Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#தேர்தல்2024 - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Sat, 11 Nov 2023 06:21:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ’‘ஆரிய’ விகடனின் ‘சனாதன’ அலறல்.!” ’முரசொலி’ விளாசல் https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9-%e0%ae%85/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2586%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%259f%25e0%25ae%25a9%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25ae%25a9%25e0%25ae%25be%25e0%25ae%25a4%25e0%25ae%25a9-%25e0%25ae%2585 https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9-%e0%ae%85/#respond Sat, 11 Nov 2023 06:21:26 +0000 https://madrasmurasu.com/?p=7516 ‘ஆரிய’ விகடனின் ‘சனாதன’ அலறல்’’ என்று முரசொலி தலையங்கம் எழுதியுள்ளது. அதன் விபரம் வருமாறு: திராவிட மாடலின் சமூக (அ)நீதி’ என்ற தலைப்பில் ‘ஆரிய’ விகடன் அலறி இருக்கிறது. திடீரென பட்டியலின சமூகத்தவர்மீது இவர்களுக்குப் பாசம் பொங்கி வழிகிறது. ‘என்னவாக இருக்கும்’ என்று பார்த்தால், அவர்களால் ‘கொண்டையை’ மறைக்க முடியாதது அந்தத் தலையங்கத்திலேயே இருக்கிறது. தமிழ்நாட்டில் நடந்த மூன்று சம்பவங்களை விவரிக்கும் அந்தத் தலையங்கத்தின் உள்நோக்கம் என்ன தெரியுமா? மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், மக்களைப் […]

The post ’‘ஆரிய’ விகடனின் ‘சனாதன’ அலறல்.!” ’முரசொலி’ விளாசல் first appeared on Madras Murasu.

]]>
‘ஆரிய’ விகடனின் ‘சனாதன’ அலறல்’’ என்று முரசொலி தலையங்கம் எழுதியுள்ளது. அதன் விபரம் வருமாறு:

திராவிட மாடலின் சமூக (அ)நீதி’ என்ற தலைப்பில் ‘ஆரிய’ விகடன் அலறி இருக்கிறது. திடீரென பட்டியலின சமூகத்தவர்மீது இவர்களுக்குப் பாசம் பொங்கி வழிகிறது. ‘என்னவாக இருக்கும்’ என்று பார்த்தால், அவர்களால் ‘கொண்டையை’ மறைக்க முடியாதது அந்தத் தலையங்கத்திலேயே இருக்கிறது.

தமிழ்நாட்டில் நடந்த மூன்று சம்பவங்களை விவரிக்கும் அந்தத் தலையங்கத்தின் உள்நோக்கம் என்ன தெரியுமா?

மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், மக்களைப் பிளவுபடுத்தும் சனாதனக் கோட்பாட்டுக்கு எதிராக வலிமையான வாதங்களை எடுத்து வைக்கிறார் அல்லவா? அது விகட ஆரியக் கூட்டத்தை கோபம் கொள்ள வைக்கிறது. “மனிதத் தன்மையற்ற இந்த தாக்குதல்களையும் வன்கொடுமைகளையும் கண்டும் காணாமல் மெளனம் சாதித்து வேடிக்கை பார்க்கிறது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு. இது இப்படி இருக்க ‘சனாதன தர்மத்தை ஒழிப்போம்’ என்று உதயநிதி ஸ்டாலின் பேசுவது வெட்டி அரசியல் பேச்சு. பெரியார், அறிஞர் அண்ணா கோரிய சமூகநீதிக்கு திமுக அரசு செய்யும் துரோகம் இது” என்று ஆரிய விகடன் அலறுகிறது.

மக்களைப் பிளவுபடுத்தும் வர்ண சனாதனக் கோட்பாடுகளுக்கு எதிராகப் பேசியது மட்டுமல்ல; அதைத் திரும்பப் பெற மாட்டேன் என்று துணிச்சலாக நிற்கிறாரே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்ற வன்மத்தை ‘திராவிட மாடல்’ ஆட்சியின் மீது காட்டுகிறது விகடன்.

‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற தத்துவத்தின் அடிப்படையில் அனைவர்க்கும் அனைத்தும் கிடைக்க வழிவகை செய்யும் ‘திராவிட மாடல்’ ஆட்சியால் அலறிக் கொண்டிருக்கிறது ஆரியக் கும்பல். அதனுடைய அலறலைத் தான் ஆளுநர் ரவியின் குரலில் நாம் காண்கிறோம். சில நாட்களுக்கு முன்னால் ரவி என்ன சொன்னாரோ, அதையேதான் விகடனும் ‘தலையங்கம்’ என்ற பெயரால் வாந்தி எடுத்துள்ளது. இந்தக் கும்பலுக்கு ஒட்டுமொத்தமாக ‘ஒரே கண்டெண்ட் எடிட்டர்’ இருக்கிறார் என்பது நமக்குத் தெரியாதா என்ன?

பட்டியலின மக்கள் மீது நடந்த சில சம்பவங்களை எடுத்துப் போட்டு, தாங்கள் ஏதோ ஒடுக்கப்பட்ட மக்களின் ஒளிவிளக்கைப் போல விகடன் காட்டிக் கொள்கிறது. இந்தச் சம்பவங்களின்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை மறைத்து, இவை எதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற தோற்றத்தை உருவாக்குகிறது அந்தத் தலையங்கம்.

• நெல்லை தச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குள், குளித்து விட்டு வந்தவர்களிடம், பணத்தைக் கேட்டும், சாதியைக் கேட்டும் தகராறு செய்து இருவரைத் தாக்கிய சம்பவத்தில் ஆறுபேர் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் தள்ளப்பட்டுள்ளார்கள். கொடும் காயம் ஏற்படுத்துதல், ஆயுதங்களால் தாக்கிக் காயம் ஏற்படுத்துதல், வழிப்பறியில் ஈடுபடுதல், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்கு போடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இருவருக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் வழங்கப்படும் முதல்கட்ட நிதி வழங்கப்பட்டுள்ளது.

• நாங்குநேரியில் மாணவரும், அவரது சகோதரியும் வெட்டப்பட்டார்கள். 3 சிறுவர் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். 11 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பத்துக்கு 3 லட்சம் ரூபாய் உடனடியாகத் தரப்பட்டது. உடனடியாக சபாநாயகரும் அமைச்சர்களும் சென்று பார்த்தார்கள். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், அந்த இருவரையும் சமீபத்தில் பார்த்து ஆறுதல் கூறினார்.

• கிருஷ்ணகிரி அருகே சோக்காடியில் நடந்த சம்பவத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்துக்குக் காரணமான அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் தலைமறைவாக இருக்கிறார். பிரச்சினையே இவரால் வந்தது தான். இவரது பெயரையே சொல்லாமல் தலையங்கம் தீட்டியதுதான் ‘விகடனின்’ பத்திரிக்கா தர்மம்!

• புதுக்கோட்டை கொப்பம்பட்டி மாணவர் தற்கொலையில் வன்கொடுமைச் சட்டப்படி வழக்குப் பதியப்பட்டுள்ளது.

• வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக நீதிபதி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே அதுகுறித்து இங்கு எழுதுவது சரியாக இருக்காது.

• பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் சாதிப்பிளவுகள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் தகுந்த பரிந்துரைகளை வழங்க, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

இப்படி அனைத்துக் குற்றச் சம்பவங்களிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைது செய்யவில்லை என்றாலோ, அல்லது குற்றவாளிகள் காப்பாற்றப்பட்டு இருந்தாலோ அதுகுறித்து தலையங்கம் எழுதி அரசுக்கு அறிவுறுத்தலாம். செய்திகளை வரிசைப்படுத்தி, அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தந்திரமாக மறைக்கிறது ‘விகடன்’ தலையங்கம்.

உண்மையில் இவர்களுக்கு சமூகநீதியில் அக்கறை இருக்குமானால், ‘சாதியை ஆதரித்தும் மற்ற சாதிகளை இழிவுபடுத்தியும்’ பேசும் ‘திருச்சி கல்யாணராமன் போன்றவர்களை ஏன் கைது செய்யவில்லை?’ என்று கேட்க முடியுமா? ‘சனாதனம்’ என்ற பெயரால்தான் இந்த சாதிவன்ம வார்த்தைகள் கொட்டப்படுகின்றன. இதுபோல பல நூறு வீடியோக்கள் இணையத்தளங்களில் வலம் வருகின்றன. ‘திராவிட மாடல் ஆட்சி இந்தச் சாதி வன்மப் பேர்வழிகளை ஏன் கைது செய்யவில்லை?’ என்று கேட்கும் ‘சமூக நீதி உள்ளம்’ விகடனுக்கு உண்டா? கலைஞர் கேட்பாரே; ‘உள்ளம் இருக்கிறதா? உள்ளம் இருக்க வேண்டிய இடத்தில் பள்ளம் இருக்கிறதா?’ என்று!

‘திராவிட மாடல்’ ஆட்சி நடத்தும் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு யாரும் சமூகநீதிப் பாடம் எடுக்கத் தேவையில்லை. யார் சொல்லியும் அல்ல; அவராகவே செய்யும் அக்கறையும், கொள்கைப் பற்றும் அவருக்கு உண்டு.

• ஆட்சிக்கு வந்ததும் ஆதிதிராவிடர் – பழங்குடியினர் ஆணையத்தை அமைத்தவர் முதலமைச்சர் அவர்கள்.

• அ.தி.மு.க. ஆட்சியில் கூட்டப்படாத மாநில விழிப்புணர்வுக் கூட்டத்தைத் தொடர்ந்து கூட்டி வருபவர் முதலமைச்சர் அவர்கள்.

• அண்ணல் அம்பேத்கர் பிறந்த ஏப்ரல் 14 ஆம் தேதியை ‘சமத்துவ நாளாக’ அறிவித்த ஆட்சி திராவிட மாடல் ஆட்சி.

• அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில், அவரின் முழு அளவு வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது.

• அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளைப் பரப்புவதற்காக அவரின் படைப்புகளை தமிழில் மொழி பெயர்க்க இந்த நிதியாண்டில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

• அண்ணல் அம்பேத்கர் விருதுத் தொகை ரூ.5 லட்சமாக ஆக்கப்பட்டுள்ளது.

• வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் தீருதவித் தொகை குறைந்தபட்சம் 85,000 ரூபாயிலிருந்து ஒரு இலட்சம் ரூபாயாகவும் அதிகபட்சம் 8 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 12 இலட்சம் ரூபாயாகவும் உ யர்த்தப்பட்டது.

• வன்கொடுமையினால் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தைச் சார்ந்த 723 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம், கல்வி உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா ஆகிய உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.

• வன்முறையால் பாதிக்கப்பட்டோரைச் சமூகக் கண்ணோட்டத்துடன் அணுகி, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்திட காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்களுக்கு விழிப்புணர்வுப் பயிற்சிகள் வழங்கப் பட்டு வருகின்றன.

• ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தீருதவிகள் மற்றும் மறுவாழ்வு தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க கூடுதலாக நான்கு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

• சாதி வேறுபாடுகளற்ற மயானங்களை பயன்பாட்டில் கொண்டிருக்கும் முன்மாதிரிச் சிற்றூர்களில், வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஊக்கத் தொகையாக தலா ரூ.10 லட்சம் பரிசு வழங்கும் திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது. கடந்த நிதியாண்டில் 70 சிற்றூர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ளன.

• தீண்டாமையைக் கடைபிடிக்கப்படாமல் பொதுமக்கள் அனைவரும் நல்லிணக்கத்துடன் வாழும் கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அக்கிராமங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திடும் பொருட்டு ரூ.10 இலட்சம் நிதி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் 37 கிராமங்கள் பயனடைந்துள்ளன.

• பொதுமக்களிடையே தீண்டாமைக்கெதிரான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 24––ஆம் தேதி முதல் 30-–ஆம் தேதி வரை “மனிதநேய வார விழா” நடத்தப்படுகிறது.

• ஆண்டுதோறும் ஜனவரி 26, ஆகஸ்டு 15 மற்றும் அக்டோபர் 2 ஆகிய நாட்களிலும், அந்தந்த மாவட்டங்களில் முக்கியத்துவம் வாய்ந்த உள்ளூர் விடுமுறை நாட்களிலும் சமத்துவ விருந்து ஏற்பாடு செய்யப்படுகிறது.

• ஆதிதிராவிட மக்களின் கல்வியறிவு விகிதம் (73.26%) ஒப்பீட்டளவில் பொதுப் பிரிவினரின் கல்வியறிவு விகிதத்தினை ( 80.09%) விட குறைவாக உள்ளது. எனவே இத்துறைக்கான மொத்த நிதி ஒதுக்கீடான ரூ.3,512.85 கோடியில்; கல்விசார்ந்த திட்டங்களுக்காக மட்டும் ரூ.2,206.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

• ஆதிதிராவிடர் நலத் துறையால் 1138 ஆதி திராவிடர் நலப் பள்ளிகள் மேம்பாட்டுக்காக ரூ.120 கோடி சென்ற ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

• இத்துறையால் நடத்தப்படும் விடுதிகளைப் பழுது பார்க்க ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

• எம்.சி.இராஜா கல்லூரி விடுதி வளாகத்தில் ரூ.44.50 கோடி மதிப்பீட்டில் 10 தளங்களுடன் நவீன வசதியில் புதிய விடுதிக் கட்டடம் கட்ட முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி இருக்கிறார்கள்.

• முனைவர் பட்டப்படிப்பிற்கான உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் இதுவரை 2,954 மாணவர்களுக்கு தலா ஒரு லட்சம் ருபாய் வீதம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

• வெளிநாடுகளில் சென்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான வருமான உச்ச வரம்பு ரூ.8 இலட்சம் ஆக உயர்த்தப்பட்டு, 18 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

• தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களின்கீழ் பயனடைவதற்கான வருமான உச்சவரம்பு மூன்று இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

• ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ‘அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்’ என்னும் புதிய திட்டம் ரூ.100 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

• ஆதிதிராவிடர் குடியிருப்புகளை மேம்படுத்த “அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம் வரும் ஐந்தாண்டுகளில் 1000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படவுள்ளது.

• புதிரை வண்ணார் நல வாரியத்திற்குப் புத்துயிர் அளித்து, வாழ்வாதார மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த நிதியாண்டில் ரூ.10.00 கோடி கூடுதல் நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

• இந்த நிதியாண்டில் மாநில திட்ட ஒதுக்கீடான ரூ.77,930.30 கோடியில், ஆதிதிராவிடர் துணைத் திட்டத்திற்காக ரூ.17,075.70 கோடி(21.91%) மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டத்திற்காக ரூ.1595.89 கோடி (2.05%) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மாநிலத்தில் உள்ள ஆதிதிராவிடர் (20.01%) மற்றும் பழங்குடியின மக்கள் தொகை (1.17%) விகிதாச்சாரத்தை விட அதிகமானதாகும்.

இதுதான் ‘திராவிட மாடல் ஆட்சி’யின் சமூக நீதி ஆகும்.

முதலமைச்சர் அவர்களே குறிப்பிட்டுள்ளதைப் போல, ‘சுயமரியாதைச் சமதர்மச் சமூகத்தை உருவாக்குவதற்கு இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும்’ என்பதும் உண்மைதான். அதற்கான சட்டங்களையும் முதலமைச்சர் தீட்டி வருகிறார்கள். மனமாற்றப் பரப்புரைகளையும் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. இதையெல்லாம் தாங்கிக் கொள்ள முடியவில்லை ‘ஆரிய’ விகடக் கும்பலால்.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது போன்ற சட்டங்களாலும் -– மக்களைப் பிளவுபடுத்தும் சனாதனத்துக்கு எதிரான யுத்தங்களாலும் -– நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் ஆரியக் கும்பல், பட்டியலின வேஷம் போடுகிறது. காலம் காலமாக போடப்பட்டு வரும் இந்தக் கபடவேடங்களை உண்மைத் தமிழ் மக்கள் உணர்வார்கள். பார்த்துப் பார்த்து பழகிய ஆரியக் கூத்துகளை நிறுத்தி திருந்தப் பார்க்கவும்.

The post ’‘ஆரிய’ விகடனின் ‘சனாதன’ அலறல்.!” ’முரசொலி’ விளாசல் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9-%e0%ae%85/feed/ 0
”மிகப்பெரிய சாதனையை அமைதியாக செய்து காட்டி இருக்கிறோம்..!” மு.க.ஸ்டாலின் https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2586%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%259a%25e0%25ae%25be%25e0%25ae%25a4%25e0%25ae%25a9%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25af%2588-%25e0%25ae%2585%25e0%25ae%25ae%25e0%25af%2588%25e0%25ae%25a4 https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4/#respond Fri, 10 Nov 2023 11:21:27 +0000 https://madrasmurasu.com/?p=7500 ’’மிகப்பெரிய சாதனையை அமைதியாக செய்து காட்டி இருக்கிறோம். திராவிட மாடல் ஆட்சியில், இந்தியாவிற்கே எடுத்துக்காட்டான மாநிலமாக, தமிழ்நாடு தொடர்ந்து வளரும்! வளரும்!” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடந்த விழாவில் பேசினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (10.11.2023) சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் கூடுதல் பயனாளிகளுக்கு உரிமைத் தொகை வழங்கும் விழாவில் ஆற்றிய உரை: கடந்த சில நாட்களாக காய்ச்சலும், தொண்டை வலியும் எனக்கு இருந்தது. இப்போது காய்ச்சல் […]

The post ”மிகப்பெரிய சாதனையை அமைதியாக செய்து காட்டி இருக்கிறோம்..!” மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.

]]>
’’மிகப்பெரிய சாதனையை அமைதியாக செய்து காட்டி இருக்கிறோம். திராவிட மாடல் ஆட்சியில், இந்தியாவிற்கே எடுத்துக்காட்டான மாநிலமாக, தமிழ்நாடு தொடர்ந்து வளரும்! வளரும்!” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடந்த விழாவில் பேசினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (10.11.2023) சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் கூடுதல் பயனாளிகளுக்கு உரிமைத் தொகை வழங்கும் விழாவில் ஆற்றிய உரை:

கடந்த சில நாட்களாக காய்ச்சலும், தொண்டை வலியும் எனக்கு இருந்தது. இப்போது காய்ச்சல் குறைந்துவிட்டாலும், தொண்டை வலி மட்டும் இருக்கிறது. என்னுடைய குரலை கேட்கும்போதே உங்களுக்கு நன்றாக தெரியும். அதனால்தான், சில நாட்களாக வீட்டிலேயே முழு ஓய்வு எடுத்துக்கொண்டேன். இந்த வாரம் முழுக்க ஓய்வெடுக்கவேண்டும் என்று என்னுடைய மருத்துவர்கள் சொன்னாலும், என்னால் மக்களை சந்திக்காமல் இருக்க முடியவில்லை! அதனால்தான், தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத்திலிருந்து காணொலிக் காட்சி மூலமாக இணைந்திருக்கின்ற உங்களை எல்லாம் நான் பார்க்க வந்துவிட்டேன். தொண்டை வலி இருந்தாலும், தொண்டில் தொய்வு ஏற்படக் கூடாது! அதனால்தான் வந்துவிட்டேன். உங்களை பார்க்கும்போது என்னுடைய உடல் வலி எல்லாம் குறைந்து மனது மகிழ்ச்சியில் நிறைந்துவிட்டது!

இந்த ஆயிரம் ரூபாயை வாங்கும்போது உங்களுக்கு ஏற்படுகின்ற மகிழ்ச்சியைவிட, கொடுக்கும்போது, எனக்குதான் அதிகமான மகிழ்ச்சி ஏற்படுகிறது. அந்த மகிழ்ச்சியைவிட சிறந்த மருந்து எதுவாக இருக்க முடியும்? அதனால்தான், மருத்துவர்கள் அறிவுரையையும் மீறி இந்த விழாவுக்கு வந்துவிட்டேன்.
குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தேர்தலுக்கு முன்பாகவே சொன்னோம். அப்போது சிலர் என்ன சொன்னார்கள், என்ன சொன்னார்கள் என்றால், “இதையெல்லாம் நிறைவேற்ற முடியாத வாக்குறுதி”, “இவர்கள் ஆட்சிக்கு வரவே மாட்டார்கள்” இதுமாதிரி ஒவ்வொருவரும் நிறைய சொன்னார்கள். கட்டம் எல்லாம் பார்த்தார்கள். ஆனால், நீங்கள் எல்லோரும் என்ன சொன்னீர்கள்? “தி.மு.க.தான் ஆட்சிக்கு வரவேண்டும்” “தி.மு.க. சொன்னால், சொன்னதை நிறைவேற்றும். கலைஞர் மகன் ஸ்டாலின் தான் முதலமைச்சராக வரவேண்டும்” என்று ஓட்டு போட்டு பதிலடி தந்தீர்கள். உங்களின் கட்டளைக்கு கட்டுப்பட்டவன் நான்! இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சொன்னால், சொன்னதை நிச்சயம் செய்வேன்! அதற்கு அடையாளமாகதான், மாதந்தோறும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை வழங்குகிறோம். அதனால்தான் உங்கள் முன்னால் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறேன்!

கடந்த செப்டம்பர் 15-ஆம் நாள் பேரறிஞர் பெருந்தகை பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த காஞ்சிபுரத்தில் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தேன். செப்டம்பர் 15, அக்டோபர் 15 என்று இரண்டு மாதங்களுக்கான 2000 ரூபாயை, ஒரு கோடியே ஆறு இலட்சம் சகோதரிகள் வாங்கிவிட்டார்கள். இந்த முறை முன்கூட்டியே இன்றைக்கு மாலைக்குள் அடுத்த ஆயிரம் ரூபாயும் உங்களுக்கு வந்து சேர்ந்துவிடும்.

மகளிருக்கு, சொத்துரிமை, கல்வி, வேலைவாய்ப்பு, உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு கொடுத்து உங்களுடைய உரிமைகளுக்காக, பாதுகாவலராக இருந்த தமிழினத் தலைவர் கலைஞருடைய நூற்றாண்டில் தொடங்கி கொடுக்கப்படுகிற இந்த தொகை, உதவித்தொகை இல்லை; உரிமைத்தொகை! இந்த உரிமைத் தொகை உண்மையிலேயே தேவையும், தகுதியும் உள்ள அனைத்து மகளிருக்கும் போய்ச் சேரவேண்டும் என்பதில் நம்முடைய அரசு மிகவும் கவனமாக இருந்தது.

வி.ஏ.ஓ அலுவலகம், தாலுகா அலுவலகம் என்று எங்கேயும் செல்லாமல் அலைச்சலில்லாமல், பொதுமக்களுக்கு எந்தச் சிரமமும் இல்லாமல் இருக்கவேண்டும் என்று அரசே உங்களிடம் வந்து விண்ணப்பங்களை வாங்க எப்படி வாங்கினார்களோ அதேபோல, அந்த விண்ணப்பங்களை வாங்குகின்ற முகாம்களை அமைக்க சொன்னேன். கடந்த ஜூலை 24-ந் தேதி, தருமபுரி மாவட்டம் தொப்பூரில் அந்த முகாமை, நானே நேரில் சென்று தொடங்கி வைத்தேன். ஏறக்குறைய ஒரு கோடியே 63 இலட்சம் மகளிர் விண்ணப்பித்தார்கள். இதற்கும் சிலர் விமர்சனம் செய்தார்கள்!

தகுதியுள்ள மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் என்று சொன்னதை, தேர்தல் வாக்குறுதிக்கு முரணாக செய்கிறார்கள் என்று பேசினார்கள்! நாம் தொடக்கத்தில் இருந்தே தெளிவாக சொன்னோம். தகுதி உள்ளவர்கள் யார் யாரென்று நேர்மையான, பாரபட்சமற்ற விதிமுறைகளின் அடிப்படையில், அரசு சார்பில் வெளியிடப்பட்டு, தமிழ்நாட்டில் இருக்கின்ற அத்தனை குடும்ப அட்டைதாரர்களையும் விண்ணப்பிக்க சொன்னோம்.

இந்தத் திட்டத்தின் நோக்கத்தையும், விதிமுறைகளின் குறிக்கோளையும் மக்கள் உள்ளார்ந்து புரிந்து கொண்ட காரணத்தால்,
2 கோடியே 24 இலட்சம் குடும்ப அட்டைதாரர்களில், 1 கோடியே 63 இலட்சம் மகளிர் மட்டும் விண்ணப்பித்தார்கள்!

மக்களுடைய இந்த புரிதல், இந்தத் திட்ட விதிமுறைகளுக்கான நியாயத்தை காண்பித்தது. விமர்சித்தவர்கள் அமைதி ஆகிவிட்டார்கள். இப்படி விண்ணப்பத்தவர்களிலிருந்து, 1 கோடியே 6 இலட்சத்து 58 ஆயிரத்து 375 தகுதியுள்ள மகளிர் தேர்ந்தெடுக்கப்பட்டு, எல்லோருக்கும் அவர்களுடைய வங்கிக் கணக்கில், இந்தத் திட்டம் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பாகவே, அதாவது, செப்டம்பர் 14-ந் தேதியே, அந்த மாதத்திற்கான உரிமைத்தொகையான 1000 ரூபாயை நாம் வரவு வைத்தோம். அந்த மாதம், வங்கிக் கணக்கு இல்லாத 2 இலட்சத்து 42 ஆயிரத்து 956 பயனாளிகளுக்கு, மணியார்டர் மூலம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
அடுத்து அக்டோபர் 15-ஆம் தேதி வங்கிக் கணக்குகளில் வரவு வைத்தோம். மணியார்டர் மூலம் உரிமைத்தொகை வழங்கப்பட்ட மகளிருக்கு, வங்கிக் கணக்கு தொடங்க நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

இவ்வளவு பெரிய திட்டம்! ஒரு கோடிக்கும் அதிகமான பயனாளிகள்! அவர்கள் அனைவருக்கும் 1000 ரூபாய்! ஆனால், எந்தச் சிறிய புகாருக்கும் இடமில்லை! அதுதான், இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய வெற்றி! அந்தப் பெருமிதத்துடன் சொல்கிறேன், ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ நாட்டிற்கே முன்னுதாரணமாக அமைந்திருக்கக்கூடிய திட்டம்!

ஒரு திட்டம் பெற்ற வெற்றியை தொடர வேண்டுமென்றால், அதை தொடர்ந்து கவனிக்கவேண்டும்! அதனால், முகாம்களில் விண்ணப்பித்து, தகுதி இருந்தும் தேர்ந்தெடுக்கப்படாத விண்ணப்பதாரர்களுக்கும், முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களில், பதிவாகாமல் போன விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களும் தரவுகளை தொடர்ந்து சரிபார்க்கப்பட்டது. இதற்காக மட்டுமே அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த ஏறக்குறைய 54,220 அலுவலர்கள் மாவட்ட அளவிலும், கிராம அளவிலும் நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் சரி பார்த்து ஒரு பட்டியலை எங்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். அதில் இந்த மாதத்திலிருந்து, 7 இலட்சத்து 35 ஆயிரம் மகளிர் புதிய பயனாளிகளாக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

புதிய பயனாளிகளான என் அன்புச் சகோதரிகள் அனைவருக்கும் முதலில் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்! உங்களுக்கான 1000 ரூபாயை நேற்றே உங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது! உங்களுடன் சேர்த்து, மொத்தம் 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 பேர் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் ‘1000 ரூபாய் இனி பெறப்போகிறார்கள். நீங்கள் மட்டுமல்ல, தகுதியுள்ள யாரும் விடுபட்டுவிட கூடாது என்று கவனமாக இருக்கிறோம். அதானல்தான், விண்ணப்பித்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால், ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்ற காரணத்தை, குறுஞ்செய்தியாக அனுப்பி வைத்தோம். அந்தக் காரணம் ஏற்புடையதாக இல்லையென்றால், மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு கொடுத்தோம். அதை பயன்படுத்தி, மேல்முறையீடு செய்தார்கள். அவர்களுடைய விண்ணப்பங்களையும் பரிசீலனை செய்து கொண்டிருக்கிறோம்.

சரிபார்ப்பு அலுவலர்கள் களஆய்வு செய்து, தகுதிபெறும் மகளிருக்கு, வருகிற டிசம்பர் மாதத்தில் இருந்து, ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ மூலமாக 1000 ரூபாய் வழங்கப்படும். தகுதியுள்ள அனைவருக்கும் இந்த உரிமைத் தொகை கிடைக்கின்ற வரைக்கும், திராவிட மாடல் அரசின் இந்தப் பணி நிச்சயம் தொடரும்! கடந்த மார்ச் 27-ந்தேதி சட்டமன்றத்தில் இந்தத் திட்டத்தைப் பற்றி பேசும்போது, ஏறத்தாழ 1 கோடி குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் 1000 ரூபாய் வழங்கிடும் வகையில் இந்தத் திட்டம் அமையும் என்று நான் சொன்னேன். ஆனால், இன்றைக்கு, 1 கோடியே 13 இலட்சத்து 84 ஆயிரத்து 300 பயனாளிகள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இதுதான் இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய வெற்றி!

இதே மாதிரியான திட்டம், வேறு மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டபோது, பொதுமக்கள் கூட்ட நெரிசல்களில் எப்படிப்பட்ட இன்னல்களுக்கும், அலைக்கழிப்புக்கும் ஆளாகினார்கள் என்று ஊடகங்களில் வந்தது. அதுமாதிரி எந்த நிகழ்வும் இல்லாமல் அமைதியான முறையில் அனைத்து தகுதியுள்ள மகளிரையும் இந்தத் திட்டம் சென்று சேர்ந்திருக்கிறது. எந்தவிதமான சர்ச்சைக்கும் இடமளிக்காத வகையில் இந்தத் திட்டத்தை செயல்படுத்திக்காட்டிய பெருமை, அரசு அலுவலர்களையும், பணியாளர்களையும்தான் போய்ச் சேரும்!

இந்தத் திட்டத்திற்குப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் தம்பி உதயநிதி, அரசு அலுவலர்களுடன் இந்தத் திட்டச் செயல்பாடு குறித்து தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்கள நடத்திக்கொண்டே இருப்பார். அவருக்கும் என்னோட வாழ்த்துகள். தொடர்ந்து களத்திலும் ஆய்வு செய்துகொண்டு இருக்கிறார். அது இனியும் தொடரும். அதில் எந்தவித சந்தேகமும் உங்களுக்கு இருக்க வேண்டிய அவசியமில்லை. நம்முடைய தலைமைச் செயலாளர், வளர்ச்சி ஆணையர், நிதித் துறைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கடந்த சில மாதங்களாக, ஏறக்குறைய 50 முறைக்கும் மேலாக ஆய்வுக் கூட்டங்களை நடத்தி இந்தத் திட்டத்தில் எந்தவித குறைபாடும் ஏற்படாமல் செயல்படுத்துவது குறித்து விவாதித்திருக்கிறார்கள்.

ஒட்டுமொத்தமாக சொல்லவேண்டும் என்றால், மாண்புமிகு அமைச்சர்கள், அரசு உயர் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள் முதல், தமிழ்நாட்டின் கடைக்கோடியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலர், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் என அனைத்து நிலை பணியாளர்களும் தொடர்ந்து உழைத்ததின் விளைவுதான், இந்த மாபெரும் வெற்றி! இது, ஊர் கூடி, ‘இழுத்த தேர்!’ ஊருக்காக நம்முடைய திராவிட மாடல் அரசு, ‘உருவாக்கிய தேர்!’ ’மக்களின் தேர்’ இது! தேசிய ஊடகங்களும், பிற மாநில அரசுகளும் கூட நம்முடைய இந்த திட்டமிடல், நிர்வாக நடைமுறையை வியந்து பார்க்கிறார்கள். அந்த வகையில், இந்தத் திட்டம் இவ்வளவு பெரிய இமாலய வெற்றி பெற உழைத்திட்ட அனைவருக்கும் என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துகளையும், என் நெஞ்சார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிகப்பெரிய சாதனையை அமைதியாக செய்து காட்டி இருக்கிறோம். திராவிட மாடல் ஆட்சியில், இந்தியாவிற்கே எடுத்துக்காட்டான மாநிலமாக, தமிழ்நாடு தொடர்ந்து வளரும்! வளரும்!

நிறைவாக, தமிழ்நாடு முழுவதும் இன்றைக்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற சகோதரிகள் அனைவருக்கும் மீண்டும் உங்களில் ஒருவனான இந்த ஸ்டாலினுடைய வாழ்த்துகளை தெரிவித்து விடைபெறுகிறேன்.

The post ”மிகப்பெரிய சாதனையை அமைதியாக செய்து காட்டி இருக்கிறோம்..!” மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4/feed/ 0
கனிமொழி எம்பி., நடத்தும் ’’மக்கள் களம்’’ நிகழ்ச்சி எப்படி நடக்கிறது..?’’ நமது நிருபரின் நேரடி ரிப்போர்ட் https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25ae%25a9%25e0%25ae%25bf%25e0%25ae%25ae%25e0%25af%258a%25e0%25ae%25b4%25e0%25ae%25bf-%25e0%25ae%25a8%25e0%25ae%259f%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3 https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/#respond Fri, 10 Nov 2023 03:17:36 +0000 https://madrasmurasu.com/?p=7483 பல வருடங்களுக்குப் பிறகு பன்னம்பாறையில் ஒரு பிரம்மாண்டமான அரசு நிகழ்ச்சி!! ஊர் மக்கள் மகிழ்ச்சி!!! தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர், மாவட்ட அமைச்சர், தொகுதி எம்.எல்.ஏ., அரசின் அலுவலர்கள் கலந்து கொண்டு மக்களின் குறைகளை நேரடியாக மனுவாக பெறும் “மக்கள் களம்” நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. மக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்றார்கள் சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் இந்த நிகழ்ச்சி 09.11.2023 […]

The post கனிமொழி எம்பி., நடத்தும் ’’மக்கள் களம்’’ நிகழ்ச்சி எப்படி நடக்கிறது..?’’ நமது நிருபரின் நேரடி ரிப்போர்ட் first appeared on Madras Murasu.

]]>
பல வருடங்களுக்குப் பிறகு பன்னம்பாறையில் ஒரு பிரம்மாண்டமான அரசு நிகழ்ச்சி!! ஊர் மக்கள் மகிழ்ச்சி!!!

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர், மாவட்ட அமைச்சர், தொகுதி எம்.எல்.ஏ., அரசின் அலுவலர்கள் கலந்து கொண்டு மக்களின் குறைகளை நேரடியாக மனுவாக பெறும் “மக்கள் களம்” நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது.

மக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்றார்கள்

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் இந்த நிகழ்ச்சி 09.11.2023 அன்று இரவு பன்னம்பாறை கிராமத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி முன்னிலையில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி உள்பட மாவட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு மக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்றார்கள்.

நிறைவேற்றி தருவதாக என்று சொன்னார்கள்

அதிகமான கால்நடை வளர்ப்பு தொழிலை நம்பி உள்ள பன்னம்பாறை கிராமத்தில் ஆடு, மாடு, நாய், கோழிகளுக்கு மருத்துவம் பார்க்க கால்நடை கிளை மருந்தகம் இல்லை. இதற்கு பலமுறை வேண்டுகோள் விடுத்தும் கால்நடை கிளை மருந்தகம் அமைக்க முடியாமல் போனது. இன்றைய நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அழகேசன் அனைவரின் முன்னிலையிலும் இந்த கோரிக்கையை வைத்தார். கனிமொழி எம்பியும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் அக்கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக என்று சொன்னார்கள்.

கூடுதல் நிதி ஒதுக்கீடு – கலெக்டர் உறுதி

இது தவிர மக்கள் அனைவரும் தங்களுடைய கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.
18 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட வடக்கு பன்னம்பாறைக்கு புதிய சாலை வேண்டி பல கட்டமாக முயற்சி எடுத்த பிறகு, தற்போது புதிய சாலை அமைக்க ஆர்டர் ஆகி விட்டது. ஆனால், சாலை அமைக்கும் பணிக்காக மறு மதிப்பீடு செய்யப்பட்டு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தின் ஒப்புதலுக்கு சென்றிருப்பதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் தெரிய வந்தது. இந்த நிகழ்ச்சியில் நான் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை நேரில் சந்தித்து இதுகுறித்து வேண்டுகோள் விடுத்தேன். கனிவுடன் கேட்ட மாவட்ட ஆட்சித் தலைவர், தன்னுடைய உதவியாளரிடமும், சாத்தான்குளம் வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் சாலை அமைக்கும் பணியை துரிதப்படுத்த கூறினார்கள்.

மக்களோடு மக்களாக கனிமொழி எம்பி.,

விழாவில் வயதான பாட்டி ஒருவர், விழா மேடைக்கு நேரில் செல்ல முயன்ற போது மேடையில் இருந்த கனிமொழி எம்.பி., அந்த பாட்டியின் அருகே ஓடோடோடிச் சென்றார். அவரின் கோரிக்கையை கேட்டுக்கொண்டதுடன், மக்களைத் தேடி மருத்துவத்தின் மருந்துப் பெட்டகத்தைக் கொடுத்தார். ‘’உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்’’ என்று உறுதி அளித்தார். அந்த பாட்டி, கைகூப்பி வணங்கி நன்றி தெரிவித்தார். கனிமொழி எம்.பி.,-யின் இந்த ’மக்கள் களம்’ திட்டம் பன்னம்பாறை மக்களிடையே நல்வரவேற்பை பெற்றது. மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் மனு கொடுத்தனர். எவ்வளவு நேரம் ஆனாலும் கடைசியில் உள்ள மனுதாரரிடம் பொறுமையாக மனுக்களை பெற்றுக் கொண்டார் கனிமொழி எம்பி.,

தூத்துக்குடி மாவட்டத்தில் எம்.பி, அமைச்சர், காங்கிரஸ் எம்.எல்.ஏ என்று அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவது பொதுமக்களிடம் நான் மதிப்பை பெற்றிருக்கிறது. மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட நிர்வாகத்தினர் ஆகியோர் ஒட்டு மொத்தமாக கலந்து கொண்ட நிகழ்ச்சியில், கனிமொழி எம்.பி-யிடம் நேரில் மனு கொடுத்ததால் கோரிக்கை மனுக்கள் மீது உடனடி கவனம் செலுத்தி பிரச்னைகளை அவர் தீர்த்து வைப்பார் என்று நம்பிக்கையுடன் அங்கு வந்தவர்கள் அவர்களுக்குள் பேசிக் கொண்டனர்.

விடியல் பிறக்கட்டும்..!

கோமதிநாயகம்  விசு

The post கனிமொழி எம்பி., நடத்தும் ’’மக்கள் களம்’’ நிகழ்ச்சி எப்படி நடக்கிறது..?’’ நமது நிருபரின் நேரடி ரிப்போர்ட் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/feed/ 0
’’தனியாரின் கைகள், ரயில்வே துறையின் மீது சுதந்திரமாக படர்கிறது..!’’ சு.வெங்கடேசன் எம்.பி., https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25ae%25a9%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%2588%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%258d-%25e0%25ae%25b0%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/#respond Tue, 07 Nov 2023 05:02:06 +0000 https://madrasmurasu.com/?p=7417 ’’ரயில்வே நிர்வாகத்தின் அனுமதி பெறாமலே தனியார் ரயில் இயக்குவதாக விளம்பரம். மோடி அரசின் கொள்கைகள் ரயில்வே துறையை கேலிகூத்தாக்குகிறது’’ என்று சு. வெங்கடேசன் எம் பி., குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அறிக்கை: சென்னை தாம்பரத்தில் இருந்து திருச்சி மதுரை திருநெல்வேலி வழியாக திருவனந்தபுரத்துக்கு தனியார் நிறுவனம் ஒன்று ரயிலை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது போல் விளம்பரம் வெளியிட்டுள்ளது. இது பாரத் கௌரவ் திட்டத்தின் கீழ் அவர்கள் வாங்கி வைத்துள்ள வண்டி தொடரை […]

The post ’’தனியாரின் கைகள், ரயில்வே துறையின் மீது சுதந்திரமாக படர்கிறது..!’’ சு.வெங்கடேசன் எம்.பி., first appeared on Madras Murasu.

]]>
’’ரயில்வே நிர்வாகத்தின் அனுமதி பெறாமலே தனியார் ரயில் இயக்குவதாக விளம்பரம். மோடி அரசின் கொள்கைகள் ரயில்வே துறையை கேலிகூத்தாக்குகிறது’’ என்று சு. வெங்கடேசன் எம் பி., குற்றம்சாட்டி உள்ளார்.

இதுகுறித்து, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அறிக்கை:

சென்னை தாம்பரத்தில் இருந்து திருச்சி மதுரை திருநெல்வேலி வழியாக திருவனந்தபுரத்துக்கு தனியார் நிறுவனம் ஒன்று ரயிலை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது போல் விளம்பரம் வெளியிட்டுள்ளது. இது பாரத் கௌரவ் திட்டத்தின் கீழ் அவர்கள் வாங்கி வைத்துள்ள வண்டி தொடரை வைத்து இயக்க உள்ளதாக தெரிகிறது.

ஆனால், தென்னக ரயில்வேயின் தலைமை அதிகாரிகள் அப்படி ஒரு ரயில் இயக்க நாங்கள் எந்த அனுமதியும் தரவில்லை என்று எனக்கு பதில் கூறியுள்ளனர்.
அனுமதி வாங்காமல் விளம்பரம் செய்யக்கூடாது என்று விதி இருந்தும் அனுமதி வாங்காமல் விளம்பரம் செய்துள்ள நிறுவனத்தின் மீது ரயில்வே நிர்வாகமே
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரயில்வே துறையின் மீதுள்ள நம்பகத்தன்மை தொடர்ந்து கேள்விக்குறியாகி வரும் சூழலில் தனியார் நிறுவனம் தனது விருப்பப்படி பெரும் கட்டணக்கொள்ளையில் ரயில் இயக்கப்படும் என்று விளம்பரம் தருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
முன்பெல்லாம் ரயில்வே நிர்வாகம் திருவிழாக் காலங்களில் அன்றாட ரயில்களின் கட்டணத்தில் சிறப்பு ரயில்களை இயக்கி பயணிகளுக்கு வசதி செய்து கொடுத்தது. கொரோனாவிற்கு பின்பு சிறப்பு ரயில்களை சிறப்புக் கட்டண சிறப்பு ரயில்கள் என்று பெயர் வைத்து பெரும் கட்டணத்தை ரயில்வே வசூலிக்கிறது. பொதுமக்களின் அவசரத் தேவையை அதீத லாபத்திற்கான வாய்ப்பாக பார்க்கிறது.

இந்திய ரயில்வேயின் அன்றாட ரயில்களிலும் மூத்த குடிமக்களுக்கான சலுகையை ரத்து செய்து விட்டார்கள். தட்கல் பிரிமியம் என்று கட்டணத்தை அன்றாட ரயில் வண்டிகளிலும் கடும் உயர்வை ஏற்படுத்தி விட்டார்கள். டிக்கெட் விற்று பெருலாபம் சம்பாதித்து சலித்துப்போய் இப்போது ரயில் தடத்தை விற்று லாபம் சம்பாதிப்பதில் தீவிரம் காட்டுகின்றனர். இதன் விளைவு தனியாரின் கைகள் ரயில்வே துறையின் மீது சுதந்திரமாக படர்கிறது. இது ரயில்வேயின் நலனுக்கும் மக்களின் நலனுக்கும் எதிரானது.

The post ’’தனியாரின் கைகள், ரயில்வே துறையின் மீது சுதந்திரமாக படர்கிறது..!’’ சு.வெங்கடேசன் எம்.பி., first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/feed/ 0
‘’அச்­சு­றுத்­தல்­க­ளுக்­கும் – மிரட்­டல்­க­ளுக்­கும் பயப்­ப­டும் இயக்­க­மல்ல தி.மு.க.!’’ முதல்­வர் மு.க.ஸ்டாலின் https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%259a%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25af%2581%25e0%25ae%25b1%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d/#respond Mon, 06 Nov 2023 07:24:49 +0000 https://madrasmurasu.com/?p=7403 ‘‘ரெய்­டு­கள் மூல­மாக அ.தி.மு.க.வை மிரட்டி, நீட்­டிய இடங்­க­ளில் எல்­லாம் கையெ­ழுத்து வாங்­கி­ய­து­போல் நம்­மை­யும் மிரட்­ட­லாம் என்று பகல்­க­னவு காண்­கி­றார்­கள். இந்த சல­ச­லப்­பு­க­ளுக்­கும் – அச்­சு­றுத்­தல்­க­ளுக்­கும் – மிரட்­டல்­க­ளுக்­கும் பயப்­ப­டும் இயக்­க­மல்ல தி.மு.க.!’’ என்று முதல்­வர் மு.க.ஸ்டாலின் திரு­வள்­ளூ­ரில் நடை­பெற்ற சென்னை மண்­டல வாக்­குச் சாவடி பாக முக­வர்­கள் பயிற்சி பாச­றைக் கூட்­டத்­தில் காணொலி மூல­மாக உயைாற்­றும்­போது கூறினார். திமுக தலை­வ­ரும் முத­ல­மைச்­ச­ரு­மான மு.க. ஸ்டாலின் நேற்று (5–-11-–2023) திரு­வள்­ளூ­ரில் நடை­பெற்ற சென்னை மண்­டல வாக்­குச்­சா­வடி பாக முக­வர்­கள் […]

The post ‘’அச்­சு­றுத்­தல்­க­ளுக்­கும் – மிரட்­டல்­க­ளுக்­கும் பயப்­ப­டும் இயக்­க­மல்ல தி.மு.க.!’’ முதல்­வர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.

]]>
‘‘ரெய்­டு­கள் மூல­மாக அ.தி.மு.க.வை மிரட்டி, நீட்­டிய இடங்­க­ளில் எல்­லாம் கையெ­ழுத்து வாங்­கி­ய­து­போல் நம்­மை­யும் மிரட்­ட­லாம் என்று பகல்­க­னவு காண்­கி­றார்­கள். இந்த சல­ச­லப்­பு­க­ளுக்­கும் – அச்­சு­றுத்­தல்­க­ளுக்­கும் – மிரட்­டல்­க­ளுக்­கும் பயப்­ப­டும் இயக்­க­மல்ல தி.மு.க.!’’ என்று முதல்­வர் மு.க.ஸ்டாலின் திரு­வள்­ளூ­ரில் நடை­பெற்ற சென்னை மண்­டல வாக்­குச் சாவடி பாக முக­வர்­கள் பயிற்சி பாச­றைக் கூட்­டத்­தில் காணொலி மூல­மாக உயைாற்­றும்­போது கூறினார்.

திமுக தலை­வ­ரும் முத­ல­மைச்­ச­ரு­மான மு.க. ஸ்டாலின் நேற்று (5–-11-–2023) திரு­வள்­ளூ­ரில் நடை­பெற்ற சென்னை மண்­டல வாக்­குச்­சா­வடி பாக முக­வர்­கள் பயிற்­சிப் பாச­றைக் கூட்­டத்­தில் உடல்­நிலை கார­ண­மா­கக் காணொலி மூல­மா­கக் கலந்­து­கொண்டு கீழ்க்­கா­ணு­மாறு பேசி­னார்.

முதல்­வர் மு.க.ஸ்டாலின் ஆற்­றிய உரை வரு­மாறு:–

திடீ­ரென்று காய்ச்­ச­லும் – தொண்டை வலி­யும் எனக்கு ஏற்­பட்­டு­விட்ட கார­ணத்­தால் இந்த நிகழ்ச்­சிக்கு நேர­டி­யாக வந்து உங்­களை எல்­லாம் சந்­தித்து உரை­யாற்­றா­மல் போன­தற்­காக நான் முத­லில் என்­னு­டைய வருத்­தத்தை மிகுந்த பணி­வோடு உங்­க­ளுக்­கெல்­லாம் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.

இந்­தக் கூட்­டத்தை மிகச் சிறப்­பாக ஏற்­பாடு செய்­தி­ருக்­கும் – தனித்­த­னி­யாக சொல்ல வேண்­டும் என்று ஆசை, ஆனால்தொண்டை சரி­யில்லை. ஒட்­டு­மொத்தஅத்­தனை பேருக்­கும், இதில் உண்­மை­யாக பாடு­பட்டு பணி­யாற்­றிய நம்­மு­டைய கட்சி உடன்­பி­றப்­பு­கள், சகோ­த­ரர்­கள், நண்­பர்­கள், நிர்­வா­கி­கள், பல்­வேறு அணி­க­ளைச் சார்ந்­த­வர்­கள், மாவட்­டச் செய­லா­ளர்­கள் எல்­லா­வற்­றிற்­கும் மேல் தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளின் அன்பு உடன்­பி­றப்­பு­கள் அத்­தனை பேருக்­கும் என்­னு­டைய இத­யப்­பூர்­வ­மான நன்­றியை, வணக்­கத்தை நான் முத­லில் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.

நான் அங்கு வர­வில்லை என்று சொன்­னா­லும் என்­னு­டைய நினை­வு­கள் எல்­லாம் அங்கு என்ன நடந்து கொண்­டி­ருக்­கி­றது… எப்­படி சென்று கொண்­டி­ருக்­கி­றது என்­று­தான் என்­னு­டைய சிந்­தனை எல்­லாம் இருந்­தது. தொடர்ந்து விசா­ரித்­துக் கொண்­டி­ருந்­தேன். அத­னால் நீங்­கள் யாரும் என்­னைத் தவ­றாக நினைத்­துக் கொள்ள மாட்­டீர்­கள் என்று கரு­து­கி­றேன். அதி­கம் பேசக்­கூ­டாது என்று மருத்­து­வர்­கள் கட்­டா­யப்­ப­டுத்தி இருக்­கி­றார்­கள். அதை எல்­லாம் மீறி வந்து இங்கே வந்து உட்­கார்ந்­தி­ருக்­கி­றேன். இப்­போது என்­னு­டைய பேச்­சைச் சுருக்­க­மாக தம்பி உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் படிக்­கு­மாறு கேட்­டுக்­கொள்­கி­றேன்.

உத­ய­நிதி ஸ்டாலின் பேச்சு!

நிகழ்­வில் கழக இளை­ஞ­ர­ணிச் செய­லா­ளர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் படித்த கழ­கத் தலை­வர் அவர்­க­ளின் உரை பின்­வ­ரு­மாறு:–

காத்­தி­ருக்­கும் நாடா­ளு­மன்­றக் களத்­தில்,கனிந்து வரும் வெற்­றிக் கனி­யைப் பறிக்க – விளைந்து நிற்­கும் வெற்­றியை வீடு சேர்க்க –நாடா­ளு­மன்­றத் தேர்­தல் பணிக்­கான தொடக்­கப்­புள்­ளி­யான இந்த வாக்­குச் சாவடி பொறுப்­பா­ளர்­கள் கூட்­டம், திருச்சி – இரா­ம­நா­த­பு­ரம் – திருப்­பூர் – – திரு­வண்­ணா­ ம­லை­யைத் தொடர்ந்து, இன்று திரு­வள்­ளூ ­ரில் நடை­பெ­று­கி­றது.

இந்த மாநாட்டை மிகச் சிறப்­பாக ஏற்­பாடு செய்­துள்­ளார் ராணிப்­பேட்டை காந்தி அவர்­கள். ராணிப்­பேட்டை காந்தி அவர்­களை திரு­வள்­ளூர் காந்தி என்றே இன்­றைக்கு சொல்­ல­லாம். அந்­த­ள­விற்கு இங்­கேயே இருந்து பணி­யாற்­றிக் கொண்­டி ­ருக்­கி­றார்.

அமைச்­சர் காந்தி!

காந்தி அவர்­க­ளி­டம் ஒரு பணி­யைக் கொடுத்­தால், அதைச் சிறப்­பா­கத்­தான் செய்­வார். இதனை இன்று நேற்­றல்ல, பல ஆண்­டு­க­ளா­கப் பார்த்து பாராட்­டிக்­கொண்டு வரு­கி­றேன். அவர் மன­தில் பட்­டதை பட்­டென்று சொல்­வார்; என் மன­தில் நினைப்­பதை சட்­டென்று செய்­வார். அது­தான் காந்தி! அவ­ருக்கு உறு­து­ணை­யாக இருந்த திரு­வள்­ளூர் மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர்­க­ளுக்­கும், சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கும் பாராட்­டு­கள்! வாழ்த்­து­கள்.

இன்று காலை முதல்,

* ‘வாக்­குச் சாவ­டிப் பொறுப்­பா­ளர்­க­ளின் கட­மை­க­ளும் பணி­க­ளும்’ என்ற தலைப்­பில், மூத்த வழக்­க­றி­ஞர் என்.ஆர்.இளங்கோ அவர்­க­ளும்,

* ‘வாக்­கா­ளர் பட்­டி­யல் சரி­பார்ப்­புப் பணி­கள் மற்­றும் அதன் முக்­கி­யத்­து­வம்’ குறித்து,செயல்­வீ­ரர் தா.மோ. அன்­ப­ர­சன் அவர்­க­ளும்,

* ‘சமூக வலைத்­த­ளங்­க­ளின் பயன்­பாடு, செயல்­ப­டுத்த வேண்­டிய முறை­கள்’ குறித்து, திரா­விட இயக்க எழுத்­தா­ளர் சகோ­த­ரர் லெனின் அவர்­க­ளும்,

* கழ­கத்­தின் வர­லாறு, அடிப்­ப­டைக் கொள்­கை­கள், திரா­விட இயக்­கத்­தின் கோட்­பா­டு­கள், நவீன தமிழ்­நாட்டை உரு­வாக்க நாம் எடுத்த முயற்­சி­கள், திரா­விட மாடல் ஆட்சி ஆகி­யவை குறித்து,

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சகோ­தரி தமி­ழச்சி தங்­க­பாண்­டி­யன் அவர்­க­ளும், எதார்த்த பேச்­சா­ளர் – திரா­வி­டப் பற்­றா­ளர் இயக்­கு­நர் கரு.பழ­னி­யப்­பன் அவர்­க­ளும் – என காலை முதல் இவர்­கள் மூல­மாக கொள்கை வழி­காட்­டு­த­லும், தேர்­தல் பயிற்­சி­யும் வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

இவை­யெல்­லாம் இந்­தத் தேர்­த­லுக்கு மட்­டு­மல்ல, எல்­லாத் தேர்­த­லுக்­கும் பயன்­ப­டும். இது எல்­லா­வற்­றை­யும் மன­தில் வைத்து நீங்­கள் செயல்­பட வேண்­டும்

செய­லா­ளர்­க­ளுக்­குப் பாராட்டு!

இன்று 11 மாவட்­டக் கழ­கங்­க­ளில் இருந்து, 11 ஆயி­ரத்து 569 பேர், ஆற்­றல்­மிகு மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர்­க­ளால் அழைத்துவரப்­பட்­டுள்­ளீர்­கள். இதனை ஒருங்­கி­ணைத்த,

* திரு­வள்­ளூர் மத்­திய மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் சா.மு.நாசர்

* திரு­வள்­ளூர் கிழக்கு மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் டி.ஜெ.கோவிந்­த­ரா­ஜன்

* திரு­வள்­ளூர் மேற்கு மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் எஸ்.சந்­தி­ரன்

* சென்னை கிழக்கு மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் – அமைச்­சர் பி.கே.சேகர்­பாபு

* சென்னை தெற்கு மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் – அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன்

* சென்னை தென்­மேற்கு மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் – மயிலை த.வேலு

* சென்னை மேற்கு மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் – நே.சிற்­ற­ரசு

* சென்னை வட­கி­ழக்கு மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் – மாத­வ­ரம் எஸ்.சுதர்­ச­னம்

* சென்னை வடக்கு மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் – தா.இளை­ய­அ­ருணா

* காஞ்­சி­பு­ரம் வடக்கு மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் – அமைச்­சர் தா.மோ. அன்­ப­ர­சன்

* காஞ்­சி­பு­ரம் தெற்கு மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் – க.சுந்­தர்

– ஆகிய அனை­வ­ருக்­கும் பாராட்­டு­கள்! வாழ்த்­து­கள்!

கம்­பீ­ரத்­தோடு பணி­யாற்­றுங்­கள்!

வாக்­குச்­சா­வ­டிப் பொறுப்­பா­ளர்­க­ளான நீங்­கள்­தான் உங்­கள் வாக்­குச்­சா­வ­டி­யில் இருக்­கும் வாக்­கா­ளர்­க­ளுக்­கும், நாடா­ளு­மன்­றத் தேர்­தல் வெற்­றிக்­கும் முழுப் பொறுப்பு!

உங்­களை நம்­பித்­தான் ’நாற்­ப­தும் நமதே! நாடும் நமதே!’ என்று கம்­பீ­ர­மாக முழங்­கு­கி­றோம்! அதே கம்­பீ­ரத்­தோடு இன்­றில் இருந்தே நீங்­க­ளும் தேர்­தல் பொறுப்­பா­ள­ரா­கக் கட­மை­யாற்ற வேண்­டும்!

அதற்கு,

* வாக்­கா­ளர் பட்­டி­ய­லைச் சரி­பார்ப்­பது,

* முறை­யான வாக்­கா­ளரை நம்மை நோக்கி ஈர்ப்­பது,

* வாக்­குப்­ப­திவு நாளில் வாக்­கா­ளர்­களை வாக்­குப்­ப­திவு மையங்­க­ளுக்கு வர­வ­ழைப்­பது என உங்­க­ளு­டைய கட­மை­க­ளைச் சரி­யாக – முறை­யா­கச் செய்ய வேண்­டும்!

உங்­கள் வாக்­குச்­சா­வ­டி­யில் இருக்­கும் ஒவ்­வொரு குடும்­பத்­தி­லும் ஒரு­வ­ராக நீங்­கள் மாற வேண்­டும். கழ­கத்­துக்­காக தின­மும் ஒரு மணி நேரத்தை ஒதுக்க வேண்­டும். அர­சின் திட்­டங்­க­ளை­யும் முழு­மை­ யா­கத் தெரிந்­து­கொள்ள வேண்­டும். உங்­க­ளி­டம் இன்­றைக்கு வழங்­கப்­பட்­டி­ருக்­கும் புத்­த­கத்­தைப் படித்­துப் பார்த்­தாலே, அர­சின் திட்­டங்­கள் பற்றி உங்­க­ளுக்­குத் தெரிந்­து­வி­டும். அதை வைத்து, மக்­க­ளுக்கு உதவி செய்­யுங்­கள்.

வாக்­குச்­சா­வ­டிப் பொறுப்­பா­ளர்­க­ளான நீங்­கள் கொண்டு வரும் கோரிக்­கை­க­ளுக்கு மிகுந்த முக்­கி­யத்­து­வம் கொடுத்து நியா­ய­மான கோரிக்­கை­களை நிறை­வேற்­றித்­தர வேண்­டும் என்று அமைச்­சர்­க­ளி­ட­மும், மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர்­க­ளி­ட­மும் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­ட­மும் உத்­த­ர­வா­கவே நான் சொல்­லி­யி­ருக்­கி­றேன்.

தமிழ்­நாட்­டில் இருக்­கும் ஒவ்­வொரு குடும்­ப­மும் பய­ன­டை­யும் வகை­யில் பார்த்­துப் பார்த்து திட்­டங்­க­ளைச் செயல்­ப­டுத்­திக் கொண்டு வரு­கி­றோம். இத­னால் மக்­கள் நம் ஆட்சி மீது மிகுந்த நம்­பிக்கை வைத்­துள்­ளார்­கள்.

கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் திட்­டம், விடி­யல் பய­ணம், முத­ல­மைச்­ச­ரின் காலை உண­வுத் திட்­டம், புது­மைப்­பெண் திட்­டம், நான் முதல்­வன் திட்­டம் என நமது திரா­விட மாடல் அர­சின் எல்­லாத் திட்­டங்­க­ளை­யும் நான் விளக்­க­மா­கச் சொல்ல வேண்­டிய அவ­சி­ய­மில்லை. அவை­யெல்­லாம் உங்­க­ளுக்கே நன்­றா­கத் தெரி­யும்!

இதே மாதி­ரி­யான சாத­னை­கள் ஒன்­றிய அள­வி­லும் நிகழ்த்­தப்­பட வேண்­டும் என்­று­தான் இந்­தியா கூட்­ட­ணியை நாம் உரு­வாக்­கி­யி­ருக்­கி­றோம்.

பா.ஜ.க. அரசு வஞ்­சிக்­கி­றது!

இந்­தியா கூட்­ட­ணி­யின் வெற்­றிக்­காக நாம் செய்ய வேண்­டிய கட­மை­கள் என்­ன­வென்­றால், நாம் செய்த – செய்­கிற சாத­னை­களை மட்­டும் சொல்­லா­மல், பா.ஜ.க.வின் உண்மை முகத்தை வெளிப்­ப­டுத்த வேண்­டும்!

தமிழ்­நாட்­டுக்­காக எந்­தச் சிறப்­புத் திட்­டத்­தை­யும் கொண்டு வரா­மல் தமிழ்­நாட்டை ஒன்­றிய பா.ஜ.க. அரசு வஞ்­சிக்­கி­றது. பா.ஜ.க.வின் இந்­தத் துரோ­கத்­தை­யும் மக்­கள் விரோத நட­வ­டிக்­கை­க­ளை­யும் மக்­க­ளி­டம் எடுத்­துச் சொல்ல வேண்­டும்.

பா.ஜ.க.வின் கைப்­பா­வை­யாக அத்­தனை துரோ­கத்­துக்­கும் சுய­ந­லத்­து­டன் துணை நின்­றது, அடிமை அ.தி.மு.க.! இன்­றைக்­குப் பிரிந்­தது போல நாட­கம் நடத்­தும் இந்த கும்­ப­லின் துரோ­கங்­க­ளைப் பட்­டி­யல்போட்டு மக்­க­ளி­டம் அம்­ப­லப்­ப­டுத்த வேண்­டும்!

தி.மு.க.வும் இந்­தியா கூட்­ட­ணி­யும் பா.ஜ.க.வின் மக்­கள் விரோ­தத் தன்­மையை அம்­ப­லப்­ப­டுத்­து­கி­றது என்­று­தான், எதிர்க்­கட்­சி­களை அச்­சு­றுத்­தும் நட­வ­டிக்­கை­க­ளில் இறங்­கி­யி­ருக்­கி­றது பா.ஜ.க. அத­னால்­தான், வரு­மான வரித்­துறை ரெய்டு எல்­லாம் நடை­பெ­று­கி­றது.

ரெய்­டு­கள் மூல­மாக அ.தி.மு.க.வை மிரட்டி, நீட்­டிய இடங்­க­ளில் எல்­லாம் கையெ­ழுத்து வாங்­கி­ய­து­போல் நம்­மை­யும் மிரட்­ட­லாம் என்று பகல்­க­னவு காண்­கி­றார்­கள். இந்த சல­ச­லப்­பு­க­ளுக்­கும் – அச்­சு­றுத்­தல்­க­ளுக்­கும் – மிரட்­டல்­க­ளுக்­கும் பயப்­ப­டும் இயக்­க­மல்ல தி.மு.க.!

75 ஆண்­டு­கா­ல­மாக இதை­யெல்­லாம் எதிர்த்து நின்­று­தான் நாங்­கள் வெற்றி பெற்­றுள்­ளோம்; அந்த வெற்றி என்­றைக்­கும் தொட­ரும்! வரு­மான வரித் துறைக்­கும், அம­லாக்­கத்­து­றைக்­கும் எதிர்க்­கட்­சி­கள் ஆளும் மாநி­லங்­கள் மட்­டும்­தான் கண்­க­ளுக்­குத் தெரி­கி­றது.

மாநி­லங்­கள் மட்­டும் தெரி­கி­றது!

பா.ஜ.க. ஆளும் மாநி­லங்­க­ளில் வரு­மான வரித்­துறை யும், அம­லாக்­கத்­து­றை­யும் அவ­ர­வர் அலு­வ­ல­கத்தைவிட்டு வெளி­யே­கூட வரு­வ­தில்லை.

ஆனால், இங்கு நம் தமிழ்­நாட்­டில், நம்­மு­டைய இயக்­கத்­தி­னர் ஒவ்­வொ­ரு­வ­ரை­யா­கச் சோதனை செய்­கி­றார்­கள். இப்­போது அமைச்­சர் சகோ­த­ரர் வேலு அவர்­க­ளைச் சோதனை செய்­கி­றார்­கள். இப்­படி, வரு­மான வரித்­துறை, அம­லாக்­கத்­து­றை­யின் ரெய்­டு­க­ளில், வழக்­கு­க­ளில் – Conviction Rate எவ்­வ­ளவு என்று பார்த்­தால், அவர்­கள் விசா­ரிக்­கும் வழக்­கு­க­ளில் ஒரு விழுக்­காடு கூட இல்லை.

வெறும் அர­சி­யல் பழி­வாங்­க­லுக்­கான – பா.ஜ.க.வின் கூட்­ட­ணிக் கட்­சி­கள்­தான் வரு­மான வரித்­து­றை­யும், அம­லாக்­கத்­து­றை­யும்! அத­னால்­தான் வரு­கின்ற நாடா­ளு­மன்ற மக்­க­ள­வைத் தேர்­தல் மிக மிக முக்­கி­யம் என்று சொல்­கி­றேன். இந்­தத் தேர்­த­லில் நாம் பெறப்­போ­கிற வெற்றி என்­பது, மகத்­தான வெற்­றி­யாக இருக்க வேண்­டும்.

கொள்கை என்று எது­வுமே இல்­லா­மல், ஊழல் மட்­டுமே அச்­சாணி என்று ஆட்­சி­யில் இருந்து தமிழ்­நாட்டை நாசப்­ப­டுத்­திய அடிமை அ.தி.மு.க.வும் – தமிழ்­நாட்­டின் எல்லா உரி­மை­க­ளை­யும் பறித்து தமிழ்­நாடு என்ற அடை­யா­ளத்­தையே சிதைக்க நினைக்­கும் பா.ஜ.க.வும் –சுய­ந­லத்­தின் கார­ண­மாக இந்த இரு கட்­சி­க­ளுக்­கும் துணை போகும் அதன் கூட்­ட­ணிக் கட்­சி­க­ளும் – வெளிப்­ப­டை­யான கூட்­ட­ணி­யாக வந்­தா­லும் சரி – மறை­மு­கக் கூட்­ட­ணி­யாக வந்­தா­லும் சரி, தமிழ்­நாட்­டில் எந்த தொகு­தி­யி­லும் அவர்­க­ளுக்கு டெபா­சிட் கூட கிடைக்­கக் கூடாது!

இது, கலை­ஞ­ரின் உடன்­பி­றப்­பு­க­ளான உங்­கள் கையில்­தான் இருக்­கி­றது. நாற்­ப­துக்­கும் நாற்­பது என்­கிற வெற்­றியை நாம் அடைந்­தாக வேண்­டும். கழக உடன்­பி­றப்­பு­க­ளாக நம்­மு­டைய இலக்கு இது­தான். அதற்கு இன்று முதல் உழைத்­தாக வேண்­டும்! இந்­தியா கூட்­டணி ஆட்­சி­யைப் பிடித்­தாக வேண்­டும்! வள­மிகு இந்­தி­யாவை உரு­வாக்க வேண்­டும்! அடுத்து வெற்றி விழா கூட்­டத்­தில் சந்­திப்­போம்! வாழ்க இந்­தியா! வெல்க இந்­தியா கூட்­டணி!

இவ்­வாறு அமைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் படித்­தார்.

The post ‘’அச்­சு­றுத்­தல்­க­ளுக்­கும் – மிரட்­டல்­க­ளுக்­கும் பயப்­ப­டும் இயக்­க­மல்ல தி.மு.க.!’’ முதல்­வர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d/feed/ 0
“முத்தமிழ்த்தேர்” – அலங்கார ஊர்தி உங்கள் ஊருக்கு எப்போது வருகிறது தெரியுமா..? https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25b4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2587%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25b2%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25be https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be/#respond Sat, 04 Nov 2023 10:04:22 +0000 https://madrasmurasu.com/?p=7376 “முத்தமிழ்த்தேர்” – அலங்கார ஊர்தி, கன்னியாகுமரியில் இருந்து இன்று சென்னை நோக்கி புறப்பட்டது. அனைத்து மாவட்டங்களுக்கும் செல்கிறது இந்த முத்தமிழ்த்தேர். இறுதியாக சென்னை வந்தடைகிறது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் முத்தமிழ்த்தேர் எப்போது வருகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முத்தமிழறிஞர் கலைஞர்  நூற்றாண்டு விழா, அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒரு நிலையான பங்களிப்பைத் தரவேண்டும் என்ற நோக்கத்தோடு நடத்தப்படவேண்டும் என்பதற்காக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் 12 குழுக்களை அமைத்து அறிவித்தார். அதில், “எழுத்தாளர்-கலைஞர்” குழு, படைப்புலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த முத்தமிழறிஞர் […]

The post “முத்தமிழ்த்தேர்” – அலங்கார ஊர்தி உங்கள் ஊருக்கு எப்போது வருகிறது தெரியுமா..? first appeared on Madras Murasu.

]]>

“முத்தமிழ்த்தேர்” – அலங்கார ஊர்தி, கன்னியாகுமரியில் இருந்து இன்று சென்னை நோக்கி புறப்பட்டது. அனைத்து மாவட்டங்களுக்கும் செல்கிறது இந்த முத்தமிழ்த்தேர். இறுதியாக சென்னை வந்தடைகிறது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் முத்தமிழ்த்தேர் எப்போது வருகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முத்தமிழறிஞர் கலைஞர்  நூற்றாண்டு விழா, அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒரு நிலையான பங்களிப்பைத் தரவேண்டும் என்ற நோக்கத்தோடு நடத்தப்படவேண்டும் என்பதற்காக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் 12 குழுக்களை அமைத்து அறிவித்தார்.

அதில், “எழுத்தாளர்-கலைஞர்” குழு, படைப்புலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ்நாட்டிற்கு ஆற்றிய அரும்பணிகளில் அவரது பரிமாணங்களைப் போற்றும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை செயல்படுத்திவருகிறது.

கன்னியாகுமரி முக்கோணப் பூங்கா

அந்தவகையில், முத்தமிழறிஞர் கலைஞர்  புகழுக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் இன்றைய இளம் தலைமுறையினருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பன்முகத்தன்மையினை எடுத்து செல்லும் வகையில், எழுத்தாளர் கலைஞர் குழுவின் மூலம் அவரது புகழ்பாடும் “முத்தமிழ்த்தேர்” – அலங்கார ஊர்தி தயார் செய்யபட்டுள்ளது. இந்த அலங்கார ஊர்தி 04.11.2023 சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் கன்னியாகுமரி, காந்தி மண்டபம் அருகில் உள்ள முக்கோணப்பூங்காவில் இருந்து கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தொடக்கி வைத்தார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பால்வளத்துறை அமைச்சர் த.மனோதங்கராஜ், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முத்தமிழறிஞர் கலைஞர் பன்முக ஆற்றலையும், அவர் தமிழ் சமூகத்திற்கு படைத்தளித்த மக்கள் நலத் திட்டங்களையும் தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்லும் வகையில் “முத்தமிழ்த்தேர்” என்ற அலங்கார ஊர்தி கன்னியாகுமரியில் 04.11.2023 அன்று முக்கோணப்பூங்கா, பழத்தோட்டம், ஜீரோ பாய்ண்ட் ஆகிய இடங்களிலிலும், 05:11.2023 அன்று முதல்  05:12.2023 வரை கீழ்கண்ட நாட்களில் அந்தந்த மாவட்டங்களிலும் காட்சிப்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

மாவட்டம் வாரியாக முத்தமிழ்த்தேர் வருகை

04.11.2023 -கன்னியாகுமரி
05:11.2023 – திருநெல்வேலி
06.11.2023 -தூத்துக்குடி
07.112023 – விருதுநகர்
08.11.2023 – தேனி
09.11.2023 – மதுரை
10.11.2023 – மதுரை
11.11.2023 – இராமநாதபுரம்
12.11.2023 – தீபாவளி விடுமுறை
13.11.2023- புதுக்கோட்டை
14.11.2023- சிவகங்கை
15.11.2023 – நாகப்பட்டினம்
16.11.2023 – மயிலாடுதுறை
17.11.2023 – திருவாரூர்
18.11.2023 – தஞ்சாவூர்
19.11.2023 – திருச்சிராப்பள்ளி
20.11.2023 – திண்டுக்கல்
21.11.2023 – கோயம்புத்தூர்
22.11.2023 – திருப்பூர்
23.11.2023 – ஈரோடு
24.11.2023 – கரூர்
25.11.2023 – நாமக்கல்
26.11.2023 – சேலம்
27.11.2023 – தருமபுரி
28.11.2023 – கிருஷ்ணகிரி
29.11.2023 – திருப்பத்தூர்
30.11.2023 – திருவண்ணாமலை
01.12.2023 – விழுப்புரம்
02.12.2023 – செங்கல்பட்டு
03.12.2023 – காஞ்சிபுரம்
04.12.2023 – சென்னை

எனவே, தங்கள் மாவட்டங்களில் முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்தி வருகையின் போது பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள், இளம் தலைமுறையினர் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

The post “முத்தமிழ்த்தேர்” – அலங்கார ஊர்தி உங்கள் ஊருக்கு எப்போது வருகிறது தெரியுமா..? first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be/feed/ 0
’’நாட்டு மக்களின் விடுதலைக்காக களம் காணட்டும் கழகப் படை..!’’ மு.க.ஸ்டாலின் சூளுரை https://madrasmurasu.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%2581-%25e0%25ae%25ae%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%259f%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25b2 https://madrasmurasu.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2/#respond Thu, 02 Nov 2023 09:33:19 +0000 https://madrasmurasu.com/?p=7329 ’’சேலம் மாநகரில் டிசம்பர் 17 ஆம் தேதி, திமுக இளைஞரணி மாநில மாநாடு சீரோடும் சிறப்போடும் நடைபெற இருக்கிறது. நாம் உழைப்பது நம் இயக்கத்தின் வெற்றிக்காக மட்டுமல்ல, நாட்டு மக்களின் விடுதலைக்காக. அதற்கேற்ற வகையில் ஒவ்வொரு வாக்குச்சாவடியாகக் களம் காணட்டும் கழகப் படை. வெற்றியை உறுதி செய்யும் உழைப்பை வழங்கட்டும் ’’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின், ’’நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் […]

The post ’’நாட்டு மக்களின் விடுதலைக்காக களம் காணட்டும் கழகப் படை..!’’ மு.க.ஸ்டாலின் சூளுரை first appeared on Madras Murasu.

]]>
’’சேலம் மாநகரில் டிசம்பர் 17 ஆம் தேதி, திமுக இளைஞரணி மாநில மாநாடு சீரோடும் சிறப்போடும் நடைபெற இருக்கிறது. நாம் உழைப்பது நம் இயக்கத்தின் வெற்றிக்காக மட்டுமல்ல, நாட்டு மக்களின் விடுதலைக்காக. அதற்கேற்ற வகையில் ஒவ்வொரு வாக்குச்சாவடியாகக் களம் காணட்டும் கழகப் படை. வெற்றியை உறுதி செய்யும் உழைப்பை வழங்கட்டும் ’’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்.

முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின், ’’நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்’ என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கை:

திராவிட முன்னேற்றக் கழகம் ஆறாவது முறையாக ஆட்சி செய்கின்ற வாய்ப்பினை வழங்கிய தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றுகிற வகையில் நாள்தோறும் சாதனைத் திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றி வருகிறது நமது திராவிட மாடல் அரசு. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் பின்பற்றக்கூடிய வகையில் நம்முடைய அரசின் திட்டங்கள் மக்களுக்குப் பயனளித்து வருகின்றன.
அதேநேரத்தில், மாநிலங்களின் வளர்ச்சியை விரும்பாத – மாநிலங்களின் உரிமைகளை மதிக்காத – மாநிலங்களுக்குப் போதிய நிதியளிக்காத – மாநிலங்கள் என்ற கட்டமைப்பே இருக்கக்கூடாது என்ற கொள்கையைக் கொண்டவர்களின் ஆட்சி இந்திய ஒன்றியத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது குறித்து Speaking for India என்ற நிகழ்வின் மூன்றாவது பகுதியில் பேசியிருக்கிறேன். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மாநில சுயாட்சிக் கொள்கையையும் அதன் இன்றைய தேவையையும் அந்த உரையில் குறிப்பிட்டிருக்கிறேன். தமிழிலும் இந்திய மொழிகள் பலவற்றிலும் வெளியாகியுள்ள அந்த உரையை உடன்பிறப்புகளாகிய நீங்கள் கேட்டிருப்பீர்கள் என நம்புகிறேன். அதனை எல்லாரிடமும் எடுத்துச் செல்ல வேண்டிய பணியையும் நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.

இந்தியா கூட்டணி

இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் எதிரான மதவாதக் கொள்கை கொண்ட ஆட்சியை அகற்றிட இந்தியா கூட்டணி உருவாகி, நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. அதில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பங்கு மகத்தானது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் முழுமையான வெற்றியை இந்தியா கூட்டணி பெற்றிட, தமிழ்நாடு, புதுவை உள்ளடக்கிய 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்றாக வேண்டும். அதற்கான கட்டமைப்பை இந்தியா கூட்டணி உருவாவதற்கு முன்பே நாம் தொடங்கிவிட்டோம்.

கடந்த மார்ச் 22-ஆம் நாள் நடந்த மாவட்ட கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒவ்வொரு வாக்குசாவடிக்கும் 100 வாக்காளர்களுக்கு ஒருவர் என பூத் கமிட்டி அமைப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது. ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் மகளிர், இளைஞர், சமூக வலைத்தளச் செயல்பாட்டாளர்கள் இருக்க வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழ்நாடு முழுவதுமுள்ள வாக்குச்சாவடிகளுக்கு பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டு, அதில் பங்கேற்றுள்ள உறுப்பினர்களின் விவரங்கள் சரியாக இருக்கிறதா என்பதும் உறுதி செய்யப்பட்டது.

புதிய உறுப்பினர் அட்டைகள்

அதே மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில், தி.மு.கழகத்தில் ஏற்கனவே உள்ள ஒரு கோடி உறுப்பினர்களுடன் புதிதாக ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்கிற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு, ஒரு தொகுதிக்கு எத்தனை உறுப்பினர்கள் என்ற விவரமும் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டு, அதன்படி புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு நிறைவடைந்துள்ளது. புதிய உறுப்பினர்களின் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆதாரங்களும் சரிபார்க்கப்பட்டுள்ளன. நவம்பர் 7-ஆம் நாள் முதல் கழகத்தின் புதிய உறுப்பினர்களுக்கான அட்டைகள் வழங்கப்படவிருக்கின்றன.

அதுபோலவே, பூத் கமிட்டிக்குரிய பாக முகவர்களின் (BLA2) கூட்டம் மண்டலவாரியாக நடைபெற்று வருகிறது. 26-07-2023 அன்று திருச்சியில் டெல்டா மண்டல பாக முகவர்களுக்கான பயிற்சிக் கூட்டமும், 17-08-2023 அன்று இராமநாதபுரத்தில் தென்மண்டல பாக முகவர்களுக்கான பயிற்சிக் கூட்டமும், 24-09-2023 அன்று காங்கேயத்தில் மேற்கு மண்டல பாக முகவர்களுக்கான பயிற்சிக் கூட்டமும், 22-10-2023 அன்று திருவண்ணாமலையில் வடக்கு மண்டல பாக முகவர்களுக்கான பயிற்சிக் கூட்டமும் சிறப்பான முறையில் நடந்தேறிய நிலையில், நவம்பர் 5 அன்று சென்னை மண்டலத்திற்கான பாக முகவர்களுக்குரிய பயிற்சிக் கூட்டம் திருவள்ளூரில் நடைபெறவிருக்கிறது.

வெறும் கூடிக் கலையும் கூட்டமா?

மாநாடுகள் போல நடைபெற்ற ஒவ்வொரு கூட்டத்திலும், பாக முகவர்களும் பூத் கமிட்டி உறுப்பினர்களும் எத்தகைய பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. சமூக வலைத்தளங்களில் எப்படி செயல்படவேண்டும் என்பதையும், கழகத்தின் சார்பிலான செயலிகளைப் பயன்படுத்தும் முறையையும் தெளிவாக விளக்கி, ஒவ்வொரு வாக்கையும் சிந்தாமல் சிதறாமல் கழக அணிக்குக் கொண்டு வருவதற்குரிய வகையில் பயிற்சிகள் அமைந்தன. வெறும் கூடிக் கலையும் கூட்டமாக இல்லாமல், கொள்கைத் தெளிவுடனும் அந்தக் கொள்கைகளைக் கொண்டு சேர்க்கத் தேவையான தொழில்நுட்பப் பயிற்சியுடனும் இந்தக் கூட்டங்கள் மிகச் சிறந்த பயிலரங்குகளாக நடைபெற்றிருக்கின்றன.

100 வாக்காளர்களுக்கு ஓர் உறுப்பினர்

பூத் கமிட்டிகளை அமைப்பதற்காகவும், புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியை மேற்கொள்வதற்காவும் தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கழகத்தின் சார்பில் தொகுதிப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் தங்கள் பணியை நிறைவேற்றியுள்ளனர். 100 வாக்காளர்களுக்கு ஓர் உறுப்பினர் என்ற அளவில் நியமிக்கப்பட்ட பூத் கமிட்டி உறுப்பினர்களின் விவரங்களை இந்தப் பார்வையாளர்கள் சரிபார்த்ததுடன், புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு நிகழ்வுகளையும் வீடு வீடாகச் சென்று மேற்கொள்வதை உறுதி செய்தனர். இந்தப் பணிகள் நிறைவடைந்த பிறகும், வாரம் ஒரு நாளேனும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிக்கு நேரில் சென்று களப்பணியாற்றி, வாக்காளர்களின் ஆதரவை உறுதி செய்யும் பணியும் தொகுதிப் பார்வையாளர்களுக்கு ஒப்படைக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

உங்களில் ஒருவனான நானும்

கழகத்தின் கடைக்கோடி தொண்டர்கள் வரை களத்தில் பணியாற்றும்போது, கழகத் தலைவர் என்ற பொறுப்பை உங்களால் அடைந்த கழகத்தின் மூத்த தொண்டனான உங்களில் ஒருவனான நானும் – தமிழ்நாடு முழுவதும் பயணித்து வருகிறேன். அரசு அறிவித்த திட்டங்கள் மக்களுக்கு எந்தளவில் பயன்களைத் தருகின்றன, எந்தெந்த திட்டங்களில் சுணக்கம் தெரிகிறது, அவற்றை மேம்படுத்த வேண்டிய வழிமுறைகள் என்ன என்பதை நான் மாவட்டந்தோறும் ஆய்வு செய்து, ஆலோசனைகளை வழங்கி, பணிகளை விரைந்து நிறைவேற்றச் செய்து வருகிறேன். கழகத்தின் மூத்த அமைச்சர்களும் இதே போல ஆய்வுப் பணியை மேற்கொண்டு, இளைய அமைச்சர்களுக்கும் வழிகாட்டுகிறார்கள்.

கழகத்தின் இளைஞரணிச் செயலாளரும், இளைஞர் நலன்-விளையாட்டு மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அமைச்சருமான தம்பி உதயநிதியும் தமிழ்நாடு முழுவதும் கழக நிகழ்வுகளில் தொடர்ச்சியாகப் பங்கேற்பதுடன், கழக அரசின் திட்டங்கள் எந்தளவில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்பதை ஆய்வு செய்யும் பணிகளிலும் முனைப்பாகச் செயல்பட்டு வருவதை நான் செல்லும் மாவட்டங்களில் என்னைச் சந்திக்கும் மூத்த அமைச்சர்களும் மாவட்டக் கழகச் செயலாளர்களும் தெரிவித்து வருகின்றனர்.

தம்பி உதயநிதி

கழகத்தில் எந்தவிதப் பிரதிபலனும் எதிர்பாராமல் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞருக்காகவும், கருப்பு-சிவப்பு கொடியின் நிறமே தங்கள் குருதி நிறம் என்ற உணர்வுடனும் தங்கள் இளமை வாழ்வை இயக்கத்திற்கு அர்ப்பணித்து, இன்று மூத்த உறுப்பினர்களாகத் திகழ்பவர்களுக்கு மாவட்டந்தோறும் பொற்கிழி வழங்குகிறார் தம்பி உதயநிதி. கழகம் என்றென்றும் வலிமையுடன் திகழ்ந்து, ஆதிக்க சக்தியினரையும், அவர்களிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் கூட்டத்தினரையும் ஒருசேர வீழ்த்த வேண்டும் என்பதற்காக அயராது பாடுபடும் மூத்த உறுப்பினர்களைத் தம்பி உதயநிதி மதித்துப் போற்றுகின்ற விதம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இதைத்தான் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒன்றியத்திலும், நகரத்திலும், பேரூர்களிலும் பொறுப்பில் இருக்கும் கழகத்தினர் செய்ய வேண்டும். மூத்த உடன்பிறப்புகளின் அர்ப்பணிப்பையும் நெஞ்சுறுதியையும் இளைய உடன்பிறப்புகள் பெற வேண்டும் என்பதை இளைஞரணிச் செயலாளர் பங்கேற்கும் இந்த நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.

உங்களுடைய பங்களிப்பு

அதுபோலவே, தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை உருக்குலைத்து, தமிழ்நாட்டு மாணவமணிகளின் மருத்துவப் படிப்புக் கனவைச் சிதைக்கும் நீட் எனும் கோடரிக்கு எதிராகத் தம்பி உதயநிதி அவர்கள் கழக இளைஞரணி-மாணவரணி-மருத்துவ அணியை இணைத்து தொடங்கியுள்ள கையெழுத்து இயக்கமும் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நீட்டை விரட்டும் இயக்கத்திற்கான முதல் கையெழுத்தைக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணி நடத்திய நிகழ்வில் உங்களில் ஒருவனான நான் போட்டேன். இந்தக் கையெழுத்து இயக்கத்தில், கழகத்தின் கடைக்கோடி தொண்டர்கள் பங்கேற்று கையெழுத்திடுவது மட்டுமின்றி, அவரவர் பகுதியில் உள்ள பொதுமக்களிடமும் மாணவர்களிடமும் நீங்கள் கையெழுத்தைப் பெற வேண்டும். 50 இலட்சம் என நிர்ணயித்திருக்கின்ற இலக்கையும் தாண்டி உங்களுடைய பங்களிப்பு இருக்க வேண்டும். குறிப்பாக மருத்துவக் கனவு சிதைகின்ற அச்சத்தில் உள்ள மாணவர்கள், நீட் தேர்வினால் பெரும் அவதிக்கு உள்ளாகும் பெற்றோர் ஆகியோரிடம் கையெழுத்து பெற வேண்டும்.
இளைஞரணி சார்பில் வருகின்ற டிசம்பர் 17-ஆம் நாள் சேலம் மாநகரில் இளைஞரணியின் மாநில மாநாடு சீரோடும் சிறப்போடும் நடைபெற இருக்கிறது. மாநில உரிமைகளை மீட்டெடுக்கும் நோக்கத்துடன், இந்தியாவின் தென் திசையிலிருந்து எத்திசைக்கும் பரவுகின்ற வகையில் நடைபெறவுள்ள எழுச்சி மாநாட்டைக் கழகத்தினர் அனைவரும் ஒருங்கிணைந்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

மேற்கொள்ள வேண்டும்

தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தியாவைக் காப்பாற்ற வேண்டிய கடமையையும் திராவிட முன்னேற்றக் கழகம் தன் தோளில் சுமந்துள்ளது. அதற்குப் பாக முகவர்களும், பூத் கமிட்டியினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தொகுதிப் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டிருப்போரும் வாரம் ஒரு முறையேனும் தொகுதிக்குச் சென்று பணிகளை மேற்கொள்ள வேண்டும். அனைவரின் பணிகளையும் மூத்த தொண்டன் என்ற முறையில் கழகத்தின் தலைவனான நான் கண்காணித்து, ஒவ்வொரு தொகுதியின் நிலவரத்தையும் பெற்றுக் கொண்டுதான் இருப்பேன்.

அரசின் திட்டங்களின் பயன்கள்

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் எனும் புரட்சித் திட்டம், பேருந்துகளில் பெண்களுக்குக் கட்டணமில்லாத விடியல் பயணத் திட்டம், காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட மகத்தான திட்டங்களின் பயன்கள் மக்களிடம் சரியாகப் போய்ச் சேரவேண்டும். அது பற்றி அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அரசின் திட்டங்கள் எவருக்கேனும் கிடைக்காமல் இருந்தால், அவர்கள் தகுதியான விண்ணப்பதாரர்களாக இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு அரசின் திட்டங்களின் பயன்கள் கிடைக்கும்படி செய்திட வேண்டியது தொகுதிக்குட்பட்ட மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய – நகரச் செயலாளர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பொறுப்பாகும்.

ஏழரை லட்சம் கோடி ஊழல்

வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியினைத் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் நாட்களில் நம்முடைய கழகத்தினர் கண்ணும் கருத்துமாக இருந்து, யார் யார் உண்மையான வாக்காளர்கள், யார் யார் போலியானவர்கள், இறந்துபோனவர்கள் எத்தனை பேர், இடம் மாறியவர்கள் எத்தனை பேர், இரண்டு இடங்களில் பெயர் கொடுத்திருப்போர் யார் என்பது உள்ளிட்டவற்றைக் கவனித்திட வேண்டும்.
சென்னை மண்டல பாக முகவர்கள் கூட்டம் நடைபெறும் நாளான நவம்பர் 5-ஆம் நாளன்று கூட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணி நடைபெறவிருக்கிறது. தொகுதியின் ஒவ்வொரு வார்டிலும் இருக்கக்கூடிய பூத் கமிட்டி உறுப்பினர்களைக் கொண்டு அந்தப் பணியைத் தவறாமல் மேற்கொள்ள வேண்டும்.
நாம் உழைப்பது நம் இயக்கத்தின் வெற்றிக்காக மட்டுமல்ல, நாட்டு மக்களின் விடுதலைக்காக! ஏழரை லட்சம் கோடி ஊழல் செய்ததாக சி.ஏ.ஜி.யால் குற்றம்சாட்டப்பட்டுள்ள பா.ஜ.க.வின் கைகளிலிருந்து காப்பாற்றும் வகையிலும், அவர்களுடன் கூட்டு சேர்ந்து நாட்டுக்கும் மக்களுக்கும் எண்ணற்ற துரோகங்கள் செய்துவிட்டு, இப்போது கூட்டணி முறிந்துவிட்டதாக வேடம் போடும் அ.தி.மு.க.வின் கள்ளக்கூட்டணியை அம்பலப்படுத்தும் வகையிலும் வீடு வீடாக உங்கள் பணி மேற்கொள்ளப்பட வேண்டும்.

மகத்தான வெற்றி

நாற்பதும் நமதே, நாடும் நமதே என்று கடந்த 2022-ஆம் ஆண்டு விருதுநகரில் நடந்த முப்பெரும் விழாவில் என் முழக்கத்தை முன்வைத்தேன். அதைச் செயல்படுத்தும் வியூகங்கள் வலுப்பெற்று, இன்று இந்தியா முழுவதும் பா.ஜ.க. அரசுக்கு எதிரான அலை கடுமையாக வீசிக்கொண்டிருக்கிறது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா நம் வசம்தான்! ஜனநாயகம் காப்பதில் உறுதியாக உள்ள தோழமை சக்திகளுடன் இணைந்து மகத்தான வெற்றியைப் பெறுவோம். அதற்கேற்ற வகையில் ஒவ்வொரு வாக்குச்சாவடியாகக் களம் காணட்டும் கழகப் படை. வெற்றியை உறுதி செய்யும் உழைப்பை வழங்கட்டும்.

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்!

அன்புடன்
மு.க. ஸ்டாலின்
திருவள்ளுவர் ஆண்டு 2054
ஐப்பசி 16
02-11-2023

The post ’’நாட்டு மக்களின் விடுதலைக்காக களம் காணட்டும் கழகப் படை..!’’ மு.க.ஸ்டாலின் சூளுரை first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2/feed/ 0
’’எந்த இடத்திலும் நின்று விடாமல், தொடர்ந்து முன்னேற வேண்டும்..!’’ பிரதமர் மோடி https://madrasmurasu.com/%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%258e%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4-%25e0%25ae%2587%25e0%25ae%259f%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25af%2581 https://madrasmurasu.com/%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81/#respond Thu, 02 Nov 2023 06:58:37 +0000 https://madrasmurasu.com/?p=7322 “மாற்றுத் திறனாளிகள் விளையாட்டில் வெற்றி பெறுவது என்பது விளையாட்டில் மட்டும் உத்வேகம் அளிக்கும் விசயம் அல்ல – அது வாழ்க்கையில் உத்வேகம் அளிக்கும் விசயம். ஒவ்வொரு போட்டியிலும் நீங்கள் பங்கேற்பது மனிதக் கனவுகளின் வெற்றி. நாம் நமது பெருமைகளுடன் நிறுத்திக் கொள்ளாமல் எந்த இடத்திலும் நின்று விடாமல், தொடர்ந்து முன்னேற வேண்டும்” என்று ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற இந்திய விளையாட்டு வீரர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். புதுதில்லியில் உள்ள மேஜர் தயான்சந்த் தேசிய விளையாட்டு […]

The post ’’எந்த இடத்திலும் நின்று விடாமல், தொடர்ந்து முன்னேற வேண்டும்..!’’ பிரதமர் மோடி first appeared on Madras Murasu.

]]>
“மாற்றுத் திறனாளிகள் விளையாட்டில் வெற்றி பெறுவது என்பது விளையாட்டில் மட்டும் உத்வேகம் அளிக்கும் விசயம் அல்ல – அது வாழ்க்கையில் உத்வேகம் அளிக்கும் விசயம். ஒவ்வொரு போட்டியிலும் நீங்கள் பங்கேற்பது மனிதக் கனவுகளின் வெற்றி. நாம் நமது பெருமைகளுடன் நிறுத்திக் கொள்ளாமல் எந்த இடத்திலும் நின்று விடாமல், தொடர்ந்து முன்னேற வேண்டும்” என்று ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற இந்திய விளையாட்டு வீரர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார்.

புதுதில்லியில் உள்ள மேஜர் தயான்சந்த் தேசிய விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட இந்தியக் குழுவினருடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் சிறந்த சாதனை படைத்த விளையாட்டு வீரர்களைப் பாராட்டவும், எதிர்கால போட்டிகளுக்கு அவர்களை ஊக்குவிக்கவும் பிரதமரின் ஒரு முயற்சியாக இந்த செயல்பாடு அமைந்துள்ளது.

மோடி நன்றி தெரிவித்தார்

பாரா விளையாட்டு வீரர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, அவர்களைச் சந்திக்கவும், அவர்களின் அனுபவங்களைக் கேட்கவும் ஆவலாக இருப்பதாகக் கூறினார். வீரர்கள் இங்கு வரும்போதெல்லாம் புதிய நம்பிக்கைகளையும் புதிய உற்சாகத்தையும் கொண்டு வருவதாகப் பிரதமர் கூறினார். தாம் இங்கு வந்திருப்பது ஒரு விஷயத்திற்காக மட்டுமே என்றும், அது பாரா தடகள வீரர்களின் வெற்றிகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக எனவும் அவர் தெரிவித்தார். ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளின் முன்னேற்றங்களை மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வந்ததாக அவர் கூறினார். இந்திய வீரர்களின் பங்களிப்புகளைப் பாராட்டிய பிரதமர், அவர்களின் பயிற்சியாளர்கள் மற்றும் குடும்பத்தினரையும் பாராட்டினார். நாட்டின் 140 கோடி மக்கள் சார்பாக அவர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.

மிகப்பெரிய சாதனை

விளையாட்டுகள் மிகவும் போட்டித்தன்மை கொண்டவை எனக் கூறிய பிரதமர் மோடி, விளையாட்டு வீரர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிடும்போது தங்களுக்குள் ஏற்படும் போட்டி குறித்து எடுத்துரைத்தார். விளையாட்டு வீரர்களின் மிக உயர்ந்த பயிற்சி மற்றும் அர்ப்பணிப்பை அவர் பாராட்டினார். வீரர்கள் அனைவரும் இங்கிருந்து சென்று சிலர் வெற்றியாளர்களாக திரும்பி வந்துள்ளனர் என்றும் மேலும் சிலர் கற்றுக் கொண்டு வந்துள்ளதாகவும் அவர் கூறினார். ஆனால் யாரும் தோல்வியடைந்து திரும்பி வரவில்லை என்று பிரதமர் தெரிவித்தார். விளையாட்டில் தோல்வி என்பது இல்லை எனவும் வெற்றி அல்லது கற்றுக் கொள்ளுதல் மட்டுமே உண்டு என்றும் பிரதமர் குறிப்பிட்டார். 140 கோடி மக்களிடையே இந்த வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பாரா தடகள வீரர்களுக்கு மிகப்பெரிய சாதனை என்றும் அவர் கூறினார். இந்த வீரர்களின் வெற்றி முழு நாட்டிற்கும் உத்வேகம் அளிப்பதுடன் மக்கள் மத்தியில் ஒரு பெருமித உணர்வையும் ஏற்படுத்துகிறது என்று திரு நரேந்திர மோடி கூறினார்.

வெற்றிகரமான பதக்க எண்ணிக்கை

இந்த 111 பதக்கங்கள் வெறும் எண்கள் அல்ல எனவும் 140 கோடி மக்களின் கனவுகள் என்றும் அவர் கூறினார். இந்த எண்ணிக்கை 2014 ஆம் ஆண்டில் வென்ற பதக்கங்களின் எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகம் என்றும், தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை பத்து மடங்கு அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டார். அதேபோல் பதக்கப் பட்டியலில் இந்தியா 15 வது இடத்திலிருந்து முதல் 5 இடத்திற்கு முன்னேறியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களில் விளையாட்டுத் துறையில் இந்தியாவின் சாதனைகளை எடுத்துரைத்த பிரதமர், பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வீரர்கள் பெற்ற வெற்றி மிகப் பெரிய வெற்றி என்றார். ஆகஸ்ட் மாதம் புத்தபெஸ்டில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் ஆண்கள் அணியின் முதல் தங்கப் பதக்கம், டேபிள் டென்னிஸில் பெண்கள் இணையின் முதல் பதக்கம், ஆண்கள் பேட்மிண்டன் அணியின் தாமஸ் கோப்பை வெற்றி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 28 தங்கப் பதக்கங்கள் உள்பட 107 பதக்கங்கள் மற்றும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் மிகவும் வெற்றிகரமான பதக்க எண்ணிக்கை ஆகியவற்றை அவர் குறிப்பிட்டார்.

மீண்டும் உற்சாகப்படுத்தும்

பாரா விளையாட்டுகளின் சிறப்புத் தன்மையை எடுத்துரைத்த பிரதமர், மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு வெற்றி என்பது விளையாட்டில் மட்டும் உத்வேகமளிக்கும் விசயம் அல்ல என்றும் அது வாழ்க்கையில் உத்வேகம் அளிக்கும் விசயம் என்றும் குறிப்பிட்டார். விரக்தியின் பிடியில் எவ்வளவு ஆழமாக இருந்தாலும் செயல்திறன் எந்தவொரு நபரையும் மீண்டும் உற்சாகப்படுத்தும் என்று பிரதமர் கூறினார். விளையாட்டு சமூகமாக இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம் குறித்தும், விளையாட்டு கலாச்சாரம் குறித்தும் பிரதமர் எடுத்துரைத்தார். 2030-ம் ஆண்டு இளைஞர் ஒலிம்பிக் மற்றும் 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா முயற்சிக்கிறது என்று அவர் கூறினார்.

விளையாட்டில் குறுக்குவழிகள் எதுவும் இல்லை என்று கூறிய பிரதமர், வீரர்கள் தங்கள் சொந்த திறன்களை நம்புகிறார்கள் என்றார். ஆனால் ஒரு சிறிய உதவி பன்மடங்கு பலன்களை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்தார். குடும்பங்கள், சமூகம், நிறுவனங்கள் மற்றும் பிற ஆதரவுச்சூழல்கள் இணைந்து கூட்டு ஆதரவு வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

டாப்ஸ் எனப்படும் ஒலிம்பிக் பதக்கம்

சமூகம் முந்தைய காலங்களைப் போலல்லாமல், இப்போது விளையாட்டை ஒரு தொழில்முறையாக அங்கீகரிக்கத் தொடங்கியுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். அரசுக்காக விளையாட்டு வீரர்கள்’ என்ற நிலை மாறி விளையாட்டு வீரர்களுக்கான அரசு என்ற அணுகுமுறையில் தற்போதைய அரசு மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக அவர் தெரிவித்தார். விளையாட்டு வீரர்களின் கனவுகளை அரசு அங்கீகரிப்பதை, அதன் கொள்கைகள், அணுகுமுறை மற்றும் சிந்தனையில் காணலாம் என்று பிரதமர் கூறினார். முந்தைய அரசுகள் விளையாட்டு வீரர்களுக்கான உள்கட்டமைப்பு, பயிற்சி வசதிகள் மற்றும் பண உதவி போன்றவற்றை முறையாக வழங்காததால் வீரர்கள் வெற்றியை எட்டுவதில் பெரும் தடை ஏற்பட்டது என்று அவர் தெரிவித்தார். கடந்த 9 ஆண்டுகளில், நாடு பழைய முறைகள் மற்றும் பழைய அணுகுமுறையிலிருந்து மாறியுள்ளது என்று பிரதமர் கூறினார். அரசின் இன்றைய அணுகுமுறை விளையாட்டு வீரர்களை மையமாகக் கொண்டது என்று கூறிய பிரதமர், அது தடைகளை அகற்றி அவர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது என்பதை சுட்டிக் காட்டினார். ஆற்றலுடன் இணைந்த தளம் செயல்திறனை வெளிப்படுத்தும் என்று அவர் கூறினார். ஆற்றல் என்பது தேவையான தளத்தைப் பெறும்போது செயல்திறன் ஊக்கம் பெறுகிறது என்று அவர் குறிப்பிட்டார். விளையாட்டு வீரர்களை அடித்தள நிலையில் இருந்து அடையாளம் கண்டு அவர்களின் திறமையை வளர்ப்பதன் மூலம் வெற்றிக்கு வழிவகுக்கும் கேலோ இந்தியா திட்டத்தைப் பிரதமர் குறிப்பிட்டார். டாப்ஸ் எனப்படும் ஒலிம்பிக் பதக்க இலக்குத் திட்ட முன்முயற்சி மற்றும் மாற்றுத் திறனாளிகள் விளையாட்டுப் பயிற்சி மையம் ஆகியவற்றையும் அவர் குறிப்பிட்டார்.

பெருமை சேர்ப்பார்கள்

சிரமங்களை எதிர்கொள்ளும் விளையாட்டு வீரர்களின் மீள்திறன் நாட்டுக்கு மிகப்பெரிய பங்களிப்பாகும் என்று பிரதமர் கூறினார். வீரர்கள் இதுவரை கடக்க முடியாத தடைகளை கடந்துவிட்டதாக அவர் தெரிவித்தார். இந்த உத்வேகம் எல்லா இடங்களிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் பாராட்டினார். சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் பாரா தடகள வீரர்களிடமிருந்து உத்வேகம் பெறுகிறார்கள் என அவர் தெரிவித்தார். ஒவ்வொரு போட்டியிலும் இந்த வீரர்கள் பங்கேற்பது மனித கனவுகளின் வெற்றி என அவர் குறிப்பிட்டார். இந்த வீரர்கள் கடினமாக உழைத்து நாட்டிற்கு மேலும் பெருமை சேர்ப்பார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த அரசு விளையாட்டு வீரர்களுடன் உள்ளது எனவும் நாடும் வீரர்களுடன் உள்ளது என்றும் பிரதமர் கூறினார்.

வளரந்த இந்தியாவாக மாறும்

நாம் நமது பெருமைகளுடன் நிறுத்திக் கொள்ளாமல் எந்த இடத்திலும் நின்று விடாமல், தொடர்ந்து முன்னேற வேண்டும் என்று அவர் கூறினார். நாம் உலகின் முதல் 5 பொருளாதாரங்களில் ஒன்றாக முன்னேறியுள்ள சூழலில் அடுத்த பத்து ஆண்டிற்குள் முதல் 3 பொருளாதாரங்களில் ஒன்றாக முன்னேறுவோம் என அவர் தெரிவித்தார். 2047-ம் ஆண்டில் இந்த நாடு வளரந்த இந்தியாவாக மாறும் என உறுதியாகக் கூறுவதாகத் தெரிவித்துப் பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், இந்திய பாராலிம்பிக் குழுத் தலைவர் தீபா மாலிக், மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சர் அர்ஜுன் முண்டா, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை இணையமைச்சர் நிசித் பிரமானிக் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

2018-ம் ஆண்டு செயல்திறனைவிட 54 சதவீதம் அதிகம்

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 29 தங்கப் பதக்கங்கள் உள்பட மொத்தம் 111 பதக்கங்களை வென்றது. அண்மையில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் மொத்த பதக்க எண்ணிக்கை முந்தைய 2018-ம் ஆண்டு செயல்திறனைவிட 54 சதவீதம் அதிகமாகும். 29 தங்கப் பதக்கங்களை இப்போட்டியில் இந்தியா வென்றுள்ளது. இது 2018-ல் வென்றதை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம். நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர்கள், அவர்களின் பயிற்சியாளர்கள், இந்திய பாராலிம்பிக் கமிட்டி மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் அதிகாரிகள், தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post ’’எந்த இடத்திலும் நின்று விடாமல், தொடர்ந்து முன்னேற வேண்டும்..!’’ பிரதமர் மோடி first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81/feed/ 0
’’வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மூலம் எதிர்கட்சிகளை மிரட்டும் பிஜேபி ஆட்சி..!’’ மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு https://madrasmurasu.com/%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%85%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25a9-%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25b1%25e0%25af%2588-%25e0%25ae%2585%25e0%25ae%25ae%25e0%25ae%25b2%25e0%25ae%25be https://madrasmurasu.com/%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%85%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%be/#respond Wed, 01 Nov 2023 10:35:44 +0000 https://madrasmurasu.com/?p=7302 ’’மத்தியில் இருக்கக்கூடிய ஒன்றிய பிஜேபி ஆட்சி, தனக்கெதிராக யார் எந்த கருத்தைச் சொன்னாலும், அவர்களை மிரட்டுவது, அச்சுறுத்துவது, அதற்காக  வருமான வரித்துறையை, அமலாக்கத்துறையை, இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், தொலைபேசியை டேப் செய்கின்ற முயற்சியை கையாண்டிருக்கிறார்கள்’’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (1.11.2023) சென்னையில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி இல்ல திருமண விழாவில் பேசியதாவது: மணமக்களே, மணமக்களுடைய பெற்றோர்களே, உற்றார் உறவினர்களே, நண்பர்களே, திரளாக திரண்டிருக்கக்கூடிய என் […]

The post ’’வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மூலம் எதிர்கட்சிகளை மிரட்டும் பிஜேபி ஆட்சி..!’’ மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு first appeared on Madras Murasu.

]]>
’’மத்தியில் இருக்கக்கூடிய ஒன்றிய பிஜேபி ஆட்சி, தனக்கெதிராக யார் எந்த கருத்தைச் சொன்னாலும், அவர்களை மிரட்டுவது, அச்சுறுத்துவது, அதற்காக  வருமான வரித்துறையை, அமலாக்கத்துறையை, இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், தொலைபேசியை டேப் செய்கின்ற முயற்சியை கையாண்டிருக்கிறார்கள்’’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (1.11.2023) சென்னையில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி இல்ல திருமண விழாவில் பேசியதாவது:

மணமக்களே, மணமக்களுடைய பெற்றோர்களே, உற்றார் உறவினர்களே, நண்பர்களே, திரளாக திரண்டிருக்கக்கூடிய என் உயிரோடு கலந்திருக்கக்கூடிய நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களின் உயிரினும் உயிரான அன்பு உடன்பிறப்புக்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.

நம்முடைய கிருஷ்ணசாமி அருமை மகள் தாரணி-க்கும், முருகன் – மஞ்சுளா தம்பதியின் மகன் மருத்துவர் எம். பரத் கௌசிக் -கும் நம்முடைய அன்பான வாழ்த்துகளோடு மணவிழா நிகழ்ச்சி நிறைவேறியிருக்கிறது. இந்த மணவிழா நிகழ்ச்சிக்கு தலைமை பொறுப்பேற்று மணவிழாவை நடத்தி வைத்து, அதேநேரத்தில் மணமக்களை வாழ்த்தக்கூடிய ஒரு சிறப்பான வாய்ப்பை பெற்றமைக்கு நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

சீர்திருத்த திருமணங்கள்

நடைபெற்றிருக்கக்கூடிய திருமணம் என்பது ஒரு சீர்திருத்த திருமணம். சுயமரியாதை உணர்வோடு நடைபெற்றிருக்கக்கூடிய திருமணம். இதுபோன்ற திருமணங்களில் நாம் பங்கேற்கின்ற நேரத்தில் வாழ்த்தக்கூடிய வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக ஒரு செய்தியை பதிவு செய்யாமல் நான் இருந்தது இல்லை. அந்த வரலாற்றுச் செய்தி என்னவென்று கேட்டால், இன்றைக்கு நடைபெற்றிருக்கக்கூடிய இந்த சீர்திருத்த திருமணம் 1967-க்கு முன்னால் நடைபெற்றிருக்கும் என்று சொன்னால், அந்த திருமணங்கள் சட்டப்படி, முறைப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தை பெறமுடியாத நிலையில் இருந்தது. ஆனால் 1967-ல் தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் அமோக வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்று ஆட்சியின் தலைவனாக தமிழக முதல்வராக அறிஞர் அண்ணா அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு முதலமைச்சராக முதன்முதலில் சட்டமன்றத்தில் நுழைந்து சீர்திருத்த திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லுபடியாகும் என்கின்ற அந்த தீர்மானத்தை கொண்டு வந்து அவர் நிறைவேற்றி தந்தார்.

ஆகவே, இன்றைக்கு நடைபெற்றிருக்கக்கூடிய இந்த சீர்திருத்த திருமணம் முறைப்படி, சட்டப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தோடு நடந்தேறியிருக்கிறது. இது சீர்திருத்த திருமணம் மட்டுமல்ல, சுயமரியாதை உணர்வோடு நடைபெற்றிருக்கக்கூடிய திருமணம். இன்னும் பெருமையோடு சொல்லவேண்டுமென்றால், தமிழ் திருமணம், இந்த தமிழுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில், செம்மொழி என்ற அங்கீகாரத்தை பெற்றுத் தந்தவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் என்பதை நாடு மறந்துவிட முடியாது. அப்படிப்பட்ட தமிழ் திருமணமாக, சீர்திருத்த திருமணமாக, சுயமரியாதை உணர்வோடு நடைபெறக்கூடிய திருமணமாக நம்முடைய அருமை சகோதரர் கிருஷ்ணசாமி தன்னுடைய அன்பு மகளுக்கு இன்றைக்கு சிறப்போடு நடத்தியிருக்கிறார்.

இது எங்கள் வீட்டு திருமணம்

‘பூந்தண்மல்லி’ என்பதுதான் அதன் உண்மை பெயராக இருந்தது. இன்றைக்கு பூந்தமல்லி, பூந்தமல்லி என்று நாம் அழைக்கிறோம். ஆனால் உண்மையில் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் அது பூந்தண்மல்லி என்றுதான் அழைத்துக் கொண்டிருந்த காலம். அது நாளடைவில் மாறிப்போய் இன்றைக்கு பூந்தமல்லி என்று அழைத்துக் கொண்டிருக்கிறோம். பூந்தண் என்றால் அந்த ‘தண்’ என்பதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டால் குளிர்ச்சி! அந்த குளிர்ச்சிமயமான மலர்களுடைய பெயர்கள் மட்டுமல்ல, கொள்கை பிடிப்புள்ள உடன்பிறப்புகளும், பிறந்திருக்கக்கூடிய பகுதியாகதான் பூந்தமல்லி இருந்திருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கிறபோது நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன். அதில் ஒருவராக இன்றைக்கு நம்முடைய கிருஷ்ணசாமி திகழ்ந்து கொண்டிருக்கிறார். கிருஷ்ணசாமி இன்றைக்கு சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். அவர் பழகுவதற்கு இனிமையானவர். இனிமையானர் மட்டுமல்ல, உறுதியானவர் அதுதான் முக்கியம். தம்பி, உதயநிதி இங்கே குறிப்பிட்டுச் சொன்னார். இந்த திருமணத்தை அவர்கள் வீட்டு திருமணமாக நாங்கள் கருதவில்லை, இது எங்கள் வீட்டு திருமணமாக, இன்னும் சொல்ல வேண்டுமென்றால், இது நம்முடைய வீட்டு திருமணமாக கருதிதான் இந்த விழாவில் பங்கேற்று மணமக்களை நாமெல்லாம் வாழ்த்திக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் எதிர்க்கக்கூடாது

கிருஷ்ணசாமி, நன்றியுரையாற்றுகின்ற போது குறிப்பிட்டுச் சொன்னார். அவருடைய தந்தையை அடையாளம் காட்டினார். தந்தைக்கு உரிய வணக்கத்தை எடுத்துச் சொன்னார். அப்படி சொல்கின்ற நேரத்தில் அவருடைய வரலாற்றையும் அவர் நினைவுபடுத்தி எடுத்துச் சொன்னார். அவருடைய தந்தை ஆதிசதாசிவம்.
1976-ஆம் ஆண்டில் நாம் ஒரு நெருக்கடி நிலையை சந்தித்தோம். நாட்டிற்கே நெருக்கடி வந்தது. அந்த நேரத்தில் எமர்ஜென்ஸியை நாம் எதிர்த்தோம். தலைவர் கலைஞர் -க்கு தூதுவர்கள் டில்லியிலிருந்து வருகிறார்கள். அம்மையார் இந்திராகாந்தி கொண்டு வந்திருக்கக்கூடிய அவசர நிலையை, எமர்ஜென்ஸியை நீங்கள் எதிர்க்கக்கூடாது. ஆதரிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் எதிர்க்கக்கூடாது. அப்படி மீறி எதிர்த்தால், உங்கள் ஆட்சி உடனடியாக கவிழ்க்கப்படும். நீங்கள் எதிர்க்காமல் இருந்தால், இன்னும் உங்கள் ஆட்சி சில ஆண்டு காலம் தொடரும் என்று வந்த தூதுவர்கள், கோபாலபுரத்தில் உள்ள கலைஞரிடத்தில் சொன்னார்கள். அப்போது நான், அண்ணன் துரைமுருகன், டி.ஆர்.பாலு எல்லாம் அருகில் இருக்கிறோம். அப்போது கலைஞர் ஒரு வார்த்தையை சொன்னார். எந்த காலத்திலும், எந்த சூழ்நிலையிலும், நாட்டிற்கு ஏற்பட்டிருக்கக்கூடிய நெருக்கடி சூழ்நிலையை நாங்கள் ஆதரிக்கமாட்டோம். நாங்கள் ஜனநாயகத்தைதான் நம்பியிருக்கிறோம். ஆட்சி அல்ல, எங்கள் உயிரே போனாலும், நாங்கள் இதற்கு சம்மதிக்கமாட்டோம் என்று தலைவர் கலைஞர், வந்த தூதுவரிடத்தில் சொல்லி அனுப்பினார்கள். இது வரலாறு.

கழக ஆட்சி கலைக்கப்படுகிறது

சொல்லி அனுப்பிவிட்டு, அடுத்த நாள் சென்னை கடற்கரையில் ஒரு மாபெரும் மக்கள் கூட்டத்தை திரட்டி, திரண்டிருந்த அந்த மக்கள் கூட்டத்தில் தலைவர் கலைஞர் முன்மொழிந்தார்கள். அம்மையார் இந்திராகாந்தி அவர்களே, நீங்கள் கொண்டு வந்திருக்கக்கூடிய அவசர கால நிலையை உடனடியாக திரும்ப பெறவேண்டும். எமர்ஜென்ஸியை இரத்து செய்யவேண்டும். மிசா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் வைத்திருக்கக்கூடிய தலைவர்களை எல்லாம் உடனடியாக விடுதலை செய்யவேண்டும், பல்வேறு இந்திய நாட்டின் தலைவர்கள் எல்லாம் வாடிக் கொண்டிருக்கிறார்கள், அவர்களை எல்லாம் உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று சொல்லி ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தை தலைவர் கலைஞர் முன்மொழிய குழுமியிருந்த மக்கள் அனைவரையும் எழுந்திருக்க வைத்து வழிமொழிய வைத்தார். தீர்மானம் நிறைவேற்றிய அடுத்த வினாடி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி கலைக்கப்படுகிறது. கலைக்கப்பட்டதற்கு பிறகு பலபேர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளை சார்ந்தவர்கள் எல்லாம் கைது செய்யப்படுகிறார்கள். அந்த வரலாறெல்லாம் உங்களுக்குத் தெரியும். மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு அதுவும் சென்னை சிறையில் நடந்த கொடுமைகள் எல்லாம் உங்களுக்கு நன்றாக தெரியும். அதைப்பற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை.

சிறையில் அடைத்தார்கள். இதுதான் வரலாறு..!

எதற்காக சொல்கிறேன் என்று சொன்னால், அந்த சூழ்நிலையில், நம்முடைய கிருஷ்ணசாமி அவர்களுடைய தந்தை ஆதிசதாசிவம் துணிச்சலானவர். பல பேர் வேட்டிக் கட்டுவதற்கே பயப்பட்டார்கள். அப்படியே வேட்டிக் கட்டினாலும், கருப்பு, சிவப்பு பார்டர் வைத்த வேட்டியை சிலபேர் கட்டமாட்டார்கள். அவ்வளவு பயம் சில பேருக்கு இருந்தது. உடனே கருப்பு, சிவப்பு உள்ள வேட்டியை பார்த்தால் கைது செய்து விடுவார்கள். அவ்வளவு கொடுமைப்படுத்தக்கூடிய நிகழ்ச்சியெல்லாம் நடந்தது. அந்த நேரத்தில் துணிச்சலோடு நம்முடைய கிருஷ்ணசாமி தந்தை ஆதிசதாசிவம் கழுத்தில் கருப்பு, சிவப்பு துண்டை அணிந்துகொண்டு காவல்நிலையத்திற்கு முன்பு நின்றுகொண்டு எமர்ஜென்ஸியை எதிர்க்கக்கூடிய அந்த வாதங்களை எல்லாம் எடுத்துச் சொல்லக்கூடிய அந்த நிலையை பார்த்து அவரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தார்கள். இதுதான் வரலாறு.

அப்போது சிறையில் இருந்த நேரத்தில் நம்முடைய கிருஷ்ணசாமி அவர்களே சொன்னார், அப்போது அவருக்கு வயது 10. அந்த 10 வயது சிறுவனாக இருந்து கிருஷ்ணசாமி தன்னுடைய தந்தையை பார்க்க சிறைக்கு சென்றபோது அவருக்கு ஏற்பட்ட கொடுமைகள் எல்லாம் தன்னுடைய தந்தை சொல்கின்றபோது, அவருக்கு கோபம் வரவில்லை, அதற்கு நேர்மாறாக என்ன வந்தது என்றால், உணர்ச்சி வந்தது. அந்த உணர்ச்சி எல்லாம் கடந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது பற்று வந்தது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அவருக்கு ஈடுபாடு வந்ததற்கு காரணம் என்ன என்று கேட்டால், அவர் தந்தை கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்த காட்சிதான் அவர் திமுக மீது இன்றைக்கு ஈடுபாடு கொண்டு, சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக, கட்சியில் பல பொறுப்புகளை ஏற்று, செயல்படுத்தக்கூடிய நிலையில் இன்றைக்கு வளர்ந்து வந்திருக்கிறார்.

அந்த 10 வயதில், நம்முடைய கிருஷ்ணசாமி

இளைஞர் அணி தொடங்கப்பட்டபோது நான்தான் அந்த பொறுப்பில் இருந்தேன் உங்கள் எல்லாருக்கும் தெரியும். அப்போது இளைஞர் அணியில் தன்னை இணைத்துக் கொண்டு நம்முடைய கிருஷ்ணசாமி அந்த பகுதியில் கிளைக் கழகத்தின் செயலாளராக பொறுப்பேற்று பணியாற்றிய அந்த நிகழ்ச்சி. அவரே பேசுகின்றபோது சொன்னார், என்னை அழைத்துக்கொண்டு கொடியேற்று விழா நடத்திய நேரத்தில், கொடியை ஏற்றிவிட்டு, ஏன் கல்வெட்டு இல்லை என்று கேட்டேன். கல்வெட்டு மட்டும் கேட்கவில்லை, நிதியும் கேட்டேன். அப்போது நிதியும் கொடுக்கவில்லை. இன்றைக்கும் அவர் கடனாளியாகத்தான் இருந்து கொண்டிருக்கிறார். ஆனால், எப்படி வசூலிப்பது என்று எனக்கு தெரியும். அது அல்ல முக்கியம். எதற்காக இதை சொல்கிறேன் என்று சொன்னால், அந்த 10 வயதில், நம்முடைய கிருஷ்ணசாமி இயக்கத்தில் பற்று கொண்டு அந்த வட்டாரத்தில் சிறப்பாக பணியாற்றி, படிப்படியாக வளர்ந்து, அவர் சட்டக் கல்லூரியில் மாணவரணி பொறுப்பேற்று பணியாற்றி, அதைத் தொடர்ந்து கழக வழக்கறிஞர் அணியில் தன்னை இணைத்துக்கொண்டு. ஆதிதிராவிடர் நலக்குழுவில் அவர் பொறுப்பேற்று பணியாற்றி, அதற்கிடையில் நாடாளுமன்ற உறுப்பினராக இரண்டு முறை, அதாவது நாடாளுமன்றத்தில் சிறப்பாக பணியாற்றக்கூடியவர்கள் என்று சிலரை குறிப்பிட்டுச் சொல்வதுண்டு. அந்த குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒருவராக இருந்தவர்தான் நம்முடைய கிருஷ்ணசாமி.

உங்களுக்கு நன்றாக தெரியும்

இதை தலைவர் கலைஞர் சொன்னால் கூட நான் பெரிதுபடுத்தியிருக்க மாட்டேன். ஆனால், நம்முடைய மறைந்த ஒன்றிய அமைச்சராக இருந்த முரசொலி மாறன் பலமுறை சொல்லியிருக்கிறார். அவர் வாயில் இருந்து வருவது என்பது சாதாரண விஷயமல்ல. அவரே சொல்லியிருக்கிறார். பலமுறை என்னிடத்தில் சொல்லியிருக்கிறார். தலைவரிடத்திலும் சொல்வார், மாமா, கிருஷ்ணசாமி, நாடாளுமன்றத்தில் உட்கார்ந்தால், உட்கார்ந்ததுதான், எழுந்து போகமாட்டார். அவ்வளவு உன்னிப்பாக கவனித்து அனைத்து பிரச்சனைகளையும் கூர்ந்து கவனிக்கக்கூடிய ஆற்றலை பெற்றிருக்கக்கூடியவராக இருக்கிறார் என்று பலமுறை சொல்லியிருக்கிறார். நானும் அதை கேட்டிருக்கிறேன். நாடாளுமன்றத்தில் நூல் நிலையம் இருக்கிறது. அந்த நூல்நிலையத்தை பலபேர் பயன்படுத்த மாட்டார்கள். சிலபேர் தான் பயன்படுத்துவார்கள். அதையும் முறையாக பயன்படுத்தியவர்தான் நம்முடைய கிருஷ்ணசாமி. அவர்தான் இன்றைக்கு பூவிருந்தவல்லி தொகுதியில் இடைத்தேர்தல் வந்தபோது அவரை வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற வைத்தோம். தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார். அதற்குப் பின்னால் இப்போதும் சட்டமன்ற உறுப்பினராக இருந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார். ஆகவே, இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் அவர் பணியாற்றக்கூடிய வாய்ப்பை பெற்றிக்கின்றபோது நான் உங்களை எல்லாம் கேட்டுக்கொள்ள விரும்புவது இன்றைக்கு நாட்டில் உள்ள நிலைமை எல்லாம் உங்களுக்கு நன்றாக தெரியும்.

இது என்ன கேலிகூத்து!

ஜனநாயகம் பாதுகாக்கப்படுமா? மக்களாட்சி நீடிக்குமா? என்ற நிலையில்தான் இன்றைய சூழ்நிலை அமைந்திருக்கிறது. எதிர்க்கட்சிகளை மிரட்டுவது, மத்தியில் இருக்கக்கூடிய ஒன்றிய பிஜேபி ஆட்சி, தனக்கெதிராக யார் எந்த கருத்தைச் சொன்னாலும், அவர்களை மிரட்டுவது, அச்சுறுத்துவது, அதற்காக IT-ஐ, EDஐ அதாவது அமலாக்கத்துறையை, இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், தொலைபேசியை டேப் செய்கின்ற முயற்சியை கையாண்டிருக்கிறார்கள். ஆப்பிள் என்ற ஒரு பெரிய நிறுவனம். அந்த நிறுவனத்தைச் சார்ந்தவர்களே எச்சரித்திருக்கிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர்களுக்கெல்லாம் இதுபோல ஒரு சூழ்நிலை இருக்கிறது என்று அவர்களே சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். கடிதம் எழுதியிருக்கிறார்கள். இப்படி செய்தி வந்தவுடனே, ஒன்றியத்தில் இருக்கக்கூடிய அமைச்சர் என்ன பதில் சொல்லியிருக்கிறார், இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணைக்கமிஷன் அமைக்கப்படும் என்று ஒரு அறிவிப்பு வெளியிடுகிறார். இது என்ன கேலிகூத்து! செய்வது எல்லாம் செய்துவிட்டு இன்றைக்கு விசாரணைக்கமிஷன் அமைக்கப்படும் என்று செய்தியை வெளியிடுகிறார் என்று சொன்னால், அந்த அளவுக்கு நாட்டில் இன்றைக்கு ஒரு கொடுமையை சந்திக்கக்கூடிய நிலையில் நாம் தவித்துக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கு அவர்களை பொறுத்தவரை இந்தியா கூட்டணியைப் பார்த்து தோல்வி பயம் வந்துவிட்டது.

பயம் வந்துவிட்டது.

இங்கே இந்தியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் உட்கார்ந்திருக்கிறோம். இந்தியா கூட்டணி இன்றைக்கு எதிர்பாராத வகையில் அவர்கள் எதிர்பாராத வகையில் அமைந்திருக்கிறது. இன்றைக்கு மக்களிடம் சென்று, மோடி ஆட்சியின் கொடுமைகளை, அக்கிரமங்களை, அநியாயங்களை, அவலநிலைகளை எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். விரைவில் ஐந்து மாநில தேர்தல்கள் வர இருக்கிறது. நமக்கு கிடைக்கக்கூடிய செய்திகள் எல்லாம் ஐந்து மாநிலத்திலும் பிஜேபி தோல்வியை தழுவப் போகிறது என்ற செய்திதான் வந்து கொண்டிருக்கிறது. அதனால் அவர்களுக்கு அச்சம் வந்துவிட்டது. பயம் வந்துவிட்டது. அந்த பயத்தின் காரணமாகத்தான், இன்றைக்கு இதுபோன்ற செயல்களில் எல்லாம் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் முறியடித்து, நாட்டிற்கு ஒரு நல்ல விமோசனத்தை உருவாக்கித் தருவதற்கு, இந்தியாவை காப்பாற்றுவதற்கு, இந்தியா கூட்டணிக்கு நீங்கள் அத்தனை பேரும் வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் மிகச் சிறப்பான வெற்றியை தேடித்தர வேண்டுமென்று உங்களை அன்போடு கேட்டுக்கொண்டு, அந்த வெற்றியை தேடி தரக்கூடிய படைவரிசையில் கிருஷ்ணசாமி இன்றைக்கு செயலாற்றிக் கொண்டிருக்கிறார். அவருடைய செயல்பாடு வெற்றி பெறவேண்டும்.

வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்கு தொண்டர்களாய்..!

அவருடைய அன்புச் செல்வங்கள் இன்றைக்கு மணக்கோலம் பூண்டிருக்கிறார்கள். மணக்கோலம் பூண்டிருக்கக்கூடிய மணமக்களுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து, புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கக்கூடிய “வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்கு தொண்டர்களாய்” வாழுங்கள், வாழுங்கள், வாழுங்கள் என்று வாழ்த்தி, விடைபெறுகிறேன்.

நன்றி, வணக்கம்.

The post ’’வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மூலம் எதிர்கட்சிகளை மிரட்டும் பிஜேபி ஆட்சி..!’’ மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%85%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%be/feed/ 0
’’இவை எல்லாம் முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை விதைத்திருக்கிறது..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%b5%e0%af%88-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25b5%25e0%25af%2588-%25e0%25ae%258e%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%25b2%25e0%25ae%25be%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25b2%25e0%25af%2580%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25be%25e0%25ae%25b3 https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%b5%e0%af%88-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3/#respond Tue, 31 Oct 2023 07:05:25 +0000 https://madrasmurasu.com/?p=7262 ’’தமிழ்நாட்டில், முதலீடுகளின் வரத்து வளர்ச்சியடைந்து வருவதை கண்கூடாக பார்க்கின்றோம்’’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த கேப்பிட்டாலாண்ட்(Capitaland) குழுமத்தின் சர்வதேச தொழில்நுட்ப பூங்கா திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (31.10.2023) சென்னையில் பேசியதாவது: கேப்பிட்டாலேண்ட் முதலீட்டு நிறுவனத்தின், சர்வதேச தொழில்நுட்பப் பூங்கா, சென்னை – ரேடியல் சாலைத் திட்டத்தின் முதல் கட்டத்தை தொடங்கி வைப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். உலகத்தரம் வாய்ந்த ஒரு தொழில்நுட்பப் பூங்காவை தமிழ்நாட்டில் தொடங்குவதற்காக இந்த நிறுவனத்திற்கு என்னுடைய […]

The post ’’இவை எல்லாம் முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை விதைத்திருக்கிறது..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.

]]>
’’தமிழ்நாட்டில், முதலீடுகளின் வரத்து வளர்ச்சியடைந்து வருவதை கண்கூடாக பார்க்கின்றோம்’’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த கேப்பிட்டாலாண்ட்(Capitaland) குழுமத்தின் சர்வதேச தொழில்நுட்ப பூங்கா திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (31.10.2023) சென்னையில் பேசியதாவது:

கேப்பிட்டாலேண்ட் முதலீட்டு நிறுவனத்தின், சர்வதேச தொழில்நுட்பப் பூங்கா, சென்னை – ரேடியல் சாலைத் திட்டத்தின் முதல் கட்டத்தை தொடங்கி வைப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். உலகத்தரம் வாய்ந்த ஒரு தொழில்நுட்பப் பூங்காவை தமிழ்நாட்டில் தொடங்குவதற்காக இந்த நிறுவனத்திற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளையும், நன்றியையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தமிழ்நாட்டில் புதியதொரு தொழில் புரட்சி நடந்து கொண்டு வருகிறது. அதற்கு சான்றாக, ஏராளமான தொழில் நிறுவனங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டு இருக்கிறது. அந்த வரிசையில் கேப்பிட்டாலேண்ட் நிறுவனமும் இணைந்திருப்பது எங்களுக்கெல்லாம் பெருமையாக இருக்கிறது. 5 மில்லியன் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டிருக்கின்ற இந்த சர்வதேசத் தொழில்நுட்பப் பூங்காவில், 50 ஆயிரம் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரிகிற அளவுக்கான உலகத்தரம் வாய்ந்த அலுவலக இடங்கள் கட்டித்தர நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இது இன்றைக்கு மிக மிகத் தேவையான ஒன்றாக இருக்கிறது.

முதல் கட்டமாக, இன்றைக்கு 1.3 மில்லியன் சதுர அடிக்கான பூங்கா தயார் நிலையில், துவக்கி வைக்கப்பட இருக்கிறது. இரண்டாவது கட்டத்தின் கட்டுமானப் பணிகளையும் துவக்கி இருப்பதாக இந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. கேப்பிட்டாலேண்ட் நிறுவனத்தின் இரண்டாம் கட்டத் திட்டத்திற்கும் தமிழ்நாடு அரசு எல்லா உதவிகளையும் செய்யும் என்று இந்த நேரத்தில் நான் உறுதி அளிக்கிறேன்.

நான் கடந்த மே மாதம் சிங்கப்பூருக்கு அரசு முறைப் பயணமாக சென்றிருந்தேன். அங்கே கிடைத்த வரவேற்பும், உற்சாகமும் எங்களால் மறக்க முடியாதது. இந்தப் பயணத்தின்போது, கேப்பிட்டாலேண்ட் நிறுவனத்தின் C.E.O சஞ்சீவ் தாஸ் குப்தா அவர்களை சந்தித்து, அவர்கள் நிறுவனம் பல முதலீட்டுத் திட்டங்களை தமிழ்நாட்டில் மேற்கொள்ளுவதை பற்றி பேச்சுவார்த்தைகள் நடத்தினேன். அதன் தொடர்ச்சியாக, இந்த விழா நடைபெறுவது உள்ளபடியே மகிழ்ச்சி அளிக்கிறது. தட்டுங்கள் திறக்கப்படும் என்று சொல்வார்கள். அது போலவே நடந்திருக்கிறது. எங்கள் ஆட்சியின் மீதும், எங்கள் தமிழ்நாட்டின் மீதும் நீங்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கைக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தொழில்துறையில் முதன்மை மாநிலமாக முன்னேற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் பல்வேறு நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். அது மட்டுமல்ல, இந்த வளர்ச்சி சீராகவும், பரவலாகவும் இருக்க வேண்டுமென்று மாநிலத்தில் இருக்கின்ற இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களிலும் 9 நியோ டைடல் பார்க்குகள் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டும் வருகிறது.
முதலீடுகளை தொடர்ந்து ஈர்க்கின்ற வகையில், உலகத் தரத்திலான உட்கட்டமைப்பு வசதிகளுடன் துறை சார்ந்த தொழில் பூங்காக்களை அமைத்துக் கொண்டு வருகிறோம். வளர்ந்து வருகின்ற துறைகளில் முதலீடுகளை ஊக்குவிக்கின்ற வகையில், துறை சார்ந்த கொள்கை அறிக்கைகளையும் வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்கள், புத்தாக்கத் திட்டங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு மையங்கள் ஆகிய திட்டங்களை தமிழ்நாட்டில் பெருமளவில் ஈர்ப்பதற்காக திட்டங்கள் தீட்டினோம்.

உலக அளவில், அதிவேகமாக ஏற்பட்டு வருகின்ற தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நம்முடைய தொழில்துறையும் பயணம் செய்வது இன்றியமையாத ஒன்று. இதற்கான முயற்சிகளை ஊக்கப்படுத்தி, இந்தத் துறையில் முதலீடுகளை ஈர்க்கின்ற நோக்கத்தில்தான் “தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கொள்கை 2022” கடந்த ஆண்டு ஜூலை மாதம் என்னால் வெளியிடப்பட்டது. இதற்குப் பிறகு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புத்தாக்கம், புத்தொழில்கள் மற்றும் உலகளாவிய திறன் மேம்பாட்டு மையங்கள் போன்ற துறைகளில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தொழில்துறை கல்வியாளர்கள், புத்தாக்கம் மேற்கொள்வோர் மற்றும் புத்தொழில் நிறுவனங்களுக்கு இது மிகப்பெரும் வாய்ப்புகளை வழங்குகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பான உலகளாவிய திறன் மையங்கள் மற்றும் குளோபல் கேப்பபிலிட்டி சென்டர்ஸின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. முப்பதுக்கும் மேற்பட்ட GCC-க்கள் தங்களுடைய புதிய நிறுவனங்கள் அல்லது விரிவாக்கத் திட்டங்களை நிறுவியிருக்கிறார்கள். யு.பி.எஸ், வால்மார்ட் மற்றும் ஹிட்டாச்சி எனர்ஜி போன்ற சர்வதேச நிறுவனங்கள் தங்களுடைய GCC மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களை அண்மையில் நிறுவியிருக்கிறது. உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில், தமிழ்நாடு உலக அளவில் சிறந்து விளங்கி வருகிறது. இது மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மிகப்பெரிய பயனை ஏற்படுத்தும். இந்த வேகத்தை பார்க்கின்றபோது “2030-ஆம் ஆண்டிற்குள்
1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலம் என்ற எங்கள் இலக்கை அடைகின்ற நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கை எங்களுக்கு வளர்ந்து கொண்டே போகிறது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தசோ சிஸ்டம், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த சீமென்ஸ்
அமெரிக்க நிறுவனமான ஜி.இ. ஏவியேஷன் உடன் இணைந்து, மேம்பட்ட உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையங்கள் (Centres of excellence) மற்றும் தொழில் புத்தாக்க மையங்களை (Start-Ups) தமிழ்நாடு அரசு அமைத்திருக்கிறது. திருப்பெரும்புதூர் மற்றும் ஓசூரில் இருக்கின்ற சிப்காட் தொழிற் பூங்காக்களில், உலகத் தரம் வாய்ந்த தொழில் புத்தாக்க மையமும் அமைக்கப்பட்டு வருகிறது.

அது மட்டுமல்ல, ஒரு துடிப்பான தகவல் தொழில்நுட்ப சூழலமைப்புடன் வளர்ச்சிக்குத் திறன் இடைவெளி ஒரு தடையாக இருந்துவிடக் கூடாது என்று தான், என்னுடைய கனவுத்திட்டமான, நான் முதல்வன் திட்டத்தை முழு முனைப்புடன் செயல்படுத்திக் கொண்டு வருகிறோம். உயர்கல்வி கற்பிக்கின்ற மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்குத் தொழில் சார்ந்த பயிற்சிகளை வழங்கி, அவர்கள் துறையில் முதன்மையானவர்களாக திகழச் செய்ய வேண்டும் என்பதுதான் இந்தத் திட்டத்தின் முக்கியக் குறிக்கோள். இவை எல்லாம் முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை விதைத்திருக்கிறது. இந்த சீரிய முயற்சிகள் காரணமாகதான், தமிழ்நாட்டில், முதலீடுகளின் வரத்து வளர்ச்சியடைந்து வருவதை கண்கூடாக பார்க்கின்றோம்.

இதற்கெல்லாம் மணிமகுடமாக, உலக முதலீட்டாளர்கள் மாநாடு வருகின்ற ஜனவரி மாதம் சென்னையில் நடத்த இருக்கின்றோம். உங்களைப் போன்ற நிறுவனங்களுடன் சேர்ந்துதான் இந்த மாநாட்டை நடத்த இருக்கிறோம். உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வர இருக்கிறார்கள். பல நிறுவனங்கள் அந்த மாநாட்டில் பங்கேற்று பெருமைப்படுத்த இருக்கிறார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன். அதற்கு முன்னதாகவே, கேப்பிட்டாலேண்ட் நிறுவனம் இந்த அதிநவீன பன்னாட்டுத் தொழில்நுட்ப பூங்காவை தொடங்கி இருப்பது மிக மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் தொழில் முயற்சிகள் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக்கொண்டு என் உரையை நிறைவு செய்கிறேன்.
நன்றி, வணக்கம்!

The post ’’இவை எல்லாம் முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை விதைத்திருக்கிறது..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%b5%e0%af%88-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3/feed/ 0