acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ’’சந்திரயான் 3-ன் வெற்றி மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கான படிக்கட்டு..!’’ பி.வீரமுத்துவேல் first appeared on Madras Murasu.
]]>வளர்ந்த பாரதம் 2047 என்பது தொடர்பாக, திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்தில் விரிவுரை மற்றும் கலந்துரையாடல் 7- ஆம் தேதி அன்று நடைபெற்றது. இதில் இஸ்ரோவின் சந்திரயான்-3 திட்ட இயக்குநர் முனைவர் பி.வீரமுத்துவேல் பங்கேற்றார். அவர் திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் உற்பத்திப் பொறியியல் துறையிலிருந்து 2003 ஆம் ஆண்டு முதுநிலை பட்டம் பெற்றார். அவரை இயக்குநர் முனைவர் ஜி. அகிலா, டீன்கள், பதிவாளர் (பொறுப்பு) மற்றும் ஆசிரிய உறுப்பினர்கள் வரவேற்றனர். அவர் தனது வாழ்க்கைப் பாதையில் உதவிய தனது ஆசிரியர்களுக்கு நன்றி கூறினார்.
உற்பத்திப் பொறியியல் துறைத் தலைவர் முனைவர் சி. சத்திய நாராயணன் முனைவர் பி. வீரமுத்துவேலை வரவேற்றார், முனைவர் ஜி.அகிலா நினைவுப் பரிசு வழங்கினார். முனைவர் பி. வீரமுத்துவேல், சந்திரயான்-3 திட்டத்தின் கண்ணோட்டம் மற்றும் சவால்களை விவாதித்தார். மனித குடியேற்றத்திற்கு தேவையான நீர் மற்றும் ராக்கெட் எரிபொருள் போன்ற நிலவு பயணத்தின் முக்கியத்துவத்தை அவர் விவரித்தார். மேலும், நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய மற்ற மூன்று நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் தோல்வி விகிதம் மிகக் குறைவு என்றும் அவர் கூறினார். நிலவு மண் மாதிரி தொழில்நுட்பம் தொடர்பாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் என்ஐடி திருச்சிராப்பள்ளியின் ஒத்துழைப்பையும் அவர் குறிப்பிட்டார்.
மாணவர்களுடன் உரையாடிய அவர், தொழில்நுட்ப கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். இஸ்ரோவின் எதிர்காலத் திட்டங்கள் குறித்த கேள்வி ஒன்றுக்கு, சந்திரயான்-3-ன் மென்மையான தரையிறக்கம், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கான அடுத்த பணிகளுக்கு ஒரு படிக்கட்டு என்று பதிலளித்தார். இப்போது கிடைக்கும் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பையும் அவர் பாராட்டினார். மேலும் இளைஞர்கள் ஒரு தொழில்முனைவோராக இருக்க வேண்டும். அதாவது வேலை தேடுபவராக இருப்பதை விட வேலைகளை உருவாக்குபவராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசும் போது, உலகின் வேறு எந்த நாட்டையும் விட இந்தியா சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்கியது என்று கூறினார். தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, இலக்கை அடைய கடினமாக உழைக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். பிரக்யான் 2024 தலைவர் விஜய் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
The post ’’சந்திரயான் 3-ன் வெற்றி மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கான படிக்கட்டு..!’’ பி.வீரமுத்துவேல் first appeared on Madras Murasu.
]]>The post ”சந்திரயானில் இருந்து பிரிந்தது லேண்டர்..!” `நன்றி நண்பா’ என செய்தி அனுப்பியது first appeared on Madras Murasu.
]]>நிலவில் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை சுமார் ரூ.615 கோடியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அதன்பின் பூமியை சுற்றிவந்த விண்கலம் ஆகஸ்ட் 1-ல் புவியீர்ப்பு விசையில் இருந்து விலக்கப்பட்டு நிலவை நோக்கி செல்லும்படி அதன் பயணப்பாதை மாற்றி அமைக்கப்பட்டது. தொடர்ந்து 5 நாட்கள் பயணத்துக்குபின் ஆகஸ்ட் 5-ம் தேதி நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் சந்திரயான் நுழைந்தது.
இதையடுத்து சந்திரயானின் சுற்றுப்பாதை உயரம் 4 முறை படிப்படியாக குறைக்கப்பட்டு நிலவுக்கு அருகே விண்கலம் கொண்டு செல்லப்பட்டது. தற்போது நிலவின் தரைப்பகுதியில் இருந்து குறைந்தபட்சம் 153 கி.மீ தூரமும், அதிகபட்சம் 163 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் விண்கலம் நிலவை சுற்றி வருகிறது. இந்நிலையில் விண்கலத்தில் இருந்து நிலவில் தரையிறங்கவுள்ள லேண்டரை பிரிக்கும் முயற்சி நேற்று மதியம் 1.15 மணிக்கு மேற்கொள்ளப்பட்டது. அந்தவகையில் நிலவின் தரைப்பகுதிக்கு நெருக்கமாக வந்தபோது சந்திரயானின் உந்துவிசை கலனுடன் இணைக்கப்பட்டிருந்த லேண்டர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. அதை உறுதிசெய்யும் விதமாக ‘இலக்கை அடைவதற்கான பயணத்துக்கு உதவியதற்கு நன்றி நண்பா’ என லேண்டர், உந்துவிசை கலனுக்கு செய்தி அனுப்பியது.
ரோவர் நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்யும்.
தற்போது உந்துவிசை கலன், லேண்டர் ஆகியவை ஒன்றன்பின் ஒன்றாக நிலவை ஒட்டிய சுற்றுவட்டப்பாதையில் வலம் வருகின்றன. சந்திரயான்-3 திட்டப் பயணத்தில் முக்கியமான செயல்பாடுகளில் ஒன்றான லேண்டர் பிரிதல் வெற்றி பெற்றது இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பில், ‘சந்திரயான்-3 விண்கலத்தின் உந்துவிசை கலனில் இருந்து லேண்டர் திட்டமிட்டபடி பிரிந்தது. லேண்டர் கலனில் உள்ள அனைத்து இயந்திரங்களும் சீராக உள்ளதா எனவும் சரிபார்க்கப்பட்டது. அடுத்தகட்டமாக லேண்டர் சுற்றுப்பாதை உயரத்தை குறைக்கும்பணி இன்று (ஆகஸ்ட் 18) மாலை 4 மணி அளவில் மேற்கொள்ளப்பட உள்ளது’ என்றுகூறப்பட்டுள்ளது. தொடர்ந்து படிப்படியாக லேண்டரின் உயரம் குறைக்கப்பட்டு நிலவில் ஆகஸ்ட் 23-ம்தேதி மெதுவாக தரையிறக்கப்படும். சில மணி நேரங்களுக்கு பின்னர் அதிலிருந்து ரோவர் வெளியே வந்து நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்யும்.
சந்திரயான்-3 விண்கலமானது உந்துவிசை கலன், லேண்டர், ரோவர் ஆகிய 3 பாகங்களாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும். இதில் நிலவில் தரையிறங்க உள்ள லேண்டரை சந்திரனின் சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்லும் பணியை உந்துவிசை கலன் (Propulsion Module) முடித்துவிட்டது. அதிலிருந்து லேண்டர் கலனும் பிரிந்துவிட்டது. இனி உந்துவிசை கலன் எரிபொருள் இருப்பை பொருத்து அடுத்த சில மாதங்களுக்கு நிலவை சுற்றிவந்து ஆய்வு செய்யும். இது மொத்தம் 2,145 கிலோ எடை கொண்டது.
ரஷ்யாவின் லூனா..!
இந்த கலனில் உள்ள ஷேப் எனும் ஆய்வுக் கருவி நிலவின் சுற்றுப்பாதையில் வலம் வந்தவாறு புவி நோக்கி நிறமாலைக் கதிர்களை அனுப்பும். அதன்மூலம் புவியில் உள்ள உயிர்வாழ் சூழலைக் கண்டறிந்து நிலவுடன் ஒப்பிட்டு பார்க்க வழிசெய்யும்.
முதலில் தரையிறங்கும் ரஷ்யாவின் லூனா: ரஷ்யாவும் 1976-க்கு பிறகு, தற்போது லூனா-25 விண்கலத்தை கடந்த ஆக.10-ம் தேதி நிலவுக்கு அனுப்பியது. நிலவின் தென்துருவ பகுதியில் இதை வரும் 23-ம் தேதி தரையிறக்க திட்டமிட்டிருந்த நிலையில், 2 நாட்கள் முன்னதாக 21-ம் தேதியே இதை தரையிறக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது.
இதுபற்றி இஸ்ரோ முன்னாள் தலைவர் டாக்டர் கே.சிவன் கூறியபோது, ‘‘லூனா-25 விண்கலத்தில் உள்ள கூடுதல் எரிபொருள் சேமிப்பு காரணமாக, சுற்றுவட்டபாதையை சுற்றி செல்லாமல், நிலவுக்கு நேரடியான பாதையில் செல்கிறது. முதலில் இறங்கப்போவது யார் என்று விவாதிக்க இது பந்தயம் அல்ல. புதிய விஷயங்களை ஆராய்வதில் இரு நாடுகளும் உறுதியாக உள்ளன’’ என்றார்.
பெங்களூருவில் உள்ள இந்திய வான் இயற்பியல் மைய விஞ்ஞானி கார்த்திக் கூறும்போது, ‘‘விண்கலங்கள் தரையிறங்குவதில் உள்ள போட்டியால், எந்த மாறுபாடும் ஏற்படப்போவதில்லை. ஒவ்வொரு ஆய்வின் மூலம் பெறப்படும் அனுபவ அறிவு, நிலவின் கடந்த கால புரிதலை மேலும் வளப்படுத்தும். தவிர, இப்போட்டியால், நமது விண்வெளி திறன்கள் மேம்படும்’’ என்றார்.
சந்திரயான்-3 நோக்கம்:
குறுகிய காலத்திற்குத் தேவையான இன்றைய வெற்றிகரமான துப்பாக்கிச் சூடு சந்திரயான்-3 ஐ 153 கிமீ x 163 கிமீ என்ற சுற்றுப்பாதையில் கொண்டுள்ளது. இதனுடன் சந்திர பவுண்ட் மனீவ்ரெஸ் நிறைவடைந்தது.
ப்ரோபல்ஷன் தொகுதி மற்றும் லேண்டர் தொகுதி தங்கள் தனித்தனியான பயணங்களுக்கு தயாராக இருப்பதால் இது ஆயத்தங்கள் நேரம்.
லாண்டர், ஆகஸ்ட் 17, 2023 அன்று பிரிக்கப்பட்டது.
The post ”சந்திரயானில் இருந்து பிரிந்தது லேண்டர்..!” `நன்றி நண்பா’ என செய்தி அனுப்பியது first appeared on Madras Murasu.
]]>The post ’’நிலவுக்கு செல்லும் சந்திரயான்-3 பயணத்தில் சனிக்கிழமை நள்ளிரவு நடக்கும் அதிசயம்..!’’ first appeared on Madras Murasu.
]]>நிலவு குறித்த ஆய்வில், அமெரிக்கா, ரஷியா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாதான் முன்னிலையில் இருந்து வருகிறது. 2008-ம் ஆண்டு சந்திரயான்-1, 2019-ம் ஆண்டு சந்திரயான்-2 ஆகிய விண்கலங்களை நிலவு ஆராய்ச்சிக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’ அனுப்பியது. இதுவரை எல்லா நாடுகளும் நிலவின் வடதுருவ பகுதியில்தான் ஆய்வு மேற்கொண்டிருக்கின்றன. தென்துருவத்தை ஆராயும் பணியை யாரும் தொடங்காத நேரத்தில், இந்தியா சந்திரயான்-2-ஐ நிலவின் தென்துருவ பகுதிக்கு அனுப்பியது.
ஆனால், நிலவில் குறிப்பிட்ட பகுதியில் தரையிறங்கியபோது, லேண்டர் கருவி வேகமாக மோதி உடைந்தது. அதே நேரத்தில், விண்கலத்தின் ஆர்பிட்டர், நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டு, தற்போதும் அது செயல்பாட்டில் இருந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளின் 4 ஆண்டு கால இடைவிடாத முயற்சியின் பயனாய், மீண்டு எழுந்து மீண்டும் சந்திரயான்-3 என்ற விண்கலத்தை உருவாக்கி, கடந்த மாதம் (ஜூலை) 14-ந்தேதி நிலவின் தென்துருவ பகுதிக்கு அந்த விண்கலம் பயணத்தை தொடங்கி இருக்கிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எல்.வி.எம்.-3 ராக்கெட் மூலம் மதியம் 2.35 மணிக்கு சீறிக்கொண்டு புறப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் பயண திட்டம் 10 கட்டங்களாக வகுக்கப்பட்டிருந்தது.
முதற்கட்டமாக, பூமியின் தரைப்பகுதியில் இருந்து 170 கி.மீ. உயரத்துக்கு கொண்டு செல்லப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், உந்தப்பட்டு பூமியை நீள்வட்டப்பாதையில் சுற்றத் தொடங்கியது. பூமிக்கு அருகே 170 கி.மீ. தூரத்திலும், தொலைவில் 36 ஆயிரத்து 500 கி.மீ. தூரத்திலும் நீள்வட்டப்பாதையில் சுற்றி வந்தது. இவ்வாறு விண்கலத்தை சுற்ற வைக்கப்பட்டது 2-வது கட்டம். பூமியை சந்திரயான்-3 விண்கலம் சுற்றிக்கொண்டிருந்த நிலையில், அதை வெகுதூரத்தில் உள்ள நிலவு நோக்கி நகர்த்திக் கொண்டு செல்வதுதான் 3-வது கட்டம். கடந்த 1-ந்தேதி தொடங்கிய 3-வது கட்ட பணிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. சம ஈர்ப்பு விசைப்புள்ளி பூமியின் ஈர்ப்பு விசையும், நிலவின் ஈர்ப்பு விசையும், சரிசமமாக இருக்கும் சம ஈர்ப்பு விசைப்புள்ளி, நிலவில் இருந்து சுமார் 62 ஆயிரத்து 630 கி.மீ. தொலைவில் இருக்கிறது. அந்த புள்ளிக்கு சந்திரயான்-3 விண்கலத்தை செலுத்துவதுதான் 4-வது கட்டம் ஆகும்.
இந்த பணி எளிதானது அல்ல என்றாலும், துல்லியமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. காரணம் என்னவென்றால், சம ஈர்ப்பு விசை புள்ளியை நோக்கிய பாதையில் பிசிறுகள் ஏற்பட்டு, விண்கலம் பாதை மாறி செல்லும் வாய்ப்பு இருந்தது. அதனால், அந்த பிசிறுகளை சரிசெய்து கொண்டே இருக்க வேண்டும். அந்த பணிகள் 5-வது கட்டத்தில் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சம ஈர்ப்பு விசை புள்ளிக்கு சந்திரயான்-3 விண்கலம் கொண்டுவரப்பட்டது.
அங்கிருந்து உந்து விசை கொடுத்து விண்கலத்தை தள்ளிவிட்டால், புவி ஈர்ப்பு விசை பிடியில் இருந்து, நிலவு ஈர்ப்பு விசை வட்டத்துக்குள் சந்திரயான்-3 சென்றுவிடும். இதுதான் 6-வது கட்டம். இந்த பணிகள்தான் இன்று (சனிக்கிழமை) நள்ளிரவு நடக்க இருக்கிறது. 21 நாட்களுக்கு பிறகு, 6-வது கட்டத்தில் இருந்துதான் சந்திரயான்-3 விண்கலத்துக்கு அக்னி பரீட்சை ஆரம்பிக்க இருக்கிறது.
இனி கடக்க இருக்கும் ஒவ்வொரு கட்டமும் சவாலானது. அவை சரியாக நடக்க வேண்டும். இதை பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் இருந்து விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
நிலவின் ஈர்ப்பு விசை வட்டத்துக்குள் சந்திரயான்-3 விண்கலம் வந்தவுடன், நிலவை நீள்வட்டப்பாதையில் சுற்றத் தொடங்கும். இதுதான் 7-வது கட்டம். அடுத்து, விண்கலம் பயணிக்கும் நீள்வட்டப்பாதையை கொஞ்சம் கொஞ்சமாக சரிசெய்து, நிலவின் தரைப்பகுதியில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவுக்கு விண்கலத்தை கொண்டுவந்து நிறுத்த வேண்டும். இது 8-வது கட்டம். சந்திரயான்-3 விண்கலத்தின் உள்ளே உந்துகலம் (புரோபல்சன் மோடுலே) தரையிறங்கி கலம் (லேண்டர்) என்ற 2 முக்கிய பகுதிகள் உள்ளன. இதில், லேண்டர் உள்ளே ரோவர் கருவி இருக்கிறது.
விண்கலத்தை அப்படியே நிலவில் தரையிறக்க முடியாது. முதலில், விண்கலத்தில் இருந்து உந்து கலத்தையும், லேண்டரையும் பிரிக்க வேண்டும். 23-ந்தேதி தரையிறக்கம் அவ்வாறு பிரித்து, லேண்டரை அதிகபட்சம் 100 கி.மீ. முதல் குறைந்தபட்சம் 30 கி.மீ. வரை நீள்வட்டப்பாதையில் சுற்ற வைக்க வேண்டும். அதன்பிறகு கடும் சவாலான 9-வது கட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அதுதான் இம்மாதம் 23-ந்தேதி மாலை 5.47 மணிக்கு நடக்க இருக்கிறது.
அதாவது, லேண்டர் நிலவில் தரையிறங்க உள்ளது. கடந்த முறை சந்திரயான்-2 திட்டம் தோல்வி அடைந்தது இந்த இடத்தில்தான். எனவே, சந்திரயான்-3-ஐ பத்திரமாக தரையிறக்க லேண்டரில் பல்வேறு மேம்படுத்தப்பட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த முறை பாதுகாப்பாக லேண்டரை தரையிறக்க முடியும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். ஆய்வு பணியில் ரோவர் லேண்டர் தரையிறங்கியதும், அதில் உள்ள 4 சுவர்களில் ஒன்று, சாய்வுப் பலகைப் போல திறந்து கீழ்நோக்கி இறங்கும். அந்த வழியாக, லேண்டர் உள்ளே இருக்கும் ரோவர் கருவி இறங்கி வந்து, நிலவில் கால் பதிக்கும். இதுதான் 10-வது கட்டம். அதன்பின்னர், ரோவர் தனது ஆய்வு பணியை தொடங்கும்.
இத்தனை பணிகளும் வெற்றிகரமாக நடந்து முடிந்தால், நிலவின் தென் துருவ பகுதியில் இந்தியா தனது வெற்றிக்கொடியை நாட்டும். தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்ளும் முதல் நாடு இந்தியா என்ற பெருமையையும் பெறும்.
அடுத்து, 2025-ம் ஆண்டு ககன்யான் திட்டம் மூலம் நிலவுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. அதற்கு முன்னதாக, ரோபோக்களையும் அனுப்பி சோதனை செய்ய திட்டம் வகுத்துள்ளது. நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தில் வெற்றி பெற்றால், இந்தியாவும் சாதனை சரித்திரத்தில் இடம் பிடிக்கும். இப்போது, பூமியில் இருந்து நிலவைப் பார்ப்பதுபோல், அப்போது நிலவில் இருந்து பூமியை பார்க்க முடியும். பல்வேறு ஆராய்ச்சிகளுக்கும் புதிய வழி பிறக்கும்.
The post ’’நிலவுக்கு செல்லும் சந்திரயான்-3 பயணத்தில் சனிக்கிழமை நள்ளிரவு நடக்கும் அதிசயம்..!’’ first appeared on Madras Murasu.
]]>