acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ’’வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மூலம் எதிர்கட்சிகளை மிரட்டும் பிஜேபி ஆட்சி..!’’ மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு first appeared on Madras Murasu.
]]>முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (1.11.2023) சென்னையில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி இல்ல திருமண விழாவில் பேசியதாவது:
மணமக்களே, மணமக்களுடைய பெற்றோர்களே, உற்றார் உறவினர்களே, நண்பர்களே, திரளாக திரண்டிருக்கக்கூடிய என் உயிரோடு கலந்திருக்கக்கூடிய நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களின் உயிரினும் உயிரான அன்பு உடன்பிறப்புக்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.
நம்முடைய கிருஷ்ணசாமி அருமை மகள் தாரணி-க்கும், முருகன் – மஞ்சுளா தம்பதியின் மகன் மருத்துவர் எம். பரத் கௌசிக் -கும் நம்முடைய அன்பான வாழ்த்துகளோடு மணவிழா நிகழ்ச்சி நிறைவேறியிருக்கிறது. இந்த மணவிழா நிகழ்ச்சிக்கு தலைமை பொறுப்பேற்று மணவிழாவை நடத்தி வைத்து, அதேநேரத்தில் மணமக்களை வாழ்த்தக்கூடிய ஒரு சிறப்பான வாய்ப்பை பெற்றமைக்கு நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
சீர்திருத்த திருமணங்கள்
நடைபெற்றிருக்கக்கூடிய திருமணம் என்பது ஒரு சீர்திருத்த திருமணம். சுயமரியாதை உணர்வோடு நடைபெற்றிருக்கக்கூடிய திருமணம். இதுபோன்ற திருமணங்களில் நாம் பங்கேற்கின்ற நேரத்தில் வாழ்த்தக்கூடிய வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக ஒரு செய்தியை பதிவு செய்யாமல் நான் இருந்தது இல்லை. அந்த வரலாற்றுச் செய்தி என்னவென்று கேட்டால், இன்றைக்கு நடைபெற்றிருக்கக்கூடிய இந்த சீர்திருத்த திருமணம் 1967-க்கு முன்னால் நடைபெற்றிருக்கும் என்று சொன்னால், அந்த திருமணங்கள் சட்டப்படி, முறைப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தை பெறமுடியாத நிலையில் இருந்தது. ஆனால் 1967-ல் தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் அமோக வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்று ஆட்சியின் தலைவனாக தமிழக முதல்வராக அறிஞர் அண்ணா அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு முதலமைச்சராக முதன்முதலில் சட்டமன்றத்தில் நுழைந்து சீர்திருத்த திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லுபடியாகும் என்கின்ற அந்த தீர்மானத்தை கொண்டு வந்து அவர் நிறைவேற்றி தந்தார்.
ஆகவே, இன்றைக்கு நடைபெற்றிருக்கக்கூடிய இந்த சீர்திருத்த திருமணம் முறைப்படி, சட்டப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தோடு நடந்தேறியிருக்கிறது. இது சீர்திருத்த திருமணம் மட்டுமல்ல, சுயமரியாதை உணர்வோடு நடைபெற்றிருக்கக்கூடிய திருமணம். இன்னும் பெருமையோடு சொல்லவேண்டுமென்றால், தமிழ் திருமணம், இந்த தமிழுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில், செம்மொழி என்ற அங்கீகாரத்தை பெற்றுத் தந்தவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் என்பதை நாடு மறந்துவிட முடியாது. அப்படிப்பட்ட தமிழ் திருமணமாக, சீர்திருத்த திருமணமாக, சுயமரியாதை உணர்வோடு நடைபெறக்கூடிய திருமணமாக நம்முடைய அருமை சகோதரர் கிருஷ்ணசாமி தன்னுடைய அன்பு மகளுக்கு இன்றைக்கு சிறப்போடு நடத்தியிருக்கிறார்.
இது எங்கள் வீட்டு திருமணம்
‘பூந்தண்மல்லி’ என்பதுதான் அதன் உண்மை பெயராக இருந்தது. இன்றைக்கு பூந்தமல்லி, பூந்தமல்லி என்று நாம் அழைக்கிறோம். ஆனால் உண்மையில் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் அது பூந்தண்மல்லி என்றுதான் அழைத்துக் கொண்டிருந்த காலம். அது நாளடைவில் மாறிப்போய் இன்றைக்கு பூந்தமல்லி என்று அழைத்துக் கொண்டிருக்கிறோம். பூந்தண் என்றால் அந்த ‘தண்’ என்பதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டால் குளிர்ச்சி! அந்த குளிர்ச்சிமயமான மலர்களுடைய பெயர்கள் மட்டுமல்ல, கொள்கை பிடிப்புள்ள உடன்பிறப்புகளும், பிறந்திருக்கக்கூடிய பகுதியாகதான் பூந்தமல்லி இருந்திருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கிறபோது நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன். அதில் ஒருவராக இன்றைக்கு நம்முடைய கிருஷ்ணசாமி திகழ்ந்து கொண்டிருக்கிறார். கிருஷ்ணசாமி இன்றைக்கு சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். அவர் பழகுவதற்கு இனிமையானவர். இனிமையானர் மட்டுமல்ல, உறுதியானவர் அதுதான் முக்கியம். தம்பி, உதயநிதி இங்கே குறிப்பிட்டுச் சொன்னார். இந்த திருமணத்தை அவர்கள் வீட்டு திருமணமாக நாங்கள் கருதவில்லை, இது எங்கள் வீட்டு திருமணமாக, இன்னும் சொல்ல வேண்டுமென்றால், இது நம்முடைய வீட்டு திருமணமாக கருதிதான் இந்த விழாவில் பங்கேற்று மணமக்களை நாமெல்லாம் வாழ்த்திக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் எதிர்க்கக்கூடாது
கிருஷ்ணசாமி, நன்றியுரையாற்றுகின்ற போது குறிப்பிட்டுச் சொன்னார். அவருடைய தந்தையை அடையாளம் காட்டினார். தந்தைக்கு உரிய வணக்கத்தை எடுத்துச் சொன்னார். அப்படி சொல்கின்ற நேரத்தில் அவருடைய வரலாற்றையும் அவர் நினைவுபடுத்தி எடுத்துச் சொன்னார். அவருடைய தந்தை ஆதிசதாசிவம்.
1976-ஆம் ஆண்டில் நாம் ஒரு நெருக்கடி நிலையை சந்தித்தோம். நாட்டிற்கே நெருக்கடி வந்தது. அந்த நேரத்தில் எமர்ஜென்ஸியை நாம் எதிர்த்தோம். தலைவர் கலைஞர் -க்கு தூதுவர்கள் டில்லியிலிருந்து வருகிறார்கள். அம்மையார் இந்திராகாந்தி கொண்டு வந்திருக்கக்கூடிய அவசர நிலையை, எமர்ஜென்ஸியை நீங்கள் எதிர்க்கக்கூடாது. ஆதரிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் எதிர்க்கக்கூடாது. அப்படி மீறி எதிர்த்தால், உங்கள் ஆட்சி உடனடியாக கவிழ்க்கப்படும். நீங்கள் எதிர்க்காமல் இருந்தால், இன்னும் உங்கள் ஆட்சி சில ஆண்டு காலம் தொடரும் என்று வந்த தூதுவர்கள், கோபாலபுரத்தில் உள்ள கலைஞரிடத்தில் சொன்னார்கள். அப்போது நான், அண்ணன் துரைமுருகன், டி.ஆர்.பாலு எல்லாம் அருகில் இருக்கிறோம். அப்போது கலைஞர் ஒரு வார்த்தையை சொன்னார். எந்த காலத்திலும், எந்த சூழ்நிலையிலும், நாட்டிற்கு ஏற்பட்டிருக்கக்கூடிய நெருக்கடி சூழ்நிலையை நாங்கள் ஆதரிக்கமாட்டோம். நாங்கள் ஜனநாயகத்தைதான் நம்பியிருக்கிறோம். ஆட்சி அல்ல, எங்கள் உயிரே போனாலும், நாங்கள் இதற்கு சம்மதிக்கமாட்டோம் என்று தலைவர் கலைஞர், வந்த தூதுவரிடத்தில் சொல்லி அனுப்பினார்கள். இது வரலாறு.
கழக ஆட்சி கலைக்கப்படுகிறது
சொல்லி அனுப்பிவிட்டு, அடுத்த நாள் சென்னை கடற்கரையில் ஒரு மாபெரும் மக்கள் கூட்டத்தை திரட்டி, திரண்டிருந்த அந்த மக்கள் கூட்டத்தில் தலைவர் கலைஞர் முன்மொழிந்தார்கள். அம்மையார் இந்திராகாந்தி அவர்களே, நீங்கள் கொண்டு வந்திருக்கக்கூடிய அவசர கால நிலையை உடனடியாக திரும்ப பெறவேண்டும். எமர்ஜென்ஸியை இரத்து செய்யவேண்டும். மிசா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் வைத்திருக்கக்கூடிய தலைவர்களை எல்லாம் உடனடியாக விடுதலை செய்யவேண்டும், பல்வேறு இந்திய நாட்டின் தலைவர்கள் எல்லாம் வாடிக் கொண்டிருக்கிறார்கள், அவர்களை எல்லாம் உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று சொல்லி ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தை தலைவர் கலைஞர் முன்மொழிய குழுமியிருந்த மக்கள் அனைவரையும் எழுந்திருக்க வைத்து வழிமொழிய வைத்தார். தீர்மானம் நிறைவேற்றிய அடுத்த வினாடி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி கலைக்கப்படுகிறது. கலைக்கப்பட்டதற்கு பிறகு பலபேர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளை சார்ந்தவர்கள் எல்லாம் கைது செய்யப்படுகிறார்கள். அந்த வரலாறெல்லாம் உங்களுக்குத் தெரியும். மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு அதுவும் சென்னை சிறையில் நடந்த கொடுமைகள் எல்லாம் உங்களுக்கு நன்றாக தெரியும். அதைப்பற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை.
சிறையில் அடைத்தார்கள். இதுதான் வரலாறு..!
எதற்காக சொல்கிறேன் என்று சொன்னால், அந்த சூழ்நிலையில், நம்முடைய கிருஷ்ணசாமி அவர்களுடைய தந்தை ஆதிசதாசிவம் துணிச்சலானவர். பல பேர் வேட்டிக் கட்டுவதற்கே பயப்பட்டார்கள். அப்படியே வேட்டிக் கட்டினாலும், கருப்பு, சிவப்பு பார்டர் வைத்த வேட்டியை சிலபேர் கட்டமாட்டார்கள். அவ்வளவு பயம் சில பேருக்கு இருந்தது. உடனே கருப்பு, சிவப்பு உள்ள வேட்டியை பார்த்தால் கைது செய்து விடுவார்கள். அவ்வளவு கொடுமைப்படுத்தக்கூடிய நிகழ்ச்சியெல்லாம் நடந்தது. அந்த நேரத்தில் துணிச்சலோடு நம்முடைய கிருஷ்ணசாமி தந்தை ஆதிசதாசிவம் கழுத்தில் கருப்பு, சிவப்பு துண்டை அணிந்துகொண்டு காவல்நிலையத்திற்கு முன்பு நின்றுகொண்டு எமர்ஜென்ஸியை எதிர்க்கக்கூடிய அந்த வாதங்களை எல்லாம் எடுத்துச் சொல்லக்கூடிய அந்த நிலையை பார்த்து அவரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தார்கள். இதுதான் வரலாறு.
அப்போது சிறையில் இருந்த நேரத்தில் நம்முடைய கிருஷ்ணசாமி அவர்களே சொன்னார், அப்போது அவருக்கு வயது 10. அந்த 10 வயது சிறுவனாக இருந்து கிருஷ்ணசாமி தன்னுடைய தந்தையை பார்க்க சிறைக்கு சென்றபோது அவருக்கு ஏற்பட்ட கொடுமைகள் எல்லாம் தன்னுடைய தந்தை சொல்கின்றபோது, அவருக்கு கோபம் வரவில்லை, அதற்கு நேர்மாறாக என்ன வந்தது என்றால், உணர்ச்சி வந்தது. அந்த உணர்ச்சி எல்லாம் கடந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது பற்று வந்தது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அவருக்கு ஈடுபாடு வந்ததற்கு காரணம் என்ன என்று கேட்டால், அவர் தந்தை கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்த காட்சிதான் அவர் திமுக மீது இன்றைக்கு ஈடுபாடு கொண்டு, சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக, கட்சியில் பல பொறுப்புகளை ஏற்று, செயல்படுத்தக்கூடிய நிலையில் இன்றைக்கு வளர்ந்து வந்திருக்கிறார்.
அந்த 10 வயதில், நம்முடைய கிருஷ்ணசாமி
இளைஞர் அணி தொடங்கப்பட்டபோது நான்தான் அந்த பொறுப்பில் இருந்தேன் உங்கள் எல்லாருக்கும் தெரியும். அப்போது இளைஞர் அணியில் தன்னை இணைத்துக் கொண்டு நம்முடைய கிருஷ்ணசாமி அந்த பகுதியில் கிளைக் கழகத்தின் செயலாளராக பொறுப்பேற்று பணியாற்றிய அந்த நிகழ்ச்சி. அவரே பேசுகின்றபோது சொன்னார், என்னை அழைத்துக்கொண்டு கொடியேற்று விழா நடத்திய நேரத்தில், கொடியை ஏற்றிவிட்டு, ஏன் கல்வெட்டு இல்லை என்று கேட்டேன். கல்வெட்டு மட்டும் கேட்கவில்லை, நிதியும் கேட்டேன். அப்போது நிதியும் கொடுக்கவில்லை. இன்றைக்கும் அவர் கடனாளியாகத்தான் இருந்து கொண்டிருக்கிறார். ஆனால், எப்படி வசூலிப்பது என்று எனக்கு தெரியும். அது அல்ல முக்கியம். எதற்காக இதை சொல்கிறேன் என்று சொன்னால், அந்த 10 வயதில், நம்முடைய கிருஷ்ணசாமி இயக்கத்தில் பற்று கொண்டு அந்த வட்டாரத்தில் சிறப்பாக பணியாற்றி, படிப்படியாக வளர்ந்து, அவர் சட்டக் கல்லூரியில் மாணவரணி பொறுப்பேற்று பணியாற்றி, அதைத் தொடர்ந்து கழக வழக்கறிஞர் அணியில் தன்னை இணைத்துக்கொண்டு. ஆதிதிராவிடர் நலக்குழுவில் அவர் பொறுப்பேற்று பணியாற்றி, அதற்கிடையில் நாடாளுமன்ற உறுப்பினராக இரண்டு முறை, அதாவது நாடாளுமன்றத்தில் சிறப்பாக பணியாற்றக்கூடியவர்கள் என்று சிலரை குறிப்பிட்டுச் சொல்வதுண்டு. அந்த குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒருவராக இருந்தவர்தான் நம்முடைய கிருஷ்ணசாமி.
உங்களுக்கு நன்றாக தெரியும்
இதை தலைவர் கலைஞர் சொன்னால் கூட நான் பெரிதுபடுத்தியிருக்க மாட்டேன். ஆனால், நம்முடைய மறைந்த ஒன்றிய அமைச்சராக இருந்த முரசொலி மாறன் பலமுறை சொல்லியிருக்கிறார். அவர் வாயில் இருந்து வருவது என்பது சாதாரண விஷயமல்ல. அவரே சொல்லியிருக்கிறார். பலமுறை என்னிடத்தில் சொல்லியிருக்கிறார். தலைவரிடத்திலும் சொல்வார், மாமா, கிருஷ்ணசாமி, நாடாளுமன்றத்தில் உட்கார்ந்தால், உட்கார்ந்ததுதான், எழுந்து போகமாட்டார். அவ்வளவு உன்னிப்பாக கவனித்து அனைத்து பிரச்சனைகளையும் கூர்ந்து கவனிக்கக்கூடிய ஆற்றலை பெற்றிருக்கக்கூடியவராக இருக்கிறார் என்று பலமுறை சொல்லியிருக்கிறார். நானும் அதை கேட்டிருக்கிறேன். நாடாளுமன்றத்தில் நூல் நிலையம் இருக்கிறது. அந்த நூல்நிலையத்தை பலபேர் பயன்படுத்த மாட்டார்கள். சிலபேர் தான் பயன்படுத்துவார்கள். அதையும் முறையாக பயன்படுத்தியவர்தான் நம்முடைய கிருஷ்ணசாமி. அவர்தான் இன்றைக்கு பூவிருந்தவல்லி தொகுதியில் இடைத்தேர்தல் வந்தபோது அவரை வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற வைத்தோம். தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார். அதற்குப் பின்னால் இப்போதும் சட்டமன்ற உறுப்பினராக இருந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார். ஆகவே, இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் அவர் பணியாற்றக்கூடிய வாய்ப்பை பெற்றிக்கின்றபோது நான் உங்களை எல்லாம் கேட்டுக்கொள்ள விரும்புவது இன்றைக்கு நாட்டில் உள்ள நிலைமை எல்லாம் உங்களுக்கு நன்றாக தெரியும்.
இது என்ன கேலிகூத்து!
ஜனநாயகம் பாதுகாக்கப்படுமா? மக்களாட்சி நீடிக்குமா? என்ற நிலையில்தான் இன்றைய சூழ்நிலை அமைந்திருக்கிறது. எதிர்க்கட்சிகளை மிரட்டுவது, மத்தியில் இருக்கக்கூடிய ஒன்றிய பிஜேபி ஆட்சி, தனக்கெதிராக யார் எந்த கருத்தைச் சொன்னாலும், அவர்களை மிரட்டுவது, அச்சுறுத்துவது, அதற்காக IT-ஐ, EDஐ அதாவது அமலாக்கத்துறையை, இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், தொலைபேசியை டேப் செய்கின்ற முயற்சியை கையாண்டிருக்கிறார்கள். ஆப்பிள் என்ற ஒரு பெரிய நிறுவனம். அந்த நிறுவனத்தைச் சார்ந்தவர்களே எச்சரித்திருக்கிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர்களுக்கெல்லாம் இதுபோல ஒரு சூழ்நிலை இருக்கிறது என்று அவர்களே சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். கடிதம் எழுதியிருக்கிறார்கள். இப்படி செய்தி வந்தவுடனே, ஒன்றியத்தில் இருக்கக்கூடிய அமைச்சர் என்ன பதில் சொல்லியிருக்கிறார், இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணைக்கமிஷன் அமைக்கப்படும் என்று ஒரு அறிவிப்பு வெளியிடுகிறார். இது என்ன கேலிகூத்து! செய்வது எல்லாம் செய்துவிட்டு இன்றைக்கு விசாரணைக்கமிஷன் அமைக்கப்படும் என்று செய்தியை வெளியிடுகிறார் என்று சொன்னால், அந்த அளவுக்கு நாட்டில் இன்றைக்கு ஒரு கொடுமையை சந்திக்கக்கூடிய நிலையில் நாம் தவித்துக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கு அவர்களை பொறுத்தவரை இந்தியா கூட்டணியைப் பார்த்து தோல்வி பயம் வந்துவிட்டது.
பயம் வந்துவிட்டது.
இங்கே இந்தியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் உட்கார்ந்திருக்கிறோம். இந்தியா கூட்டணி இன்றைக்கு எதிர்பாராத வகையில் அவர்கள் எதிர்பாராத வகையில் அமைந்திருக்கிறது. இன்றைக்கு மக்களிடம் சென்று, மோடி ஆட்சியின் கொடுமைகளை, அக்கிரமங்களை, அநியாயங்களை, அவலநிலைகளை எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். விரைவில் ஐந்து மாநில தேர்தல்கள் வர இருக்கிறது. நமக்கு கிடைக்கக்கூடிய செய்திகள் எல்லாம் ஐந்து மாநிலத்திலும் பிஜேபி தோல்வியை தழுவப் போகிறது என்ற செய்திதான் வந்து கொண்டிருக்கிறது. அதனால் அவர்களுக்கு அச்சம் வந்துவிட்டது. பயம் வந்துவிட்டது. அந்த பயத்தின் காரணமாகத்தான், இன்றைக்கு இதுபோன்ற செயல்களில் எல்லாம் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் முறியடித்து, நாட்டிற்கு ஒரு நல்ல விமோசனத்தை உருவாக்கித் தருவதற்கு, இந்தியாவை காப்பாற்றுவதற்கு, இந்தியா கூட்டணிக்கு நீங்கள் அத்தனை பேரும் வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் மிகச் சிறப்பான வெற்றியை தேடித்தர வேண்டுமென்று உங்களை அன்போடு கேட்டுக்கொண்டு, அந்த வெற்றியை தேடி தரக்கூடிய படைவரிசையில் கிருஷ்ணசாமி இன்றைக்கு செயலாற்றிக் கொண்டிருக்கிறார். அவருடைய செயல்பாடு வெற்றி பெறவேண்டும்.
வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்கு தொண்டர்களாய்..!
அவருடைய அன்புச் செல்வங்கள் இன்றைக்கு மணக்கோலம் பூண்டிருக்கிறார்கள். மணக்கோலம் பூண்டிருக்கக்கூடிய மணமக்களுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து, புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கக்கூடிய “வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்கு தொண்டர்களாய்” வாழுங்கள், வாழுங்கள், வாழுங்கள் என்று வாழ்த்தி, விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்.
The post ’’வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மூலம் எதிர்கட்சிகளை மிரட்டும் பிஜேபி ஆட்சி..!’’ மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு first appeared on Madras Murasu.
]]>The post ’’அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை தமிழ்நாட்டில் ஒருபோதும் எடுபடாது..!’’ கே.பாலகிருஷ்ணன் first appeared on Madras Murasu.
]]>ஒருபோதும் வெற்றிபெறாது
2011-2012 ஆம் ஆண்டுகளில் ஜெய லலிதா முதலமைச்சராக இருக்கும் போது, பொன்முடி மீது போடப்பட்ட ஒரு வழக்கின் மீது 11 ஆண்டுகளுக்கு பிறகு அமலாக்கத்துறை மூக்கை நுழைத் திருக்கிறது. ஏற்கனவே, அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. இரண்டு வழக்குகளில் அவர் விடுதலையும் பெற்றி ருக்கிறார். அமலாக்கத் துறையினர் சோத னை நடத்தும் இந்த வழக்கும் முடியும் தருவாயில் உள்ளது. இன்னும் சில நாட்களில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
திடீரென அமைச்சர் வீட்டில் சோதனை நடத்துவது வன்மையான கண்டனத்திற்குரியது. அடுத்து நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்குள் திமுக அமைச்சர்கள் மீது ஏதாவது பழைய வழக்கு இருந்தால் அதை தூசி தட்டி அதன்மூலம் சோதனை நடத்தி தமிழ்நாட்டு மக்களிடையே ஒரு களங்கத்தை ஏற்படுத்தி விடலாம். இதன் மூலம் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைச் சீர்குலைக்கலாம் என்றும் திட்டமிட்டுச் செயல்படுகிறது ஒன்றிய பாஜக அரசு. பாஜகவின் இந்த முயற்சி தமிழ்நாட்டில் ஒருபோதும் வெற்றிபெறாது. இந்த சோதனைகள் அனைத்தும் பாஜகவிற்கு எதிராகத்தான் அமையும்.
நடவடிக்கை என்று கூறுவது ஏமாற்று வேலை
தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் பெங்களூருவில் நடைபெறு கிறது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும் கலந்துகொள்கிறார். இந்த சூழ்நிலையில், திசை திருப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் அமலாக்கத் துறையின் மூலம் இந்த சோதனை நடத்தப்படுகிறது. அமலாக்கத் துறை சட்ட ரீதியாக செயல்பட வேண்டிய தனித்துறை என்ற நிலை மாறி, பாஜகவின் கைப்பாவை யாக மாறியுள்ளது. பாஜகவின் துணை அமைப்பு போல் செயல்படுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்று கூறுகிறார்கள். அப்படியானால் இந்த சோதனை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் நடத்தப்படுவது ஏன்? பாஜக ஆளும் மாநிலங்களில் ஊழல் நடைபெறவில்லையா? தமிழ்நாட்டிலுள்ள பாஜக தலைவர்கள் பலர் மீது ஊழல் குற்றச்சாட்டும் புகாரும் உள்ளது. அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சோதனை நடத்து வதில்லையே ஏன்? நமது அண்டை மாநிலமான புதுச்சேரி அமைச்சர்கள் மீது ஏராளமான ஊழல் புகார்கள் உள்ளன. ஏன் அவர்கள் மீது எந்த வழக்கும் பதியவில்லை? சோதனையும் நடத்துவ தில்லை? ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்று கூறுவது ஏமாற்று வேலை. அமலாக்கத்துறையை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை யைச் சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கில் இப்படிப்பட்ட சோதனை நடைபெறுகிறது.
முழுமையாக மூழ்கி விடும்
விலை வாசி உயர்வு, ஒன்றிய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை களால் மக்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். காய்கறிகள் உள்ளிட்டு அனைத்து அத்தியாவசியமான பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளன. இந்த பிரச்சனை களில் இருந்து மக்களை திசை திருப்பவே இப்படிப்பட்ட சோதனைகளை ஏவி விடுகின்றனர். வருகிற 2024 மக்களவை தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவதற்கு தயாராகிவிட்டனர். இதனால், பாஜக என்னும் கப்பல் முழுமையாக மூழ்கி விடும். அது ஒரு போதும், இந்த முறை கரை சேராது என்றார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர்,“ அமைச்சர் பொன்முடி மீதான வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நீதிமன்றம் என்ன தீர்ப்பு வேண்டுமானாலும் வழங்கட்டும். அதுவரைக்கும் பொறுத்திருக்க முடியாமல் அமலாக்கத்துறை மூலம் திமுகவை-யும் அதன் கூட்டணி கட்சிகளையும் மிரட்டலாம் என்று பாஜக நினைக்கிறது. இந்த அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை தமிழ்நாட்டில் ஒருபோதும் எடுபடாது” என்றார்.
சோதனை நடத்தி மிரட்டப் பார்க்கிறார்கள்
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை பாஜகவிற்கு மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகளை பிரித்துவிட்டால் எளிதில் வெற்றிபெற்று விடலாம் என பாஜக நினைக்கிறது. அதனால்தான் இந்த ஒற்றுமையைச் சீர்குலைக்க வேண்டும் என பாஜக முயற்சிக்கிறது. தமிழ்நாட்டில் திமுக சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முடியவில்லை என்பதனால் அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடத்தி மிரட்டப் பார்க்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
The post ’’அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை தமிழ்நாட்டில் ஒருபோதும் எடுபடாது..!’’ கே.பாலகிருஷ்ணன் first appeared on Madras Murasu.
]]>The post ’’ஆதாரம் இருந்தால் மட்டுமே அமலாக்கத்துறையால் கைது செய்ய முடியும்..!’’ மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதம் first appeared on Madras Murasu.
]]>சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டு உள்ளதாக கூறி, அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை, விசாரித்த நீதிபதி ஜெ. நிஷா பானு, நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி அமர்வு மாறுபட்ட தீர்ப்புக்களை வழங்கிய தால், மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்கு அனுப்பப்பட்டது. அதன்படி மூன்றாவது நீதிபதி சி.வி. கார்த்திகேயன் செவ்வாயன்று வழக்கை விசாரித்தார்.
இந்த விசாரணையின்போது, “எந்த ஆவணமும் இல்லாதபோது அமலாக்கத் துறைக்கு எங்கிருந்து ஆதாரம் கிடைத்தது? எந்த ஆதாரமும் இல்லாத போது அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி வழக்கை விசாரித்தது எப்படி? செந்தில்பாலாஜி வழக்கு விசாரணை நிலையில்தான் உள்ளது. நீதிமன்ற காவ லில் வைக்க நீதிமன்றத் துக்கு அதிகாரம் உள்ள போது ஆட்கொணர்வு மனு எப்படி தாக்கல் செய்ய முடியும்? நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜியை விடுவிக்கும்படி அம லாக்கத்துறைக்கு எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்?” என்று இரண்டு தரப்பிற்கும் கேள்வி களை முன்வைத்தார். அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், தில்லியிலிருந்தபடியே, காணொலி மூலம் ஆஜராகி வாதாடினார். அப்போது, செந்தில் பாலாஜியை அம லாக்கத்துறை கைது செய்தது சட்டவிரோதம் என்று குறிப்பிட்டார்.
“ஒருவர் குற்றம் செய்ததற்கான அனைத்து ஆவணங்களும் இருந்தால் மட்டுமே அம லாக்கத்துறைக்கு கைது செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. விசாரணை நடத்த வேண்டும் என்பதற்காக மட்டுமே ஒருவரை அமலாக்கத்துறை கைது செய்ய முடியாது. செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டின் அடிப்ப டையில், அவர் பெற்ற பணத்தை மறைத்து வைத்திருப்பதாக எந்த ஆதாரமும் இல்லை. சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டம் பிரிவு 19-இன்படி, குற்றம் புரிந்துள்ளார் என நம்பு வதற்கான காரணங்களும், ஆதாரங்களும் இருந்தால் மட்டுமே அமலாக்கப்பிரிவு துணை இயக்குநர், உதவி இயக்குநர் கைது நடவடிக்கை எடுக்கலாம். கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஆதாரங்களை சீல் வைத்த கவரில் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, கைதுக்கான காரணங்களை தெரிவித்து நீதிமன்ற காவலில் வைக்க கோரலாம். ஆனால், இந்த வழக்கில், கைதுக்கான காரணத்தை அமலாக்கத்துறையினர் தெரியப்படுத்தவில்லை. கைதுக்கான எந்த ஆதாரமும் இல்லை. எதற்காக கைது செய்கிறோம் என்ற விவரங்களை அவரது உறவினர்களுக்குக் கூட தெரியப்படுத்தவில்லை.
இந்த வழக்கில் 2 கேள்விகள் எழுகின்றன. ஒன்று கைது செய்ய அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளதா? மற்றொன்று இந்த ஆட் கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததா? என்பது. இதில், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது என ஆணித்தரமாக கூறுகிறேன்” என்று கபில் சிபல் தனது வாதங்களை அடுக்கினார். அப்போது நீதிபதி சி.வி. கார்த்திகேயன் குறுக்கிட்டு, “பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் பிரிவு 19-இன் படி, கைது செய்யும் அதி காரம் அமலாக்கத் துறைக்கு உள்ளபோது, அதை இல்லை என்கிறீர்களா? அல்லது காவலில் எடுக்க அதிகாரம் இல்லை என்கிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு, “’சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின்படி அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்த முடியுமே தவிர, புலன் விசாரணை மேற்கொள்ள முடியாது’ என உச்ச நீதிமன்றமே தெரிவித்துள்ளது” என்பதை சுட்டிக் காட்டிய கபில் சிபல், “இந்த வழக்கை பொருத்த மட்டில், ஏற்கனவே, செந்தில் பாலாஜியிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறிருக்கையில், போலீஸ் அதிகாரிகள் போல, அமலாக்கத் துறையினர் செயல்பட முடியாது. சட்டப்படி சம்மன் அனுப்ப அவர்களுக்கு அதிகாரம் இல்லை. சட்டப் பிரிவு 17, 18- ன்படி அவர்கள் சோதனை செய்து பறிமுதல் செய்ய தான் அதிகாரம் உள்ளது. கைது செய்து காவ லில் எடுத்து விசாரிக்க அதிகாரம் இல்லை” என்று கூறினார்.
“நீதிமன்றக் காவலில் உள்ள செந்தில் பாலாஜியை விடுதலை செய்யுமாறு அமலாக்கத் துறைக்கு உத்தரவு பிறப்பிக்க முடியுமா?” என்ற நீதி பதி சி.வி. கார்த்திகேயனின் அடுத்த கேள்விக்கும் பதிலளித்த கபில் சிபல், “நீதிமன்ற காவலில் வைக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை” என்றார். “அப்படியானால், கைது செய்வதற்கு முன்பு வரை வைத்துள்ள ஆதாரங்களே போதுமானது. கைதுக்கு பின், மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க அவசியமில்லை என்கிறீர்களா?” என்ற மற்றொரு கேள்வியை நீதிபதி முன்வைத்தார்.
அதற்கு “ஆமாம்” என்று கூறிய கபில் சிபல், “செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனை யில் சிகிச்சைக்கு சேர்க்க அனுமதித்த சென்னை உயர்நீதிமன்றம், அவர் நீதிமன்ற காவலில் தொடர வேண்டும் என உத்தரவிட்ட நிலையில், மறுநாள் அவரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை மனுத்தாக்கல் செய்தது குறித்து அதிருப்தி தெரிவித்திருக்கி றது. குற்றம் சாட்டப்பட்ட எவரும் நீதிமன்ற நடை முறைகளை விரக்தியடையச் செய்ய முடியாது என அமலாக்கத் துறை, அமர்வு நீதிமன்றத்தில் தெரிவித்தது தவறானது. கிரிமினல் நடை முறைச் சட்டப்படி உத்தரவு பிறப்பிக்க உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. சி.ஆர்.பி.சி சட்டத்தின் படி, அதிகாரத்தை எடுக்க அமலாக்கத்துறைக்குத்தான் அதிகாரமில்லை.
அமலாக்கத்துறை என்பது போலீஸ் கிடையாது. அவர்களுக்கு இருக்கும் கைது அதிகாரம் என்பது வேறு மாதிரியானது. மணி லாண்டரி செய்து இருந்தால், அதற்கான ஆதாரம் இருந்தால் மட்டுமே கைது செய்ய முடியும். மணி லாண்டரி என்பது கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவது. அதாவது அழுக்கு துணியை மிஷி னில் போட்டு துவைப்பது போன்றது. பொதுவாக போலீஸ் ஒருவரை விசாரிக்கிறது என்றால், அந்த நபரைக் குற்றம் செய்தவராக கருதினாலே போதும். அவரை கைது செய்ய முடியும். அதன்பிறகு ஆதாரத்தை கண்டுபிடிக்க அவரை விசாரிக்க முடியும். ஆனால் அமலாக்கத்துறை, தனது விசாரணைக்காக ஒருவரைக் கைது செய்ய வேண்டும் என்றால், அதற்கு முதலில் ஆதாரம் வேண்டும். கைக்கு ஆதாரம் வந்தால் மட்டுமே அமலாக்கத்துறை கைது செய்ய முடியும். ஆதாரத்தை திரட்டுவதற்காக ஒருவரை கைது செய்து, அதன்பின் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் கிடையாது. அதுமட்டுமல்ல, செந்தில் பாலாஜியை கைது செய்வதற்கு முன்பு வரை என்ன ஆதாரங்கள் இருந்ததோ, அதனை மட்டுமே அவர்கள் நீதிமன்றத்தில் பயன்படுத்த முடியும். கைது செய் யப்பட்ட பின், கைப்பற்றப்பட்ட ஆதாரங்களை நீதிமன்றத்தில் பயன்படுத்தவும் அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இல்லை” என்று கபில் சிபல் விளக்கினார்.
செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி பெற்ற அமலாக்கத் துறை, அதை ஏன் அமல்படுத்தவில்லை? அமர்வு நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளால் விசாரிக்க முடிய வில்லை என்றால், அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை அமலாக்கத்துறை நாடாதது ஏன்? என்றும் கபில் சிபல் கேள்விகளை எழுப்பினார். கபில் சிபலைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி தரப்பில் மற்றொரு மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோவும் தனது வாதங்களை எடுத்து வைத்தார்.
செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற விசாரணையின்போது, அமலாக்கத்துறை தரப்பு ஆஜராக வேண்டிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகவில்லை. அவர் புதன்கிழமையன்று தனது வாதங்களை எடுத்து வைக்க உள்ளார். இதனிடையே, செந்தில் பாலாஜி தரப்பில் மேல்முறையீடு செய்தால் அல்லது இடையீட்டு மனு தாக்கல் செய்தால் தங்கள் தரப்பின் கருத்தைக் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப் பிக்கக்கூடாது என அமலாக்கத்துறையினர் திடீரென உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றை செவ்வாயன்று தாக்கல் செய்துள்ளனர்.
The post ’’ஆதாரம் இருந்தால் மட்டுமே அமலாக்கத்துறையால் கைது செய்ய முடியும்..!’’ மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதம் first appeared on Madras Murasu.
]]>The post ’’பா.ஜ.க. செய்யும் நரித்தனங்கள் எதுவும் பலிக்காது..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தி இந்து ஆங்கில நாளேட்டுக்கு அளித்த பேட்டியின் முழு விபரம் first appeared on Madras Murasu.
]]>அரசியல் சட்டத்தின்கீழ் அமைச்சர்களை நீக்கும் அதிகாரம் இல்லையென்று தெரிந்திருந்தும், ஆளுநர் ஆர்.என். ரவி அமைச்சர் செந்தில்பாலாஜியை நீக்குவதாக அறிவித்தார். ஆனால் சில மணி நேரங்களிலேயே அதைக் கிடப்பில் போடுவதாக உங்களுக்குக் கடிதம் அனுப்பினார். அவருடைய நோக்கம் என்ன என்று கருதுகிறீர்கள்?
எனது தலைமையிலான தி.மு.க. அரசு, நிம்மதியாக ஆட்சி நடத்தி, மக்களுக்கு எந்த நன்மையையும் செய்து விடாமல் தடுப்பதே ஆளுநரின் உள்நோக்கம். இரண்டு ஆண்டுகளாக எத்தனையோ திட்டங்களைக் கொண்டு வந்து – இந்தியாவில் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திக் காண்பித்துள்ளோம். இதை எல்லாம் ஆளுநரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணம் ஆளுநருக்கு துளியும் கிடையாது. அதனால் அவர் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக, தமிழ்நாடு அரசுக்கு எதிராக “விதண்டாவாதம்” பேசி வருகிறார்.
ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்..
புதிய ஒப்பந்தங்களைப் போடுவதற்காகவும், உலக முதலீட்டாளர் மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுப்பதற்காகவும் ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு நான் சென்றேன். அந்த நேரம் பார்த்து, ‘நேரில் அழைப்பு விடுப்பதால் முதலீடுகள் வராது’ என்று இவர் பேசுகிறார். இதன் மூலமாக அவர் என்ன சொல்ல விரும்புகிறார்? முதலீடு செய்ய முன்வரும் நிறுவனங்களிடையே தமிழ்நாடு குறித்த தவறான பிம்பத்தை உருவாக்க நினைக்கிறார். தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகள் கிடைத்துவிடக் கூடாது என நினைக்கிறார். தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகி விடக் கூடாது என நினைக்கிறார். அதன் வெளிப்பாடுதான் அவரது இந்த பேச்சுகள்.
நாள்தோறும் ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அவர் பேசுவது, நல்லாட்சி இங்கு நடப்பதைப் பார்த்து அவர் எரிச்சல் அடைவதைக் காட்டுகின்றன. அவரது ஆதாரமற்ற – அரசியல் சட்டத்தை மீறிய பேச்சுகள் நடவடிக்கைகள் சமூக சலசலப்பை ஏற்படுத்துவதாக – சமூக நல்லிணக்கத்தை சிதைப்பதாக அமைந்துள்ளன. தனக்கு எந்த அதிகாரமும் கிடையாது, அரசியல்சட்டப்படி தான் ஒரு நியமிக்கப்பட்ட ஆளுநர் என்பது அவருக்குத் தெரியும். தெரிந்தே, அவர் தமிழ்நாட்டு மக்களுடன் – தமிழ்நாட்டின் நலனுடன் தனது விபரீத விளையாட்டைத் தொடர்ந்து நடத்திக் கொண்டு இருக்கிறார்!
ஒன்றிய அரசின் தூண்டுதலின் பேரில் ஆளுநர் செயல்படுகிறார் என்பதே பொதுவான குற்றச்சாட்டு. ஆனால் அவருடைய இரண்டாவது கடிதத்தைப் பார்க்கும் போது, உள்துறை அமைச்சகத்தையோ, இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் (அட்டர்னி ஜெனரலையோ) கலந்து ஆலோசிக்காமல் செயல்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?
ஒன்றிய அமைச்சகம் சொல்லிச் செய்கிறாரா, இல்லையா என்பதற்குள் நான் போகவிரும்பவில்லை. அவராகச் செய்தாலும், ஒன்றிய அரசு சொல்லிச் செய்தாலும், ஆளுநருக்கு அமைச்சர்களை நியமிக்கும் – நீக்கும் அதிகாரம் இல்லை என்பதே அரசியல் சட்டம்! அவரை ஒன்றிய அரசு கட்டுப்படுத்தவில்லை என்றால், தமிழ்நாட்டு மக்களின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும்.
அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்த போது அதை அரசியல் சட்டத்துக்கு எதிரான நடவடிக்கை என்று விமர்சித்தீர்கள். ஆனால் நீங்களே ஒருகாலத்தில் வழக்குகளில் சிக்கிய அ.தி.மு.க. அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆளுநரிடம் கோரிக்கை வைத்திருக்கிறீர்கள். இது ஒரு முரண்பாடான நிலைபாடு என்று விமர்சகர்கள் கருதுகிறார்கள். அதற்கு உங்கள் பதில் என்ன?
இத்தகைய கோரிக்கைகளை எதிர்க்கட்சிகள் வைப்பது என்பது அரசியல் நடவடிக்கை. ஆனால் ஆளுநர் அரசியல்வாதியாக மாறக் கூடாது. அவர் அரசியல் சட்டபடிதானே நடக்க வேண்டும். அப்படி அவர் நடக்காததுதான் எங்களது சந்தேகத்துக்குக் காரணமாக இருக்கிறது. செந்தில் பாலாஜியை பா.ஜ.க. குறிவைப்பதைப் போலவே ஆளுநரும் செயல்படுகிறார். அதனைத்தான் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.
செந்தில் பாலாஜியின் கைதே சட்டவிரோதமானது என்று அவரது மனைவி வழக்கு தொடுத்திருக்கிறார். அமலாக்கத்துறையை அரசியல் உள்நோக்கத்துடன் பா.ஜ.க. பயன்படுத்துகிறது என்பது எங்களது பகிரங்க குற்றச்சாட்டு. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு உள்ளான அ.தி.மு.க. அமைச்சர்களை அவர்கள் ஆட்சியில் இருந்த போதும் கைது செய்யவில்லை; ஆட்சியிலிருந்து மக்கள் தூக்கியெறிந்த பிறகும் கைது செய்யவில்லை. ஆனால் அரசியல் பழிவாங்கும் எண்ணத்தோடு செந்தில்பாலாஜியை வருமானவரித் துறை ரெய்டு செய்கிறது. அமலாக்கத்துறை மனிதநேயமின்றி கைது செய்கிறது. நேர்மையாக செயல்பட வேண்டிய அந்த அமைப்புகளை அரசியல் நோக்கத்திற்காகப் பயன்படுத்தி மிரட்டுகிறார்கள் என்று நாங்கள் குற்றம் சாட்டுகிறோம்.
9 ஆண்டுக்கு முந்தைய ஒரு புகாருக்காக – திடீரென்று ரெய்டு நடத்தி – 18 மணி நேரம் அடைத்து வைத்து – சித்திரவதை செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது? அவர் அமைச்சராக இருப்பவர். பகிரங்கமாக வெளியில் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வந்தவர் தானே. அப்படி இருக்கும் போது அடைத்து வைத்து ஒரே நாளில் வாக்குமூலம் வாங்க வேண்டிய அவரசம் எங்கே வந்தது?
இதயத்தில் நான்கு அடைப்பு இருக்கிறது, அவருக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொன்ன பிறகும் அது “நாடகம்” என இதயத்தில் ஈரமில்லாமல் வாதிடுகிறது அமலாக்கத்துறை. முதலில் ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துமனை மருத்துவர்கள் கூறியதை நம்ப மறுத்தது. பிறகு தனியார் மருத்துவமனைக்கு ஏன் கொண்டு செல்ல வேண்டும் என எதிர்ப்புத் தெரிவித்தது. எனவே, அமலாக்கத்துறையின் இந்த மனித நேயமற்ற செயலையும், “செலக்ட்டிவ்” கைதையும்தான் அதிகார துஷ்பிரயோகம் என்கிறோம். எதிர்க்கிறோம்.
எனவே, அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க முடியாது என்பதே எங்களது நிலைப்பாடு.
மருத்துவமனையில் இருப்பதால் துறை இல்லாத அமைச்சராகத் தொடர்கிறார். அவ்வளவுதான்! மற்றபடி நேர்மையான- சட்டத்திற்குட்பட்ட விசாரணையை நாங்கள் எந்தக் காலத்திலும் எதிர்ப்பு தெரிவித்தது இல்லை. சட்டப்படியே சந்தித்து வெற்றி கண்டிருக்கிறோம்.
அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியைக் கைது செய்ததுமே நீங்களே முன்வந்து தார்மீக அடிப்படையில் அவரை பதவியில் இருந்து நீக்கியிருக்க வேண்டும் என்ற கருத்தும் நிலவுகிறதே?
நாடு முழுவதும் குற்ற வழக்குகள் – ஒன்றல்ல, பல இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் – எம்.பி.க்கள் மாநிலங்களிலும் ஒன்றிய அளவிலும் அமைச்சர்களாக இருக்கிறார்கள். வழக்கில் தண்டிக்கப்படும் வரை முதலமைச்சராக பதவியில் நீடித்தவர்தான் அம்மையார் ஜெயலலிதா. பா.ஜ.க.வின் ஒன்றிய அமைச்சரவையிலேயே எத்தனை பேர் மீது குற்றவழக்குகள் இருக்கிறது என்பது தேர்தல் அபிடவிட்டை பார்த்தாலே தெரியும். ஆகவே “தார்மீக அடிப்படை” என்பது ஒருவழிப் பாதையாக இருக்க முடியாது. பா.ஜ.க. தனது அரசியல் எதிரிகளைப் பழிவாங்கப் பயன்படுத்தும் கிளை அமைப்பாக அமலாக்கத்துறை மாற்றப்பட்ட பிறகு – நான் எடுத்துள்ள நிலைப்பாடே சரியானது ஆகும்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தனது அரசியல் எதிரிகளை பழி வாங்க, அமலாக்கத்துறையை பா.ஜ.க. பாய்ச்சிய சம்பவங்களை நினைவூட்டிப் பாருங்கள். நான் எடுத்த நிலைப்பாடு சரியானது என நீங்களே சொல்வீர்கள்.
இப்படி நடவடிக்கைக்கு உள்ளானவர்கள், பா.ஜ.க.வில் சேர்ந்த பிறகு அவர்கள் மீதான வழக்குகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதை நினைவூட்டிப் பாருங்கள். நான் எடுத்த நிலைப்பாடே சரியானது என நீங்களே சொல்வீர்கள்!
இது செந்தில்பாலாஜி என்ற ஒரு தனிப்பட்ட அமைச்சர் குறித்த பிரச்சினை மட்டுமல்ல. இது மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட ஒரு மாநில அரசுக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரம், உரிமைகள் குறித்த பிரச்சினை ஆகும். இது எங்கள் கட்சியின் அடிப்படைக் கொள்கையான மாநில சுயாட்சி, மாநில உரிமைகள் சம்பந்தப்பட்டது ஆகும்.
செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள், வருமான வரித்துறை அதிகாரிகளைத் தாக்கினார்கள். இது தொடர்பாக நீங்கள் செந்தில்பாலாஜியைக் கண்டித்தீர்களா?
அது தவறான செயல் தான். அதனை நான் கண்டித்தேன். அந்த தகவல் கிடைத்ததும், உடனடியாக அனைவரையும் காவல்துறை கலைத்தது. வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு தரப்பட்டது. வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கியவர்களை கைது செய்துள்ளது இந்த அரசு. அதை பா.ஜ.க.வின் துணை அமைப்பாக பயன்படுத்தப்படும் வருமான வரித்துறையும் மறைக்கிறது. பத்திரிக்கையாளர்களாகிய நீங்களும் மறைக்கிறீர்கள்.
தமிழ்நாட்டில் ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் இடையேயான உறவு மிகவும் சிக்கலான நிலைமைக்குச் சென்று விட்டது. இத்தகையச் சூழலில் ஆளுநருடன் இணைந்து செயல்படுவது சாத்தியமா? கூட்டணிக் கட்சிகள் எல்லோமே ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். நீங்களும் அதை வலியுறுத்துவீர்களா?
ஆளுநர் ரவியை இங்கிருந்து மாற்றுவது மட்டுமல்ல, ஆளுநர் பதவியே கூடாது என்பதே எங்களது நிலைப்பாடு ஆகும்.
ஒன்றியத்தில் ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக சற்றும் தளர்வில்லாத நிலைபாட்டை எடுத்துப் பேசி வருகிறீர்கள். கட்சிகளை அணி திரட்டுகிறீர்கள். அதற்காகத்தான் உங்கள் அரசையும் அமைச்சர்களையும் ஒன்றிய அரசு குறி வைக்கிறதா?
ஆமாம்! அதுதான் உண்மை. அகில இந்திய ரீதியில் பா.ஜ.க.வுக்கு எதிரான அணியை கட்டுவதில் தி.மு.க. முனைப்பாக இருக்கிறது. அகில இந்தியத் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள் என்னை வந்து சந்தித்து வருகிறார்கள். அவர்களிடம் பா.ஜ.க.வுக்கு எதிராக ஒரே அணி அமைய வேண்டும் என்பதை நான் வலியுறுத்தி வருகிறேன். பா.ஜ.க. – காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியை அமைக்க வேண்டும் என்று என்னிடம் சிலர் சொன்ன ஆலோசனையை நான் முழுமையாக நிராகரித்து விட்டேன். காங்கிரசையும் உள்ளடக்கிய ஒரு அணியால் மட்டுமே பா.ஜ.க.வை வீழ்த்த முடியும் என்றும் சொல்லி விட்டேன். இவை ரகசியத் தகவல்கள் அல்ல, பொதுமேடைகளில் இதனைச் சொல்லி விட்டேன்.
இப்போது பாட்னாவில் நடந்த கூட்டத்திலும் தேர்தல் அணிகளை எப்படி அமைப்பது என்பதை நான் விளக்கிச் சொல்லி இருக்கிறேன். மாநில அளவில் பெரிய கட்சி தலைமையில் கூட்டணி அல்லது தொகுதி பங்கீடு, அல்லது பொதுவேட்பாளர் என மூன்று விதமாக தேர்தலை சந்தித்துக் கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறேன். இதைத்தான் நான் ஆலோசனையாகச் சொன்னேன் என்பதையும் நிருபர்கள் கூட்டத்தில் விளக்கி இருக்கிறேன். இவை அனைத்தும் பா.ஜ.க.வை எந்தளவுக்கு கோபப்படுத்தி இருக்கிறது – அவர்களுக்கு “பாட்னா பயம்” எப்படி வந்திருக்கிறது என்பதை மத்தியப் பிரதேசத்தில் போய் பிரதமர் மோடி அவர்கள் தி.மு.க.வையும் தலைவர் கலைஞரையும் பழித்துப் பேசியதைப் படித்தால் உணரலாம். இதனால்தான் தி.மு.க. அமைச்சர்களை குறி வைக்கிறார்கள்.
தி.மு.க. அமைச்சர்களைக் குறி வைப்பதால், நாங்கள் எங்கள் அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளப் போவதில்லை. பா.ஜ.க.வின் வன்மத் தாக்குதலுக்குப் பிறகுதான் எங்கள் நிலைப்பாடுகளில் வேகம் அதிகமாகி இருப்பதாக நான் நினைக்கிறேன்.
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைக் கெடுக்க பா.ஜ.க. எந்தவிதமான சூழ்ச்சிகளிலும் ஈடுபடும். அதன் ஒருபகுதியைத்தான் மகாராஷ்டிராவிலும் இப்போது பார்க்கிறோம். பா.ஜ.க.வின் ஜனநாயக விரோத செயல்பாடுகளை எல்லாம் மக்கள் மவுனமாகப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மக்களின் மவுனத்தை தங்கள் மீதான பயம் என நினைத்த பாசிசவாதிகள் அனைவரும் வீழ்ந்ததுதான் வரலாறு. ஜனநாயகத்திற்கு, வாக்களிக்கும் மக்கள்தான் பாதுகாப்பு கவசம். அதுவே பலம்! எனவே, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைக் குலைக்க பா.ஜ.க. செய்யும் நரித்தனங்கள் எதுவும் பலிக்காது. மதச்சார்பற்ற முற்போக்குச் சக்திகள் கூட்டணி அமைப்பதையும் – வெற்றி பெறுவதையும் – இந்திய ஜனநாயகம் காப்பாற்றப்படப் போவதையும் இனி பா.ஜ.க.வால் தடுக்க முடியாது.
அகில இந்திய அளவில் பாரதீய ஜனதா கட்சி நரேந்திர மோடியை முன்னிறுத்துகிறது. ஆனால் எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை எல்லோருக்கும் ஏற்புடைய ஒரு தலைவரை முன்னிறுத்த எதிர்க்கட்சிகளால் இதுவரை முடியவில்லை. அத்துடன் பா.ஜ.க.வுக்கு எதிரான ஒரு வலுவான கூட்டணி இன்னும் உருவாகாத நிலையில், அக்கட்சியை அடுத்தத் தேர்தலில் வீழ்த்த முடியுமா?
அகில இந்திய அளவில் பாரதீய ஜனதா கட்சியே, இன்னும் நரேந்திர மோடியை முன்னிறுத்தவில்லை. அவரைத் தான் முன்னிறுத்துவார்கள் என்று நீங்களாக கற்பனை செய்து கொண்டு கேட்கிறீர்கள். இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. பொறுத்திருந்து பாருங்கள்!
பொதுவாக கூட்டணிக்கு தலைவர் இருப்பதை விட, இலக்கு இருக்க வேண்டும். அதுதான் முக்கியம். ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூகநீதி, கூட்டாட்சிக் கொள்கை, அரசியல் சட்டம் என அனைத்திற்கும் எதிராகச் செயல்படும் பாரதீய ஜனதா கட்சியை வீழ்த்துவோம் என்ற கருத்தியலே எங்கள் கூட்டணிக்கு தலைமை தாங்குகிறது.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார்.
The post ’’பா.ஜ.க. செய்யும் நரித்தனங்கள் எதுவும் பலிக்காது..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தி இந்து ஆங்கில நாளேட்டுக்கு அளித்த பேட்டியின் முழு விபரம் first appeared on Madras Murasu.
]]>The post ’’செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை மேல்முறையீடு..!’’ அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு first appeared on Madras Murasu.
]]>இதன்படி செந்தில் பாலாஜிக்கு ஜூன் 21 அன்று அறுவைச் சிகிச்சை செய்வதென காவேரி மருத்துவ மனை திட்டமிட்டுள்ளது. இதற்கு அனு மதி அளித்துள்ள சென்னை உயர் நீதி மன்றம், சிகிச்சைக்கு இடையூறு இல்லாமல், மருத்துவர்களின் ஆலோசனை அடிப்படையில், மருத்துவ மனை வளாகத்திற்கு உள்ளேயே செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்திக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.
ஆனால், செந்தில் பாலாஜியை தங்கள் இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தவும், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யவும் வலியுறுத்தி, அமலாக்கத் துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
உச்ச நீதிமன்ற கோடைக்கால சிறப்பு அமர்வில் நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு, மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்த ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜென ரல் துஷார் மேத்தா, இம்மனுவை உட னடியாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
“சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை தனியார் மருத்து வமனையில் சிகிச்சை பெற சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது தவறு. அவர் ஓர் அதிகாரமிக்க அமைச்சர் என்பதை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனை யில் சிகிச்சை அளிக்க அனுமதி கோரி யிருந்தோம். அது நிராகரிக்கப்பட்டது.
மேலும், அவரை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய நிலையில் 8 நாட்கள் மருத்துவ மனைக்கு வெளியே அழைத்து செல் லாமல் அங்கேயே வைத்து விசா ரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. இது சாத்தியமில்லாத ஒன்றா கும். எனவே, செந்தில்பாலாஜியை அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்.
மேலும், உச்ச நீதிமன்றத் தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக பட்டியலிட்டு இன்றே விசாரிக்க வேண்டும்” என வலியுறுத்தினார். ஆனால், இந்த மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற அமலாக்கத் துறை கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், ‘அமலாக்கத்துறை மனுவை விசாரணைக்கு ஏற்கிறோம். ஆனால், இது கோடைக்கால சிறப்பு அமர்வு என்பதால், அவசர வழக்காக எடுத்து உடனே விசாரிக்க முடியாது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஆலோசனை பெற்று, நாளை அல்லது நாளை மறுநாள் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்’ என்று நீதிபதிகள் கூறி விட்டனர்.
The post ’’செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை மேல்முறையீடு..!’’ அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு first appeared on Madras Murasu.
]]>The post ”செந்தில் பாலாஜி கைது பரபரக் காட்சிகள்..!” first appeared on Madras Murasu.
]]>நேரில் சென்று நலம் விசாரித்த முதல்வர்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை, முதல்வர் மு.க ஸ்டாலினும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கே நேரில் சென்று நலம் விசாரித்தார். செந்தில் பாலாஜியின் தோளைத் தொட்டு ஆறுதலாக பேசினார். முதல்வர் நேரில் வந்ததைப் பார்த்த செந்தில் பாலாஜி படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்து பேசினார். இந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், “விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று சொன்ன பிறகும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்படும் வகையில் சித்ரவதை கொடுத்த அமலாக்கத்துறையின் நோக்கம் என்ன? வழக்கிற்குத் தேவையான சட்ட நடைமுறைகளை மீறி மனிதநேயமற்ற முறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடந்து கொண்டிருப்பது தேவையா?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், “பாஜக-வின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் திமுக அஞ்சாது”; என்றும் “2024 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்றும் சாடினார்.
3 முக்கிய ரத்தக் குழாய்களில் அடைப்பு
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 3 முக்கிய ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டிருப்பதால், அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலைமை உள்ளதாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அறிவித்தனர். உயர் ரத்த அழுத்தம், நெஞ்சுவலி காரணமாக செந்தில் பாலாஜி ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில், செந்தில் பாலாஜிக்கு அவருடைய உயர் ரத்த அழுத்தம் 160/100 என்ற அளவிற்கு அதிகமாக இருந்தது. இதயத் துடிப்பில் மாற்றம் இருந்தது. இசிஜி (ECG)-யில் சில மாறுதல்கள் இருந்ததால் அவருக்கு மாரடைப்பு வராமல் இருக்க, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டார்.
அங்கு செந்தில் பாலாஜியின் இதயத் துடிப்பும் ஆக்சிஜன் அளவும் தொடர்ந்து கண்கா ணிக்கப்பட்டது. அவருக்கு மாரடைப்பு ஏற்படாமல் தடுப்பதற்கான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன. இந்நிலையில் இதயத்தில் ரத்தக் குழாய்களில் ஏதேனும் அடைப்பு இருக்கிறதா, என்பதைக் கண்டறிய மருத்துவர்கள் அவரைப் பரிசோதனை அறைக்கு அழைத்துச் சென்றார்கள். அந்த சோதனையின் முடிவு கள் வெளியான நிலையில், அமைச்சர் செந்தில் பாலா ஜிக்கு 3 முக்கிய ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டி ருந்தது தெரியவந்தது. இதனடிப்படையில், செந்தில் பாலாஜிக்கு, பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். இதை செய்வதற்கு ஒரு வாரமாவது ஆகும் என்பதால், செந்தில் பாலாஜி இரண்டு வாரங்களுக்கு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையின் இதய சிகிச்சை நிபுணர்களின் கண்காணிப்பிலேயே இருக்க வேண்டும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இந்தப் பின்னணியில், திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப் பட்டது. அதில், “செந்தில் பாலாஜியை கைது செய்வ தற்கான ஆதாரத்தை அமலாக்கத்துறை வழங்க வில்லை. அவர் சட்டப்படி கைது செய்யப்பட்டி ருந்தால், அமலாக்கத்துறை ஏன் அதை அதிகாரப்பூர்வ மாக அறிவிக்கவில்லை” என்று கேள்வி எழுப்பி யிருந்தது. அவர் கைது செய்யப்பட்டு உள்ளார் என்றால் உடனடியாக உடல்நிலையை காரணம் காட்டி பெயில் வழங்க வேண்டும்” என்று கூறியிருந்தது. அதேபோல, “என் கணவரை காணவில்லை அல்லது அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. அதனால் அவரை கண்டுபிடிக்க வேண்டும்” என்று செந்தில் பாலாஜியின் மனைவி மேகலாவும் தனியாக ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்கள், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுந்தர், சக்திவேல் ஆகியோர் அமர்வு முன்பு அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
வழக்கின் பின்னணி
தற்போதைய திமுக அரசில், மின்சாரம், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக இருக்கும் வி. செந்தில் பாலாஜி முன்பு அதிமுக-வில் இருந்தவர். அந்த வகையில், ஜெயலலிதா தலைமையி லான அதிமுக ஆட்சியில் 2011 முதல் 2015 வரை போக்கு வரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தார். இந்நிலையில், 2014-ஆம் ஆண்டில் போக்குவரத்து துறையில் ஓட்டுநர், நடத்துநர், இளநிலை உதவியாளர், இளநிலை பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்புக்கான பணி நடைபெற்றது. இந்தப் பணி நியமனங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட துறை அதிகாரிகள் பலர் முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், குறிப்பாக, 81 பேருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 1.62 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 2015-ஆம் ஆண்டு தேவசகாயம் என்பவர் அளித்த புகாரின் பேரில் ஏமாற்றுதல், சதி மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
எனினும், முதல் தகவல் அறிக்கையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயர் இடம்பெறவில்லை. போக்குவரத்துக் கழகத்தில் வேலைகளைப் பெற்றுத் தர பலரிடம் லஞ்சம் பெறப்பட்டதாக, 2018-ஆம் ஆண்டு மெட்ரோ போக்குவரத்துக் கழக தொழில்நுட்ப ஊழியரான அருள்மணி என்பவர் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட பலர் மீது புகார் அளித்தார். உயர்நீதிமன்ற உத்தரவை யடுத்து, செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார், மைத்துநர் கார்த்திக், போக்குவரத்துக் கழக அதி காரிகள் என 40-க்கும் மேற்பட்டோர் மீது மத்திய குற்றப் பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.
சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தன் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம், குற்றம்சாட்டப்பட்டவர் மற்றும் சாட்சியங்கள் 13 பேரும் சமரசத்தை எட்டியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்டதால், செந்தில் பாலாஜி மீதான குற்றவியல் வழக்கு களை நிறுத்திவைப்பதாக உத்தரவிட்டது. இதனிடையே, செந்தில் பாலாஜி மீது பணமோசடி வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. இதற்கு எதிராகவும் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி னார். இதையடுத்து, அமலாக்கத்துறையின் சம்மனை நிறுத்திவைத்து உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், செந்தில் பாலாஜி மீதான முந்தைய வழக்குகளில் புதிதாக விசாரணை நடத்த வேண்டும் என ஆணையிட்டது.
இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜி மற்றும் பாதிக்கப்பட்டோர் என மூன்று தரப்பிலும் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. விசாரணைக்கு அழைத்த சம்மனை ரத்து செய்ததற்கு எதிராக அமலாக்கத்துறையும், பழைய வழக்குகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி செந்தில் பாலாஜி தரப்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது. காவல்துறை விசாரணையில் நம்பிக்கை இல்லை என்பதால் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என பாதிக்கப்பட்டோர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்குகளில் கடந்த 2023 மே 16 அன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணா முராரி, ராம சுப்பிரமணியன் அமர்வு, 2 மாதங்களுக்குள் வழக்கை விசா ரித்து முடித்து அறிக்கை அளிக்குமாறு தமிழ்நாட்டின் மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு உத்தரவிட்டனர். பணமோசடி வழக்கு தொடர்பாக விசாரிக்க அம லாக்கத்துறை அனுப்பிய சம்மனை சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்தது செல்லாது எனவும் தீர்ப்பளித்த னர். மேலும், வழக்கு விசாரணையைப் பொறுத்து, சிறப்பு புலனாய்வு குழு அமைப்பது தொடர்பாக எதிர்காலத்தில் பரிசீலிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்களிலும் செந்தில் பாலாஜிக்கு எதிராக உத்தரவு வெளியான நிலை யில், அதனையே தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட ஒன்றிய பாஜக கைப்பாவையான அமலாக்கத்துறை, தற்போது நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
வருமான வரித்துறை சோதனை
தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரான வி. செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்க ளில், கடந்த மே 26 அன்று வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். முதலில் 40 இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனை மறுநாளே 200 இடங்களாக அதி கரிக்கப்பட்டது.
செந்தில் பாலாஜியின் இளைய சகோதரர் அசோக் குமார் மற்றும் நெருங்கிய நண்பர்கள், அவருக்கு நெருக்கமான ஒப்பந்ததாரரான சங்கரானந்தா உள்ளிட்டோரின் வீடு, அலுவலகங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. பாஜக மாநில மக ளிர் அணி செயலாளராக இருந்த மைதிலி வினோ, செந்தில் பாலாஜி மூலமாக அண்மையில் திமுக-வில் இணைந்தார். இந்நிலையில், அவரிடமும் வருமான வரித்துறை அதிகாரி கள் விசாரணை நடத்தினர். மொத்தம் 8 நாட்களுக்கு மிக நீண்ட வருமான வரித்துறை சோதனையாக இது இருந்தது. இது தமிழ்நாட்டில் விவாதங்களை எழுப்பியது.
இந்நிலையில்தான், வருமான வரித்துறையைத் தொடர்ந்து, செவ்வாயன்று அமலாக்கத்துறையும் செந்தில் பாலாஜியைக் குறிவைத்து திடீர் சோதனையில் இறங்கியது. முன்பு வருமானவரித்துறை சோதனையின் போது செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை செய்யப்படவில்லை. அவரின் இளைய சகோதரர், உறவினர்கள் மற்றும் நெருக்க மானவர்களின் வீட்டில்தான் சோதனை நடைபெற்றது.
ஆனால், அமலாக்கத்துறை நேரடியாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லத்திலேயே சோதனையில் ஈடுபட்டது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லம், மந்தைவெளி பிஷப் கார்டன் பகுதியில் உள்ள அவரது சகோதரர் அசோக்குமார் இல்லம் ஆகியவற்றில் காலை 8.30 மணிக்கு சோதனையைத் துவங்கிய அமலாக்கத்துறை அதிகாரிகள், நள்ளிரவு 1:30 மணி வரை 18 மணி நேரமாக சோதனையைத் தொடர்ந்த னர். இரவு 12 மணி வரை, செந்தில் பாலாஜியின் கரூர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
மத்திய துணை ராணுவ படை வீரர்களை வைத்துக் கொண்டு அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையை நடத்தினர். முன்னதாக, பிற்பகல் 2 மணிக்கு சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டின் முன்பு, திடீரென மத்திய அதிவிரைவுப்படை குவிக்கப்பட்டது. அப்போது, செந்தில் பாலாஜியின் வீட்டுக்கு விரைந்த தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, ’’காலை முதலே சோதனை நடக்கிறது. நாங்கள் செந்தில் பாலாஜியைப் பார்க்க வேண்டும். எப்படி இருக்கிறார் எனத் தெரிந்து கொள்ள வேண்டும். என்னை மட்டும் உள்ளே அனுப்புங்கள் இல்லை, செந்தில் பாலாஜியை வெளியே அழைத்து வாருங்கள், பார்க்க வேண்டும்” என அமலாக்கத்துறை அதிகாரிகளி டம் முறையிட்டார். ஆனால், அவர்கள் அனுமதி மறுத்து விட்டனர்.
இதனிடையே, செந்தில் பாலாஜி வீடுகளில் மட்டு மல்லாது, பிற்பகல் 12 மணியளவில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையிலும் அமலாக்கத்துறையினர் சோதனை செய்தனர். 10 மணிநேரமாக இங்கு சோதனை நடைபெற்றது. இரவு 12.30 மணிக்கு அங்கிருந்து கிளம்பிய அதிகாரிகள் சில நிமிடங்களில் மீண்டும் தலைமைச் செயலகத்திற்கு வந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி அறையில் உள்ள மூன்று கணினிகளை ஆய்வுக்கு உட்படுத்தினர். பின்னர், அனைத்து இடங்களிலும் சோதனையை முடித்துக் கொண்ட அதிகாரிகள், நள்ளிரவு 1.30 மணிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜியை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
திடீர் உடல்நலக்குறைவு
இந்நிலையில்தான், அமைச்சர் செந்தில் பாலாஜியை, அமலாக்கத்துறையினரே சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அமலாக்கத்துறையினர் அழைத்து வரும்போது, செந்தில் பாலாஜி முகத்தை கையால் மூடிக்கொண்டு, மற்றொரு கையால் நெஞ்சை பிடித்துக்கொண்டு வலி தாளாமல் கதறியபடியும், அழுது துடித்தபடியும் இருந்தார். செந்தில் பாலாஜிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது குறித்து, அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரது சகோ தரரிடம் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
எனினும், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு உள்ளதாகவோ, எதற்காக விசாரணைக்கு அழைத்துச் சென்றோம் என்பது பற்றியோ அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வ மாக எதுவும் தெரிவிக்கவில்லை. விசாரணைக்கு அழைத்து செல்லும் போது ஏதா வது உடல்நலக்குறைவு பிரச்சனை இருப்பதாக கூறினால், அவர் விரும்பும் மருத்துவமனைக்கு செல்வதற்கு அம லாக்கத்துறை அதிகாரிகள் அனுமதி அளிப்பார்கள். ஆனால், செந்தில் பாலாஜி விஷயத்தில் அமலாக்கத் துறையே அவரை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளதால், இது செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருப்பதையே காட்டுவதாக கூறப்படுகிறது. மேலும், சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா?
அமைச்சராக இருக்கும் ஒருவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தால், சில நடைமுறைகளை பின்பற்றியாக வேண்டும். அதாவது, முதலில் அமலாக்கத்துறை அதிகாரிகள், ஆளும் கட்சியில் உள்ள ஒரு அமைச்சரை கைது செய்தார் கள் என்றால், அதுகுறித்து உடனடியாக சட்டப்பேரவை செயலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இரண்டா வது, அந்த தகவல் சட்டப்பேரவைச் செயலகம் மூலம், சபா நாயகருக்கு தெரியப்படுத்தப்படும். மூன்றாவது, ஒரு வேளை கைது சம்பவம் நடக்கும்போது, சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தால், அதுபற்றி உட னடியாக சட்டப்பேரவையில் அறிவிக்கப்படும்.
நான்காவது, சட்டப்பேரவை நடைபெறாத பட்சத்தில், 5 நாட்களுக்குள் சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். ஆனால், இந்த நடைமுறை எதையுமே அமலாக்கத்துறை அதிகாரிகள் பின்பற்றவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து செந்தில் பாலாஜியின் வழக்கறிஞரும், திமுக மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆர். இளங்கோ அளித்துள்ள பேட்டியில், “சரியான எந்த தகவலை யும் அமலாக்கத்துறை தெரிவிக்கவில்லை.. மனித உரிமை களை மீறும் வகையில், செந்தில் பாலாஜி சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.. அவர் கைது செய்யப்பட்டாரா இல்லையா என்பதைக் கூட அமலாக்கத்துறை தெரிவிக்க வில்லை” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
16 அமைச்சர்கள்
இதனிடையே, செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்ட ஓமந்தூரார் மருத்துவமனைக்கு திமுக தலைவர்கள், அமைச்சர்கள் பலரும் விரைந்தனர். அமைச்சர் செந்தில் பாலாஜியை, கே.என். நேரு, உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், எ.வ. வேலு, பி.கே. சேகர்பாபு, தங்கம் தென்ன ரசு, எஸ். ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன், சாமிநாதன், கணே சன், சிவசங்கர், அனிதா ராதாகிருஷ்ணன், கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட 16 அமைச்சர்கள் பார்த்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள், செந்தில் பாலாஜி கண்களை கூட திறக்க முடியாத நிலையில் சுயநினைவு அற்றுப்படுத்திருப்பதாக தெரிவித்தனர்.
செந்தில் பாலாஜியை சந்தித்து விட்டு வெளியே வந்த அமைச்சர் சேகர் பாபு, ’’அமைச்சர் செந்தில் பாலாஜி சுய நினைவின்றி காணப்படுகிறார். காது பக்கத்தில் வீக்கம் தெரிகிறது. தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் செந்தில் பாலாஜி வைக்கப்பட்டிருக்கிறார். செந்தில் பாலாஜிக்கு எடுக்கப்பட்ட ஈ.சி.ஜி-யில் வேரியேஷன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். அவர் துன்புறுத்தப்பட்டதற்கு இவையெல்லாம் அடையாளமாக காணப்படுகிறது” என குற்றம் சாட்டினார்.
மருத்துவமனையில் நீதிபதி
திமுக மற்றும் செந்தில் பாலாஜியின் மனைவி ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களால் நெருக்கடிக்கு உள்ளான அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜி-யின் கைதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டது. ஒருவரை கைது செய்த 24 மணிநேரத்திற்குள் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்ற நிலையில், செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் ஆஜர்படுத்த முடியாத நிலைமை இருப்பதைக் குறிப்பிட்டு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லியை, ஓமந்தூ ரார் அரசு மருத்துவமனைக்கே அழைத்து வந்து, செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்தியது. அப்போது, செந்தில் பாலாஜியை காவலில் வைப்பதற்கு திமுக வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அமலாக்கத்துறையானது, முன்கூட்டியே தகவல் எதுவும் தெரிவிக்காமல், சட்டவிரோதமாக செந்தில் பாலாஜியைக் கைது செய்துள்ளதாகவும், செந்தில் பாலாஜிக்கு வியாழக்கிழமையன்று பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்யப்பட உள்ளதால் அவரை காவலில் அனுப்பக்கூடாது என்றும், மேலும், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி, நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய உள்ளதாகவும் வாதங்களை எடுத்து வைத்தனர். இதையடுத்து, நீதிமன்றக் காவல் வழங்கும் விவகாரம் தொடர்பாக, அமலாக்கத்துறை மற்றும் செந்தில் பாலாஜி ஆகிய இருதரப்புமே நீதிமன்றத்தில் வாதங்களைத் தொடரலாம் என்று அறிவித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜி யை ஜூன் 28 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
The post ”செந்தில் பாலாஜி கைது பரபரக் காட்சிகள்..!” first appeared on Madras Murasu.
]]>The post ”நெருப்பாற்றில் நீந்திப் பழக்கப்பட்ட தி.மு.க., இதிலும் வெற்றி பெறும்..!” கி.வீரமணி first appeared on Madras Murasu.
]]>2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது பா.ஜ.க.வுக்கு மிகக் கடினமானதொரு நிலை என்று பா.ஜ.க. அரசு வட்டாரமும் – அதிகார மய்யங்களும் உணர்ந்திருப்பதால் அதன் தோல்வி பயத்தின்காரணமாகவே, வலுவான எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள ஆட்சி – அமைச்சர்களைத் தம்மிடம் உள்ள ‘திரிசூல’மான சி.பி.ஐ, வருமான வரித்துறை, அமலாக்கத் துறைகளை முழு வீச்சில் பயன்படுத்தி, தி.மு.க. போன்ற கட்சிகளை அச்சுறுத்தும் வகையினைக் கையாளத் துவங்கியுள்ளதற்கு எடுத்துக்காட்டுதான் – தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட வருமான வரித்துறை, அமலாக்கத் துறை சோதனைகள் ஆகும். அதன் மூலம் அவருக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள மன உளைச்சல் – உடல் நலப் பாதிப்பு ஆகியவை அப்பட்டமான மனித உரிமைகள் பாதிப்பும் ஆகும்.
முன்பு, 2011-2016இல் பழைய அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது, அவர்மீது தனி நபர்களால் தரப்பட்ட புகார்கள் அடிப்படையில் விசாரணை, சோதனைகள் என்று இப்போது நடத்த முன் வந்துள்ளது பா.ஜ.க. அரசு.
அவரும் தொடக்கத்திலிருந்தே அமலாக்கத் துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்புக் கொடுப்பதாகக் கூறி, சொன்னபடி ஒத்துழைப்பையும் கொடுத்து வந்த நிலையில், தலைமைச் செயலகத்துக்கு வந்து சோதனையில் ஈடுபடுவதை – தி.மு.க. ஆட்சி மீது மக்களுக்கு அவப்பெயரை உருவாக்கும் உத்தியாகவே கருத வேண்டியுள்ளது!
தி.மு.க.மீது சேற்றை வாரி இறைத்தாலும், அவற்றை சட்ட ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் எதிர்கொள்ளும் துணிவும், வலிமையும் அதற்கு உண்டு; பல நெருக்கடிகள், அவதூறுகள், வழக்குகளை எதிர் கொண்டு வெற்றி பெற்ற வரலாறும் அதற்கு உண்டு!
சட்டப் போராட்டங்களானாலும், மக்கள் போராட்டமானாலும் இரண்டிலும் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்று சோதனைகளிலிருந்து மீண்ட வரலாறும் வலிமையும் தி.மு.க.வுக்கு எப்போதும் உண்டு! இப்போதும் உண்டு!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நிலை மிகவும் சீர்கேடாகுமளவுக்கு, இப்படி நடப்பது ஜனநாயக விரோதம் மட்டுமல்ல; மனித உரிமைப் பறிப்பும்கூட.
மக்களுக்கு எந்த ஆட்சி எப்படிப்பட்டது என்பது தெளிவாகப் புரியும். அவர்கள் பொறுமைக்குப் பதில் கிடைக்க வேண்டிய நேரத்தில், கிடைக்க வேண்டிய முறையில் கிட்டும்! அமைச்சர் செந்தில் பாலாஜி விரைவில் குணமடைய விரும்புகிறோம்.
இத்தகைய நெருப்பாற்றில், நீந்திப் பழக்கப்பட்ட தி.மு.க. இந்தப் போராட்டத்திலும் புடம் போட்ட தங்கமாக வெளிவரும்.
ஜனநாயகத்தின் நிரந்தரக் காவலராகத் தன் கடமையைத் தவறாது ஆற்றும்!
The post ”நெருப்பாற்றில் நீந்திப் பழக்கப்பட்ட தி.மு.க., இதிலும் வெற்றி பெறும்..!” கி.வீரமணி first appeared on Madras Murasu.
]]>