Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#அரசுவேலை - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Sun, 28 Apr 2024 07:12:31 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ’’மாவட்ட நீதிமன்றங்களில் 2329 வேலை..!’’ 8, 10 படிப்பு போதும் – எழுத படிக்க தெரிந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f-%25e0%25ae%25a8%25e0%25af%2580%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25ae%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25ae%25bf%25e0%25ae%25b2 https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2/#respond Sun, 28 Apr 2024 07:10:44 +0000 https://madrasmurasu.com/?p=9015 தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 பேர் போட்டித்தேர்வு மூலம் பணியில் நியமிக்கப்பட இருக்கிறார்கள் என்று மெட்ராஸ் உயர்நீதிமன்றம் ஆள்சேர்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 28 ஆம் தேதியில் இருந்து மே 27 ஆம் தேதி வரை மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் இணையத்தளம் வாயிலாக மட்டுமே, இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். 8, 10 ஆகிய வகுப்பு பாஸ் ஆனவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தூய்மைப் பணியாளர், தோட்டப் பணியாளர், காவலர், வாட்டர்மென், வாட்டர் உமன், மசால்ஜி ஆகிய வேலைக்கு […]

The post ’’மாவட்ட நீதிமன்றங்களில் 2329 வேலை..!’’ 8, 10 படிப்பு போதும் – எழுத படிக்க தெரிந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.

]]>
தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 பேர் போட்டித்தேர்வு மூலம் பணியில் நியமிக்கப்பட இருக்கிறார்கள் என்று மெட்ராஸ் உயர்நீதிமன்றம் ஆள்சேர்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 28 ஆம் தேதியில் இருந்து மே 27 ஆம் தேதி வரை மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் இணையத்தளம் வாயிலாக மட்டுமே, இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். 8, 10 ஆகிய வகுப்பு பாஸ் ஆனவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தூய்மைப் பணியாளர், தோட்டப் பணியாளர், காவலர், வாட்டர்மென், வாட்டர் உமன், மசால்ஜி ஆகிய வேலைக்கு விண்ணப்பிப்போருக்கு, தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருந்தால் போதும்.

டிரைவர், நகல் பிரிவு உதவியாளர் Copyist Attender, அலுவலக உதவியாளர் Office Assistant ஆகிய வேலைகளுக்கு எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். டிரைவர் வேலைக்கு விண்ணப்பிப்போர், மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட மோட்டார் வாகனம் ஓட்டுவதற்குரிய, செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும், வாகனம் ஓட்டும் முன் அனுபவம் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் இருக்க வேண்டும்.

Examiner – நகல் பரிசோதகர், Junior Bailif – இளநிலை கட்டளை நிறைவேற்றுனர், (Process writer – கட்டளை எழுத்தர், Xerox Operator – ஒளிப்பட நகல் எடுப்பவர் ஆகிய வேலைக்கு விண்ணப்பிப்போர் 10 ஆம் வகுப்பு பாஸ் ஆகி இருக்க வேண்டும். ஜெராக்ஸ் ஆபரேட்டர் வேலைக்கு விண்ணப்பிப்போருக்கு ஜெராக்ஸ் எந்திரத்தை இயக்கும் முன் அனுபவம் இருக்க வேண்டும்.

தூய்மைப் பணியாளர், தோட்டப் பணியாளர், காவலர், காவலர் மற்றும் மசால்ஜி, துப்புறவுப் பணியாளர் மற்றும் மசால்ஜி, வாட்டர்மென், வாட்டர் உமன், மசால்ஜி ஆகிய வேலைக்கு விண்ணப்பிப்போருக்கு, தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

இந்த வேலைகளுக்கு விண்ணப்பத்தாரர்கள் 2024 ஆம் ஆண்டு ஜுலை 1 ஆம் தேதி அன்று 18 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும். தமிழ்நாடு அரசின் விதிகளின் படி அதிகபட்ச வயது வரம்பில் சாதிவாரியாக சலுகைகள் அறிக்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிட வகுப்பினர், பழங்குடியின வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் ஆகியோர் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டியதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. . மற்ற வகுப்பினர் தேர்வுக் கட்டணமாக 500 ரூபாய் செலுத்த வேண்டும்.

எழுத்து தேர்வு, செய்முறைத் தேர்வு, வாய்வழித் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல் என்ற நிலைகளில் போட்டித்தேர்வு முடிவுகள் வெளியாகும். இந்த வேலைவாய்ப்பு குறித்த முழுமையான அறிவிக்கையை https://www.mhc.tn.gov.in/ என்ற தளத்தில் பார்க்க வேண்டும். இந்த இணையத்தளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதாவது, ஏப்ரல் 28 ஆம் தேதியில் இருந்து மே 27 ஆம் தேதி வரை மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் இணையத்தளம் வாயிலாக மட்டுமே, விண்ணப்பிக்க வேண்டும்.

The post ’’மாவட்ட நீதிமன்றங்களில் 2329 வேலை..!’’ 8, 10 படிப்பு போதும் – எழுத படிக்க தெரிந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2/feed/ 0
’’முடிவுகளை வெளியிடுவதில் மட்டுமல்ல; தேர்வுகளை நடத்துவதிலும் டிஎன்பிஎஸ்சி செயல்திறன் இன்மை..! டாக்டர் அன்புமணி குற்றச்சாட்டு https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25b5%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%2588-%25e0%25ae%25b5%25e0%25af%2586%25e0%25ae%25b3%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%259f%25e0%25af%2581%25e0%25ae%25b5%25e0%25ae%25a4%25e0%25ae%25bf https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%bf/#respond Wed, 08 Nov 2023 04:14:19 +0000 https://madrasmurasu.com/?p=7432 ’’முடிவுகளை வெளியிடுவதில் மட்டுமல்ல; தேர்வுகளை நடத்துவதிலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதன் செயல்திறன் இன்மையை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது’’ என்று டாக்டர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். பாமக தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசுத் துறைகளில் தொகுதி 2, 2 ஏ பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்ட போட்டித் தேர்வுகளின் முடிவுகள் இன்று வரையிலும் வெளியிடப்படவில்லை. தமிழக அரசின் முக்கியப் பணிகளுக்கு பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறையில் அரசுப் பணியாளர் […]

The post ’’முடிவுகளை வெளியிடுவதில் மட்டுமல்ல; தேர்வுகளை நடத்துவதிலும் டிஎன்பிஎஸ்சி செயல்திறன் இன்மை..! டாக்டர் அன்புமணி குற்றச்சாட்டு first appeared on Madras Murasu.

]]>
’’முடிவுகளை வெளியிடுவதில் மட்டுமல்ல; தேர்வுகளை நடத்துவதிலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதன் செயல்திறன் இன்மையை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது’’ என்று டாக்டர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.

பாமக தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசுத் துறைகளில் தொகுதி 2, 2 ஏ பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்ட போட்டித் தேர்வுகளின் முடிவுகள் இன்று வரையிலும் வெளியிடப்படவில்லை. தமிழக அரசின் முக்கியப் பணிகளுக்கு பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறையில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது ஆகும்.
தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள இரண்டாம் தொகுதி பணியிடங்கள் 121, தொகுதி 2ஏ பணியிடங்கள் 5097 ஆகியவற்றை நிரப்புவதற்கான ஆள்தேர்வு அறிவிக்கை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 23-ஆம் நாள் வெளியிடப்பட்டது. அத்தேர்வுகளில் பங்கேற்பதற்காக விண்ணப்பித்த 11.78 லட்சம் பேரில், 9.94 லட்சம் பேர் கடந்த ஆண்டு மே மாதம் 21-ஆம் நாள் நடத்தப்பட்ட முதனிலைத் தேர்வை எழுதினார்கள். அவர்களில் இருந்து ஒரு பணிக்கு 10 பேர் வீதம் 52,180 பேர் முதன்மைத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடந்த பிப்ரவரி 25-ஆம் நாள் நடத்தப்பட்ட முதன்மைத் தேர்வுகளை அவர்களில் பெரும்பான்மையினர் எழுதினர். அத்தேர்வுகளின் முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதமே வெளியிடப் படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 9 மாதங்களாகியும் இன்று வரை வெளியிடப்படவில்லை.

தொகுதி 2, 2 ஏ பணிகளுக்கான முதன்மைத் தேர்வு முடிவுகளை 9 மாதங்களாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடாமல் இருப்பதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை. முதன்மைத் தேர்வை எழுதியவர்கள் வெறும் 52,000 பேர் மட்டும் தான். முதன்மைத் தேர்வில் ஒவ்வொரு போட்டியாளரும் 2 தாள்களை எழுத வேண்டும்; அதன்படி மொத்தம் 1.04 லட்சம் விடைத்தாள்களை திருத்த வேண்டும். அவை அனைத்தும் இரண்டே வகைப்பட்டவை தான். அவற்றை மிக எளிதாக திருத்தி விட முடியும். ஆனாலும், அப்பணியை அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்யவில்லை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி 2 பணிகளுக்கு முதன்மைத் தேர்வு நடத்தி 7 மாதங்கள் கழித்து கடந்த செப்டம்பர் மாத இறுதியில் தான், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் குடிமைப் பணிகளுக்கான முதன்மைத் தேர்வுகளை நடத்தியது. அந்தத் தேர்வுகளில் 14,624 தேர்வர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொருவரும் 9 தாள்களை எழுதினார்கள். அதன்படி, மொத்தம் 1 லட்சத்து 34,616 தாள்கள் திருத்தப்பட வேண்டும். அந்த தாள்கள் மொத்தம் 4 வகையானவை. அனைத்துத் தாள்களையும் அக்டோபர் மாதத்தில் திருத்தி கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி முடிவை அறிவித்திருக்கிறது மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம். ஆனால், அதைவிட குறைவான பணிச்சுமை கொண்ட தொகுதி 2 முதன்மைத் தேர்வுகளின் முடிவுகளை 9 மாதங்களாகியும் வெளியிட முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். இதிலிருந்தே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயல்பாட்டு வேகத்தை மக்கள் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.

முடிவுகளை வெளியிடுவதில் மட்டுமல்ல; தேர்வுகளை நடத்துவதிலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதன் செயல்திறன் இன்மையை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. கடந்த பிப்ரவரி 25 ஆம் நாள் நடைபெற்ற முதன்மைத் தேர்வுகளின் போது, பெரும்பான்மையான மையங்களில் மிகவும் தாமதமாக தேர்வு தொடங்கப்பட்டதுடன், பல இடங்களில் தேர்வர்களுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டு, அவற்றின் பதிவு எண்கள் தவறாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் திரும்ப பெறப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட குழப்பம், மன உளைச்சலால் பல தேர்வர்கள் சரியாக தேர்வு எழுத முடியவில்லை.

தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்கள், அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளை பொழுதுபோக்குக்காக எழுதுவதில்லை. அதில் தான் தங்களின் எதிர்காலம் இருப்பதை உணர்ந்து பல ஆண்டுகள் உழைத்து தேர்வுக்கு தயாராகின்றனர். அந்தத் தேர்வுகளை நடத்துவதிலும், முடிவுகளை வெளியிடுவதிலும் செய்யப்படும் தாமதமும், குளறுபடிகளும் தேர்வர்களின் எதிர்காலத்தை பாதிக்கும்.
இந்தியாவின் மிகக் கடுமையான குடிமைப் பணித் தேர்வுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் எந்தக் குழப்பமுமின்றி 10 மாதங்களில் நடத்தி முடிவை வெளியிடுகிறது. ஆனால், நான்காம் தொகுதி தேர்வுகளை நடத்தி முடிக்க இரு ஆண்டுகளை எடுத்துக் கொள்ளும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், அறிவிக்கப்பட்டு 21 மாதங்களாகியும் தொகுதி 2 தேர்வு நடைமுறைகளை முடிக்க வில்லை. கண்ணுக்குத் தெரியக் கூடிய இக்குறைகளை ஆணையம் சரி செய்து கொள்ள வேண்டும்.

தேர்வர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொகுதி 2, 2ஏ முதன்மைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உடனடியாக வெளியிட வேண்டும். அதுமட்டுமின்றி, இனிவரும் காலங்களில், தொகுதி 1, தொகுதி 2, 2ஏ ஆகிய தேர்வுகளை அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 10 மாதங்களுக்குள்ளாகவும், பிற தேர்வுகளை அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 6 மாதங்களிலும் நடத்தி முடித்து, முடிவுகளை வெளியிட பணியாளர் தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post ’’முடிவுகளை வெளியிடுவதில் மட்டுமல்ல; தேர்வுகளை நடத்துவதிலும் டிஎன்பிஎஸ்சி செயல்திறன் இன்மை..! டாக்டர் அன்புமணி குற்றச்சாட்டு first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%bf/feed/ 0
’’விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை..!’’ அக்டோபர் 31 கடைசி நாள் https://madrasmurasu.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b3%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%2581-%25e0%25ae%25b5%25e0%25af%2580%25e0%25ae%25b0%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d https://madrasmurasu.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d/#respond Fri, 06 Oct 2023 05:05:30 +0000 https://madrasmurasu.com/?p=6628 ’’விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்களில் (PSUs) 3 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதற்னான விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து உரிய  இணைப்புகளுடன்  31.10.2023-ம்  தேதி மாலை 5.00 மணிக்குள் மேற்காணும் இணையதள முகவரி அல்லது நேரு விளையாட்டரங்கில் இயங்கிவரும் தலைமை அலுவலகத்தில் நேரிலும் விண்ணப்பிக்க வேண்டும்’’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் விளையாட்டு மற்றும் விளையாட்டு வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு […]

The post ’’விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை..!’’ அக்டோபர் 31 கடைசி நாள் first appeared on Madras Murasu.

]]>
’’விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்களில் (PSUs) 3 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதற்னான விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து உரிய  இணைப்புகளுடன்  31.10.2023-ம்  தேதி மாலை 5.00 மணிக்குள் மேற்காணும் இணையதள முகவரி அல்லது நேரு விளையாட்டரங்கில் இயங்கிவரும் தலைமை அலுவலகத்தில் நேரிலும் விண்ணப்பிக்க வேண்டும்’’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் விளையாட்டு மற்றும் விளையாட்டு வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகள் / திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டின்  சார்பாக ஒலிம்பிக் மற்றும் பிற சர்வதேச அளவிலான போட்டிகளில்  பங்கேற்று பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவித்திடும் வகையில் அவர்களுக்கு அரசுத் துறைகள் / பொதுத்துறை நிறுவனங்களில் (PSUs) 3 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுவருகிறது.
இத்திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு பெறுவதற்கு கீழ்காணும் விளையாட்டுப் போட்டிகளில் 01.01.2018 அன்றோ அல்லது அதன் பிறகு பெற்ற சாதனைகள் தகுதியானவையாக கருதப்படும்.
சர்வதேச போட்டிகள் (வெற்றிபெற்றவர்கள் / பங்கேற்றவர்கள்)
கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்.
காமன்வெல்த் விளையாட்டுபோட்டிகள் .
ஆசிய விளையாட்டுப்போட்டிகள்.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் (IOC) அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டு கூட்டமைப்பால் (ISF) 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுதோறும் நடத்தப்படும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள்.
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுக்கு ஒருமுறை, IOC ஆல் அங்கீகரிக்கப்பட்ட ISF இன் கீழ் நடத்தப்படும் காமன்வெல்த் சாம்பியன்ஷிப்கள் போட்டிகள்
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது IOC ஆல் அங்கீகரிக்கப்பட்ட ISF இன் கீழ் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆசிய சாம்பியன்ஷிப்கள் போட்டிகள்
சர்வதேச பார்வையற்றோர் விளையாட்டு சங்கம் (IBSA) காது கேளாதோருக்கான சர்வதேச விளையாட்டுக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக விளையாட்டுகள் மற்றும் காது கேளாதோர் விளையாட்டுகள்.
தேசிய அளவிலான போட்டிகள் (வெற்றிபெற்றவர்கள் மட்டும் )
தேசிய விளையாட்டுப்போட்டிகள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு  அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளால் நடத்தப்படும் தேசிய சாம்பியன்ஷிப் விளையாட்டுப்போட்டிகள்
மாநில அளவிலான சாம்பியன்ஷிப்போட்டிகள் (வெற்றிபெற்றவர்கள் மட்டும் )
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் (SDAT) அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டு சங்கங்கள் நடத்தும் சீனியர் அளவிலான மாநில சாம்பியன்ஷிப் போட்டிகள் மட்டுமே தகுதியான போட்டிகளாக கருத்தப்படும்.
மேலும்  40 வயதிற்குட்பட்டவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற இயலும். விண்ணப்பதாரர் வேலைவாய்ப்பு பெற்றிடுவதற்கான இதர முழு தகுதிகளும் பெற்றிருத்தல் வேண்டும்.
தமிழ்நாட்டினை சார்ந்த விளையாட்டு வீரர் / வீராங்கனைகள் மேற்காணும் வழிகாட்டுதலின்படி 3 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு பெறுவதற்கான விண்ணப்பங்கள் www.sdat.tn.gov.in எனும் இணையதள முகவரியில்  பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
தகுதியான விளையாட்டு வீரர் / வீராங்கனைகள் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து உரிய  இணைப்புகளுடன்  31.10.2023-ம்  தேதி மாலை 5.00 மணிக்குள் மேற்காணும் இணையதள முகவரி அல்லது நேரு விளையாட்டரங்கில் இயங்கிவரும் தலைமை அலுவலகத்தில் நேரிலும் விண்ணப்பித்திடுமாறு  தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post ’’விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை..!’’ அக்டோபர் 31 கடைசி நாள் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d/feed/ 0
’’ஐந்தரை லட்சம் அரசு வேலை வாக்குறுதி அப்படியே தான் உள்ளது..!’’ டாக்டர் அன்புமணி https://madrasmurasu.com/%e0%ae%90%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%88-%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2590%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25b0%25e0%25af%2588-%25e0%25ae%25b2%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25b0%25e0%25ae%259a%25e0%25af%2581-%25e0%25ae%25b5%25e0%25af%2587%25e0%25ae%25b2 https://madrasmurasu.com/%e0%ae%90%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%88-%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2/#respond Fri, 29 Sep 2023 06:19:25 +0000 https://madrasmurasu.com/?p=6604 ’’திமுக வாக்குறுதி அளித்த ஐந்தரை லட்சம் அரசு வேலை குறித்த வாக்குறுதி அப்படியே தான் உள்ளது. அதை நிறைவேற்றுவதை நோக்கி ஓரடி கூட எடுத்து வைக்கப்படவில்லை” என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி கூறியுள்ளார். பாமக தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் திமுக அரசு அமைந்த பிறகு கடந்த இரு ஆண்டுகளில் 12,576 பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டிருப்பதாகவும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 10,205 பேருக்கு நேற்று பணி ஆணைகள் […]

The post ’’ஐந்தரை லட்சம் அரசு வேலை வாக்குறுதி அப்படியே தான் உள்ளது..!’’ டாக்டர் அன்புமணி first appeared on Madras Murasu.

]]>
’’திமுக வாக்குறுதி அளித்த ஐந்தரை லட்சம் அரசு வேலை குறித்த வாக்குறுதி அப்படியே தான் உள்ளது. அதை நிறைவேற்றுவதை நோக்கி ஓரடி கூட எடுத்து வைக்கப்படவில்லை” என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி கூறியுள்ளார்.

பாமக தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டில் திமுக அரசு அமைந்த பிறகு கடந்த இரு ஆண்டுகளில் 12,576 பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டிருப்பதாகவும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 10,205 பேருக்கு நேற்று பணி ஆணைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், அடுத்த இரு ஆண்டுகளில் மேலும் 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்படவிருப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாடு போன்ற பெரிய மாநிலங்களில் கடந்த இரு ஆண்டுகளில் வழங்கப்பட்டதாக கூறப்படும் அரசு வேலைகளின் எண்ணிக்கையும், அடுத்த இரு ஆண்டுகளில் வழங்கப்படவிருப்பதாக கூறப்படும் தமிழக அரசு வேலைகளின் எண்ணிக்கையும் போதுமானவை அல்ல.

தமிழ்நாட்டில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். ஆனால், ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கையில் பாதிக்கும் குறைவாக 22,781 பேருக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்பட்டிருக்கிறது. ஒப்பீட்டளவில் தமிழக அரசு பொறுப்பேற்ற போது இருந்ததை விட இப்போது அரசு பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இது சாதனை அல்ல.

தமிழ்நாட்டில் அனைத்து அரசுத் துறைகளிலும் சேர்த்து 4 லட்சத்திற்கும் கூடுதலான பணியிடங்கள் காலியாக உள்ளன. மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலியிடங்களால் அவற்றின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளுக்கு கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. நடப்பாண்டில், 6553 இடைநிலை ஆசிரியர்கள், 3587 பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 10,140 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தும் இதுவரை ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை. ஆசிரியர்கள் நியமனத்திற்கான அறிவிக்கை கூட இன்னும் வெளியிடப்படாததால் இந்த ஆண்டு இறுதிக்குள்ளாகக் கூட அவர்கள் நியமிக்கப்பட வாய்ப்பில்லை.

திமுக ஆட்சிக்கு வந்தால் அரசுத் துறைகளில் காலியாக கிடக்கும் மூன்றரை லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்; 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிரப்பப்படும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், புதிதாக ஏற்பட்ட காலிப்பணியிடங்கள் கூட இன்னும் நிரப்பவில்லை. எந்தத் துறையிலும் புதிய பணியிடங்களும் உருவாக்கப்படவில்லை. அந்த வகையில் திமுக வாக்குறுதி அளித்த ஐந்தரை லட்சம் அரசு வேலை குறித்த வாக்குறுதி அப்படியே தான் உள்ளது. அதை நிறைவேற்றுவதை நோக்கி ஓரடி கூட எடுத்து வைக்கப்படவில்லை.

பகுதி நேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களும், தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களும் பத்தாண்டுகளைக் கடந்தும் இன்னும் பணி நிலைப்பு செய்யப்படவில்லை. அதை விட ஆபத்தான போக்காக அனைத்து அரசுத் துறைகளிலும் தனியார் நிறுவனங்கள் மூலம் குத்தகை முறையில் பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். இது தொழிலாளர்கள் உரிமைக்கு எதிரானது என்பதைக் கடந்து அரசுத்துறை நிறுவனங்களின் செயல்பாட்டையும், பொறுப்புடைமையையும் கடுமையாக பாதிக்கும்.

சென்னையில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசியவாறு,’’அரசாங்க வேலைக்கு இருக்கின்ற மவுசு, எந்தக் காலத்திலும் குறையாது. போட்டித் தேர்வுகளில் தேர்வு பெற்று, எப்படியாவது ஒரு அரசுப் பணியை வாங்கிவிட வேண்டும் என்பது, படித்த இளைஞர்களுடைய ஒரு பெரிய கனவு” என்பது மிகவும் உண்மை. தமிழ்நாட்டு இளைஞர்களின் இந்தக் கனவை நனவாக்கும் கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு. அதற்கான நடவடிக்கைகளை அரசு விரைவாக மேற்கொள்ள வேண்டும்.

தமிழக அரசுத் துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்பும் வகையிலும், திமுக ஆட்சிக்கு வந்தால் ஐந்தரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலும் நடப்பு நிதியாண்டில் குறைந்தது ஒன்றரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும். அடுத்த இரு ஆண்டுகளில் ஆண்டுக்கு தலா இரு லட்சம் வீதம் 4 லட்சம் பேருக்கு அரசு வேலைகளை வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

The post ’’ஐந்தரை லட்சம் அரசு வேலை வாக்குறுதி அப்படியே தான் உள்ளது..!’’ டாக்டர் அன்புமணி first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%90%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%88-%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2/feed/ 0
’’மத்திய அரசு நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பணி – 450 காலிப்பணியிடம்..!’’ பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%2585%25e0%25ae%25b0%25e0%25ae%259a%25e0%25af%2581-%25e0%25ae%25a8%25e0%25ae%25bf%25e0%25ae%25b1%25e0%25af%2581%25e0%25ae%25b5%25e0%25ae%25a9%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/#respond Thu, 27 Jul 2023 06:08:22 +0000 https://madrasmurasu.com/?p=5640 நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் கம்பெனி நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பணி இடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மொத்த காலிப்பணியிடங்கள் 450 ஆகும். இந்த வேலைக்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதியில் இருந்து 21 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட், உலகம் முழுவதும் பல கிளைகளைக் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பணி: நிர்வாக அதிகாரி (Administrative Officer (Scale-I) பதவிகள்: இடர் பொறியாளர்கள் […]

The post ’’மத்திய அரசு நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பணி – 450 காலிப்பணியிடம்..!’’ பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.

]]>
நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் கம்பெனி நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பணி இடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மொத்த காலிப்பணியிடங்கள் 450 ஆகும். இந்த வேலைக்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதியில் இருந்து 21 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட், உலகம் முழுவதும் பல கிளைகளைக் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

பணி: நிர்வாக அதிகாரி (Administrative Officer (Scale-I)

பதவிகள்: இடர் பொறியாளர்கள் (Risk Engineers), ஆட்டோமொபைல் பொறியாளர்கள் (Automobile Engineers), கணக்குகள்(Accounts), சட்டம் (Legal), சுகாதாரம் (Health), தகவல் தொழில்நுட்பம் (IT) மற்றும் பொதுவாதிகள் (Generalists) போன்ற பல்வேறு துறைகளில் 450 பல்வேறு காலியிடங்களுடன் வந்துள்ளது.

கல்வித் தகுதி: இளங்கலை மற்றும் முதுநிலை பட்டதாரிகள்

விண்ணப்பம் : ஆன்லைன் – www.newindia.co.in

மொத்த காலிப்பணியிடம்: 450

வயது வரம்பு: குறைந்தபட்சம் 21, அதிகபட்சம் 30 வயது. மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு (கூடுதல் விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையத்தை www.newindia.co.in பார்க்கவும்)

தேர்வு முறை: முதல்நிலை, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு

மாத சம்பளம் : ரூ.80,000

விண்ணப்ப காலம்: ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 21 வரை.

கட்டணம்: SC/ST/PWD – Rs. 100. General/EWS/OBC – Rs. 750.

அதிகாரப்பூர்வ இணையதளம் & ஆன்லைன் விண்ணப்பம்: https://www.newindia.co.in/

The post ’’மத்திய அரசு நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பணி – 450 காலிப்பணியிடம்..!’’ பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/feed/ 0