acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ’’இந்திய ராணுவத்தில் அதிகாரி பணியிடம் ..!’’ பிளஸ் டூ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>நுழைவு வகை: 10+2 TECHNICAL ENTRY SCHEME – 50
கல்வித்தகுதி: இயற்பியல், வேதியியல், கணிதம் (PCM) ஆகிய பாடங்களைக் கொண்ட 12-ம் வகுப்புத் தேர்வில் 60 சதவிகித மதிபெண்கள் எடுத்து வெற்றி பெற்றிருக்க வேண்டும். JEE (Mains) 2023 தேர்வு எழுதி இருக்க வேண்டும்.
வயது: 16½ வயதுக்கு குறைவாகவும் 19½ வயதுக்கு அதிகமாகவும் இருக்க கூடாது. 02.07.2004 க்கு முன்னர் பிறந்திருக்க கூடாது. 01.07.2007-க்கு பின்னர் பிறந்திருக்க கூடாது (இரண்டு நாட்களும் உள்ளடக்கியது- (both days inclusive).
காலிப்பணியிடம்: மொத்தம் 90
பயிற்சி பணிக்காலம்: 4 ஆண்டு கால பயிற்சிக்கு பின்னர், நிரந்தர அதிகாரியாக பணி நியமனம் செய்யப்படுவர். லெப்டினண்ட் என்ற பதவி வழங்கப்படும். பயிற்சியின் போதே பொறியியல் பட்டபடிப்பு சொல்லித்தரப்படும். மொத்த பயிற்சி ஆண்டுகள் 5 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம்: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். click on the ‘online application’ button on website www.joinindianarmy.nic.in
சான்றிதழ்கள்: 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (பெயர்). 12-ம் வகுப்பு மாற்றுச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ். அடையாள அட்டை (ஆதார், பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் ஒரிஜினல்). ஜேஇஇ தேர்வு ரிசல்ட் நகல் ஆகியவற்றை விண்ணப்பிக்கும் போது கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும். ஜேஇஇ தேர்வு எண் கண்டிப்பாக விண்ணப்பிக்கும் போது பதிவு செய்ய வேண்டும். மற்ற விபரங்களுக்கு இந்த வேலைவாய்ப்பு குறித்த விளம்பரத்தை முழுமையாக படித்து தெரிந்து விண்ணப்பிக்க வேண்டும். www.joinindianarmy.nic.in
கடைசி தேதி : ஜூன் 30.
குறிப்பு:
இந்திய இராணுவத்தில் நிரந்தர கமிஷன் பணி என்பது இந்திய ராணுவத்தில் (ஆர்மி) அதிகாரிகள் சேர்க்கையை குறிக்கிறது. இந்த முறையில் பணியில் சேர்ந்தவர்கள் ராணுவ விதிகளின் படி ஓய்வு பெறும் வயது வரை (பணி மூப்பு) வரை வேலையில் இருக்கலாம். தேர்வு செய்யப்படுவோர், கயாவில் உள்ள அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் (10+2 (TES) நுழைவு) சேர்க்கப்பட்டு பயிற்சி தரப்படும். ஆட்சேர்ப்பு இயக்குநரகம் முடிவு செய்த கட் ஆஃப் அடிப்படையில் SSB நேர்காணலுக்கு நீங்கள் அழைக்கப்படுவார்கள்.
TES நுழைவுக்கான பயிற்சியின் மொத்த காலம் 5 ஆண்டுகள் மற்றும் விவரங்கள் பின்வருமாறு:
அடிப்படை இராணுவப் பயிற்சி:
1 வருடம் (அதிகாரி பயிற்சி அகாடமி கயா)
தொழில்நுட்பப் பயிற்சி: தொழில்நுட்பப் பயிற்சி இரண்டு கட்டங்களாக நடத்தப்படும்: கட்டம்-I: மூன்று CTW (கேடட் பயிற்சி பிரிவுகள் அதாவது CME புனே, MCTE மோவ் மற்றும் MCEME செகந்திராபாத்)
ஆண்டுகளுக்கு முன் கமிஷன் பயிற்சி: கட்டம்-II: CME புனே, MCTE Mhow மற்றும் MCEME செகந்திராபாத் ஆகியவற்றில் 1 வருடத்திற்கான போஸ்ட் கமிஷன் பயிற்சி. பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பிறகு விண்ணப்பதாரர்களுக்கு பொறியியல் பட்டம் வழங்கப்படும்.
The post ’’இந்திய ராணுவத்தில் அதிகாரி பணியிடம் ..!’’ பிளஸ் டூ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>The post “அரசு என்ன செய்கிறது? மக்களுக்கு தெரிய வேண்டும்..!” அமைச்சர் கிரண் ரிஜிஜு first appeared on Madras Murasu.
]]>“அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் அனைத்தும் மக்களுக்கும், சமூகத்தின் வளர்ச்சிக்கும் பயன்பட வேண்டும்” என்று மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் அனைத்தும் மக்களுக்கும், சமூகத்தின் வளர்ச்சிக்கும் பயன்பட வேண்டும் என்று மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.
உலகப் பெருங்கடல் தினத்தையொட்டி சென்னையிலுள்ள தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், நிலத்தில் வாழும் நமக்கு கடல்வாழ் உயிரினங்களுடன் நேரடித் தொடர்பு உள்ளது என்றார்.
அரசு மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள் அதன் பயன்கள் அனைத்தும் மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்றும், அப்போது தான் அரசு என்ன செய்கிறது என்பது மக்களுக்கு தெரியும் என்றும் அவர் தெரிவித்தார். நமது நடவடிக்கைகள் நிலத்தில் வாழும் உயிரினங்களுக்கு மட்டுமல்லாமல், கடல்சார் உயிரினங்களின் நலனையும் பாதுகாக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
கடல்சார் தொழில்நுட்பத்தில் நாட்டை முன்னிலைப்படுத்துவதற்காக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் சீரிய பங்களிப்பிற்கு அவர் நன்றி தெரிவித்தார். நமது ஆராய்ச்சிகள் அனைத்தும் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று கூறிய அவர், அரசு செயல்படுத்தும் திட்டங்களின் பயன்கள் மக்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றார். புவி அறிவியல் துறை மேற்கொள்ளும் நிலம், கடல், வான் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளையும் மக்கள் அறிய வகை செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஒரு செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படும் செய்தி அனைவரையும் எளிதில் சென்றடைவதைபோல், அண்டார்டிக் பெருங்கடல், ஆர்க்டிக் பெருங்கடல் போன்ற பகுதிகளிலும், கடலுக்கு அடியிலும் மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள் எளிதில் சென்றடைய வேண்டும் என்ற தமது விருப்பத்தை அவர் வெளியிட்டார்.
எதிர்காலத்தில் ஆழ்கடல் பகுதியில் மேலும் சிறந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவேண்டியது அவசியம் என்றும், இதில் இந்த நிறுவனத்திற்கு முக்கிய பங்கு உள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
நமது ஆராய்ச்சியாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும் என்று உறுதியளித்த அமைச்சர் கிரண் ரிஜிஜு, நமது நாட்டின் கண்டுபிடிப்புகள் இந்தியாவுக்கு மட்டுமின்றி, மொத்த உலகத்திற்கும் பயனுள்ளதாக அமையும் என்றார்.
இயற்கையை மதித்து பாதுகாக்க வேண்டியது அவசியம் என்று கூறிய அமைச்சர், இந்தியப் பெருங்கடல் பகுதி மட்டுமின்றி சுமத்ரா, ஜாவா தீவுகள் பகுதியிலும், ஆழ்கடல் ஆராய்ச்சியில் நமது விஞ்ஞானிகள் நன்கு செயல்பட்டு வருகிறார்கள் என்றார்.
பின்னர் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆய்வுக் கப்பல்களான சாகர் அன்வேஷிகா மற்றும் ஓஆர்வி சாகர்நிதி ஆகியவற்றை அமைச்சர் பார்வையிட்டு அவற்றின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து ஓஆர்வி சாகர்நிதி கப்பலில் அமைச்சர் சிறிது தூரம் பயணித்தார்.
கப்பல் தடமறியும் அமைப்பு’ (Ship Tracking System) செயலியையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த செயலி மூலம் கடலில் பயணிக்கும் கப்பல் குறித்து அறிந்து கொள்ள முடியும். இந்த செயலியை தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனமே தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The post “அரசு என்ன செய்கிறது? மக்களுக்கு தெரிய வேண்டும்..!” அமைச்சர் கிரண் ரிஜிஜு first appeared on Madras Murasu.
]]>