Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
வெளிநாட்டு வேலை வாய்ப்பு - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Fri, 02 Aug 2024 05:42:35 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 வெளிநாடு செல்ல ஆசையா ..! தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு https://madrasmurasu.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%86%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b5%25e0%25af%2586%25e0%25ae%25b3%25e0%25ae%25bf%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%2581-%25e0%25ae%259a%25e0%25af%2586%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%25b2-%25e0%25ae%2586%25e0%25ae%259a%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25ae%25be-%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25ae%25bf https://madrasmurasu.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%86%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf/#respond Fri, 02 Aug 2024 05:42:09 +0000 https://madrasmurasu.com/?p=9523 வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல விரும்புவோர், உடனே பதிவு செய்யலாம் என்று தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:  அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் 1978-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு நிறுவனமாக  தொடங்கப்பட்டு வெளிநாட்டு வேலைநாடுநர்களை வெளிநாடுகளில் பணியமர்த்தும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் இந்திய கம்பெனிகள் சட்டம், 1956-ன்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனம் இந்திய குடிபெயர்வோர் சட்டம்  1983-ன் கீழ் ஆட்சேர்ப்பு நிறுவனமாக பதிவு செய்யப்பட்டு  வெளிநாட்டு வேலைகளில் […]

The post வெளிநாடு செல்ல ஆசையா ..! தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு first appeared on Madras Murasu.

]]>
வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல விரும்புவோர், உடனே பதிவு செய்யலாம் என்று தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் 1978-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு நிறுவனமாக  தொடங்கப்பட்டு வெளிநாட்டு வேலைநாடுநர்களை வெளிநாடுகளில் பணியமர்த்தும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனம் இந்திய கம்பெனிகள் சட்டம், 1956-ன்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனம் இந்திய குடிபெயர்வோர் சட்டம்  1983-ன் கீழ் ஆட்சேர்ப்பு நிறுவனமாக பதிவு செய்யப்பட்டு  வெளிநாட்டு வேலைகளில் பணியாளர்களை பணியமர்த்துவதற்கு இந்திய  வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உரிமம் பெற்றுள்ளது. 

இந்நிறுவனத்தின் வலைதளம் www.omcmanpower.com என்ற தனியார் Domain-ல் இருந்து தமிழக அரசின் www.omcmanpower.tn.gov.in என்ற களத்தில் (Domain) மாற்றப்பட்டுள்ளது. எனவே வெளிநாடு செல்ல விருப்பமுள்ளவர்கள் www.omcmanpower.tn.gov.in என்ற வலைதளத்தில் பதிவுசெய்து பயனடையுமாறு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

 

The post வெளிநாடு செல்ல ஆசையா ..! தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%86%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf/feed/ 0
”இஸ்ரேலில் கட்டுமான பணி..!” 10,000 பேருக்கு வேலை ரெடி https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf-10000/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%25b0%25e0%25af%2587%25e0%25ae%25b2%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25a9-%25e0%25ae%25aa%25e0%25ae%25a3%25e0%25ae%25bf-10000 https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf-10000/#respond Sat, 24 Feb 2024 04:54:15 +0000 https://madrasmurasu.com/?p=8703 இஸ்ரேல் நாட்டில் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு இருக்கிறது. தகுதியும் ஆர்வமும் உள்ளோர் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசுக்கு சொந்தமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மகேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: இஸ்ரேல் நாட்டில் கட்டுமானப் பணிக்கு 10,000 பேர் தேவைப்படுகிறார்கள். இப்பணிக்கு 3 வருடம் பணி அனுபவமுள்ள 25 முதல் 45 வயதுக்குட்பட்ட ப்ளாஸ்டெரிங் பணி ( Plastering work), செராமிக் டைலிங் (Ceramic […]

The post ”இஸ்ரேலில் கட்டுமான பணி..!” 10,000 பேருக்கு வேலை ரெடி first appeared on Madras Murasu.

]]>
இஸ்ரேல் நாட்டில் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு இருக்கிறது. தகுதியும் ஆர்வமும் உள்ளோர் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசுக்கு சொந்தமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்து அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மகேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

இஸ்ரேல் நாட்டில் கட்டுமானப் பணிக்கு 10,000 பேர் தேவைப்படுகிறார்கள். இப்பணிக்கு 3 வருடம் பணி அனுபவமுள்ள 25 முதல் 45 வயதுக்குட்பட்ட ப்ளாஸ்டெரிங் பணி ( Plastering work), செராமிக் டைலிங் (Ceramic Tiling), கட்டிட ஃபார்ம் பணி (Building Form work) மற்றும் இரும்பு பென்டிங் (Iron Pending) ஆகிய பணிகளுக்கு ஆண் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.

மாத ஊதியமாக சுமார் ரூ.1,37,000 வரை பெறலாம். மேலே குறிப்பிட்டுள்ள பணிக்கு விருப்பம் உள்ளவர்கள் www.omcmanpower.tn.gov.in என்ற வலைதளம் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். மேலும் ovemclnm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுயவிவர விண்ணப்பப்படிவம், கல்வி, பணி அனுபவச் சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் (Passport) நகலை மார்ச் 5-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளம் www.omcmanpower.tn.gov.in, தொலைபேசி எண்கள் (044-22505886/22502267) மற்றும் வாட்ஸ்ஆப் எண் (9566239685) வாயிலாக அறிந்துகொள்ளலாம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வேலை விபரம் : ROD BENDER – (கட்டுமான கம்பி வளைப்பவர்) :

  • ISRAEL
  •  IRON BENDER
  •  Deadline : Feb 29, 2024
  •  I. Must Know Basic English And Able To Read Construction Drawing.
  • The First Visa And Work Permit Will Be Valid Until The End Of The Calendar Year And May Be Extended For Additional Periods Of Up To One Year At A Time To A Maximum Of 63 Months.
  • Accommodation Allowance Will Be Deduct From Candidates Salary As Per The Location And Range Will Be (278.94 – 449.82 NIS).
  • Medical Insurance Charges (134.46 NIS) Will Be Deduct From Candidate’s Salary.
  • This Amount Accrued For Each Worker In The Bank Deposit Will Be Paid To The Employee Together With Accrued Interest And After Deduction Of Taxes And Bank Fees, When He Leaves Israel Permanently At The Completion Of His Legal Visa Period.

No. Of Vacancies

3000

Salary Ranges

135000 – 137000

Gender

Male

Age Limits

21 – 45

Job Category

IRON BENDING

Preferred Jobs

IRON BENDING ,

Last Date Of Application

29-Feb-2024

CARPENTER – கார்பெண்டர்

  •  ISRAEL
  •  CARPENTER
  •  Deadline : Feb 29, 2024
  •  I. Must Know Basic English And Able To Read Construction Drawing.
  • The First Visa And Work Permit Will Be Valid Until The End Of The Calendar Year And May Be Extended For Additional Periods Of Up To One Year At A Time To A Maximum Of 63 Months.
  • Accommodation Allowance Will Be Deduct From Candidates Salary As Per The Location And Range Will Be (278.94 – 449.82 NIS).
  • Medical Insurance Charges (134.46 NIS) Will Be Deduct From Candidate’s Salary.
  • This Amount Accrued For Each Worker In The Bank Deposit Will Be Paid To The Employee Together With Accrued Interest And After Deduction Of Taxes And Bank Fees, When He Leaves Israel Permanently At The Completion Of His Legal Visa Period.
  • Must Have A Valid Passport
  • No. Of Vacancies

    3000

    Salary Ranges

    135000 – 137000

    Gender

    Male

    Age Limits

    21 – 45

    Job Category

    Framework/Shuttering Carpenter

    Preferred Jobs

    Framework/Shuttering Carpenter ,

    Last Date Of Application

    29-Feb-2024

PLASTERING – பிளாஸ்டெரிங்

  •  ISRAEL
  •  10TH STD
  •  Deadline : Feb 29, 2024
  •  I. Must Know Basic English And Able To Read Construction Drawing.
  • The First Visa And Work Permit Will Be Valid Until The End Of The Calendar Year And May Be Extended For Additional Periods Of Up To One Year At A Time To A Maximum Of 63 Months.
  • Accommodation Allowance Will Be Deduct From Candidates Salary As Per The Location And Range Will Be (278.94 – 449.82 NIS).
  • Medical Insurance Charges (134.46 NIS) Will Be Deduct From Candidate’s Salary.
  • This Amount Accrued For Each Worker In The Bank Deposit Will Be Paid To The Employee Together With Accrued Interest And After Deduction Of Taxes And Bank Fees, When He Leaves Israel Permanently At The Completion Of His Legal Visa Period.

No. Of Vacancies

2000

Salary Ranges

135000 – 137000

Gender

Male

Age Limits

21 – 45

Job Category

PLASTERING

Preferred Jobs

PLASTERING ,

Last Date 29, Feb 2024

CERAMIC TILE –

  •  ISRAEL
  •  10TH STD
  •  Deadline : Feb 29, 2024
  •  I. Must Know Basic English And Able To Read Construction Drawing.
  • The First Visa And Work Permit Will Be Valid Until The End Of The Calendar Year And May Be Extended For Additional Periods Of Up To One Year At A Time To A Maximum Of 63 Months.  Accommodation Allowance Will Be Deduct From
  • Candidates Salary As Per The Location And Range Will Be (278.94 – 449.82 NIS).
  • Medical Insurance Charges (134.46 NIS) Will Be Deduct From Candidate’s Salary.
  • This Amount Accrued For Each Worker In The Bank Deposit Will Be Paid To The Employee Together With Accrued Interest And After Deduction Of Taxes And Bank Fees, When He Leaves Israel Permanently At The Completion Of His Legal Visa Period.

No. Of Vacancies

2000

Salary Ranges

135000 – 137000

Gender

Male

Age Limits

21 – 45

Job Category

CERAMIC TILE

Preferred Jobs

CERAMIC TILE ,

Last Date Of Application

29-Feb-2024

The post ”இஸ்ரேலில் கட்டுமான பணி..!” 10,000 பேருக்கு வேலை ரெடி first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf-10000/feed/ 0
’’வெளிநாட்டு வேலை கனவுகளை நிறைவேற்றுவோம்..!’’ செவிலியர் பயிற்சி விழாவில் அமைச்சர் உதயநிதி https://madrasmurasu.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%a9%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b5%25e0%25af%2586%25e0%25ae%25b3%25e0%25ae%25bf%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%2581-%25e0%25ae%25b5%25e0%25af%2587%25e0%25ae%25b2%25e0%25af%2588-%25e0%25ae%2595%25e0%25ae%25a9%25e0%25ae%25b5%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25ae%25b3 https://madrasmurasu.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%a9%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3/#respond Tue, 17 Oct 2023 05:15:11 +0000 https://madrasmurasu.com/?p=6921 இந்திய செவிலியர்களுக்கு இங்கிலாந்து மாதிரியான ஐரோப்பிய நாடுகள் – தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் மிகப்பெரிய அளவில் வரவேற்பு உள்ளது. ஐக்கிய அரபு நாடுகளில் அதிக வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. உங்கள், வெளிநாட்டுப்பணி கனவு வெல்லட்டும். அதற்கு தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் துணை நிற்கும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். இளைஞர் நலன் மற்றும்  விளையாட்டு மேம்பாட்டுத்  துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வெளிநாட்டு வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து, சவுதி அரேபிய […]

The post ’’வெளிநாட்டு வேலை கனவுகளை நிறைவேற்றுவோம்..!’’ செவிலியர் பயிற்சி விழாவில் அமைச்சர் உதயநிதி first appeared on Madras Murasu.

]]>
இந்திய செவிலியர்களுக்கு இங்கிலாந்து மாதிரியான ஐரோப்பிய நாடுகள் – தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் மிகப்பெரிய அளவில் வரவேற்பு உள்ளது. ஐக்கிய அரபு நாடுகளில் அதிக வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. உங்கள், வெளிநாட்டுப்பணி கனவு வெல்லட்டும். அதற்கு தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் துணை நிற்கும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
இளைஞர் நலன் மற்றும்  விளையாட்டு மேம்பாட்டுத்  துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வெளிநாட்டு வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து, சவுதி அரேபிய அமைச்சகத்தின் செவிலியர் பணிக்கு தேர்ச்சி பெற்ற செவிலியர்களுக்கு சவுதி அரேபியா செல்வதற்காக பயணக் கோப்புகளை வழங்கினார்.
இளைஞர் நலன் மற்றும்  விளையாட்டு மேம்பாட்டுத்  துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 16.10.2023 அன்று சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மற்றும் செவிலியர், தாதியர் குழுமம் இணைந்து நடத்திய வெளிநாட்டு வேலைவாய்ப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியினைத் தொடங்கி வைத்தார். (https://www.omcmanpower.tn.gov.in/ தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்)
இந்நிகழ்ச்சியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சவுதி அரேபிய அமைச்சகத்தின் செவிலியர் பணிக்கான நேர்காணலில் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலமாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற செவிலியர்களுக்கு, சவுதி அரேபியா செல்வதற்கு பயணக் கோப்புகள் வழங்கப்பட்டது.  மேலும், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் பணிக்காலியிடங்கள் குறித்தும், வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியம் குறித்தும், பாதுகாப்பு மற்றும் சட்டப்பூர்வ இடப்பெயர்வு குறித்தும், செவிலியர்களுக்கான உலகளாவிய வேலைவாய்ப்பு குறித்தும், IELTS/OET பயிற்சியளிக்கும் பயிற்சி நிறுவனங்கள் மூலம் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு செவிலியர் பணிக்கு செல்வதற்கான சிறப்பு மொழித் தேர்வினை பற்றிய விவரங்கள் குறித்தும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுமார் 960க்கும் மேற்பட்ட இறுதியாண்டு பயிலும் செவிலிய மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு  மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
தமிழ்நாடு அரசின் Overseas Manpower Corporation (OMC) மற்றும் Tamil Nadu Nurses and Midwives Council சார்பில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பற்றிய இந்த ஒருநாள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நிகழ்ச்சி மிக மிக அவசியமான நிகழ்ச்சி. குறிப்பாக Nursing படிக்கின்ற மாணவிகளுக்கும், செவிலியர்களுக்கும் பயனுள்ள வகையில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ள சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அண்ணன் செஞ்சி மஸ்தான் -க்கு என் வாழ்த்துகள்.
எவ்வளவோ பணிகள் இருந்தாலும், மருத்துவத்துறை பணி என்பது சமூகத்துக்கு செய்கின்ற சேவையாகும். அதிலும், குறிப்பாக செவிலியர் பணி என்பது இன்னும் மேன்மையானது. நான் பல இடங்களுக்கு அரசு நிகழ்ச்சிகளுக்காக செல்கிற போது, அரசு மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்வது வழக்கம்.  அதிகாரிகளுடன் இரவு 11 மணிக்கு சென்றாலும், 12 மணிக்கு சென்றாலும், அங்கு செவிலியர்களான நீங்கள் தான் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பீர்கள்.
ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் என்றால், மருத்துவர்கள் என்ன நோய் என்று கண்டுபிடிப்பார்கள், மருந்து – மாத்திரை கொடுப்பார்கள்.  ஆனால், செவிலியர்கள் தான் ஒரு நோயாளி discharge ஆகிற வரை உடன் இருந்து அந்த நோயாளியை குணப்படுத்துவதற்கு தேவையான அத்தனை மருத்துவப்பணிகளையும் செய்வார்கள்.
கொரோனா நேரத்தில் செவிலியர்கள் ஆற்றிய பங்களிப்பு என்பது போற்றுதலுக்குரியது. குடும்பத்தை விட்டு – PPE Kits -ஐ அணிந்து கொண்டு நாள் முழுவதும் மக்களை காக்க உயிரை பணயம் வைத்து சேவையாற்றியவர்கள் நீங்கள். அதனால், தான் கழக அரசு செவிலியர்களுக்கு கொரோனா நேரத்தில் ரூ.20 ஆயிரத்தை சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கியது.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மேற்கொண்ட கல்வி சீர்திருத்தங்களால், இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் ஏராளமான செவிலியர் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அந்தக் கல்லூரி களில்எல்லாம் ஆயிரக்கணக்கான மாணவிகள், ஏன் மாணவர்களும் செவிலியர் படிப்பை படித்து வருகின்றார்கள். மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள ஒரு குடும்பத்தில் பிறக்கிற பெண், அந்தக் குடும்பத்தை காக்கின்ற வகையில் உடனே பணிக்கு செல்ல வேண்டுமென்றால், 10ஆம் வகுப்பு முடித்துவிட்டு, டிப்ளமோ செவிலியர் படிப்பு முடித்தால், உடனே பணிக்கு சேர முடியும். குடும்பத்தை காப்பாற்ற முடியும்.  ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், படித்தால் நிச்சயம் வேலை உறுதி என்கிற படிப்புகளில் Nursing-ம் ஒன்று.  அப்படிப்பட்ட செவிலியர் படிப்பை படிக்கின்ற நீங்கள், அதிக ஊதியத்துடன் பணிபுரிய வேண்டும்.
வெளிநாட்டில் உள்ள உயர்சிறப்பு மருத்துவமனைகளில் பணிக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் கழக அரசு செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகத் தான் இன்றைக்கு, இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. Overseas Manpower Corporation (OMC) மற்றும் Tamil Nadu Nursing and Midwives Council நடத்துகிற இந்த ஒரு நாள் விழிப்புணர்வு முகாமில், செவிலியர்கள் எப்படி அயல்நாட்டு பணிகளுக்கு செல்வது என்பது குறித்து பல்வேறு ஆக்கப்பூர்வமான அறிவுரைகள் வழங்கப்படவுள்ளன.
குறிப்பாக, விசா பெறுவது, வெளிநாட்டில் உள்ள பாதுகாப்பு, சட்டப்பூர்வ இடப்பெயர்வு, உலக அளவில் செவிலியர்களுக்கு உள்ள வேலைவாய்ப்புகள், வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியத்தின் செயல்பாடுகள் குறித்தெல்லாம் இங்கே உங்களிடம் அந்தந்த துறைகளை சேர்ந்த வல்லுநர்கள் உரையாற்றவுள்ளார்கள்.
செவிலியர் படிப்பை முடித்ததும் நீங்கள் பல்வேறு வெளிநாடுகளுக்கு செல்லலாம். குறிப்பாக ஐக்கிய அரபு நாடுகளில் அதிக வேலைவாய்ப்புகள் இருக்கின்றன.
இந்தியாவில் பயின்ற செவிலியர்களுக்கு இங்கிலாந்து மாதிரியான ஐரோப்பிய நாடுகள் – தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் மிகப்பெரிய அளவில் வரவேற்பு உள்ளது.  இப்படி ஒவ்வொரு நாட்டுக்கும் விண்ணப்பிக்கும் போது, திறன் ரீதியாக வெவ்வேறு மாதிரியான தேவைகளை அந்தந்த நாடுகள் எதிர்பார்க்கின்றன. உதாரணத்துக்கு இங்கிலாந்து செல்கிறீர்கள் என்றால் Occupational English Test எனப்படும் OET தேர்வை நீங்கள் எழுத வேண்டும். இது போன்ற பயனுள்ள விஷயங்கள் எல்லாம் இந்த நிகழ்ச்சியில் உங்களுக்கு எடுத்துக் கூறப்படவுள்ளன.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் – அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்துடன் இணைந்து OET Coaching Classes-ஐ நடத்தி வருகிறது. அதையெல்லாம் நீங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  அடிக்கடி, OMC-ன் இணையதளத்துக்கு சென்று அங்கு பதியப்படும் வேலைவாய்ப்பு தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.  செவிலியர் பணி என்றாலே பெரும்பாலும் – பெண்கள் தான் இருப்பார்கள். எனவே, நீங்கள் வெளிநாடு சென்று நல்ல மருத்துவமனையில் பணியாற்றுகிற போது, உங்கள் குடும்ப பொருளாதாரமும் உயரும். பெண்கள் பொருளாதார சுதந்திரத்தை அடைய முடியும்.
இந்த அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை பொறுத்தவரை, 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வெளிநாட்டு வேலைகளை இதுவரை பெற்றுக் கொடுத்துள்ளது. இடைத்தரகர்கள் – ஏஜண்டுகளிடம் மாட்டிக்கொண்டு பணத்தை இழக்காதீர்கள். அப்படியே ஏஜண்டுகள் மூலம் வெளிநாட்டுக்கு வேலை செல்கிறீர்கள் என்றாலும், உங்களை பணிக்கு சேர்த்தவுடன் நகர்ந்து விடுவார்கள். ஆனால், தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அப்படியல்ல. ஏஜண்டுகளிடம் நீங்கள் பல இலட்சம் பணம் கொடுத்து தான் வெளிநாடு செல்ல முடியும். ஆனால், இது அரசு நிறுவனம் என்பதால், 2 இலட்சம் ரூபாய் ஊதியத்தில் பணிக்கு சேர வேண்டும் என்றால் கூட, அதிகபட்சம் 35 ஆயிரம் வரை செலுத்தினால் மட்டும் போதும்.
மேலும், வெளிநாட்டு வேலைக்கு செல்ல விண்ணப்பிப்பதில் ஆரம்பித்து, அங்கு தங்குவது, பணிக்கு சேருவது – திரும்பி வருவது என அத்தனை நடைமுறையிலும் தமிழ்நாடு அரசு உங்களுக்கு துணையாக நிற்கும். இங்கு வந்துள்ள நீங்கள் ஒவ்வொருவரும், நிச்சயம் வெளிநாட்டு வேலைக்கு செல்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இதற்கான உதவிகளை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் நிச்சயம் உங்களுக்கு செய்யும். இன்றைய நிகழ்ச்சியும் அதற்கு உங்களுக்கு பயனுள்ள வகையில் அமையும்.
இந்த நேரத்தில் நான் ஒரேயொரு வேண்டுகோளை வைக்க விரும்புகிறேன். நீங்கள் வெளிநாடு செல்லுங்கள். கைநிறைய ஊதியம் பெற்றுக் கொள்ளுங்கள். ஆனால், ஒரு கட்டத்துக்கு பிறகு, நீங்கள் தமிழ்நாட்டுக்கு வந்து இங்கு மருத்துவ சேவையாற்ற வேண்டும். Overseas Manpower Corporation-க்கும் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். OMC-ஐ நாடி வருகிறவர்களுக்கு நம்பிக்கையாக பதில் அளியுங்கள். விளக்கங்களை கூறுங்கள். வழக்கமான அரசு அலுவலகம் போல தான் இதுவும் என்று யாரும் எண்ணிவிடக்கூடாத அளவுக்கு நீங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த விழிப்புணர்வு பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ள உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். அரசுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை சிறப்புடன் நடத்துகிற தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் கவுன்சிலுக்கு என் பாராட்டுகள். இங்கு வந்துள்ள செவிலியர்கள் – செவிலியர் மாணவிகள், உங்கள் அனைவரின் வெளிநாட்டுப்பணி கனவு வெல்லட்டும்.
நீங்கள் உங்கள் வாழ்வில் வெற்றிபெற முதலமைச்சர், உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். நம் திராவிட மாடல் அரசு உங்களுக்கு பக்கபலமாக இருக்கும்.
இவ்வாறு அமைச்சர் உதயநிதி பேசினார்.
தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமம்- முனைவர் ஆனி கிரேஸ்
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிறுபான்மையினர் நலன்  மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ் குமார்,  அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குநர் முனைவர் சி.நா.மகேஷ்வரன், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை ஆணையாளர் ஜெசிந்தா லாசரஸ், குடிப்பெயர்வோர் பாதுகாப்பு அலுவலர் மு.ராஜ்குமார்,  தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமத்தின் பதிவாளர் முனைவர் ஆனி கிரேஸ் கலைமதி, சென்னை மருத்துவக் கல்லூரி அரசு செவிலியர் கல்லூரி முதல்வர் முனைவர் இரா.சங்கர் சண்முகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post ’’வெளிநாட்டு வேலை கனவுகளை நிறைவேற்றுவோம்..!’’ செவிலியர் பயிற்சி விழாவில் அமைச்சர் உதயநிதி first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%a9%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3/feed/ 0
’’சவுதி அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு Perfusionists தேவை..!’’ B.Sc., Paramedical முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்  https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%ae%b5%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%a9%e0%af%88/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259a%25e0%25ae%25b5%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25bf-%25e0%25ae%2585%25e0%25ae%25b0%25e0%25ae%259a%25e0%25af%2581-%25e0%25ae%25ae%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25b5%25e0%25ae%25ae%25e0%25ae%25a9%25e0%25af%2588 https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%ae%b5%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%a9%e0%af%88/#respond Thu, 06 Jul 2023 10:48:43 +0000 https://madrasmurasu.com/?p=4873 சவுதி அரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் இரண்டு வருட பணி அனுபவத்துடன் Perfusionists தேர்ச்சி பெற்ற 35 வயதிற்குட்பட்ட ஆண் / பெண் Perfusionists தேவைப்படுகிறார்கள். B.Sc., Paramedical முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.  இந்தப்பணியாளர்களுக்கு உணவுப்படி. இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு பணிக்காலியிடங்கள் குறித்த வேலைகளுக்கான விவரங்கள் இந்திறுவன வலைத்தளமான www.omcmanpower.com-ல் கண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் ஊதியம் மற்றும் […]

The post ’’சவுதி அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு Perfusionists தேவை..!’’ B.Sc., Paramedical முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்  first appeared on Madras Murasu.

]]>
சவுதி அரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் இரண்டு வருட பணி அனுபவத்துடன் Perfusionists தேர்ச்சி பெற்ற 35 வயதிற்குட்பட்ட ஆண் / பெண் Perfusionists தேவைப்படுகிறார்கள். B.Sc., Paramedical முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். 

இந்தப்பணியாளர்களுக்கு உணவுப்படி. இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு பணிக்காலியிடங்கள் குறித்த வேலைகளுக்கான விவரங்கள் இந்திறுவன வலைத்தளமான www.omcmanpower.com-ல் கண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் ஊதியம் மற்றும் பணி விவரங்கள் பற்றிய விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் (9566239685, 6379179200) (044-22505886/044-22502267). மேற்கறிப்பிட்ட பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் வழியாக www.ovemclmohsa20.21@gmail.com சுயவிவரங்கள் விண்ணப்ப படிவத்தை உடனடியாக அனுப்பி வைக்குமாறு அடங்கிய
கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜெண்ட்டுகளோ கிடையாது. விண்ணப்பதாரர்கள் நேரிடையாக பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பதிவு மற்றும் பணிவிவரங்களின் தகுதியைப் பொறுத்து முன்னுரிமை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் பயணாளிகளிடம் இருந்து கட்டணமாக 35400 மட்டுமே வசூலிக்கப்படும்.

(PERFUSIONIST, SAUDI ARABIA, Salary Ranges 100000 – 150000, Gender – Both, Age Limits 21 – 35, Job Category – B.Sc., Paramedical, Last Date Of Application 22-Oct-2023, Interview Date – Intimated later, Educational Requirements – B.Sc Perfusionist. Interested Candidates May send their Biodata along with Passport Copies to Email_ovemclmohsa2021@gmail.com For Further Details: call 044-22505886  )

The post ’’சவுதி அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு Perfusionists தேவை..!’’ B.Sc., Paramedical முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்  first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%ae%b5%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%a9%e0%af%88/feed/ 0
”சவுதி அரேபியாவில் பெண் செவிலியர் வேலை..!’’ உடனடியாக விண்ணப்பிக்கலாம் https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%ae%b5%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%af%87%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%9a/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259a%25e0%25ae%25b5%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25bf-%25e0%25ae%2585%25e0%25ae%25b0%25e0%25af%2587%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%2586%25e0%25ae%25a3%25e0%25af%258d-%25e0%25ae%259a https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%ae%b5%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%af%87%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%9a/#respond Wed, 05 Jul 2023 11:13:19 +0000 https://madrasmurasu.com/?p=4826 அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஜுலை 3-ம் தேதி வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிக்கை:  சவுதி அரேபிய அமைச்சகத்தில் பணிபுரிய பெண் செவிலியர்களுக்கான அரிய வாய்ப்பு தற்போது வந்துள்ளதாக, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், தெரிவித்துள்ளார். சவுதி அரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் இரண்டு வருட பணி அனுபவத்துடன் B.Sc Nursing தேர்ச்சி பெற்ற 35 வயதிற்குட்பட்ட பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். மேலும், Data Flow மற்றும் HRD சான்றிதழ்களில் சான்றொப்பம் பெற்றவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும். மேற்படி பணியாளர்களுக்கு […]

The post ”சவுதி அரேபியாவில் பெண் செவிலியர் வேலை..!’’ உடனடியாக விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.

]]>
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஜுலை 3-ம் தேதி வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிக்கை: 

சவுதி அரேபிய அமைச்சகத்தில் பணிபுரிய பெண் செவிலியர்களுக்கான அரிய வாய்ப்பு தற்போது வந்துள்ளதாக, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், தெரிவித்துள்ளார். சவுதி அரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் இரண்டு வருட பணி அனுபவத்துடன் B.Sc Nursing தேர்ச்சி பெற்ற 35 வயதிற்குட்பட்ட பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள்.

மேலும், Data Flow மற்றும் HRD சான்றிதழ்களில் சான்றொப்பம் பெற்றவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும். மேற்படி பணியாளர்களுக்கு உணவுப்படி. இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக்காலியிடங்கள் குறித்த விவரங்கள் இந்திறுவன வலைத்தளமான www.omcmanpower.com-ல் பார்க்கலாம். ஊதியம் மற்றும் பணி விவரங்கள் பற்றிய விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் (9566239685, 6379179200) (044-22505886/044-22502267).

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞசல் வழியாக www.ovemclmohsa2021@gmail.com சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்ப படிவத்தை உடனடியாக அனுப்பி வைக்கலாம்.

அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜெண்ட்டுகளோ கிடையாது. விண்ணப்பதாரர்கள் நேரிடையாக பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பதிவு மற்றும் பணிவிவரங்களின் தகுதியைப் பொறுத்து முன்னுரிமை வழங்கப்படும்.

இந்தப்பணிக்கு தேர்வுபொறும் பணியாளர்களிடமிருந்து சேவைக் கட்டணமாக ரூ.35,400/- மட்டும் வசூலிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

The post ”சவுதி அரேபியாவில் பெண் செவிலியர் வேலை..!’’ உடனடியாக விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%ae%b5%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%af%87%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%9a/feed/ 0
’’கொட்டிக்கிடக்கும் வெளிநாட்டு வேலை..!’’ தமிழ்நாடு அரசின் கட்டணமில்லா சேவை https://madrasmurasu.com/%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258a%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25af%2586%25e0%25ae%25b3 https://madrasmurasu.com/%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3/#respond Sun, 30 Apr 2023 06:16:35 +0000 https://madrasmurasu.com/?p=768 தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (OMCL) என்பது 1978-ம் ஆண்டு இந்திய தொழிற்சாலை விதி 1956-ன்படி துவங்கப்பட்டு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மூலம் வேலைநாடும் இளைஞர்களுக்கு அயல்நாடுகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் அமைப்பாகும்.  இந்நிறுவனத்தின் வாயிலாக இதுவரை 10,350-ற்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர், மலேசியா, பஹ்ரைன், லிபியா, குவைத், சௌதி, அரேபியா, ஓமன், துபாய் மற்றும் கத்தார் போன்ற பல்வேறு நாடுகளில் மருத்துவர், பொறியாளர், செவிலியர், பாராமெடிக்கல்-டெக்னிசியன்கள், திறன் […]

The post ’’கொட்டிக்கிடக்கும் வெளிநாட்டு வேலை..!’’ தமிழ்நாடு அரசின் கட்டணமில்லா சேவை first appeared on Madras Murasu.

]]>
தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (OMCL) என்பது 1978-ம் ஆண்டு இந்திய தொழிற்சாலை விதி 1956-ன்படி துவங்கப்பட்டு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மூலம் வேலைநாடும் இளைஞர்களுக்கு அயல்நாடுகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் அமைப்பாகும். 

இந்நிறுவனத்தின் வாயிலாக இதுவரை 10,350-ற்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர், மலேசியா, பஹ்ரைன், லிபியா, குவைத், சௌதி, அரேபியா, ஓமன், துபாய் மற்றும் கத்தார் போன்ற பல்வேறு நாடுகளில் மருத்துவர், பொறியாளர், செவிலியர், பாராமெடிக்கல்-டெக்னிசியன்கள், திறன் சார்ந்த மற்றும் திறன் அல்லாத பணிக்காலியிடங்களில் வேலைவாய்ப்பு பெற்றிருக்கின்றனர்.

இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கங்கள் அதிகப்படியான திறன்படைத்த இளைஞர்களை உருவாக்குதல், இளைஞர்களை அயல்நாடுகளில் பணியமர்த்தம் செய்யும் பொருட்டு ஆங்கிலத்தில் பேசுதல், எழுதுதல், படித்தல், கவனித்தல் போன்ற திறன்களை வேலைநாடும் இளைஞர்களிடம் வளர்த்தல், ஒவ்வொரு வருடமும் 500 செவிலியர்களுக்கு தொழில் தொடர்பான ஆங்கில தேர்வு முறை (Occupational English Test) பற்றிய பயிற்சி வழங்குதல், தேர்வு செய்யக்கூடிய செவிலியர்களுக்கு வருடத்திற்கு சுமார் 18 லட்சம் வரை ஊதியம் பெற்றுத்தர வழிவகை செய்தல் போன்றவை ஆகும்.

மேலும், அயல்நாட்டில் வேலைதேடும் இளைஞர்கள் https://www.omcmanpower.com என்ற இணையதளத்தில் தங்களின் சுயவிவரங்களை பதிவு செய்வதன் மூலம் அயல்நாடுகளில் வேலைவாய்ப்பை பெறமுடியும். இந்நிறுவனம் மூலம் அறிவிக்கப்படும் காலிப்பணியிடங்கள் மற்றும் அதற்கான கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களை மேற்காணும் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இந்நிறுவனம் (OMCL) வேலைவாய்ப்பினை பெற்றுத்தருவதோடு இல்லாமல் மாவட்ட நிர்வாகம் மூலம் நடத்தப்படும் வேலைவாய்ப்பு முகாம்களில் கலந்துகொண்டு இந்நிறுவனம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பதிவுசெய்யும் முறை பற்றிய விளக்கங்களை பற்றிய முழுமையான விவரங்களை வழங்குகிறது. வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பற்றிய முழுமையான விவரங்களை வழிகாட்டுதலை இம்மையத்தினை நேரிலோ அல்லது தொலைபேசியிலோ (தொலைபேசி எண். 044- 22505886) தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.. 

எனவே, அயல் நாடுகளில் வேலை தேடும் இளைஞர்கள் மேற்காணும் இணையதளத்தில் பதிவு செய்து இந்நிறுவனம் வாயிலாக அறிவிக்கக் கூடிய காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்து அயல்நாட்டில் வேலைவாய்ப்பு பெற்று பயன்பெறலாம்.

The post ’’கொட்டிக்கிடக்கும் வெளிநாட்டு வேலை..!’’ தமிழ்நாடு அரசின் கட்டணமில்லா சேவை first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3/feed/ 0