயில்வேயைத் தனியாருக்குப் பகுதி பகுதியாக தருவதற்கு வசதி செய்து தருவதற்காகவே இந்த ஏற்பாடுகள் அனைத்தும். மேலும், இந்திய ரயில்வே மேற்கொண்டு வந்த அனைத்துச் செயல்களும், அதா வது கட்டுமானம், இயக்கப்படுதல், நிர்வகித்தல், ரோலிங் ஸ்டாக், முக்கிய ரயில்பாதைகள், ரயில் பெட்டி கள் தயாரித்தல் போன்ற அனைத்திலும் அந்நிய நேரடி முதலீடு 100 விழுக்காடு அறிவிக்கப்பட்டி ருக்கிறது.
சொத்துக்களை விற்று காசாக்கத் திட்டம்
மோடி அரசாங்கம், நாட்டின் சொத்துக்களை விற்றுக் காசாக்கும் திட்டமான தேசியப் பண மாக்கல் திட்டத்தின் (National Monetisation Pipeline) மூலமும் ரயில்வேயின் சொத்துக்களை விற்றுக் காசாக்கும் திட்டத்தையும் பிரதானமாகக் கொண்டிருக்கிறது. ரயில்வேக்குச் சொந்தமாக இப்போது இருந்துவரும் ரயில் நிலையங்கள், ரயில் நிலையங்களைச் சுற்றியுள்ள ரயில்வேக்குச் சொந்த மான இடங்கள், ரயில்வே பாதைகள், ரயில்கள், சரக்கு ஷெட்டுகள், ரயில்வே குடியிருப்புப் பகுதிகள் (காலனிகள்), ரயில்வே ஸ்டேடியம்கள் முதலான வற்றையும் தனியாரிடம் நீண்ட கால குத்தகைக்குத் தாரை வார்த்திட முடிவு செய்திருக்கிறது.
இந்திய ரயில்வே இப்போது உலகில் மிகப்பெரிய வலைப்பின்னலுடன், முறையான பாதுகாப்பு அம்சங்களுடன் செயல்பட்டு வருகிறது. இதனை ஆளும் வர்க்கங்களின் நலனுக்காக, துண்டு துண்டாக்கி, பாதுகாப்பு அம்சங்களைப் பற்றியோ, பயணிகளின் பாதுகாப்பு பற்றியே கிஞ்சிற்றும் கவலைப் படாமல், தனியாரிடம் தாரை வார்த்திட முடிவு செய்திருக்கிறது மோடி அரசு. தனியாரிடம் தாரைவார்த்திடும் நடவடிக்கைகளை மக்களிடமிருந்து மறைப்பதற்காக, தனியார்மயம் ‘உலகத்தரம் வாய்ந்த பயண அனுபவத்தை அளித்தி டும்’ (‘world class travel experience’) என்றும், இது சாமானிய மக்களுக்குப் பயனளிக்கும் என்றும், ரயில்வேயில் தனியார் முதலீடு வேலை வாய்ப்பை உருவாக்கிடும் என்றெல்லாம் கூறி, மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது. இவர்களின் கூற்றுகளுக்கும் உண்மை நிலைமைகளுக்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை.
தனியார்மயமானால் என்னவாகும்?
ரயில் நிலையங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப் பட்டால் ‘உலகத் தரம்வாய்ந்த ரயில் நிலையங்களை உருவாக்குகிறோம்’ என்ற பெயரில், ஒட்டுமொத்த ரயில் நிலையமும் அதனைச் சுற்றியுள்ள நிலங்களும் தனியார்வசமாகும். ரயில் டிக்கெட்டுகள், இயங்கும் பணி மட்டும் ரயில்வேயிடம் இருந்திடும். பிளாட்பாரம் டிக்கெட்டுகள் விற்பது, உணவுப் பண்டங்கள் விற்பது, வாகனங்கள் நிறுத்துமிடம், விளம்பரங்கள் செய்யும் உரிமைகள் முதலானவை தனியாரிடம் ஒப்படைக்கப் படும். இதனை அமல்படுத்துவதற்காக அரசாங்கம் இந்தியன் ரயில்வே ஸ்டேஷன் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் (IRSDC-Indian Railway Station Development Corporation) என்னும் நிறு வனத்தை உருவாக்கி இருக்கிறது. தனியாரிடம் ஒப்படைக்கப்படும் ரயில்வேயின் நிலங்களை அவர்கள் தங்கள் விருப்பம் போல் வணிக நோக்கங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ள லாம். ஓட்டல்கள் கட்டலாம், ஷாப்பிங் மால்கள் கட்டலாம், என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்.
ரயில் நிலையத்தைச் சுற்றியுள்ள சேரிகளில் காலங்காலமாக வாழ்ந்துவரும் ஏழை மக்கள் அந்த இடங்களிலிருந்து விரட்டி அடிக்கப்படு வார்கள். அவர்கள் வீடற்றவர்களாக வீதிகளில் நிற்பார்கள். ஏழை ரிக்சாக்காரர்கள், ஆட்டோ டிரைவர்கள் ரயில் நிலையங்கள் அருகே தங்கள் வாகனங்களை நிறுத்த முடியாது. சாமானிய பயணிகளும்கூட உள்ளூரில் தங்களுக்குத் தேவைப்படும் போக்குவரத்திற்காக, கட்டுப்படியாகக்கூடிய கட்டணத்தில் வாகனங் களை அமைத்துக் கொள்ள முடியாது.
வெகு தூரங்களிலிருந்து வரும் பயணிகள் ரயில் நிலையங்களின் நடைமேடைகளில் காத்துக் கொண்டிருப்பதற்கும் அனுமதிக்கப்படமாட்டார் கள். அவர்கள் இதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டு ள்ள இடங்களில் கட்டணம் செலுத்தித்தான் காத்திருக்க வேண்டும். ரயில்களில் ஏறுவதற்கு மட்டுமே அவர்களுக்கு நடைமேடை பயன் படுத்திட அனுமதிக்கப்படும்.
மத்தியப்பிரதேசத்தில் உள்ள ஹபிப்கஞ்ச் ரயில் நிலையம் (இப்போது ராணி கமலாபதி நிலையம் என பெயர் மாற்றப்பட்டிருக்கிறது), பன்சால் குழு மத்திற்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டி ருக்கிறது. குஜராத்தில் காந்தி நகர் ரயில் நிலையமும் அதானி மற்றும் எல்டெகோ உள்கட்டமைப்பு நிறு வனங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இதுபோல் ‘உலகத்தரம்’ வாய்ந்த நிலையங் களாக மாற்றிட மோடி அரசாங்கம் 400 ரயில் நிலை யங்களை அடையாளம் கண்டிருக்கிறது. இவற்றிற் காக டெண்டர்கள் விடப்பட்டிருக்கின்றன. இந்த ரயில் நிலையங்களில் புதுதில்லி, மும்பை, ஹவுரா, சென்னை, பெங்களூரு, செகந்திராபாத், விஜயவாடா முதலானவையும் அடங்கும்.
சாமானிய மக்கள் ரயில்களைப் பயன்படுத்த முடியாது
ரயில் கட்டணங்கள் இனி அதற்கான செலவினத்தின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படும். தற்சமயம் பயணிகளின் ரயில் கட்டணங்களில் 53 விழுக்காடு அதன் செலவினத்தையும் (cost), 47 விழுக்காடு அரசின் மான்யத் தொகையையும் கொண்டிருக்கின்றன. இனி இந்த மானியத்தொகை இருக்காது. அது விலக்கிக்கொள்ளப்படும். இத னால் இப்போதுள்ள ரயில் கட்டணங்கள் உடனடி யாக இரட்டிப்பாகும். இத்துடன் கார்ப்பரேட்டுகளைக் குஷிப்படுத்துவதற்காகவும் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்படும். ஏற்கனவே பல ரயில்நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட்டுகளின் விலை 50 ரூபாய்க்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. பல வழித்தடங்களில் தனியார் ரயில்கள் விடப்பட இருக்கின்றன.
இவ்வாறு விடப்படும்போது அதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும், ஒரு மணி நேரத்தி ற்குப் பின்பும் அரசு ரயில்கள் விடப்படமாட்டாது. இதனால் அவசரமாகச் செல்ல வேண்டும் என்றுள்ள பயணிகள் தனியார் ரயிலில்தான் அதிகக் கட்டணங்கள் கொடுத்துப் பயணிக்க வேண்டும். இப்போது ஐஆர்சிடிசி மூலமாக தனியார் மூலமாக, தில்லிக்கும் லக்னோவிற்கும் இடையே ‘தேஜாஸ் ரயில்’ விடப்பட்டுள்ளது. இதன் ரயில் கட்டணம் 700 ரூபாயிலிருந்து 900 ரூபாயாகும். இதன் கட்ட ணங்கள் 4,700 ரூபாயாக உயர்த்தப்படஇருக்கின்றன. இப்போது விமானப் பயணங்களில் உள்ளது போன்று விரும்பும் இடத்திற்கும், லக்கேஜுகளுக்கும் தனித்தனியே கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இவையெல்லாம் டிக்கெட் கட்டணத்தில் இடம் பெறாது. ரயிலில் உணவு, படுக்கை வசதிகள், வைஃபி வசதிகளுக்குத் தனியே கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
சலுகைகள் ரத்து
சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்காக பாரத் கவுரவ் ரயில்கள் விடப்பட்டிருக்கின்றன. இவற்றைத் தனியார் நிறுவனங்களே இயக்கிக் கொண்டிருக்கின்றன. கட்டணங்கள் மற்றும் வழிகள் முதலானவை அவர்கள் வைத்ததுதான். ரயில் கட்டணங்களில், மூத்த குடிமக்கள், குழந்தை கள், மாற்றுத் திறனாளிகள், புற்று நோயாளிகள், மாணவர்கள் முதலானவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த சலுகைகள் அனைத்தும், தனியாரிடம் ரயில் போக்குவரத்து தாரைவார்க்கப்பட்டபின் இயற்கையாகவே, ரத்து செய்யப்பட்டுவிடும். ஏற்கனவே மூத்த குடிமக்கள் பெற்றுவந்த சலுகைகள் ரத்தாகிவிட்டன. இப்போதே ரயில்வே நிர்வாகம் பயணிகளை பல வழிகளில் சூறையாடும் நடவடிக்கைகளில் இறங்கி விட்டது. ரிசர்வ் பெர்த்துகள் கடுமையாகக் குறைக்கப்பட்டுவிட்டன. தட்கல் கோட்டா மூலம் அளிக்கப்படும் பெர்த்துகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. மோடி அரசாங்கம் 2014இல் பிரிமியம் தட்கல் என்னும் முறையைக் கொண்டுவந்தது. இது தட்கல் கட்டணத்தைப்போல் இரண்டு மடங்காகும்.
2016இல் ‘டைனமிக் பிரைசிங்’ (‘dynamic pricing’) என்னும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு 10 விழுக்காடு பெர்த்துகள் நிறைந்த பின்னும், 10 விழுக்காடு கட்டணம் உயர்த்தப்படும். இப்போது ஸ்லீப்பர் கோச்சுகளாக இருப்பவை யெல்லாம் படிப்படியாக ஏசி கோச்சுகளாக மாற்றப்படும். சாமானிய பயணிகள் பயணம் செய்வதற்கான பொதுப் பட்டியல் (ஜெனரல் கம்பார்ட்மெண்ட்டுகள்), ஜெனரல் ரிசர்வ் பெர்த்துகள் படிப்படியாகக் குறைக்கப்படும். இதனால் பொது பெட்டிகளில் பயணிகள் பயணம் செய்வது மேலும் நெருக்கடிக்கு உள்ளாகும். ரயில் விபத்துகள் அதிகம் நடைபெறு வதற்கும் இதில் ஏராளமானவர்கள் இறப்பதற்கும் இது ஒரு முக்கிய காரணமாகும். ஆனால் இதைப்பற்றியெல்லாம் மோடி அரசாங்கம் கவலைப்படவில்லை.
ரயில்வே ஊழியர்கள் நிலை
நவீன தாராளமயக் கொள்கையின் மிகவும் முக்கியமான முடிவுகளில் ஒன்று, ரயில்வே ஊழி யர்களின் எண்ணிக்கையை வெட்டிக் குறைப்பது என்பதாகும். நிரந்தரப் பணியிடங்கள் அனைத்தும் ஒப்பந்தப் பணியிடங்களாக மாற்றப்படும். வேலைகள் வெளியில் கொடுத்து (outsourcing) வாங்கப்படும். பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்த சுமார் 3 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக விடப்பட்டிருக்கின்றன. வேலையில் இருக்கும் ஊழியர்களின் பணிச்சுமை அதிகரித்திருக்கிறது. ஓடும் ரயில்களில் பணிபுரியும் ஊழியர்கள் சுமார் 14-16 மணி நேரம் வேலை செய்யக் கட்டாயப் படுத்தப்படுகிறார்கள்.
விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுவதற்கு இது ஒரு முக்கிய காரணமாகும். இவ்வாறு மோடி அரசாங்கத்தின் ரயில்வேயைத் தனியார்மயமாக்கும் கொள்கை மக்களுக்கும், ரயில்வே ஊழியர்களுக்கும், நாட்டுக்கும் பேரழிவினை ஏற்படுத்திடும். ஆயினும் மோடி அரசாங்கம் தனியார் கார்ப்பரேட்டுகளுக்கு சேவகம் செய்வதிலேயே சுகம் காணுகிறது. நாட்டை பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ள தொழிலாளர் வர்க்கமும், உழைக்கும் மக்களும் இந்த அநியாயங்களையெல்லாம் கண்டும் காணாமல் இருந்துவிட முடியாது. இதற்கெதிராகக் கிளர்ந்தெழுந்திட வேண்டும். ரயில்வேயைப் பாதுகாப்பதன் மூலம் நாட்டையும் நாட்டு மக்களையும் ரயில்வே ஊழியர்களையும் பாது காத்திட வேண்டும்.
The post ’’ரயில்வேயைத் தனியார்மயமாக்குவது பேரழிவினை ஏற்படுத்திடும்..!’’ மார்க்சிஸ்ட் எச்சரிக்கை first appeared on Madras Murasu.
]]>The post “போடிநாயக்கனூர் ரயில் வந்தாச்சு..!” first appeared on Madras Murasu.
]]>இந்த ரயில் சேவையை மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன் வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் ஜூன் 15 ம் தேதி, இரவு 8.00 மணிக்கு போடிநாயக்கனூரிலிருந்து கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
ரயில் எண்.20602, மதுரை – டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில் போடிநாயக்கனூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே போல ரயில் எண்.06702 தேனி – மதுரை தினசரி முன்பதிவு அல்லாத எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் போடிநாயக்கனூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சென்னை சென்ட்ரல் – போடிநாயக்கனூர் – சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (வாரத்திற்கு 3 நாள்கள்) 16-ந் தேதி சென்னை சென்ட்ரலிலிருந்தும். 18-ந் தேதி போடிநாயக்கனூரிலிருந்தும் சேவையை தொடங்குகிறது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இரவு 10.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மதுரை, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி வழியாக அடுத்த நாள் காலை 9.35 மணிக்கு போடிநாயக்கனூர் சென்றடையும். சென்னையிலிருந்து இந்த ரயில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் இயக்கப்படும்.
முன்பதிவு அல்லாத மதுரை – போடிநாயக்கனூர் தினசரி ரயில் சேவை 16-ந் தேதி தொடங்குகிறது. இந்த ரயில் மதுரையிலிருந்து காலை 8.20-க்கு புறப்பட்டு வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி வழியாக காலை 10.30 மணிக்கு போடிநாயக்கனூர் சென்றடையும்.
சென்னை எழும்பூர் – குருவாயூர் எக்ஸ்பிரஸ் மற்றும் கச்சேகுடா – மதுரை எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை கொடைக்கானல் சாலை ரயில் நிலையத்தில் 15-ந் தேதி முதல் நின்று செல்கிறது. கொடைக்கானல் சாலை ரயில் நிலையத்தில் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன், நண்பகல் 12.15 மணிக்கு இந்த ரயில்கள் நின்று செல்லும் சேவையைத் தொடங்கி வைக்கிறார்.
சு.வெங்கடேசன்ம் எம்.பி.,
இதுகுறித்து, கடந்த 7-ம் தேதி மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கையில், ‘“அமைச்சரின் தேதிக்காக எவ்வளவு நாள் காத்திருப்பது?” என்று கடந்த ரயில்வே ஆலோசனை கூட்டத்தில் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து வரும் 15 ஆம் தேதி போடி – சென்னை ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அதே போன்று குருவாயூர் எக்ஸ்பிரஸ், கச்சிகுடா எக்ஸ்பிரஸ் இரண்டும் கொடைரோடு நிலையத்தில் நிறுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்திற்கும் நன்றி’’ என்று கூறியிருந்தார்.

போடி ரயில் வரலாறு ; 12 ஆண்டு போராட்டம்:
கடந்த 2010 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி மதுரை – போடி இடையிலான மீட்டர் கேஜ் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஏ.லாசர் தலை மையில் வர்த்தகர்கள், அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் அடங்கிய போராட்டக்குழு அமைக்கப்பட்டு சிறப்பு மாநாடு, உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல் வேறு வடிவங்களில் போராட் டம் நடத்தியும் ,பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள், ரயில்வே அதிகாரிகளை சந்தித்தும் தொடர் போராட்டம் நடத்தியதன் விளைவாக ரயில்வே அமைச்சகம் திட்டத்திற்கு மறு அனுமதி கொடுத்து படிப்படியாக நிதி ஒதுக்கப்பட்டது.
2011 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை 12 ஆண்டுகளாக அகல ரயில் பாதை திட்ட பணிகள் சுமார் ரூ.560 கோடி மதிப்பீட்டில் நிறைவு பெற்ற நிலையில் வியாழனன்று ரயில் சேவை மதுரை மற்றும் சென்னை வரை துவங்கப்பட உள்ளது சோதனை ஓட்டம் மதுரை-போடி இடையே அகல ரயில்பாதையில் அதிர்வுகள் குறித்த இறுதிக் கட்ட ஆய்வு ரயில் புதன் கிழமை நடைபெற்றது. OMS (Oscillation Monitoring System) எனப் படும் சிறப்பு ரயில் என்ஜின் மூலம் மதுரையிலிருந்து போடி வரை சோதனை செய்யப்பட்டது. இரண்டு பெட்டிகள் இணைக்கப்பட்ட இந்த ரயிலில் நவீன கருவி கள் மூலம் ரயில்பாதையின் அதிர்வு தாங்கும் திறன் சோதனை செய்யப்பட்டது.
காலை 10 மணிக்கு புறப்பட்ட ரயில் போடிக்கு 11.15 மணிக்கு வந்து சேர்ந்தது. பின்னர் 11.45 மணிக்கு மதுரைக்கு புறப் பட்டு சென்றது. ரயிலில் பொறியாளர் குழுவினர் ரயில்பாதை குறித்து இறுதிக் கட்ட சோதனை மேற்கொண்ட னர். வியாழக்கிழமை போடி யில் நடைபெறும் நிகழ்ச்சியில் போடி-மதுரை, போடி-சென்னை ரயில்களை ஒன்றிய தகவல் மற்றும் ஒலி பரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் நேரில் பங்கேற்று ரயில் சேவைகளை தொடங்கி வைக்க உள்ளார். பபோடி – மதுரை, அகல ரயில் பாதை திட்ட அமலாக்கக்குழு, போடி வர்த்தகர் சங்கம் சார்பில் ரயிலை வரவேற்றும் இத்திட்டத்திற்கு பாடுபட்ட தலைவர்களுக்கு போடி வர்த்தகர் சங்க மண்டபத்தில் பாராட்டு விழா நடைபெறுகிறது.
The post “போடிநாயக்கனூர் ரயில் வந்தாச்சு..!” first appeared on Madras Murasu.
]]>The post “ரெயில் விபத்து நடந்த இடத்தில் மோடி உருக்கம்..!” அதிரடி உத்தரவு first appeared on Madras Murasu.
]]>ரயில் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட பிரதமர் , காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்குச் சென்று ஆறுதல் கூறினார்.
ரயில்களில் பயணம் செய்த பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இந்த மாபெரும் சோகத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பிரதமர் கூறினார்.
துரதிர்ஷ்டவசமான உயிர் இழப்புகள் குறித்துப் பேசுகையில், காயமடைந்தவர்களுக்கு அனைத்து மருத்துவ உதவிகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார்.
அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுடன் அரசு துணை நிற்கிறது என்றார் அவர்.
இந்த துயரச் சம்பவம் குறித்து முறையான மற்றும் விரைவான விசாரணையை உறுதி செய்யவும், தவறு இழைத்ததாக கண்டறியப்பட்டவர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார்.
ஒடிசா அரசு, உள்ளூர் நிர்வாகம் மற்றும் உள்ளூர் மக்கள், குறிப்பாக இளைஞர்கள், இரவு முழுவதும் தொடர்ந்து மீட்பு பணிகளில் உதவுவதற்காக உழைத்ததை அவர் பாராட்டினார்.
மேலும், காயமடைந்தவர்களுக்கு உதவுவதற்காக ரத்ததானம் செய்ய வந்த ஏராளமான உள்ளூர் மக்களையும் அவர் பாராட்டினார்.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தொடரவும், ரயில் பாதைகளை விரைவாக மீட்டெடுப்பதை உறுதி செய்யவும் ரயில்வே செயல்பட்டு வருகிறது என்றார் அவர்.
உள்ளூர் அதிகாரிகள், பேரிடர் மீட்புப் படைகளின் பணியாளர்கள் மற்றும் ரயில்வே அதிகாரிகளுடன் உரையாடிய பிரதமர், சோகத்தைத் தணிக்க அரசு முழுமையான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் தனது ட்விட்டர் பதிவில்,
“ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தினால் மிகுந்த வேதனை அடைந்துள்ளேன். துயரமான இந்த தருணத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் இருக்கின்றன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். ரயில்வே துறை அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் அவர்களிடம் பேசி நிலைமையை கேட்டறிந்தேன். சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன” என்று பதிவிட்டுள்ளார்.
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து(PMNRF) நிவாரண உதவி தொகையை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து(PMNRF) 2 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் வழங்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
The post “ரெயில் விபத்து நடந்த இடத்தில் மோடி உருக்கம்..!” அதிரடி உத்தரவு first appeared on Madras Murasu.
]]>The post “இந்திய வரலாற்றின் மாபெரும் துயரம்..!” கமல் first appeared on Madras Murasu.
]]>ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இதுவரை வெளியாகி இருக்கும் தகவலின்படி, இந்த விபத்தில் 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்
ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இதுவரை வெளியாகி இருக்கும் தகவலின்படி, இந்த விபத்தில் 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்த நிலையில், ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே இரு பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்ட விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதும் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.
நாட்டையே உலுக்கியுள்ள இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது நம் வேதனையை அதிகரிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென விழைகிறேன்.
உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த ரயில் விபத்து, இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள், விபத்தின் தாக்கத்தில் இருந்து மீள தேச மக்கள் அனைவரும் துணை நிற்போம்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post “இந்திய வரலாற்றின் மாபெரும் துயரம்..!” கமல் first appeared on Madras Murasu.
]]>