acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post முடக்குவாத நோயாளிகளுக்கு யோகா நிவாரணம் வழங்கும் ! எய்ம்ஸ் மருத்துவமனை first appeared on Madras Murasu.
]]>முடக்குவாதம் என்பது மூட்டுகளில் வலி ஏற்பட காரணமாகிறது. இதனால், மூட்டுகளில் வலியும், சேதமும் ஏற்படுவதோடு, நுரையீரல், இதயம், மூளை போன்ற பிற உறுப்புகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. பாரம்பரியமாக யோகா பயிற்சி உடலுக்கும், மனதிற்கும் நல்ல பலன்களை தருகிறது என்பது அறியப்பட்ட ஒன்றாகும்.
எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் யோகாப் பயிற்சி வலி நிவாரணியாக மட்டுமின்றி, செலுலார் மற்றும் மூலக்கூறு நிலையிலும் பயனளிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. யோகாப் பயிற்சி செலுலார் சேதத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் வலியை குறைக்கிறது.

இந்த ஆய்வு முடிவுகள் சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் 2023-ல் வெளியிடப்பட்டுள்ளன. இதன் விவரங்களை https://www.nature.com/articles/s41598-023-42231-w என்ற இணைப்பில் காணலாம். இந்த ஆய்வு முடக்குவாத நோயாளிகளுக்கு யோகாப் பயிற்சி சிறந்தது என்பதற்கு சான்றளிக்கிறது.
வலி, இறுக்கமான தன்மை போன்ற அறிகுறிகளிலிருந்து நிவாரணம் அளிப்பது மட்டுமின்றி, நோயைக் கட்டுப்படுத்துவதற்கும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் பங்களிப்பு செய்கிறது. மருந்துகளை போல் யோகாவில் பக்கவிளைவு இல்லை என்பதோடு, செலவு குறைந்ததாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது
The post முடக்குவாத நோயாளிகளுக்கு யோகா நிவாரணம் வழங்கும் ! எய்ம்ஸ் மருத்துவமனை first appeared on Madras Murasu.
]]>The post ”தேசிய நீர் விருதுகள் 2023-க்கு விண்ணப்பிக்க டிசம்பர் 15-ம் தேதி கடைசி நாள்..!” first appeared on Madras Murasu.
]]>நீர் வளத் துறையில் மக்களின் பணிகளை அங்கீகரிப்பதற்காகவும் நீர் பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை தொடர்பான அம்சங்களில் பணியாற்ற மக்களை மேலும் ஊக்குவிக்கும் நோக்குடனும் தேசிய நீர் விருதுகள், மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தால் வழங்கப்படுகின்றன.
சிறந்த மாநில / யூனியன் பிரதேச அரசுகள், சிறந்த மாவட்டம், சிறந்த கிராம ஊராட்சிகள், சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள். சிறந்த பள்ளி அல்லது கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் அல்லாத பிற சிறந்த நிறுவனங்கள், சிறந்த தொழில் நிறுவனங்கள், சிறந்த தொண்டு நிறுவனங்கள், சிறந்த நீர் பயனீட்டாளர் சங்கங்கள், சிறந்த தனிநபர்கள் என 10 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும். சிறந்த மாவட்டங்கள் பிரிவில் மட்டும் 5 விருதுகள் வழங்கப்படும். மற்ற பிரிவுகளில் தலா 3 விருதுகள் வழங்கப்படும்.
விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒவ்வொரு பிரிவிலும் நீர்வள மேம்பாடு தொடர்பாக குறிப்பிட்ட சில பணிகளை மேற்கொண்டிருக்க வேண்டும். அனைத்துப் பிரிவினரும் பரிந்துரைக்கப்பட்ட படிவங்களின்படி www.awards.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே விருதுகளுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 2023, டிசம்பர் 15 ஆகும்.
The post ”தேசிய நீர் விருதுகள் 2023-க்கு விண்ணப்பிக்க டிசம்பர் 15-ம் தேதி கடைசி நாள்..!” first appeared on Madras Murasu.
]]>The post ’’அரிசி ஏற்றுமதிக்கு தடை நீங்குமா..!’’ மத்திய அரசு சூசக தகவல் first appeared on Madras Murasu.
]]>அரிசியின் உள்நாட்டு விலைகளை கட்டுப்படுத்தவும், உள்நாட்டு நுகர்வோருக்கு போதுமான அளவு அரிசி கிடைப்பதை உறுதி செய்யவும் மத்திய அரசு தொடர்ச்சியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. ஒரு மெட்ரிக் டன்னுக்கு 1200 அமெரிக்க டாலர் மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்புடைய பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கான ஒப்பந்தங்களை பதிவு மற்றும் ஒதுக்கீடு சான்றிதழ் (ஆர்.சி.ஏ.சி) வழங்குவதற்காக பதிவுசெய்யலாம். இது 25 ஆகஸ்ட் 2023 முதல் நடைமுறையில் உள்ளது.
பாசுமதி அல்லாத வெள்ளை அரிசியின் தவறான வகைப்படுத்தல் மற்றும் சட்டவிரோத ஏற்றுமதி தொடர்பாக அரசுக்கு நம்பகமான கள அறிக்கைகள் கிடைத்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அவற்றின் ஏற்றுமதி 20 ஜூலை 2023 முதல் தடை செய்யப்பட்டுள்ளது. பாசுமதி அல்லாத வெள்ளை அரிசி பாசுமதி அரிசியின் எச்எஸ் குறியீட்டின் கீழ் ஏற்றுமதி செய்யப்படுவதாக தகவல் வெளியானது.
தற்போது, பாசுமதியின் புதிய வரத்துகள் வரத் தொடங்கியுள்ளன. பொதுவாக வரத்துகள் அதிகரிக்கத் தொடங்கும் போது விலைகளில் சரிவு ஏற்படுகிறது. அதிக எஃப்ஓபி (Free on Board FOB) மதிப்பு நாட்டிலிருந்து பாசுமதி அரிசி ஏற்றுமதியை மோசமாக பாதிக்கிறது என்று அரிசி ஏற்றுமதியாளர் சங்கங்களிலிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர், பாசுமதி அரிசி ஏற்றுமதியாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட அம்சங்களின் அடிப்படையில் பாசுமதி அரிசி ஏற்றுமதிக்காக, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தால் (அபெடா – APEDA) ஆர்சிஏசி எனப்படும் பதிவு மற்றும் ஒதுக்கீடு சான்றிதழை வழங்குவதற்கான ஒப்பந்தத்தின் எஃப்ஓபி மதிப்பை மறுஆய்வு செய்வது குறித்து அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. அரசு உரிய முடிவு எடுக்கும் வரை தற்போதைய நிலை தொடரும்.
முன் செய்தி:
அரசியின் விலை 2023 ஆம் ஆண்டில் பெரிய அளவில் அதிகரித்துள்ளது, இது இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகளவில் இருக்கும் காரணத்தால் இந்திய மக்களின் முக்கிய உணவாக இருக்கும் அரிசியின் விலையை கட்டுக்குள் வைக்க மத்திய அரசு முக்கியமான முடிவை எடுத்துள்ளது. இந்த முடிவின் மூலம் உலகளவில் இருக்கும் இந்திய மக்களும், அரிசியை முக்கிய உணவாக கொண்டு இருக்கும் சீனா மற்றும் தென்கிழக்கு நாடுகள் பாதிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு பாசுமதி அரிசி அல்லாத வெள்ளை அரிசியின் ஏற்றுமதியை உடனடியாக தடை செய்து உத்தரவிட்டது.
மத்திய அரசின் இந்த முக்கிய அறிவிப்புக்கு காரணம், பருவமழை தாமதமாகத் தொடங்கிய பின்னரும், வட இந்தியாவில் அதிகப்படியான மழை ஆகியவற்றின் காரணமாகவும் அரிசியின் விளைச்சல் பாதிக்கப்பட்டு அரிசிக்கான பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. உலகளாவிய அரிசி வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு மிகவும் அதிகம், இந்த ஒரு அறிவிப்பின் மூலம் உலக நாடுகள் எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதையும், இந்தியாவின் முக்கியதுவத்தையும் தெரிந்துக்கொள்ளுங்கள்.
ஏற்கனவே தக்காளி, இஞ்சி, பருப்பு வகைகள் விலை உயர்வால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் அரிசி விலை உயரும் நிலைக்கு தள்ளப்பட கூடாது என்பதற்காக மத்திய அரசு பாசுமதி அரிசி அல்லாத வெள்ளை அரிசியின் ஏற்றுமதியை உடனடியாக தடை செய்து உத்தரவிட்டது. உலகளாவிய அரிசி ஏற்றுமதியில் 40% க்கும் அதிகமான பங்கை இந்தியா கொண்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் சுமார் 55.4 மில்லியன் மெட்ரிக் டன்கள் அளவிலான அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.
இதில் இந்தியாவின் அரிசி ஏற்றுமதி பங்கு 2022 இல் 22.2 மில்லியன் டன்கள். இது இந்தியாவுக்கு அடுத்த இடங்களில் இருக்கும் நான்கு பெரிய தானிய ஏற்றுமதி நாடுகளான தாய்லாந்து, வியட்நாம், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றின் ஒட்டுமொத்த ஏற்றுமதியை விடவும் அதிகமாகும். இந்தியா தற்போது 140 நாடுகளுக்கு அரிசியை ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவில் இருந்து பாசுமதி அல்லாத அரிசியை வாங்கும் நாடுகளின் பட்டியலில் பெனின், பங்களாதேஷ், அங்கோலா, கேமரூன், ஜிபூட்டி, கினியா, ஐவரி கோஸ்ட், கென்யா மற்றும் நேபாளம் ஆகியவை உள்ளது.
இதேபோல் ஈரான், ஈராக் மற்றும் சவுதி அரேபியா ஆகியவை இந்தியாவில் இருந்து அதிகளவில் பிரீமியம் பாசுமதி அரிசியை வாங்குகின்றன. இந்தியா 2022 இல் சுமார் 17.86 மில்லியன் டன் பாஸ்மதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்துள்ளது.
இந்தியாவில் அரிசி விலையை கட்டுப்படுத்த செப்டம்பர் 2022 இல், உடைந்த அரிசி ஏற்றுமதியை இந்தியா தடை செய்தது மற்றும் பல்வேறு தர அரிசி ஏற்றுமதிக்கு 20% வரி விதித்தது. 2022 ஆம் ஆண்டில் 4.4 மில்லியன் டன் பாசுமதி அரிசி மற்றும் 7.4 மில்லியன் டன் புழுங்கல் அரிசி ஏற்றுமதி செய்துள்ளது. தற்போது மத்திய அரசு இவ்விரு அரிசி வகைகளுக்கும் எவ்விதமான கட்டுப்பாடும் விதிக்கவில்லை என்பதை மறந்துவிடக்கூடாது.
இந்திய விவசாயிகள் வருடத்திற்கு இரண்டு முறை நெல் பயிரிடுகிறார்கள், 2022 – 23 ஆண்டில் சுமார் 135.5 மில்லியன் டன்களாக இருந்த மொத்த அரிசி உற்பத்தியில் 80 சதவீத பங்கு ஜூன் மாதத்தில் தொடங்கும் கோடையில் பயிர் நடவு மூலம் கிடைக்கிறது. குளிர்காலத்தில் மத்திய மற்றும் தென் மாநிலங்களில் நெல் பயிரிடப்படுகிறது.
இந்தியாவில் மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், பஞ்சாப், ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் ஆகியவை அரிசி உற்பத்தியில் முன்னோடியாக இருக்கும் முக்கிய மாநிலங்கள். இந்தியாவில் நெல் சாகுபடி செய்யும் பரப்பளவை அதிகரிக்க திட்டமிட்டு மத்திய அரசு இந்தியா விவசாயிகளிடமிருந்து புதிய பருவத்துக்கான நெல் கொள்முதல் விலையை 7 சதவீதம் உயர்த்தி 100 கிலோவுக்கு 2,183 ரூபாயாக உயர்த்தியது.
ஆனால், 2023ல் பருவமழை பொய்த்துப் போனதால், நெல் சாகுபடி பரப்பு கணிசமாக குறையும் என கணிப்புகள் வெளியாகியுள்ளது. மத்திய அரசு பாசுமதி அரிசி அல்லாத வெள்ளை அரிசியின் ஏற்றுமதியை உடனடியாக தடை செய்து உத்தரவிட்ட நிலையில் வெளிநாடுகளில் இருக்கும் இந்திய மக்கள் அரிசிக்காக முட்டிமோதி கடைகளில் வாங்கினர். அந்த வகையில் அமெரிக்காவில் பிரபலான பட்டேல் பிரதர்ஸ் கடையில் இந்திய மக்கள் அரிசி விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு உருவாகுமோ என்ற அச்சத்தில் முட்டிமோதி இக்கடையில் அரிசி வாங்குவது பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது
The post ’’அரிசி ஏற்றுமதிக்கு தடை நீங்குமா..!’’ மத்திய அரசு சூசக தகவல் first appeared on Madras Murasu.
]]>The post ’’தொற்றா நோய்கள் உலகளாவிய சுகாதார சவால்..!’’ மத்திய அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் first appeared on Madras Murasu.
]]>உலக சுகாதார உச்சி மாநாடு 2023 இல் “ஆரம்ப பராமரிப்பில் தொற்றா நோய்கள் குறித்த ஒருங்கிணைப்பை அதிகரிப்பது” குறித்த உயர்மட்டக் குழு விவாதத்தில் ஆற்றிய தனது மெய்நிகர் உரையின் போது இதைக் கூறினார். உலக சுகாதார அமைப்பின் இந்தியப் பிரதிநிதி டாக்டர் ரோடெரிகோ எச்.ஆப்ரின் இதில் கலந்து கொண்டார். இந்த ஆண்டு உலக சுகாதார உச்சி மாநாட்டின் கருப்பொருள் “உலகளாவிய சுகாதார நடவடிக்கைக்கான ஒரு வரையறுக்கப்பட்ட ஆண்டு” என்பதாகும்.
தொற்றா நோய்களைக் குறைப்பதற்கான இந்தியாவின் முயற்சிகளை எடுத்துரைத்த டாக்டர் பாரதி பிரவீன் பவார், “2025 க்குள் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 75 மில்லியன் நபர்களை பரிசோதித்து தரமான கவனிப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட 75/25 முன்முயற்சியை இந்தியா தொடங்கியுள்ளது. இது உலகளவில் ஆரம்ப சுகாதாரத்தில் தொற்றா நோய்களின் மிக விரிவான விரிவாக்கத்தைக் குறிக்கிறது. ஆயுட்காலம், மகப்பேறு இறப்பு விகிதம் போன்ற சமூக குறியீடுகளை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் வெளிப்படையான முயற்சிகள் இந்த இலக்கைத் தேடுவதில் தெளிவாகத் தெரிகிறது. 2023-2024 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு சிகிச்சையை முதல் முறையாக குறியீடுகளாக சேர்த்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சேர்க்கை உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்கான பாதுகாப்பு சேவைகளை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, மேலும் இந்த சுகாதார சவால்களை சமாளிப்பதற்கான அதன் உறுதிப்பாட்டை மேலும் வலியுறுத்துகிறது”, என்று அவர் கூறினார்.
தொற்றா நோய்கள் உடனடி கவனம் செலுத்த வேண்டிய ஒரு குறிப்பிடத்தக்க உலகளாவிய சுகாதார சவாலாக மாறியுள்ளன என்பதை வலியுறுத்திய மத்திய அமைச்சர், “உள்கட்டமைப்பு, மனித வள மேம்பாடு, சுகாதார மேம்பாடு, ஆரம்பகால நோயறிதல் ஆகியவற்றை வலுப்படுத்தும் நோக்கத்துடன் தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் தொற்றா நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான தேசிய திட்டத்தை மத்திய அரசு 2010 ஆம் ஆண்டில் தொடங்கியது. ஆயுஷ்மான் பாரத் முன்முயற்சி கொள்கை நோக்கத்தை வரவுசெலவுத் திட்ட அர்ப்பணிப்பு, நிலையான வளர்ச்சி இலக்குகளை பூர்த்தி செய்தல் மற்றும் உலகளாவிய சுகாதார பாதுகாப்பை அடைவதற்கான கொள்கை நோக்கத்தை வலியுறுத்துகிறது.’’என்று கூறினார்.
டாக்டர் பாரதி பிரவீன் பவார், தொற்றா நோய்களைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் இந்தியாவின் அர்ப்பணிப்புள்ள உறுதிப்பாட்டைத் தெரிவித்தார். மேலும் இந்த முக்கியமான களத்தில் உலகளாவிய முயற்சிகளுக்கு ஆழ்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தார்.
The post ’’தொற்றா நோய்கள் உலகளாவிய சுகாதார சவால்..!’’ மத்திய அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் first appeared on Madras Murasu.
]]>The post ’’ரூ.10,000 கோடியை கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்குக..!’’ டாக்டர் ராமதாஸ் first appeared on Madras Murasu.
]]>இதுகுறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு வழங்க வேண்டிய நிதியை வழங்காததால், அவை கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், கூட்டுறவு சங்கங்களின் மனித வளத்தையும், நிதியையும் உறிஞ்சக் கூடிய வகையிலான திட்டங்களை செயல்படுத்த அரசு கட்டாயப்படுத்தி வருகிறது. கூட்டுறவு சங்கங்களின் இயக்கத்தையே நிறுத்தக்கூடிய இந்த அணுகுமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மிகவும் இன்றியமையாதவை கூட்டுறவு அமைப்புகள் ஆகும். ஆனால், தமிழ்நாட்டில் கூட்டுறவு அமைப்புகள் மூடுவிழாவை நோக்கி பயணிக்கின்றன. அதற்குக் காரணம் தமிழக அரசின் தவறான அணுகுமுறை தான். தமிழ்நாட்டில் கடந்த 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் பயிர்க்கடன் தள்ளுபடி நகைக்கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. நகைக்கடன் மற்றும் மகளிர் கடனாக ரூ.7573 கோடி தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அதில் ரூ.3415 கோடியை மட்டுமே தமிழக அரசு திரும்பக் கொடுத்திருக்கிறது. இன்னும் ரூ.4158 கோடி கடன் தொகையை திரும்பத் தர வேண்டியுள்ளது. பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப் பட்டதில் இன்னும் ரூ.5000 கோடிக்கும் மேல் அரசிடமிருந்து திரும்பப் பெற வேண்டியுள்ளது. கூட்டுறவு சங்கங்களின் நிதி சுமார் ரூ.10,000 கோடி திரும்ப வராததால் அவற்றின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன.
இத்தகைய சூழலில் கூட்டுறவு சங்கங்களை பல்சேவை மையங்களாக மாற்றி, விவசாய உள்கட்டமைப்பு திட்டத்தின்கீழ் டிராக்டர், அறுவடை எந்திரம், கரும்பு வெட்டும் எந்திரம், சரக்குந்துகள் ஆகியவற்றை உழவர்களுக்கு குறைந்த வாடகையில் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு கட்டாயப்படுத்தி வருகிறது. போதிய முன்னேற்பாடுகளும், முதலீடுகளும், கட்டமைப்பு வசதிகளும் இல்லாமல் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தால் கூட்டுறவு சங்கங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படும்.
உழவர்களுக்கு டிராக்டர், அறுவடை எந்திரம், கரும்பு வெட்டும் எந்திரம், சரக்குந்துகள் ஆகியவற்றை குறைந்த வாடகையில் வழங்கும் திட்டம் வரவேற்கப்பட வேண்டிய திட்டம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இன்னும் கேட்டால் 2016&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போதே இந்தக் கருவிகள் உழவர்களுக்கு வாடகையின்றி இலவசமாக வழங்கப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. இப்போதும் இந்தத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துவதில் எந்த தவறும் இல்லை. ஆனால், வெறுங்கைகளால் முழம் போடுவது போல அதை செயல்படுத்தும் விதம் தான் தவறானதாகும்.
உழவர்களுக்கு வேளாண் கருவிகளை வாடகைக்கு வழங்க விரும்பும் தமிழக அரசு, அவற்றை அதன் சொந்த நிதியில் கொள்முதல் செய்து கூட்டுறவு அமைப்புகளுக்கு வழங்கியிருக்க வேண்டும்; அவற்றை கையாளுவதற்கான பணியிடங்களை உருவாக்கி, அதற்கான தொடர் செலவினங்களை அரசு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், இவை எதையும் செய்யாத அரசு, கூட்டுறவு சங்கங்கள் அவற்றின் சொந்த செலவில் இந்தக் கருவிகளை வாங்கி வாடகைக்கு விட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது தான் சிக்கலாகும்.
தமிழ்நாட்டில் உள்ள சுமார் 4500 கூட்டுறவு சங்கங்களில் 2500 சங்கங்கள் பல ஆண்டுகளாகவே இழப்பில் தான் இயங்கி வருகின்றன. கடந்த இரு ஆண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களுக்கான நிதி சுமார் ரூ.10,000 கோடியை அரசு இன்னும் வழங்காததால் மேலும் பல நூறு கூட்டுறவு சங்கங்கள் இழப்பில் செயல்படத் தொடங்கியுள்ளன. அவற்றில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்குக் கூட நிதி இல்லாத நிலையில், வேளாண் கருவிகளை வாங்குவதற்கு அந்த சங்கங்கள் எங்கே போகும்? மத்தியக் கூட்டுறவு வங்கிகளிடமிருந்து கடன் பெற்று வேளாண் கருவிகளை வாங்கினால், அவற்றை வாடகைக்கு விடுவதன் மூலம் கிடைக்கும் வருமானம் அவற்றைக் கையாளும் பணியாளர்களின் ஊதியத்திற்குக் கூட போதுமானதாக இருக்காது. அதனால் ஒரு சில ஆண்டுகளில் அந்த கூட்டுறவு சங்கங்கள் கடனில் மூழ்கி மூடப்படும் நிலை உருவாகும். அதனால் பல்லாயிரம் பணியாளர்கள் வேலை இழக்க நேரிடும்.
கூட்டுறவு சங்கங்களை பல்சேவை மையங்களாக மாற்றும் திட்டத்தால் ஏற்படும் ஆபத்துகளை சுட்டிக் காட்டி, கூட்டுறவு சங்க பணியாளர் அமைப்புகள் கடந்த சில வாரங்களில் இரு முறை போராட்டம் நடத்தின. ஆனாலும், இந்தத் திட்டத்தைத் திணிப்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. கூட்டுறவு சங்கங்கள் உழவர்களுக்கு கடன் வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டவை. அதை விடுத்து அவற்றை வாடகைக்கு கருவிகளை வழங்கும் அமைப்புகளாக மாற்றக் கூடாது. இது கூட்டுறவின் நோக்கத்தை சிதைத்து விடும்.
எனவே, வேளாண் கருவிகளை அரசே அதன் செலவில் கொள்முதல் செய்ய வேண்டும். அவற்றை வாடகைக்கு கொடுப்பதற்காக தனிப்பிரிவை ஏற்படுத்த வேண்டும். கூட்டுறவு சங்கங்கள் அவற்றின் இப்போதைய வடிவில் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். தள்ளுபடி செய்யப்பட்ட கடனுக்காக வழங்க வேண்டிய ரூ.10,000 கோடியை கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கி அவை முழு அளவில் செயல்படவும், அனைத்து சங்கங்களும் லாபம் ஈட்டும் நிலையை உருவாக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
The post ’’ரூ.10,000 கோடியை கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்குக..!’’ டாக்டர் ராமதாஸ் first appeared on Madras Murasu.
]]>The post ’’தமிழ்நாட்டில் இனி புதிய மருத்துவக் கல்லூரி தொடங்க முடியுமா..?’’ அதிர்ச்சி தகவல்கள் first appeared on Madras Murasu.
]]>திமுக, அதிமுக, பாமக, தமிழக வாழ்வுரிமை கட்சி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ் என்று அனைத்து கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. தேசிய மருத்துவ ஆணையத்தின் அந்த புதிய உத்தரவில் கூறியுள்ளது என்ன?
இந்தியாவின் தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Commission) கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி புதிய மருத்துவக் கல்லூரிகள் துவங்குவதற்கும் இடங்களை அதிகரிப்பதற்கும் சம்பந்தப்பட்ட “மாநிலத்திலோ, யூனியன் பிரதேசத்திலோ பத்து லட்சம் பேருக்கு 100 எம்.பி.பி.எஸ். இடங்கள்” என்ற அளவுக்குள் அது பொருந்திருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே மருத்துவ இடங்களின் எண்ணிக்கை இந்த வரையறையைத் தாண்டிய நிலையில், அரசோ, தனியாரோ இனி புதிதாக மருத்துவக் கல்லூரிகளைத் துவக்க முடியாது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் எந்தத் தென்னிந்திய மாநிலமும் புதிதாக மருத்துவக் கல்லூரிகளைத் துவங்க முடியாது. மணிப்பூர், இமாச்சலப் பிரதேசம், கோவா, சண்டிகர், புதுச்சேரி ஆகிய இடங்களிலும் புதிதாக மருத்துவக் கல்லூரிகளைத் துவங்க முடியாது.
10 லட்சம் பேருக்கு 100 மருத்துவ இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்ற விதியை அறிமுகப்படுத்தப்பட்டதற்கு எந்தக் காரணத்தையும் தேசிய மருத்துவ ஆணையம் தெரிவிக்கவில்லை.

தமிழ்நாடு அரசு, மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரியை வைத்திருக்க வேண்டும் என்பதை கொள்கை முடிவாக வைத்திருக்கிறது. ஆகவே, புதிதாக ஆரம்பிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரிகளைத் துவங்க விரும்புகிறது.
ஆனால், தேசிய மருத்துவக் கமிஷனின் இந்த விதியால், இனி புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு தமிழ்நாட்டில் அனுமதி கிடைக்காது.
“ஒரு மாநிலத்திற்கு எவ்வளவு மருத்துவர்கள் தேவை, எவ்வளவு மருத்துவர்களை அரசுப் பணியில் சேர்க்க முடியும், எவ்வளவு பேர் தனியார் மருத்துவத் துறையில் பணியாற்றுவார்கள், எவ்வளவு பெண் மருத்துவர்கள் தேவை, எவ்வளவு மருத்துவர்கள் வெளிநாட்டுக்கு செல்லலாம் என்பதையெல்லாம் அந்தந்த மாநில அரசுகள்தான் கணக்கிட முடியும். தங்கள் மாநிலத்திற்குத் தேவையான அளவுக்கு மருத்துவர்களை உருவாக்கும் உரிமை மாநில அரசுக்குத்தான் உண்டு. மாநில அரசுகள் மருத்துவ இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம். இதில் மத்திய அரசுக்கோ, தேசிய மருத்துவ ஆணையத்திற்கோ எந்த உரிமையும் கிடையாது” என்கிறார் மருத்துவர் அமலோற்பவநாதன் ஜோசப்.
தேசிய மருத்துவ ஆணையத்தின் இந்த விதிக்குக் வேறு காரணமும் இருக்கிறது என்கிறார்கள் சில மருத்துவர்கள்.
மருத்துவ சீட் புள்ளி விபரங்கள் சொல்வது என்ன?
இந்தியா முழுவதும் உள்ள 593 மருத்துவக்கல்லூரிகளில், 69 கல்லூரிகளுடன் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. 67 கல்லூரிகளுடன் உத்தர பிரதேசம் இராண்டாமிடத்திலும், 59 கல்லூரிகளுடன் மஹாராஷ்டிரா மூன்றாமிடத்திலும் உள்ளன.
அவற்றில் மொத்தமுள்ள 45,698 மருத்துவப் படிப்பு இடங்களில், அதிபட்சமாக 10,375 இடங்களை தமிழகம் கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் 312 அரசு கல்லூரிகளில் 22,933 இடங்கள் உள்ள நிலையில், அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,125 மாணவர்கள் படிக்கின்றனர். இது இந்திய அளவில் 12% ஆகும். இதேபோல் மத்திய அரசின் தொகுப்புக்கும் தமிழ்நாட்டில் இருந்துதான் அதிக இடங்கள் கிடைக்கின்றன.
281 தனியார் மருத்துவகல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் தமிழ்நாட்டிலும், உத்தரபிரதேசத்திலும் தலா 32 கல்லூரிகள் உள்ளன. தமிழ்நாட்டில் நடப்பாண்டில் மட்டும் அரசு, தனியார் என 17 புதிய மருத்துவக்கல்லூரிகளுக்கு அனுமதி பெறப்பட்டிருக்கிறது. இதன் மூலம் 2350 இடங்கள் கூடுதலாக கிடைத்திருக்கின்றன. இதில் 11 அரசு மருத்துவக்கல்லூரிகள் மூலம் 1450 இடங்கள் நடப்பாண்டில் கிடைத்திருக்கின்றன.
என்ன செய்யப் போகிறது தமிழ்நாடு அரசு?
The post ’’தமிழ்நாட்டில் இனி புதிய மருத்துவக் கல்லூரி தொடங்க முடியுமா..?’’ அதிர்ச்சி தகவல்கள் first appeared on Madras Murasu.
]]>The post ’’ஆயுர்வேத தினம் – ஒரு மாதம் கொண்டாட்டங்கள்..!’’ மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் அறிவிப்பு first appeared on Madras Murasu.
]]>நாடு முழுவதும் 8 வது தேசிய ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு ஒரு மாத கால இயக்கத்தை மத்திய ஆயுஷ், துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் 10.10.2023 அன்று ஊடக மையத்தில் செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார். ஆயுர்வேதத்தின் கடவுளான தன்வந்திரிக்கு மரியாதை செலுத்தும் விதமாக நாடு முழுவதும் ஆயுர்வேத தினம் கொண்டாடப்படுகிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர், “ஆயுர்வேதத்தின் மக்கள் ஆரோக்கியத்திற்கான மக்கள் தகவல், மக்கள் பங்கேற்பு, மக்கள் இயக்கம்” ஆகியவற்றை வலியுறுத்தின. 8-வது ஆயுர்வேத தினத்திற்காக, ஆயுர்வேதம் மனிதருக்கு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல், தாவரங்கள், விலங்குகள் உள்ளிட்டவற்றுக்கு பயனளிக்கிறது என்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆயுஷ் அமைச்சகம் ஆராய விரும்புகிறது. எனவே, “ஆரோக்கியத்திற்கான ஆயுர்வேதம்” என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட கருப்பொருளாகும்.
இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவம் ‘வசுதைவ குடும்பகம்’ என்ற கருப்பொருளுக்கு ஏற்ப இந்தக் கருப்பொருள் உள்ளது. மேலும் ஆயுர்வேத தினம் 2023-ன் மைய கருப்பொருள் ‘ஆரோக்கியத்திற்கான ஆயுர்வேதம்’ என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
சர்பானந்த சோனாவால் ஒரு மாத கால கொண்டாட்டங்களின் முழு அரசின் அணுகுமுறையையும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையும் எடுத்துரைத்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியா வசுதைவ குடும்பகம் கொள்கையை நம்புகிறது.
ஆயுர்வேதம் குறித்து மாணவர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஒரு மாத கொண்டாட்டங்களுக்குத் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 8 வது ஆயுர்வேத தினம் 2023 நவம்பர் 10 அன்று கொண்டாடப்பட உள்ளது. ஆயுர்வேதத்தின் மூலம் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய ஆயுஷ் அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் ஆயுர்வேத தினத்திற்கு வெவ்வேறு கருப்பொருள்களைத் தேர்ந்தெடுத்தது.
இக்கருத்தை மையமாக வைத்து நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு லட்சக்கணக்கானோர் பயனடைந்து வருகின்றனர். இது சுகாதாரப் பிரச்சினையைத் தடுப்பதிலும் சிகிச்சையளிப்பதிலும் ஆயுர்வேதத்தின் சாத்தியமான பங்கு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த உதவுகிறது.
“வசுதைவ குடும்பகம்” என்பது பண்டைய இந்திய நூல்களான மகா உபநிஷத் மற்றும் ஹிதோபதேசம் போன்ற சமஸ்கிருத சொற்றொடராகும், இது ஆங்கிலத்தில் “உலகம் ஒரு குடும்பம்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த கருத்து முழு உலகமும் அதன் அனைத்து மக்களும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது மற்றும் அவர்கள் ஒரு குடும்பத்தின் ஒரு பகுதியாக கருதப்பட வேண்டும் என்ற கருத்தை தெரிவிக்கிறது.
இது உலகளாவிய சகோதரத்துவம், ஒற்றுமை மற்றும் அனைத்து மக்களுக்கும் அவர்களின் தேசியம், இனம் அல்லது மதத்தைப் பொருட்படுத்தாமல் கருணை மற்றும் பச்சாதாபத்தை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தை ஊக்குவிக்கிறது. அடிப்படையில், இது பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் நாடுகளிடையே உலகளாவிய ஒற்றுமை, அமைதி மற்றும் புரிதலின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. இந்த சொற்றொடர் ஒத்துழைப்பு, இரக்கம் மற்றும் நமது பகிரப்பட்ட மனிதகுலத்தின் அங்கீகாரத்தை ஊக்குவிக்கும் ஒரு தத்துவமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
The post ’’ஆயுர்வேத தினம் – ஒரு மாதம் கொண்டாட்டங்கள்..!’’ மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் அறிவிப்பு first appeared on Madras Murasu.
]]>The post ”போதைப் பொருள் இல்லாத உலகைப் படைக்க மாணவர்கள் முன்வர வேண்டும்..!”திருச்சி மாநகரக் காவல் ஆணையர் என் காமினி first appeared on Madras Murasu.
]]>மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சென்னை மண்டல மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் ‘போதைப் பொருள் இல்லாத இந்தியா & சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் இந்தியத் திரைப்படங்கள் மற்றும் மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள்’ குறித்த 3 நாள் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கண்காட்சியை திருச்சி மாநகரக் காவல் ஆணையர் என்.காமினி திறந்து வைத்துப் பார்வையிட்டார்.
பின்னர் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்துப் பேசிய அவர், ”போதைப் பொருள் இல்லாத உலகைப் படைக்க அனைவரும் முன்வர வேண்டும். குறிப்பாக மாணவர்கள் முன்வர வேண்டும். காரணம் பெற்றோர்கள், ஆசிரியர்களுக்குத் தெரியாமல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் போதைப் பழக்கம் ஏற்படுகிறது. அதை நாம் முழுமையாகத் தடுக்க வேண்டும். போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்குத் தெரிய வந்தால் உடனடியாக காவல் துறை அல்லது பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். அதோடு போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைக்கு மாணவர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். போதைப் பொருட்கள் பயன்பாட்டைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் எண்ணற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக தமிழ்நாடு அரசு சார்பில் போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது”. என்றார்.
தொடர்ந்து போதைப் பொருள் பயன்பாட்டால் ஏற்படும் தீங்கு மற்றும் அவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு கைப்பிரதியை அவர் வெளியிட்டார். அதோடு போதைப் பொருள் தடுப்பு குறித்த உறுதிமொழியை மாணவர்களுடன் எடுத்துக் கொண்டதோடு, கையெழுத்து இயக்கத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் இயக்குநர் டாக்டர் ஜி. அகிலா, மாணவர்கள் நலத்துறைத் தலைவர் முனைவர் கார்வேம்பு, சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் இணை இயக்குநர் பி. அருண் குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மத்திய மக்கள் தொடர்பகத்தின் திருச்சி கள விளம்பர அலுவலர் கே. தேவி பத்மநாபன் வரவேற்பு ஆற்றினார். தஞ்சாவூர் கள விளம்பர அலுவலர் கே.ஆனந்த பிரபு நன்றியுரை ஆற்றினார்.
The post ”போதைப் பொருள் இல்லாத உலகைப் படைக்க மாணவர்கள் முன்வர வேண்டும்..!”திருச்சி மாநகரக் காவல் ஆணையர் என் காமினி first appeared on Madras Murasu.
]]>The post ”எம்.டி. (சித்தா) மருத்துவ பட்ட மேற்படிப்பு சேர்க்கை..!” அறிவிப்பு வெளியானது first appeared on Madras Murasu.
]]>அதன் விபரம்:
தமிழ்நாட்டிலுள்ள அரசு சித்தா மருத்துவக் கல்லூரிகளில் (சென்னை மற்றும் பாளையங்கோட்டை)உள்ள இடங்களுக்கு, 2023-2024ஆம் கல்வியாண்டிற்கான எம். டி. (சித்தா) மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான சேர்க்கை பெற அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் 2023-ஆம் ஆண்டிற்கான சித்தா மருத்துவப் பட்டப்படிப்பிற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (AIAPGET 2023-Siddha) எழுதி, தேவையான தகுதி சதமான மதிப்பெண் பெற்றவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை “www.tnhealth.tn.gov.in” என்ற சுகாதாரத் துறையின் வலைதள முகவரி மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் இவ்வாணையரகத்திலோ, தேர்வுக்குழு அலுவலகத்திலோ வழங்கப்படமாட்டாது. மேலும், அடிப்படைத்தகுதி, தரவரிசை, கலந்தாய்வு அட்டவணை மற்றும் பிற விவரங்களுக்கு “www.tnhealth.tn.gov.in’ என்ற வலைதள முகவரியில் தெரிந்துக்கொள்ளலாம்.
விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை 06.10.2023 முதல் 20.10.2023 முடிய மாலை 05.00 மணி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் தபால் / கூரியர் சேவை வாயிலாக பெறவோ அல்லது நேரில் சமர்ப்பிக்கவோ கடைசி நாள்: 20.10.2023 மாலை 05.30 மணி வரை.
விண்ணப்பப்படிவங்கள் சமர்ப்பிக்கவேண்டிய முகவரி: “செயலர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம், அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை – 600 106.”
விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வு நேர்முகமாக மட்டுமே நடைபெறும் மேலும் விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த செலவிலேயே வரவேண்டும்.
கலந்தாய்வு தேதி, இடம் மற்றும் அனைத்து விவரங்களும் வலைதள முகவரி மூலமாக மட்டுமே அறிவிக்கப்படும். கலந்தாய்வு அன்று நேரில் வரத்தவறியவர்கள் தங்களது வாய்ப்பை இழந்துவிடுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: 3000/- ரூபாய்
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணத்தை எஸ்.பி.ஐ. இ-சேவை வாயிலாக மட்டுமே செலுத்தவேண்டும்.
கடைசி தேதிக்குப்பின் பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது, மேலும், தபால்/ கூரியர் சேவையினால் ஏற்படும் காலதாமதத்திற்கு தேர்வுக்குழு பொறுப்பாகாது.
The post ”எம்.டி. (சித்தா) மருத்துவ பட்ட மேற்படிப்பு சேர்க்கை..!” அறிவிப்பு வெளியானது first appeared on Madras Murasu.
]]>The post ’’டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு குடிநீர் சிறந்த மருந்து..!’’ சித்த மருத்துவர் கு.சிவராமன் first appeared on Madras Murasu.
]]>இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் மருத்துவர் கு.சிவராமன் கூறியதாவது:
டெங்கு காய்ச்சல் என்பது வைரஸ் நோய், பிற புளூ காய்ச்சல்கள் போல உடலுக்குள் வந்து சில தினங்கள் இருந்து விட்டு செல்லக் கூடியதுதான். ஆனால், ரத்த தட்டுக்களையும், வெள்ளை அணுக்களையும் வேகமாக குறைத்து மரணத்தை நோக்கி இட்டுச் செல்லும் ஆபத்து இருப்பதால் டெங்கு காய்ச்சலுக்கு சிறப்பு கவனம் தேவைப்படுகிறது.
சுருக்கி பயன்படுத்த வேண்டும்.
நிலவேம்பு குடிநீரில் நிலவேம்பு, மிளகு, சுக்கு, கோரைக்கிழங்கு, வெட்டிவேர், விலாமிச்சைவேர், சந்தனத்தூள், பற்படாகம், பேய்ப்புடல் ஆகிய 9 மூலிகைகள் சேர்ந்துள்ளன. இந்தக் காய்ச்சல் வந்த அனைவரும் நிலவேம்பு குடிநீர் பருகலாம். பெரியவர்கள் காலை, மாலை இரு வேளையும் உணவுக்கு முன்னர் 50 மிலி வரை எடுத்துக் கொள்ளலாம். 3 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு உடல் எடையைப் பொறுத்து 15 முதல் 30 மிலி வரை கொடுக்க வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட நிலவேம்பு பொடியை வாங்கி அதில் 5 கிராம் பொடியை 200 மிலி தண்ணீரில் கொதிக்க வைத்து 50 மிலி சுருக்கி பயன்படுத்த வேண்டும்.
நிலவேம்பு குடிநீர் பருகினால் 3 நாட்களில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் வந்துவிடும். அதன்பிறகு காய்ச்சல் அறிகுறிகள் தோன்றினால் ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். அதில் ரத்த தட்டுக்கள் குறைந்திருப்பது தெரிய வந்தால் ஆடாதொடை இலைச் சாறு அல்லது பப்பாளி இலைச் சாறு 10 முதல் 30 மிலி வரை 3 நாட்களுக்கு பருகலாம். இவை இரண்டும் ரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை 2 நாள்களில் இரு மடங்காக அதிகரிக்கச் செய்யும் வல்லமை கொண்டவை. இதுவும் ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன.
தவிர்க்க வேண்டிய உணவுகள்!
உடலில் வேறு குறைபாடுகள் உள்ளவர்கள், கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனைப்படியே நிலவேம்பு குடிநீர் பருக வேண்டும். 1 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இதனை கொடுக்கக் கூடாது. டெங்கு காய்ச்சல் இருப்பவர்கள் இனிப்புகளை குறைத்து கசப்பு அதிகம் சேர்க்க வேண்டும். காரம் தேவைப்படின் மிளகாய்க்கு பதில் மிளகு சேர்க்கவும்.
காய்ச்சல் வருவதற்கு மிக முக்கிய காரணம் நீர்ச்சத்து குறைவது. எனவே, தினமும் இரண்டரை முதல் 3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். பழச்சாறுகள், இளநீர், சீரகத் தண்ணீர் ஆகியவற்றையும் குடிக்கலாம். காய்ச்சல் வந்தவர்களுக்கு அரிசி மற்றும் தானிய கஞ்சி, கீரை சூப் கொடுக்கலாம், மீன் தவிர மற்ற அசைவ உணவுகள், பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு மருத்துவர் கு.சிவராமன் கூறினார்.
இம்காப்ஸ்: சென்னை திருவான்மியூரில் இம்காப்ஸ் நிறுவனம் உள்ளது. இங்கு சித்த, ஆயுர்வேத, யுனானி மருந்துகள் கிடைக்கும். இவர்களின், மொத்த விற்பனை நிலையம் உள்ளது. ஆன்லைன் மூலமாகவும் மருந்துகளை ஆர்டர் செய்யலாம். உங்கள் வீடுகளுக்கே நேரில் டெலிவரி செய்யும் வசதி அவர்களிடம் உள்ளது. மருந்துகள் ஆர்டர் செய்வது தொடர்பாக +91- 24521029, 24520189, 24520244, 9710105678 / 9710205678, (044) 24523313 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். https://impcops.org.in/ என்ற தளத்தை பாருங்கள். ரூ.1000-க்கு மேல் வாங்கினால் இலவச டெலிவரி உண்டு.
The post ’’டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு குடிநீர் சிறந்த மருந்து..!’’ சித்த மருத்துவர் கு.சிவராமன் first appeared on Madras Murasu.
]]>