acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post காரைக்குடியில் மத்திய அரசு வேலை ! எழுத்து தேர்வு இல்லை ; நேர்முகத்தேர்வு உண்டு first appeared on Madras Murasu.
]]>தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் மத்திய அரசுக்கு சொந்தமான மத்திய மின்வேதியியல் ஆய்வகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் அப்ரண்டீஸ் என்கிற தொழில் பழகுநர் பணிக்கு ஆள் சேர்க்கும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
ஐடிஐ, பாலிடெக்னிக், பட்டப்படிப்பு முடித்தோர், நேரில் ஆஜராக வேண்டும். அப்போது உரிய ஒரிஜினல் மூலச்சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஐடிஐ படிப்பில் Fitter, Machinist, Electrician, Wireman, Electronics Mechanic, Ref. & A/c Mechanic, Draughtsman (Civil), Turner, Plumber , Carpenter ஆகிய படிப்பினை முடித்துள்ளோருக்கு மாதம் 8050 மாத ஊதியம் வழங்கப்படும்.

Welder, PASAA படிப்பிற்கு மாதம் 7700 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. UR – 14, OBC – 07, SC – 05, ST – 01, EWS-02 என்று மொத்தம் 29 பேர் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள்.
டிப்ளமோ என்கிற பாலிடெக்னிக் படிப்பில் Civil Engineering, Mechanical
Engineering, Electrical & Electronics Engineering , Electronics & Communication
Engineering என்ற பாடம் படித்தவர்கள் நேர்முகத்தேர்வுக்கு வரலாம். இவர்களுக்கு ஓராண்டு பணி. மாத ஊதியம் ரூ.8000. UR – 03, OBC-01, SC – 01 என்று மொத்தம் 5 காலிப் பணி இடம் உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Bachelor’s degree (3 Years) in Hospitality and Hotel Administration/ Hotel Management/ Hotel Management and Catering Technology/ Catering Science and Hotel Management or equivalent என்ற படிப்பு முடித்தவர்கள் Guest House and Canteen Management பணி நேர்காணலுக்கு வரலாம். இதில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அது பொதுப்பிரிவு ஆகும். மாதம் ரூ.9000 சம்பளம் என்று கூறப்பட்டுள்ளது. அதுபோலவே, B.Sc., in Chemistry / Physics படித்தவர்கள் Office Assistance பணிக்கு தகுதியானவர்கள். இதுவும் பொதுப் பிரிவு. ஓர் இடம் உள்ளது.

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் – இடம் வருமாறு: Diploma in Mechanical Engineering, ECE, EEE and Civil Engineering, Bachelor’s Degree in Physics / Chemistry and Guest House and Canteen Management | 30.07.2024 from 9.00 am onwards | CSIR- Central Electrochemical Research Institute, College Road, Karaikudi.
ITI – Fitter, Machinist, Mechanic Ref. & A/c, Welder, Draughtsman (Civil), Plumber, Carpenter | 31.07.2024 from 9.00 am onwards | CSIR- Central Electrochemical Research Institute, College Road, Karaikudi. ITI – Electrician, Wireman, PASAA,
Electronics Mechanic, Turner. 01.08.2024 from 9.00 am onwards | CSIR- Central Electrochemical Research Institute, College Road, Karaikudi.
Date & Time of Walk-in-Interview: 30.07.2024 to 01.08.2024 at 09.00 AM (Reporting Time: 08.45 AM). No candidate will be allowed to enter into the venue after 09:00 AM.
இந்த வேலைவாய்ப்பு குறித்த அறிவிக்கையை APP-06-2024_AdvtCopy இங்கே கிளிக் செய்து படிக்கலாம். மேலும் கூடுதல் தகவல் பெற 04565 – 241219 / 218 என்ற எண்களில் அலுவலக நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5:30 மணி வரை பேசலாம். recruit@cecri.res.in என்ற email id மூலமாகவும் விபரம் கேட்கலாம்.
கல்வி சான்றிதழ்கள் அனைத்தின் மூலசான்றுகளையும் வைத்திருக்க வேண்டும். ஜெராக்ஸ் எடுத்தும் வைத்திருக்க வேண்டும். ttps://www.cecri.res.in/ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள பயோடேட்டாவை பிரிண்ட் எடுத்து நிரப்பிக் கொண்டு, நேர்முகத்தேர்வு அன்று காலை 8.45 மணிக்கு முன்னர் நேர்முகத்தேர்வு இடத்தில் இருக்க வேண்டும். பயோடேட்டாவை APP-06-2024_Application (1) இந்த தளத்தில் டவுன்லோடு செய்யலாம்.
The post காரைக்குடியில் மத்திய அரசு வேலை ! எழுத்து தேர்வு இல்லை ; நேர்முகத்தேர்வு உண்டு first appeared on Madras Murasu.
]]>The post ’’நவோதயா பள்ளிகளில் வேலைவாய்ப்பு..!’’ 1377 காலி பணியிடங்கள். first appeared on Madras Murasu.
]]>
இந்த வகையான பள்ளிகள் தமிழகத்தைத் தவிர்த்து நாட்டின் பல இடங்களில் சிறப்பாக அமைந்து அருமையாக நடத்தப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் தற்போது ஏறத்தாழ 600 பள்ளிகளுக்கும் மேல் நிறுவப்பட்டுள்ளன. மாவட்ட அளவில் நடத்தப்படும் அனைத்திந்திய நுழைவுத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்குப் பல்துறை திறன்களிலும் கல்வி இந்த நவோதயா பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஜவஹர் நவோதயா பள்ளிகள் அந்தந்த மாவட்ட ஆட்சியரின் நேரடி கண்காணிப்பின் கீழ் திறமையாக செயல்பட்டு வருகின்றன. மேலும் இவை, மாவட்டத்தின் மாதிரி பள்ளிகளாகவும் செயல்பட்டு வருகின்றன. மாணவ, மாணவிகள் இரு பாலரும் தனித்தனி விடுதிகளில் தங்கிப் பயிலும் வகையில் இந்தப் பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பள்ளிகளில் நடுவண் இடைநிலைக் கல்வி வாரிய கல்வித்திட்ட முறையில் (சிபிஎஸ்இ) பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. படிப்பில் திறமை வாய்ந்த கிராமப்புற மாணவ, மாணவியருக்கு இலவச கல்வியுடன் உணவு, உடை, உறைவிடம், சீருடை, காலணிகள், புத்தகங்கள், எழுது பொருட்கள், எல்லா பொருட்களும் வழங்குவதுடன் மருத்துவமும் இலவசமாகக் கொடுக்கப்பட்டு வருகிறது.
மாணவ, மாணவியர்கள் பொது நுழைவுத் தேர்வு மூலம், அவர்கள் படித்த தாய்மொழியிலேயே, 6-ஆம் வகுப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்தப் பள்ளிகளில் இந்தி உள்ளிட்ட மும்மொழித் திட்டத்தில் பயிலும் வாய்ப்புகளும் உண்டு. ஆனால் 10-ம் வகுப்பு இறுதித் தேர்வுக்கு இந்திப் பாடமானது கட்டாயமாக்கப்படவில்லை.
தற்போது இந்தப் பள்ளிகளில் மெஸ் உதவியாளர் 442, ஜூனியர் செக்ரட்ரியட் அசிஸ்டென்ட் 360, எலக்ட்ரீசியன் கம் பிளம்பர் 128, ஆய்வக உதவியாளர் 161, நர்ஸ் 121, கேட்டரிங் சூப்பர்வைசர் 78, ஸ்டெனோ 23, எம்.டி.எஸ்., 19, ஆடிட் அசிஸ்டென்ட் 12, அசிஸ்டென்ட் செக்சன் ஆபிசர் 5, ஜூனியர் டிரான்ஸ்லேசன் ஆபிசர் 4 உட்பட மொத்தம் 1377 பணியிடங்கள்.
வயது, கல்வித்தகுதி: பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதால் கல்வித்தகுதியும், வயதும் ஒவ்வொரு வேலைக்கும் மாறுபடுகிறது.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் ஆட்கள் இந்தப் பணிக்குத் தேர்வு செய்யப்படுவர். தேர்வு மையம்: மேலும், தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலுார், திருநெல்வேலி ஆகிய நகரங்களில் மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் மட்டுமே இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டியது அவசியம். விண்ணப்பக்கட்டணம்: நர்ஸ் பணிக்கு ரூ. 1,500 விண்ணப்பக் கட்டணம் வசூலிக்கப்படும். மேலும், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 500 விண்ணப்பக் கட்டணமாக செலுத்தவேண்டும். மற்ற பதவிகளுக்கு ரூ. 1000 விண்ணப்பக் கட்டணமாக செலுத்தவேண்டும்.இதுதவிர எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் ரூ. 500 செலுத்தினால் போதுமானது. கடைசிநாள்: வரும் 30.4.2024-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும். இணையதள முகவரி: கூடுதல் விவரங்களுக்கு navodaya.gov.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.
https://navodaya.gov.in/nvs/en/Home1 வேலைவாய்ப்பு விளம்பரம் அறிவிக்கை Advertisement_Non-Teaching
The post ’’நவோதயா பள்ளிகளில் வேலைவாய்ப்பு..!’’ 1377 காலி பணியிடங்கள். first appeared on Madras Murasu.
]]>The post ’’ஆரோக்கியமாக வாழ சித்தர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்..!’’ மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் first appeared on Madras Murasu.
]]>டாக்டர் எஸ்.செல்வராஜன் – திட்ட அலுவலர் சி.சி.ஆர்.எஸ் (ஆர்.ஓ. சித்தா / அறிவியல்-IV) வரவேற்றார். முனைவர் என்.ஜே. முத்துக்குமார் (சி.சி.ஆர்.எஸ் தலைமை இயக்குநர்) சிறப்புரையாற்றினார். பாரம்பரிய சிகிச்சை முறைகளை ஆராய்ந்து நவீன நடைமுறைகளில் அவற்றைப் பயன்படுத்துவதற்கான நேரம் இது என்று அவர் வலியுறுத்தினார். உடல், மன, உணர்ச்சி மற்றும் ஆன்மிகச் சொத்தை ஆரோக்கியமாகப் பெறுவதற்கு நம்மை நாமே ஒரு முழுமையான வழியில் கவனித்துக் கொள்வதற்கு வழிகாட்டும் ஒளியாக சித்த முறைமை குறிப்பிடப்பட்டுள்ளது என்று எடுத்துக் கூறினார். Photo2PG70.jpg)
சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த மருத்துவர் கே. ஜெகநாதன், தலைவர் NCISM, அவரது உரையில் இந்தக் கருத்தரங்கு மிகச்சிறந்த கண் திறப்பு நிகழ்வாக கூறினார். மேலும் அவர் ஆயுர்வேத, சித்த, யுனானி மருத்துவ படிப்பு ஆராய்ச்சி மற்றும் பயிற்சிகளுக்காக NCISM எடுத்த சமீபத்திய நடவடிக்கைகள் பற்றி கூறினார். திட்டமிடப்பட்ட இடைநிலை / ஒழுங்குநிலை ஆராய்ச்சிகள், பயிற்சிகள், முதுகலை மாணவர்களுக்கான நோக்குநிலை பாடத்திட்டங்கள் கல்லூரி முதல்வர்கள், கல்வியாளர்களுக்கான பயிற்சிகள், ஆராய்ச்சியாளர்களுக்கான அறிவியல் வெளியீடுகள் சம்பந்தமான பயிற்சிகள் பற்றியும் பேசினார்.
நோக்குநிலை கொள்கை வடிவமைப்பிற்கான ஆராய்ச்சி தகவல் அமைப்பு, தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான ஏ.ஐ.சி.டி.இ ஆயுர்வேதம், சித்தா மற்றும் யுனானி அமைப்புகளில் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்த பிட்ஸ் பிலானி, இளநிலை / முதுநிலை மாணவர்களுக்கு நிதி உதவி மற்றும் ஆராய்ச்சி வெளியீடு, மானியத்துடன் வரவிருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் அவர் குறிப்பிட்டார். சித்தா அமைப்பில் மெய்நிகர் யதார்த்தத்தை அறிமுகப்படுத்துதல், முதுகலை பட்டதாரிகளுக்கான தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வு, தேசிய வெளியேறும் தேர்வு மற்றும் மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி மற்றும் நடைமுறையை மேம்படுத்துவதற்கான பல முயற்சிகளை அவர் ஆணையத்தின் திட்டத்தைப் பகிர்ந்து கொண்டார்.
செல்வி. பாவனா சக்சேனா, ஐபிஎஸ், இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் இணைச் செயலர், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தனது உரையில், ஆயுஷ் அமைச்சகம் கவனம் செலுத்தும் அமைச்சகங்களில் ஒன்றாக இந்திய மருத்துவ முறையை உலக அளவில் மேம்படுத்த வேண்டும் என்று நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்; சித்தா மாணவர்கள் – அறிஞர்கள் தங்கள் அமைப்பின் பிராண்ட் அம்பாசிடர் உயர்ந்த அர்ப்பணிப்புடன் வர வேண்டும் என்று வலியுறுத்தினார். பாரம்பரிய மருத்துவத் துறை மற்றும் முக்கிய சித்த முறைகளை அடுத்த கட்டத்திற்கு மேம்படுத்த NCISMM-யின் திட்டங்களை அவர் பாராட்டினார்.
ஏ.எச்.எம்.எஸ், ஐசிடி 11, 75 ஐ.எம்.ஆர் திட்டங்கள் போன்ற சி.சி.ஆர்.எஸ்-யின் பல்வேறு செயல்பாடுகளை அவர் பாராட்டியுள்ளார். பாரம்பரிய மருத்துவ முறை, நம் அன்றாட வாழ்வில் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் நன்மைகளை மட்டும் அனுபவிப்பது மட்டும் போதாது; அதனை உலகிற்கு எடுத்துரைக்க செய்ய வேண்டும். நீண்ட காலத்திற்கு முன்பே யோகிகளால் உருவாக்கப்பட்ட மற்றும் ஆவணப்படுத்தப்பட்ட ஆராய்ச்சிகளை முழு உலகிற்கும் பங்களிப்பது மற்றும் முன்னெடுத்துச் செல்வது மாணவர் சமூகத்தின் கடமை என்று அவர் வலியுறுத்தினார்.
என்.ஐ.எஸ்-யின் முன்னாள் இயக்குனர் பேராசிரியர் டாக்டர் வி. பானுமதி, தனது பாராட்டு உரையில், மூன்று முக்கிய சுவைகளை சமநிலைப்படுத்த வீட்டு மசாலாப் பொருட்களைப் பயன்படுத்த அறிவுறுத்தினார். பத்மஸ்ரீ டாக்டர். ஜி.வேலுச்சாமி, நீண்ட ஆயுளை உறுதிப்படுத்தவும், பாதரசம், பாஷாணம் போன்ற உலோகங்களை சிகிச்சை முகவர்களாகவும், உலோகத் தயாரிப்புகளை மேம்படுத்தவும், குறிப்பாக தொற்று அல்லாத நோய்களுக்கு, நோயைத் தடுப்பது பற்றிய தனது அறிவைப் பகிர்ந்து கொண்டார்.
மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால், (ஆயுஷ் அமைச்சகம் & துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம்), ‘ஆரோக்கியமாக வாழ சித்தர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்’ என்று வாழ்த்துரை வழங்கினார்.
Photo47AW4.jpg)
முன்னுதாரண மாற்றத்திற்கான தேவை – நோக்கம் மற்றும் சவால்கள் – டாக்டர் கு. சிவராமன் (சித்தா மருத்துவர், உறுப்பினர், மாநில திட்டக்குழு, தமிழ்நாடு அரசு), முன்கணிப்பு சித்த மருத்துவம் மற்றும் அதன் தாக்கம் மற்றும் ஆரோக்கியத்தில் ஊக்குவிப்பு – டாக்டர் வி. பாலமுருகன், (சித்தா மருத்துவர், சித்த மருத்துவத்திற்கான அம்ருதா மையம்), சித்தா சிஸ்டம் ஆஃப் மெடிசின் அமுலாக்கத்திற்கான உத்திகள் தடுப்பு மற்றும் ஊக்குவிப்பு சுகாதாரத்தில் – டாக்டர் சையத் ஹிசார் (விஞ்ஞானி – இ (மருத்துவம்) ஐசிஎம்ஆர் – என்ஐஆர்டி), பொது சுகாதாரத்தின் வரலாற்று மேம்பாடு – டாக்டர் ஜி. தங்கவேல் (மூத்த விரிவுரையாளர் ஸ்ரீ ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், பொது சுகாதாரத்தின் வரலாற்று வளர்ச்சி), சிசிஆர்எஸ் மூலம் தடுப்பு மற்றும் ஊக்குவிப்பு சுகாதாரப் பராமரிப்பை முன்னெடுத்துச் செல்வதற்கான ஆராய்ச்சி முன்னோக்குகள் – டாக்டர் யூஜின் வில்சன் (ஆராய்ச்சி அதிகாரி (சித்தா), சித்தா ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில்), மற்றும் காரை சூளை – அறிவியல் பின்புலத்துடன் கூடிய பழங்கால ஞானத்தின் சித்தா முன்னோக்குகள் பற்றிய விவாதம் – டாக்டர். எஸ். பாலாஜி மரியா சித்த மருத்துவக் கல்லூரியின் இணைப் பேராசிரியர்.
Photo59YHX.jpg)
டாக்டர். கு. சிவராமன் தனது அமர்வில், நிலவேம்புக் குடிநீர் மற்றும் கபசுரக் குடிநீர் பற்றிய 45 வெளியீடுகளுக்காக சிசிஆர்எஸ் மற்றும் என்ஐஎஸ் ஆகியவற்றைப் பாராட்டினார். மனித ஆரோக்கியம் மற்றும் ஜூனோடிக் நோய்களில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை அவர் வலியுறுத்தினார். ஆயுஷ் மற்றும் பயோமெடிசினை ஒருங்கிணைப்பது குறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட அவர், சித்தா மேலாண்மை முறையைப் பற்றி மேலும் ஆராய்ச்சி செய்ய வேண்டியதன் அவசியத்தை பொதுமக்களுக்கு மேலும் அணுகக்கூடியதாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். கிளைசெமிக் குறியீட்டுடன் 35 பாரம்பரிய அரிசி வகைகளைத் தயாரித்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டு முடித்தார்.
1000 -க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மற்றும் 258 வாய்மொழி /சுவரொட்டி விளக்கக்காட்சிகளுடன் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி சமூகத்தினரிடமிருந்து இந்த மாநாடு பெரும் வரவேற்பைப் பெற்றது.
மாநாட்டின் ஒரு பகுதியாக மூலிகை கண்காட்சியும் 200 க்கு மருத்துவ தாவரங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் மற்றும் இந்த பண்டைய ஞானத்திற்கு பங்களித்த சித்தர்களுடன் ஏற்பாடு செய்யப்பட்டது.
Photo6VT3O.jpg)
The post ’’ஆரோக்கியமாக வாழ சித்தர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்..!’’ மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் first appeared on Madras Murasu.
]]>The post ’’மத்திய அரசு வேலை – புதிய வெப்சைட்..!’’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு first appeared on Madras Murasu.
]]>தமிழ்நாடு அரசின் வேலைகள் குறித்த விபரங்கள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் என்ற இணையத்தளத்தில் மட்டுமே அதிகாரப்பூர்வமாக வெளியாகும். போலீஸ், சுகாதரம், ஆசிரியர் பணி தவிர பெரும்பாலான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் டிஎன்பிஎஸ்சி இணையத்தில் மட்டுமே வரும். அந்த தளத்தின் மூலமே வேலைக்கு விண்ணபிக்க வேண்டும்.
அதுபோல, மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் காலியாக இருக்கும் இடங்களை நிரப்ப, Staff Selection Commission என்ற மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையத் தளம் உள்ளது. அவ்வமைப்பு, இதுவரை https://ssc.nic.in/ என்ற இணையத்தை அதிகாரப்பூரவமாக கொண்டிருந்தது. தேர்வு அறிவிக்கை, தேர்வு விண்ணப்பம், ஹால் டிக்கெட், தேர்வு முடிவுகள் என்று அனைத்து விதமான தேர்வு நடவடிக்கைகளும் இந்த வெப்சைட் மூலமாகவே விண்ணப்பத்தாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.

இந்நிலையில், புதிய வெப்சைட் ஒன்றை STAFF SELECTION COMMISSION 19.02.2024 அன்று கொண்டு வந்துள்ளது https://ssc.nic.in/ . ஏற்கனவே, பழைய தளத்தில் தங்களது சுய விபரங்களை பதிவு செய்து இருந்தாலும், இந்த புதிய இணையத்தளத்திலும் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்தது செல்லாது. கண்டிப்பாக, புதிய தளத்தில் தங்களது சுய விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று உறுதியாக கூறியுள்ளது.
எனவே, மத்திய அரசு வேலைக்கு செல்ல விரும்புவோர் இந்த புதிய தளத்தில் தங்கள் பயோடேட்டா-வை உடனே பதிவு செய்ய வேண்டும்.
The post ’’மத்திய அரசு வேலை – புதிய வெப்சைட்..!’’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு first appeared on Madras Murasu.
]]>The post ’’TMB வங்கியில் வேலை – தேர்வு இல்லை..!’’ பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>ரிலேஷன்சிப் மேலாளர்- Relationship Manager :
கல்வி: பட்டதாரி அல்லது முதுநிலை பட்டதாரி (குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்)
வயது: 31.01.2024 அன்ரு 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பணி அணுபவம்: எம்.எஸ்.எம்.இ (MSME loans) துறை சார்ந்த பணியில் குறைந்தபட்சம் ஓராண்டு
பணி நியமனம் முறை: விண்ணப்பத்தின் அடிப்படையில் பரிசீலனை செய்யப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்: எதுவும் இல்லை.
துணை பொது மேலாளர் Deputy General Manager (IT) :
வயது: 31.01.2024 அன்று 45 வயதுக்கு அதிகமாக இருக்க கூடாது.
கல்வி: B.E / B.Tech. in Computer Science / Information Technology / M.E / M.Tech. in Computer Science / Information Technology / MCA / equivalent degree from a reputed University.
பணி அணுபவம்: குறைந்த பட்சம் 10 ஆண்டு அணுபவம் Core Banking environment என்ற பிரிவில் இருக்க வேண்டும்.
பட்டய கணக்கர் – Chartered Accountants :
கல்வி: Mandatory Qualification – Graduate in any discipline and Chartered Accountant by Qualification : Preferred Qualification – Post-Graduation Degree in Management with Specialisation in Finance or CFA / ICWA / CMA
பணி அணுபவம்: 10 முதல் 12 ஆண்டுகள் பணி அணுபவம் இருக்க வேண்டும்.
பணி இடம்: தூத்துக்குடி
மேற்கண்ட இந்த வேலைகளுக்கு பிப்ரவரி 12 ஆம் தேதியில் இருந்து பிப்ரவரி 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மெர்க்கண்டைல் வங்கியின் இணையத்தளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
The post ’’TMB வங்கியில் வேலை – தேர்வு இல்லை..!’’ பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>The post first appeared on Madras Murasu.
]]>இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள மாணவர் சமூகங்களின் அளவு கடந்த உற்சாகத்தைத் தொடர்ந்து, இருபாடத் திட்டங்களுக்கும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க இக்கல்வி நிறுவனம் பரிசீலித்து வருகிறது. கற்பித்தல்-கற்றல் அனுபவங்களை அதிக அளவில் வழங்கவும், சந்தையின் தேவைக்கு ஏற்ப அளிக்கவும் தொழில்துறையினரின் ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றத் திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டு வருகின்றன. 2023-ம் ஆண்டில் ஐஐடி-களிலேயே முதன்முறையாக சென்னை ஐஐடி வெளிநாட்டில் முழுஅளவிலான கல்வி வளாகத்தை நிறுவியது.
பிஎஸ் படிப்பிற்கு விண்ணப்பிக்க கடைசிநாள் – 15 ஏப்ரல் 2024. ஸ்கிரீனிங் தேர்வு 9 ஜூன் 2024 அன்று ( இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை, கிழக்கு ஆப்பிரிக்க நேரப்படி முற்பகல் 11.30 முதல் பிற்பகல் 2.30 மணிவரை). எம்டெக் படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசிநாள் 15 மார்ச் 2024.
தேர்வு செயல்முறையின் பல்வேறு நிலைகள், மதிப்பீட்டின் விவரங்கள், ஸ்கிரீனிங் சோதனை முறை, கட்டண அமைப்பு, முக்கிய நாட்கள், விரிவான பாடத்திட்டம், தகுதி அளவீடுகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை பின்வரும் இணைப்பில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்: https://www.iitmz.ac.in/IITMZST_Information_Brochure_2024_v1.1.pdf
இந்த இருபாடப்பிரிவுகளின் தனித்துவ அம்சங்கள் குறித்து விளக்கம் அளித்த ஐஐடி மெட்ராஸ் சான்சிபாரின் (தான்சானியா) பொறியியல் -அறிவியல் பள்ளிப்பொறுப்பு இயக்குநர் மற்றும் டீன் பேராசிரியை ப்ரீத்தி அகலாயம் கூறும்போது, “ஐஐடி எம்சான்சிபாரில் இருந்து கல்வித்துறையில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என நம்புகிறோம். இப்பிராந்தியத்தில் கல்வி முறையில் மாற்றத்தைக் கொண்டு வரவும், திறன் அடிப்படையிலான கல்வியில் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களை இணைக்கவும் முடியும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார். “ஐஐடி சான்சிபாரில் இரண்டாம் தொகுப்பு மாணவர்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைவதோடு, விண்ணப்பம், தேர்வு செயல்முறைகளில் அவர்கள் சிறந்து விளங்கவும் வாழ்த்துகிறோம்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

2023-ல் சான்சிபார் வளாகம் தொடங்கப்பட்டபின் இந்தியா, ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் மத்தியிலும் ஆர்வத்தை ஈர்த்துள்ளது. இந்தப் பிராந்தியத்தின் கல்விமுறையில் தாக்கத்தை ஏற்படுத்தவும், திறன் அடிப்படையிலான கல்விக்கான தேடலில் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களை ஒன்றிணைப்பதையும் இக்கல்வி நிறுவனம் நோக்கமாகக் கொண்டிருக்கிறது.
ஸ்கிரீனிங் தேர்வுக்கான அதிகபட்ச மதிப்பெண் 60. தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
The post first appeared on Madras Murasu.
]]>The post மத்திய ஆயுத போலீஸ் படை தேர்வு 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்படும்..! first appeared on Madras Murasu.
]]>பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வழிகாட்டுதலின் கீழ், 2024 ஜனவரி 01 முதல் இந்தி மற்றும் ஆங்கிலத்துடன் கூடுதலாக 13 பிராந்திய மொழிகளில் கான்ஸ்டபிள் தேர்வை நடத்த உள்துறை அமைச்சகம் முடிவு செய்திருந்தது
மத்திய ஆயுத போலீஸ் படைகளில் உள்ளூர் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்கவும், பிராந்திய மொழிகளை ஊக்குவிக்கவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் முன்முயற்சியின் பேரில் இந்த வரலாற்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது
கான்ஸ்டபிள் தேர்வு வினாத்தாள்கள் இப்போது இந்தி மற்றும் ஆங்கிலத்துடன் கூடுதலாக அசாமி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி, மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஒடியா, உருது, பஞ்சாபி, மணிப்புரி மற்றும் கொங்கனி மொழிகளில் தயாரிக்கப்படும்
நாடு முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான இளைஞர்களை ஈர்க்கும் பணியாளர் தேர்வு ஆணையம் (எஸ்.எஸ்.சி) நடத்தும் முக்கிய தேர்வுகளில் கான்ஸ்டபிள் தேர்வும் ஒன்றாகும்
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவின் மூலம், நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான இளைஞர்கள் தங்கள் தாய்மொழி / பிராந்திய மொழியில் இந்தத் தேர்வில் பங்கேற்க முடியும், இது அவர்களின் தேர்வு வாய்ப்புகளை அதிகரிக்கும்.
மத்திய அரசின் இந்த முன்முயற்சியின் மூலம், நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள், சிஏபிஎஃப் இன் கான்ஸ்டபிள் தேர்வில் தங்கள் தாய்மொழியில் பங்கேற்கவும், தேச சேவையில் ஒரு வாழ்க்கையை உருவாக்கவும் ஒரு பொன்னான வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
The post மத்திய ஆயுத போலீஸ் படை தேர்வு 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்படும்..! first appeared on Madras Murasu.
]]>The post ’’போட்டித் தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க புதிய சட்டம்…!’’ மத்திய அரசு கொண்டு வந்தது first appeared on Madras Murasu.
]]>மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) மற்றும் பணியாளர் தேர்வாணையத்தால் (எஸ்எஸ்சி) நடத்தப்படும் ஆட்சேர்ப்புத் தேர்வுகள், நீட், ஜேஇஇ, கியூஇடி போன்ற நுழைவுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவுகள், முறைகேடுகள் மற்றும் திட்டமிடப்பட்ட முறைகேடுகளைத் தடுக்க “பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகள் தடுப்பு) மசோதா, 2024”-ஐ மத்திய அரசு இன்று மக்களவையில் அறிமுகப்படுத்தியது. இந்த மசோதாவை மத்தியப் பணியாளர் நலத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தாக்கல் செய்தார்.
திட்டமிட்ட மோசடிகள்
“நியாயமற்ற வழிமுறைகளைத் தடுக்கும் மசோதா, 2024” யூபிஎஸ்சி, எஸ்எஸ்இ, ரயில்வே, வங்கித்துறை போன்ற ஆட்சேர்ப்புத் தேர்வுகள் மற்றும் தேசியத் தேர்வு முகமையால் கணினி அடிப்படையில் நடத்தப்படும் அனைத்துத் தேர்வுகளுக்கும் பொருந்தும்.
மோசடியைத் தடுக்கக் குறைந்தபட்சம் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கவும், மோசடி, திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, குறைந்தபட்சம் ரூ.1 கோடி அபராதம் விதிக்கவும் இந்த மசோதா வகைசெய்கிறது.
இந்த மசோதா பண ஆதாயங்களுக்காக நியாயமற்ற வழிகளில் ஈடுபடும் கும்பல்கள் மற்றும் நிறுவனங்களைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால் இது தேர்வர்களை அதன் விதிகளிலிருந்து பாதுகாக்கிறது.
கடந்த சில ஆண்டுகளில், வினாத்தாள்களின் கசிவு, திட்டமிட்ட மோசடிகள் ஆகியவை காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிப்படைந்துள்ளதாகக் கூறி டாக்டர் ஜிதேந்திர சிங், மசோதாவின் தேவை மற்றும் முக்கியத்துவத்தை விளக்கினார்.
ஆபத்தில் ஆழ்த்தும்
“சமீப காலங்களில், சமூக விரோத, குற்றவியல் கூறுகளால் பின்பற்றப்பட்ட நியாயமற்ற நடைமுறைகள் மற்றும் வழிமுறைகளின் பாதகமான தாக்கம் காரணமாக பல மாநிலங்கள் தங்கள் பொதுத் தேர்வுகளின் முடிவுகளை ரத்து செய்ய வேண்டியிருந்தது அல்லது அறிவிக்க முடியவில்லை. இந்த நியாயமற்ற நடைமுறைகள் தடுக்கப்படாதது, இந்த நாட்டின் லட்சக்கணக்கான ஆர்வமுள்ள இளைஞர்களின் எதிர்காலத்தையும் வாழ்க்கையையும் தொடர்ந்து ஆபத்தில் ஆழ்த்தும். பல சந்தர்ப்பங்களில், மோசடிக்குழுக்கள் மற்றும் மாஃபியா கும்பல்கள் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் ஆள்மாறாட்ட முறைகளைப் பயன்படுத்துவதுடன், வினாத்தாள் கசிவுகளில் ஈடுபடுகிறார்கள். இந்த மசோதா முதன்மையாக இதுபோன்ற தீய சக்திகளைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது’’ என்று அவர் கூறினார்.
இத்தகைய குற்றம் இழைப்பவர்களை தண்டிக்க தேசிய அளவில் குறிப்பிட்ட கணிசமான சட்டம் எதுவும் இல்லை என்று அமைச்சர் கூறினார்.
வெகுமதி அளிக்கப்படும்
“எனவே, இந்த பாதிப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் தேர்வு அமைப்புகளுக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள கூறுகள் அடையாளம் காணப்பட்டு ஒரு விரிவான மத்திய சட்டத்தின் மூலம் திறம்பட கையாளப்படுவது அவசியம் ஆகிறது. இந்தத் தேர்வுகளில் கலந்து கொள்ளும் உண்மையான மற்றும் நேர்மையான இளைஞர்களின் வாழ்க்கையுடனும், நம்பிக்கையுடனும் இதுபோன்ற கிரிமினல் சக்திகள் விளையாடுவதைத் தடுக்க வேண்டிய அவசியம் உள்ளது”என்று அவர் கூறினார்.
பொதுத் தேர்வு முறைகளில் அதிக வெளிப்படைத்தன்மை, நேர்மை மற்றும் நம்பகத்தன்மையைக் கொண்டுவருவதும், இளைஞர்களின் நேர்மையான மற்றும் உண்மையான முயற்சிகளுக்கு நியாயமான வெகுமதி அளிக்கப்படும் என்றும், அவர்களின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கும் என்றும் உறுதியளிப்பதே இதன் நோக்கம் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
தேசிய தொழில்நுட்பக் குழு
“இந்த மசோதா பல்வேறு நியாயமற்ற வழிகளில் ஈடுபடும் நபர்கள், ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் அல்லது நிறுவனங்களை திறம்பட மற்றும் சட்டபூர்வமாக தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று அவர் கூறினார்.
எவ்வாறாயினும், இந்த மசோதா, தேர்வில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்களைத் தண்டனை விதிகளிலிருந்து பாதுகாக்கிறது மற்றும் அவர்கள் தேர்வு நடத்தும் அதிகாரியின் தற்போதுள்ள நியாயமற்ற வழிமுறைகள் கொள்கையின் விதிகளின் கீழ் நிர்வகிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
பல தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படுவதையும், பொதுத் தேர்வுகளை நடத்துவதில் தொழில்நுட்பத்தின் பங்கு அதிகரித்து வருவதையும் கருத்தில் கொண்டு, பொதுத் தேர்வுகளுக்கான உயர்மட்ட தேசிய தொழில்நுட்பக் குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களின் விரிவான மின்னணு கண்காணிப்பை உறுதி செய்தல், அத்தகைய தேர்வுகளை நடத்துவதற்கு பயன்படுத்தப்பட வேண்டிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய இரண்டிற்கும் தேசிய தரம் மற்றும் சேவை நிலைகளை உருவாக்குதல் ஆகியவை இதன் கீழ் வரும்.
The post ’’போட்டித் தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க புதிய சட்டம்…!’’ மத்திய அரசு கொண்டு வந்தது first appeared on Madras Murasu.
]]>The post ’’ஸ்பெயின் முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டும்..!’’ முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் first appeared on Madras Murasu.
]]>தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 29.1.2024 அன்று ஸ்பெயின் நாட்டு தலைநகர் மேட்ரிட் நகரில் நடைபெற்ற ஸ்பெயின் தொழில் அமைப்புகள் மற்றும் ஸ்பெயின் பெரும் தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் (Tamil Nadu Investors First Port of Call) கலந்து கொண்டு, தமிழ்நாட்டில் நிலவும் சாதகமான முதலீட்டுச் சூழல் மற்றும் கட்டமைப்பு வசதிகள் குறித்து எடுத்துரைத்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்து, ஆற்றிய உரை வருமாறு:
ஸ்பெயின் நாட்டின் தலைநகரான ‘மாத்ரித்’ நகருக்கு நான் வருகை தருவது இதுவே முதல் முறை. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் இருக்கும் தமிழ்நாடு என்ற மிகமுக்கியமான மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சராக நான் இருக்கிறேன். எங்களது கட்சி 75 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. ஆறு முறை அந்த மாநிலத்தில் ஆட்சிக்கு வந்துள்ளது. திருவள்ளுவரை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் தமிழ் மொழியில்தான் திருக்குறளை எழுதினார். அவரது திருக்குறள் உலகின் 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அத்தகைய பெருமையும் பாரம்பரியமும் கொண்ட மாநிலத்தில் இருந்து நான் வந்துள்ளேன்.
கால்பந்து விளையாட்டில் புகழ் பெற்ற நாடு ஸ்பெயின். ஸ்பெயினை நான் இன்னும் சுற்றிப் பார்க்கவில்லை. நான் பார்த்த வரையில் கலைகளின் நாடாகக் காட்சியளிக்கிறது. உங்களது கலை உணர்வு ஒவ்வொரு கட்டிடத்திலும், தெருக்களிலும், ஒவ்வொரு மூலையிலும் உள்ளது. அழகான நிலப்பரப்பும், துடிப்பான கலாச்சாரமும் இணையப் பெற்று, மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடாக ஸ்பெயின் நாடு விளங்குகிறது. பழம்பெரும் வரலாறும் பாரம்பரியமும் பெற்ற இந்த நாடு போன்றே, வரலாற்றுப் பெருமை கொண்ட தமிழ்நாட்டின் சார்பாக இங்கு வந்து உங்களைச் சந்திப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
உலகிலேயே அதிகம் பேசப்படும் இரண்டாவது மொழியாகவும் 20 நாடுகளின் அதிகாரப்பூர்வ மொழியாகவும் விளங்கும் ஸ்பானிஷ் மொழி போலவே எங்களது தமிழ்மொழியும் பாரம்பரியம் மிக்கது. கிட்டத்தட்ட 5000 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள மொழி எங்கள் தமிழ் மொழி.
ஸ்பெயினுக்கும் தமிழ்நாட்டிற்கும் ஒரு மிகப்பெரும் ஒற்றுமை இருக்கிறது. காளை அடக்குதல் விளையாட்டு, ஸ்பெயினின் தேசிய விளையாட்டாகவும் பாரம்பரிய விளையாட்டாகவும் விளங்குகிறது. எங்கள் தமிழ்நாட்டிலும் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு எமது கலாச்சாரத்தின் சின்னமாக, உலகப்புகழ் பெற்று விளங்குகிறது.
ஜல்லிக்கட்டு விளையாட்டுக்காகவே தனியாக ஒரு ஸ்டேடியம் கட்டி இருக்கிறோம். வருங்காலத்தில் தமிழ்நாட்டுக்கு நீங்கள் வரும்போது அதனைப் பார்க்கலாம். ஐரோப்பிய ஒன்றியத்திலேயே, நான்காவது பெரிய பொருளாதார நாடாக ஸ்பெயின் விளங்குகிறது. எட்டு ‘ஃபார்ச்சூன் 500’ நிறுவனங்கள் மற்றும் 20 ‘ஃபார்ச்சூன் 2000’ நிறுவனங்களும், ஸ்பெயின் நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகின்றன. தமிழ்நாட்டுடன் வணிக உறவு மேற்கொள்ளும் ஐரோப்பிய நாடுகளில், 6-ஆவது பெரிய நாடாக ஸ்பெயின் உள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில், நான்காவது பெரிய பொருளாதாரமாக ஸ்பெயின் திகழ்வது போல, இந்தியாவின் இரண்டாவது பொருளாதாரமாக தமிழ்நாடு விளங்குகிறது. இந்த இரண்டு பொருளாதாரங்களுக்கும் நிறைய தொடர்புகள் உள்ளன. கெஸ்டாம்ப், கமேசா, ரோக்கா, உர்பேசர், இன்கிடீம், ஆம்ப்போ, பபேசா, ஆர்பினாக்ஸ், கோர்லான் ஆகிய முக்கிய ஸ்பானிஷ் நிறுவனங்கள் எங்கள் நாட்டில் தற்போது செயல்பட்டு வருகின்றன. இந்தப் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்திடும் விதமாக, உங்களுடைய முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்காக நான் இங்கு வந்துள்ளேன்.
இதற்கு முன்பு ஐக்கிய அரபு நாடுகள், ஜப்பான், சிங்கப்பூர் – ஆகிய நாடுகளுக்குச் சென்று முதலீடுகளை ஈர்த்துள்ளேன். தொடர்ச்சியாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கும் செல்ல இருக்கிறேன். கடந்த ஜனவரி 7,8 ஆகிய நாட்களில் நாங்கள் நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜப்பான், கொரியா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி மற்றும் டென்மார்க் ஆகிய 9 நாடுகள் எங்களுடன் பங்குதாரர் நாடுகளாக இணைந்து இருந்தன.
மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தைவான் பொருளாதார மற்றும் கலாச்சார நிறுவனங்களும் எங்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளார்கள். 30 நாடுகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் எங்கள் மாநாட்டுக்கு வந்திருந்தார்கள்.
* மிகப் பெரும் தொழில் நிறுவனங்களான, ஹுண்டாய், டாடா போன்ற நிறுவனங்கள், தங்கள் முதலீடுகளை பன்மடங்கு அதிகரித்துள்ளன.
* 130க்கும் மேற்பட்ட “ஃபார்ச்சூன் 500” நிறுவனங்கள், தமிழ்நாட்டில் தமது திட்டங்களை நிறுவியுள்ளதே தமிழ்நாட்டில் முதலீட்டுக்கான சிறந்த சூழல் அமைந்துள்ளதற்கு சான்று. இதன் தொடர்ச்சியாக ஸ்பெயின் நிறுவனங்களும் தமிழ்நாட்டை நோக்கி வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
வாகனங்கள், குறிப்பாக மின்வாகனங்கள், மின்னணுக் கருவிகள், தோல் பொருள்கள், தோல் அல்லாத காலணிகள், ஆடைகள் போன்றவற்றின் உற்பத்தியிலும், தகவல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உயர் மருத்துவ சேவைகள் போன்ற பல்வேறு துறைகளிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்து வருகின்றது.
இந்தத் துறைகளிலும், வான்வெளி மற்றும் பாதுகாப்பு, உயிர் அறிவியல் மற்றும் உயிரி தொழில்நுட்பம், மருந்துகள், உணவு பதப்படுத்துதல், உப்புநீக்கம் மற்றும் நீர் சுத்திகரிப்பு ஆகிய துறைகளில் உங்களின் மேலான முதலீடுகளை மேற்கொள்ளுமாறு, ஸ்பெயின் முதலீட்டாளர்களை நாங்கள் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் தொழில்களைத் துவங்க வரும் முதலீட்டாளர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தமிழ்நாடு அரசு காத்திருக்கிறது. பல்வேறு தொழில்களை மேற்கொள்ள உகந்த சூழலையும் திறன்மிக்க மனிதவளத்தையும் உறுதி செய்வதோடு, பல்வேறு தொழில் கொள்கைளின் கீழ் உயர் சலுகைகளையும் அளிக்க உள்ளோம். இவை குறித்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவும் அலுவலகர்களும் விரிவாக உங்களுக்கு எடுத்துரைக்க உள்ளார்கள். எனவே, தங்களது முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டும் என்று மீண்டும் வேண்டி கேட்டுக்கொண்டு விடைபெறுகின்றேன்!
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்
The post ’’ஸ்பெயின் முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டும்..!’’ முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் first appeared on Madras Murasu.
]]>The post ’’ஓவிய உலகின் முதல் கண்காட்சி..!’’ சென்னை ஆழ்வார்பேட்டையில் நடந்தது first appeared on Madras Murasu.
]]>சென்னை மயிலாப்பூரில், ‘ஓவிய உலகம்” என்கிற ஓவியப் பயிற்சி மையம் 2006 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. ஓவியர் பவானி இதை நிறுவி நிர்வகித்து வருகிறார். இவருடைய மகள்களும் ஓவியர்களுமான ஐஸ்வர்யா, அகல்யா ஆகியோரும் இந்த ஓவிய மையத்தின் ஆசிரியர்களாக உள்ளனர்.
எட்டு நிலைகள் கொண்ட பயிற்சி வகுப்புகள்
அடிப்படை ஓவியப் பயிற்சி, போஸ்டர் கலர், கரித்துண்டு ஓவியம், வண்ண பென்சில்களால் வரையும் ஓவியம், அக்ரிலிக் ஆன் கேன்வாஸ், வாட்டர் கலர் பெயிண்டிங், ஆயில் பெயிண்டிங் உள்ளிட்ட ஓவிய பயிற்சிகள் சொல்லித் தரப்படுகின்றன. எட்டு நிலைகள் கொண்ட பயிற்சி வகுப்புகள் இங்கு உள்ளன. எல்.கே.ஜி படிக்கும் குழந்தைகள் முதல் கல்லூரி வரை பயிலும் மாணவ மாணவியர் இங்கு பயிற்சி பெறுகிறார்கள்.
அனைத்து நிலைகளையும் கற்று முடித்த இளம் ஓவியர்களான வர்ஷினி, சக்தி, ரித்திகா, அதிதி, பிரதீப் ,கவிதா,காயத்ரி, சன்மதி, அனானிஸ், சோமசுந்தரம், கீர்த்திவர்ஷன் ஆகியோரின் படைப்புகள் அடங்கிய கண்காட்சி கடந்த 31.12.2023 அன்று சென்னை, ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ஆர்ட் கின் சென்டரில் நடைபெற்றது.

காவல் துணை கண்காணிப்பாளர் ந.குமார்
இந்த கண்காட்சிக்கு சிறப்பு விருந்தினராக தாம்பரம் நகர காவல் துணை கண்காணிப்பாளரான (போக்குவரத்து) ந.குமார், தம் துணைவியார் லட்சுமியுடன் வருகை தந்தார். கண்காட்சியை திறந்து வைத்து இளம் ஓவியர்களை பாராட்டினார்.
இளம் ஓவியர்களை வாழ்த்தி பேசுகையில், “ஓவியம் வரையும் திறமை ஒரு கொடை. குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அரிதாக இந்தக் கலை கிடைக்கும். நீங்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு கோணத்தில் மாறுபட்ட சிந்தனையுடன் ஓவியங்களை படைத்திருக்கிறீர்கள். உங்கள் அனைவரையும் மனமார பாராட்டுகிறேன்.

எந்தவிதமான வெற்றியும் உயர்நிலைப் பதவியும் கடின உழைப்புக்கும் படிப்படியான வளர்ச்சிக்கும் பிறகே கிடைக்கும். இன்றைக்கு காவல்துறை துணை ஆணையாளராக உள்ள நான் 1987 ஆம் ஆண்டு, காவல்துறையில் சேர்ந்தபோது கடைநிலை அதிகாரி பதவியான உதவி ஆய்வாளராகத் தான் சேர்ந்தேன். பிறகு படிப்படியாக உயர் பதவிகளுக்கு வந்தேன்.
நல்ல நண்பர்களை பெற்றிடுங்கள். நிறைய நற்பண்புகள் உங்களிடம் பெருகும். நல்ல பழக்கங்களை அதிகரித்துக் கொள்ளும்போது வேண்டாத பழக்கம் தானாக விலகும். விடாமுயற்சியும் கடின உழைப்பும் உங்களை வெற்றி சிகரத்தை எட்ட வைக்கும்! வாழ்த்துக்கள்.!!
இவ்வாறு காவல் துணை கண்காணிப்பாளர் ந.குமார் பேசினார்.
“வளர்தொழில்” “தமிழ் கம்ப்யூட்டர்” ஆசிரியர் ஜெய் கிருஷ்ணன்
கண்காட்சி நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக மூத்த பத்திரிகையாளரும் “வளர்தொழில்” “தமிழ் கம்ப்யூட்டர்” ஆசிரியருமான க. ஜெய் கிருஷ்ணன் தம் துணைவியார் சாந்தியுடன் கலந்து கொண்டார். ஓவியங்களை சிறப்பாக காட்சிப்படுத்திய இளம் ஓவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். ஓவியங்களுக்கு பிரேம் போட்டுக் கொடுத்த பழனி(சுலக்சனா பிரேம்ஸ்), ஆர்ட் கின் சென்டர் நிர்வாகி அனாகதா ஆகியவருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார் .

இளம் ஓவியர்களை பாராட்டி ஆசிரியர் க. ஜெய் கிருஷ்ணன் பேசியதாவது:
“மாலை முரசு குழுமத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த தேவி இதழில் துணை ஆசிரியராக 45 ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றத் தொடங்கியதில் இருந்து இன்று வரை இதழியல் துறையில் பயணப்பட்டு வருபவன் என்ற முறையில் , ஓவியக்கலை பற்றியும் ஓவியர்கள் பற்றியும் புரிதல் எனக்கு உண்டு.
இன்றைக்கு குழந்தைகளை வெகுவாக கவரும் தொலைக்காட்சி சித்திரக் கதைகள், பெண்களை ஈர்க்கும் நாடகங்கள் தொடங்கி சமூக ஊடக நிகழ்ச்சிகள், சினிமா கலை உலகம் என்று உங்களுக்கான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது.

ஓவியத்தை பிரதான உயர்கல்வியாக கொண்ட அரசு கவின் கல்லூரிகள், தனியார் கவின் கல்லூரிகள் உள்ளன. கலைநுட்பத் திறன் இயல்பாகவே உள்ள உங்களைப் போன்றோர் அங்கு சென்று படிக்கும்போது இத்துறையில் உச்சம் தொட முடியும். பேஷன் டிசைனிங், ஆர்க்கிடெக் போன்ற படிப்புகளில் நீங்கள் இறங்கினால் அங்கு தனி முத்திரை பதிப்பீர்கள். பொதுவாக, எந்தப் பாடம் எடுத்து படித்தாலும் உங்களுக்கு இருக்கும் கலைத்திறமை அந்தப் பாடப்பிரிவில் உங்களை பளிச்சிட்டுக் காட்ட வைக்கும்.
உங்களிடம் திறமை நிரம்ப உள்ளது . உங்களுக்கான வாய்ப்புகள் காத்திருக்கின்றன.
மாபெரும் வெற்றிகளை குவித்திடுங்கள்.!
இவ்வாறு க.ஜெய் கிருஷ்ணன் பேசினார்.

ஓவிய உலகில் படித்து முடித்த மாணவ மாணவியர் தவிர தற்போது ஓவியக்கலையை பயின்று கொண்டிருக்கும் மாணவர்களான ஜனனி, தீபிகா, சங்கீதா, ஸ்ரீநிதி, யுகபாரதி ,ஜெய்வந்தி ஆகியோரும் தங்கள் ஓவியங்களை கண்காட்சியில் காட்சிக்கு வைத்திருந்தனர். ஏராளமானோர், ஓவிய உலகம் கண்காட்சியை பார்த்தனர். அவர்களிடம் மெட்ராஸ் முரசு சார்பில் பேசினோம்.
ஆழ்வார்பேட்டையை சேர்ந்த குடும்பத்தலைவி திருமதி சரளாதேவி, ‘’இந்த ஓவிய உலகம் கண்காட்சி கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் கலர்புல் ஆக இருந்தது. தொழில் சார் கல்வி படிக்காமல், ஆர்வத்தால் மேற்கொண்ட பயிற்சி மூலம் இந்த இளம் மாணவ, மாணவியர்கள் அருமையாக ஓவியம் வரைந்துள்ளார்கள். அவர்களை பாராட்டுகிறேன்’’ என்று சொன்னார்.

சென்னை சிறுசேரியில் தனியார் சர்வதேச மென்பொருள் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் செல்வி வித்யா, ‘’இன்று 2023 ஆம் ஆண்டின் கடைசி நாள் என்பதால் குடும்பத்தினருடன் மதியம் லஞ்ச் சாப்பிட வெளியே வந்தோம். அப்போதுதான், இந்த கண்காட்சி நடப்பதை தெரிந்து கொண்டோம். குடும்பத்தோடு ஓவிய உலகம் கண்காட்சியை பார்த்தோம்.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான லலித் கலா அகாடமியில்தான் தரமான ஓவியக் கண்காட்சி அவ்வப்போது நடக்கும். அதை பார்த்திருக்கிறேன். அங்கெல்லாம் பெரிய பெரிய ஆட்கள் என்று புகழ்பெற்ற ஓவியர்கள், விஐபி ஓவியர்கள் கண்காட்சிகளை பார்த்திருக்கிறேன். ஆனால், இன்றுதான் இளம் வயது ஓவியர்களின் ஓவியங்களை பார்த்தேன். தரமானதான இருந்தது. கண்கொள்ளா காட்சி’’ என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த பார்த்தசாரதி கூறுகையில், ‘’ஓவியக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களையே மிஞ்சும் வகையில் இளம் பிஞ்சுகளின் ஓவியம் இருந்தது. இந்த சின்ன வயதிலேயே மிகவும் அழகாக ஓவியம் வரைந்துள்ளார்கள். பல்வேறு வகைகளில் விதவிதமான ஓவியங்களைக் காட்சிப்படுத்தி இருந்தது கண்களுக்கு விருந்தளித்தது’’ என்று தெரிவித்தார்.
நாமும், ‘மெட்ராஸ் முரசு’ சார்பில் ஓவியக் கண்காட்சியை கண்குளிர பார்த்துவிட்டு இளம் ஓவியர்களுக்கு வாழ்த்து சொல்லி விட்டு புறப்பட்டோம்.
ஓவிய உலகில் சாதனை படைக்க வாழ்த்துகள்..!
The post ’’ஓவிய உலகின் முதல் கண்காட்சி..!’’ சென்னை ஆழ்வார்பேட்டையில் நடந்தது first appeared on Madras Murasu.
]]>