acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ’’அதற்காக முதலில் இந்தியாவுக்காகப் பேசுவோம்..! முதல்வர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.
]]>தமிழ்நாட்டின் முதலமைச்சராக – இந்திய நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருக்கும், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், உங்களில் ஒருவனாக, இந்தியாவிற்காகப் பேசப் போவதுதான் இந்த ‘பாட்காஸ்ட் சீரிசின்’ நோக்கம்.
இந்தியாவிற்காக எல்லோரும் பேசியாக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். காலம் காலமாக, இந்திய மக்கள் அனைவரும் போற்றிப் பாதுகாத்து வந்த ஒற்றுமை உணர்வு என்ற தத்துவத்தை சிதைத்து, இந்தியாவின் அடிப்படைக் கட்டமைப்பையே சிதைக்க பாரதீய ஜனதா கட்சி முயற்சி செய்கிறது.
2014-ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பாரதீய ஜனதா கட்சி – தேர்தலுக்கு முன்னால் கொடுத்த எந்த மக்கள் நல வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.
* வெளிநாட்டில் இருந்து கருப்புப் பணத்தை மீட்டு வந்து ஆளுக்கு 15 லட்சம் ரூபாய் தருவோம்.
* ஆண்டுதோறும் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு.
* உழவர்களின் வருமானத்தை இரண்டு மடங்கு ஆக்குவோம்.
* சொந்த வீடு இல்லாதவர்களே இருக்க மாட்டார்கள்.
* இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாறும்.
இப்படி எல்லாம் வாயால் வடை சுட்டார்கள். பத்து ஆண்டு ஆகப் போகிறது. ஆனால் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. ‘குஜராத் மாடல்’ என்று பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி மாடல் – இப்போது என்ன ‘மாடல்’ என்றே தெரியாமல் முடியப் போகிறது!
திராவிட மாடல் என்னென்ன சாதனைகளைத் தமிழ்நாட்டில் செய்திருக்கிறார்கள் என்று நாம் புள்ளிவிவரத்தோடு அடுக்கிய பிறகு, அவர்கள் பெருமையாகப் பேசிவந்த ‘குஜராத் மாடல்’ பற்றி, இப்போது மறந்தும் கூட பேசுவதில்லை.
இது ஒரு பக்கம் என்றால் – இன்னொரு பக்கம், நன்றாக இருந்த இந்தியாவின் பொதுத்துறை கட்டமைப்பையும் சீரழித்து, சின்னாபின்னமாக்கிவிட்டார்கள். தங்களுக்கு நெருக்கமான தொழிலதிபர்களுக்கு அதை மடைமாற்றும் செயலை மட்டுமே செய்துகொண்டு இருக்கிறார்கள். ஒட்டுமொத்த இந்திய மக்களின் நலன் என்பது – சிலரின் நலனாக சுருங்கிவிட்டது. அரசுக்குச் சொந்தமான ‘ஏர் இந்தியா’ நிறுவனம், இப்போது தனியாருக்கு விற்கப்பட்டுவிட்டது.
இந்தியா முழுவதும் இருக்கும் விமான நிலையங்களும், துறைமுகங்களும் தனியார் கைக்குப் போகிறது. பிரதமர் மோடி சொன்னதுபோல், உழவர்களின் வருமானமும் இரண்டு மடங்கு ஆகவில்லை; ஏழை பாழைகளின் வாழ்க்கைத்தரமும் உயரவில்லை. இதை எல்லாம் மறைப்பதற்காகத்தான் மதவாதத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள். மக்களின் மத உணர்வுகளைத் தூண்டி, அதில் குளிர் காயப் பார்க்கிறார்கள்.
2002-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க. விதைத்த வன்முறை, வெறுப்பு விதையானது, 2023-ஆம் ஆண்டு வடகிழக்கு மாநிலமான மணிப்பூரைப் பற்றி எரிய வைத்திருக்கிறது. ஹரியானாவில் மூட்டிவிடப்பட்ட மதவெறித் தீ, இன்றைக்கு அப்பாவி மக்களின் உயிரையும் சொத்துகளையும் காவு வாங்குகிறது. இதற்கு இப்போது முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்றால், இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது.
இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு – கூட்டாட்சித் தத்துவத்திற்கு – மக்களாட்சி மாண்புக்கு எப்போதெல்லாம் ஆபத்து வந்திருக்கிறதோ, அப்போதெல்லாம் முன்னணிப் படையாக தி.மு.க. நின்றிருக்கிறது. இதைத்தான் “You should take the DMK as the spearhead of the opposition to the unitary nature…” என்று பேரறிஞர் அண்ணா மாநிலங்களவையில் முழங்கி இருக்கிறார்..
“தமிழ்நாட்டில் கால் பதித்து நின்று இந்தியாவிற்காகப் பேசும் கட்சியாக நமது இயக்கம் இயங்க வேண்டும்” என்று சொன்னதோடு மட்டுமில்லாமல், ஆட்சி மாற்றங்களையே உருவாக்கிக் காட்டி இருக்கிறார் தமிழினத் தலைவர் கலைஞர். பிரதமர்களை – குடியரசுத் தலைவர்களை உருவாக்கிய இயக்கம் தி.மு.க. இப்போது மீண்டும் ஒரு வரலாற்றுக் கடமை நம்மை நோக்கி வந்துகொண்டு இருக்கிறது.
2024 தேர்தல் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விட – யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்று தீர்மானிக்க வேண்டிய தேர்தல். 9 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில், மாநிலங்களை அழிக்கின்ற படுபாதகமான பல மோசடிகள் செய்யப்பட்டிருக்கிறது.
மாநிலங்களின் நிதி உரிமையை முழுவதுமாக பறித்துவிட்டது ஜி.எஸ்.டி. இதனால், தமிழ்நாட்டிற்கு நிதி சுயாட்சி உரிமை பறிபோனதுதான் மிச்சம். ஜி.எஸ்.டி இழப்பீட்டை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று மாநிலங்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் ஒன்றிய அரசு அதை ஏற்கவில்லை.
ஒன்றிய அரசுக்கு வரியாக, தமிழ்நாடு ஏராளமான நிதியை ஆண்டுதோறும் தருகிறது. அதே நேரத்தில், தமிழ்நாடு ஒன்றிய அரசிற்கு வரி வருவாயாக செலுத்துகிற ஒவ்வொரு ரூபாய்க்கும் ஈடாக, 29 பைசா மட்டுமே திரும்பக் கிடைக்கிறது.
2014 முதல் கடந்த ஆண்டு வரை நம் மாநிலம் ஒன்றிய அரசுக்கு கொடுத்த வரி 5 லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால், வரிப் பகிர்வாக, நமக்குத் திரும்ப கிடைத்தது என்னவோ, வெறும் 2 லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாய்தான்.
பெற்றதை முழுவதுமாகத் தர முடியாது என்று சொன்னால் – பா.ஜ.க. ஆளுகிற மாநிலத்திற்கு மட்டும் எப்படி கொடுக்க முடிகிறது? பா.ஜ.க. ஆளும் ஒரு மாநிலம் 2 லட்சத்து 24 ஆயிரம் கோடி ரூபாய்தான் வரியாகக் கொடுத்திருக்கிறது. ஆனால் வரிப் பகிர்வாக, 9 லட்சத்து 4 ஆயிரம் கோடி ரூபாய் பெற்றிருக்கிறது. இதைத்தான் ஓரவஞ்சனை என்று சொல்கிறோம். இவ்வாறு எதிர்க்கட்சிகளைப் பழிவாங்கும் ஆட்சியாக ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி இருக்கிறது.
ஒன்றிய நிதிக்குழு ஒதுக்கீட்டில் தமிழ்நாடு தொடர்ந்து பெரும் நிதி இழப்பைச் சந்தித்து வருகிறது. 12-ஆவது நிதிக்குழுவில் 5.305 விழுக்காடாக இருந்த நிதி ஒதுக்கிடு, 15-ஆவது நிதிக் குழுவில் 4.079 விழுக்காடாக குறைந்திருக்கிறது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு இழக்கின்ற நிதி கொஞ்சம் நஞ்சமல்ல. நமக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய 72,311 கோடி ரூபாயை நாம் இழந்திருக்கிறோம்.
பல திட்டங்களுக்கான பெரும் பங்கு மாநில அரசால்தான் வழங்கப்படுகிறது. ஆனால் அதற்கான பெயர் மட்டும் ஒன்றிய அரசுக்கு வேண்டும் என்று நினைக்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு முத்திரைத் திட்டங்கள் என்று ஒன்று கூட இந்த 9 வருடங்களில் தரவில்லை. மாநிலங்களைப் பழிவாங்குகிற அரசாக இப்போதைய ஒன்றிய பா.ஜ.க. அரசு இருக்கிறது.
மக்களுக்கு நேரடியாக நன்மை செய்ய வேண்டிய பொறுப்பில் இருக்கிற மாநில அரசுகளை சிதைப்பதையே நோக்கமாக வைத்திருக்கிறார்கள். இது மூலமாக ஒட்டுமொத்த இந்தியாவையும் சிதைக்கப் பார்க்கிறார்கள்.
Social justice, Secular politics, Socialism, Equity, Social harmony, State autonomy, Federalism, Unity in diversity – இவை உயிர்வாழும் இந்தியாதான் உண்மையான இந்தியா! இணையற்ற இந்தியா! அப்படிப்பட்ட இந்தியாவை மீட்டெடுக்கத்தான் இந்தியா கூட்டணியை உருவாக்கியிருக்கிறோம். இந்தியாவைக் காப்பாற்றப் போவது இந்த INDIA கூட்டணிதான்.
பா.ஜ.க.வின் வகுப்புவாத – வெறுப்பு அரசியலுக்கு மணிப்பூரும் ஹரியானாவும் பலியானதைப்போல மொத்த இந்தியாவும் பலியாகிவிடாமல் தடுக்க வேண்டும் என்றால், INDIA கூட்டணி வெல்ல வேண்டும்.
இதற்கான ஆரம்பகட்ட ஆலோசனைக் கூட்டங்கள் பாட்னாவிலும், பெங்களூரிலும், மும்பையிலும் நடந்துள்ளன. பன்முகத்தன்மை கொண்ட பண்பட்ட இந்தியாவைச் செதுக்குவோம்! இந்தியாவைக் காப்போம். அதற்காக முதலில் இந்தியாவுக்காகப் பேசுவோம்!
இனி இது M.K.STALIN குரலாக மட்டுமல்ல, இந்தியாவின் குரலாக அமையும். எனது குரலை இந்தியாவின் குரலாக எல்லோரிடத்திலும் எடுத்துச் செல்லுங்கள்! வெல்க இந்தியா! நன்றி! வணக்கம்!
The post ’’அதற்காக முதலில் இந்தியாவுக்காகப் பேசுவோம்..! முதல்வர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.
]]>The post ’’உலகமே இப்போது இந்தியா சொல்வதைக் உன்னிப்பாக கவனிக்கிறது..!’’ பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் first appeared on Madras Murasu.
]]>வளர்ந்த இந்தியா என்ற எண்ணம் இப்போது வெறும் கனவு அல்ல, அது பிரதமரின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் நிஜமாகி வருகிறது. இப்போது அமெரிக்கா போன்ற ஒரு வல்லரசு, இந்தியப் பிரதமரை வரவேற்கவும், விருந்தளிக்கவும் விடாமுயற்சியுடன் தயாராகி வருவதாகவும், நாட்டின் வெற்றிக் கதையைப் பற்றி வெளிநாட்டு ஊடகங்கள் பேசுகின்றன.
2047 ஆம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை எடுத்துரைத்த பாதுகாப்பு அமைச்சர் அத்தகைய தேசத்தைக் கட்டியெழுப்புவதில் இளம் அரசு ஊழியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. அரசு ஊழியர்கள் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதன் மூலமும், அவர்களுடன் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலமும் மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும்.
ஒரு காலத்தில் சமூகத்தில் அதிகார கலாச்சாரம் இருந்தது, இப்போது நியாயம் செய்தல் கலாச்சாரம் அதிகார கலாச்சாரத்தை முந்தியுள்ளது, ஏனெனில் குடிமக்கள் கல்வி மற்றும் புதிய தகவல்தொடர்பு வழிமுறைகளின் வருகையுடன் அதிக விழிப்புணர்வைக் கொண்டுள்ளனர்.
உங்கள் பகுதியில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுடன் நெருக்கமாக பணியாற்ற வேண்டும். இளம் அரசு ஊழியர்கள் மக்கள் நலனுக்காக எந்த முடிவையும் எடுக்கும்போது சமூகத்தின் கடைசி நபரைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
The post ’’உலகமே இப்போது இந்தியா சொல்வதைக் உன்னிப்பாக கவனிக்கிறது..!’’ பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் first appeared on Madras Murasu.
]]>The post ’’இங்கிலாந்தில் 2025-2031 ஆண்டுகளில் இங்கிலாந்து- இந்தியா டெஸ்ட்..!’’ மைதானங்கள் பெயர் வெளியீடு first appeared on Madras Murasu.
]]>2027 மகளிர் ஆஷஸ் தொடர், ஹெடிங்க்லி மைதானத்தில் நடைபெறும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதே போல, 2027 ஆஷஸ் தொடருக்கான மைதான விவரங்களையும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. லார்ட்ஸ், கியா ஓவல், டிரென்ட் பிரிட்ஜ், ஏஜஸ் பௌல் ஆகிய மைதானங்களில் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
2031 ஆஷஸ் தொடர் லார்ட்ஸ், கியா ஓவல், எமிரேட்ஸ் ஓல்ட் ட்ரஃபோர்டு, ஹெடிங்க்லி, டிரென்ட் பிரிட்ஜ் ஆகிய மைதானங்களில் நடத்தப்பட உள்ளது. ஏஜஸ் பௌல் மைதானத்தில் 2011-ல் முதல் டெஸ்ட் ஆட்டம் நடத்தப்பட்டது. அதில் இங்கிலாந்து, இலங்கை அணிகள் விளையாடின. 2014, 2018 ஆண்டுகளில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் ஆட்டங்கள் இந்த மைதானத்தில் நடத்தப்பட்டுள்ளன. கரோனா ஊரடங்கு காலத்தில் 2020-ல் பயோ-செக்யூர் (Bio-secure) முறையில் மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக டெஸ்ட் ஆட்டங்கள் இங்கு நடைபெற்றன.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான மைதான விவரங்களையும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. 2025-ல் நடைபெற உள்ள ஐந்து ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் லார்ட்ஸ், கியா ஓவல், எட்ஜ்பஸ்டன், ஹெடிங்க்லி, எமிரேட்ஸ் ஓல்ட் டிரஃபோர்ட் ஆகிய மைதாங்களில் நடைபெற உள்ளன. 2029-ல் நடைபெற உள்ள இந்தியாவுக்கு எதிரான ஐந்து ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் லார்ட்ஸ், கியா ஓவல், எட்ஜ்பஸ்டன், எமிரேட்ஸ் ஓல்ட் ட்ரஃபோர்ட், ஏஜஸ் பௌல் ஆகிய மைதானங்களில் நடைபெறுமென இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
The post ’’இங்கிலாந்தில் 2025-2031 ஆண்டுகளில் இங்கிலாந்து- இந்தியா டெஸ்ட்..!’’ மைதானங்கள் பெயர் வெளியீடு first appeared on Madras Murasu.
]]>The post “ஹெட் 146, ஸ்மித் 95 ரன்கள் – இந்திய ரசிகர்களுக்கு முதல் நாள் ஏமாற்றம்..!” first appeared on Madras Murasu.
]]>ஹெட் 146, ஸ்மித் 95 ரன்கள்: முதல் நாளில் ஆஸ்திரேலியா ஆதிக்கம்!
இந்திய அணிக்கும் இந்திய ரசிகர்களுக்கும் முதல் நாள் மிகவும் ஏமாற்றமாக அமைந்துள்ளது
டெஸ்ட் ஆட்டங்களுக்கான தரவரிசையில் முதலிரண்டு இடங்களில் உள்ள இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் விளையாடுகின்றன. ஓவல் மைதானத்தின் புற்கள் நிரம்பிய ஆடுகளம் பந்துவீச்சுக்குச் சாதகமாக இருக்கும் எனக் கூறப்பட்டது. அதன்படியே, டாஸ் வென்ற ரோஹித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார் (இந்த முடிவே முதல் நாள் இறுதியில் கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது என்பது வேறு விஷயம்).
4 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் களமிறங்குவதாக ரோஹித் தெரிவித்தார். அணியில் அஸ்வின் தேர்வாகவில்லை. ஒடிசா ரயில் விபத்துத் துயரத்தை முன்னிட்டு இரு அணி வீரர்களும் கருப்பு நிறப் பட்டையுடன் களமிறங்கினார்கள். ஷமி, சிராஜின் முதலிரண்டு ஓவர்களில் ஆஸ்திரேலியத் தொடக்க வீரர்கள் சற்றே தடுமாறினார்கள்.
சிராஜின் அட்டகாசமான வாபிள் ஸீமில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட்டனார் உஸ்மான் கவாஜா. முதல் 13 ஓவர்களில் ஷமியும் சிராஜும் 60 சதவீத பந்துகளை குட் லெங்தில் வீசினார்கள். இதனால் சொற்பமாகவே ஆஸி வீரர்களால் ரன் எடுக்க முடிந்தது. இதன் காரணமாக உமேஷ் யாதவைக் குறிவைத்து அடிக்கத் தொடங்கினார்கள் வார்னரும் லபுஷேனும்.
உமேஷ் வீசிய 15-வது ஓவரில் நான்கு பவுண்டரிகளைப் பறக்கவிட்டார் வார்னர். ஸ்டம்புக்கு வெளியே வீசப்படும் பந்துகளுக்குக் காத்திருந்த வார்னருக்கு அதிர்ச்சி கொடுத்தார் தாக்குர். 60 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த வார்னர், லெக் சைடில் கீப்பர் கே.எஸ். பரத்தின் அற்புதமான கேட்சில் ஆட்டமிழந்தார். முதல் பகுதியில், இரு விக்கெட்டுகளை இழந்து 73 ரன்களை எடுத்தது ஆஸ்திரேலியா.
உணவு இடைவெளிக்குப் பிறகு நம்பிக்கையுடன் ஆட்டத்தைத் தொடங்கியது இந்தியா. 2 எல்பிடபிள்யூ ரெவ்யூக்களில் தப்பித்த லபுஷேன் 26 ரன்கள் எடுத்து ஷமி வீசிய கச்சிதமான ஸ்விங்கில் ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்தார். தொடக்கத்தில் வானிலை மேகமூட்டத்துடன் இருந்தாலும் சில மணி நேரங்களில் நல்ல வெயில் அடிக்கத் தொடங்கியது. இது பேட்டர்களுக்கு சாதகமாக அமைந்தது. இதனால் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த ரோஹித் சர்மா, முதல் நாளிலேயே விமர்சனங்களை எதிர்கொண்டார்.
டிராவிஸ் ஹெட் வேகமாக ரன்களைச் சேர்த்தார். ஸ்மித்துடனான கூட்டணிக்கு நல்ல ஒத்துழைப்பைத் தந்தார். நிறைய பந்துகள் பேட்டின் விளிம்பில் பட்டாலும், அவை நேரடியாக ஃபீல்டரிடம் செல்லவில்லை. ரன் குவிப்புக்கு மத்தியில் ஆடுகளம் இன்னும் பந்துவீச்சாளர்களுக்கு உதவுகிறது என்பதை இவை உணர்த்தின. ஆனால் ஹெட் – ஸ்மித் கூட்டணி முதல் நாள் ஆட்டத்தை முழுவதுமாக ஆஸ்திரேலியா பக்கம் திருப்பியது.
39-வது ஓவரில் ரவீந்திர ஜடேஜா அறிமுகமானார். இது ஆட்டத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. ஒருநாள் ஆட்டம் போல விளையாடிய ஹெட் தனது 60-வது பந்தில் அரை சதத்தை அடித்தார்.
தேநீர் இடைவேளையில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. உணவு இடைவேளைக்குப் பிறகு 97 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியாவுக்கு இது சிறப்பான பகுதியாக அமைந்தது.
ஆடுகளம் பேட்டர்களுக்கு சாதகமாக மாறுவதை உணர்ந்த ஹெட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 99 ரன்களில் இருந்த போது ஷமி மற்றும் சிராஜ் ஆகிய இருவரும் பவுன்சர்களாக வீசினர். சமாளித்து விளையாடிய ஹெட் 106 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்தார்.
இருவரது திட்டமும் தெளிவாக இருந்தது. தவறான பந்துகளுக்குக் காத்திருந்து அடித்தனர். ரோஹித் சர்மா பந்து வீச்சாளர்களைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருந்தார். ஆனால், ஸ்மித் – ஹெட் இணை நங்கூரமிட்டது போல நிலைத்து நின்றது.
முதல் நாள் ஆட்டத்தைப் பொறுத்தவரையில் டாஸைத் தவிர ஆஸ்திரேலிய அணி வேறு எதிலும் சரிவை சந்திக்கவில்லை என வர்ணனையில் தினேஷ் கார்த்திக் குறிப்பிட்டார். ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 327 ரன்களைக் குவித்தது. ஸ்மித் 95 ரன்களுடனும் டிராவிஸ் ஹெட் 146 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்திய அணிக்கும் இந்திய ரசிகர்களுக்கும் முதல் நாள் மிகவும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. ஆனால் டி20 பவர்பிளேயில் முடிவு செய்யப்படுவது போல டெஸ்ட் கிரிக்கெட்டைக் கருத முடியாது. முதல் நாளில் மோசமாக விளையாடிய அணிகள், அடுத்தடுத்த நாள்களில் புதுவேகம் பெற்று வெற்றிகளைப் பெற்றுள்ளன. முதல் நாளில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் 109 தவறான ஷாட்களை ஏற்படுத்தியுள்ளார்கள். அவற்றில் மூன்று மட்டுமே விக்கெட்டுகளாகக் கிடைத்துள்ளன.
முதல் 77 பந்துகளில் 17 பந்துகளைச் சரியாக விளையாடவில்லை ஹெட். கடைசிப் பகுதியில் தான் இந்தியப் பந்துவீச்சாளர்கள் நிறைய ரன்களைக் கொடுத்தார்கள். ஷமியும் சிராஜும் நன்குப் பந்துவீசினார்கள். இந்திய அணி புதிய நம்பிக்கையுடன் 2-ம் நாளில் களமிறங்க வேண்டும்.
The post “ஹெட் 146, ஸ்மித் 95 ரன்கள் – இந்திய ரசிகர்களுக்கு முதல் நாள் ஏமாற்றம்..!” first appeared on Madras Murasu.
]]>