acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ”ஆப்கானிஸ்தான் நாட்டின் சட்டங்களைத் ஐசிசியால் மாற்ற முடியாது..!” மகளிர் கிரிக்கெட் குறித்து ஐசிசி வேதனை first appeared on Madras Murasu.
]]>ஐசிசியின் வருடாந்திர பொதுக் கூட்டம் தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் வியாழக் கிழமை முடிவுற்றது. கூட்டத்தில் ஐசிசி போட்டிகளில் மகளிர் அணிகளுக்குச் சம அளவில் பரிசுத் தொகை வழங்கப்படுவது, ஐசிசியின் நிதிப் பங்கீடு உள்பட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. மேலும் ஆப்கானிஸ்தானில் மகளிர் கிரிக்கெட்டை திரும்பக் கொண்டு வருவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

இது தொடர்பாக ஐசிசி தலைவர் கிரெக் பார்க்லே, ஐசிசி தலைமை செயல் நிர்வாகி ஜெஃப் அலார்டைஸ் இருவரும் ஊடகங்களின் கேள்விக்குப் பதிலளித்தனர். அப்போது ஆப்கானிஸ்தானில் மகளிர் கிரிக்கெட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் கடினமான சூழ்நிலை நிலவி வருகிறது என்று தெரிவித்த கிரெக் பார்க்லே, “ஆப்கானிஸ்தான் அரசின் நிலைப்பாடு அனைவரையும் உள்ளடக்கிய பன்முகத் தன்மை கொண்ட அமைப்பை நடத்துவதற்கான ஐசிசியின் நோக்கங்களுக்கு எதிராக உள்ளது. மகளிர் கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கும் விளையாடுவதற்கும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.” என்றார்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் சட்டங்களைத் ஐசிசியால் மாற்ற முடியாது என்று தெரிவித்த ஐசிசி தலைவர், “ஆப்கானிஸ்தானில் மகளிர் கிரிக்கெட்டை மீட்டெடுப்பதற்கு ஐசிசியால் என்ன செய்ய முடியும் என்பதைப் பரிசீலிக்கிறோம். இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தையும் அதைச் சுற்றியுள்ளவர்களையும் வலியுறுத்துவோம்.” என்றார்.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து மகளிர் கிரிக்கெட்டுக்குத் தடை விதிக்கப்பட்டது.
The post ”ஆப்கானிஸ்தான் நாட்டின் சட்டங்களைத் ஐசிசியால் மாற்ற முடியாது..!” மகளிர் கிரிக்கெட் குறித்து ஐசிசி வேதனை first appeared on Madras Murasu.
]]>The post ”ஆடவர் அணிகளுக்கு நிகராக மகளிர் அணிகளுக்குப் பரிசுத்தொகை..!” ஐசிசி first appeared on Madras Murasu.
]]>ஐசிசி போட்டிகளில் ஆண்களுக்கு நிகரான பரிசுத்தொகை மகளிர் அணிகளுக்கும் வழங்கப்படவுள்ளது. கிரிக்கெட் வரலாற்றில் இது குறிப்பிடத்தக்க தருணம். சம அளவிலான பரிசுத்தொகை வழங்குவதை இலக்காகக் கொண்டு 2017 முதல் ஐசிசி போட்டிகளில் மகளிர் கிரிக்கெட்டுக்கு ஆண்டுதோறும் பரிசுத்தொகை அதிகரிக்கப்பட்டு வருகிறது. இனிமேல் ஐசிசி ஆடவர் உலகக் கோப்பைப் போட்டியில் வழங்கப்படும் பரிசுத்தொகையே மகளிர் உலகக் கோப்பைப் போட்டிக்கும் வழங்கப்படும். இந்த நடைமுறை டி20 உலகக் கோப்பை, யு-19 உலகக் கோப்பைக்கும் பொருந்தும்.
கிரிக்கெட் அனைவருக்குமான விளையாட்டு. கிரிக்கெட்டில் ஒவ்வொருவரின் பங்களிப்பையும் சமமாகக் கொண்டாடி, மதிப்பளித்திடுவதற்கு ஐசிசியின் இந்த முடிவு வலுசேர்க்கிறது என்றார். சமீபத்தில் நடைபெற்ற ஆடவர் டி20 உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணிக்கு ரூ. 13 கோடியும் மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு ரூ. 8.20 கோடியும் பரிசுத்தொகையாகக் கிடைத்தன.
இதுதவிர டெஸ்ட் கிரிக்கெட்டில் குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்துவீசாதபோது விதிக்கப்படும் அபராதங்களிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நேரத்தைத் தாண்டி ஓவர் வீசும்போது, ஒவ்வொரு வீரருக்கும் ஆட்ட ஊதியத்திலிருந்து ஓவருக்கு 5 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படும். அதிகபட்சமாக ஆட்ட ஊதியத்தில் 50 சதவிகிதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிலிருந்தே அமலுக்கு வருகிறது.
80 ஓவர்களில் புதிய பந்தை மாற்றிக்கொள்ளும் நடைமுறை இருப்பதால், ஓர் அணி 80 ஓவர்களுக்குள் ஆட்டமிழக்கும்பட்சத்தில் இந்த அபராதம் விதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ”ஆடவர் அணிகளுக்கு நிகராக மகளிர் அணிகளுக்குப் பரிசுத்தொகை..!” ஐசிசி first appeared on Madras Murasu.
]]>The post ’’டிஎன்பிஎல் ஆல்-ரவுண்டர் அஜிதேஷ் வெற்றிக் கதை தெரியுமா..?’’ first appeared on Madras Murasu.
]]>ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழக வீரர் யாரும் இல்லாமல் போனாலும் தமிழக வீரர்கள் பெருமளவில் இதர அணிகளில் விளையாடி வருகிறார்கள். ஐபிஎல் அணிகள் அடுத்து கொத்திக்கொண்டு போகும் தமிழக வீரர் – 20 வயது அஜிதேஷ். கோவை அணிக்கு எதிராக அவர் சதமடித்ததைக் கண்ட அனைவருக்கும் இந்த நம்பிக்கை ஏற்பட்டிருக்கும்.
அஜிதேஷ், இந்த வருடம் தான் சிறப்பாக விளையாடுகிறார் என எண்ண வேண்டாம். கடந்த வருடம் டிஎன்பிஎல் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்காக விளையாடிய அஜிதேஷ், 25 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார். கிஷுரின் ஒரு ஓவரில் மூன்று சிக்ஸர்கள் அடித்தார். சேலம் அணிக்கு எதிராக 150 ரன்கள் இலக்கை விரட்டும்போது 84/4 என இருந்த நெல்லை அணி கடைசியில் வெற்றி பெற பெரிதும் உதவினார். டிஎன்பிஎல் 2022 போட்டியில் 129 ரன்கள் எடுத்தார் அஜிதேஷ். ஸ்டிரைக் ரேட் – 243.39. 14 சிக்ஸர்கள் அடித்ததால் தமிழ்நாடு அணியிலும் இடம் பிடித்தார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பெங்களூர்வாசியான ஞானகுருசாமி, அஜிதேஷின் தந்தை. மூன்று, நான்கு வயதில் கிரிக்கெட் மீது அதிக ஈடுபாடு இருந்ததால் ஏழு வயதில் கர்நாடகா இன்ஸ்டிடியூட் ஆஃப் கிரிக்கெட்டில் சேர்க்கப்பட்டார் அஜிதேஷ். அங்கு, பேட்டிங்கில் மட்டுமல்லாமல் விக்கெட் கீப்பிங்கிலும் திறமையை அவர் வளர்த்துக் கொண்டார். எப்போதும் அதிரடியாக விளையாடுவதை வழக்கமாகக் கொண்ட அஜிதேஷ், ஓர் ஆட்டத்தில் 165 ரன்கள் எடுத்தபோது இவருடைய முழுத்திறமையைப் பலரும் அறிந்துகொண்டார்கள். பள்ளிகளுக்கு இடையிலான போட்டியில் 414 ரன்கள் எடுத்து 2-ம் இடம் பிடித்தார். இதையடுத்து கர்நாடகா யு-14 அணியிலும் அவருக்கு இடம் கிடைத்தது. ஆனால் கர்நாடகா அணியில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் வேறு வழியை யோசிக்க வேண்டிய நிலைமை உருவானது.
தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வந்து கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தத் தொடங்கினார். தமிழ்நாட்டில் அஜிதேஷுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைப்பதால் கோயம்புத்தூருக்கு இடம் மாறினார் ஞானகுருசாமி. மகனின் கிரிக்கெட் திறமைக்காக எடுத்த இந்த முடிவு பலன்களைக் கொடுக்க ஆரம்பித்தது. கோவை ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் இணைந்தார் அஜிதேஷ். டிஎன்பிஎல் போட்டியில் நெல்லை அணிக்குத் தேர்வு செய்யப்பட்டார்.
நெல்லை அணியின் பயிற்சியாளர் குருசாமியின் வழிகாட்டுதலில் திறமையை மேலும் மெருகேற்றிக்கொண்டார். சென்னை முதல் டிவிஷன் லீக் போட்டியில் குளோப் டிராட்டர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியில் இணைந்தார். பல போட்டிகளில் முத்திரை பதித்ததால் கடந்த வருட சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டிக்கான தமிழக அணியில் இடம்பிடித்தார். சட்டீஸ்கருக்கு எதிரான ஆட்டத்தில் 8 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 23 ரன்கள் எடுத்தார். ஜார்கண்ட்டுக்கு எதிராக தொடக்க வீரராகக் களமிறங்கி 9 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார்.

டிஎன்பிஎல் 2023 போட்டியில் மதுரைக்கு எதிராக 9 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்து அணியின் எளிதாக வெற்றிக்கு சிறிய அளவில் பங்களித்தார். ஆனால் கோவைக்கு எதிரான ஆட்டம் அவருக்குப் பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த கோவை அணி, 181 ரன்கள் எடுத்தது. நெல்லை அணியின் இன்னிங்ஸில் கேப்டன் அருண் கார்த்திக் டக் அவுட் ஆனார். 3-வது நிலை வீரராகக் களமிறங்கிய அஜிதேஷ், கோவை ரசிகர்களால் மறக்க முடியாத ஓர் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
முதலில் 33 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். அரை சதமெடுத்த பிறகு அதிரடியாக விளையாடி கோவை அணிக்கு அதிர்ச்சியளித்தார். 58 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் சதமடித்து அசத்தினார் அஜிதேஷ். சதமடித்தபோது அதைக் கூடப் பெரிய அளவில் கொண்டாடாமல் தன்னுடைய அணி வெற்றி பெறுவதில் தான் அவருடைய கவனம் இருந்தது. கடைசியில் நெல்லை அணிக்கு அபாரமான வெற்றி கிடைத்தது. ஐபிஎல் ஏலத்தில் அஜிதேஷ் தேர்வானால் அதற்கு இந்த ஆட்டம் முக்கியக் காரணமாக இருக்கும்.
The post ’’டிஎன்பிஎல் ஆல்-ரவுண்டர் அஜிதேஷ் வெற்றிக் கதை தெரியுமா..?’’ first appeared on Madras Murasu.
]]>The post ’’இங்கிலாந்தில் 2025-2031 ஆண்டுகளில் இங்கிலாந்து- இந்தியா டெஸ்ட்..!’’ மைதானங்கள் பெயர் வெளியீடு first appeared on Madras Murasu.
]]>2027 மகளிர் ஆஷஸ் தொடர், ஹெடிங்க்லி மைதானத்தில் நடைபெறும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதே போல, 2027 ஆஷஸ் தொடருக்கான மைதான விவரங்களையும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. லார்ட்ஸ், கியா ஓவல், டிரென்ட் பிரிட்ஜ், ஏஜஸ் பௌல் ஆகிய மைதானங்களில் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
2031 ஆஷஸ் தொடர் லார்ட்ஸ், கியா ஓவல், எமிரேட்ஸ் ஓல்ட் ட்ரஃபோர்டு, ஹெடிங்க்லி, டிரென்ட் பிரிட்ஜ் ஆகிய மைதானங்களில் நடத்தப்பட உள்ளது. ஏஜஸ் பௌல் மைதானத்தில் 2011-ல் முதல் டெஸ்ட் ஆட்டம் நடத்தப்பட்டது. அதில் இங்கிலாந்து, இலங்கை அணிகள் விளையாடின. 2014, 2018 ஆண்டுகளில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் ஆட்டங்கள் இந்த மைதானத்தில் நடத்தப்பட்டுள்ளன. கரோனா ஊரடங்கு காலத்தில் 2020-ல் பயோ-செக்யூர் (Bio-secure) முறையில் மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக டெஸ்ட் ஆட்டங்கள் இங்கு நடைபெற்றன.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான மைதான விவரங்களையும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. 2025-ல் நடைபெற உள்ள ஐந்து ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் லார்ட்ஸ், கியா ஓவல், எட்ஜ்பஸ்டன், ஹெடிங்க்லி, எமிரேட்ஸ் ஓல்ட் டிரஃபோர்ட் ஆகிய மைதாங்களில் நடைபெற உள்ளன. 2029-ல் நடைபெற உள்ள இந்தியாவுக்கு எதிரான ஐந்து ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் லார்ட்ஸ், கியா ஓவல், எட்ஜ்பஸ்டன், எமிரேட்ஸ் ஓல்ட் ட்ரஃபோர்ட், ஏஜஸ் பௌல் ஆகிய மைதானங்களில் நடைபெறுமென இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
The post ’’இங்கிலாந்தில் 2025-2031 ஆண்டுகளில் இங்கிலாந்து- இந்தியா டெஸ்ட்..!’’ மைதானங்கள் பெயர் வெளியீடு first appeared on Madras Murasu.
]]>The post “கில் போல் இருந்தால் உச்சம் தொடலாம்..!” கோலி first appeared on Madras Murasu.
]]>ஐபிஎல் 2023 போட்டியில் 890 ரன்களைக் குவித்து அதிக ரன் குவித்த வீரர் என்ற விருதையும் பெற்றார். இதனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆட்டத்தில் கில்லின் ஆட்டம் எப்படி இருக்கும் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஐசிசிக்கு அளித்த பேட்டியில் ஷுப்மன் கில் குறித்து கோலி பேசியதாவது: அவர் (கில்) விளையாட்டைப் பற்றி என்னிடம் நிறைய பேசுகிறார். கற்றுக்கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறார். இந்த வயதில் அவர் அற்புதமான திறமையைக் கொண்டுள்ளார். முக்கிய ஆட்டங்களில் விளையாடக்கூடிய அற்புதமான திறன் மற்றும் தன்னம்பிக்கை அவரிடம் உள்ளது. மரியாதையை அடிப்படையாகக் கொண்ட புரிதல் எங்களிடம் உள்ளது.
அவருடைய வளர்ச்சிக்கு உதவவும் சுய முயற்சியில் அவர் முன்னேறுவதைப் பார்க்கவும் ஆர்வமாக இருக்கிறேன். இதன்மூலம் அவர் நீண்ட காலம் நிலைத்து விளையாடுவதுடன் இந்திய அணிக்கும் அது பயன் தருவதாக அமையும்.
எந்தவொரு மூத்த வீரரின் வேலையும் இளம் வீரர்களை மேம்படுத்த உதவுவதான். கிரிக்கெட் வாழ்க்கை குறித்த நுண்ணறிவை இளம் வீரர்களுக்கு வழங்குவதும் தான் என்று நான் நினைக்கிறேன்.
எந்தவொரு வீரரும் கில்லைப் போல கற்றுக்கொள்ள ஆர்வமாக இருக்கும்போது அவர்கள் சிறப்பான நிலையை அடையமுடியும். இந்த டெஸ்ட் ஆட்டத்திலும் கில் தனது தனித்துவமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என நம்புகிறேன் என்றார்.
The post “கில் போல் இருந்தால் உச்சம் தொடலாம்..!” கோலி first appeared on Madras Murasu.
]]>The post “ருதுராஜ் கெய்க்வாட் – உத்கர்ஷா பவார் திருமணம்..!” first appeared on Madras Murasu.
]]>ருதுராஜ் கெய்க்வாட், மகாராஷ்டிரா ஆல்-ரவுண்டர் உத்கர்ஷா பவாரை திருமணம் செய்துள்ளார். இதனால், ரிசர்வ் வீரராக தேர்வு செய்யப்பட்ட போதிலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இருந்து விலகி இருக்கிறார்.
புதுமண தம்பதியரின் திருமணத்துக்கு முந்தைய, மெஹந்தி விழா ஜூன் 1, வியாழன் அன்று நடைபெற்றது. கெய்க்வாட், மகாராஷ்டிர மகளிர் கிரிக்கெட் வீராங்கனை உத்கரை காதலித்து வந்தார். அவர் தனது காதலியையும் ஐபிஎல் 2023 இறுதிப் போட்டிக்காக குஜராத் நரேந்திர மோடி ஸ்டேடியத்திற்கு அழைத்து வந்தார். கேப்டன் தோனியிடம் அறிமுகம் செய்து வாழ்த்து பெற்றார்.
உத்கர்ஷா பவார் யார்?
ருதுராஜ் மற்றும் உத்கர்ஷா பவார் இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். ஆனால், அவர்களது காதல் பற்றிய விவரங்கள் குறைவாகவே உள்ளன. உத்கர்ஷாவும் மகாராஷ்டிராவுக்காக விளையாடும் ஒரு கிரிக்கெட் வீரர். அவரது முழு பெயர் உத்கர்ஷா அமர் பவார். அவர் 24 வயது வேகப்பந்து வீச்சாளர். உத்கர்ஷா பவார் அக்டோபர் 13, 1998 அன்று மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பிறந்தார்.
The post “ருதுராஜ் கெய்க்வாட் – உத்கர்ஷா பவார் திருமணம்..!” first appeared on Madras Murasu.
]]>The post “நாடே கொண்டாடும் தோனி..!” நியூசிலாந்தில் கான்வே first appeared on Madras Murasu.
]]>குஜராத்துக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்று சிஎஸ்கே அணி 5-வது முறையாக்க் கோப்பையைப் பெற்றது. ஆட்டநாயகன் விருதை கான்வே வென்றார். இதனையடுத்து சொந்த ஊருக்குத் திரும்பிய கான்வே சென்ஸ் மார்னிங்கிடம் தோனி மற்றும் சிஎஸ்கே அணி குறித்துப் பேசினார்.
ரசிகர்களுக்கு மத்தியில் தோனிக்கு உள்ள ஆதரவு குறித்துப் பேசியுள்ள அவர், “இந்தியாவில் தோனிக்கு உள்ள ஆதரவு நம்ப முடியாதது. அது வேறு மாதிரியான உலகம். அவருக்காக ஒவ்வொரு ஆட்டத்துக்கும் ரசிகர்கள் வெவ்வேறு மைதானங்களுக்குப் பயணிக்கின்றனர். இதனால் வெளியே ஆட்டம் நடந்தாலும் எங்களுக்கு சேப்பாக்கத்தில் நடப்பது போலவே இருந்தது. வீரர்களுக்கு மத்தியிலும் அவர்மீது பெரும் மரியாதை இருக்கிறது. மக்களுக்கு மத்தியில் தோனிக்கு உள்ள வரவேற்பைப் பார்க்கும்போது அவர் ஹோட்டலுக்கு வெளியே செல்வது அவ்வளவு எளிதானதல்ல எனத் தோன்றுகிறது” என்றார்.
சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் குறித்து கான்வே பேசுகையில், “அணிக்குள் அவர் நல்ல பிணைப்பை ஏற்படுத்தியுள்ளார். தோனி மற்றும் அணியின் உரிமையாளர்களுடன் அவருக்கு நல்ல உறவு உள்ளது. அவருடைய ஒத்துழைப்பு என்பது தனி நபர் மற்றும் குழுவாக எங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது” எனத் கூறினார்.
The post “நாடே கொண்டாடும் தோனி..!” நியூசிலாந்தில் கான்வே first appeared on Madras Murasu.
]]>The post “மல்யுத்த வீரர்கள் போராட்டம்; முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அறிக்கை..!” first appeared on Madras Murasu.
]]>இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து மல்யுத்த வீரர்கள் தில்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவின்போது, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மல்யுத்த வீரர்களைக் காவல் துறையினர் அப்புறப்படுத்திய புகைப்படங்கள் நாட்டையே உலுக்கின.
இதைத் தொடர்ந்து, போராட்டத்தின் அங்கமாக தங்களது பதக்கங்களை கங்கை நதியில் வீசப்போவதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்தார்கள்.
இந்நிலையில், 1983-ல் உலகக் கோப்பை வென்ற கிரிக்கெட் வீரர்கள் கூட்டறிக்கை:
“நமது மல்யுத்த சாம்பியன்கள் நடத்தப்பட்ட விதத்தைப் பார்த்து கவலையும், வேதனையும் அடைந்துள்ளோம். மேலும், பதக்கங்களை கங்கை நதியில் வீசுவது குறித்து அவர்கள் சிந்தித்து வருவதும் எங்களுக்கு மிகுந்த கவலையளிக்கிறது.
The post “மல்யுத்த வீரர்கள் போராட்டம்; முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அறிக்கை..!” first appeared on Madras Murasu.
]]>