Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#காவிரி - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Mon, 09 Oct 2023 08:54:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ’காவிரி நீர் – கர்நாடக அரசிற்கு உத்தரவிட ஒன்றிய அரசை வலியுறுத்தி தீர்மானம்..!’’ சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேறியது; முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கம் https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%95-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25bf-%25e0%25ae%25a8%25e0%25af%2580%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25ae%2595-%25e0%25ae%2585%25e0%25ae%25b0%25e0%25ae%259a https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%95-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a/#respond Mon, 09 Oct 2023 08:54:21 +0000 https://madrasmurasu.com/?p=6707 ’’தமிழ்நாட்டிற்குத் தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசிற்கு உத்தரவிட ஒன்றிய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு அரசினர் தனித் தீர்மானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக பேசினார்.  தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு அடித்தளமாக விளங்கும் காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி தமிழ்நாட்டிற்குத் தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசிற்கு உத்தரவிட ஒன்றிய அரசை ஒருமனதாக வலியுறுத்திடும் அரசினர் தனித் தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முன்மொழிந்து தமிழ்நாடு முதலமைச்சர் […]

The post ’காவிரி நீர் – கர்நாடக அரசிற்கு உத்தரவிட ஒன்றிய அரசை வலியுறுத்தி தீர்மானம்..!’’ சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேறியது; முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கம் first appeared on Madras Murasu.

]]>
’’தமிழ்நாட்டிற்குத் தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசிற்கு உத்தரவிட ஒன்றிய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு அரசினர் தனித் தீர்மானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக பேசினார். 
தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு அடித்தளமாக விளங்கும் காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி தமிழ்நாட்டிற்குத் தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசிற்கு உத்தரவிட ஒன்றிய அரசை ஒருமனதாக வலியுறுத்திடும் அரசினர் தனித் தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முன்மொழிந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை :
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே !
தமிழ்நாட்டின் வாழ்வாதாரமாக இருக்கக் கூடிய காவிரி நதிநீர் உரிமையைக் காக்கும் கடமையை நோக்கிய நமது சிந்தனையை – எண்ணத்தை – இன்னும் சொன்னால் கட்டளையை இடக்கூடிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இது அமைந்திருக்கிறது.
ஆளும் கட்சியாக இருந்தாலும் – எதிர்க்கட்சியாக இருந்தாலும் – காவிரி நதிநீர் உரிமையைக் காப்பதில் திராவிட முன்னேற்றக் கழகம் என்றும், எப்போதும் எந்தச் சூழலிலும் உறுதியாக இருக்கும் (மேசையைத் தட்டும் ஒலி) என்ற உறுதிமொழியை இந்த மாமன்றத்திற்கு முதலில் தெரிவிக்க விரும்புகிறேன்.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே!
இந்த அரசு பொறுப்பேற்ற பின்பு காவிரி டெல்டா உழவர்களுக்காக மேட்டூர் அணையானது சீராகத் திறந்து விடப்பட்டு வருகிறது.
2021-ஆம் ஆண்டு மேட்டூர் அணை திறப்பதற்கான குறிப்பிட்ட ஜூன் 12-ஆம் நாள் அன்று திறக்கப்பட்டது. 2022-ஆம் ஆண்டில் முன்கூட்டியே மே மாதம் 24-ஆம் நாள் அன்று மேட்டூர் அணை திறக்கப்பட்டது.
காவிரி டெல்டா பகுதியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வாய்க்கால்கள் திட்டமிடப்பட்டு முறையாக தூர்வாரப்பட்டதனால் காவிரி நீர் கடைமடை வரை சென்று பயிர்கள் செழித்தன.  இதன் பயனாக 2021-22-ஆம் ஆண்டில் 46.2 இலட்சம் டன் அளவிலும், 2022-23-ஆம் ஆண்டில் 45.9 இலட்சம் டன் அளவிலும் காவிரி பாசனப் பகுதியில் நெல் உற்பத்தி செய்யப்பட்டு மிகப் பெரிய சாதனையைப் படைத்தோம். உற்பத்தியும் பெருகியது. உற்பத்தி பரப்பும் விரிவடைந்தது. இந்த சாதனையானது இந்த ஆண்டும் தொடர்ந்தது.
இந்த ஆண்டில், 1 ஜூன், 2023 அன்றைய நிலவரப்படி, மேட்டூர் அணையில் இருந்த 69.7 டி.எம்.சி நீரளவையும், தென்மேற்குப்  பருவமழை முன்னறிவிப்பையும் கருத்தில் கொண்டு, 12.06.2023 அன்று மேட்டூர் அணையை குறுவை பாசனத்திற்காக திறந்து வைத்தோம்.  மேட்டூர் அணையின் நீர் இருப்பு 50 டி.எம்.சி. க்கும் மேலாக உள்ளபோது, உழவர்கள் பருவத்தே பயிர் செய்ய ஏதுவாக, மேட்டூர் அணை ஜூன் 12-ஆம் நாள் திறப்பது வழக்கமாக உள்ளது. அதனை முறைப்படி திறந்து வைத்தோம்.
திறந்துவிடப்பட்ட நீரும் கடைமடைப் பகுதிகள் வரை சென்றடைந்தது. நமது வேளாண் பெருமக்களும் கடந்த ஆண்டுகளைப் போலவே குறுவைப் பயிரை  இந்த ஆண்டும் சிறப்பாக பயிரிடுவதற்கான அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டார்கள்.
இத்தகைய நிலையில் செயற்கையான ஒரு நெருக்கடியை கர்நாடக மாநில அரசு உருவாக்கி வருகிறது. கர்நாடக மாநில அரசு நமக்கு வழங்க வேண்டிய உரிய தண்ணீரை இந்த மாதத்தில் திறந்து விடவில்லை. இது தொடர்பாக நாம் எடுத்த முயற்சிகளை இந்த மாமன்றத்தில் விரிவாகச் சொல்ல வேண்டியதை, என்னுடைய கடமையாக நான் கருதுகிறேன்.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே!
கடந்த ஜூன் மாதத்தில் பில்லிகுண்டுலுவில் இருந்து நமக்கு கிடைக்க வேண்டிய 9.19 டி.எம்.சி-க்கு பதிலாக, 2.833 டி.எம்.சி மட்டுமே வரப்பெற்றோம்.
இதனைத் தொடர்ந்து 3.7.2023 அன்று மாண்புமிகு தமிழ்நாடு  நீர்வளத்துறை அமைச்சர் அண்ணன் திரு. துரைமுருகன் அவர்கள் மாண்புமிகு ஒன்றிய ஜல்சக்தி அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்தார்.
மாண்பமை உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மாதவாரியாக ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் வழங்க வேண்டிய நீரினை உடனடியாக அளித்திட கர்நாடகாவிற்கு உத்தரவிடுமாறு வலியுறுத்தினார்கள். மீண்டும் 5-ஆம் தேதியும் ஒன்றிய அமைச்சரைச் சந்தித்து மாண்புமிகு தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் அவர்கள் வலியுறுத்தினார்.
தென்மேற்கு பருவமழை பொய்த்துப் போனதால், 2023-24 பாசன ஆண்டானது ஒரு பற்றாக்குறை ஆண்டு என்ற காரணத்தைக் கூறி, இதன் பின்னரும் கர்நாடகா நமக்கு அளிக்க வேண்டிய நீரினை அளிக்கவில்லை. இதனால் குறுவைப் பயிர் பாதிக்கப்படும் என்ற சூழ்நிலையில், 19.07.2023 அன்று மாண்புமிகு ஒன்றிய ஜல்சக்தி அமைச்சர் அவர்கள் இப்பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு, உச்சநீதிமன்ற உத்தரவின்படி மாதவாரியாக தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய நீரை அளிக்க கர்நாடகாவிற்கு உத்தரவிட காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அறிவுறுத்துமாறு மாண்புமிகு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் அவர்கள் வலியுறுத்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து, ஜூலை 20-ஆம் தேதி அன்று மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அவர்கள் மீண்டும் மாண்புமிகு ஒன்றிய ஜல்சக்தி அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து, இப்பிரச்சனைக்கு தீர்வுகாண வலியுறுத்தினார்கள். இதன் பின்னரும், கர்நாடக மாநில அரசு உச்சநீதிமன்ற உத்தரவைப் பின்பற்றவில்லை.
ஜூலை 27-ஆம் தேதி அன்று, கர்நாடகாவின் 4 அணைகளின்  மொத்த கொள்ளளவு 30 ஆண்டு சராசரியில் 84 விழுக்காடாகவும், அந்த அணைகளின் நீர்வரத்து 30 ஆண்டு சராசரியில் 51 விழுக்காடாகவும் இருந்த போதிலும், பில்லிகுண்டுலுவில் 13 விழுக்காடு மட்டுமே நீர் வரப்பெற்றது.
இதைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டிற்கு உடனடியாக நீர் வழங்குமாறு கர்நாடகாவிற்கு உத்தரவிடுமாறு காவிரி நீர் மேலாண்மை ஆணையத் தலைவரிடம் கோரப்பட்டது.
தமிழ்நாடு அரசு மேற்கொண்ட இந்த தொடர் முயற்சிகளையடுத்து, ஜூலை 25  அன்று, கபினி அணையிலிருந்து வினாடிக்கு 11,000 கன அடி நீரினை அடுத்த 6 நாட்களுக்கு திறக்குமாறு கர்நாடக மாநில அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
ஜூலை 31  அன்று நடைபெற்ற காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் 83-வது கூட்டத்தில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடகா அளிக்க வேண்டிய நீரை வழங்க உத்தரவிடுமாறு கோரியது. இருப்பினும், பில்லிகுண்டுலுவில் ஆகஸ்ட் 1 முதல் அடுத்த 7 நாட்களுக்கு வினாடிக்கு 10,000 கன அடி நீரினை மட்டுமே திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவு அளித்தது.
கர்நாடக அரசு நமக்கு வழங்க வேண்டிய நீரின் பற்றாக்குறையை சரிசெய்யுமாறு ஒன்றிய ஜல்சக்தி அமைச்சகத்திற்கு அறிவுறுத்திட ஆகஸ்ட் 4 அன்று மாண்புமிகு பிரதமர் அவர்களுக்குக் கடிதம் எழுதினேன். 
இதனையடுத்து  ஆகஸ்ட் 10  அன்று நடைபெற்ற காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் கூட்டத்தில், பில்லிகுண்டுலுவில் வினாடிக்கு 15,000 கனஅடி என்ற அளவில் ஆகஸ்ட் 11 முதல்  அடுத்த 15 நாட்களுக்கு வழங்குமாறு கர்நாடகாவிற்கு உத்தரவிடப்பட்டது.
ஆகஸ்ட் 11 அன்று நடந்த கூட்டத்தில் 15 ஆயிரம் கன அடி என்பதை 10 ஆயிரம் கன அடியாக ஆணையமே குறைத்துக் கொண்டது. இதனை ஏற்காமல் தமிழ்நாடு அரசின் உறுப்பினர்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வெளிநடப்பு செய்தார்கள்.
இதுதொடர்பாக உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களோடு கலந்தாலோசித்து, கர்நாடகா உடனடியாக 24,000 கனஅடி நீரை வழங்கவும், பற்றாக்குறையான 28.849 டி.எம்.சி நீரையும் வழங்கவும் உத்தரவிடுமாறு கோரி, ஆகஸ்ட் 14 அன்று தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவினை தாக்கல் செய்தது. இவ்வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக ஒரு அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
இதனையடுத்து, ஆகஸ்ட் 15 அன்று நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில், வினாடிக்கு 5,000 கன அடி நீரை  15 நாட்களுக்கு வழங்க கர்நாடகாவிற்கு உத்தரவிடப்பட்டது. 
இந்தக் கூட்டங்களில், ஏற்கெனவே நிலுவையிலுள்ள பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய கர்நாடகாவிற்கு உத்தரவிடுமாறு நாம் வலியுறுத்திய போதிலும், எவ்வித உத்தரவையும் ஆணையம் வழங்வில்லை.
எனவே, செப்டம்பர் 19  அன்று மாண்புமிகு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டைச் சார்ந்த நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுடன் மாண்புமிகு ஒன்றிய ஜல்சக்தி அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார்.  உடனடியாக 12,500 கனஅடி நீரை அடுத்த 15 நாட்களுக்கு வழங்க கர்நாடகாவிற்கு உத்தரவிடுமாறு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு அறிவுறுத்துமாறு கோரினார்கள். ஆனால் இந்த மனு மீது ஒன்றிய அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனிடையே, செப்டம்பர் 19 அன்று கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தனது 22, 23 மற்றும் 24-ஆவது கூட்டங்களில் எடுத்த முடிவினை மீண்டும் மறுபரிசீலனை செய்ய உத்தரவிடுமாறு கோரி ஒரு மனு தாக்கல் செய்தது.
இம்மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் வழங்கிய உத்தரவுகளைப் பின்பற்றுமாறும் இவ்வழக்குடன் தொடர்புடைய அனைத்து மனுக்களை முடித்து வைப்பதாகவும் ஆணையிட்டது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் செப்டம்பர் 29  அன்று நடைபெற்ற தனது 25-ஆவது கூட்டத்தில், பில்லிகுண்டுலுவில் வினாடிக்கு 3,000 கன அடி நீரை வழங்க கர்நாடகாவிற்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த அளவையும் விட  குறைவாகவே கர்நாடகா தற்போது பில்லிகுண்டுலுவில் அளித்து வருவதால், தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமைச் செயலர், நீர்வளத்துறை அவர்கள், தலைவர், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அவர்களுக்கு, 6.10.2023 அன்று எழுதிய கடிதத்தில் கர்நாடகா ஆணையத்தின் உத்தரவைப் பின்பற்றாததை சுட்டிக்காட்டி, ஆணையம் உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு 11.10.2023 அன்று அடுத்த கூட்டத்தை நடத்த உள்ளது. அதாவது இன்னும் இரண்டு நாட்களில் நடத்த உள்ளது.
இக்கூட்டத்தில், பற்றாக்குறை ஆண்டாகிய 2023-24–இல், ஏற்கெனவே குழு மற்றும் ஆணையம் நிர்ணயித்துள்ள அளவில் கர்நாடகா அளிக்க வேண்டிய நீரளவில் உள்ள குறைபாட்டை ஈடுசெய்யவும், அடுத்த 10-15 நாட்களுக்கு அளிக்கவேண்டிய நீரையும் சேர்த்து வழங்க வலியுறுத்த உள்ளோம்.  மேலும், சட்ட வல்லுநர்களிடம்  ஆலோசித்து, தேவைப்படின் தக்க சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும்.
தமிழ்நாடு அரசு, காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டங்களிலும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் கூட்டங்களிலும், தொடர்ந்து வலுவாக வாதிட்டு வந்துள்ளதால், 2023-2024 பற்றாக்குறை ஆண்டாக இருக்கும் போதிலும் 1.06.2023 முதல் 3.10.2023 வரை பில்லிகுண்டுலுவில் 46.1 டி.எம்.சி நீர் பெறப்பட்டுள்ளது.
இந்த பாசன ஆண்டு பற்றாக்குறை ஆண்டாக இருந்துவரும் நிலையில், 5.10.2023 வரை, 90.25 டி.எம்.சி. நீர் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம், காவிரி டெல்டாவில் 6 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்காக, முறைபாசனம்- Turn system-படி நீர் பங்கீடு செய்து வழங்கப்பட்டுள்ளது.  இந்தச் சூழ்நிலையில் எஞ்சியுள்ள நாட்களுக்கு நாம் நமக்கு உரிய நீரைப் பெற்று, குறுவைப் பயிரையும், அடுத்து நடவு செய்யப்பட உள்ள சம்பா பயிரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் உள்ளது.
எனவே, நமது வேளாண் மற்றும் பொதுமக்களின் நலன் காக்க ஒன்றிய அரசை வலியுறுத்தி பின்வரும் தீர்மானத்தை இந்த பேரவை நிறைவேற்ற வேண்டும் என்று கோருகின்றேன்.
தமிழ்நாட்டு மக்களின் உணவுத் தேவைக்கான மட்டுமல்ல – மனித உயிர்களின் உயிர்த் தேவைக்கு அவசியமானது காவிரி நீர்!
அதனை தமிழ்நாட்டு மக்களுக்குப் பெற்றுத் தருவதில் எந்தச் சூழலிலும் விட்டுக் கொடுக்காமல் வாதிட்டு பெற்றுத் தருவோம்.
ஒன்றிய அரசானது, இதில் முறையாகச் செயல்பட்டு தமிழ்நாட்டு மக்களுக்கு காவிரி நீரைப் பெற்றுத் தர வேண்டும். இதற்கான அனைத்துவித முயற்சிகளையும் தி.மு.க. அரசு தயங்காமல் செய்யும் என்று மாமன்ற உறுப்பினர்களுக்கு உறுதி அளிக்கிறேன்.
அதே உணர்வுடன் இந்தத் தீர்மானத்தை இப்பேரவையின் சார்பில் நிறைவேற்றி தர வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே !
ஏற்கனவே, ஒரு தீர்மானம் வரையப்பட்டு அதன் நகல் மாமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அரசினர் தனித்தீர்மானத்தின் வடிவத்தினை செம்மைப்படுத்தி, திருத்தப்பட்ட தீர்மானத்தினை நான் இப்போது முன்மொழிகிறேன்.
அரசினர் தனித் தீர்மானம்
“தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு அடித்தளமாக விளங்கும் காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட மாண்பமை உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி தமிழ்நாட்டிற்குத் தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசிற்கு உத்தரவிட ஒன்றிய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.”  (மேசையைத் தட்டும் ஒலி)
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே !
நான் முன்மொழிந்த மேற்காணும் திருத்தப்பட்ட தீர்மானத்தினை மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக ஏற்று, நிறைவேற்றித் தருமாறு வேண்டி, கேட்டு அமைகிறேன். (மேசையைத் தட்டும் பலத்த ஒலி).

The post ’காவிரி நீர் – கர்நாடக அரசிற்கு உத்தரவிட ஒன்றிய அரசை வலியுறுத்தி தீர்மானம்..!’’ சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேறியது; முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கம் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%95-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a/feed/ 0
’’உச்ச நீதிமன்றம் செல்வோம்..!’’ அமைச்சர் துரைமுருகன் https://madrasmurasu.com/%e0%ae%89%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%af%8b/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2589%25e0%25ae%259a%25e0%25af%258d%25e0%25ae%259a-%25e0%25ae%25a8%25e0%25af%2580%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25ae%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25af%2586%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25af%258b https://madrasmurasu.com/%e0%ae%89%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%af%8b/#respond Wed, 13 Sep 2023 06:04:11 +0000 https://madrasmurasu.com/?p=6261 ”கர்நாடகா அணைகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் அளிக்க முடியாது என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் தெரிவித்திருப்பதை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. உச்சநீதிமன்றத்தில் வாதாடி, காவிரி நீரைப் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ளும்” என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். இதுகுறித்து மேலும், அந்த அறிக்கையில் அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளதாவது: காவிரி நடுவர் மன்றம் 05.02.2007 அன்று அளித்த இறுதி ஆணையின்படியும், மாண்பமை உச்சநீதிமன்றத்தின் 16.02.2018 தேதியிட்ட தீர்ப்பின்படியும், நீர்ப்பற்றாக்குறை வருடங்களில் நீரை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் […]

The post ’’உச்ச நீதிமன்றம் செல்வோம்..!’’ அமைச்சர் துரைமுருகன் first appeared on Madras Murasu.

]]>
”கர்நாடகா அணைகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் அளிக்க முடியாது என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் தெரிவித்திருப்பதை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. உச்சநீதிமன்றத்தில் வாதாடி, காவிரி நீரைப் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ளும்” என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

இதுகுறித்து மேலும், அந்த அறிக்கையில் அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளதாவது:

காவிரி நடுவர் மன்றம் 05.02.2007 அன்று அளித்த இறுதி ஆணையின்படியும், மாண்பமை உச்சநீதிமன்றத்தின் 16.02.2018 தேதியிட்ட தீர்ப்பின்படியும், நீர்ப்பற்றாக்குறை வருடங்களில் நீரை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் குறைபாடு விகிதாச்சாரத்தின்படி பகிர்ந்து கொள்ளவேண்டும். இதனை செயல்படுத்தவும், கண்காணிக்கவும் உச்ச நீதிமன்றம் CWMA மற்றும் CWRC ஆகிய அமைப்புகளை அமைக்க உத்தரவிட்டதன்படி, ஜூன், 2018 முதல் இவ்வமைப்புகள் நடைமுறையில் உள்ளன. தற்போதைய தென்மேற்குப் பருவமழைக் காலத்தில், மழையளவு குறைந்து இருப்பினும், கர்நாடக அணைகளின் நீர்வரத்தை கணக்கில் கொண்டு CWRC மற்றும் CWMA ஆகிய அமைப்புகள் தமிழ்நாட்டிற்கு பில்லிகுண்டுலுவில் கிடைக்க வேண்டிய நீரின் அளவை குறைபாடு விகிதாசாரத்தின் (pro rata) படி கணக்கிட்டாலும், அவ்வாறு கணக்கிடப்பட்ட அளவை விடக் குறைவாகவே 15 நாட்களுக்கு ஒரு முறை உத்தரவிட்டு வருகின்றன. அதையும் அளிக்க கர்நாடகா மறுப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது உச்சநீதிமன்றத்தின் ஆணையை மீறும் செயலாகத்தான் கருத்தில் கொள்ள வேண்டும்.

இன்றைய தேதியில் (12.09.2023) கர்நாடகாவின் 4 முக்கிய அணைகளின் நீர் இருப்பு 63.801 டி.எம்.சி. ஆகும். மேலும், செப்டம்பர் மாதத்தில் IMD யின் அறிக்கையின்படி மழை பெய்ய வாய்புள்ளது. இதன் மூலம் சுமார் 10 டி.எம்.சிக்கு மேல் செப்டம்பர் மாதத்தில் கிடைக்கும். இதுதவிர, வடகிழக்கு பருவ மழை காலத்திலும், இந்த 4 அணைகளுக்கு குறைந்தது 30 டி.எம்.சி. நீர் கிடைக்க வாய்புள்ளது. நிலைமை இவ்வாறு இருக்க, CWRC கர்நாடக அணைகளில் இருந்து நாளை (13.09.2023) முதல் அடுத்த 15 நாட்களுக்கு, வினாடிக்கு 5000 கன அடி வீதம் 6.48 டி.எம்.சி நீர் அளிக்க உத்தரவிட்டுள்ளது. இது பற்றாக்குறை விகிதாச்சாரப்படி பார்த்தாலும் மிகக் குறைவு தான். இதையும் கர்நாடக அரசு அளிக்க முடியாது என கர்நாடக அமைச்சர் கூறியிருப்பது எந்த விதத்திலும் நியாயமல்ல.

உச்சநீதிமன்ற ஆணையின்படி ஒரு ஆண்டில் கர்நாடகா குடிநீருக்காக உபயோகிக்கக்கூடிய நீரின் அளவு (consumptive use)
6.75 டி.எம்.சி மட்டுமே. இதற்காக காவிரியிலிருந்து எடுக்க வேண்டிய நீரின் அளவு 33.75 டி.எம்.சி என்றாலும், அதில் குடிநீர் பயன்பாட்டிற்கு பிறகு காவிரி படுகையில் கர்நாடகா திரும்ப அளிக்க வேண்டிய நீர் (Return flows) 27 டி.எம்.சி ஆகும். நிலைமை இவ்வாறு இருக்க, குடிநீர் தேவை என்ற போர்வையில் கர்நாடகா நீர் தர மறுப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயலே ஆகும்.

இவ்வாறு, ஒரு மூத்த கர்நாடக அமைச்சர் இருமாநில விவசாயிகளின் நலன்களை கருதாமல் கர்நாடக அணைகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு நீர் வழங்க முடியாது என்று கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய இத்தகைய செயல்களை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. உச்ச நீதிமன்றத்தில் இப்பிரச்சனை குறித்து எடுத்துரைத்து, காவிரி நீரைப் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும்.

இவ்வாறு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

The post ’’உச்ச நீதிமன்றம் செல்வோம்..!’’ அமைச்சர் துரைமுருகன் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%89%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%af%8b/feed/ 0
’’கருகிய குறுவை நெற்பயிர்கள்: ஏக்கருக்கு ரூ.40,000 நிவாரணம்..!” டாக்டர் ராமதாஸ் https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a8%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25b1%25e0%25af%2581%25e0%25ae%25b5%25e0%25af%2588-%25e0%25ae%25a8%25e0%25af%2586%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b0 https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a8%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0/#respond Sat, 09 Sep 2023 04:36:56 +0000 https://madrasmurasu.com/?p=6192 ’’காவிரியில் போதிய அளவு தண்ணீர் வரவில்லை. குறுவை நெற்பயிர்கள் போதிய அளவுக்கு நீர் இல்லாமல் கருகிவிட்டன. எனவே, ஏக்கருக்குரூ.40,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: காவிரியில் போதிய அளவு தண்ணீர் வராததால், காவிரி பாசன மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த குறுவை நெற்பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளன. காவிரியில் தண்ணீர் திறப்பதற்கு கண்களுக்கு எட்டிய வரை எந்த வாய்ப்புகளும் தென்படாததால், அரும்பாடுபட்டு வளர்த்த குறுவை நெற்பயிர்களை காப்பாற்ற […]

The post ’’கருகிய குறுவை நெற்பயிர்கள்: ஏக்கருக்கு ரூ.40,000 நிவாரணம்..!” டாக்டர் ராமதாஸ் first appeared on Madras Murasu.

]]>
’’காவிரியில் போதிய அளவு தண்ணீர் வரவில்லை. குறுவை நெற்பயிர்கள் போதிய அளவுக்கு நீர் இல்லாமல் கருகிவிட்டன. எனவே, ஏக்கருக்குரூ.40,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:

காவிரியில் போதிய அளவு தண்ணீர் வராததால், காவிரி பாசன மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த குறுவை நெற்பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளன. காவிரியில் தண்ணீர் திறப்பதற்கு கண்களுக்கு எட்டிய வரை எந்த வாய்ப்புகளும் தென்படாததால், அரும்பாடுபட்டு வளர்த்த குறுவை நெற்பயிர்களை காப்பாற்ற முடியாதோ? என்ற கவலையிலும், வேதனையிலும் காவிரி படுகை உழவர்கள் ஆழ்ந்துள்ளனர்.

காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்வதற்காக, மேட்டூர் அணையிலிருந்து தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடப்பாண்டிலும் ஜூன் 12&ஆம் நாள் தண்ணீர் திறக்கப்பட்டதால், வழக்கத்தை விட அதிகமாக 5.10 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் குறுவை பருவ நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்டன. ஆனால், தென்மேற்கு பருவமழை பொய்த்ததால், கர்நாடக அணைகளில் இருந்து எதிர்பார்த்த அளவுக்கு தண்ணீர் திறக்கப்படாததால், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே குறுவைப் பயிர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்கவில்லை. இயற்கை கை கொடுத்தாலோ, உச்சநீதிமன்றம் நீதி வழங்கினாலோ, குறுவை பயிர்களை பெரிய அளவில் பாதிப்பின்றி காப்பாற்றி விடலாம் என்று உழவர்கள் நம்பிக் கொண்டிருந்த நிலையில் எல்லா வாய்ப்புகளும் நழுவி விட்டன; நம்பிக்கைகள் பொய்த்து விட்டன.

மேட்டூர் அணையிலிருந்து கடந்த சில வாரங்களாகவே வினாடிக்கு 8000 கன அடிக்கும் குறைவாக தண்ணீர் தான் திறந்து விடப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக இந்த அளவு 6503 கன அடியாக குறைக்கப்பட்டு விட்டது. இதனால், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேரவில்லை. இன்றைய நிலையில், குறுவைப் பயிர்களைக் காப்பாற்ற வேண்டுமானால், வினாடிக்கு குறைந்தது 15,000 கன அடி வீதம் காவிரியில் நீர் திறந்து விட வேண்டும். ஆனால், அதற்கு சிறிதளவு கூட வாய்ப்பு இல்லை.

மேட்டூர் அணையில் நீர்மட்டம் இன்று காலை 46 அடிக்கு கீழாகவும், அணையின் நீர் இருப்பு 15 டி.எம்.சிக்கு கீழாகவும் குறைந்து விட்டன. மேட்டூர் அணையின் நீர்வரத்தும் வினாடிக்கு 3000 கன அடிக்கும் கீழ் சென்று விட்டது. இத்தகைய சூழலில் மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் இன்னும் ஒரு சில நாட்களுக்குக் கூட தண்ணீர் திறந்து விடப்படுவதற்கு வாய்ப்புகளே இல்லை. கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 4 அணைகளிலும் சேர்த்து 64 டி.எம்.சி தண்ணீர் இருப்பதால் அம்மாநில அரசு மனம் வைத்தால் குறுவைப் பயிர்களைக் காப்பாற்ற முடியும். ஆனால், வினாடிக்கு 5000 கன அடி வீதம் திறக்கப்படும் தண்ணீரையே, செப்டம்பர் 12&ஆம் நாளுக்குப் பிறகு வழங்க முடியாது என்று கர்நாடகம் திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. காவிரி சிக்கலில் கடைசி நம்பிக்கையாக இருந்த உச்சநீதிமன்றமும், காவிரி வழக்கை இம்மாதம் 21&ஆம் நாளுக்கு ஒத்திவைத்து விட்டதால், இப்போதைக்கு குறுவை பயிர்களைக் காப்பாற்ற அரசிடமும், உழவர்களிடமும் எந்த தீர்வும் இல்லை.

காவிரி பாசன மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் குறுவை நெற்பயிர்கள் பயிரிடப்பட்டிருந்த நிலையில், இதுவரை சுமார் 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மட்டுமே அறுவடை நடைபெற்றுள்ளது. மீதமுள்ள 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்களை காப்பாற்றுவதற்கு வழியே இல்லை. குறுவைப் பயிர்கள் காப்பாற்றப்படாவிட்டால், உழவர்களுக்கு பேரிழப்பு ஏற்படக்கூடும். கடந்த மூன்று ஆண்டுகளாகத் தான் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி ஓரளவு வெற்றியாக நடைபெற்று வருகிறது. அதற்கு முன் காவிரியில் தண்ணீர் கிடைக்காததால் தொடர்ந்து 8 ஆண்டுகள் உழவர்கள் பேரிழப்பை எதிர்கொண்டனர். காவிரி பாசன மாவட்டங்களின் உழவர்களுக்கு அதேநிலை மீண்டும் ஏற்படக்கூடாது.

உழவர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படாமல் அரசு தான் தடுக்க வேண்டும்.
காவிரியில் தண்ணீர் இல்லாததால் இரண்டு லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை பயிர்கள் கருகும் நிலையில், அறுவடை செய்யப்பட்ட பகுதிகளிலும் கூட தண்ணீர் பற்றாக்குறை காரணமாக போதிய விளைச்சல் கிடைக்கவில்லை. காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக ஆய்வு செய்து வரும் வேளாண்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்ட போதிலும் கூட, உறுதியாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது காவிரி பாசன மாவட்ட உழவர்களுக்கு ஏமாற்றமளித்திருக்கிறது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியில் என்.எல்.சி நிறுவனத்தால் குறுவை பயிர்கள் அழிக்கப்பட்ட போது ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. அதையே அளவுகோலாகக் கொண்டு தண்ணீர் இல்லாமல் கருகிய குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். விளைச்சல் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கும், பாதிப்பின் மதிப்பை கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post ’’கருகிய குறுவை நெற்பயிர்கள்: ஏக்கருக்கு ரூ.40,000 நிவாரணம்..!” டாக்டர் ராமதாஸ் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a8%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0/feed/ 0
’’காவி­ரி­யின் வர­லாறு தெரி­யா­மல் மத்திய அமைச்சர் பேசுகிறார்..! அமைச்சர் துரைமுருகன் https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a4%e0%af%86/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25ae%25b2%25e0%25ae%25be%25e0%25ae%25b1%25e0%25af%2581-%25e0%25ae%25a4%25e0%25af%2586 https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a4%e0%af%86/#respond Mon, 07 Aug 2023 10:12:34 +0000 https://madrasmurasu.com/?p=5828 காவி­ரி­யின் வர­லாறு தெரி­யா­மல் கருத்து தெரி­வித்­தி­ருக்­கும் ஒன்­றிய இணை அமைச்சர் ராஜீவ் சந்­தி­ர­சே­கர் -க்கு தமி­ழக நீர்­வ­ளத்­துறை அமைச்­சர் துரைமு­ரு­கன் பதி­ல­ளித்­துள்­ளார். அதில், காவிரி மேலாண்மை வாரி­யத்­திற்கே காவி­ரி­யில் தண்­ணீர் திறந்து விடும் அதிகா­ரம் உண்டு என்று ஆணித்தர­மாக குறிப்­பிட்­டுள்­ளார். இது குறித்து அமைச்­சர் துரை­மு­ரு­கன் பதில் வரு­மாறு: கடந்த இரண்டு மாத­கா­ல­மாக கர்­நா­ட­கம் தமி­ழ­கத்­திற்கு உச்ச நீதி­மன்­றம் அறி­வித்த அள­வுப்­படி தண்­ணீரை வழங்­க­வில்லை. இது குறித்து முதல்­வர் தள­பதி மு.க.ஸ்டாலின் அவர்­கள் பிர­த­மர் மோடி அவர்­க­ளுக்­கும், […]

The post ’’காவி­ரி­யின் வர­லாறு தெரி­யா­மல் மத்திய அமைச்சர் பேசுகிறார்..! அமைச்சர் துரைமுருகன் first appeared on Madras Murasu.

]]>
காவி­ரி­யின் வர­லாறு தெரி­யா­மல் கருத்து தெரி­வித்­தி­ருக்­கும் ஒன்­றிய இணை அமைச்சர் ராஜீவ் சந்­தி­ர­சே­கர் -க்கு தமி­ழக நீர்­வ­ளத்­துறை அமைச்­சர் துரைமு­ரு­கன் பதி­ல­ளித்­துள்­ளார். அதில், காவிரி மேலாண்மை வாரி­யத்­திற்கே காவி­ரி­யில் தண்­ணீர் திறந்து விடும் அதிகா­ரம் உண்டு என்று ஆணித்தர­மாக குறிப்­பிட்­டுள்­ளார்.

இது குறித்து அமைச்­சர் துரை­மு­ரு­கன் பதில் வரு­மாறு:

கடந்த இரண்டு மாத­கா­ல­மாக கர்­நா­ட­கம் தமி­ழ­கத்­திற்கு உச்ச நீதி­மன்­றம் அறி­வித்த அள­வுப்­படி தண்­ணீரை வழங்­க­வில்லை.

இது குறித்து முதல்­வர் தள­பதி மு.க.ஸ்டாலின் அவர்­கள் பிர­த­மர் மோடி அவர்­க­ளுக்­கும், ஒன்­றிய நீர்­வ­ளத் துறை அமைச்­ச­ருக்­கும் கடி­தம் எழுதி இருக்­கி­றார்­கள். ஒன்­றிய நீர்­வ­ளத் துறை அமைச்­சர் அவர்­களை நான் இரண்­டு­முறை நேரில் சந்­தித்து நிலை­மை­களை விளக்கி இருக்­கி­றேன்.

காவிரி மேலாண்மை வாரி­யம் முழு­மை­யாக செயல்­ப­ட­வில்லை!

காவி­ரி­யி­லி­ருந்து தண்­ணீரை திறந்து விடு என்று கூறு­கிற அதி­கா­ரம் காவிரி மேலாண்மை வாரி­யத்­திற்­கு­தான் உண்டு. அந்த வாரி­யம் கூட்­டிய கூட்­டங்­க­ளில் தமி­ழக நீர்­வ­ளத்­துறை செய­லா­ளர் சந்­தீப் சக்­சேனா அவர்­கள் கலந்து கொண்டு தமி­ழ­கத்­திற்கு தண்­ணீர் திறந்­து­விட கர்­நா­ட­கத்தை அறி­வு­றுத்த வேண்­டும்என்று பல­முறை கோரிக்கை வைத்­துள்­ளார்.

ஆனா­லும், காவிரி மேலாண்மை வாரி­யம் இது­வ­ரை­யில் முழு­மை­யாக செயல்­ப­ட­வில்லை. நீர் சரா­ச­ரி­யாக கிடைக்­கும் வரு­டங்­க­ளில் கர்­நா­ட­கம் எந்­தெந்த மாதங்­க­ளில் எவ்­வ­ளவு திறந்து விட­வேண்­டும் என்று உச்­ச ­நீ­தி­மன்­றம் தெரி­வித்­தி­ருக்­கி­றது. ஆனால், நீர் பற்­றாக்­குறை ஏற்­ப­டும் காலங்­க­ளில் நீரை பகிர்ந்து கொள்­வதை Pro Rata Basis என்று குறிப்­பி­டு­வார்­கள். அந்த பங்­கீட்டை காவிரி மேலாண்மை வாரி­யம் இது­வரை செய்­ய­வில்லை. இந்த வாரி­யம் ஒன்றிய அ­ர­சின் கீழ்­இ­யங்­கு­கி­றது. என­வே­தான் தமி­ழ­கத்­திற்கு தண்­ணீரை திறந்­து­விட கர்­நா­ட­கத்தை அறி­வு­றுத்­து­மாறு வாரி­யத்­தி­டம் கேட்­டுக் கொண்­டி­ருக்­கின்­றோம். அந்த பணியை வாரி­யம் செய்­ய­வேண்­டும் என்­று­தான் தமி­ழக முதல்­வர் அவர்­க­ளும் பிர­த­ ம­ருக்கு கடி­தம் எழுதி இருக்­கி­றார்­கள்.

அந்த கடி­தத்­திற்கு பிர­த­மர் அலு­வ­ல­கமோ அல்­லது ஒன்­றிய நீர்­வளத்­துறை அமைச்­சரோ பதில் அளிக்­காத நிலை­யில், ஒன்­றிய இணை அமைச்­சர் ராஜீவ் சந்­தி­ர­சே­கர் என்­ப­வர், கர்­நா­ட­கத்­தில் காங்­கி­ரஸ் ஆட்சி, தமி­ழ­கத்­தில் தி.மு.க. ஆட்சி, இரண்­டும் ஓர் அணி­யில் இருக்­கி­றார்­கள் ஏன் பிரச்­சி­னை­யை­நே­ரில்­பே­சித் தீர்த்­துக் கொள்­ளக் கூடாது” என்று தெரி­வித்­தி­ருக்­கி­றார்.

ஒன்­றிய இணை அமைச்­சர் ராஜீவ் சந்­தி­ர­சே­கர் அர்­க­ளுக்கு காவிரி பிரச்­சி­னை­யின் முழு விவ­ரம் தெரி­ய­வில்லை என்று நினைக்­கி­றேன். 1967 ஆம் ஆண்­டி­லி­ருந்து 1990 ஆம் ஆண்டு வரை இப்­பி­ரச்­சினை குறித்து பேசி­பே­சி­ எந்­த­மு­டி­விற்­கும் வர­ மு­டி­யாத நிலை­யில் தான் ஒன்­றிய அரசு காவிரி நடு­வர் மன்­றத்தை அமைத்­தது. காவிரி நடு­வர் மன்­றம் தீர்ப்பு வழங்கி, அந்த தீர்ப்பு உச்­ச­நீதி மன்­றத்­திற்கு போய், உச்­ச­நீ­தி­மன்­றம் சில­தி­ருத்­தங்­க­ளோடு தீர்ப்பு வழங்­கி­விட்­ட­பி­றகு இரு மாநி­லங்­க­ளி­டையே பேச்­சு­வார்த்தை என்­ப­தற்கே இட­மில்லை. பேச்சு வார்த்­தை­யின் மூலம் பிரச்­சி­னைக்கு தீர்வு காண முடிந்­தி­ருந்­தால் நடு­வர் மன்­றம் அமைத்­தி­ருக்க வேண்­டிய அவ­சி­யமே ஏற்­பட்­டி­ருக்­காது. இவை­யெல்­லாம் நீண்­ட­கா­ல­மாக நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கிற வர­லாறு.

உரி­மையை நிலை­நாட்­டு­வ­தில் அவ­ர­வர் உறுதி!

‘தாயும் பிள்­ளை­யும் என்­றா­லும் வாயும் வயி­றும் வேறு­வே­று’­­என்று கிரா­மங்­க­ளில் கூறு­வ­து­ போல, தோழ­மை­யாக இருந்­தா­லும் தோழ­மை­யாக இல்­லா­விட்­டா­லும் அவ­ர­வர் உரி­மையை நிலை நாட்­டு­வ­தில் அவ­ர­வர்­கள் உறு­தி­யாக இருப்­பார்­கள். அந்த நிலைப்­பா­டு­தான் தமி­ழ­கத்­தின் நிலைப்­பாடு.

இந்த விவ­ர­மெல்­லாம் தெரி­யா­மல் ஒன்­றிய இணை அமைச்­சர் ஒரு­வர் தள­ப­திக்கு அறி­வுரை சொல்­வது போல் ஓர் அறிக்கை விட்­டி­ருப்­பது வேடிக்­கை­யாக இருக்­கி­றது.

அடிப்­படை வர­லாறு தெரி­யா­மல் பேசும் ஒன்­றிய அரசு!

இதில் இன்­னொரு வேடிக்கை. வேடிக்­கை­யா­னது மட்­டு­மல்ல வேத­னை­யா­னது என்­ன­வென்­றால், தமி­ழ­கத்­தின் நீர்­வ­ளத்­துறை அமைச்­ச­ரா­க­வும், முன்­னாள் முதல்­வ­ரா­க­வும் இருந்­த­வ­ரு­மான ஓ.பன்­னீர்­செல்­வம் ஒரு அறிக்­கை­யில், தமி­ழக முதல்­வர் மு.க. ஸ்டாலின் அவர்­கள் கர்­நா­டக மாநில முதல்­வ­ரோ­டும், நீர்­ ­வளத்­து றை அமைச்­ச­ரோ­டும் பேசி தண்­ணீரை பெற­வேண்­டும் என்று தெரி­வித்­தி­ருப்­ப­து­தான். இனி பேச்­சு­வார்த்­தைக்கு இட­மில்லை என்ற நிலை­யில்­தான் நடு­வர் மன்­றம் போனோம், தீர்ப்பு பெற்­றி­ருக்­கி­றோம். இந்த தீர்ப்­பில் ஏதா­வது பிரச்­சினை என்­றால் உச்­ச­நீதி மன்­றத்­தைத்தான் நாடே­வேண்­டு­மே­த­விர, மீண்­டும் கர்­நா­டக மாநி­லத்­தோடு பேச்­சு ­வார்த்தை நடத்­த­லாம் என்று கூறு­வது காவிரி பிரச்­சி­னை­யின் அடிப்­படை வர­லாறே தெரி­யா­த­ த­னம் தான். பாவம், அர­சி­யல் பிரச்­ சி­னை­யில் ஓ.பன்­னீர்­செல்­வம் மிக­வும் குழம்­பிப் போய் இருக்­கி­றார் என்­ப­தைத்தான் அவர் அறிக்கை காட்­டு­கி­றது.

இவ்வாறு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

The post ’’காவி­ரி­யின் வர­லாறு தெரி­யா­மல் மத்திய அமைச்சர் பேசுகிறார்..! அமைச்சர் துரைமுருகன் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a4%e0%af%86/feed/ 0
’’செயல்படாத காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவரை நீக்குக..!’’ பெ. மணியரசன் https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a3/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259a%25e0%25af%2586%25e0%25ae%25af%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%259f%25e0%25ae%25be%25e0%25ae%25a4-%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25bf-%25e0%25ae%25ae%25e0%25af%2587%25e0%25ae%25b2%25e0%25ae%25be%25e0%25ae%25a3 https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a3/#respond Thu, 06 Jul 2023 09:48:32 +0000 https://madrasmurasu.com/?p=4868 காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், குறுவைச் சாகுபடியைப் பாதுகாப்பதற்குரிய காவிரி நீரைக் கர்நாடகத்திடம் திறந்துவிடச் செய்வதற்காகப் புதுதில்லி சென்று (05.07.2023), நீராற்றல் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவாத்-ஐ சந்தித்து, மனு கொடுத்துத் திரும்பியுள்ளார். ஒன்றிய நீராற்றல் துறை அமைச்சர், தமது செயலாளரை அழைத்துக் காவிரி மேலாண்மை ஆணையத்திடம் இவ்வேண்டுகோளைத் தெரிவிக்குமாறு கூறியுள்ளார் என்று தமிழ்நாடு அரசின் செய்தி – மக்கள் தொடர்புத்துறை […]

The post ’’செயல்படாத காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவரை நீக்குக..!’’ பெ. மணியரசன் first appeared on Madras Murasu.

]]>
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், குறுவைச் சாகுபடியைப் பாதுகாப்பதற்குரிய காவிரி நீரைக் கர்நாடகத்திடம் திறந்துவிடச் செய்வதற்காகப் புதுதில்லி சென்று (05.07.2023), நீராற்றல் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவாத்-ஐ சந்தித்து, மனு கொடுத்துத் திரும்பியுள்ளார்.

ஒன்றிய நீராற்றல் துறை அமைச்சர், தமது செயலாளரை அழைத்துக் காவிரி மேலாண்மை ஆணையத்திடம் இவ்வேண்டுகோளைத் தெரிவிக்குமாறு கூறியுள்ளார் என்று தமிழ்நாடு அரசின் செய்தி – மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. நாளேடுகளிலும் இவ்வறிக்கை வந்துள்ளது.

குறுவைப் பயிரைப் பாதுகாக்க முடியுமா என்ற அச்சத்தில் உழவர் பெருமக்கள் உழன்று கொண்டிருக்கிறார்கள். மேட்டூர் அணையில் கிடுகிடுவென தண்ணீர் வற்றி, இன்னும் சில நாட்களுக்கே இப்போது திறந்துவிடும் அளவில், காவிரி நீரை குறுவைக்குத் திறந்துவிட முடியும் என்ற அவலநிலை உள்ளது. அதற்குள் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குரிய தண்ணீரைத் திறந்துவிடாவிட்டால், ஐந்து இலட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி காய்ந்து கருகிவிடுமோ என்று உழவர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு, மன உளைச்சலில் உள்ளார்கள்.

தமிழ்நாட்டு அமைச்சரோ, எந்த உறுதியும் உடனடி நிவாரணமும் பெறாமல் ஒப்புக்கு மனு கொடுத்துத் திரும்பியுள்ளார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டிய தண்ணீரை ஒரு தடவை கூடக் கர்நாடக அரசு, தானே முன்வந்து திறந்து விட்டதில்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்தும் வகையில் காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசை வற்புறுத்தி, தனது மேற்பார்வையில் தண்ணீர் திறந்துவிட்டதும் இல்லை! தமிழ்நாட்டில் தி.மு.க. அல்லது அ.தி.மு.க. ஆட்சிகள் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தண்ணீரைப் பெற்றுத் தந்ததும் இல்லை. கடந்த சில ஆண்டுகளாக பருவம் தவறிய பெருமழை பெய்ததால், மிகை வெள்ளம் வெளியேறி, மேட்டூர் அணையை நிரப்பியிருக்கிறது அல்லது தமிழ்நாட்டுப் பாசனத்திற்குத் தண்ணீர் தந்திருக்கிறது.

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு இப்போது தலைமை தாங்கும் ஹல்தர், ஏற்கெனவே பணி நிறைவு பெறும் வரை ஒன்றிய அரசின் நீராற்றல் துறையின் தலைமைச் செயலாளராக இருந்து ஓய்வு பெற்றவர். சட்டவிரோதமான முறையில், கர்நாடக அரசு மேக்கேதாட்டில் அணை கட்ட திட்டம் அறிவித்தபோது, அதற்கான திட்ட முழு அறிக்கையை (Detailed Project Report – DPR) தாக்கல் செய்யுமாறு கோரிப் பெற்றவர் இதே ஹல்தர்தான். கர்நாடக அரசின் ஒன்பதாயிரம் கோடி ரூபாய்க்கான திட்ட மதிப்பீட்டு விளக்க அறிக்கையை ஹல்தர் தலைமையிலான நீராற்றல் துறைக்கு அனுப்பி வைத்தது. ஹல்தர் அவ்வறிக்கையை ஏற்றுக் கொண்டு, காவிரி மேலாண்மை ஆணையம் அதை விவாதித்து ஏற்க வேண்டும் என்பதற்காக, அதற்கு அனுப்பி வைத்தார்.

பணி நிறைவு பெற்ற பின், அதே ஹல்தர் தான் இப்பொழுது காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக இருக்கிறார். இவர் ஒரு தடவை கூட உச்ச நீதிமன்றம் மாத வாரியாகத் தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய தண்ணீரை கர்நாடகத்திடமிருந்து பெற்றுத் தந்ததில்லை. அதற்குரிய நடவடிக்கை எடுத்ததில்லை. ஆனால், காவிரி ஆணையத்தின் ஒவ்வொரு கூட்டத்திலும் மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி கொடுப்பதை நிகழ்ச்சி நிரலில் சேர்த்து வருகிறார்.

இப்பொழுது தமிழ்நாட்டின் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், பொதுமக்கள் மனு கொடுப்பதுபோல் ஒரு மனுவைப் புதுதில்லியில் கொடுத்துவிட்டு வந்துள்ளார். கர்நாடக துணை முதல்வராகவும், அம்மாநில நீர்வளத்துறை அமைச்சராகவும் உள்ள டி.கே. சிவக்குமார் ஒளிவுமறைவின்றி அண்மையில் புதுதில்லியில் செய்தியாளர்களிடம், காவிரி மேலாண்மை ஆணையம் திறந்துவிடச் சொன்னாலும், கர்நாடகம் தண்ணீர் திறந்துவிடாது; எங்கள் அணைகளில் மிகவும் குறைவாக தண்ணீர் இருக்கிறது என்று வெளிப்படையாக அறிவித்தார்.

கர்நாடகத்தில் உண்மையிலேயே வழக்கத்தை விடக் காவிரி நீர் குறைவாக இருந்தால், அதைத் தமிழ்நாட்டுடன் பகிர்ந்து கொள்வதற்குக் காவிரித் தீர்ப்பாயம், பற்றாக்குறை காலப் பகிர்வுத் திட்டத்தையும் (Distress Formula) அறிவித்துள்ளது. அதை உச்ச நீதிமன்றம் ஏற்றுள்ளது. அதன்படி, தண்ணீரைப் பெறத் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். அதற்கு முன், கர்நாடக அணைகளிலும், அம்மாநிலம் புதிதாக உண்டாக்கிக் கொண்ட மற்ற நீர்நிலைகளிலும் இப்பொழுது தண்ணீர் உண்மையில் எவ்வளவு இருக்கிறது என்று கண்டறியத் தமிழ்நாட்டிலிருந்து தகுதியுள்ள ஓர் ஆய்வுக்குழுவைத் தமிழ்நாடு அரசு அனுப்ப வேண்டும்.

தமிழ்நாட்டில் பீகாரிகள் தாக்கப்படாத நிலையில், தாக்கப்பட்டதாக ஒரு வதந்தியை வடநாட்டார் பரப்பிவிட்டபோது, பீகார் அரசு தமிழ்நாட்டிற்கு ஆய்வுக்குழு அனுப்பி ஊர் ஊராக புலம் பெயர்ந்த மக்களையும், தமிழ்நாட்டு அதிகாரிகளையும் விசாரித்தது. அதற்குத் தமிழ்நாடு அரசு முழுமையாக ஒத்துழைத்தது. இப்பொழுது கர்நாடகத்தில் உள்ளது தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான காங்கிரசின் ஆட்சி! எனவே, உடனடியாக ஒரு வல்லுநர் குழுவைக் கர்நாடகத்திற்கு அனுப்பி, காவிரி நீர் நிலையின் உண்மை நிலையை அறிந்து, அதற்கேற்ப கோரிக்கை வைக்க வேண்டும்.

இதையெல்லாம் செய்யாமல், கணக்குக் காட்டுகின்ற முறையில் புதுதில்லிக்குப் போய் துரைமுருகன் மனு கொடுத்ததை ஏற்கும் மனநிலையில், காவிரி டெல்டா மாவட்டங்களின் உழவர்கள் இல்லை! அத்துடன், செயல்படாத காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவரை நீக்கிவிட்டு, தமிழ்நாடு அரசும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தகுதியுள்ள ஒருவரை காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக அமர்த்தும்படி தமிழ்நாடு அரசு இந்திய அரசுக்குக் கோரிக்கை வைக்க வேண்டும்.

இக்கோரிக்கைகளை நிறைவேற்றி டெல்டா மாவட்டக் குறுவைப் பயிரையும், அடுத்த சம்பா சாகுபடியையும் பாதுகாக்க வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

The post ’’செயல்படாத காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவரை நீக்குக..!’’ பெ. மணியரசன் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a3/feed/ 0