acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post வெகுமானம் கொடுக்கும் பெருவிடைக்கோழி! first appeared on Madras Murasu.
]]>காலநிலையைப் பொருத்து தீவனம் கொடுப்பது, தண்ணீர் வைப்பது. உரிய நேரத்தில் மேய்ச்சலில் விடுவது போன்ற பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். கோழிக்குஞ்சுகளைப் பொருத்தவரையில் அதிக வெளிச்சம் இருந்தால் தீவனம் எடுத்துக்கொள்ளாது. அதனால் அவற்றை இருட்டு இருக்கும் பகுதிகளாக பார்த்து அடைப்போம். காலையில் 6 மணிக்கு கோழிகளை மேய்ச்சலுக்கு திறந்துவிடுவோம். அனைத்து கோழிகளும் நல்ல மேய்ச்சலில் இருக்கிறதா என்பதை கவனிப்பேன். அதன்பிறகு 11 மணியளவில் கம்பு, ராகி, சோளம், கோதுமை, அரிசி அடங்கிய கலப்புத்தீவனம் கொடுப்போம். மாலையில் அடைய வரும் கோழிகள் சரியான அளவில் தீவனம் உட்கொண்டதா? என்பதை கவனித்துக் கொள்வேன். அதேபோல் காலையில் கோழிகளை மேய்ச்சலுக்கு திறந்து விட்ட பின்பு கூண்டுகளை சுத்தம் செய்துவிடுவேன். பண்ணையைச் சுற்றிலும் இயற்கை முறையில் விளைந்த மூலிகைச்செடிகள் இருக்கின்றன. இவற்றைக் கோழிகள் சாப்பிடுவதால் நோய்கள் வருவதில்லை. வாரம் ஒருமுறை சேவல்களை குளிப்பாட்டுவேன்.
கோழிகளுக்கு அருகில் எப்போதும் தண்ணீர் வைத்திருப்பேன். காலை, மாலை என இருவேளைகளும் தண்ணீர் வைக்கும் கிண்ணத்தை சுத்தம் செய்வேன். வாரம் ஒருமுறை கோழிகளுக்கு வெள்ளை சாதத்தில் வேப்ப எண்ணெய் கலந்து கொடுப்பேன். இவ்வாறு கொடுக்கும்போது ஒருமணி நேரத்திற்கும் மேலாக வேப்ப எண்ணெயை தானியத்தோடு ஊற வைத்துக் கொடுப்பது நல்லது. இது கோழிகளின் இரைப்பையை சுத்தம் செய்யும். இதன்மூலம் கோழிகளை நோயில் இருந்து காக்கலாம். மழைக்காலத்தில் கோழிகளுக்கு நோய் வராமல் தடுக்க நன்கு ஆற வைத்த வெந்நீர் மட்டுமே கொடுக்கிறேன். கோழிகளுக்கு அரசு கால்நடை மருத்துவர்கள் மூலம் ஆர்2டி தடுப்பூசி போடுகிறேன். இந்தத் தடுப்பூசியை 1 மற்றும் 6வது மாதத்தில் போடுவேன் சராசரியாக ஒரு பெருவிடைக்கோழி 10 லிருந்து 14 முட்டைகள் வரை இடும்.
5 நாட்களுக்கு ஒருமுறை கோழி முட்டைகளை இன்குபேட்டரில் வைப்பேன். ஒரு நாளைக்கு எப்படியும் 50 முட்டைகள் கிடைக்கும். இதை இன்குபேட்டரில் வைத்துத்தான் குஞ்சு பொரிக்க வைப்பேன். ஆயிரம் முட்டைகள் வைக்கிறோம் என்றால் எப்படியும் 250 முட்டைகள் கருகூடாமல் வீணாகிவிடும். ஆனால் 750 முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் கிடைக்கும். இந்தக் கோழிக்குஞ்சுகளை 7 நாட்கள் வரை குண்டு பல்பின் சூட்டில் வைப்பேன். 14வது நாளில் ஐடிபி மருந்து போட்ட பிறகு அடுத்த செட்டில் அடைத்து விடுவேன். இரண்டு மாதம் ஆன கோழிக்குஞ்சுகளை விற்பனை செய்வேன். ஒரு மாதத்தில் கோழிக்குஞ்சுகளை விற்பனை செய்வதன் மூலம் ரூ.1.25 லட்சம் வருமானமாக கிடைக்கிறது. இதில் பராமரிப்பு செலவு ரூ.25 ஆயிரம் போக ரூ.1 லட்சம் லாபமாக கிடைக்கிறது. இது சராசரியாக ஒரு மாதத்திற்கு கிடைக்கும் லாபம். பெரியகோழிகளை நான் விற்பனை செய்வது கிடையாது. 4 பெட்டைக் கோழிக்கு ஒரு சேவல் என்ற கணக்கில் அடைத்து வைத்து இனப்பெருக்கம் செய்வதால் பெருவிடைக் கோழிகுஞ்சுகள் தரமானதாக கிடைக்கின்றன. இதனால் நிறைய வாடிக்கையாளர்கள் என்னைத் தேடிவந்து பெருவிடைக் கோழிகுஞ்சுகளை வாங்கிச் செல்கிறார்கள்” என்கிறார்.
தொடர்புக்கு: செல்வகணபதி
90800 94664, 96889 14506.
The post வெகுமானம் கொடுக்கும் பெருவிடைக்கோழி! first appeared on Madras Murasu.
]]>The post ’’ GATE 2025 தேர்வு ..! ’’ அரசு வேலை, உயர்கல்வி வேண்டுமா ..? பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>முக்கியத்துவம்:
கேட் தேர்வு அடிப்படையில் எம்.டெக்., எம்.எஸ்., மற்றும் பிஎச்.டி., போன்ற படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களும் இத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன. இத்தேர்வை பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகம் – ஐ.ஐ.எஸ்.சி., மற்றும் ஏழு இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் -ஐ.ஐ.டி., இணைந்து நடத்துகின்றன. கேட் 2025 தேர்வை ஐ.ஐ.டி.,-ரூர்க்கி நடத்துகிறது.
தகுதிகள்:
கேட்-2025 தேர்வு எழுத அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பொறியியல், தொழில்நுட்பம், கட்டடக்கலை, அறிவியல், கலை, வணிகவியல் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். இத்தேர்வில் பங்கேற்க வயது வரம்பு இல்லை.
தாள்கள்:
கேட் தேர்வு, 30 வெவ்வேறு துறைகளுக்கு நடத்தப்படுகிறது. ஒருவர், ஒன்று அல்லது இரண்டு தாள்களை எழுத விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை:
ஆன்லைன் வாயிலாக பல அமர்வுகளில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. மொத்தம் 30 வெவ்வேறு பிரிவுகளை கொண்டிருக்கும் இத்தேர்வில் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட பொறியியல் துறைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. 3 மணி நேரம் நடைபெறும் இத்தேர்வில் மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு 65 கேள்விகள் கேட்கப்படும். ‘மல்டிபில் சாய்ஸ்’ கேள்விகள் மற்றும் ‘நிமெரிக்கல் ஆன்சர்’ வடிவம் ஆகிய இரண்டு முறைகளில் கேள்விகள் இடம்பெறும். தேர்வு மதிப்பெண் மூன்று ஆண்டுகள் வரை செல்லுபடியாகும்.

தேர்வு கட்டணம்:
ஆகஸ்ட் 24ம் தேதி முதல் செப்டம்பர் 26 தேதிக்குள் விண்ணப்பிப்பவர்கள் தாள் ஒன்றுக்கு ரூ.1,800 செலுத்த வேண்டும். தாமதமாக அக்டோபர் 7ம் தேதிக்குள் விண்ணப்பிப்பவர்கள் ரூ. 2,300 செலுத்த வேண்டும். பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., / மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.900 செலுத்தினால் போதுமானது. தாமதமாக செலுத்தினால் ரூ.1400.
தேர்வு நடைபெறும் தேதிகள்:
2025 பிப்ரவரி 1, 2, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. கேட் தேர்வு முடிவுகள் மார்ச் 19ம் தேதி வெளியாகிறது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 26 | ஆனால், அக்டோபர் 7 ஆம் தேதி வரை கூடுதல் கட்டணத்துடன் விண்ணப்பிக்கும் கால அவகாசம் உள்ளது. கேட் தேர்வு குறித்த முழுமையான விபரங்களுக்கு: https://gate2025.iitr.ac.in என்ற தளத்தை பார்க்க வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பிக்க https://goaps.iitr.ac.in/login கிளிக் செய்து பதிவு செய்யலாம்.
The post ’’ GATE 2025 தேர்வு ..! ’’ அரசு வேலை, உயர்கல்வி வேண்டுமா ..? பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>The post ” B.Ed முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கை ..!” விண்ணப்பம் பதிவு இறுதி நாள் 26.09.2024 first appeared on Madras Murasu.
]]>விண்ணப்பம் பதிவு செய்ய விண்ணப்பக் கட்டணமாக ரூ.500/- செலுத்தப்பட வேண்டும். SC / ST விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணம் ரூ.250/- மட்டும் செலுத்தினால் போதுமானது. மாணாக்கர்கள் விண்ணப்பிக்கும் போது தங்களது விருப்ப வரிசைப்படி கல்லூரிகளை தெரிவு செய்தல் வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் எந்தெந்த கல்லூரிகளில் என்னென்ன பாடப்பிரிவுகள், சேர்க்கை எண்ணிக்கை போன்ற விவரங்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்பக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் Debit Card/Credit Card/Net Banking மூலம் இணையதள வாயிலாக செலுத்தலாம். இணையதள வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணாக்கர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் “The Director, Directorate of Collegiate Education, Chennai -15” என்ற பெயரில் 16.09.2024 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை மூலமாகவும் அல்லது நேரடியாகவும் செலுத்தலாம்.
மாணாக்கர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மாணாக்கர்கள் மேற்குறித்த இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்யத் துவங்கும் நாள்: 16.09.2024 இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய இறுதி நாள் : 26.09.2024 . தொடர்பு எண்: 044 – 24343106 / 24342911
The post ” B.Ed முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கை ..!” விண்ணப்பம் பதிவு இறுதி நாள் 26.09.2024 first appeared on Madras Murasu.
]]>The post பாதுகாப்பு படையில் 39,481 கான்ஸ்டபிள் பணியிடங்கள்..! 10 ஆம் வகுப்பு படித்தோர் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>எல்லை பாதுகாப்பு போலீஸ் 15,654, தொழில் பாதுகாப்பு படை 7145, மத்திய ரிசர்வ் போலீஸ் 11,541, எஸ்.எஸ்.பி., 819, இந்தோ – திபெத் 3017, ஏ.ஆர்., 1248, எஸ்.எஸ்.எப்., 35, என்.சி.பி., 22 என மொத்தம் 39,481 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு
வயது: 18 – 23 (1.1.2025ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ சோதனை.
தேர்வு மொழி: தமிழ் / ஆங்கிலம். இந்த தேர்வினை தமிழ் மொழியில் எழுதலாம். இத்தேர்விற்கான பாடங்களுக்கு அனைத்து வீடியோக்களும் www.youtube.com/@MadrasMurasu என்ற தளத்தில் உள்ளது. சப்ஸ்கிரைப் செய்து நோட்ஸ் எழுத்து படியுங்கள். இந்தத் தேர்வில் வெற்றி பெற்று மத்திய அரசின் வேலையில் சேரலாம்.
Part – A General Intelligence and Reasoning –20 வினாக்கள்
Part – B General Knowledge and General Awareness 20 வினாக்கள்
Part – C Elementary Mathematics 20 வினாக்கள்
Part – D English அல்லது Hindi 20 வினாக்கள்

தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலுார்.
விண்ணப்பிக்கும் முறை: https://ssc.gov.in
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100.பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி.,பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 14.10.2024
இந்த வேலைவாய்ப்பு குறித்த முழு விபரங்களை படிக்க இங்கே கிளிக் Notice_of_CTGD_2024_09_05 செய்யலாம்.
The post பாதுகாப்பு படையில் 39,481 கான்ஸ்டபிள் பணியிடங்கள்..! 10 ஆம் வகுப்பு படித்தோர் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>The post மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பிளஸ் 2 முடித்தவருக்கு வேலை ..! உடனே விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>கான்ஸ்டபிள் / தீயணைப்பு பிரிவில் அசாம் 164, உ.பி., 108, மஹாராஷ்டிரா 72, காஷ்மீர் 65, ஒடிசா 64, மத்திய பிரதேசம் 56, மேற்கு வங்கம் 55, தமிழகம் 39 உட்பட மொத்தம் 1130 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு
வயது: 18 – 23 (30.9.2024ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 30.9.2024.
விவரங்களுக்கு: www.cisfrectt.cisf.gov.in என்ற இணையத்தை பார்க்க வேண்டும். வேலைவாய்ப்பு குறித்த ஆங்கில அறிவிக்கையை முழுமையாக படிக்க இங்கே கிளிக்க் செய்து cisf recruitment 2024_notification_madrasmurasu படிக்கலாம்
விமான நிலையம், துறைமுகம், அனுமின் நிலையங்கள் போன்ற மத்திய அரசின் நிறுவனங்களில் பாதுகாப்பு பணியில் வேலைக்கு அமர்த்தப்படுவர். இவர்களுக்கு பணி புரியும் இடங்களிலேயே குடியிருக்க வீடு வழங்கப்படும். பிள்ளைகள் படிக்க, கேந்திர வித்யாலயா பள்ளிகள் உண்டு. நவோதயா பள்ளிகளும் இருக்கிறது.
எனவே, தமிழ்நாட்டை சேந்த ஆண்களும் பெண்களும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வுக்கான பாடத்திட்டத்தை உள்ளடக்கிய www.youtube.com/@MadrasMurasu இலவச வீடியோக்கள் மூலம் பார்த்து படித்து தேர்வெழுதி எளிதில் பாஸ் ஆகலாம். மத்திய அரசின் வேலையில் சேரலாம். உடனே விண்ணப்பித்து மத்திய அரசு வேலையில் சேருங்கள்.

The post மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பிளஸ் 2 முடித்தவருக்கு வேலை ..! உடனே விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>The post ரயில்வேயில் 11,558 காலிப்பணியிடம் ..! பட்டதாரிகள், 12 ஆம் வகுப்பு – உடனே விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>கிராஜூவேட் பிரிவில் டிக்கெட் சூப்பர்வைசர் 1736, ஸ்டேஷன் மாஸ்டர் 994, சரக்கு ரயில் மேனேஜர் 3144, ஜூனியர் அக்கவுன்ட் அசிஸ்டென்ட் (டைப்பிஸ்ட்) 1507, சீனியர் கிளார்க் (டைப்பிஸ்ட்) 732, டிக்கெட் கிளார்க் 2022, அக்கவுன்ட்ஸ் கிளார்க் (டைப்பிஸ்ட்) 361, ஜூனியர் கிளார்க் (டைப்பிஸ்ட்) 990, ரயில் கிளார்க் 72 உட்பட மொத்தம் 11,558 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: கிராஜூவேட் பிரிவுக்கு ஏதாவது ஒரு டிகிரி, மற்ற பிரிவுக்கு பிளஸ் 2.
வயது: 18 – 36, 18 -33 (1.1.2025ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு | சான்றிதழ் சரிபார்ப்பு | மருத்துவ சோதனை.
விண்ணப்பிக்கும் முறை: https://www.rrbchennai.gov.in/
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250.
கடைசிநாள்: 13.10.2024

The post ரயில்வேயில் 11,558 காலிப்பணியிடம் ..! பட்டதாரிகள், 12 ஆம் வகுப்பு – உடனே விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>The post TNPSC, SSC, IBPS, RRB போட்டித் தேர்வு இலவச பயிற்சி ..! உடனே விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>TNPSC, SSC, IBPS, RRB ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்வலர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள், சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரி வளாகத்தில் 500 ஆர்வலர்களுக்கும் மற்றும் சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள மாநிலக் கல்லூரி வளாகத்தில் 300 ஆர்வலர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேற்படி போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் ஆர்வலர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணையவழியாக விண்ணப்பங்கள் பெற்று, புதிதாக சேர்க்கை நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரை ஆறு மாத காலம் வாராந்திர வேலை நாட்களில் நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் ஆர்வலர்கள் குறைந்த பட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு 01-01-2024 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேற்படி போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் உணவு மற்றும் தங்கும் வசதிகள் இல்லை.
பயிற்சியில் சேர விரும்பும் ஆர்வலர்கள் போட்டித் தேர்வுகள் பயிற்சி மைய இணையதளம் www.cecc.in வாயிலாக 10.09-2024 முதல் 24.09.2024 வரை விண்ணப்பிக்கலாம். பயிற்சி வகுப்புகளில் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044 – 25954905 மற்றும் 044 – 28510537 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழக அரசால் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள இனவாரியான இடங்களுக்கு ஏற்ப ஆர்வலர்கள் தெரிவு செய்யப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விவரங்கள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் வெளியிடப்படும். அக்டோபர் மாதம் இரண்டாம் வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பயிற்சித் துறைத் தலைவர் அறிவித்துள்ளார்.
The post TNPSC, SSC, IBPS, RRB போட்டித் தேர்வு இலவச பயிற்சி ..! உடனே விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>The post ” முத்துக்கு நேர்ந்த கொடுமை ..!” சசி ஐயப்பன் first appeared on Madras Murasu.
]]>அவருக்கு சாப்பாடு கொடுப்பதற்க்காக என் அம்மா சமைத்த உணவை எடுத்துக்கொண்டு அவர் வேலை பார்க்கும் தொலைவிலுள்ள கிராமத்திற்கு சென்றேன். அவர் ஓரு கேஸ் விஷயமாக வெளியில் சென்றிருந்தார். சிறுது நேரம் அவரின் வருகைக்காக காத்துக்கொண்டிருந்தேன். அப்போது அங்கு ஒரு வயதான பெண்மணி பரபரப்புடன் ஓடி வந்து அங்கிருந்த போலீஸ் அதிகாரியிடம் “ஐயா அவன் என் முத்துவை அடிச்சுட்டான்யா, கல்லைத்தூக்கி மண்டையில போட்டுட்டான்யா, ரத்தமா வடியுதுய்யா, உயிரு இழுத்துக்கிட்டு கிடக்குய்யா, கொஞ்சம் சீக்கிரம் வாங்கய்யா” என்று சத்தமிட்டு கொண்டு அழுது புலம்புகிறாள். அவள் புலம்புவதை பார்த்து அந்தப் போலீஸ் ஸ்டேஷன் கவலையோடு உற்று நோக்குகிறது.
ஆனால், அந்த போலீஸ் அதிகாரியோ எந்த டென்ஷனும் இல்லாமல் “சரிம்மா அமைதியாயிரு..’’என்று அவளிடம் கத்தினார். எனக்கும் கோபம் வந்தது. என்னடா இப்படியும் மனிதர்களா என்று மனது வருத்தமடைந்தது. அப்போது என் அப்பா அவரின் வேலையை முடித்துவிட்டு வர தாமதமாகும் என்றும் நீங்கள் உங்கள் ஊருக்கு செல்லுங்கள் என்றும் அந்த போலீஸ் அதிகாரி கூறியதால் நான் அங்கிருந்து என் ஊருக்கு கிளம்பி வந்து விட்டேன். வரும்போது என் மனம் முழுவதும் அந்த போலீஸ் ஸ்டேஷனையும் அந்த முத்துவையுமே நினைத்து அலைபாய்ந்து கொண்டிருந்தது. எனக்கு ஊருக்கு வந்த சேர்ந்த பின்னும், முத்துக்கு என்னவாயிருக்கும் என்ற எண்ணமே எனக்கு மேலோங்கி இருந்தது. என் அப்பா வந்தவுடன் அவரிடம் கேட்க மிக ஆர்வமாக அவரின் வருகைக்காக காத்துக்கொண்டிருந்தேன்.
என் அப்பா எங்கள் வீட்டிற்கு அன்று இரவு வந்தவுடன் அவரிடம் நடந்த விவரத்தை சொல்லி வருத்தப்பட்டேன். அந்த போலீஸ் அதிகாரி நடந்த முறையையும் சொல்லி ஆதங்கப்பட்டேன். ஆனால் என் அப்பாவோ எந்த சலனமுமின்றி மிக சாதாரணமாக எடுத்துக்கொண்டார். ஆனால் அவரோ அந்த போலீஸ் அதிகாரி மிகவும் நல்லவர் என்றும் மிக நியாயமாக நடப்பவர் என்றும் என்னிடம் கூறினார்.
எனக்கு அந்த போலீஸ் அதிகாரியிடமிருந்த கோபம் என் அப்பாவின் மீது தாவியது. என் மனதிற்குள்ளேயே என்னடா எல்லா போலீசும் இப்படித்தானா கல் நெஞ்சம் கொண்டவர்களா இருப்பார்களோ என்று வருந்தினேன். அப்போது அவரிடம் “அப்பா முத்துவுக்கு எப்படி இருக்கு, அந்த கால்தூக்கி போட்ட ஆளை என்ன செய்தீர்கள் என கேட்டேன்”.
அதற்க்கு அவர் “முத்து இப்போ உயிரோட இல்லப்பா, பலமான அடி விழுந்ததால் ஒரே அடியில் உயிர் போயிடுச்சுப்பா” என்கிறார். எனக்கு வேதனை தாள வில்லை. நான் அவரிடம் “அந்த கல்லை தூக்கி போட்ட ஆளை என்ன செய்தீர்கள்” என கோபமாக கேட்டேன்.
’’அந்தக் கள்ளப்பயலுக்கு 500 ரூபாய் அபராதம் போட்டு அந்த அம்மாவிற்கு கொடுத்துட்டோம்’’ என்றார். நான் மிக கோபத்தின் உச்சிக்கே சென்று, ‘’வெறும் 500 ரூபாய் தானா அந்த முத்துவிற்கு” என்றேன்.
அதற்கு அவர் மிகவும் நிதானமாக “அந்த சேவலுக்கெல்லாம் அவ்வளவுதான் கொடுப்பார்கள்” என்னை பெரிதாக மதிக்காமல் அடுத்த வேலையை பார்க்கச் சென்று விட்டார்.

சசி ஐயப்பன்
The post ” முத்துக்கு நேர்ந்த கொடுமை ..!” சசி ஐயப்பன் first appeared on Madras Murasu.
]]>The post ’’ தமிழக அரசில் 861 காலிப்பணியிடம் ..!’’ டிப்ளமோ , ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வில் பட்டயம், தொழிற்பயிற்சி நிலை யில் உள்ள பதவிகளுக்கான நேரடி நியமனத்திற்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 13 ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் 11 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
தமிழ் தகுதித் தேர்வு , பொது அறிவு மற்றும் திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் தேர்வு நவம்பர் 9 ஆம் தேதி நடைபெறும்.
Agriculture, Architecture, Automobile and Mechanical Engineering, Civil Engineering, Electrical Engineering / Electrical and Electronics Engineering, Handloom Technology / Textile Technology / Textile Manufacture, Instrumentation Engineering , Mechanical Engineering, Physical Education , Printing Technology, Stenography, Town and Country Planning,

Trade – Boiler Attendant, Trade – Draughtsman (Civil), Trade – Electrician, Trade – Fitter, Trade – Instrument Mechanic, Trade – Lab Technician , Trade – Mechanic Motor Vehicle Trade – Mechanic Refrigeration and Air-Conditioner, Trade – Surveyor, Trade – Welder (Gas and Electric) ஆகிய பாடங்கள் தாள் இரண்டு என்கிற வகையில் நவம்பர் 11 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடைபெறும்.
டிகிரி, டிப்ளமோ, ஐடிஐ, சான்றிதழ் படிப்பு முடித்தவர்கள் இந்த போட்டித்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தாரர்கள் குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தி ஆகி இருக்க வேண்டும். ஒரு சில பதவிகளுக்கு குறைந்தபட்ச வயது 21 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுபோல உச்ச வயது வரம்பில் பணியின் தன்மைக்கு ஏற்ப மாறுபடுகிறது.
எனவே, வயது வரம்பு, கல்வித்தகுதி, தேர்வு விபரம், பாடத்திட்டம் ஆகியவற்றை வேலைவாய்ப்பு அறிவிக்கையினை முழுமையாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ் அறிவிக்கை CTSE_DIP_Tamil_13.08.2024_
இந்த வேலைவாய்பில் அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்தகுதி தேர்வு, பொது அறிவிவு தாள் ஆகியவை பத்தாம் வகுப்பு தரத்தில்தான் இருக்கும். எனவே, குருப் 4 தரத்தில்தான் கேள்விகள் கேட்க்கப்படும். அதுதொடர்பான அனைத்து பாடங்களையும் உள்ளடக்கிய வீடியோக்கள் மெட்ராஸ் முரசு யூடியூப் சேனலில் www.youtube.com/@MadrasMurasu உள்ளது. அதை சப்ஸ்கிரைப் செய்து பார்த்து, நோட்ஸ் எடுத்து படிக்கலாம். எளிதில் இந்த தேர்வில் வெற்றிபெற்று அரசு பணியில் சேரலாம்.

The post ’’ தமிழக அரசில் 861 காலிப்பணியிடம் ..!’’ டிப்ளமோ , ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>The post ’’ இந்த கூட்டத்தொடரின் முக்கிய விஷேசம் என்ன ? ‘’ நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு first appeared on Madras Murasu.
]]>பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு, மத்திய பட்ஜெட் மீதான பொது விவாதம் இரு அவைகளிலும் நடைபெற்றது. இதனால் மக்களவைக்கு ஒதுக்கப்பட்ட 20 மணி நேரத்திற்கு பதிலாக 27 மணி நேரம் 19 நிமிடங்களும், மாநிலங்களவைக்கு ஒதுக்கப்பட்ட 20 மணி நேரத்திற்கு பதிலாக, 22 மணி நேரம் 40 நிமிடங்களும் ஒதுக்கப்பட்டன. 2024-25 ஆம் ஆண்டுக்கான ஜம்மு-காஷ்மீர் பட்ஜெட் மீதான பொது விவாதம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் -2024-25 தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் மற்றும் தொடர்புடைய ஒதுக்கீட்டு மசோதா ஆகியவை மக்களவையில் 2024-25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் மீதான பொது விவாதத்துடன் ஒன்றாக எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
மக்களவையில், ரயில்வே, கல்வி, சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் மற்றும் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் அமைச்சகங்கள் தொடர்பான மானியக் கோரிக்கைகள் தனித்தனியாக விவாதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதனைத் தொடர்ந்து அமைச்சகங்கள்/துறைகளின் மானியங்களுக்கான எஞ்சிய கோரிக்கைகள், 2024 ஆகஸ்ட் 05 ஆம் தேதி திங்கட்கிழமை சபையின் வாக்கெடுப்புக்கு விடப்பட்டன. இது தொடர்பான ஒதுக்கீட்டு மசோதாவும் 05.08.2024 அன்றே மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. நிதி (எண் 2) மசோதா, 2024 மக்களவையில் 6மற்றும் 7 ஆகஸ்ட் 2024 அன்று பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
மாநிலங்களவையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள், வேளாண் மற்றும் விவசாயிகள் நலன், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகங்களின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் 2024-25 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கைகள் மற்றும் நிதி (எண் 2) மசோதா, 2024 ஆகியவை தொடர்பான ஒதுக்கீட்டு மசோதாக்களை மாநிலங்களவை 08.08.2024 அன்று திருப்பி அனுப்பியது.
விமானங்களின் வடிவமைப்பு, உற்பத்தி, பராமரிப்பு, உடைமை, பயன்பாடு, செயல்பாடு, விற்பனை, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மற்றும் அதனுடன் தொடர்புடைய விஷயங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் வகை செய்யும் பாரதிய வாயுயன் விதேயக், 2024-ஐ மக்களவை 09.08.2024 அன்று நிறைவேற்றியது.
“வரவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்தியாவின் தயார்நிலை” மற்றும் “அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக டெல்லியில் உள்ள ஒரு பயிற்சி நிறுவனத்தில் மாணவர்கள் இறந்த துயர சம்பவம்” குறித்து முறையே மக்களவை மற்றும் மாநிலங்களவையில் விவாதங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக ஏற்பட்ட உயிர் மற்றும் உடைமை இழப்புக்கள் மற்றும் கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் ஏற்பட்ட நிலைமை குறித்த கவன ஈர்ப்பு தீர்மானங்கள், மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எடுத்துக் கொள்ளப்பட்டன.
வக்ஃப் (திருத்த) மசோதா, 2024 09.08.2024 அன்று பரிசீலனைக்காக நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
2024 பட்ஜெட் அமர்வின் போது மக்களவையின் செயல்பாட்டுத்திறன் தோராயமாக 136% ஆகவும், மாநிலங்களவையின் செயல்பாட்டுத்திறன் தோராயமாக 118% ஆகவும் இருந்தது.
மக்களவை / மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாக்கள், மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள், மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள், இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் ஆகியவற்றின் பட்டியல் இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.
18-வது மக்களவையின் 2-வது கூட்டத்தொடரிலும், மாநிலங்களவையின் 265-வது கூட்டத்தொடரிலும் பரிவர்த்தனை செய்யப்பட்ட அலுவல்களின் விவரம்:
1. மக்களவையில் தாக்கல் செய்யும் மசோதாக்கள் : நிதி (எண்.2) மசோதா, 2024 | ஜம்மு-காஷ்மீர் நிதி ஒதுக்கீட்டு (எண் 3) மசோதா, 2024 | பாரதிய வாயுயன் விதேயக், 2024 | பேரிடர் மேலாண்மை (திருத்த) மசோதா, 2024 | கோவா மாநில சட்டமன்றத் தொகுதிகளில் ஷெட்யூல்டு பழங்குடியினரின் பிரதிநிதித்துவத்தை மறுசீரமைத்தல் மசோதா, 2024 | நிதி ஒதுக்கீட்டு (எண் .2) மசோதா, 2024 | வக்ஃப் (திருத்த) மசோதா, 2024 | முசல்மான் வக்ஃப் (ரத்து செய்தல்) மசோதா, 2024 | வங்கி சட்டங்கள் (திருத்த) மசோதா, 2024 | கடல் வழியாக சரக்குகளை எடுத்துச் செல்வது பில், 2024 | லேடிங் மசோதா, 2024 | ரயில்வே (திருத்த) மசோதா, 2024
2. மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்கள் : எண்ணெய் வயல்கள் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) திருத்த மசோதா, 2024 | கொதிகலன்கள் மசோதா, 2024 |
3.மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் : ஜம்மு-காஷ்மீர் நிதி ஒதுக்கீட்டு (எண் 3) மசோதா, 2024 | நிதி ஒதுக்கீட்டு (எண் .2) மசோதா, 2024 | நிதி (எண்.2) மசோதா, 2024 | பாரதிய வாயுயன் விதேயக், 2024 |
4. மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் : ஜம்மு-காஷ்மீர் நிதி ஒதுக்கீட்டு (எண் 3) மசோதா, 2024 | நிதி ஒதுக்கீட்டு (எண் 2) மசோதா, 2024, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. நிதி (எண்.2) மசோதா, 2024
5. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் : ஜம்மு-காஷ்மீர் நிதி ஒதுக்கீட்டு (எண் 3) மசோதா, 2024. நிதி ஒதுக்கீட்டு (எண் 2) மசோதா, 2024, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. நிதி (எண்.2) மசோதா, 2024
6. மாநிலங்களவையில் திரும்பப் பெறப்பட்ட மசோதாக்கள் வக்ஃப் சொத்துக்கள் (அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுதல்), மசோதா, 2014
Annex
LEGISLATIVE BUSINESS TRANSACTED DURING THE 2ND SESSION OF 18th LOK SABHA AND 265th SESSION OF RAJYA SABHA
The post ’’ இந்த கூட்டத்தொடரின் முக்கிய விஷேசம் என்ன ? ‘’ நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு first appeared on Madras Murasu.
]]>