acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ’’காசி தமிழ் சங்கமம்’ 2023..!’’ டிசம்பர் 8 வரை விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>‘காசி தமிழ் சங்கமம்’ இரண்டாம் கட்டமாக நடைபெறுவதையொட்டி, சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (சென்னை ஐஐடி) விண்ணப்பப் பதிவுக்கான காசி தமிழ் சங்கமம் இணையதளத்தை திங்களன்று (27 நவம்பர் 2023) தொடங்கியுள்ளது. ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ திட்டத்தின்கீழ் இந்த இரண்டாம் கட்ட நிகழ்வை புனிதமிக்க மார்கழி மாத முதல்நாளான 2023 டிசம்பர் 17 அன்று தொடங்கி 30 வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
பண்டைய இந்தியாவில் கலாச்சார மையங்களாகத் திகழ்ந்த வாரணாசிக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையேயான வாழ்க்கைப் பிணைப்பைப் புதுப்பிக்கும் வகையில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. முதல் நிகழ்வைப் போன்றே, பல்வேறு தரப்பு மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள வசதியை ஏற்படுத்தித் தரும் நோக்கில் இம்முறையும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாம் கட்டத்தில், தமிழ்நாடு, புதுச்சேரியில் இருந்து சுமார் 1,400 பேர் வாரணாசி, பிரயாக்ராஜ், அயோத்தி ஆகிய இடங்களுக்கு ரயிலில் சென்றுவர 8 நாள் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், கைவினைக் கலைஞர்கள், வர்த்தகர்கள், வணிகர்கள், மதம் சார்ந்தவர்கள், எழுத்தாளர்கள், தொழில் வல்லுநர்கள் ஆகியோர் அடங்கிய தலா 200 பேர் கொண்ட ஏழு குழுக்களாகப் பிரித்து அனுப்பப்படுவார்கள். ஒவ்வொரு குழுவிற்கும் கங்கை, யமுனை, சரஸ்வதி, சிந்து, நர்மதை, கோதாவரி, காவிரி என புனித நதிகளின் பெயரிடப்படும்.
வரலாறு, சுற்றுலா, மதத்தொடர்புடைய இடங்களுக்குச் செல்வதுடன், இக்குழுவினர் உத்தரப்பிரதேச மக்களை அவர்களின் பணியிடங்களிலேயே தொடர்பு கொள்ள அழைத்துச் செல்லப்படுவார்கள்.
சிறந்த நடைமுறைகள் தொடர்பான நுண்ணறிவைப் பெறவும், கற்றலை மேம்படுத்தவும், கருத்துப் பரிமாற்றத்தை மேற்கொள்ளவும் ஏதுவாக உள்ளூரில் தொழில் செய்வோருடன் (நெசவாளர்கள், கைவினைஞர்கள், கலைஞர்கள், தொழில்முனைவோர், எழுத்தாளர்கள் போன்றோர்) அதிக ஈடுபாடு மற்றும் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்படும்.
குழுவில் இடம்பெறவிருக்கும் பிரதிநிதிகள் அதற்கென அமைக்கப்பட்ட தேர்வுக்குழுவால் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வான பின்னர், அடுத்தகட்ட நடைமுறை குறித்து பிரதிநிதிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்படும்.
மத்திய அரசின் மத்தியக் கல்வி அமைச்சகம் இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சகமாக செயல்படும். இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் உள்ளிட்ட கலாச்சார அமைச்சகங்கள், ஐஆர்சிடிசி உள்ளிட்ட ரயில்வே துறை, சுற்றுலா, ஜவுளி, உணவு பதப்படுத்துதல், சிறுகுறு மற்றும் நடுத்தரத் தொழில்கள், தகவல் மற்றும் ஒலிபரப்பு, திறன்மேம்பாடு, தொழில்முனைவு ஆகிய துறைகளுடன் உத்தரப்பிரதேச அரசின் தொடர்புடைய துறைகளும் இதில் பங்கேற்க உள்ளன.
ரயிலில் புறப்பட்டுச் செல்லவும்- திரும்பி வரவும் தலா 2 நாட்கள், வாரணாசியில் 2 நாட்கள், பிரயாக்ராஜ் மற்றும் அயோத்தியில் தலா ஒருநாள் என குழுவினருக்கான பயணத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
கலை- கலாச்சாரம், கைத்தறி, கைவினைப் பொருட்கள், உணவு வகைகள், தமிழ்நாடு மற்றும் காசியின் சிறப்புத் தயாரிப்புகளை காட்சிப்படுத்தும் விற்பனை அரங்குகள் அமைக்கப்படும். வாரணாசியில் உள்ள நமோகாட்-டில் தமிழ்நாடு, காசியின் கலாச்சாரங்கள் சங்கமிக்கும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும்.
இடைப்பட்ட நாட்களில் இலக்கியம், பண்டைய நூல்கள், தத்துவம், ஆன்மீகம், இசை, நடனம், நாடகம், யோகா, ஆயுர்வேதம், கைத்தறி, கைவினைப்பொருட்கள், நவீன கண்டுபிடிப்புகள், வர்த்தகப் பரிமாற்றங்கள், கல்வித் தொழில்நுட்பம், அடுத்த தலைமுறைத் தொழில்நுட்பம் போன்ற அறிவுசார்ந்த பல்வேறு அம்சங்களில் கருத்தரங்குகள், விவாதங்கள், விரிவுரைகள் எனக் கல்வி பரிமாற்றங்கள் நடைபெறும்.
வல்லுநர்கள், அறிஞர்கள் மட்டுமின்றி, மேற்கூறிய துறைகளில் தொடர்புடைய உள்ளூர் நடைமுறைப் பயிற்சியாளர்கள், தமிழ்நாடு, வாரணாசியைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள் இந்தப் பரிமாற்றங்களில் பங்கேற்பார்கள்.
தமிழ்நாட்டு நிறுவனங்களோடு ஒருங்கிணைக்கும் பணிகளை சென்னை ஐஐடி மேற்கொள்ளும். பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்குகள், கூட்டங்கள் மற்றும் இதர பிரச்சார நிகழ்ச்சிகள் டிசம்பர் 1 முதல் 31 வரை நடத்தப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?
7 குழுக்களைச் சேர்ந்த ஆர்வமுள்ள நபர்கள் பிரத்யேக இணையதள போர்டல் https://kashitamil.iitm.ac.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் . ஆன்லைன் செயல்முறை மூலம் பெறப்பட்ட விண்ணப்பம் ஆய்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு குழுவிற்கும் பிரதிநிதிகள் நோக்கத்திற்காக அமைக்கப்பட்ட குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் . தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 8th Dec 2023
பதிவுக் கட்டணம்: இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான பதிவுக் கட்டணமாக ரூ.1500/- (ரூ ஆயிரத்து ஐந்நூறு மட்டும்) செலுத்த வேண்டும். இது திரும்பப் பெறத்தக்கது.
தொடர்பு விபரங்கள்:
திரு.ருத்ரமூர்த்தி செந்தாமரைக்கண்ணன் ,
தகவல் தொடர்பு அதிகாரி
நோடல் அதிகாரி – காசி தமிழ் சங்கமம்
இயக்குநர் அலுவலகம், சென்னை ஐ.ஐ.டி.
kts@ge.iitm.ac.in / liaison.diroffice@iitm.ac.in
The post ’’காசி தமிழ் சங்கமம்’ 2023..!’’ டிசம்பர் 8 வரை விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>The post ’’வண்டலூர் உயிரியல் பூங்கா போகப்போறீங்களா..?’’ அப்ப இதை தெரிஞ்சுக்கோங்க… first appeared on Madras Murasu.
]]>The post ’’வண்டலூர் உயிரியல் பூங்கா போகப்போறீங்களா..?’’ அப்ப இதை தெரிஞ்சுக்கோங்க… first appeared on Madras Murasu.
]]>The post ’’ஜனாதிபதி மாளிகை தோட்டத்தை பார்க்க ஆசையா..?’’ ஆகஸ்ட் 7 முதல் ஒரு மாதம் திறப்பு first appeared on Madras Murasu.
]]>ஆகஸ்ட் 16, 2023 முதல் உத்யன் உத்சவத்தின் இரண்டாது கட்டமாக உத்யன் உத்சவ்-2 எனப்படும் பொதுமக்களுக்கான அனுமதியின் கீழ் ஒரு மாதத்திற்கு (திங்கள் தவிர) அம்ரித் உத்யன் எனப்படும் குடியரசுத் தலைவர் மாளிகையின் தோட்டம் பொதுமக்களுக்காக திறக்கப்படும். செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு மட்டும் அன்று பிரத்யேகமாக அனுமதி வழங்கப்படும்.
பார்வையாளர்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தோட்டங்களைப் பார்வையிடலாம். வடக்கு அவென்யூவுக்கு அருகிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையின் கேட் எண் 35-ல் நுழைவு இருக்கும்.
ஆகஸ்ட் 7, 2023 முதல் குடியரசுத் தலைவர் மாளிகை இணையதளத்தில் ( https://visit.rashtrapatibhavan.gov.in/ ) முன்பதிவு செய்யலாம். நேரடியாக வரும் பார்வையாளர்கள் கேட் எண் 35 க்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள சுய சேவை மையங்களில் இருந்து அனுமதிச் சீட்டைப் பெறலாம். அம்ரித் உத்யன் எனப்படும் குடியரசுத் தலைவர் மாளிகைத் தோட்டத்தைப் பார்வையிட அனுமதி இலவசம்.
இந்த ஆண்டு ஜனவரி 29 முதல் மார்ச் 31 வரை உத்யான் உத்சவ் -1 –ல் அம்ரித் உத்யன் திறக்கப்பட்டது. அப்போது 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இத்தோட்டத்தைப் பார்வையிட்டனர்.
The post ’’ஜனாதிபதி மாளிகை தோட்டத்தை பார்க்க ஆசையா..?’’ ஆகஸ்ட் 7 முதல் ஒரு மாதம் திறப்பு first appeared on Madras Murasu.
]]>The post “குமரி கடலில் கண்ணாடி தொங்கு பாலம்..!” திருவள்ளுவர்- விவேகானந்தர் நினைவிடங்களுக்கு இடையே அமைகிறது first appeared on Madras Murasu.
]]>நமது நாட்டின் தென்கோடியான கன்னியாகுமரிக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவர்கள் கடல் நடுவில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்வையிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலம் பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இயற்கையாகவே விவேகானந்தர் நினைவு மண்டப படகு தளத்தில் ஆழம் அதிகமாக உள்ளது. ஆனால் திருவள்ளுவர் சிலை படகு தளத்தில் ஆழம் குறைவாகவும், படகு நிறுத்தும் இடத்தில் அதிகப்படியான பாறைகளும் உள்ளன.
இதனால் கடலில் நீரோட்டம் குறைவான காலங்களில் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்படும் படகு போக்குவரத்து திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்படுவதில்லை. இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது.
இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே பாலம் அமைக்க வேண்டும் என்று அரசுக்கு பல ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளும் பல்வேறு தமிழ் அமைப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி ரூ.37 கோடி செலவில் அமைய உள்ள கண்ணாடி கூண்டு பாலம் 97 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப்படுகிறது.
இந்த பாலத்தின் மீது சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும்போது தாங்கள் நடந்துசெல்லும் பாதையின் கீழே கடல் அலையை ரசிக்கும் வண்ணமாக வெளிநாடுகளில் அமைக்கப்பட்டு உள்ளது போல அமைக்கப்பட உள்ளது. இதற்கான முதற்கட்ட ஆய்வு பணி கடந்த ஜூன் மாதம் நடந்தது.
அப்போது விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகிய 2 பாறைகளின் மாதிரிகளை சேகரித்து சென்னை ஐ.ஐ.டி.க்கு அனுப்பப்பட்டது. அங்கு பாறைகளின் ஸ்திரத்தன்மையை ஆய்வு செய்யும் பணி நடந்தது. இந்த ஆய்வுகளின் முடிவுகளை பொறுத்து விரைவில் பாலத்துக்கான கட்டுமான பணிகள் தொடங்கும் என்றும் ஒரு வருடத்துக்குள் பாலப்பணிகள் நிறைவடையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் கண்ணாடி கூண்டு பாலப்பணி தொடக்கத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மே 24 ம் தேதி கோலாகலமாக நடைபெறுகிறது. குமரியின் மகுடமாய் கண்ணாடி தொங்கு பாலம் அமைய உள்ளது.
The post “குமரி கடலில் கண்ணாடி தொங்கு பாலம்..!” திருவள்ளுவர்- விவேகானந்தர் நினைவிடங்களுக்கு இடையே அமைகிறது first appeared on Madras Murasu.
]]>The post “இரண்டு முக்கிய கோரிக்கைகள்..!” அமைச்சர் தங்கம் தென்னரசுவை சந்தித்த துரை வைகோ first appeared on Madras Murasu.
]]>இன்று (06.05.2023) காலை, தமிழக தொழிற்துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களை இரண்டு முக்கிய கோரிக்கைகளுக்காக சந்தித்தேன்.
(1) இந்திய சுதந்திரத்திற்காக வீரமுழக்கமிட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் குலதெய்வமான வீர சக்கதேவி ஆலயம் தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் வட்டம், பாஞ்சாலங்குறிச்சியில் உள்ளது.
அந்த கோவில் வளாகத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஆலய குழுவினரால் கிராம மக்களிடம் நிதி வசூலிக்கப்பட்டு அந்த நிதியை கொண்டு தாய்மார்கள் பாலூட்டும் அறை, கோவில் நூலகம், ஆவணக் காப்பகம் மற்றும் அன்னதான பாத்திரங்களை வைக்கும் அறை கட்டும் பணியை மேற்கொண்டு இருந்த நிலையில் ஒரு சிலர் அளித்த புகாரினால் அந்த பணிகள் நிறுத்தப்பட்டு விட்டது.
ஆலய குழுவினர் அனைத்து ஆவணங்களுடன் தாசில்தார், மாவட்ட ஆட்சித் தலைவர், தொல்லியல் துறை இயக்குனர் ஆகியோரை சந்தித்து கட்டுமான பணி நடைபெறுவதற்கு அனுமதி கேட்டு உள்ளனர்.
ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதாகவும் இது குறித்து அமைச்சர் அவர்களிடம் பேசி ஒப்புதல் வாங்கி தருமாறு ஆலய குழு நிர்வாகிகள் சார்பில் கேட்டுக் கொண்டனர்.
எனவே இன்று அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களை நேரில் சந்தித்து நமது இயக்க தந்தை தலைவர் வைகோ, தந்த கோரிக்கை கடிதத்தையும் அமைச்சரிடம் தந்து பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய சீரமைப்பு பணி நடைபெறுவதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதோடு தலைவர் வைகோ கடிதத்தை பற்றியும் விளக்கி கூறினேன்.
(2) சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் நேரடி வாரிசு வீமராஜா என்ற ஜெகவீ வீரபாண்டிய சுப்பிரமணிய கட்டபொம்முதுரை அவர்களுக்கு விபத்து ஏற்பட்டு கடந்த ஓராண்டாக உடல் நலம் குன்றி உள்ளார்.
இதுவரை அவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தியாகிகள் உதவித்தொகையைப் பெற்று வந்தார். தற்போது நடக்க முடியாத சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவர் பெற்று வரும் உதவித்தொகை அவரது வீட்டில் கிடைத்திடும் வகையில் ஏற்பாடு செய்திடுமாறும் அவருக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்து உதவிடுமாறும் முதல்வர். தளபதி அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நமது இயக்க தந்தை தலைவர் வைகோ விடுத்த கோரிக்கை பற்றியும் எடுத்து கூறினேன்.
மாமன்னரின் வாரிசு ஐயா வீமராஜா அவர்களின் மகளுக்கும், மகனுக்கும் மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் எழுப்பிய கோட்டையில் அரசுப் பணியினை இயக்கத் தந்தை தலைவர் வைகோ பெற்றுத் தந்துள்ளார் என்ற மகிழ்வான செய்தியையும் அமைச்சர் அவர்களிடம் பகிர்ந்து கொண்டேன்” என்று கூறியுள்ளார்.
The post “இரண்டு முக்கிய கோரிக்கைகள்..!” அமைச்சர் தங்கம் தென்னரசுவை சந்தித்த துரை வைகோ first appeared on Madras Murasu.
]]>The post ”கோடைக்கால தபால் தலை பயிற்சி முகாம்..!” ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம் first appeared on Madras Murasu.
]]>சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்தின் தபால் தலைப் பிரிவு கோடைக்கால தபால் தலை முகாமை மே 2023-ல் நடத்த உள்ளது.
மூன்று பிரிவுகளாக இந்த முகாம் நடைபெற உள்ளது.
முதல் பிரிவு 11.05.2023 முதல் 13.05.2023 வரையும், இரண்டாவது பிரிவு 18.05.2023 முதல் 20.05.2023 வரையும், மூன்றாவது பிரிவு 25.05.2023 முதல் 27.05.2023 வரையும் நடைபெறும். காலை 10 மணி முதல் நண்பகல் 12.30 வரை பயிற்சி நடைபெறும். ஒவ்வொரு பிரிவுக்கும் தலா 25 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
ஆர்வமுள்ள ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் ரூ.250-ஐ ரொக்கமாக பதிவு கட்டணம் செலுத்தவேண்டும். பயிற்சி முடித்த மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இதுகுறித்த தகவல்களை 9444933467, 9840595839, 9952965458, 044-28543199 என்ற தொலைபேசி எண்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அனைத்து வேலை நாட்களிலும் அறிந்து கொள்ளலாம்.
—–
The post ”கோடைக்கால தபால் தலை பயிற்சி முகாம்..!” ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம் first appeared on Madras Murasu.
]]>The post ’’2023 ஏப்ரல் 29 அன்று ஃபாஸ்டாக் ‘சுங்க வசூல்’ வரலாற்று சாதனை..!’’ அதற்கேற்ப சாலை வசதிகள் மேம்பட்டுள்ளதா..? first appeared on Madras Murasu.
]]>2021 பிப்ரவரி மாதத்தில் இருந்து ஃபாஸ்டாக் கட்டாயப்படுத்தப்பட்டதிலிருந்து, 339 மாநில சுங்கச்சாவடிகள் உட்பட ஃபாஸ்டாக் திட்டத்தின் கீழ் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை 770 லிருந்து 1,228 ஆக அதிகரித்துள்ளது. நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சுமார் 97 சதவீதம் பேருக்கு ஃபாஸ்டாக் வழங்கப்பட்டுள்ளது. 6.9 கோடிக்கும் அதிகமானோர் இந்த வசதியைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த அமைப்பு தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டணச் சாவடிகளில் காத்திருக்கும் நேரத்தைக் கணிசமாகக் குறைத்துள்ளது. அனைத்து சாலைப் பயனாளர்களுக்கும் தடையற்ற மற்றும் தொந்தரவில்லாத சுங்கச்சாவடி அனுபவத்தை வழங்குவதற்கான அதன் உறுதிப்பாட்டில் அரசு உறுதியாக உள்ளது.
சுங்கக் கட்டண வசூலில் ஃபாஸ்டாக், இந்தியா முழுவதும் 50+ நகரங்களில் உள்ள 140க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் செயல்திறன் மிக்க சேவையை வழங்கி வருகிறது என்று மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க வசூல் சாதனை படைப்பை பாராட்டினாலும் தேசிய நெடுஞ்சாலைகளில் பயனிப்போருக்கு தேவையான வசதிகளை செய்வதிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று பயனாளிகள் தரப்பில் கோரிக்கை வைக்கிறார்கள்.
The post ’’2023 ஏப்ரல் 29 அன்று ஃபாஸ்டாக் ‘சுங்க வசூல்’ வரலாற்று சாதனை..!’’ அதற்கேற்ப சாலை வசதிகள் மேம்பட்டுள்ளதா..? first appeared on Madras Murasu.
]]>The post ”துபாயில் அரேபிய சுற்றுலாச் சந்தை..!” இந்திய சுற்றுலா அமைச்சகம் பங்கேற்பு first appeared on Madras Murasu.
]]>பல்வேறு கலாச்சாரம், பாரம்பரியம், உணவு வகைகள் மற்றும் இயற்கை அழகு, சாகசம், வனவிலங்குகள், ஆரோக்கியம் ஆகியவற்றுடன், தனித்துவமான மற்றும் உண்மையான அனுபவங்களைத் தேடும் பயணிகளுக்கு இந்தியா ஒரு சிறந்த இடமாகும். மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் இந்த நிகழ்ச்சியில், 2023-ல் இந்தியாவுக்கு வருகை தாருங்கள் எனப் பொருள்படும் Visit India Year 2023 என்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. பயண முகவர்கள், விமான நிறுவனங்கள் மற்றும் ஊடகப் பிரதிநிதிகள் உட்பட மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க சுற்றுலாத் துறையுடன் உறவுகளை வலுப்படுத்தவும் இந்த நிகழ்ச்சி வாய்ப்பளிக்கும்.
அரேபிய சுற்றுலாச் சந்தை 2023-ல் இந்தியாவின் பங்கேற்பு, சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான நாட்டின் உறுதியை எடுத்துரைக்கிறது. இந்தியாவின் சுற்றுலா உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், உலகத் தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக இந்தியாவை மேம்படுத்துவதற்கும் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் 24×7 கட்டணமில்லா பல மொழி உதவி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர 12 இந்திய மொழிகளிலும், அரபு, பிரெஞ்சு, ஜெர்மன் உள்பட 10 சர்வதேச மொழிகளில் பேசலாம். மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.incredibleindia.org) ஆன்மீகம், பாரம்பரியம், சாகசம், கலாச்சாரம், யோகா, ஆரோக்கியம் மற்றும் பல முக்கிய அனுபவங்களைக் காண முடியும். இந்த இணையதளத்தை ஹிந்தி மற்றும் முன்னணி சர்வதேச மொழிகளிலும் காண முடியும்.
குறிப்பாக, இந்தியாவின் ஜி-20 தலைமையின் பின்னணியில், சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில், சுற்றுலா அமைச்சகம் இந்த ஆண்டை ‘விசிட் இந்தியா இயர் 2023’ என்று கொண்டாடுகிறது. நம் நாட்டின் பல்வேறு சுற்றுலாச் சலுகைகளை முன்னிலைப்படுத்தவும், உலக சுற்றுலாப் பயணிகளுக்கு அவற்றைக் காட்சிப்படுத்தவும், இந்நிகழ்ச்சியில் கவனம் செலுத்தப்படுகிறது.
The post ”துபாயில் அரேபிய சுற்றுலாச் சந்தை..!” இந்திய சுற்றுலா அமைச்சகம் பங்கேற்பு first appeared on Madras Murasu.
]]>The post ”தனியே தன்னந்தனியே…!” சுற்றுலா டிப்ஸ் first appeared on Madras Murasu.
]]>The post ”தனியே தன்னந்தனியே…!” சுற்றுலா டிப்ஸ் first appeared on Madras Murasu.
]]>The post ’’நெஞ்சை கொள்ளை கொள்ளும் திருநெல்வேலி சுற்றுலா..!’’ first appeared on Madras Murasu.
]]>பாளையக்காரர்களுககு எதிரான நடவடிக்கைகள் நடைபெற்ற போது பாளையங்கோட்டையைத்தான் பிரிட்டிஷார் தங்களது இராணுவ தலைமையிடமாக வைத்திருந்து செயல்பட்டனர். பின் காலங்களில் திருநெல்வேலி நகரை தலைமையிடமாக கொண்டு செயல் பட்டதாலும், திருநெல்வேலி சீமை என நாயக்கர் நவாப் காலங்களில் அழைக்கப்பட்டதாலும் இது தொடர்ந்து ”திருநெல்வேலி மாவட்டம்” என்ற பெயரில் அழைக்கப்படலாயிற்று. 20-10-1986 முதல் திருநெல்வேலி மாவட்டம் பிரிக்கப்பட்டு தூத்துக்குடி என்ற புதிய மாவட்டமும், கடந்த 12-11-2019 முதல் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி மாவட்டமும் உதயமானது. இம்மாவட்டதிலுள்ள திருநெல்வேலி, பாளையங்கோட்டை என்ற இரு நகரங்களும் இரட்டை நகரங்கள் என அழைக்கப்பட்டு எல்லாவிதத்திலும் வேகமாக வளர்ந்தன.
திருநெல்வேலி தலபுராணம், திருநெல்வேலி பெயர் காரணத்திற்கான பாரம்பரியத்தை விவரிக்கிறது. தீவிர சிவ பக்தரான வேதசர்மா என்பவர் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி புனிதயாத்திரை மேற்கொண்டார். ஒரு நாள் அவருடைய கனவில் சிவபெருமான் தோன்றி புனித நதியான தாமிரபரணி நதிக்கரையில் தான் குடிகொண்டிருக்கும் கோவிலுக்கு வருமாறு அழைத்தார். அதன்படி சிவபக்தரான வேதசர்மா மகிழ்ச்சியடைந்து தாமிரபரணி நதிக்கரையில் சிந்துபூந்துறை எனும் இடத்திற்கு வந்து அங்கு குடும்பத்துடன் வசித்து வரலானார். ஒருமுறை பஞ்சம் ஏற்பட்டதினால் சிவபக்தர் வேதசர்மா வீடு வீடாக யாசகம் செய்து நெல்மணிகளை சேகரித்து தன்னுடைய அன்றாட சிவ பூஜைகளை செய்து வந்தார்.
ஒரு நாள், யாசமாக கேட்டு சேகரித்த நெல்மணிகளை தாமிரபரணி ஆற்றின் கரையில் காயவைத்துவிட்டு ஆற்றில் இறங்கி குளிக்கச் சென்றார். அப்போது திருநெல்வேலியில் ஏற்பட்டுள்ள பஞ்சத்தை நீக்கி மழை பெய்து அருளுமாறு சிவபெருமானிடம் மனமுருகி வேண்டினார். அவருடைய உறுதியான பக்தியின் காரணமாக சிவனருளால் அங்கே மழை திடீரென்று கொட்டியது. இப்படி திடீரென்று பெய்த மழையில் ஆற்றின கரையில் காய வைத்த நெல்மணிகள் சேதமாகிவிடுமே அதனால் இன்று இறைவனுக்கு உணவு தயாரிக்க இயலாது போகிவிடுமே என்று பயந்து கொண்டே அங்கே சென்றார். அங்கு ஓர் அதிசயத்தை கண்டார். அவர் காய வைத்திருந்த நெல்மணிகளை சுற்றியிருந்த இடத்தில் மழை பெய்த போதிலும் காய வைத்திருந்த நெல்மணிகள் மீது ஒரு துளி மழை நீர் கூட விழாமல் இருந்த அதியசத்தை கண்டு இறைவன் அருளை எண்ணி மெய் மறந்து நின்றார். இவ்வாறு நெல்லுக்கு வேலியிட்டு காத்ததால் அதிலிருந்து புராணப்படி இந்நகரமானது “திரு“ “நெல்“ ”வேலி” என அழைக்கப்படலாயிற்று.
உலக வரைபடத்தில் 08.8’ மற்றும் 09.23’ இடையேயுள்ள அட்சரேகையிலும் 77.09’ மற்றும் 77.54’ இடையேயுள்ள தீர்க்க ரேகையிலும் திருநெல்வேலி மாவட்டம் அமைந்துள்ளது. இம்மாவட்த்தின் மொத்த பரப்பளவு 3,876.06 சதுர கி.மீ. ஆகும். திருநெல்வேலி மாவட்டமானதுச் தென்கிழக்கில் மன்னார்வளைகுடா, வடக்கே விருதுநகர், கிழக்கே தூத்துக்குடி, மேற்கே கேரளா மற்றும் தென்காசி, தெற்கே கன்னியாகுமரி மாவட்டங்களால் சூழப்பட்டுள்ளது.
சுற்றுலா: அடைவது எப்படி?
விமானம் மூலம் – தூத்துக்குடி மாவட்டம் வாகைகுளம் விமான நிலையத்திலிருந்து 20 கி.மீ. அல்லது மதுரை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து 170 கி.மீ.
சாலை வழியாக – வேய்ந்தான் குளம் புதிய பேருந்து நிலையம், திருநெல்வேலி
புகை வண்டி – திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம்.
முண்டந்துறை புலிகள் சரணாலயம்
களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது.1988 இல் தேசிய புலிகள் காப்பகம் மேற்கு தொடர்ச்சி மலையில் அடிவாரத்தில் 817 ச.கி.மீ.இல் ஏற்படுத்தப்பட்டது.புலிகள் சரணாலயம் சேரன்மகாதேவியிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும் அம்பாசமுத்திரத்திலிருந்து 15கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.அருகில் மதுரை மற்றும் திருவனந்தபுரம் விமானநிலையம் அமைந்துள்ளது. அம்பாசமுத்திரம் மற்றும் களக்காடு சாலை வழியாக முண்டந்துறை புலிகள் சரணாலயத்திற்கு செல்ல்லாம். ஏராளமான பேரூந்துகள் அம்பாசமுத்திரம் களக்காடு சாலை வழியாக இயக்கப்படுகின்றன. முண்டந்துறை புலிகள் சரணாலயம் வெளிப்பகுதியிலிருந்து 817 ச.கி.மீ. மையப்பகுதியிலிருந்து 459 ச.கீ.மீ. மற்றும் இடைப்பகுதியிலிருந்து 358 ச.கி.மீ. பகுதியில் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் அடையாளம் காணப்பட்ட 24 இயற்கை வழிகள் உள்ளன. இது மலையேற்றத்திற்கு ஒரு பரபரப்பான அனுபவத்தை வழங்குகிறது. அனைத்து தினங்களிலும் பார்வை நேரமாக காலை 6 மணி முதல் மாலை 6ம ணி வரை சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். சிறந்த பருவமாக செப்டம்பர் முதல் ஜனவரி வரையாகும். முண்டந்துரை மற்றும் தலையணை வனப்பகுதியில் தங்குமிடங்கள் உள்ளன.
கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூந்தன்குளம் பகுதி 1994 ஆம் ஆண்டு பறவைகள் சரணாலயம் அறிவிக்கப்பட்டது. இப்பகுதி திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி தாலுகாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் அமைந்துள்ளது.திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து 38கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.இங்க தார்சாலையில் வசதியாக இணைக்கப்பட்டுள்ள கூந்தன்குளம் மற்றும் கடன்குளம் நீர்பாசன வசதிகள் காணப்படுகின்றன.கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் அதிக எண்ணிக்கையில் நீர்ப்பறவைகள் காணப்படுகின்றன.தென்னிந்தியாவிலேயே பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்கு தேவையான நீர் அதிக கொள்ளவை கொண்டுள்ளது. பறவைகள் சரணாலயத்தின் தேசியப்பெயராக கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியிலிருந்து 38கி.மீ.தொலைவில் நாங்நேரி தாலுகாவில் அமைந்துள்ளது. இப்பகுதியில் அமைந்துள்ள நீர்ப்பறவைகள் உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இப்பகுதிக்கு வருகை புரிகின்றது. இந்தகிராமத்தில் மக்கள் அரிதாகவே வசிக்கின்றனர். டிசம்பர் இறுதியில் பறவைகள் புலம்பெயர்ந்து வருகின்றன.ஜீன் மற்றும் ஜீலை மாதங்களில் முட்டைகளை இட்டு குஞ்சு பொரிக்கின்றன. பின்னர் இந்த இளம் பறவைகள் பறந்து செல்லும் வயதை அடைந்து இங்கிருந்த புலம்பெயர்ந்த செல்கின்றன.
ஓவியங்கள் போன்று வரையப்பட்ட வண்ணமயமான பறவைகள் வடகிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து இங்கு வருகை புரிகின்றன. ஐந்து தலைமுறைகளாக இந்த பறவைகள் அதிர்ஷ்டவசமாக பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்த பறவைகளில் இருந்து கிடைக்கும் கழிவுகளை மக்கள் சேகரித்து குனோ என்ற பறவைகளின் கழிவுகள் உரங்கள் தயாரிக்க பயன்படுகின்றன. இந்த பறவைகள் சுதந்திரமாக இங்கு சுற்றிதிரிகின்றன.
மாஞ்சோலை
திருநெல்வேலியிருந்து 57கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.1062 அடி உயரத்தில் அமைந்துள்ள மாஞ்சோலை மலைப்பகுதியியை சுற்றி ஏராளமான தோட்டப்பயிர்கள் பயிரிடப்படுகின்றன. ஏராளமான தேயிலைத் தோட்டங்கள் இப்பகுதியை சுற்றி காணப்படுகின்றன. பாம்பே பர்மா என்ற தேயிலைத்தோட்டம் மிகப்பிரபலமானதாக அறியப்படுகிறது. இங்கே 4000 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். மலைகளின் அரசி என்று அழைக்கபடும் உதகமண்டலத்தை போன்று அருமையான சூழலை தருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை நெல்லைக்கு வற்றாத ஜீவநதியான தாமிரபரணியை தருகிறது. தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை மட்டுமல்ல, அந்தப்பகுதியையே பசுமையாக வைத்து பிராணவாயு உற்பத்தியோடு விலங்கினங்களின் தாயகமாக விளங்கிக்கொண்டு இருக்கிறது. (நெல்லை சீமையின் முழுமையான சுற்றுலா தகவல்களை அந்த மாவட்டத்தின் அதிகாரப்பூர்வமான https://tirunelveli.nic.in/ta/ இணையதளத்தில் முழு விபரத்தை காணலாம் மாவட்ட சுற்றுலா அலுவலகம்: 0462-2500104)
The post ’’நெஞ்சை கொள்ளை கொள்ளும் திருநெல்வேலி சுற்றுலா..!’’ first appeared on Madras Murasu.
]]>