acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ’நினைவெல்லாம் நீயடா’ முதல் பாடல் ’மின்னல் பூக்கும் உந்தன் கண்கள்’ அக்டோபர் 27 ல் ரிலீஸ்..!’ first appeared on Madras Murasu.
]]>இளையராஜாவின் மயக்கும் இசையில் 1417-வது படமாக உருவாகி இருக்கிறது “நினைவெல்லாம் நீயடா”. இந்த படத்தை லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு பிரம்மாண்டமாக தயாரிக்கிறார் . சிலந்தி, ரணதந்த்ரா, அருவா சண்ட படங்களை இயக்கிய ஆதிராஜன் இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார்.
இப்படத்தின் கதாநாயகன் பிரஜன். கதாநாயகியாக, வழக்கு எண் 18 /9, ஆதலால் காதல் செய்வீர், திரிஷா இல்லனா நயன்தாரா, சண்டி முனி, ஒரு குப்பை கதை படங்களில் நடித்த மனிஷா யாதவ் கதாநாயகியாக நடிக்கிறார். மற்றொரு நாயகியாக சினாமிகா அறிமுகமாகிறார்.

இளம் வயது நாயகன் நாயகியாக மாஸ், மாஸ்டர் பட புகழ் ரோகித்தும், அப்பா, அம்மா கணக்கு, ஆருத்ரா, வினோதய சித்தம் படங்களில் நடித்த யுவஸ்ரீயும் நடிக்கின்றனர். மனோபாலா, முத்துராமன், மதுமிதா, பட அதிபர் பி எல் தேனப்பன், டைரக்டர் ஜெயபிரகாஷ், ரஞ்சன் குமார் தமிழ்செல்வி ஆகியோருடன் முக்கிய வேடத்தில் டைரக்டர் ஆர்.வி.உதயகுமார் நடித்துள்ளார்.
’’எங்கள் திரைப்படத்தின் முதல் சிங்கிள் வரும் வெள்ளிக்கிழமை அக்டோபர் 27ஆம் தேதி காலை 10.17 மணிக்கு வெளியிடப்படும்…கார்த்திக்கால் பாடப்பட்டது. பழனி பாரதி எழுதியது’’ என்று இயக்குநர் ஆதிராஜன் அறிவித்துள்ளார்.
The post ’நினைவெல்லாம் நீயடா’ முதல் பாடல் ’மின்னல் பூக்கும் உந்தன் கண்கள்’ அக்டோபர் 27 ல் ரிலீஸ்..!’ first appeared on Madras Murasu.
]]>The post ”இந்தப் படம் வெற்றியடையும், அப்போது என் மகனைப் பற்றி பேசுவேன்..!” ’மார்கழி திங்கள்’ திரைப்பட விழாவில் பாரதிராஜா first appeared on Madras Murasu.
]]>இப்படத்திற்காக 31 ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிராஜாவும் இசைஞானி இளையராஜாவும் இணைந்துள்ளனர். ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
வரவேற்புரை வழங்கிய சுசீந்திரன்: மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இயக்குநர் இமயம் பாரதிராஜா மற்றும் மனோஜ் பாரதிராஜாவை ஒன்று சேர்த்து படம் தயாரிப்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது.
நடிகர் கார்த்தி: அனைவருக்கும் வணக்கம், பாரதிராஜா ஐயா அவர்களுக்கு பெரிய வணக்கம். மனோஜ் பாரதிராஜா இவ்வளவு சீக்கிரம் திரைப்படத்தை இயக்குவார் என்று நான் நினைக்கவில்லை. இதற்கு காரணமான சுசீந்திரன் அவர்களுக்கு நன்றி. இளையராஜா சாரை நினைக்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது. இப்போது வரை அவரை முன்மாதிரியாக வைத்துக் கொண்டிருக்கிறேன். அவர் தொடர்ந்து நிறைய படங்களுக்கு இசை அமைக்க வேண்டும் என்று வேண்டுகிறேன். இந்தப்படம் கண்டிப்பாக நல்லபடியாக வரும் என்று ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.
தயாரிப்பாளர் ஜி. தனஞ்செயன்: இனிய மாலை வணக்கம். ‘மார்கழி திங்கள்’ டைட்டில் ரொம்ப அற்புதமாக இருக்கிறது. இப்படத்தில் நிறைய விஷயம் இருக்கும் என்று நம்புகிறேன். ‘அலைகள் ஓய்வதில்லை’ மாதிரி இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். சுசீந்திரன் சாருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். புதிய முகங்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். நல்ல படமாக அமைய வாழ்த்துகள்.
இயக்குநர் திரு: இந்த படம் கண்டிப்பாக நல்ல படமாக அமையும் எனவும் வாழ்த்துகிறேன். மனோஜ் மற்றும் சுசீந்திரன் அவர்களுக்கு வாழ்த்துகள்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி: மனோஜ் கட்டாயம் இயக்குநராக ஆவார் என்று நம்பினேன், அது தற்போது உண்மையாகி உள்ளது. சுசீந்திரன் மூலம் இது நடந்துள்ளது. பாரதிராஜா அவர்கள் இயக்குநராக இருந்து இப்போது நடித்துக் கொண்டிருக்கிறார். மனோஜின் திறமை மீது எனக்கு மிகவும் நம்பிக்கை உள்ளது. இந்த படத்தின் வெற்றிக்கு வாழ்த்துகிறேன்.
தயாரிப்பாளர் பி. எல். தேனப்பன்: வாழ்த்த வந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி, பாரதிராஜாவிற்காக தான் அனைவரும் வந்திருக்கிறோம். சுசீந்திரன் சார் முதல் படம் தயாரித்திருக்கிறார். மனோஜ் நிறைய படங்கள் இயக்கி வெற்றி பெறுவார் என்று வாழ்த்துகிறேன்.
இயக்குநர் பேரரசு: அனைவருக்கும் வணக்கம், இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கும், சிவகுமார் அவர்களுக்கும், சீமான் அவர்களுக்கும் வணக்கம். இசை என்றால் இளையராஜா தான், இயக்குநர் என்றால் பாரதிராஜா தான் என்று மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அவர்கள். இளையராஜா மற்றும் பாரதிராஜா மீண்டும் இணைந்துள்ளது மிக்க மகிழ்ச்சி. டிரைலரில் பாரதிராஜா, கதாநாயகன் மற்றும் கதாநாயகி மிகவும் நன்றாக நடித்துள்ளனர். மனோஜ் பாரதிராஜா இயக்கியிருக்கும் ‘மார்கழி திங்கள்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடையும்.
இயக்குநர் சங்க செயலாளர் ஆர்.வி. உதயகுமார்: மனோஜ் இயக்குநராக வரவேண்டும் என்று ஆசைப்பட்டேன். பல வருடங்களாக அவரிடம் இதை நான் சொல்லிக் கொண்டே இருந்தேன். ஒரு அற்புதமான இயக்குநராக உருவாக்குவதற்கு மனோஜ் பாரதிராஜாவுக்கு வாய்ப்பு கொடுத்த திரு சுசீந்திரன் அவர்களுக்கு நன்றி. இந்த திரைப்படத்தின் டிரைலரை பார்க்கும்போது ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தை நினைத்துக்கொண்டேன். இதன் பாடல்கள் மிக அழகாக ‘காதல் ஓவியம்’ பாடல்களை நினைவூட்டின. இசைஞானி இளையராஜா மற்றும் பாரதிராஜா அவர்களை பிரிக்க முடியாது, அவர்கள் உறவு என்றும் மறையாது. மனோஜ் பாரதிராஜா அவர்கள் புதிய அத்தியாயத்தை இப்படத்தின் மூலம் தொடங்குவார். கதாநாயகன் மற்றும் கதாநாயகிக்கு வாழ்த்துகள். இந்தப்படம் வெற்றிப்படமாக அமையும் எனவும் வாழ்த்துகிறேன்.
கதாநாயகி நக்ஷா சரண்: ‘மார்கழி திங்கள்’ குழுவினர் அனைவருக்கும் நன்றி. பாரதிராஜா சார் அவர்கள் மிகவும் நட்பாக பேசுவார்கள். எனக்கு வாய்ப்பளித்த மனோஜ் பாரதிராஜா மற்றும் சுசீந்திரன் அவர்களுக்கு மிகவும் நன்றி. படம் மிகவும் நன்றாக வந்துள்ளது.
கதாநாயகி ரக்ஷனா : மனோஜ் பாரதிராஜா சார், சுசீந்திரன் சார் மற்றும் ‘மார்கழி திங்கள்’ படத்தின் அனைத்து குழுவினருக்கும் நன்றி. இளையராஜா சார் கையை வச்சா அது ராங்கா போனதில்ல. இந்த திரைப்படத்திற்கு அவர் இசை அமைத்துள்ளார், ரொம்ப நன்றி சார். இந்த திரைப்படம் உங்களுக்கு மிகவும் பிடிக்கும், கண்டிப்பாக அனைவரும் பார்க்கணும்.
கதாநாயகன் ஷியாம் செல்வன் : மனோஜ் பாரதிராஜா அவர்களால் தான் நான் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளேன். இந்தப் படத்தில் உதவி செய்த அனைவருக்கும் நன்றி. பாரதிராஜா மற்றும் இளையராஜா சார் அவர்களுக்கு நன்றி. நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நன்றி.
இயக்குநர் லிங்குசாமி : தமிழ் சினிமாவில் இயக்குநர் என்றால் பாரதிராஜா சார் தான். திருப்பாவையில் வரும் முதல் வார்த்தை மார்கழி திங்கள். எனவே இது மிகவும் அருமையான தலைப்பு. இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுசீந்திரன் அவர்களுக்கு வாழ்த்துகள். டிரைலர் சிறப்பாக இருக்கிறது. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என நம்புகிறேன்.
இயக்குநர் மனோஜ் பாரதிராஜா : 18 வருட போராட்டத்திற்கு பிறகு நான் இப்போது இயக்குநராக வந்திருக்கிறேன். சுசீந்திரன் சாரிடம் நான் நிறைய கதைய சொல்லியிருந்தேன். திடீர் என்று ஒரு நாள் கூப்பிட்டு ‘நீங்க படம் பண்ணுங்க’ என்று கூறிவிட்டார். அதன் பின்னர் 15 நாட்களில் ஷூட்டிங் தொடங்கியது. என்னுடைய முதல் படத்தில் இளையராஜா மற்றும் பாரதிராஜா இணைந்திருப்பது எனக்கு பெருமை. கதாநாயகன் ஷியாம் நன்றாக நடித்துள்ளார். ரக்ஷனா மற்றும் அனைவரும் அருமையான பங்களிப்பை தந்துள்ளனர். இந்த திரைப்படம் நன்றாக வந்துள்ளது. கண்டிப்பாக அனைவரும் பாருங்கள். என் கஷ்டங்களில் உடனிருந்த மனைவி மற்றும் குழந்தைகளுக்கு நன்றி. பத்திரிகையாளர்கள் என்றால் ஒரு குடும்பம் என்று சொல்லலாம். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும்.
பெப்சி தலைவரும் இயக்குநருமான ஆர்.கே. செல்வமணி : மனோஜ் பாரதிராஜாவிற்கு வாய்ப்பளித்த சுசீந்திரனுக்கு நன்றி. பாரதிராஜாவிற்கு நன்றி. திறமையானவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்து கிடைத்துள்ளது. ‘மார்கழி திங்கள்’ என்று அழகான தமிழ் டைட்டில். இதைப் பார்க்கும்போதே மனதுக்குள் சந்தோஷம். மண் வாசனை நிறைந்த படமாக இருக்கும் என்றும், பிரம்மாண்டமாக இருக்கும் என்றும் நம்புகிறேன். திரைப்படத்தில் நடித்த அனைவரும் நன்றாக நடித்துள்ளார்கள். மனோஜ் பாரதிராஜாவை பத்திரிகையாளர்கள் மிகப்பெரிய இயக்குநராக மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். தந்தையை மிஞ்சிய தனையனாக வருவதற்கு என்னுடைய வாழ்த்துகள்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் : அனைவருக்கும் என்னுடைய அன்பும் வணக்கமும். என்னுடைய தம்பி இயக்குநராக ஆகியிருப்பது ஒரு மகிழ்ச்சியான தருணம். சுசீந்திரன் அவர்களுக்கு நன்றி. மிகப்பெரிய சாதனை படைத்திருப்பவர் இசைஞானி இளையராஜா. அவரது திறமைக்கு எதுவும் ஈடாகாது. உலகத்தின் தலைசிறந்த ஓவியராக வரவேண்டியவர் பாரதிராஜா.
நடிகர் சிவகுமார் : திரையுலகத்தை சேர்ந்த அனைவரையும் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தில் ரொம்ப வருடங்களுக்கு பிறகு இயக்குநர் இமயம் பாரதிராஜாவும் இசைஞானி இளையராஜாவும் இணைந்துள்ளனர். இத்திரைப்படம் மிகவும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். அனைவரும் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன்.
இயக்குநர் இமயம் பாரதிராஜா : என் இனிய தமிழ் மக்களே, உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன். மேடையில் அமர்ந்திருக்கும் அத்தனை ஜாம்பவான்களுக்கும் நன்றி. நடிகனாக இருந்து இயக்குநராக மாறுவது சுலபமில்லை, என் மகன் மீது நம்பிக்கை உள்ளது. டிரைலர் தான் காட்டியிருக்கிறான், மிக அற்புதமாக செய்துள்ளான். முக்கியமாக நான் நன்றி தெரிவிக்க வேண்டியவர் யார் என்றால் சுசீந்திரன் தான். காதலை அடிப்படையாக கொண்ட இந்த திரைப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். அத்தனை இயக்குநர்களும் என்னை அப்பா என்று தான் அழைத்தார்கள். மிகவும் மகழிச்சி. இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி, கண்டிப்பாக இந்தப் படம் வெற்றியடையும், அப்போது என் மகனை பற்றி பேசுவேன்.
The post ”இந்தப் படம் வெற்றியடையும், அப்போது என் மகனைப் பற்றி பேசுவேன்..!” ’மார்கழி திங்கள்’ திரைப்பட விழாவில் பாரதிராஜா first appeared on Madras Murasu.
]]>The post ’’31 ஆண்டுகளுக்கு பின் இணையும் பாரதிராஜா – இளையராஜா..!’’ first appeared on Madras Murasu.
]]>இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். புதுமுகங்கள் முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா நடிக்கிறார்.
இப்படத்திற்காக 31 ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிராஜாவும் இசைஞானி இளையராஜாவும் இணைந்துள்ளனர். அவர்கள் இருவரும் கடைசியாக இணைந்து பணியாற்றிய திரைப்படம் ‘நாடோடி தென்றல்’ ஆகும்.
தற்போது ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்திற்காக இருவரும் இணைந்துள்ள நிலையில் இளையராஜா இசையில் உருவான பாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்பாடல் அனைவரின் இதயங்களையும் தொடும் என்று படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.
‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவும் அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவும் இணையும் இப்படத்தை தனது வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரிப்பது குறித்து இயக்குநர் சுசீந்திரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
பாரதிராஜா இயக்கிய ‘தாஜ்மஹால்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி அதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், தான் இயக்குநர் அவதாரம் எடுக்கும் முதல் படத்திலேயே தனது தந்தையை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது குறித்து மனோஜ் பாரதிராஜா மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
இயக்குநராக தனது முதல் படத்தை தயாரிப்பதற்காக சுசீந்திரனுக்கு மனோஜ் பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளார். இயக்குநர் மணிரத்னத்திடம் ‘பம்பாய்’ படத்தில் உதவி இயக்குநராக மனோஜ் பாரதிராஜா பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது, அதனையொட்டி அவரை சந்தித்து மனோஜ் ஆசி பெற்றார்.
அனைவரும் ரசித்து பாராட்டும் வகையில் இத்திரைப்படம் உருவாகும் என்று மனோஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இசைக்கு முக்கியத்துவம் கொண்ட இக்கதையில் இளையராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும் முக்கிய பங்காற்றும் என்றும் மனோஜ் பாரதிராஜா கூறியுள்ளார்.
இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா நடிப்பில் இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் புதிய திரைப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது.
The post ’’31 ஆண்டுகளுக்கு பின் இணையும் பாரதிராஜா – இளையராஜா..!’’ first appeared on Madras Murasu.
]]>The post ‘’இசைக் கடவுள், எங்கள் ராகதேவன் இளையராஜா..!’’ பிறந்தநாளை முன்னிட்டு காலில் விழுந்து ஆசி பெற்றார் அண்ணாமலை first appeared on Madras Murasu.
]]>இசைஞானி இளையராஜாவுக்கு ஜுன் 2-ம் தேதி பிறந்தநாள், அன்றைய தினம் தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை வெளியூர் பயணத்தில் இருந்ததால் அவரால் சென்னையில் இளையராஜா வீட்டுக்கு நேரில் சென்று வாழ்த்து சொல்ல முடிய வில்லை. இந்நிலையில் சென்னை திரும்பிய கே.அண்ணாமலை நேற்று சென்னை திரும்பினார். உடனே, இளையராஜா வீட்டுக்கு சென்று நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார்.
இதையடுத்து கே.அண்ணாமலை, வெளியிட்ட அறிக்கையில், ‘’இன்று மாலை, இசைஞானி இளையராஜா அவர்களது இல்லத்துக்குச் சென்று, அவரை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. திருவாசகத்தை சிம்பொனி வடிவில் தந்து, நம் மனதை இசையால் உருக்கிய கலைத்தாயின் தலைமகனை தரிசித்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
காலங்கள், கடவுள் பாடும் ராகங்கள் என்ற கவிஞர் கண்ணதாசன் வரிகளை, இசைஞானி அவர்களது இசை, இன்னும் பல நூறு தலைமுறைகளுக்கும் ஒலித்து மெய்ப்பிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது. மொழி, இனப் பாகுபாடின்றி, மக்களின் எல்லா வித உணர்வுகளுக்குமான தீர்வாக விளங்கும் இசைக் கடவுள், எங்கள் ராகதேவன் இளையராஜா அவர்கள், நீண்ட காலம் தமது இசையால் நம் அனைவரையும் ஆற்றுப்படுத்த வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்’’ என்று கூறியிருந்தார்.

முன்னதாக, இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்ட வாழ்த்து அறிக்கையில், ‘’
தமிழ் சினிமாவின் இசை என்னும் நாடிக்கு உயிர்கொடுத்தவர் இசைஞானி இளையராஜா. இசை அன்னையின் செல்லப்பிள்ளை என்று அனைவராலும் அழைக்கப்படுபவர். தனது 14 வயதிலேயே இசைவாழ்க்கையை துவங்கியவர். ஆரம்பத்தில் தனது சகோதரர்களோடு நாடகத்தோடு இணைந்த நாட்டுப்புறக்கலை மூலம் தனது இசை விருந்தை மக்களுக்களித்து வந்தார்.
திரையுலகில் காலடியெடுத்து வைத்து, அனைவரையும் தனது இசையின் பிடியில் வசீகரம் செய்தார். அவரது பாடல்களுக்கு மயங்காதவர் யாரும் உண்டோ. அவரது பாடல்களுக்கு நானும் ஒரு மிகச்சிறந்த ரசிகன். இளையராஜா பாடல்கள் என்றாலே ஆர்மோனியம் துவங்கி ஐபோன் வரை இல்லாமல் இருக்கவே முடியாது. முதன்முதலில் தமிழில் கணினி முறை இசையை ‘புன்னகை மன்னன்’ படம் மூலம் கொண்டு வந்தவர் இசைஞானி இளையராஜா அவர்கள். அவரது பாடலான முதல் மரியாதை பட பாடல், சீனாவின் ரேடியோ ஒன்றில் சிறந்த பாடலாக தேர்வானது.

1,000 படங்களுக்கு மேல் இசையமைத்தும், 20,000 கச்சேரிகள் செய்தும் தனது திறமையை உலகுக்கு வெளிப்படுத்திய இசைஞானி அவர்கள், இந்திய சினிமாவின் 100 ஆண்டு விழாவை முன்னிட்டு CNN – IBN நடத்திய கருத்துக் கணிப்பில் நாட்டின் தலைசிறந்த திரைப்பட இசையமைப்பாளர் என தேர்ந்தெடுக்கப்பட்டது அனைவரும் அறிந்த ஒன்று. அவர் ஒரு நல்ல இசையமைப்பாளர் என்பது யாவரும் அறிந்த ஒன்றே. ஆனால் அவர் ஒரு சிறந்த எழுத்தாளர் என்பது இப்போது இருக்கும் இளைய சமுதாயத்திற்கு அவ்வளவாக தெரிய வாய்ப்பில்லை.
பால் நிலா பாதை, யாருக்கு யார் எழுதுவது?, எனக்கு எதுவோ உனக்கு அதுவே, சங்கீத கனவுகள், யாதுமாகி நின்றாய், ஆதிசங்கரரின் விவேக சூடாமணி, உனக்குத் திரை எது? போன்ற புத்தகங்கள் மூலம் அவரது ஆன்மீகம் மற்றும் முற்போக்கு சிந்தனைகளை அறிய முடியும். பத்ம பூஷன் விருது, கலைமாமணி விருது, லதா மங்கேஷ்கர் விருது, 2018இல் பத்ம விபூஷண் விருது என பல விருதுகளைப் பெற்றுள்ளார். தற்போது இந்தியப் பாராளுமன்ற மேலவை உறுப்பினராக இசையோடு இணைந்து பொதுவாழ்க்கையிலும் அவரது சேவை சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்’’ என்று வாழ்த்தி இருந்தார்.
பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலைக்கு ஜுன் 4-ம் தேதி பிறந்தநாள். அவருக்கு பொன்னார், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்து இருந்தனர். தனக்கு வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி என்று அறிக்கையில் சொல்லி இருந்தார்.

அந்த அறிக்கையில், ‘’இன்றைய தினம், எனக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறி, இந்த நாளை மிகச் சிறப்பானதொரு நாளாக மாற்றிய தமிழக பாஜக சகோதர சகோதரிகள், என் மேல் அன்பு கொண்ட கட்சி சாரா மற்றும் மாற்றுக் கட்சி சகோதர சகோதரிகள் மற்றும் என் நலம் விரும்பும் நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது தேசத்திற்கான சேவையில், உங்கள் அனைவருடன் இணைந்து பணியாற்றுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அனைவருக்கும் சமமான சமுதாயத்தை உருவாக்க ஒன்றிணைந்து உழைப்போம்.
ஜெய் ஹிந்த்!
இந்நிலையில்தான் இசைஞானி இளைஞராஜாவை நேரில் சந்தித்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி விட்டு அவரது காலி விழுந்து தனது பிறந்தநாளுக்கான ஆசியை பெற்றார் கே.அண்ணாமலை.
The post ‘’இசைக் கடவுள், எங்கள் ராகதேவன் இளையராஜா..!’’ பிறந்தநாளை முன்னிட்டு காலில் விழுந்து ஆசி பெற்றார் அண்ணாமலை first appeared on Madras Murasu.
]]>The post ‘’நீங்கள் எப்போதும் இராஜாதான்! வாழ்க நூறாண்டுகள் கடந்து..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.
]]>
The post ‘’நீங்கள் எப்போதும் இராஜாதான்! வாழ்க நூறாண்டுகள் கடந்து..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.
]]>