acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ’‘ஆரிய’ விகடனின் ‘சனாதன’ அலறல்.!” ’முரசொலி’ விளாசல் first appeared on Madras Murasu.
]]>திராவிட மாடலின் சமூக (அ)நீதி’ என்ற தலைப்பில் ‘ஆரிய’ விகடன் அலறி இருக்கிறது. திடீரென பட்டியலின சமூகத்தவர்மீது இவர்களுக்குப் பாசம் பொங்கி வழிகிறது. ‘என்னவாக இருக்கும்’ என்று பார்த்தால், அவர்களால் ‘கொண்டையை’ மறைக்க முடியாதது அந்தத் தலையங்கத்திலேயே இருக்கிறது.
தமிழ்நாட்டில் நடந்த மூன்று சம்பவங்களை விவரிக்கும் அந்தத் தலையங்கத்தின் உள்நோக்கம் என்ன தெரியுமா?
மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், மக்களைப் பிளவுபடுத்தும் சனாதனக் கோட்பாட்டுக்கு எதிராக வலிமையான வாதங்களை எடுத்து வைக்கிறார் அல்லவா? அது விகட ஆரியக் கூட்டத்தை கோபம் கொள்ள வைக்கிறது. “மனிதத் தன்மையற்ற இந்த தாக்குதல்களையும் வன்கொடுமைகளையும் கண்டும் காணாமல் மெளனம் சாதித்து வேடிக்கை பார்க்கிறது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு. இது இப்படி இருக்க ‘சனாதன தர்மத்தை ஒழிப்போம்’ என்று உதயநிதி ஸ்டாலின் பேசுவது வெட்டி அரசியல் பேச்சு. பெரியார், அறிஞர் அண்ணா கோரிய சமூகநீதிக்கு திமுக அரசு செய்யும் துரோகம் இது” என்று ஆரிய விகடன் அலறுகிறது.
மக்களைப் பிளவுபடுத்தும் வர்ண சனாதனக் கோட்பாடுகளுக்கு எதிராகப் பேசியது மட்டுமல்ல; அதைத் திரும்பப் பெற மாட்டேன் என்று துணிச்சலாக நிற்கிறாரே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்ற வன்மத்தை ‘திராவிட மாடல்’ ஆட்சியின் மீது காட்டுகிறது விகடன்.
‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற தத்துவத்தின் அடிப்படையில் அனைவர்க்கும் அனைத்தும் கிடைக்க வழிவகை செய்யும் ‘திராவிட மாடல்’ ஆட்சியால் அலறிக் கொண்டிருக்கிறது ஆரியக் கும்பல். அதனுடைய அலறலைத் தான் ஆளுநர் ரவியின் குரலில் நாம் காண்கிறோம். சில நாட்களுக்கு முன்னால் ரவி என்ன சொன்னாரோ, அதையேதான் விகடனும் ‘தலையங்கம்’ என்ற பெயரால் வாந்தி எடுத்துள்ளது. இந்தக் கும்பலுக்கு ஒட்டுமொத்தமாக ‘ஒரே கண்டெண்ட் எடிட்டர்’ இருக்கிறார் என்பது நமக்குத் தெரியாதா என்ன?
பட்டியலின மக்கள் மீது நடந்த சில சம்பவங்களை எடுத்துப் போட்டு, தாங்கள் ஏதோ ஒடுக்கப்பட்ட மக்களின் ஒளிவிளக்கைப் போல விகடன் காட்டிக் கொள்கிறது. இந்தச் சம்பவங்களின்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை மறைத்து, இவை எதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற தோற்றத்தை உருவாக்குகிறது அந்தத் தலையங்கம்.
• நெல்லை தச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குள், குளித்து விட்டு வந்தவர்களிடம், பணத்தைக் கேட்டும், சாதியைக் கேட்டும் தகராறு செய்து இருவரைத் தாக்கிய சம்பவத்தில் ஆறுபேர் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் தள்ளப்பட்டுள்ளார்கள். கொடும் காயம் ஏற்படுத்துதல், ஆயுதங்களால் தாக்கிக் காயம் ஏற்படுத்துதல், வழிப்பறியில் ஈடுபடுதல், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்கு போடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இருவருக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் வழங்கப்படும் முதல்கட்ட நிதி வழங்கப்பட்டுள்ளது.
• நாங்குநேரியில் மாணவரும், அவரது சகோதரியும் வெட்டப்பட்டார்கள். 3 சிறுவர் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். 11 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பத்துக்கு 3 லட்சம் ரூபாய் உடனடியாகத் தரப்பட்டது. உடனடியாக சபாநாயகரும் அமைச்சர்களும் சென்று பார்த்தார்கள். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், அந்த இருவரையும் சமீபத்தில் பார்த்து ஆறுதல் கூறினார்.
• கிருஷ்ணகிரி அருகே சோக்காடியில் நடந்த சம்பவத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்துக்குக் காரணமான அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் தலைமறைவாக இருக்கிறார். பிரச்சினையே இவரால் வந்தது தான். இவரது பெயரையே சொல்லாமல் தலையங்கம் தீட்டியதுதான் ‘விகடனின்’ பத்திரிக்கா தர்மம்!
• புதுக்கோட்டை கொப்பம்பட்டி மாணவர் தற்கொலையில் வன்கொடுமைச் சட்டப்படி வழக்குப் பதியப்பட்டுள்ளது.
• வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக நீதிபதி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே அதுகுறித்து இங்கு எழுதுவது சரியாக இருக்காது.
• பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் சாதிப்பிளவுகள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் தகுந்த பரிந்துரைகளை வழங்க, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இப்படி அனைத்துக் குற்றச் சம்பவங்களிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைது செய்யவில்லை என்றாலோ, அல்லது குற்றவாளிகள் காப்பாற்றப்பட்டு இருந்தாலோ அதுகுறித்து தலையங்கம் எழுதி அரசுக்கு அறிவுறுத்தலாம். செய்திகளை வரிசைப்படுத்தி, அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தந்திரமாக மறைக்கிறது ‘விகடன்’ தலையங்கம்.
உண்மையில் இவர்களுக்கு சமூகநீதியில் அக்கறை இருக்குமானால், ‘சாதியை ஆதரித்தும் மற்ற சாதிகளை இழிவுபடுத்தியும்’ பேசும் ‘திருச்சி கல்யாணராமன் போன்றவர்களை ஏன் கைது செய்யவில்லை?’ என்று கேட்க முடியுமா? ‘சனாதனம்’ என்ற பெயரால்தான் இந்த சாதிவன்ம வார்த்தைகள் கொட்டப்படுகின்றன. இதுபோல பல நூறு வீடியோக்கள் இணையத்தளங்களில் வலம் வருகின்றன. ‘திராவிட மாடல் ஆட்சி இந்தச் சாதி வன்மப் பேர்வழிகளை ஏன் கைது செய்யவில்லை?’ என்று கேட்கும் ‘சமூக நீதி உள்ளம்’ விகடனுக்கு உண்டா? கலைஞர் கேட்பாரே; ‘உள்ளம் இருக்கிறதா? உள்ளம் இருக்க வேண்டிய இடத்தில் பள்ளம் இருக்கிறதா?’ என்று!
‘திராவிட மாடல்’ ஆட்சி நடத்தும் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு யாரும் சமூகநீதிப் பாடம் எடுக்கத் தேவையில்லை. யார் சொல்லியும் அல்ல; அவராகவே செய்யும் அக்கறையும், கொள்கைப் பற்றும் அவருக்கு உண்டு.
• ஆட்சிக்கு வந்ததும் ஆதிதிராவிடர் – பழங்குடியினர் ஆணையத்தை அமைத்தவர் முதலமைச்சர் அவர்கள்.
• அ.தி.மு.க. ஆட்சியில் கூட்டப்படாத மாநில விழிப்புணர்வுக் கூட்டத்தைத் தொடர்ந்து கூட்டி வருபவர் முதலமைச்சர் அவர்கள்.
• அண்ணல் அம்பேத்கர் பிறந்த ஏப்ரல் 14 ஆம் தேதியை ‘சமத்துவ நாளாக’ அறிவித்த ஆட்சி திராவிட மாடல் ஆட்சி.
• அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில், அவரின் முழு அளவு வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது.
• அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளைப் பரப்புவதற்காக அவரின் படைப்புகளை தமிழில் மொழி பெயர்க்க இந்த நிதியாண்டில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
• அண்ணல் அம்பேத்கர் விருதுத் தொகை ரூ.5 லட்சமாக ஆக்கப்பட்டுள்ளது.
• வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் தீருதவித் தொகை குறைந்தபட்சம் 85,000 ரூபாயிலிருந்து ஒரு இலட்சம் ரூபாயாகவும் அதிகபட்சம் 8 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 12 இலட்சம் ரூபாயாகவும் உ யர்த்தப்பட்டது.
• வன்கொடுமையினால் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தைச் சார்ந்த 723 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம், கல்வி உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா ஆகிய உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.
• வன்முறையால் பாதிக்கப்பட்டோரைச் சமூகக் கண்ணோட்டத்துடன் அணுகி, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்திட காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்களுக்கு விழிப்புணர்வுப் பயிற்சிகள் வழங்கப் பட்டு வருகின்றன.
• ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தீருதவிகள் மற்றும் மறுவாழ்வு தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க கூடுதலாக நான்கு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
• சாதி வேறுபாடுகளற்ற மயானங்களை பயன்பாட்டில் கொண்டிருக்கும் முன்மாதிரிச் சிற்றூர்களில், வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஊக்கத் தொகையாக தலா ரூ.10 லட்சம் பரிசு வழங்கும் திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது. கடந்த நிதியாண்டில் 70 சிற்றூர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ளன.
• தீண்டாமையைக் கடைபிடிக்கப்படாமல் பொதுமக்கள் அனைவரும் நல்லிணக்கத்துடன் வாழும் கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அக்கிராமங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திடும் பொருட்டு ரூ.10 இலட்சம் நிதி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் 37 கிராமங்கள் பயனடைந்துள்ளன.
• பொதுமக்களிடையே தீண்டாமைக்கெதிரான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 24––ஆம் தேதி முதல் 30-–ஆம் தேதி வரை “மனிதநேய வார விழா” நடத்தப்படுகிறது.
• ஆண்டுதோறும் ஜனவரி 26, ஆகஸ்டு 15 மற்றும் அக்டோபர் 2 ஆகிய நாட்களிலும், அந்தந்த மாவட்டங்களில் முக்கியத்துவம் வாய்ந்த உள்ளூர் விடுமுறை நாட்களிலும் சமத்துவ விருந்து ஏற்பாடு செய்யப்படுகிறது.
• ஆதிதிராவிட மக்களின் கல்வியறிவு விகிதம் (73.26%) ஒப்பீட்டளவில் பொதுப் பிரிவினரின் கல்வியறிவு விகிதத்தினை ( 80.09%) விட குறைவாக உள்ளது. எனவே இத்துறைக்கான மொத்த நிதி ஒதுக்கீடான ரூ.3,512.85 கோடியில்; கல்விசார்ந்த திட்டங்களுக்காக மட்டும் ரூ.2,206.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
• ஆதிதிராவிடர் நலத் துறையால் 1138 ஆதி திராவிடர் நலப் பள்ளிகள் மேம்பாட்டுக்காக ரூ.120 கோடி சென்ற ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
• இத்துறையால் நடத்தப்படும் விடுதிகளைப் பழுது பார்க்க ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
• எம்.சி.இராஜா கல்லூரி விடுதி வளாகத்தில் ரூ.44.50 கோடி மதிப்பீட்டில் 10 தளங்களுடன் நவீன வசதியில் புதிய விடுதிக் கட்டடம் கட்ட முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி இருக்கிறார்கள்.
• முனைவர் பட்டப்படிப்பிற்கான உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் இதுவரை 2,954 மாணவர்களுக்கு தலா ஒரு லட்சம் ருபாய் வீதம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
• வெளிநாடுகளில் சென்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான வருமான உச்ச வரம்பு ரூ.8 இலட்சம் ஆக உயர்த்தப்பட்டு, 18 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
• தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களின்கீழ் பயனடைவதற்கான வருமான உச்சவரம்பு மூன்று இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
• ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ‘அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்’ என்னும் புதிய திட்டம் ரூ.100 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
• ஆதிதிராவிடர் குடியிருப்புகளை மேம்படுத்த “அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம் வரும் ஐந்தாண்டுகளில் 1000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படவுள்ளது.
• புதிரை வண்ணார் நல வாரியத்திற்குப் புத்துயிர் அளித்து, வாழ்வாதார மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த நிதியாண்டில் ரூ.10.00 கோடி கூடுதல் நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
• இந்த நிதியாண்டில் மாநில திட்ட ஒதுக்கீடான ரூ.77,930.30 கோடியில், ஆதிதிராவிடர் துணைத் திட்டத்திற்காக ரூ.17,075.70 கோடி(21.91%) மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டத்திற்காக ரூ.1595.89 கோடி (2.05%) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மாநிலத்தில் உள்ள ஆதிதிராவிடர் (20.01%) மற்றும் பழங்குடியின மக்கள் தொகை (1.17%) விகிதாச்சாரத்தை விட அதிகமானதாகும்.
இதுதான் ‘திராவிட மாடல் ஆட்சி’யின் சமூக நீதி ஆகும்.
முதலமைச்சர் அவர்களே குறிப்பிட்டுள்ளதைப் போல, ‘சுயமரியாதைச் சமதர்மச் சமூகத்தை உருவாக்குவதற்கு இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும்’ என்பதும் உண்மைதான். அதற்கான சட்டங்களையும் முதலமைச்சர் தீட்டி வருகிறார்கள். மனமாற்றப் பரப்புரைகளையும் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. இதையெல்லாம் தாங்கிக் கொள்ள முடியவில்லை ‘ஆரிய’ விகடக் கும்பலால்.
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது போன்ற சட்டங்களாலும் -– மக்களைப் பிளவுபடுத்தும் சனாதனத்துக்கு எதிரான யுத்தங்களாலும் -– நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் ஆரியக் கும்பல், பட்டியலின வேஷம் போடுகிறது. காலம் காலமாக போடப்பட்டு வரும் இந்தக் கபடவேடங்களை உண்மைத் தமிழ் மக்கள் உணர்வார்கள். பார்த்துப் பார்த்து பழகிய ஆரியக் கூத்துகளை நிறுத்தி திருந்தப் பார்க்கவும்.
The post ’‘ஆரிய’ விகடனின் ‘சனாதன’ அலறல்.!” ’முரசொலி’ விளாசல் first appeared on Madras Murasu.
]]>The post ’’துப்பு இல்லாத பா.ஜ.க..!’’ மலையகத் தமிழர் 200 குறித்து முரசொலி தலையங்கம் first appeared on Madras Murasu.
]]>இலங்கையில் மலையகத்தில் தமிழர் குடியேறி -– அந்த மண்ணை வாழ்வித்து 200 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த நிலையில் மலையகத் தமிழ் மக்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். இதயத்தின் அடியாழத்தில் இருந்து அன்புடனும் அக்கறையுடனும் தெரிவித்த வாழ்த்துகள் ஆகும் இவை.
*மனிதன் வாழ்ந்திராத மலைக்காடுகளை மலையகத் தோட்டங்களாக மாற்றியவர்கள் மலையகத் தமிழர்கள் ஆவார்கள்.
மலையகத் தமிழ்த் தொழிலாளர்களின் வரலாறு இலங்கையில் காப்பி பயிர் செய்யப்பட்ட ஆரம்பகட்டத்தில் இருந்து தொடங்குகிறது.
*இது இலங்கைப் பொருளாதாரத்தில் மகத்தான மாற்றத்தை உருவாக்கியது. பின்னர், ரப்பர், தென்னை என அனைத்துப் பணப் பயிர்களது உற்பத்தியும் மலையகத் தமிழர்களது உழைப்பால் உருவானதுதான்.
*பயிரிடப்படாத நிலத்தை பயிரிட்டும் -– காடுகளாக இருந்த நிலத்தை காசுப் பயிர்களாக விளைவித்தும் பின் தங்கிய பொருளாதாரத்தை முன்னணி பொருளாதாரமாக ஆக்கியவர்கள் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் ஆவார்கள்.
*இலங்கை நாட்டுக்காக தங்களது உழைப்பை வழங்கியவர்கள் மலையகத் தமிழர்கள். இலங்கை நாடு உயர உழைத்தவர்கள். தங்களது ரத்தத்தையும் வியர்வையையும் காலத்தையும் கடமையையும் அந்த நாட்டுக்காகவே ஒப்படைத்தவர்கள்.
– – என்று அந்த மக்களின் மகத்தான உழைப்பைப் பாராட்டி இருந்தார் முதலமைச்சர் அவர்கள்.
“இத்தகைய மலையக மக்களின் நீதியும் உரிமையும் நிலைநாட்டப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கல்வி, சுகாதாரம், வாழிட உரிமைகள், பொருளாதார உதவிகள், சமூக உரிமைகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும்.”என்பதையும் வலியுறுத்தி இருந்தார் முதலமைச்சர் அவர்கள். ஏனென்றால் அம்மக்களின் நிலைமை என்பது பெரிதாக மாறிவிடவில்லை. இலங்கையை உயர்த்திய, மேம்படுத்திய அவர்களது வாழ்க்கை மேலும் முன்னேற வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக முதல்வர் அவர்கள் வலியுறுத்தி இருந்தார்.
முதலமைச்சர் அவர்களின் உரை, இலங்கையில் நடைபெறும் விழாவுக்காக தயாரிக்கப்பட்டது ஆகும். இலங்கையில் குடியமர்த்தப்பட்ட மலையகத் தமிழர்களது 200 ஆவது ஆண்டுவிழாவை முன்னிட்டு ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.“நாம் 200 – – ஒற்றுமை, பன்முகத்தன்மை மற்றும் பாரம்பர்யத்தின் முழக்கம்”என்பது இந்த நிகழ்ச்சியின் பெயர். இந்த நிகழ்ச்சியை இலங்கை மலையகத் தமிழர்களுக்காக இலங்கையின் உள்நாட்டு தோட்டத் தொழில் துறை மற்றும் அரசு தொழில் துறை அமைச்சகம் முன்னெடுத்தது. அந்த விழா ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டதால் தயாரிக்கப்பட்ட உரை இது. ஆனால் அந்த உரை, விழாவில் ஒளிபரப்பப்படவில்லை.
இது குறித்து ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில்,‘தமிழ்நாடு முதலமைச்சரின் உரையை ஒளிபரப்பக் கூடாது என்று இந்திய பா.ஜ.க. அரசு தடை போட்டுவிட்டது’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை விட ஜனநாயக மறுப்பு, தமிழர் விரோதச் செய்கை இருக்க முடியாது.
முதலமைச்சர் உரையைத் தடை செய்வதன் மூலமாக, மலையகத் தமிழர்கள் மீதான தி.மு.க.வின் பற்றுதலை மறைக்கும் சதிச் செயலை ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்துள்ளது.
இதே நிகழ்வில் இன்னொரு சதியையும் ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்துள்ளதை தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் அம்பலப்படுத்தி இருக்கிறார்கள்.
“அந்த விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்றும் முறையான அழைப்பு தமிழ்நாடு அரசிற்கு அனுப்பப் பட்டது. முதலமைச்சர் அவர்கள் அந்த நிகழ்வில் கலந்து கொள்ள இயலாத நிலையில், என்னை அந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு அவர்கள் பணித்திருந்தார்கள். இலங்கை பயணம் மேற்கொள்வதற்காக ஒன்றிய அரசின் வெளிவிவகாரத் துறையிலிருந்து உரிய அனுமதியினை பெறு வதற்கு கடந்த மாதம் 28-ஆம் தேதி உரிய வழிமுறைப்படி விண்ணப்பம் நம்முடைய பொதுத்துறையால் அனுப்பப்பட்டுவிட்டது. political clearance என்று சொல்லக்கூடிய வெளிவிவகாரத்தின் அனுமதி கிடைப்பதற்காக நான் காத்துக் கொண்டிருந்தேன்,
அக்டோபர் 28 ஆம் தேதி அன்று பொதுத் துறையின் வாயிலாக ஒன்றிய அரசிற்கு அனுப்பப்பட்டது. விழா நவம்பர் 2-ஆம் தேதி மதியம். ஆனால் 1-ஆம் தேதி இரவு எட்டரை மணி வரை வரவில்லை. ஒன்றிய அரசிடமிருந்து அனுமதி இதுவரை வராத காரணத்தால் நான் பயணத்தை மேற்கொள்ள இயலாத நிலையில் இருப்பதை சுட்டிக்காட்டி, என்னுடைய பயண ஏற்பாடுகளை நான் இரத்து செய்துவிட்டு வீடு திரும்பினேன். அதற்குப்பிறகு ஒன்பதரை மணிக்கு மேல் அனுமதி வந்திருக்கிறது. ஆனால் அதற்கு முன்னதாக நான் பயண ஏற்பாடுகளை எல்லாம் இரத்து செய்துவிட்ட காரணத்தினால், இரவு 8.30 மணிக்கு மேல் அத்தகைய அனுமதி கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று கருதி, முறைப்படி விழா ஏற்பாட்டாளர்களிடம் இதனை தெரிவித்துவிட்டு பயண ஏற்பாடுகளை எல்லாம் இரத்து செய்துவிட்டோம்.”என்று சொல்லி இருக்கிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு.
வெளிநாட்டில் நடைபெறும் விழாவுக்கு அனுமதி தருவதில் ஒன்றிய அரசு எப்படி நடந்து கொண்டுள்ளது என்பதன் மூலமாக – எதனால் இப்படி நடந்து கொண்டது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
குடியுரிமைச் சட்டத்தின் மூலமாக இலங்கைத் தமிழர்களை குடியுரிமை அற்றவர்களாக ஆக்கிய பா.ஜ.க., இப்போது மலையகத் தமிழர்கள் விழாவில் எத்தகைய சதிச்செயல்களில் ஈடுபடுகிறது என்பது புரிகிறது. இந்த நிலையில் மலையகத் தமிழர் மாநாட்டில் கலந்து கொள்ள பா.ஜ.க. அமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கை சென்றிருக்கிறார்.
இன்னமும் இந்திய மீனவர்கள், படும் துன்ப துயரங்களுக்கு முற்றுப்புள்ளிவைக்கத் துப்பு இல்லாத பா.ஜ.க. இலங்கைக்குப் போய் மலையக மக்களை ஏமாற்றலாம் என்று நினைப்பது காலக் கொடுமையே ஆகும்.
The post ’’துப்பு இல்லாத பா.ஜ.க..!’’ மலையகத் தமிழர் 200 குறித்து முரசொலி தலையங்கம் first appeared on Madras Murasu.
]]>The post ’’ஆளுநர் பதில் சொல்லியாக வேண்டும்” முரசொலி first appeared on Madras Murasu.
]]>தான் பதில் சொல்ல வேண்டியவை எதற்கும் பதில் சொல்லாமல் –- ஆரிய சனாதன வகுப்பு எடுத்துக் கொண்டு இருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அவரைச் சட்டத்தின் நீதிமன்றத்தில் நிறுத்தி இருக்கிறது தமிழ்நாடு அரசு. இனி ஆளுநர் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் அவரது முகம் கிழித்தெறியப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதவியேற்றார். அவர் பதவியேற்றது முதல், தமிழ்நாடு அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருவதையே வழக்கமாக கொண்டுள்ளார். தமிழ்நாடு அரசு அனுப்பும் கோப்புகளுக்கு உடனுக்குடன் கையெழுத்து போடாமல், ஒவ்வொரு கோப்புக்கும் விளக்கம் கேட்பதையே வழக்கமாக வைத்துள்ளார். அரசியல் எதிரி போன்று செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு சட்டமன்றமானது தனது கடமைகளைச் செய்ய விடாமல் முட்டுக்கட்டை போடுகிறார்.
அரசியல் சாசன பிரிவுகள் 200 மற்றும் 163–-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை ஆளுநர் தவறாகப் பயன்படுத்தி உள்ளதாக குற்றம்சாட்டியுள்ள தமிழ்நாடு அரசு, ‘நீட்’ விலக்கு மசோதா, பல்கலைக்கழக சட்டங்களை திருத்துவதற்கான மசோதா உள்ளிட்ட 12 மசோதாக்கள், 4 நடவடிக்கை உத்தரவுகள், 54 கைதிகளின் முன்கூட்டி விடுதலை தொடர்பான கோப்புகள் உள்ளிட்டவை தமிழ்நாடு ஆளுநரால் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் பதவி ஒரு சம்பிரதாய பதவி என்றும், ஆளுநர் அமைச்சரவை ஆலோசனையின்படி செயல்படக் கடமைப்பட்டவர் எனவும் முந்தைய வழக்குகளில் உச்சநீதிமன்றம் கூறியுள்ளதை சுட்டிக் காட்டியுள்ள தமிழ்நாடு அரசு, மசோதாக்கள் மற்றும் அரசு உத்தரவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க சர்க்காரியா கமிஷன் பரிந்துரை அடிப்படையில் கால வரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் தாமதிப்பதன் மூலம் பேரவை செயல்பாடுகளையே ஆளுநர் தடுக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மற்றும் அரசமைப்புச் சட்டத்தின் செயல்பாட்டுக்கு முட்டுக்கட்டையாக அவரது செயல்பாடுகள் அனைத்தும் உள்ளது. பல்வேறு மசோதாக்களை நிலுவையில் வைத்துள்ளது மட்டுமின்றி, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள் தொடர அனுமதி தருவதிலும் ஆளுநர் தாமதம் செய்கிறார். சரியான காரணங்களை தெரிவிக்காமல், அரசு அனுப்பும் கோப்புகளை ஆளுநர் திருப்பி அனுப்புகிறார். ஆளுநர் திருப்பி அனுப்பிய கோப்புகளை அரசு உரிய விளக்கத்துடன் மீண்டும் அனுப்பியபோதும் ஆளுநர் ஒப்புதல் தர மறுக்கிறார்.
அரசால் அனுப்பப்படும் கோப்புகள், அரசாணைகள் மற்றும் கொள்கை முடிவுகளுக்கு ஒப்புதல் தராமல் தாமதிக்கும், ஆளுநரின் இந்த நடவடிக்கையால் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
எந்தவொரு அவசர சட்டமும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 6 வாரங்களில் அது நிரந்தரச் சட்டமாகியிருக்க வேண்டும். தற்போது வரை 12க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு கையெழுத்து போடாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி நிலுவையில் வைத்துள்ளார். இதனால் பல வகையில் அரசால் துரிதமாகச் செயல்பட முடியவில்லை.
கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் பதவிக்காலத்தை ஐந்து ஆண்டுகளிலிருந்து மூன்று ஆண்டுகளாக குறைப்பது தொடர்பான சட்டத்திருத்தம், மாநிலப் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்குதல், தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக் கழகத்தை உருவாக்குவது உள்ளிட்ட மசோதாக்கள் அனுப்பப்பட்டுள்ளன. இவற்றை முடக்கி வைத்திருக்கிறார். இதனால் பல்கலைக் கழகங்கள் செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது. சித்த மருத்துவ பல்கலைக் கழகத்தின் நோக்கத்தையே சிதைக்கிறார்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த விஜயபாஸ்கர், ரமணா, வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் மீதான ஊழல் புகாரில் வழக்குப்பதிவு செய்ய 2022 செப்டம்பர் மாதம் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது. இதுவரை அனுமதி தராமல் ஆளுநர் இழுத்தடித்து வருகிறார். அமைச்சராக செந்தில்பாலாஜியை நீடிக்கக் கூடாது என்று சொல்லி பெரிய பிரச்சினையைக் கிளப்பிய ஆளுநர் ரவி, கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் அமைச்சர்கள் விஷயத்தில் எப்படி நடந்து கொள்கிறார் என்பதில்தான் அவரது உண்மையான முகம் வெளிச்சத்துக்கு வருகிறது.
“நான் திருப்பி அனுப்பவில்லை என்றால் நிராகரித்ததாக அர்த்தம்” என்று ஆணவமாகச் சொன்னவர் இந்த ஆர்.என்.ரவி. அந்தளவுக்கு அரசியலமைப்புச் சட்டத்தை கரைத்துக் குடித்தவர் அவர். எந்த சட்டமாக இருந்தாலும் ஒரு முறை விளக்கம் கேட்கலாம். திருப்பி அனுப்பலாம். இரண்டாவது முறை அரசு அனுப்பினால், அதனை ஆளுநர் ஏற்கத்தான் வேண்டும். அதைச் செய்வது இல்லை. அப்படியே ஊறுகாய் பானையில் ஊறப்போட்டு விடுவார். இதுதான் அவரது தந்திரம் ஆகும்.
நீட் விலக்கு மசோதாவை அரசியல் உள்நோக்கத்தோடு நிறுத்தி வைத்தார் என்றால், ஆன்லைன் ரம்மி மசோதாவையும் நிறுத்தி வைத்தார். ஆன்லைன் ரம்மி நடத்துபவர்களை ராஜ்பவனுக்கு அழைத்து பேசினார். இதை விட வெட்கக்கேடு இருக்க முடியுமா? ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்துக்கு முன்னதாக பொதுமக்கள் கருத்தை தமிழ்நாடு அரசு கேட்டது. ‘இதற்கெல்லாமா பொதுமக்கள் கருத்தை கேட்பார்கள்?’ என்று கிண்டல் செய்தது பா.ஜ.க. ஆனால், ஆன்லைன் ரம்மி நடத்துபவர்களையே சந்தித்து பேசினார் ரவி. அப்போது பா.ஜ.க.வால் வாயைத் திறக்க முடியவில்லை.
ஆண்டின் முதல் கூட்டத்தொடரின் முதல் நாளன்று ஆளுநர் உரையாற்ற வேண்டும் என்பது ஒரு வழக்கம். அரசு தயாரித்து தரும் உரையை வாசித்து விட்டுச் செல்ல வேண்டும். அதையே மாற்றியும் திருத்தியும் நீக்கியும் சேர்த்தும் தன் இஷ்டத்துக்கு தான்தோன்றித்தனமாக நடந்து கொண்டவர் ஆளுநர் என்பதை அகில இந்திய ஊடகங்கள் அனைத்துமே கண்டித்தன. அதன்பிறகும் அவர் திருந்துவதாகத் தெரியவில்லை.
உச்சநீதிமன்ற வழக்குக்குப் பிறகாவது திருந்துவாரா என்பதைப் பார்ப்போம்.
The post ’’ஆளுநர் பதில் சொல்லியாக வேண்டும்” முரசொலி first appeared on Madras Murasu.
]]>The post ”அண்ணன் இருக்கின்றார்..!” முத்தமிழறிஞர் கலைஞர் first appeared on Madras Murasu.
]]>அண்ணன் இருக்கின்றார்!
சந்தனமே!
தென் பொதிகை தவழ்ந்து வரும் இளங்காற்றே!
நந்தாச் சுடர் விளக்கே!
நறுமணத்துப் புதுமலரே!
கண்ணியத்தைக் கடமையினைக் கட்டுப்பாடெனும்
பண்பைக் கண்போலக் காத்திடற்குக்
கற்பித்த பெருந்தகையே!
சிங்கத் தமிழர்களின் சிந்தையெலாம் பறிகொண்டு
வங்கக் கடலோரம் வாய்மூடிக் கண்மூடி
மோனத் தவமிருக்கும் முத்தமிழே!
குடிசையெலாம் மேலுயர்ந்து
கோபுரமாய் விளங்கிடவும்
மடமையிருள், கொல்வறுமை
மடிந்தே மருகிடவும்
எல்லாரும் நலனெல்லாம்
எய்தி மகிழ்ந்திடவும்
நல்லதோராட்சியினைத்
தோற்றுவித்த நாயகமே!
எண்ணக் குறிப்பறிந்தே
ஈடேற்றும் தம்பியரின் அண்ணாவே!
எனையிங்கே ஆளாக்கிக்
காத்திட்ட ஆருயிரே!
நும்கனவு அத்தனையும் நனவாக்கும்
சீரியநற் பணியினையே செய்கின்றோம்
நாள்தோறும்!
செய்பணிகள் அனைத்திலுந்தான்
அண்ணனே! நீ இருக்கின்றாய்!
-– என்றே எழுதினார் முத்தமிழறிஞர் கலைஞர்! காஞ்சி தந்த வள்ளுவன் பேரறிஞர் அண்ணா,
உதயமான நாள் செப்டம்பர் 15 அன்று. அது இன்று!
முதன் முறை சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணா அவர்கள் தனது கன்னிப் பேச்சில் கனல் தெறிக்க ஒரு கருத்தைச் சொன்னார்கள். “நாங்கள் ஒரு விசித்திர அரசியல் கூட்டத்தினர் என்று நீங்கள் அறிவீர்கள். இந்தச் சபையும் அறியும். நாங்கள் ஒரு விசித்திர அரசியல் கூட்டத்தினர் என்றால் எங்களைத் தோற்றுவித்ததும் இந்த நாட்டிலுள்ள ஒரு விசித்திரமான தலைமைதான் என்பதை யாவரும் உணர வேண்டும். விசித்திரமான நிலைமைகள்தான் விசித்திரமான கட்சிகளை ஏற்படுத்துகின்றன” என்று அண்ணா அவர்கள் குறிப்பிட்டார்கள்.
இன்னொன்றையும் சொன்னார் அண்ணா தொலைநோக்குப் பார்வையுடன். “இந்த சபைக்கு நாங்கள் வந்தது என்றைக்கும் எதிர் அங்கத்தினர்களாகவே இருப்பதற்காக நுழையவில்லை. இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றைக்காவது ஒருநாள் ஆட்சிப் பொறுப்பை ஏற்கத்தான் போகிறோம்” –- என்று அண்ணா அவர்கள் சொன்ன நாள்: 4.7.1957. எண்ணி பத்தே ஆண்டில் அரியணையில் அமர்ந்துவிட்டார்.
தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார். இன்று வரை ‘தமிழ்நாடு’ என்ற பெயரே அச்சம் தருவதாக இருக்கிறது. தமிழும் ஆங்கிலமும் என்பதை வரையறுத்தார். இந்தித் திணிப்புக்கு தடுப்புச் சுவர் அப்படியே இருக்கிறது. இன்று மற்ற மாநிலங்களும் இந்தித் திணிப்பை எதிர்க்கத் தொடங்கி இருக்கின்றன. சுயமரியாதைத் திருமணம் செல்லும் என்றார் அண்ணா. கடந்த வாரம் கூட உச்சநீதிமன்றம் இதனை உறுதி செய்துள்ளது. ‘விசித்திரமான நிலைமைகளை மாற்ற வந்த விசித்திரமான கட்சி’ என்பதை நிரூபித்தார் அண்ணா!
அண்ணா மறைவுற்ற போது பெரியார் சொன்னார்: ‘அண்ணா இருப்பது போலவே காரியங்கள் நடைபெற வேண்டும்’ என்று! இந்த சொற்களுக்குள்தான் எத்தனை பொருள்? அண்ணா இருப்பதைப் போலவே கொள்கை இருக்க வேண்டும், கோட்பாடு இருக்க வேண்டும், கழகம் இருக்க வேண்டும், கண்ணியம் நிலைக்க வேண்டும், கட்டுப்பாடு காக்க வேண்டும், தமிழ்நாடு காப்பாற்றப்பட வேண்டும். இவை அனைத்தும் சேர்ந்தது தான், ‘அண்ணா இருப்பது போலவே காரியங்கள் நடைபெற வேண்டும்’ என்பது ஆகும்.
கலைஞராட்சி, அண்ணாவின் ஆட்சியாக அப்படியே தொடர்ந்தது. மாநில சுயாட்சி இல்லையே என்று வருந்தினார் அண்ணா. மாநில சுயாட்சியை இந்திய அரசியலுக்குள் கொண்டு சென்று அதனை நிலைநிறுத்த அயராது உழைத்தார் கலைஞர். மாநில சுயாட்சித் தீர்மானம் போட்ட முதல் இந்திய மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றினார் கலைஞர். மாநிலக் கட்சிகளின் கருத்தைக் கேட்டு ஒன்றிய அரசு செயல்படும் நிலையை உருவாக்கினார். கூட்டணி ஆட்சி என்பது கூட்டாட்சியாகவும்– மாநில சுயாட்சியை உயிர்ப்பிப்பதாகவும் ஆக்கினார் கலைஞர். சமூகநீதிக் கோட்பாட்டை இந்தியவியல் கோட்பாடாக மாற்ற – மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளைச் செயல்படுத்த வைத்தார் கலைஞர்.
மாநிலக் கட்சிகள்தானே, ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் தானே, ஒரு மாநிலக் கட்சித் தலைவர்தானே என்ற ஏளனப் பேச்சை அகற்றி, ‘மாநிலக் கட்சித் தலைவர்களே, அகில இந்தியத் தலைவர்களாக வலம் வரலாம்’ என்ற நிலையை கலைஞர் உருவாக்கினார். வடக்கின் தராசை கொஞ்சம் இறக்கி, தெற்கின் தராசை கொஞ்சம் உயர்த்தி -– ஒன்றிய முள்ளின் முனையை கொஞ்சம் மழுக்கிக் காட்டினார் கலைஞர். ‘விசித்திரமான நிலைமைகளை மாற்ற வந்த விசித்திரமான கட்சி’ என்பதை நிரூபித்தார் கலைஞர்!
அந்த உருவாக்கத்தின் இன்றைய செயல்வடிவமாக திராவிட மாடல் ஆட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காட்சி அளிக்கிறார்கள். தமிழ்நாட்டுக்குள் உருவான கூட்டணி பாணியை அகில இந்தியாவுக்கும் விரித்தார் இவர். ‘கரும்பு ஆலையில் மீண்டும் மீண்டும் பிழிவதைப் போல ஒரு சொட்டுக் கூட சிந்தாமல் பிழிய வேண்டும்’ என்று கூட்டணிக்கான பாணியைச் சொன்னார் அண்ணா. செய்து கொண்டிருக்கிறார் இன்றைய தலைவர். ‘இந்தியா’ கூட்டணியின் விதை மட்டுமல்ல, பதியமும் இங்கே போடப்பட்டு, ஒவ்வொரு மாநிலத்துக்கும் எடுத்துச் சென்று நட்டுவிக்கப்பட்டது. இனி தோப்பாகும்.
அண்ணாவே நினைத்துப் பாராத உச்சம் இது!
‘திராவிட மரபினத்தைச் சார்ந்தவன் நான்’ –- என்று சொன்னார் அண்ணா. திராவிட மாடல் ஆட்சி என்ற பெயரே அச்சமூட்டுகிறது. ‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்றார் கலைஞர். ஜாதி வேறுபாடு மட்டுமே அவரால் நீக்க முடிந்தது. இதோ பெண் ஓதுவார்கள் பாடும் காட்சியைப் பார்க்கும் போது பால் பேதமும் பஞ்சாய் பறக்கிறது. தமிழ்நாடு அரசின் செயல் திட்டங்களை பிற மாநிலங்கள் பின்பற்றும் வண்ணம் ஒரு கொள்கையாட்சியை நடத்தி வருகிறார் மாண்புமிகு முதலமைச்சர். ‘மதறாசி’ போய்விட்டது இப்போது. ‘இப்படி ஒரு முதலமைச்சர் வேண்டும்’ என்று வங்காளத்திலும், மலையாளத்திலும் தெலுங்கிலும் குரல் கேட்கிறது. ‘விசித்திரமான நிலைமைகளை மாற்ற வந்த விசித்திரமான கட்சி’ என்பதை நிரூபித்து வருகிறார் தலைவர் மு.க.ஸ்டாலின்!
தொடக்கத்தில் சொல்லப்பட்ட கவிதைக்கு முத்தமிழறிஞர் கலைஞர் வைத்த தலைப்பு: ‘அண்ணன் இருக்கிறார்’. ஆமாம்! அண்ணன் இருக்கிறார். வாழ்கிறார். ஆள்கிறார்.
அண்ணா வாழ்க!
அண்ணா ஆட்சி தொடர்க!
The post ”அண்ணன் இருக்கின்றார்..!” முத்தமிழறிஞர் கலைஞர் first appeared on Madras Murasu.
]]>The post ‘’இந்தியா’வின் முதல் வெற்றி..!’’ முரசொலி சொல்கிறது first appeared on Madras Murasu.
]]>‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் நடந்து முடிந்துள்ள இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளன. இது ‘இந்தியா’ கூட்டணிக்குக் கிடைத்த முதல் வெற்றி ஆகும்.
6 மாநிலங்களில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க. பின்னடைவை சந்தித்துள்ளது. இது பா.ஜ.க.வுக்கு அடுத்தடுத்து வரப் போகும் தோல்வியின் தொடக்கமாக அமைந்திருக்கிறது.
* உத்தரப்பிரதேச மாநிலம் கோசி தொகுதியை சமாஜ்வாதி கட்சி கைப்பற்றி இருக்கிறது.
* கேரள மாநிலத்தில் உள்ள புதுப்பள்ளி தொகுதியை காங்கிரஸ் கட்சி கைப்பற்றி இருக்கிறது.
* மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள துப்குரி தொகுதியை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி கைப்பற்றி இருக்கிறது.
* ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தும்ரி தொகுதியை ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி கைப்பற்றி இருக்கிறது.
காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமூல் காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகியவை ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கிய கட்சிகள் ஆகும்.
* திரிபுரா மாநிலத்தில் பாக்ஸாநகர், தன்பூர் ஆகிய இரு தொகுதிகளையும் பா.ஜ.க. கைப்பற்றி இருக்கிறது.
* உத்தரகண்ட் மாநிலத்தில் பாகேஸ்வர் தொகுதியையும் பா.ஜ.க. கைப்பற்றி உள்ளது.
இருப்பினும், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், கேரளா ஆகியவை மிகப் பெரிய மாநிலங்கள் என்பதால் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் வெற்றிக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைத்துள்ளது.
6 மாநிலங்களை உள்ளடக்கிய 7 தொகுதிகளுக்கு கடந்த 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தல்கள் அந்தந்த மாநில
அளவில் மிகமிக முக்கியமானவையாக கருதப்பட்டன. ‘இந்தியா’
கூட்டணி உருவானதால் அகில இந்திய அளவிலும் கவனத்தைப் பெற்றன.
இதில் மிகமிக முக்கியமானது உத்தரப்பிரதேச மாநிலம் கோசி சட்டமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தல் ஆகும். சமாஜ்வாதி கட்சி
யிடம்தான் இந்த தொகுதி இருந்தது. எம்.எல்.ஏ.வான தாராசிங்
செளகான் என்பவரை, வலுக்கட்டாயமாக பா.ஜ.க.வுக்கு இழுத்துச் சேர்த்தார் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத். அவர் கடந்த ஜூலை மாதம் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு பா.ஜ.க.வில் இணைந்தார். பா.ஜ.க.வில் இணைந்தால், இடைத்தேர்தலிலும் நீங்கள்தான் பா.ஜ.க. வேட்பாளர் என்று யோகி வாக்குறுதி கொடுத்தார். பா.ஜ.க.
சார்பில் தாராசிங் செளகான் போட்டியிட்டார். சமாஜ்வாதி கட்சி சார்பில் சுதாகர் சிங் போட்டியிட்டார். இரண்டு கட்சிகளுக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டது. பா.ஜ.க. வேட்பாளரை விட 42 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று சமாஜ்வாதி வேட்பாளர் வெற்றி பெற்றுவிட்டார்.
இது யோகிக்கு மிகப் பெரிய சறுக்கலாக அமைந்துள்ளது. இதன்மூலம் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை வலைவீசி பிடிக்கும் பா.ஜ.க. பார்முலாவுக்கு உத்தரபிரதேச மக்கள் சம்மட்டி அடி கொடுத்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் கடந்த 6 மாதங்களில் 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், 3 தொகுதி களிலும் பா.ஜ.க. படுதோல்வியடைந்தது. இந்த 3 தொகுதிகளிலும் மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. தோல்வியைத் தழுவியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கேரள மாநிலம் புதுப்பள்ளி தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். காங்கிரஸ்
வேட்பாளர் 80 ஆயிரம் வாக்குகளும், அடுத்து வந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் 42 ஆயிரமும் பெற்ற நிலையில் பா.ஜ.க. மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. பா.ஜ.க. வேட்பாளர் லிஜின் லால் வாங்கிய வாக்குகள்
6 ஆயிரத்து 558 தான். இவரது டெபாசிட்டே பறி போய்விட்டது. இதே தொகுதிக்கு 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் ஹரி வாங்கிய வாக்குகள் 11 ஆயிரத்து 694. இப்போது இரண்டு ஆண்டுகளில் 5 ஆயிரம் வாக்குகள் பா.ஜ.க.வுக்கு குறைந்து விட்டது. இதுதான் உன்னிப்பாக கவனிக்கத்தக்கது ஆகும்.
மேற்குவங்க மாநிலம் துப்குரி தொகுதி, பா.ஜ.க. வசம் முன்பு இருந்தது. பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான விஷ்ணுபத ராய் மரணம் அடைந்தார். எனவே அத்தொகுதியில் நடைபெற்ற இடைதேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி வாகை சூடியுள்ளது. அக்கட்சி வேட்பாளர் நிர்மல் சந்திர ராய், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளரை காட்டிலும்
4 ஆயிரத்துக்கும் அதிக வாக்குகள் பெற்று வெற்றியை தனதாக்கினார். காஷ்மீரில் மரணம் அடைந்த சி.ஆர்.பி.எப். வீரர் மனைவியை நிறுத்தி அனுதாப வாக்குகளை வாங்க முயற்சித்தது பா.ஜ.க. அதிலும் தோல்வியைத் தழுவியது.
ஜார்க்கண்ட் மாநிலம் தும்ரி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி வேட்பாளர் பிபி தேவி, 1 லட்சத்துக்கும் கூடுதலான வாக்குகளை பெற்றுள்ளார். 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. ஆதரவு வேட்பாளரை தோற்கடித்தார்.
திரிபுரா மாநிலத்திலுள்ள 2 தொகுதிகளிலும், உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள ஒரு தொகுதியிலும் பா.ஜ.க. வெற்றி பெற்றது.உத்திரகாண்டில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சந்தன் ராம் தாஸ் அண்மையில் மரணம் அடைந்தார். அவரது மனைவியையே வேட்பாளராக நிறுத்தியது பா.ஜ.க. ஆனாலும் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் பா.ஜ.க.வால் வெற்றி பெற முடிந்தது.
-– இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும் போது, ‘இந்தியா’
கூட்டணியை நோக்கி இந்திய மக்கள் அணி திரள்வதை அறிய முடிகிறது.
The post ‘’இந்தியா’வின் முதல் வெற்றி..!’’ முரசொலி சொல்கிறது first appeared on Madras Murasu.
]]>The post ’’மோடி கேள்விக்கு மோகன் பகவத் பதில்..!” முரசொலி first appeared on Madras Murasu.
]]>மணிப்பூருக்கு போய் பார்க்காத -– அதானி ஊழல்கள் பற்றி பதில் சொல்லாத -– 7.5. லட்சம் கோடி ரூபாய் முறைகேடுகள் பற்றி விளக்கம் அளிக்காத -–- பிரதமர் நரேந்திரமோடி, சனாதனம் பற்றி வாயைத் திறந்துள்ளார். ஒன்றிய அமைச்சர்களுக்கு சனாதன கதாகாலட்சேபம் நடத்த உத்தரவிட்டுள்ளார். ஒன்றிய அமைச்சர்கள் பேசுவதற்கு தமிழில் நிறைய வீடியோக்கள் இருக்கிறது. அதனை யாராவது மொழி பெயர்த்து அனுப்பி வைக்கலாம்.
சனாதனம் குறித்து பிரதமர் மோடி எழுப்பும் கேள்விகளுக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் விரிவாக விளக்கமாக பதில் அளித்துவிட்டார். “இரண்டாயிரம் ஆண்டுகளாக சாதி ரீதியிலான பாகுபாடு இருக்கிறது” என்பதை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஒப்புக்கொண்டு விட்டார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு பேசும் போது, “சமூக அமைப்பில் சக மனிதர்களை நாம் பின்தங்க வைத்துள்ளோம். இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்த நிலை தொடர்கிறது. நாம் அவர்களுக்கு சமத்துவத்தை வழங்கும்வரை, இட ஒதுக்கீடு போன்ற சில சிறப்பு சலுகைகள் வழங்க வேண்டும். எனவே, இத்தகைய பாகுபாடு இருக்கும் வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும். அரசியலமைப்பு சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதனை ஆர்.எஸ்.எஸ். ஆதரிக்கும்” என்றும் மோகன் பகவத் சொல்லி விட்டார். ஒன்றிய அமைச்சர்கள், மோகன் பகவத் பேச்சைப் படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
On reservations, RSS chief Mohan Bhagwat says, “We kept our own fellow human beings behind in the social system…We did not care for them, and this continued for almost 2,000 years…Until we provide them equality, some special remedies have to be done…Reservations are one of them. Reservations should continue till there is such discrimination. The Sangh gives complete support to the reservations provided in the Constitution.” – ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
மோகன் பகவத் இப்படி பேசியதும் அவரை இணையத் தளங்களில் திட்டிக் கொண்டு இருக்கிறார்கள். ‘நீங்களே இப்படிப் பேசலாமா?’ என்று சனாதனத்தை மறைக்கும் சக்திகள் அவரை விமர்சித்து பதிவுகள் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். மாண்புமிகு அமைச்சர் உதயநிதி அவர்கள் பேசியதைத் திரித்தும், ‘சனாதனம் என்றால் ஒற்றுமைதான்’ என்றும் பொய் சொன்ன கூட்டம், இப்போது மோகன் பகவத்தும் அதைச் சொன்னதும் அவரையும் திட்டத் தொடங்கி இருக்கிறது.
இந்தக் கருத்தை மோகன் பகவத் தொடர்ந்து சொல்லி வருகிறார்.
மும்பை ரவீந்தர் மந்திர் வளாகத்தில் நடந்த புனிதர் சிரோன்மணி ரோஹிதாஸின் 647 ஆவது பிறந்த நாளில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சொன்னார்:
“இந்து மதத்தில் சாதிகள் கிடையாது. உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி வேறுபாடுகள் கிடையாது. மேல் சாதி, கீழ் சாதி என்ற அடிப்படை அற்ற பழக்கத்தை உருவாக்கியவர்கள் பண்டிட்டுகளே” (6.2.2023) என்று பேசினார். உடனே மோகன் பகவத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. அவரது பேச்சை பூரி சங்கராச்சாரியார் கண்டித்தார். பீகார் மாநிலம் முசாபர்பாத் நீதிமன்றத்தில் மோகன் பகவத் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு விளக்க அறிக்கை கொடுத்தது. “பண்டிட்டுகள் என்று மோகன் பகவத் குறிப்பிட்டது எந்த ஒரு பிரிவினரையும் அல்ல. ஜாதி படி நிலைகளை ஏற்றுக் கொண்டவர்களைத்தான் அப்படிச் சொன்னார்” என்று விளக்கம் அளித்தார்கள். இவரது பேச்சு முக்கிய இணைய தளங்களிலும் வீடியோவாக உள்ளது.
“நாட்டில் அனைவரும் சாதி வர்ண பேதங்களை மறந்து விட வேண்டும். யாரேனும் இதைப்பற்றிக் கேட்டால் சமுதாய நலனில் அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் வர்ண மற்றும் சாதி அமைப்புகள் கடந்த கால விஷயம் எனவும், அதை அனைவரும் மறந்து விட வேண்டும்” என்று 8.10.2022 அன்று மோகன் பகவத் பேசி இருக்கிறார். ( தந்தி டி.வி.)
டாக்டர் மதன் குல்கர்னி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் ரேணுகா போகரே ஆகியோர் எழுதிய புத்தக வெளியீட்டு விழா நாக்பூரில் நடந்தது. அப்போது பேசிய மோகன் பகவத், “இப்போது யாராவது சாதி, வர்ணம் குறித்து கேள்வி கேட்டால் அவை கடந்து போனவை, அவைகள் மறக்கப்பட வேண்டும் என்று சொல்லுங்கள். பாகுபாடுகளை உருவாக்கும் அனைத்தும் மறுக்கப்பட்டு, தடுக்கப்பட வேண்டும். பாகுபாடு செய்பவை அனைத்தும் பூட்டப்பட வேண்டும். உலகின் எல்லா இடங்களிலும் முன்னோர்கள் தவறு செய்திருக்கிறார்கள். இந்தியாவும் அதற்கு விதிவிலக்கு அல்ல” என்று பேசினார். (8.10.2022)
அகமதாபாத் ஜி.எம்.டி.சி. மைதானத்தில் சமாஜ் சக்தி சங்கம் விழாவில் கலந்து கொண்டு மோகன் பகவத் பேசினார். “நியாயமான மற்றும் சமத்துவமான சமுதாயத்தை உருவாக்காமல் அரசியல் மற்றும் பொருளாதார சுதந்திரத்தை இந்தியா அடைய முடியாது என்று அம்பேத்கர் சொன்னார். அதை அடைய நம் சமூகத்தில் இருக்கும் வேறுபாடுகளை அகற்ற வேண்டும். நாம் கடந்த காலத்தில் ஒற்றுமையான சமூகமாக இருந்தோம். பின்னர் இந்த சாதிகள் மற்றும் வகுப்புகளை உருவாக்கினோம். இது நமக்குள் வேறுபாடுகளை உருவாக்கியது. இந்தச் சூழலை அன்னிய சக்திகள் பயன்படுத்திக் கொண்டார்கள். இந்த தீய சுழற்சியில் இருந்து நாம் முழுமையாக வெளியே வந்து ஒன்றுபட வேண்டும்” என்று வெளிப்படையாகவே பேசினார் மோகன் பகவத். (14.4.2023)
வர்ண -– சாதி அமைப்புகள் குறித்து மோகன் பகவத் சொன்னதுதான், பிரதமர் மோடிக்கு நமது பதில்கள் ஆகும். இந்த விளக்கத்தை ஒன்றிய அமைச்சர்கள் அனைவரும் உள்வாங்கிக் கொள்ளக் கேட்டுக் கொள்கிறோம்.
The post ’’மோடி கேள்விக்கு மோகன் பகவத் பதில்..!” முரசொலி first appeared on Madras Murasu.
]]>The post ’ஒரே நாட்டில் ஒரே மோடியா?’ முரசொலி விளாசல் first appeared on Madras Murasu.
]]>கடைசி நேரத்தில் அனைத்துத் தவறுகளையும் வரிசையாகச் செய்யத் தொடங்கி இருக்கிறார் பிரதமர் நரேந்திரமோடி!
இந்தியாவையே ‘பாரத்’ ஆக்க நினைப்பதும் – ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு குழு போட்டிருப்பதும் – -நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை போட்டு ஏதேதோ செய்யத் திட்டமிட்டு இருப்பதும் – – பதவிக்காலம் முடியும் நேரத்தில் அள்ளித்தெளிக்கும் அவசரக் கோலங்கள் ஆகும். எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று தெரியாமல் அனைத்து மாத்திரைகளையும் அள்ளிப் போடுவது ஆகும்.
ஒரே நாடு -– ஒரே தேர்தல் என்பது மோடி என்ற தனிமனிதர் நீங்கலாக அனைவருக்குமே ஆபத்தானது ஆகும். பின்னர் அவருக்கே ஆபத்தும் அதுதான். மோடியை இன்னொருவர் வீழ்த்துவதற்கும் வசதியான வாசல் ஆகும் அது. இந்த ஆபத்து தெரியாமல் தான் அதனைக் கையில் எடுத்துள்ளார்.
ஒரே நாடு -– ஒரே தேர்தல் வந்தால் தி.மு.க. ஆட்சி கலைக்கப்படுவதாகவும் -– தேர்தல் நடப்பதாகவும் –- அனைத்து பாரத அண்ணா தி.மு.க. வெற்றி பெற்றுவிட்டதாகவும் -– தான் முதலமைச்சர் ஆகிவிட்டதாகவும் கனவு கண்டு சிரிக்கிறார் பழனிசாமி. அவரிடம் இருக்கும் 60 தொகுதியும் பறி போய் மொத்த சட்டமன்றத்தையும் திராவிட முன்னேற்றக் கழகம் கைப்பற்றிவிடும் என்பதே
பகல் கனவு பழனிசாமிக்கு தெரியவில்லை. 60 எம்.எல்.ஏ.க்களுடன் தானும் ஒரு தலைவராக வலம் வரும் பழனிசாமி, சொந்த தொகுதியில் தோற்று –- தரையில் ஊர்ந்து கொண்டிருப்பார் என்பதே யதார்த்தம்.
பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் –- பா.ஜ.க. கொல்லைப் புறமாக ஆளும் மாநிலங்கள் -– எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் –- என இருக்கும் அனைத்து பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியும் பறி போய்விடும். இது எதையும் அறியும் சுய மூளை கூட இல்லாத ஒரு கூட்டம் தான், ஒரே நாடு – -ஒரே தேர்தல் என்பதைப் பார்த்து பல்லிளித்துக் கொண்டிருக்கிறது.
‘இனி எனக்கு பா.ஜ.க. என்ற கட்சியும் வேண்டாம் -– ஆர்.எஸ். எஸ்ஸும் வேண்டாம் –- வி.எச்.பி.யும் வேண்டாம் -– எவரும் வேண்டாம்’ என்பதை சொல்லாமல் சொல்லப் போகிறார் நரேந்திரமோடி. அதற்காக அவர் தயார் ஆகிக் கொண்டிருக்கிறார். அவர்கள் விரலால் அவர்களையே குத்தப் போகிறார். அதற்கு தயார் ஆவதற்கான நாடகங்களும் –- ஒத்திகைகளும் தான் இவை.
பத்து ஆண்டுகளாக தான் ஒருவரே என்ற கோதாவில் செயல்பட்டு வந்தார் பிரதமர் மோடி. வெளிநாடு செல்வார். வெளியுறவுத் துறை அமைச்சரை அழைத்துச் செல்ல மாட்டார். ஒப்பந்தங்களில் கையெழுத்துப் போடுவார். நிதி அமைச்சர் இருக்க மாட்டார். நாடாளுமன்றத்துக்கு வரமாட்டார். வந்தாலும் பேச மாட்டார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட மாட்டார். சொந்தக் கட்சி ஆலோசனைக் கூட்டத்திலேயே அவர் பேச்சை மற்றவர்கள் கேட்பார்கள். மற்றவர் பேச்சை அவர் கேட்க மாட்டார். அத்வானியும் ஜோஷியும் அடக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் தன்னை நோக்கி பிரதமர் வரும் போது மூத்த அமைச்சரான நிதின் கட்கரி முகத்தை திருப்பிக் கொண்டார்.
உலகம் முழுக்கப் போனார் பிரதமர். ஆனால் அவரை உலக நாடுகள் மத்தியில் தலைகுனிய வைத்தது அதானி விவகாரமும் மணிப்பூர் விஷமத்தனங்களும்!
இந்த ஆட்சிக்கு மிகப்பெரிய தலைகுனிவு அதானி விவகாரத்தில் வந்தது. பிரதமரின் நண்பர் என்பதால் அனைவருமே அமைதியாக இருந்தார்கள். மணிப்பூர் பற்றி எரியும் போது பிரதமர் ஏன் போகவில்லை என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் போது பா.ஜ.க. உறுப்பினர்களே தலைகவிழ்ந்து உட்கார்ந்து இருந்தார்கள். அவர்களால் என்ன செய்ய முடியும்? ‘பிரதமரே செல்லுங்கள்’ என்று சொல்ல முடியுமா?
‘நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவைக்கு வரவில்லை என்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன்’ என்று பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் பேசினார். அவரே வராமல் போனதை அக்கட்சி உறுப்பினர்களால் எப்படி கேட்க முடியும்?
20 ஆயிரம் கோடி போட்டு புதிய நாடாளுமன்றக் கட்டடம் எதற்காக கட்டப்பட்டது? அப்படி கட்டப்பட்ட கட்டடத்தில் எதற்காக கூட்டம் நடத்த முடியவில்லை? என்பதை எதிர்க்கட்சிகளைப் போலவே, பா.ஜ.க.
எம்.பி.கள் சிந்திக்க மாட்டார்களா?
தலைமைத் தேர்தல் ஆணையர் தேர்ந்தெடுக்கும் குழுவில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை நீக்குவதும் –- அமலாக்கத்துறை இயக்குநர் பதவியில் குறிப்பிட்ட நபர் தான் இருக்க வேண்டும் என்று அரசு சொல்வதை உச்சநீதிமன்றம் நிராகரிப்பதுமான நடத்தைகள் குழப்பமான நாட்டில் தான் நடக்கும். சீரான நிர்வாகம் நடக்கும் நாட்டில் நடைபெறவே நடைபெறாது.
தேர்தல் ஆணையத்தை அரசியல் கட்சி அலுவலகமாக மாற்றுவதும் – உச்சநீதிமன்றத்தின் மாண்பைக் குலைப்பதும் இந்தியாவின் அரசிய லமைப்பு சட்டத்துக்கு ஏற்படுத்தப்பட்ட கரும்புள்ளிகள் ஆகும்.
‘ஒற்றை மனிதரால் எல்லாம் மாறிவிடும் என்று நினைப்பது தவறு’ என்று திரும்பத் திரும்ப ஆர்.எஸ்.எஸ். சொல்வது யாரை நோக்கிய அம்பு?
இவை அனைத்தும் பிரதமர் நரேந்திரமோடியை சிக்கலுக்கு மேல் சிக்கலுக்கு உள்ளாக்கி குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன.
இதில் இருந்து மீள நினைத்தும் -– திசை திருப்பவும் -– புதிய வியூகம் என நினைத்து அவர் உருவாக்கும் சக்கரத்தில் அவரே சிக்கிக் கொள்ளப் போகிறார். இப்போதைக்கு இந்த படுகுழி பா.ஜ.க.வுக்குப் பிரகாசமாகத் தெரிகிறது.
The post ’ஒரே நாட்டில் ஒரே மோடியா?’ முரசொலி விளாசல் first appeared on Madras Murasu.
]]>The post ’’சனாதனமும் சனாதனிகளும்..!’’ முரசொலி தலையங்கம் first appeared on Madras Murasu.
]]>சனாதனம் – என்பது என்ன? வேறுபாடும் – பாகுபாடும் காட்டுவதுதான் சனாதனம். உயர்ந்த ஜாதி – தாழ்ந்த ஜாதி என்ற பேதத்தை உருவாக்குவது சனாதனம். ஜாதியில் மட்டுமல்ல ஆண் உயர்ந்தவன் – பெண் தாழ்ந்தவள் என்ற பேதத்தை உருவாக்குவதுதான் சனாதனம்.
சனாதனிகள் – என்பவர்கள் யார்? இந்த பாகுபாட்டையும் வேற்றுமையையும் காப்பாற்றுபவர்கள். அவர்களது மொழியில் தாழ்ந்தவர்களாக அடையாளம் காட்டப்படுபவர்களையும் – பெண்களையும் முன்னேறவிடாமல் தடுப்பவர்கள்தான் சனாதனிகள். ஒட்டுமொத்த இந்துப் பெண்களையும், பெரும்பான்மைஇந்து ஆண்களையும் இழிவுபடுத்தும் கொள்கைதான் சனாதனம். மனுஸ்மிருதியின் ஒவ்வொரு சூத்திரமும் இதனைத்தான் சொல்கிறது.
இத்தகைய சனாதனத்துக்கும் – சனாதனிகளுக்கும் எதிரான போராட்டம் தமிழ்ச் சமூகத்தில் பல்லாண்டுகளாக நடந்து வருகிறது. அதில் முதலாமவர் வான்புகழ் வள்ளுவர். அடுத்து வருகிறார் அருட்பிரகாச வள்ளலார். இதனை அரசியல் இயக்கமாக ஆக்கியவர் தந்தை பெரியார். இதுதான் இன்றுவரை ஒலித்துக் கொண்டு இருக்கிறது.
சங்க காலத்திலேயே துளிர் விட்டு – நிலப்பிரபுத்துவ காலத்தில் வேர் பதித்து – அன்னியப் படையெடுப்புகளால் ஆதிக்க சக்தியாகவே மாறி – காலனியக் காலத்திலும் அவர்களுக்கு அடிமைச் சேவகம் செய்தும் அச்சுறுத்தியும் பணிய வைத்து – விடுதலை பெற்ற இந்தியாவிலும் அந்தச் சிந்தனைகளைமுழுக்க முழுக்க விதைத்து சனாதனமும் – சனாதனிகளும் தங்களது ஆட்டத்தைநிறுத்தாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள் என்பது உண்மைதான்.
இத்தகைய சனாதனத்தையும் – சனாதனிகளையும் தொடக்கக் காலத்தில் இருந்து அம்பலப்படுத்தியதில் பெரும் பங்கு வகித்தது திராவிட இயக்கம். அதனால்தான் திராவிட இயக்கத்தின் மீது அவர்களுக்கு அடங்காத கோபம். ‘சனாதன – வர்ணாசிரமத்தில்’ மட்டும் கை வைக்காமல் இருந்திருந்தால்மற்ற இயக்கத்துக்குள் ஊடுருவியதைப் போல திராவிட இயக்கத்துக்குள்ளும் அவர்கள் ஊடுருவி இருப்பார்கள். இயக்கத்தையே அழித்திருப்பார்கள். சிதைத்திருப்பார்கள்.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்கு ஆறறிவும் கடந்த பகுத்தறிவுஇருந்தது. பட்டறிவு இருந்தது. அதனால்தான் இயக்கத்தின் நோக்கத்தைச் சரியாக வரையறுத்தார். மேல் கட்டுமானத்தை மாற்றினால் போதாது, அடிக்கட்டுமானத்தை சரியாக உருவாக்க வேண்டும் என்றார். அவரால் உருவாக்கப்பட்ட இயக்கத்துக்குள் ஆரிய சக்திகள் – சனாதன சக்திகளால் ஊடுருவ முடியவில்லை.
அரசியல் இயக்கம் கண்டாலும், ‘ஆரிய மாயை’ உணர்ந்தவராக பேரறிஞர்அண்ணா அவர்கள் இருந்தார்கள். ‘நான் மிக மிக மிக பிற்படுத்தப்பட்டவன், எத்தனை மிக மிக மிக வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள்’ என்றார் தமிழினத் தலைவர் கலைஞர். ‘ஆரியத்தை வீழ்த்த வந்த திராவிடத்தின் வாரிசுகள் நாங்கள்’ என்று நெஞ்சு நிமிர்த்திச் சொல்லி வருகிறார் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள். ‘சனாதனத்தை எதிர்க்க முடியாது, ஒழிக்கத்தான் முடியும்’ என்று சொல்லத் தொடங்கி இருக்கிறார் மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவர் வாக்கின் இன்றைய வடிவம்தான் மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் உரையாகும். ஈராயிரம் ஆண்டுகளாக நடைபெற்று வரும் போராட்டத்தின் இன்றைய வடிவம் இது.
‘ஒழித்தல்’ என்றால் சனாதன எண்ணங்களை ஒழித்தலே தவிர, சனாதனிகளை ஒழித்தல் ஆகாது. 100 ஆண்டுகளாக இயக்கம் நடத்திய பெரியார் அவர்கள் எந்தக் கோவிலையும் இடிக்கவில்லை. எந்த எதிரியையும் அழிக்கவில்லை. பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் எழுதியதற்காக – பேசியதற்காக கைது செய்யப்பட்டு சிறை இருந்திருக்கிறார்களே தவிர வன்முறைகளில் அல்ல. அது திராவிட இயக்கத்தின் பாணியும் அல்ல. கொள்கை வரலாறு உண்டே தவிர, கொலை வரலாறுகள் கிடையாது.
‘அழித்தொழித்தலின் வரலாறு’ சுதந்திர இந்தியாவில் மகாத்மா காந்தியில் தொடங்குகிறது. அதனைச் செய்தது யார்? ‘இனப்படுகொலையின் வரலாறு’ 2002 குஜராத்தில் நடந்தது. அதனைச் செய்தது யார்? மசூதியை கடப்பாரையைக் கொண்டு தகர்த்தது யார்? குடியுரிமைச் சட்டத்தின் நோக்கமும்,பொது சிவில் சட்டத்தின் நோக்கமும் இனச் சுத்திகரிப்பு அல்லாமல் வேறென்ன?
“சனாதனக் கோட்பாட்டைத்தான் நான் விமர்சித்தேன். எதுவுமே மாறக் கூடாது என்று சனாதனிகள் சொல்கிறார்கள். எல்லார்க்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பது நமது நோக்கம்” என்று மிகமிகச் சரியாக தீர்மானப் பதிலளித்து விட்டார் கொள்கை வாரிசான மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள். இதற்கு பதிலளிக்க நினைப்பவர்கள், சனாதனம் என்பது அனைவருக்கும்பொதுவானதுதான் என்று வாதிட்டால் வரவேற்கலாம். அது அவர்களால் முடியாது.
‘சனாதனத்தை’ வரிவரியாய் உரித்து தொங்க விட்டவர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள்.‘சமூக உரிமைச் சட்டங்களிலேயே மிகக் கொடூரமான சட்டமே மனுதான்’ என்றவர் அவர். “இந்த சதுர்வர்ண முறையை நான் அறவே வெறுக்கிறேன். எனது முழு இயற்கையும் அதை எதிர்த்து எழுகிறது. வெறும் உணர்ச்சியின் அடிப்படையில் மட்டும் நான் இதனை எதிர்க்கவில்லை. ஒரு சமூக அமைப்பு என்ற முறையில் சதுர்வர்ணம் நடைமுறை சாத்தியமற்றது. தீமை நிறைந்தது. இழிந்த தோல்வியை கண்டது. சதுர்வர்ண முறை என்பது மிகக் கொடூரமான முறையாகும்”என்றார் அண்ணல் அம்பேத்கர். எனவே சனாதனத்துக்கு பொய் புனுகு பூசி எடுத்து வர சனாதனிகள் முயற்சிக்கிறார்கள்.
பத்தாண்டு கால ஆட்சியில் சொல்லிக் கொள்வதற்கு எந்தச் சாதனையும் செய்யாத பா.ஜ.க., எதிர்க்கட்சிகள் சொல்லும் கருத்துகளில் இருந்து ஏதாவது ஒரு வார்த்தையை எடுத்து – திரித்து அதன் மூலமாக திசை திருப்பப் பார்க்கிறது. ‘சனாதனத்தை ஒழித்தல்’ என்பதை இன அழிப்பு என்று அவர்களாக – அவர்களது புத்திக்கு ஏற்ப திரித்துக் கொள்கிறார்கள்.
வோட்டு வாங்க பா.ஜ.க.விடம் சொல்வதற்கு எதுவும் இல்லை. அதனால் பொய்யை எடுத்து வருகிறார்கள். ‘பேச நா இரண்டுடையாய் போற்றி போற்றி’ என்று எழுதியவர் பேரறிஞர் அண்ணா!
The post ’’சனாதனமும் சனாதனிகளும்..!’’ முரசொலி தலையங்கம் first appeared on Madras Murasu.
]]>The post ’’ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும் அதைப்பற்றி இம்மியளவும் நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.
]]>திராவிட இயக்கத்தின் எழுத்தாளர் க.திருநாவுக்கரசு புதல்வர் சிற்றரசு -க்கும், நினைவில் வாழும் தொழிற்சங்கத்தின் தலைவர் வி.எம்.ஆர். சபாபதி – சாவித்திரி அம்மாள் இணையருடைய பெயர்த்தி, நினைவில் வாழும் தயாமூர்த்தி – இராணி இணையருடைய மூத்த புதல்வி த.எழிலரசி -க்கும் நம்முடைய அன்பான வாழ்த்துகளோடு மணவிழா நிகழ்ச்சி நிறைவேறியிருக்கிறது.
மணவிழா நிகழ்ச்சிக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்று, மணவிழாவை நடத்தி வைத்து, அதே நேரத்தில் மணமக்களை வாழ்த்தும் ஒரு சிறப்பான வாய்ப்பும் எனக்கு கிடைத்திருக்கிறது. வாய்ப்பினை பெற்றமைக்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
நன்றியுரை ஆற்றிய அண்ணன் திருநாவுக்கரசு எப்பொழுதும் – எதையுமே வெளிப்படையாக பேசக்கூடியவர். உள்ளொன்று வைத்து வெளியொன்று பேச மாட்டார். அதனால்தான் நன்றியுரை ஆற்றுகிறபோது இந்த அழைப்பிதழில் வெளியிடப்பட்டிருக்கக் கூடியவர்கள் பெரும்பாலும் வரவில்லை என்பதை மனதில் ஏற்றுக்கொண்டு அந்த வருத்தத்தை கொஞ்சம் இங்கு வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறார்.
அவர் எனக்கு சால்வை அணிவித்தபோது, பட்டாடை அணிவித்தபோது நான் சொன்னேன். “நீங்கள் வருத்தப்பட வேண்டாம்… எல்லோருக்கும் சேர்த்துதான் நாங்கள் வந்திருக்கிறோமே, நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்“. சரி… சரி என்று தன்னுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்தார். அது மட்டுமல்ல, இன்றைக்குத் திருமண நிகழ்ச்சிகள் நிரம்ப நடந்து கொண்டிருக்கிறது. பல அமைச்சர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு பல நிகழ்ச்சிகளுக்குச் செல்ல வேண்டிய அவசியத்திற்கு ஆளாகி அவர்களும் சென்றிருக்கிறார்கள்.
அது மட்டுமல்ல, இந்த நிகழ்ச்சியைப் பொருத்தவரையில் மாலையில் வரவேற்பு நிகழ்ச்சியும் இருக்கிறது. கவலைப்படாதீர்கள். வராதவர்கள் எல்லாம் மாலையில் வருவார்கள். மணமக்களை வாழ்த்துவார்கள். நீங்களே இரண்டாகப் பிரித்துப் போட்டிருக்கிறீர்கள். அதனால் அவர் கவலைப்படும் அளவிற்கு எதுவும் இல்லை என்பதை நான் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.
நம்முடைய திராவிட இயக்கத்தின் எழுத்தாளர் அண்ணன் திருநாவுக்கரசு பற்றி இங்கே வாழ்த்தியவர்கள் எல்லாம் குறிப்பிட்டுச் சொன்னார்கள்.
விழா அழைப்பிதழிலேயே திராவிட இயக்க எழுத்தாளர் என்று தன்னை அடையாளப்படுத்தியிருக்கிறார். இன்றைக்கு வெளிப்படையாக அதை யாரும் வெளிப்படுத்துவதற்கு அச்சத்தின் காரணமாக கொஞ்சம் யோசிப்பார்கள். ஆனால் திருநாவுக்கரசு போன்றவர்களுக்குத்தான் அந்தத் துணிவு உண்டு, துணிச்சல் உண்டு. அந்த அடிப்படையில்தான் அவருடைய அடையாளத்தை அவர் இந்த அழைப்பிதழில் வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறார்.
அதனால்தான் தலைவர் கலைஞர் ‘திராவிட இயக்கத்தில் பூத்த மலர்‘ திருநாவுக்கரசு அவர்கள் என்று மனதாரப் பாராட்டியிருக்கிறார்கள். அதேபோல நம்முடைய இனமான பேராசிரியர் பெருந்தகை ஒரு முறை திருநாவுக்கரசு அவர்களைப் பாராட்டி பேசுகிறபோது குறிப்பிட்டுச் சொன்னார். ‘‘தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தொண்டைத் தொடர்பவர் நம்முடைய திருநாவுக்கரசு அவர்கள்“ என்று பெருமையோடு பாராட்டியிருக்கிறார்.
எனவே நடமாடும் ஒரு அறிவுக்கருவூலமாக – திராவிட இயக்கத்தின் கணினியாக – திராவிட இயக்கத்தின் வரலாற்றுப் பக்கங்களைத் தலைமுறைகள் கடந்து தனது பேனாமுனையில் எடுத்துச் சொல்லும் ஆற்றலைப் பெற்றவராக நம்முடைய எழுத்தாளர் திருநாவுக்கரசு அவர்கள் விளங்கிக் கொண்டிருக்கிறார். நீதிக்கட்சியை பற்றி – அதன் வரலாற்றைப் பற்றி இரண்டு பாகங்களாக நம்முடைய திருநாவுக்கரசு அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கிறார்கள். அதேபோல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றை முதல் மூன்று பாகங்களாக எழுதி அதனை இந்த அடியேன்தான், இதே அரங்கத்தில் வெளியிட்டு இருக்கிறேன் என்பதைப் பெருமையோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இதேபோல திராவிட இயக்கத்தைப் பற்றி பல நூல்கள். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், திராவிட இயக்கத்தின் வேர்கள், திராவிட இயக்கத்தின் தூண்கள், திராவிட இயக்கமும் – திராவிட நாடும், திராவிட இயக்கமும் – திரைப்பட உலகமும், திராவிட இயக்க சாதனைகள், திராவிட இயக்கமும் – கலைத் துறையும், திருக்குறளும் – திராவிட இயக்கமும், திராவிட இயக்கமும் – பொதுவுடைமையும் – இவ்வாறு திராவிட இயக்கம் பற்றி அவர் எழுதிக் குவித்திருக்கிறார். அதனால்தான் அவரை இன்றைக்கு எல்லோரும் திராவிட இயக்கத்தின் கணினி என்று பெருமையோடு குறிப்பிட்டுச் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
தலைவர் கலைஞருடைய மூத்த பிள்ளை முரசொலி என்பதைப் பல நேரங்களில் அவரே பெருமையோடு குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட கலைஞருடைய மூத்த பிள்ளையாக விளங்கும் முரசொலியில் நம்முடைய திருநாவுக்கரசு அவர்கள் பல ஆண்டுகளாகப் பணியாற்றி, அந்த முரசொலியை வளர்த்தெடுத்தவர்களில் ஒருவராக நம்முடைய ஐயா திருநாவுக்கரசு அவர்கள் விளங்கிக் கொண்டிருக்கிறார். இன்றைக்கும் கட்டுரைகள் அவ்வப்போது வந்து கொண்டிருக்கிறது.
இதுவரை கணக்கெடுத்துப் பார்த்தீர்கள் என்றால் 4000-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியவர் நம்முடைய அண்ணன் திருநாவுக்கரசு. திராவிட இயக்கத்தையோ, தலைவர் கலைஞரைப் பற்றியோ யாராவது லேசாக விமர்சித்தால் போதும், பொறுத்துக் கொள்ள மாட்டார் அண்ணன் திருநாவுக்கரசு அவர்கள். உடனே அதற்குத் தகுந்த பதிலை, தகுந்த விமர்சனத்தை எழுதினால்தான் அவருக்கு நிம்மதி வரும். அந்த அளவிற்கு ஒரு தீவிரத்தைத் தனது மனதில் ஏற்படுத்திக் கொண்டவர். அதனால்தான் திராவிட இயக்கத்தின் தீரர் என்று இன்றைக்கு நம்மால் அவர் அழைக்கப்படுகிறார்.
அவருடைய புதல்வர் – இன்றைக்கு மணக்கோலம் பூண்டிருக்கும் நம்முடைய சிற்றரசு, அப்பாவைப்போல ஒரு கொள்கைவாதியாக, ஒரு இலட்சியவாதியாக விளங்கிக் கொண்டிருப்பவர். அண்ணன் திருநாவுக்கரசு ‘நக்கீரன்‘ என்கிற ஒரு பதிப்பகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். அதேபோல அவருடைய மகன் சிற்றரசு ‘தளபதி‘ என்ற பதிப்பகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். அதன் மூலமாக 20 புத்தகங்களை அவர் வெளியிட்டுயிருக்கிறார்.
அவ்வாறு வெளியிட்டிருக்கும் புத்தகங்களில் மிக முக்கியமான நூல் எது என்றால், தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையின் வரலாற்றைத் திருநாவுக்கரசு எழுதி நம்முடைய சிற்றரசு வெளியிட்டிருக்கிறார்கள். இதில் ஒரு சிறப்பு என்னவென்று கேட்டீர்கள் என்றால், அந்த நூல் வெளியிட்டு 3 மாத காலத்தில் 11 ஆயிரம் படிகள் விற்றுத் தீர்ந்திருக்கிறது. இதைக்கூட விமர்சனம் செய்யலாம். அப்பா எழுதிய நூலை பிள்ளை எவ்வாறு வெளியிடலாம் என்று கேட்கலாம். அதனால்தான் அய்யா ஆசிரியர் தகுந்த விளக்கத்தை தந்தார்கள். இது ஒரு கொள்கைக் குடும்பம். திராவிட இயக்கத்தின் குடும்பம்.

இன்றைக்கு ‘திராவிட மாடல் ஆட்சி‘ தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. ஆட்சிப்பொறுப்பை ஏற்பதற்கு முன்பு தேர்தல் நேரத்தில் நாம் என்னென்ன உறுதிமொழிகளை – வாக்குறுதிகளைத் தந்தோமோ, அவைகள் எல்லாம் இன்றைக்கு எந்த அளவிற்கு நிறைவேற்றிக் காட்டியிருக்கிறோம், தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், பசியோடு பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் – மாணவ – மாணவிகள் அவர்களுக்காக ‘காலை உணவு திட்டம்‘.
பேருந்துகளில் மகளிர் இலவசமாகப் பயணம் செய்ய அறிவித்த அந்தத் திட்டம்.
பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் நுழையும் மாணவியர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை. வருகிற செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி நம்முடைய பேரறிஞர் பெருந்தகை அண்ணா பிறந்தநாள் அன்று கலைஞர் பெயரால் உருவாகியிருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படவிருக்கிறது என்ற செய்தியையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஒரு கோடிப் பேர் அதைப் பெற இருக்கிறார்கள். எனவே சிலருக்கு இன்றைக்கு எரிச்சல் ஏற்பட்டிருக்கிறது. ஆத்திரம் வந்திருக்கிறது. பொறாமை ஏற்பட்டிருக்கிறது. அதனால் வாய்க்கு வந்தபடி எல்லாம் இன்றைக்கு விமர்சனம் செய்து கொண்டிருக்கும் சூழ்நிலை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இன்றைக்கு இந்தியாவிற்கு ஆபத்து வந்திருக்கிறது. ஆபத்து என்று சொல்வதைவிட பேராபத்து வந்திருக்கிறது. எனவே, அப்படிப்பட்ட அந்த பேராபத்திலிருந்து நாம் இந்த நாட்டைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்து கொண்டிருக்கிறோம்.
இன்றைக்கு நாம் அறிவித்திருக்கும் திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் அந்தத் திட்டங்களைப் பார்த்து விமர்சனம் செய்து கொண்டிருப்பவர்களைப் பார்த்து நான் கேட்க விரும்புவது, இதே பி.ஜே.பி. ஆட்சி 2014-ஆம் ஆண்டு பொறுப்பேற்பதற்கு முன்னால் – தேர்தலுக்கு முன்னால் அறிவித்த உறுதிமொழிகளில் ஏதாவது ஒன்று நிறைவேற்றப்பட்டிருக்கிறதா?
நான் ஆட்சிக்கு வந்தால், இன்றைக்குப் பிரதமராக இருக்கும் மோடி சொன்னது, வெளிநாட்டில் இருக்கும் கருப்பு பணங்களை எல்லாம் நான் மீட்டுக் கொண்டு வந்து, அவற்றை எல்லாம் நாட்டில் இருக்கும் மக்களுக்கு ஒரு தலைக்கு – ஒரு நபருக்கு 15 லட்சம் ரூபாய் வழங்குவேன் என்று உறுதிமொழி தந்தார். பதினைந்து லட்சம் வேண்டாம், பதினைந்து ஆயிரமாவது வழங்கியிருக்கிறாரா? பதினைந்து ஆயிரம் வேண்டாம், 15 ரூபாயாவது வழங்கியிருக்கிறாரா? கிடையாது. இதுவரை அதைப் பற்றிச் சிந்திக்கவே இல்லை, அதைப் பற்றிக் கேட்கவே இல்லை. அதைப் பற்றி பேசவே இல்லை.
மாதம் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்தித் தருவோம் என்றெல்லாம் உறுதிமொழி தந்தார்கள். ஆனால் அந்த உறுதிமொழிகள் எல்லாம் காற்றில் பறக்க விடப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதேபோல் விவசாயிகள் நலனை பாதுகாப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள், இதே டெல்லி மாநகரத்தில் – இந்தியாவின் தலைநகரத்தில் விவசாயிகள் ஒன்றுகூடி மிகப்பெரிய போராட்டத்தை, ஆண்டுக்ணக்கில் நடத்தி, நூற்றுக்கணக்கான உயிரிழந்த அந்த கொடுமைகள் எல்லாம் நடந்தது. கடுமையான குளிரில் – கொடுமையான வெயிலில் – மழையில் – பல்வேறு சித்திரவதை ஏற்றுக்கொண்டு அந்த போராட்டத்தை நடத்தியபோது அதை பற்றி கண்டும் காணாமல் இருந்த ஆட்சி பி.ஜே.பி. ஆட்சி. அதற்குப் பிறகு வேறு வழியில்லாமல் ஓரளவிற்கு அதை ஏற்றுக் கொள்ளும் சூழ்நிலையை அவர்கள் பெற்றார்கள்.
எனவே இதையெல்லாம் உணர்ந்துதான், இப்படிப்பட்ட ஒரு மோசமான – சர்வாதிகார ஆட்சி அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான், இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு நல்ல முடிவை இந்திய நாட்டிற்கு ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற ஒரு நல்ல எண்ணத்தோடு, அண்மையில் பீகார் மாநிலத்தில் – பாட்னாவில் அங்கிருக்கும் முதலமைச்சர் நிதிஷ் குமார் அவர்கள் முயற்சியின் காரணமாக எதிர்கட்சிகளை சார்ந்த அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில் தீர்மானங்கள் எல்லாம் வழித்தெடுக்கப்பட்டிருக்கிறது.
ஒரே ஒரு முக்கியம் என்ன என்று கேட்டீர்கள் என்றால், யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட, யார் ஆட்சி இருக்கக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்ற அந்த ஒரு கருத்தை அடிப்படையாக வைத்து அந்த கூட்டம் நடைபெற்றிருக்கிறது.
தொடர்ந்து வருகின்ற 17, 18 ஆகிய தேதிகளில் கர்நாடக மாநிலத்தில் – பெங்களூர் நகரத்தில் நடைபெறவிருக்கும் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
எனவே இதைல்லாம் பார்த்து எரிச்சல் பட்டுக் கொண்டிருக்கும் பி.ஜே.பி. ஆட்சி, குறிப்பாக அதன் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பிரதமர் மோடி, இன்றைக்கு பிரதமர் என்ற அந்த நிலையிலிருந்து மறந்து ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார். உளறிக் கொண்டிருக்கிறார்.
அதைப்பற்றி எல்லாம் நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இதனால் எந்த சூழ்நிலை வந்தாலும், ஏன் ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும் அதைப்பற்றி இம்மியளவும் நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய கொள்கை – நம்முடைய இலட்சியம் ஒரே ஒரு கொள்கையாக இருக்க வேண்டும் என்பதை மட்டும் மனதில் வைத்து, வரும் நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறுவதற்கான முயற்சிகளில் நாம் முழுமையாக ஈடுபட வேண்டும் என்று அந்த அடிப்படையில்தான் இன்றைக்கு நாம் இந்த களத்தில் இறங்கி இருக்கிறோம்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இன்றைக்கு இந்த மணவிழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த மணவிழா நிகழ்ச்சியில் மணமக்களாக வீற்றிருக்கும் நம்முடைய மணமக்கள் எல்லா நன்மைகளையும் பெற்று சிறப்போடு வாழ்ந்திட வேண்டும். அய்யா ஆசிரியர் நினைவுபடுத்தி எடுத்துச் சொன்னார். ஒவ்வொரு திருமணவிழா நிகழ்ச்சிக்கும் நான் போகிறபோது மணமக்களுக்கு வைக்கின்ற வேண்டுகோள்தான். ஆனால் இந்த மணமக்களை பொறுத்த வரைக்கும் வேண்டுகோள் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. காரணம் அவர்களுடைய பெயர்களே அழகான தமிழ் பெயர்கள்தான். சிற்றரசு – எழிலரசி. நிச்சயமாக அவர்களும் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களை சூட்டுவார்கள் என்ற நம்பிக்கை நமக்கு நிரம்ப இருக்கிறது.
அந்த வகையில் இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொண்டு, புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கும், “வீட்டிற்கு விளக்காய்… நாட்டிற்கு தொண்டர்களாய்“ இருந்து பணமக்கள் வாழ்க… வாழ்க… வாழ்க என்று வாழ்த்தி விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.
The post ’’ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும் அதைப்பற்றி இம்மியளவும் நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.
]]>