acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ”சமூக நீதிக்கு முன்னோடி மாநிலம் தமிழ்நாடு..!” அமைச்சர் எ.வ.வேலு first appeared on Madras Murasu.
]]>நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தி.மு.க. இளைஞர் அணி, மருத்துவ அணி, மாணவர் அணி மற்றும் பொறியாளர் அணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது. அதனை தொடர்ந்து 10.11.2023 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணியளவில், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில், திருவண்ணாமலை கம்பன் மகளிர் கலை அறிவியல் கல்லூரி கலையரங்கில் நீட் தேர்வு ரத்து செய்யக் கோரி மாணவர்களிடம் டிஜிட்டல் கையெ ழுத்து இயக்கம் நடைபெற்றது.
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு
நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சி.என்.அண்ணாதுரை எம்.பி தலைமை வகித்தார். கழக பொறியாளர் அணி செயலாளர் கு.கருணாநிதி, மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் பிரவீன்ஸ்ரீத ரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் எஸ்.கண்ணதாசன், கோ.ராஜசேகர், எம்.ரமேஷ், எஸ்.சதீஷ்குமார், டி.திலீப்குமார், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் மு.க.கௌதமன், இரா.மின்னல் கமல், ஏ.வெங்கடாஜலபதி, ஆ.மாதேஸ்வரன், தேவிமகேந்திரன், மாவட்ட மருத்துவ அணி நிர்வாகிகள் டாக்டர் சவீதாகதிரவன், டி.எம்.கலையரசு, டாக்டர் முத்தையாசிவராஜ், சக்திவேல், டாக்டர் எஸ்.விக்னேஷ், டாக்டர் யோகேஸ்வரன், டாக்டர் வி.தமிழரசன், டாக்டர் சதீஷ்குமார், டாக்டர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் காலேஜ் கு.ரவி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டிஜிட்டல் கையெழுத்து இயக்கத்தை, பொதுப்பணித்துறை அமைச்சரும், கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான எ.வ. வேலு தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
அப்போது அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:–
சரஸ்வதி அம்மாள் அறக்கட்டளையில் தான் பொறுப்பில் இருந்த போது கம்பன் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் தான் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதை நினைவுபடுத்தி பேசியவர் இந்த கல்லூரியில் படித்து சென்ற மாணவிகளின் பலர் அரசுத்துறை அதிகாரிகளாகவும், பல்வேறு கல்லூரிகளில் தலைவராகவும் பேராசிரியர்களாகவும் இருக்கிறார்கள்.
உதயநிதி ஸ்டாலின் முயற்சி வரவேற்கத்தக்கது!
பலர் என்னை பல இடங்களில் பார்க்கும் பொழுது தாங்கள் கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் எங்களை மாணவிகளாக நீங்கள் பார்க்காமல் தங்களுடைய மகள்களாக பார்த்து பாதுகாத்து படிக்க வைத்தீர்கள் என்று கூறுவது எனக்கு மிகுந்த பெருமை அளிப்பதாக உள்ளது. எனக்கு பெண் பிள்ளைகள் இல்லை என்ற கவலையை போக்கியது கம்பன் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் படிக்கும் மாணவிகள்தான்.
‘இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்’ என்ற வள்ளுவரின் பொன்மொழிக்கு ஏற்ப நீட் தேர்வுக்கு எதிராக விளை யாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எடுத்திருக்கும் இந்த முயற்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாகவும், ஒரு இலக்கை அடைய வேண்டும் என்றால் ஆற்றல் அறிவு மக்களிடம் செல்வாக்கு இருப்பவர்களால் தான் முடியும் இவை அனைத்தும் அமைச்சர் உதய நிதி ஸ்டாலினிடம் உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள், மாணவ, மாணவிகள் யார் பேச்சை, கேட்கிறார்கள் என்றால் அனைவரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சை கேட்கிறார்கள் என்பதால் தான் தமிழ்நாட்டில் பல்வேறு அமைச்சர்கள் இருந்தாலும் நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்தை உதயநிதி ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார். இதற்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களும் மாணவ, மாணவிகளும் முழு ஒத்துழைப்பு கொடுத்து உதவிட வேண்டும்.
மாணவ, மாணவிகளாகிய உங்களை மருத்துவத்துறையில் தற்பொழுது படிக்க வைக்க ஈன்றெடுத்த பெற்றோர்களுக்கு தடையாக இருப்பது நீட் தேர்வு என்றும், 28க்கும் மேற்பட்ட மாநிலங்களைக் கொண்ட மிகப்பெரிய நாடு இந்தியா என்றும் ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் தமிழக முதல்வர் மட்டும் ஏன் தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று ஏன் கேட்கிறார்கள் என்றால் இந்தியாவிலேயே விழிப்புணர்வு அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு என்றும், திராவிட இயக்கங்கள் தான் தமிழ்நாட்டின் அடையாளம்.
விழிப்புணர்வை உருவாக்கிய இயக்கம்!
ஒரு காலத்தில் ஆண்களுக்கு மட்டும்தான் வாக்குரிமை இருந்த காலங்கள் உண்டு என்றும் சொத்து வைத்திருந்தாலும், வரி கட்டி இருந்தாலும் கூட பெண்களுக்கு வாக்குரிமை வழங்காத காலங்கள் இருந்ததை சுட்டிக்காட்டி பேசிய அவர் நீதிக் கட்சி தான் பெண்களுக்கு வாக்குரிமையை தமிழ்நாட்டில் முதன் முதலில் கொண்டு வந்தது என்று பேசிய அவர் இந்தியாவில் விழிப்புணர்வு உருவாக்கிய இயக்கம் திராவிட இயக்கம்.
ஒரு காலத்தில் ஆஸ்திக்கு ஆண் குழந்தை, ஆசைக்கு பெண் குழந்தை மூடநம்பிக்கைகள் இருந்த காலத்தை, மூடநம்பிக்கைகளை தூக்கி எறிந்து ஒரே வயிற்றில் பிறந்த ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் சொத்தில் சம உரிமை அளித்து சட்டத்தை நிறைவேற்றியது தந்தை பெரியாரும், தலைவர் கலைஞரும் தான்.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உண்டு என்று சட்டத்தை இப்பொழுதுதான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி அனைத்து மாநிலங்களும் பின்பற்றுகின்றனர். தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா முத்தமிழறிஞர் கலைஞர் ஆகிய மும்மூர்த்தி களும் பெண்கள் படித்தால் தான் நாட்டின் சமுதாயம் முன்னேறும் என்றும், பெண்களுக்குத்தான் குடும்ப பொருளாதாரத்தை உயர்த்த தெரியும்.
ஒத்துழைப்புத் தாரீர்!
பெண்கள் கையில் நாட்டை கொடுத்தால் தான் நாடு வளர்ச்சி அடையும் என்ற அடிப்படையில் பெண்களை படி, படி, படி என்று சொன்ன இயக்கம் திராவிட இயக்கம் இதுபோல பல்வேறு வரலாறுகள் திராவிட இயக்கத்திற்கு உண்டு.
பல்வேறு வரலாறுகளைக் கொண்ட திராவிட இயக்கம் தற்பொழுது நீட் தேர்விற்கு விலக்கு வேண்டும் என்று தொடர்ந்து அமைச்சர் உதயநிதி தலைமையில் போராடி வருகிறது நாட்டில் பலரும் பல்வேறு வகையில் அவர் அவர்கள் சக்திக்கு ஏற்றார் போல வரிகளை கட்டிக்கொண்டு வருவதாகவும் இதனால் தான் அரசு நடைபெற்று கொண்டு இருக்கிறது.
திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு முதல்வர் கல்வித்துறை, மருத்துவத்துறை, கட்டுமானத் துறை ஆகிய மூன்று துறைகளை யும் தனது கண்களாக பாவித்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார் என்றும் கல்வித்துறைக்காக 20 ஆயிரம் கோடிக்கு மேல் ஒதுக்கி கல்வித்துறையை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதல்வர் நிறைவேற்றி வருகிறார். திராவிட முன்னேற்றக் கழகம், ஒன்றிய அரசுக்கு எதிராகவும், தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் கருதியும் கையில் எடுத்துள்ள நீட் தேர்வு கையெழுத்து இயக்கத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, மாநில மருத்துவர் அணி துணைத்தலை வர் டாக்டர் எ.வ.வே.கம்பன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் இரா.ஸ்ரீதரன், பொன்.முத்து, சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், மாவட்டப் பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், மாவட்ட துணைச் செயலாளர் ப்ரியாவிஜய ரங்கன், நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன்,
மாவட்ட அமைப்பாளர்கள் டி.வி.எம்.நேரு, மங்கலம் பிரபாகரன், ஏ.ஏ.ஆறுமுகம், பொன்.தனுசு, சி. ராம்காந்த், பாலமுரளிகிருஷ்ணா, ஒன்றியச் செயலாளர் பெ.கோவிந்தன், கோ. ரமேஷ், கி.ஆறுமுகம், த.செந்தில்குமார், பேரூர் செயலாளர் சி.கே.அன்பு, மாவட்ட துணை அமைப்பாளர்கள் எம்.ஆர்.கலைமணி, கே.கந்தன், எம்.வெங்கடேஷ் உட்பட மாண வர்கள், இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நிறைவாக மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சு.ராஜாங்கம் நன்றி கூறினார்.
The post ”சமூக நீதிக்கு முன்னோடி மாநிலம் தமிழ்நாடு..!” அமைச்சர் எ.வ.வேலு first appeared on Madras Murasu.
]]>The post ’’சமூக நீதியைக் காப்பதில் அக்கறை இருந்தால், நீட் தேர்வை ரத்து செய்க..! பண்ருட்டி தி.வேல்முருகன் first appeared on Madras Murasu.
]]>தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த 2017-ஆம் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பிறகு தமிழ்நாட்டில் இதுவரை 35-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.
தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது பயிற்சி பெற்றால் தான் மருத்துவப் படிப்பில் சேர முடியும். அதற்காக குறைந்தது ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை செலவழிக்க வேண்டியிருக்கும். அதற்கான வாய்ப்புகளும், வசதிகளும் இல்லாதவர்கள் மருத்துவம் பயில்வதைப் பற்றி நினைத்துப் பார்க்கக் கூட முடியாது.
இவ்வாறு பணத்தைக் கொட்டிக் கொடுத்து படித்து, நீட் தேர்வில் தேர்வு பெற்றவர்கள் அனைவருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைப்பதில்லை. ஏனெனில், பல இலட்சம் பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், இந்தியா முழுவதும் சில ஆயிரம் இடங்கள்தான் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. நீட் தேர்வில் அனைத்திந்திய தரவரிசை பட்டியலில் இருக்குமிட எண்ணிக்கைக்குத் தகுந்தாற்போல தரவரிசையில் இடம்பெறுவோர் மட்டுமே இப்படிப்புகளில் சேர முடியும்.
சான்றாக, 2019ஆம் ஆண்டு நீட் தேர்வு எழுதிய 14.10 லட்சம் பேரில் 7.04 லட்சம் பேர் தேர்வு பெற்றிருக்கிறார்கள். அரசுக் கல்லூரிகளில் 30,455 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 36,165 இடங்களும் என மொத்தம் 66 ஆயிரம் எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.
இதில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று முதல் 30 ஆயிரம் தரவரிசை வரை உள்ளவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், அடுத்து 36 ஆயிரம் பேர் அடுத்த ரேங்க் வரிசைப்படி தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் இடம் பிடிப்பார்கள். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மீதியுள்ள 6 இலட்சத்து 30 ஆயிரம் பேருக்கு இடம் கிடையாது. அவர்கள் செலவு செய்த பல லட்சம் ரூபாயும் வீண்தான்.
இந்தியா முழுவதுமுள்ள அரசு மருத்துவக் கல்லூரி இடங்களில் தமிழ்நாட்டில் மட்டும் 3,947 எம்.பி.பி.எஸ். மற்றும் 985 பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. அனைத்திந்திய தேர்வான நீட் வழியாகத் தேர்வு செய்யப்படும்போது, கிட்டத்தட்ட மாவட்டத்திற்கு ஒன்றாக உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்திக்காரர்களும், பிற மாநிலத்தவரும் எளிதில் இடம் பெற்று விடுவார்கள்.
தமிழ்நாட்டு மாணவர்கள், நீட் தேர்வில் பயிற்சி பெற்ற பலர் உட்பட புறக்கணிக்கப்படுவார்கள். உயர்கல்வியில் வெளி மாநிலத்தவர் ஆதிக்கத்திற்கு நீட் தேர்வு வழிவகுக்கிறது.
நீட் தேர்வு என்பது அநீதி என்பதால் தான், அத்தகைய நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
நீட் தேர்வு சமூகநீதிக்கு எதிரானது என்பதால் தான், அதிலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறுவதற்காக, 2021 செப்டம்பர் 13 ஆம் தேதி சட்டப்பேரவையில் புதிய சட்டம் இயற்றப்பட்டது. அதை ஆளுனர் திருப்பி அனுப்பிவிட்ட நிலையில், 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 8-ஆம் நாள் அதே சட்டம் மீண்டும் இயற்றி, மே மாதத் தொடக்கத்தில் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டது.
நீட் விலக்கு சட்டம் பேரவையில் இயற்றப்பட்டு 20 மாதங்கள் நிறைவடைந்து விட்டன. அந்த சட்டம் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டு 17 மாதங்களாகி விட்டன. ஆனால், நீட் விலக்கு சட்டத்திற்கு இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை.
இந்நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு அதிக இடங்கள் காலியாக உள்ளதால், அவற்றை நிரப்புவதற்காக நீட் தகுதி மதிப்பெண்ணை பூஜ்ஜியமாக மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது.
இத்தகைய அறிவிப்பு வரவேற்கதக்கதாக இருந்தாலும், எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டிய நாடகமாக என்ற சந்தேகம் இயல்பாகவே எழுகிறது. ஏனெனில், ஆட்சியின் கடைசி தருணத்தில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி தான் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.
தற்போது நீட் தேர்வு தகுதி மதிப்பெண்ணை பூஜ்ஜியம் என்று அறிவித்துள்ளதால், தனியாரில் காலியாகவுள்ள அனைத்து இடங்களையும் நிரப்பலாம். இதற்கு ஏன் நீட் தேர்வு நடத்த வேண்டும் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. இதைவிட தமிழ்நாடு அரசு ஏற்கெனவே முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நடத்திய தேர்வு ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது.
எனவே, சமூக நீதியைக் காப்பதிலும், மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவதிலும் ஒன்றிய அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால், நீட் தகுதி மதிப்பெண்ணை பூஜ்ஜியமாக்குவதற்கு மாற்றாக, அத்தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும்.
அதாவது, நீட் தகுதி மதிப்பெண்ணை பூஜ்ஜியம் என்பதற்கு பதிலாக, அத்தேர்வு முறையை அடியோடு ஒழிப்பதே சிறந்த தீர்வாகும் என்பது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கருத்தாகும். இதனை தான் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
The post ’’சமூக நீதியைக் காப்பதில் அக்கறை இருந்தால், நீட் தேர்வை ரத்து செய்க..! பண்ருட்டி தி.வேல்முருகன் first appeared on Madras Murasu.
]]>The post ’’நீட் தேர்வின் பலன் என்ன என்றால் ‘0’ தான்..!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.
]]>இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு:
முதுநிலை மருத்துவப் படிப்புக்கான தகுதி மதிப்பெண் ‘0’ தான் என்று வரையறுப்பதன் மூலமாக NEET என்றால் National Eligibility Cum Entrance Test என்பதில் உள்ள Eligibilityக்குப் பொருள் கிடையாது என்பதை அவர்களே ஒப்புக் கொண்டு விட்டார்கள். கோச்சிங் செண்டர்களில் சேருங்கள், நீட் தேர்வுக்கு பணம் கட்டுங்கள், போதும் என்றாகி விட்டது.
NEET = 0 என்றாகி விட்டது. இதைத்தான் நாங்கள் இத்தனை ஆண்டுகளாகச் சொல்லி வந்தோம். எத்தனை உயிர்கள் பலியாகி இருக்கின்றன. இரக்கமே இல்லாமல் இருந்துவிட்டு இப்போது இப்படி ஒரு உத்தரவு போட்டிருக்கிறார்கள்.
NEET என்ற பலிபீடத்தைக் கொண்டு உயிர்களைப் பறிப்பதற்காகவே இந்த பா.ஜ.க ஆட்சியை அகற்றியாக வேண்டும்.
The post ’’நீட் தேர்வின் பலன் என்ன என்றால் ‘0’ தான்..!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.
]]>The post ’’11 ஆம் வகுப்பு முதல் ’நீட் தேர்வு’ பயிற்சி தொடங்க வேண்டும்..!’’ டாக்டர் ராமதாஸ் first appeared on Madras Murasu.
]]>இதுகுறித்து டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வை எழுத விரும்பும் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சியை தொடங்குவது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகாதது ஏமாற்றமளிக்கிறது. கடந்த ஆண்டுகளில் மிகவும் தாமதமாக தொடங்கப்பட்ட நீட் பயிற்சியால் எந்த பயனும் விளையாத நிலையில், நடப்பாண்டிலாவது பயிற்சியை முன்கூட்டியே தொடங்குவது தான் சரியான செயலாக இருக்கும்.
சமூகநீதிக்கு எதிரான நீட் நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்; 12&ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தான் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு. எனினும், நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான முயற்சிகள் வெற்றி பெறாத நிலையில், நீட் தேர்வில் தமிழக மாணவர்கள், குறிப்பாக தனியார் நிறுவனங்களில் நீட் பயிற்சி பெறுவதற்கு வாய்ப்பும் வசதியும் இல்லாத அரசு பள்ளிகளின் மாணவர்கள் வெற்றி பெறுவதை உறுதி செய்வது தான் அரசின் கடமை ஆகும். அந்த கடமையை நிறைவேற்றுவது கடந்த காலங்களில் இருந்ததை விட, இப்போது சவாலானதாக மாறியிருக்கிறது என்பது தான் ஆய்வுகள் சொல்லும் உண்மை.
நீட் தேர்வில் வெற்றி பெற்று, மருத்துவப் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வது கடினமானதாக மாறியுள்ளது. நடப்பாண்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.50% ஒதுக்கீட்டில் சேர்ந்தவர்களைத் தவிர, பொதுப்பிரிவில் அரசு பள்ளி மாணவர்கள் ஒருவர் கூட சேரவில்லை. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.50% ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்தவர்களில் கூட 20% மாணவர்கள் மட்டும் தான் முதல் முயற்சியில் நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள். மீதமுள்ள 80% மாணவர்கள் அரசு பள்ளிகளில் 12&ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் தனியார் பயிற்சி மையங்களில் சிறப்பு பயிற்சி பெற்ற பிறகே நீட் தேர்வு எழுதி, அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.
அரசு பள்ளிகளில் பயிலும் கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கும் மருத்துவம் பயிலும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் 7.50% இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. ஆனால், அந்த இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்றாலும் கூட தனியார் பயிற்சி மையங்களில் நீட் தேர்வுக்கான பயிற்சி பெற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டிருப்பது நல்வாய்ப்புக்கேடானது ஆகும். இந்த நிலையை மாற்றுவதற்கான ஒரே தீர்வு, தனியார் பயிற்சி மையங்களில் அளிப்பதை விட தரமான பயிற்சியை தமிழக அரசு பள்ளிகளில் வழங்குவது தான். ஆனால், தவிர்க்கவே முடியாத இந்தத் தீர்வை செயல்படுத்த வேண்டியதன் தேவையை தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை உணர்ந்ததாக தெரியவில்லை.
அரசு பள்ளி மாணவர்களுக்கு முதலில் தனியார் பயிற்சி நிறுவனத்தின் மூலம் ஆன்லைனில் நீட் பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நேரடியாக சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. அதன்பின் 2021&22ஆம் ஆண்டில் மாணவர்களுக்கு ஹைடெக் ஆய்வகங்களிலும், 15 மாதிரி பள்ளிகளில் எலைட் பயிற்சியும் அளிக்கப்பட்டது. மேற்கண்ட இரு வகை பயிற்சிகளிலும் பல குறைபாடுகள் இருந்தன என்பதை எவரும், எங்கும், எப்போதும் மறுக்க முடியாது. இந்தக் குறைகளை களையும் வகையில் கடந்த ஆண்டு வட்டத்திற்கு ஒன்று என்ற அளவில் 415 பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டு, அவற்றில் மாணவர்களுக்கு நேரடியாக பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனால், ஒட்டுமொத்தமாக 14 நாட்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டதால் அதுவும் பயனளிக்கவில்லை.
நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் வசதி படைத்த மாணவர்கள் குறைந்தது இரு ஆண்டுகள் முதல் நான்கு ஆண்டுகள் வரை தனியார் நிறுவனங்களில் பயிற்சி பெறுகின்றனர். அந்தப் பயிற்சிக்குப் பிறகு முதல் முயற்சியில் நீட் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை என்றால், மீண்டும் ஓரிரு ஆண்டுகள் பயிற்சி பெறுகின்றனர். இவ்வாறாக நீட் தேர்வில் வெற்றி பெற பலரும் 6 ஆண்டுகள் வரை பயிற்சி பெற வேண்டியிருக்கும் நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் 14 நாட்கள் பயிற்சி கொடுப்பது எந்த வகையில் போதுமானதாக இருக்கும். அதனால் தான் அரசு பள்ளி மாணவர்களால் பொதுப்பிரிவு இடங்களில் தகுதி பெற முடியவில்லை என்பதுடன், 7.50% ஒதுக்கீட்டிலும் 80% இடங்களை தனியார் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு தாரை வார்க்க வேண்டியிருக்கிறது.
நீட் விலக்கு பெறும் வரை, அரசு பள்ளி மாணவர்களுக்கு நீண்ட காலம் பயிற்சி அளிக்க வேண்டியதன் தேவையை தமிழக அரசு இப்போதாவது உணர்ந்து கொள்ள வேண்டும். 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நவம்பர் மாதத்தில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை வாரத்தில் ஒரு நாள் பெயரளவில் பயிற்சி அளிக்கும் முறையை கைவிட்டு, அனைத்து மாணவர்களுக்கும் குறைந்தது இரு ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படுவதை பள்ளிக்கல்வித்துறை உறுதி செய்ய வேண்டும். அதற்காக 11 ஆம் வகுப்பு தொடங்கிய வாரம் முதல், 12 ஆம் வகுப்பு தேர்வு முடிந்து நீட் தொடங்குவதற்கு முந்தைய வாரம் வரை இரு ஆண்டுகளுக்கு முழுமையான பயிற்சியை திறமையான ஆசிரியர்கள், வல்லுனர்களைக் கொண்டு அரசு வழங்க வேண்டும்.
கடந்த ஆண்டில் வட்டத்திற்கு ஒரு மையத்தில் மட்டுமே நீட் பயிற்சி வழங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் வட்டத்திற்கு இரு மையங்களில் பயிற்சி வழங்கப்பட வேண்டும். பயிற்சியில் சேர விருப்பமுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட வேண்டும். பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு கையேடு மற்றும் வினா – விடை தொகுப்பை இலவசமாக வழங்க வேண்டும். நடப்பாண்டிற்கான பயிற்சி வகுப்புகளை அடுத்த வாரத்திலேயே தொடங்குவதற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
The post ’’11 ஆம் வகுப்பு முதல் ’நீட் தேர்வு’ பயிற்சி தொடங்க வேண்டும்..!’’ டாக்டர் ராமதாஸ் first appeared on Madras Murasu.
]]>