acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post “முதலமைச்சரின் வீட்டுக்கு வீடு மஞ்சள் பை..!” சேலம் ஈசன் இளங்கோ கொடுக்கிறார் first appeared on Madras Murasu.
]]>தமிழகத்தில் சுத்தம், சுகாதாரம் ஆகியவற்றை போற்றும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உன்னத திட்டமான “எனது குப்பை எனது பொறுப்பு” என்ற நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க செயல்பாடுகளை, முதல்வர் அறிவித்த நாளில் இருந்து இடைவிடாமல் சேலம் மாநகராட்சி 34-வது கோட்டத்தில் செய்து வருகிறோம்.
அதன் தொடர்ச்சியாக, முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் நூற்றாண்டு சிறப்பு நிகழ்வாகவும் இரண்டாம் ஆண்டு தொடக்க நிகழ்வாகவும் , புதிய ஆக்கப்பூர்வ முயற்சியாகவும் 34-வது கோட்டத்தில் 10-06-2023 சனிக்கிழமை காலை 7-30 மணிக்கு எண்-2 புதுத்தெரு புதிய சாலையில் இருந்து, அக்கோட்ட மாமன்ற உறுப்பினரான நான் , சமூக ஆர்வலர்கள் பொதுமக்களுடன் இணைந்து, பிளாஸ்டிக் கேரி பேக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, வீடு வீடாக சென்று, முதல் கட்டமாக 500- வீடுகளுக்கு தமிழக முதல்வரின் மீண்டும் மஞ்சள் பை திட்டப்படி, எப்போதும் கையில் எடுத்து செல்லும் வகையில் வீட்டிற்கு ஒரு புதிய மஞ்சள் பை வழங்குகிறோம்.

குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து தர அவர்களை ஊக்குவிக்கும் விதமாக வீட்டிற்கு ஒரு ஒரு ஆவின் பால் பாக்கெட்டும் வழங்கி திடக்கழிவு மேலான்மை குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்க்கொள்ள உள்ளோம்.
இந்த பிரச்சார நிகழ்வில் கொக்கலிக்கட்டை நாட்டுப்புறகலைஞர்கள் மூலம் 8-அடி உயர பிரமாண்ட மஞ்சள் பைகளுடன் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்த உள்ளோம்.
சுற்றுச்சுழலை காக்க, திடக்கழிவு மேலாண்மையின் அவசியத்தை வலியுறுத்தி, அதனால் ஏற்படும் நன்மை தீமைகள் குறித்த துண்டு பிரசுரங்களையும் கொடுத்து தெருவில் உள்ள அனைத்து வீட்டினரையும் “எனது குப்பை எனது பொறுப்பு” நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தில் இனணந்து செயல் பட வைக்கும் ஒரு அருமையான சுகாதாரமிகு தூய்மையான சூழலை எங்கள் கோட்டத்தில் ஏற்படுத்தும் முயற்சியில் எங்களுக்கு உதவிடும் வகையில், தாங்களும் நாளை காலை 7-30 மணி முதல் நடக்க உள்ளது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு ஒத்துழைப்பு நல்கிட அன்புடன் வேண்டுகின்றேன்.
இவ்வாறு 34-வது கோட்டம், மாமன்ற உறுப்பினர் ஈசன் இளங்கோ கூறியுள்ளார்
The post “முதலமைச்சரின் வீட்டுக்கு வீடு மஞ்சள் பை..!” சேலம் ஈசன் இளங்கோ கொடுக்கிறார் first appeared on Madras Murasu.
]]>The post ’’சேலம் மாநகராட்சி 34- வது கோட்டத்தில் நகர்ப்புற நலவாழ்வு மையம்..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் first appeared on Madras Murasu.
]]>தமிழக சட்டசபையில் 2022 -ம் ஆண்டு மே மாதம் 7-ம் தேதி, தமிழ்நாட்டில் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, தேசிய நகர்ப்புற சுகாதாரக் குழுமத்தின் மூலம் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
முதல்கட்டமாக சென்னை மாநகராட்சியில் 140, கோவை மாநகராட்சியில் 50, மதுரை மாநகராட்சியில் 46, திருச்சி மாநகராட்சியில் 25, சேலம் மாநகராட்சியில் 25, திருப்பூர் மாநகராட்சியில் 25 மற்றும் நகராட்சிப் பகுதிகளில் 189 என மொத்தம் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை, மக்கள் பயன்பாட்டுக்காக ஜூன் 6 ம் தேதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
சென்னை தியாகராய நகர் விஜயராகவா சாலையில் அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தை முதலமைச்சர் இன்று மாலையில் நேரடியாகத் திறந்து வைக்கிறார். மற்ற 499 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை காணொலி வாயிலாகத் திறந்து வைக்க உள்ளார்.
ஒவ்வொரு நகர்ப்புற நலவாழ்வு மையத்திலும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர். ஒரு சுகாதார ஆய்வாளர் மற்றும் ஒரு துணை பணியாளர் ஆகியோர் மாவட்ட சுகாதார சங்கங்கள் மூலம் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த மையங்கள் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் செயல்படும்.

இந்நிலையில், சேலம் மாநகராட்சி, 34- கோட்ட மாமன்ற உறுப்பினர் ஈசன் இளங்கோ வெளியிட்டுள்ள அறிக்கை:
சேலம் மாநகராட்சி 34- வது கோட்டத்தில் ஜோதி டாக்கீஸ் சாலையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தை இன்று 06-06-2023 மாலை 05 மணிக்கு நம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்கள் தனது திருக்கரங்களால் காணொலி காட்சி நிகழ்வு மூலம் துவக்க உள்ளார்கள்.
காலை, மாலை நேரங்களில் நமது 34- வது கோட்ட மக்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க வசதியாக அமைக்கப்பட்டுள்ள இந்த நகர்ப்புற நலவாழ்வு மையத்தில், தாய்- சேய் நல சேவைகளான கர்ப்பிணி பெண்களுக்கான பரிசோதனைகள், தாய் மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசி சேவைகள், சிறுகுறு நோய்களுக்கான சிகிச்சைகள், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகளும் வழங்கப்படவுள்ளது.

இந்த மையத்தில் ஒரு மருத்துவர், ஒரு சுகாதார ஆய்வாளர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு மருத்துவமனை உதவியாளர் ஆகிய பணியாளர் நியமிக்கப்பட்டு உள்ளனர். நம் கோட்டத்தில் வசிக்கும் பொதுமக்களின் நலனுக்காக இந்த மக்கள் நலவாழ்வு மையம், காலை 8 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையும் இந்த நகர்ப்புற நல்வாழ்வு மையம் செயல்படும்.
இதனால், நம்கோட்டத்தில் வசிக்கும் மக்கள், இந்த மையத்துக்கு மாலை நேரங்களிலும்சென்று மருத்துவம் பார்த்து கொள்ளலாம். இத்தகைய சிறப்புமிகு நகர்புற நலவாழ்வு மையத்தை 34- கோட்டத்தில் துவங்க உத்தரவிட்ட நமது ஒப்பற்ற தலைவர் மாண்புமிகு முதல்வர் தளபதியார் அவர்களுக்கும், மாண்புமிகு நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் அண்ணன் கே.என். நேரு அவர்களுக்கும், சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அண்ணன் இரா.இராஜேந்திரன் எம்.எல்.ஏ அவர்களுக்கும், வணக்கத்திற்குரிய சேலம் மாநகராட்சி மேயர் அண்ணன் ஆ.இராமச்சந்திரன் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்’’ என்று கூறியுள்ளார்.
The post ’’சேலம் மாநகராட்சி 34- வது கோட்டத்தில் நகர்ப்புற நலவாழ்வு மையம்..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் first appeared on Madras Murasu.
]]>The post ’’கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ்-க்கு ஆயுள் முழுவதும் ஜெயில்..!’’ உயர்நீதிமன்றம் தீர்ப்பு first appeared on Madras Murasu.
]]>தொடக்கத்தில் நாமக்கல் மாவட்ட கோர்ட்டில் விசாரிக்கப்பட்ட இந்த கொலை வழக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் மதுரை மாவட்ட சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இங்கு 2 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஜோதிமணி என்பவர் கொலை செய்யப்பட்டார். அமுதரசு என்பவர் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் அவர் மீதான வழக்கு மட்டும் நாமக்கல் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கின் அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி இந்த வழக்கில் கைதானவர்களில் 10 பேர் குற்றவாளிகள் என்றும், 5 பேரை விடுதலை செய்தும் மதுரை மாவட்ட சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது. இந்த வழக்கின் முதல் குற்றவாளியான யுவராஜுக்கு 3 ஆயுள் தண்டனையும், அருண், குமார் என்ற சிவகுமார் (43), சதீஷ்குமார் (33), ரகு என்ற ஸ்ரீதர் (29), ரஞ்சித் (29), செல்வராஜ் (39) ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், சந்திரசேகரனுக்கு (51) ஒரு ஆயுள் தண்டனையும், பிரபு (41), கிரிதர் (30) ஆகிய இருவருக்கு மட்டும் ஆயுள் தண்டனையுடன் 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

மேலும், அவர்கள் அனைவரும் சாகும் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி சம்பத்குமார் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். இந்த தீர்ப்பு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த 10 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் ஓரிரு நாட்கள் கழித்து முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட யுவராஜ் மட்டும் கோவை சிறைக்கு மாற்றப்பட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்களை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஆனந்த்வெங்கடேஷ் ஆகியோர், இந்த வழக்கில் பிறழ்சாட்சியாக மாறிய சுவாதியை நேரில் வரவழைத்து விசாரித்தனர். அப்போது அவர் கோகுல்ராஜ் கொலைக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கோகுல்ராஜ் தன்னுடைய வகுப்பு தோழர் மட்டும்தான். வேறு எந்த தொடர்பும் இல்லை என்றும், வாக்குமூலம் அளித்தார். அவர் முன்னுக்குப்பின் முரணான பதில் அளித்ததாக கூறி, அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்குபதிவு செய்ய மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மதுரை ஐகோர்ட்டின் இந்த நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று சுவாதி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி ஆனது. இதற்கிடையே தண்டனை பெற்றவர்கள் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த நீதிபதிகள், அதன் மீதான தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று பிற்பகலில் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து தீர்ப்பை வாசித்த நீதிபதிகள் கூறுகையில், ”கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றச்சாட்டு நிரூபணமாகி உள்ளது. சிறப்பு நீதிமன்ற தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை. யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது. மேலும், 5 பேர் விடுதலையில் தலையிட வேண்டிய அவசியமில்லை என்றும் யுவராஜ் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும்” என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஆயுள் தண்டனையை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் அதிரடி தீர்ப்பளித்துள்ளனர்.
The post ’’கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ்-க்கு ஆயுள் முழுவதும் ஜெயில்..!’’ உயர்நீதிமன்றம் தீர்ப்பு first appeared on Madras Murasu.
]]>