acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ’’ இந்த கூட்டத்தொடரின் முக்கிய விஷேசம் என்ன ? ‘’ நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு first appeared on Madras Murasu.
]]>பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு, மத்திய பட்ஜெட் மீதான பொது விவாதம் இரு அவைகளிலும் நடைபெற்றது. இதனால் மக்களவைக்கு ஒதுக்கப்பட்ட 20 மணி நேரத்திற்கு பதிலாக 27 மணி நேரம் 19 நிமிடங்களும், மாநிலங்களவைக்கு ஒதுக்கப்பட்ட 20 மணி நேரத்திற்கு பதிலாக, 22 மணி நேரம் 40 நிமிடங்களும் ஒதுக்கப்பட்டன. 2024-25 ஆம் ஆண்டுக்கான ஜம்மு-காஷ்மீர் பட்ஜெட் மீதான பொது விவாதம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் -2024-25 தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் மற்றும் தொடர்புடைய ஒதுக்கீட்டு மசோதா ஆகியவை மக்களவையில் 2024-25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் மீதான பொது விவாதத்துடன் ஒன்றாக எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
மக்களவையில், ரயில்வே, கல்வி, சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் மற்றும் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் அமைச்சகங்கள் தொடர்பான மானியக் கோரிக்கைகள் தனித்தனியாக விவாதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதனைத் தொடர்ந்து அமைச்சகங்கள்/துறைகளின் மானியங்களுக்கான எஞ்சிய கோரிக்கைகள், 2024 ஆகஸ்ட் 05 ஆம் தேதி திங்கட்கிழமை சபையின் வாக்கெடுப்புக்கு விடப்பட்டன. இது தொடர்பான ஒதுக்கீட்டு மசோதாவும் 05.08.2024 அன்றே மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. நிதி (எண் 2) மசோதா, 2024 மக்களவையில் 6மற்றும் 7 ஆகஸ்ட் 2024 அன்று பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
மாநிலங்களவையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள், வேளாண் மற்றும் விவசாயிகள் நலன், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகங்களின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் 2024-25 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கைகள் மற்றும் நிதி (எண் 2) மசோதா, 2024 ஆகியவை தொடர்பான ஒதுக்கீட்டு மசோதாக்களை மாநிலங்களவை 08.08.2024 அன்று திருப்பி அனுப்பியது.
விமானங்களின் வடிவமைப்பு, உற்பத்தி, பராமரிப்பு, உடைமை, பயன்பாடு, செயல்பாடு, விற்பனை, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மற்றும் அதனுடன் தொடர்புடைய விஷயங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் வகை செய்யும் பாரதிய வாயுயன் விதேயக், 2024-ஐ மக்களவை 09.08.2024 அன்று நிறைவேற்றியது.
“வரவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்தியாவின் தயார்நிலை” மற்றும் “அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக டெல்லியில் உள்ள ஒரு பயிற்சி நிறுவனத்தில் மாணவர்கள் இறந்த துயர சம்பவம்” குறித்து முறையே மக்களவை மற்றும் மாநிலங்களவையில் விவாதங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக ஏற்பட்ட உயிர் மற்றும் உடைமை இழப்புக்கள் மற்றும் கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் ஏற்பட்ட நிலைமை குறித்த கவன ஈர்ப்பு தீர்மானங்கள், மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எடுத்துக் கொள்ளப்பட்டன.
வக்ஃப் (திருத்த) மசோதா, 2024 09.08.2024 அன்று பரிசீலனைக்காக நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
2024 பட்ஜெட் அமர்வின் போது மக்களவையின் செயல்பாட்டுத்திறன் தோராயமாக 136% ஆகவும், மாநிலங்களவையின் செயல்பாட்டுத்திறன் தோராயமாக 118% ஆகவும் இருந்தது.
மக்களவை / மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாக்கள், மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள், மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள், இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் ஆகியவற்றின் பட்டியல் இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.
18-வது மக்களவையின் 2-வது கூட்டத்தொடரிலும், மாநிலங்களவையின் 265-வது கூட்டத்தொடரிலும் பரிவர்த்தனை செய்யப்பட்ட அலுவல்களின் விவரம்:
1. மக்களவையில் தாக்கல் செய்யும் மசோதாக்கள் : நிதி (எண்.2) மசோதா, 2024 | ஜம்மு-காஷ்மீர் நிதி ஒதுக்கீட்டு (எண் 3) மசோதா, 2024 | பாரதிய வாயுயன் விதேயக், 2024 | பேரிடர் மேலாண்மை (திருத்த) மசோதா, 2024 | கோவா மாநில சட்டமன்றத் தொகுதிகளில் ஷெட்யூல்டு பழங்குடியினரின் பிரதிநிதித்துவத்தை மறுசீரமைத்தல் மசோதா, 2024 | நிதி ஒதுக்கீட்டு (எண் .2) மசோதா, 2024 | வக்ஃப் (திருத்த) மசோதா, 2024 | முசல்மான் வக்ஃப் (ரத்து செய்தல்) மசோதா, 2024 | வங்கி சட்டங்கள் (திருத்த) மசோதா, 2024 | கடல் வழியாக சரக்குகளை எடுத்துச் செல்வது பில், 2024 | லேடிங் மசோதா, 2024 | ரயில்வே (திருத்த) மசோதா, 2024
2. மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்கள் : எண்ணெய் வயல்கள் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) திருத்த மசோதா, 2024 | கொதிகலன்கள் மசோதா, 2024 |
3.மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் : ஜம்மு-காஷ்மீர் நிதி ஒதுக்கீட்டு (எண் 3) மசோதா, 2024 | நிதி ஒதுக்கீட்டு (எண் .2) மசோதா, 2024 | நிதி (எண்.2) மசோதா, 2024 | பாரதிய வாயுயன் விதேயக், 2024 |
4. மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் : ஜம்மு-காஷ்மீர் நிதி ஒதுக்கீட்டு (எண் 3) மசோதா, 2024 | நிதி ஒதுக்கீட்டு (எண் 2) மசோதா, 2024, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. நிதி (எண்.2) மசோதா, 2024
5. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் : ஜம்மு-காஷ்மீர் நிதி ஒதுக்கீட்டு (எண் 3) மசோதா, 2024. நிதி ஒதுக்கீட்டு (எண் 2) மசோதா, 2024, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. நிதி (எண்.2) மசோதா, 2024
6. மாநிலங்களவையில் திரும்பப் பெறப்பட்ட மசோதாக்கள் வக்ஃப் சொத்துக்கள் (அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுதல்), மசோதா, 2014
Annex
LEGISLATIVE BUSINESS TRANSACTED DURING THE 2ND SESSION OF 18th LOK SABHA AND 265th SESSION OF RAJYA SABHA
The post ’’ இந்த கூட்டத்தொடரின் முக்கிய விஷேசம் என்ன ? ‘’ நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு first appeared on Madras Murasu.
]]>The post ’’இனி ஈசியா ’பாஸ்போர்ட்’ எடுக்கலாம்..!’’ அதிரடி அறிவிப்பு வெளியானது first appeared on Madras Murasu.
]]>பாஸ்போர்ட் சேவைகளை வழங்குவதில் மக்களுக்கு உதவுவதற்காக சென்னை அண்ணாசாலை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் “மே ஐ ஹெல்ப் யூ” வசதி அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில், பாஸ்போர்ட் சேவைகள் குறித்த வழிகாட்டுதல்களை அதில் பெறுவதுடன், பாஸ்போர்ட் விண்ணப்பத்தை நிரப்புவது, பாஸ்போர்ட் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள், அலுவலத்திற்கு நேரில் வர வேண்டிய நேரம் ஆகியவை தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம்.
044 – 2851 3639/ 2851 3640 ஆகிய தொலைபேசி எண்களிலும் மக்கள் தொடர்பு கொள்ளலாம். தங்களது கேள்விகளை வாட்ஸ்-அப் செயலியில் +917305330666 என்ற எண்ணுக்கு அனுப்பலாம். மக்களுக்கு உதவுவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த சேவைகள் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கிடைக்கும்.
பாஸ்போர்ட் நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளதால் அவற்றை விண்ணப்பத்தாரர்கள் தாங்களாகவே நிரப்பலாம் என்று மண்டல பாஸ்போர்ட் அதிகாரி திரு. எஸ்.கோவேந்தன் கூறியுள்ளார். பாஸ்போர்ட் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான ஒரே அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.passportindia.gov.in ஆகும். மேலும் இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்தின் பிஎஸ்பி பிரிவின் ‘mPassport Seva’ என்ற அதிகாரப்பூர்வ செல்போன் செயலி மூலமாகவும் சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பத்தாரர்கள் தங்களது தனிப்பட்ட சொந்த ஆவணங்களையோ அல்லது ரகசியமான தகவல்களையோ இடைத்தரகர்கள், முகவர்களிடம் தெரிவிக்க வேண்டாம் என அவர் அறிவுறுத்தியுள்ளார். அவர்களிடம் தெரிவிக்கப்படும் தகவல்கள் துஷ்பிரயோகம் செய்யப்படக் கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.
இந்த “மே ஐ ஹெல்ப் யூ” முன்முயற்சி மூலம் மக்கள் தங்களது அடிப்படை கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பி பதில் பெறலாம் என அவர் கூறியுள்ளார். முகவர்கள் மற்றும் இடைத்தரகர்களின் பொறியில் சிக்காமல் தடுக்க இது உதவும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
The post ’’இனி ஈசியா ’பாஸ்போர்ட்’ எடுக்கலாம்..!’’ அதிரடி அறிவிப்பு வெளியானது first appeared on Madras Murasu.
]]>The post ’’உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டம்..!’’ மானியம் அறிவிப்பு first appeared on Madras Murasu.
]]>உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டத்திற்கான விருப்பம் அதிகரித்திருப்பதையடுத்து, இந்தத் திட்டத்தின் கீழ், குளிர்சாதனப் பெட்டிகள் எல்இடி விளக்குகள் தயாரிப்புக்கு, விண்ணப்பிக்கும் சாளரத்தை அரசு மீண்டும் திறந்துள்ளது. இந்தப் பொருட்களுக்கான சந்தை அதிகரிப்பு இதற்குக் காரணமாகும். 16.4.2021 அன்று அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் விதிமுறைகள், நிபந்தனைகளுக்கு உட்பட்டும் 04.06.2021 அன்று வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள், அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு ஏற்பவும், இந்த விண்ணப்பச் சாளரம் திறக்கப்பட்டுள்ளது.
உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டத்திற்கான விண்ணப்பச் சாளரம் 2024 ஜூலை 15 முதல் 2024 அக்டாபர் 12 வரை https://pliwhitegoods.ifciltd.com/ என்ற இணையதளத்தில் திறந்திருக்கும். விண்ணப்பச்சாளரம் மூடப்பட்டதற்கு பிந்தைய விண்ணப்பம் எதுவும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

பாகுபாடு எதுவும் இல்லாமல் இருப்பதற்காக புதிய விண்ணப்பதாரர்களும் ஏற்கனவே இந்தத் திட்டத்தால் பயனடைந்து தற்போது புதிய துறைக்கு வரவிரும்பும் நிறுவனங்களும் விண்ணப்பிக்கலாம். இது இந்தத் திட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் பத்தி 5.6 என்பதில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். தொகுக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் https://pliwhitegoods.ifciltd.com/ and https://dpiit.gov.in/sites/default/files/Consolidated_Guidelines_PLIScheme_23October2023.pdf என்ற இணையதளத்தில் கிடைக்கும்.
உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ், இதுவரை தெரிவு செய்யப்பட்ட 66 விண்ணப்பதாரர்கள் ரூ.6,962 கோடி முதலீடு செய்ய உறுதி அளித்துள்ளனர். குளிர்சாதனப் பெட்டிகள் தயாரிப்புக்கு டைக்கின். வோல்டாஸ், ஹிண்டால்கோ, பானாசோனிக், ப்ளூ ஸ்டார், எல்ஜி, லூக்காஸ் போன்ற நிறுவனங்களும் எல்இடி விளக்குகள் தயாரிப்புக்கு சூர்யா, ஓரியண்ட், கிராம்ப்டன் கிரீவ்ஸ் போன்ற நிறுவனங்களும் முதலீடு செய்துள்ளன.
உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டம் 2021-22 நிதியாண்டிலிருந்து 2028-29 நிதியாண்டு வரை 7 ஆண்டு காலத்திற்கு ரூ.6,238 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
The post ’’உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டம்..!’’ மானியம் அறிவிப்பு first appeared on Madras Murasu.
]]>The post ’’பட்ஜெட்டில் என்னென்ன சலுகைகள்..?’’ 23 ஆம் தேதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு first appeared on Madras Murasu.
]]>இந்த ஆலோசனைக் கூட்டங்களின் போது, 10 குழுக்களைச் சேர்ந்த 120-க்கும் அதிகமான அழைப்பாளர்கள் பங்கேற்றனர். விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், வேளாண் பொருளாதார வல்லுநர்கள், தொழிற்சங்கங்கள், கல்வித் துறையினர், சுகாதாரத் துறை வல்லுநர்கள், வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டு வல்லுநர்கள், குறு, சிறு, நடுத்தர தொழில் துறையினர், வர்த்தகம் மற்றும் சேவைகள் தொழில் துறையினர், பொருளாதார நிபுணர்கள், நிதித் துறை, மூலதனச் சந்தைகளின் நிபுணர்கள், உள்கட்டமைப்பு, எரிசக்தி, நகர்ப்புற துறை பிரதிநிதிகள் இந்தக் கூட்டங்களில் பங்கேற்று ஆலோசனைகளைத் தெரிவித்தனர்.
மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, நிதித்துறை செயலாளர் டி.வி.சோமநாதன், பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் அஜய் சேத், சம்பந்தப்பட்ட அமைச்சகங்களின் செயலாளர்கள், தலைமைப் பொருளாதார ஆலோசகர் டாக்டர் வி.அனந்த நாகேஸ்வரன், மூத்த அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மதிப்புமிக்க ஆலோசனைகளைப் பகிர்ந்து கொண்டதற்காகப் பங்கேற்பாளர்களுக்கு நன்றி தெரிவித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024-25 மத்திய பட்ஜெட்டைத் தயாரிக்கும்போது இக்கூட்டத்தில் பெறப்பட்ட பரிந்துரைகள் கவனமாக பரிசீலிக்கப்படும் என்று உறுதியளித்தார்.

7 வது பட்ஜெட் :
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜுலை 22 ஆம் தேதி கூடுகிறது. ஜூலை 23 ஆம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
இதுகுறித்து, மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
”மத்திய அரசின் பரிந்துரையின் பேரில், நாடாளுமன்ற அலுவல்களின் தேவைகளுக்கு உட்பட்டு, 2024 ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 12 வரை பட்ஜெட் கூட்டத்தொடருக்காக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டுவதற்கான முன்மொழிவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். 2024-25-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் 2024 ஜூலை 23 அன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படும்”
இவ்வாறு, மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளார்.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பிறகு, தாக்கல் செய்யப்படும் முழு நேர பட்ஜெட் இது. நிர்மலா சீதாராமன் ஏழாவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். புதிய பட்ஜெட்டில் என்னென்ன சலுகைகள், வரிகள் விதிக்கப்பட இருக்கிறது என்பது பட்ஜெட் தாக்கல் செய்தவுடன் முழுமையாக தெரிந்து விடும்.
The post ’’பட்ஜெட்டில் என்னென்ன சலுகைகள்..?’’ 23 ஆம் தேதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு first appeared on Madras Murasu.
]]>The post ”முதலாவது இந்தியர் விண்வெளிக்குப் பயணம்..!” மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் first appeared on Madras Murasu.
]]>புதுதில்லியில் இன்று நடைபெற்ற பாரத் 24 நியூஸ் நெட்வொர்க் நிகழ்ச்சியில் பேசிய மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இத்தகவலை தெரிவித்தார்.
விண்வெளியிலும் கடல் சார் துறையிலும் இந்தியாவின் முன்னேற்றம் குறித்து கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட அவர், இந்தியாவிடமிருந்து மனிதருடன் விண்வெளிக்கு முதலாதாக பயணம் மேற்கொள்ளும் ககன்யானுக்கு 3 குரூப் கேப்டன்கள் ஒரு விங் கமாண்டர் என நான்கு விண்வெளி வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்றார். அதே போல் இந்தியாவில் ஆழ்கடல் பயணத்தில் 3 இந்தியர்கள் 2025-ல் ஆழ்கடலுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
விண்வெளித்துறை ஏற்கனவே, செயற்கைக் கோள்கள் செலுத்துவதோடு மட்டுப்பட்டிருந்த நிலையில், தற்போது ஆக்கப்பூர்வமான அதன் வளர்ச்சி காரணமாக வேளாண்மை, அடிப்படைக் கட்டமைப்பு, தகவல் தொடர்பு, சுகாதாரம், நில ஆவண நிர்வாகம், மண்வள அட்டை, நேரடி பயன் பரிமாற்றம், நில வரைபடம் ஆகியவற்றிலும் தாக்கத்தை செலுத்துகிறது. இது வேளாண் உற்பத்தித் திறனை அதிகரிக்க உதவுகிறது என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
2022-ல் விண்வெளி தொடர்பாக ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் இருந்த நிலையில், விண்வெளித்துறையைத் தனியார் பங்கேற்புக்குத் திறந்தபின், சுமார் 200 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் தெரிவித்தார். ஒரு சில மாதங்களில் விண்வெளித்துறைக்கு 1,000 கோடி ரூபாய் தனியார் முதலீடுகள் வந்திருப்பதாக அவர் கூறினார்.
தேசிய குவாண்டம் இயக்கத்தை நாம் பெற்றுள்ள நிலையில், குவாண்டம் தொழில்நுட்பங்களில் முன்னணியில் உள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் விளங்குகிறது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
The post ”முதலாவது இந்தியர் விண்வெளிக்குப் பயணம்..!” மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் first appeared on Madras Murasu.
]]>The post ”மத்திய அரசு வேலை ; 12 ஆம் வகுப்பு பாஸ் போதும்..!” first appeared on Madras Murasu.
]]>பணியாளர் தேர்வு ஆணையம் “ஒருங்கிணைந்த மேல்நிலைக் கல்வி (10+2) நிலையிலான பணியாளர் தேர்வு- 2024”-க்கான அறிவிப்பை 08.04.2024 அன்று வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள் / அலுவலகங்களில் எழுத்தர் / இளநிலை செயலக உதவியாளர் போன்ற சி பிரிவு பணிகளுக்கான போட்டித் தேர்வை பணியாளர் தேர்வாணயம் நடத்துகிறது. இதற்கு நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வாணையத்தின் இணையதளமான ssc.gov.in மூலம் மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 07.05.2024 (23:00 மணிவரை).இணைய தளத்தில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி 08.05.2024 (23:00 மணி வரை).
தென் மண்டலத்தில், கணினி அடிப்படையிலான தேர்வு 2024 ஜூன்-ஜூலை மாதங்களில் 21 மையங்கள் / நகரங்களில் நடைபெறும்: ஆந்திராவில் 10 மையங்கள்; புதுச்சேரியில் ஒரு மையம், தமிழ்நாட்டில் 07 மையங்கள்; தெலுங்கானாவில் 03 மையங்களில் தேர்வு நடைபெறும்.
இத்தகவலை பணியாளர் தேர்வாணையத்தின் மண்டல இயக்குநர் கே நாகராஜா தெரிவித்துள்ளர்.
The post ”மத்திய அரசு வேலை ; 12 ஆம் வகுப்பு பாஸ் போதும்..!” first appeared on Madras Murasu.
]]>The post ’’உலக அரங்கில் இந்திய ஆயுதப்படைகளின் பெண்கள் சக்தி..!’’ first appeared on Madras Murasu.
]]>தற்போது ரியாத்தில் நடைபெற்று வரும் உலகப் பாதுகாப்பு கண்காட்சி 2024, முப்படையில் உள்ள பெண்களின் பிரதிநிதித்துவத்தைக் கண்டது. இது பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு ஒரு சான்றாகும். ஸ்குவாட்ரன் லீடர் பாவனா காந்த், கர்னல் பொனுங் டொமிங், லெப்டினன்ட் கமாண்டர் அன்னு பிரகாஷ் ஆகியோர் இந்தக் கண்காட்சியின் பல்வேறு கருத்தரங்குகளில், குறிப்பாக சர்வதேசப் பெண்கள் பாதுகாப்பு கருப்பொருள் நிகழ்வுகளில் ஆயுதப்படைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தினர்.
பிப்ரவரி 07-ம் தேதி, அமெரிக்காவுக்கான செளதி தூதர் இளவரசி ரீமா பின்ட் பண்டர் அல்-சவுத் தொகுத்து வழங்கிய ‘பாதுகாப்பில் சர்வதேசப் பெண்கள் – உள்ளடக்கிய எதிர்காலத்தில் முதலீடு’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில், இந்திய விமானப்படையின் போர் விமானியான ஸ்குவாட்ரன் லீடர் பாவனா காந்த் ஒரு குழு உறுப்பினராக மைய மேடையில் கலந்து கொண்டார். ஸ்குவாட்ரன் லீடர் தடைகளை உடைத்து வானத்தில் பறக்கும் தனது எழுச்சியூட்டும் பயணம் குறித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். இந்தியாவில் மதிப்பிற்குரிய போர் விமானிகள் கிளப்பில் அங்கம் வகிக்கும் அவர், தலைமைத்துவம், மீள்திறன், நவீன காலப் போரில் பெண்களின் அதிகரித்து வரும் பங்களிப்பு பற்றி விளக்கிய போது, அவரது நுண்ணறிவு பல்வேறு பார்வையாளர்களை ஈர்த்தது. குடியரசு தின அணிவகுப்பில் (2021) பங்கேற்ற முதல் பெண் போர் விமானி என்ற பெருமையைப் பெற்ற அவர், 2024 குடியரசு தின விழாவிலும் பங்கேற்றார்.
இந்திய ராணுவத்தைச் சேர்ந்த கர்னல் பொனுங் டொமிங், வடக்குப் பிரிவில், 15,000 அடிக்கு மேல் அமைந்துள்ள உலகின் மிக உயர்ந்த எல்லை பணிக்குழுவை வழிநடத்திய முதல் பெண் அதிகாரி ஆவார். பொறியியல் அதிகாரியாக பல சவாலான பணிகளில் முன்னணியில் இருந்துள்ளார்.
இந்தியக் கடற்படையின் லெப்டினன்ட் கமாண்டர் அன்னு பிரகாஷ் கடல்சார் பாதுகாப்பு மற்றும் நடவடிக்கைகளில் தனது நிபுணத்துவத்தை முன்னணிக்குக் கொண்டு வந்துள்ளார். இந்தியாவின் பரந்த கடற்கரையைப் பாதுகாப்பதிலும், பிராந்திய ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதிலும் பெண்கள் வகிக்கும் முக்கியப் பங்கை அவரது பங்கேற்பு விளக்கியது. இந்த நிகழ்வில் அவரது பங்கேற்பு, இந்தியாவிற்கும் கடல்சார் களத்தில் பிற நாடுகளுக்கும் இடையே வலுவான உறவுகளையும் ஒத்துழைப்பையும் வளர்க்க உதவியது.
உலகப் பாதுகாப்பு கண்காட்சி 2024-ல் இந்த மூன்று சிறந்த பெண் அதிகாரிகளின் பங்கேற்பு, பாதுகாப்புத்துறையில் இந்தியப் பெண்களின் அதிகரித்து வரும் பங்களிப்புக்கு ஒரு சான்றாகும். இந்த மூவரும் பிப்ரவரி 08 அன்று ரியாதில் உள்ள சர்வதேச இந்தியப் பள்ளியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 600 பள்ளி மாணவர்களுக்கு தங்களின் அற்புதமான பயணம் குறித்து உத்வேகம் தரும் உரையை வழங்குவார்கள். சீருடையில் உள்ள இந்தியப் பெண்களின் மாறுபட்ட திறமைகள் மற்றும் தலைமைத்துவ திறன்களை வெளிப்படுத்துவதற்கான ஒரு தளமாக இந்த நிகழ்வு இருக்கும். எதிர்காலத் தலைமுறையினர் தங்கள் கனவுகளைப் பின்பற்றவும், புதிய தளங்களை உள்ளடக்கவும் இது ஊக்குவிக்கும்.
கடந்த 4-ந் தேதி தொடங்கிய இந்தக் கண்காட்சி இன்றுடன் (7ஆம் தேதி) முடிவடைகிறது. இந்த நிகழ்ச்சிக்காக இந்தியத் தூதுக்குழுவின் தலைவராக பாதுகாப்புத்துறை இணையமைச்சர் அஜய் பட் ரியாத் சென்றுள்ளார்.
The post ’’உலக அரங்கில் இந்திய ஆயுதப்படைகளின் பெண்கள் சக்தி..!’’ first appeared on Madras Murasu.
]]>The post ”வல்லான் வகுத்ததை முறித்த வரலாறு” தோழர் முத்துராஜு க்கு புகழஞ்சலி செலுத்திய சு.வெங்கடேசன் எம்.பி., first appeared on Madras Murasu.
]]>இதுகுறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், அவரது முகநூலில் வெளியிட்ட பதிவு:
தோழர் முத்துராஜு இறுதி நிகழ்வை முடித்துவிட்டு வந்த கையோடு இதனை எழுதுகிறேன். இந்த அவசரத்திற்கு காரணம் தப்பிப்போனால் இதனைப் பதிவுசெய்ய முடியாமல் போய்விடுமோ என்ற பதட்டம்.
சில மனிதர்களின் நினைவுகள், அவர்கள் பிறந்த தேதியில் இருந்து தொடங்கும். ஆனால், சிலரின் நினைவுகள் அப்படித் தொடங்குவதில்லை. வரலாற்றில் நீண்டுக்கிடக்கும் பெருநினைவொன்றின் நீட்சியாகத்தான் அது தென்படும். தோழர் முத்துராஜுவின் நினைவும் அப்படித்தான். அவர் பணியாற்றிய ஹார்வி மில்லின் நீட்சியாகத்தான் அவரின் நினைவு மேலெழுந்து வருகிறது.

ஹார்விமில் என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டில், உருமாறிப் புதுப்பொழிவு பெற்ற நவீன மதுரையின் அடையாளம். பிரிட்டீஷாருக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த சுதந்திரப் போராட்டத்தின் அடையாளம். புதிதாக உருவான தொழிற்சங்கங்களுக்கும் அரசியல் இயக்கங்களுக்கும் அடையாளம். இதை மாற்றி சொல்வதாக இருந்தால், ஹார்வி மில் அரசியல் வாழ்விலும் பொருளியல் வாழ்விலும் உருவாக்கிய தாக்கத்தின் அடையாளமே நவீன மதுரை.
இந்த நூற்பாலையில் பணியாற்றிய பல்லாயிரக்கணக்கான தொழிலாளிகளின் சக்தியே நூற்றாண்டுக் கால மதுரை அரசியலின் கருப்பொருள்.
தொழிலாளிகளின் உரிமையைக் காக்க, ஜார்ஜ் ஜோசப் தொடங்கி கே.டி.கே தங்கமணி, சங்கரய்யா என மாபெரும் தலைவர்கள் ஹார்வி மில் நூற்பாலையின் வாசலின் காவல்தெய்வங்களாக நிலைபெற்றிருந்தார்கள்.
இந்த நூற்பாலையில் 1940-களில் நிகழ்ந்த மாபெரும் போராட்டம் தமிழகத் தொழிலாளி வர்க்க அரசியலின் மைல்கல். இந்தப் போராட்டத்தின் விளைவுகளில் ஒன்றாக இங்கு பணியாற்றிய தொழிலாளிகள் குடியிருக்கத் தனித்த காலனி குடியிருப்பு ஒன்று உருவானது. ஹார்விப்பட்டி என்னும் அந்தக் குடியிருப்பிலிருந்து தொழிலாளிகளை மூன்று ஷிப்டுகளுக்கும் ஆலைக்கு அழைத்துச் செல்ல தனி ரயில் ஏற்பாடானது. இந்தியாவில் தொழிலாளிகளுக்காகவே இயக்கப்பட்ட ரயில் அது.
இந்தப் போராட்டத்தால் தொழிலாளிகளுக்குக் கிடைத்த பலன் எண்ணற்றவை. இந்தப் பலன் கிடைக்க செங்கொடி இயக்கத் தோழர்கள் செய்த தியாகம் அதற்கு முன்னும் பின்னும் மதுரை வரலாறு சந்தித்திராதது. வைகையின் கரையில், உரிமைக்குரலை ஒடுக்குவோருக்கும் ஒடுக்குமுறையை முறியடிப்போருக்கும் இடையில் நீடித்து நடந்த போராட்டத்தின் விளைச்சல்தான் இன்றளவும் எந்த அதிகாரத்திற்கும் அடிபணியாது செழித்து நிற்கும் மதுரை செங்கொடி இயக்கத்தின் வரலாறு.
இந்த பெரும் வரலாற்றின் துணைக்கதைகளில் ஒன்றுதான் இப்பெரும் போராட்டத்தால் உருவான ஹார்விமில் காலனியின் கதை. ஹார்வி மில் காலனி என்பது எங்களது வாழ்வின், எங்களது அரசியலின் அடையாளம் என்று சொல்லுகிற எண்ணற்ற தோழர்களில் நானும் ஒருவன். எனது தாத்தாவும் பாட்டியும் ஹார்வி மில் தொழிலாளிகள். அவர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டில்தான் மூன்று தலைமுறையை எங்களின் குடும்பம் கடந்துள்ளது. இந்த காலனியில் குடியிருந்த ஒவ்வொரு குடும்பத்தின் நினைவுகளிலும் 1940 தொடங்கி சில பத்தாண்டுகள் நீடித்த தொழிற்சங்கப் போராட்டமும் அதன் முனைகளில் தெறித்த குருதியும் படிந்திருக்கும்.
அன்றைய தினம் அந்த மாபெரும் போராட்டத்தை நடத்திய பொழுது இரண்டு பெரும் தொழிற்சங்கங்கள் இருந்தன. போராட்டத்தின் முடிவில் நிர்வாகத்தோடு நடந்த ஒப்பந்தத்தின் விளைவாக அழகிய குடியிருப்பு உருவானபோது அதில் செங்கொடிச் சங்கத்தினர் ஒருவர்கூட நுழைந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தது நிர்வாகம். அவர்களின் ஆசிபெற்ற சங்கத்தினர் மட்டுமே இங்கு குடியமர்த்தப்பட்டனர், என் தாத்தா உட்பட.

பிரிட்டிஷாரின் மூலதனத்தால் இயங்கும் ஆலை. அவர்கள் கட்டிய குடியிருப்பில் ஒரு கம்யூனிஸ்ட் நுழைந்துவிடக்கூடாது என்று உறுதியோடு இருந்தது. இந்தத் தொழிற்சங்கப் போரட்டத்தின் தொடர்ச்சியாக எழுச்சிபெற்ற மதுரை செங்கொடி இயக்கத்தை முழுமுற்றாக ஒழிக்க நினைத்த பிரிட்டீஷார் “மதுரை சதி வழக்கை” உருவாக்கினர். மாபெரும் தலைவர்கள் எம்.ஆர். வெங்கட்ராமன், பி.இராமமூர்த்தி, என்.சங்கரய்யா உள்ளிட்ட 150-க்கும் அதிகமானோரை சிறையிலடைத்தனர். தலைவர்களைச் சிறையில் பூட்டியபின் செங்கொடி இயக்க வீரர்களை அழிக்க அதிகாரத்தின் வேட்டைநாய்கள் மதுரையின் வீதிகள்தோறும் ஏவப்பட்டன. பட்டியக்கல் பதித்த நான்மாடக்கூடலின் தெருவெங்கும் எமது தோழர்களின் குருதிதோய்ந்தது. தேடித்தேடி வேட்டையாடப்பட்டார்கள். திசை எங்கும் வேட்டையாடப்பட்டார்கள். அழியும் வரை வேட்டையாடப்பட்டார்கள். வேட்டை முடிந்தது. ஆனால் அவர்கள் நினைத்த அழிவு மட்டும் நடக்கவே இல்லை. மாறாக சிந்திய குருதி செழிப்புற்று எழுந்தது. “சிறைக்குள் இருந்தபடியே தோழர் பி. ஆர். வென்றார்” என்ற சத்தம் மதுரை தொழிலாளி வர்க்கம் முரசரைந்த பேரிகை ஓசை.
1940கள் தொடங்கி 1950-களின் இறுதி வரை அடக்குமுறையை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்ட எமது தோழர்கள் இல்லையென்றால் மதுரையின் அரசியல் என்பது மிட்டாமிராசுகளின் அரசியலாகவும் பண்ணைகளின் அரசியலாகவும் மட்டுமே இருந்திருக்கும். ஜனநாயகத்தின் துணைகொண்டு செல்வாதாரத்தின் முதுகெலும்பை முறித்துக் காட்டியது மதுரையின் உழைப்பாளி வர்க்கம்.
இந்தக் கதையின் இன்னுமொரு ஆற்றல்மிகு அத்தியாயம்தான் ஹார்விமில் காலனி. சுமார் 8 மாதத்திற்கும் அதிகமான காலம் பத்தாயிரத்திற்கும் அதிகமான தொழிலாளிகள் பிரமாண்டமாக நடத்திய போராட்டத்தின் வெற்றிகளில் ஒன்றாகக் கிடைத்த குடியிருப்பில், அந்த போராட்டத்தின் ஜீவ ஊற்றாக இருந்த செங்கொடி இயக்கத்தின் நிழல்கூடப் படாமல் பார்த்துக்கொண்டது அதிகார வர்க்கம்.
வரலாறு, வல்லான் வகுத்த பாதையில் மட்டும் செல்லும் என்ற மூடநம்பிக்கையை தகர்ப்பதே முற்போக்குச் சக்திகளின் முதல் பணி. ஒரு கம்யூனிஸ்ட்கூட நுழைந்து விடக்கூடாது என்று உருவாக்கப்பட்ட ஹார்வி மில் காலனி, ஒரு கட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் கோட்டையாக மாறியது. இந்த காலனி தனிப்பேரூராட்சியாக மாறியபோது அதன் தலைவராக கம்யூனிஸ்டுகள் பொறுப்பேற்றனர். மதுரை மாநகராட்சியோடு இணைந்தபோது அதன் மாமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றனர். இது எளிதில் நிகழ்ந்த ஒன்றன்று. ஒரு கொடிய வரலாற்றை முறித்து, எளிய மனிதர்களின் கொடி பறந்த கதை.
இந்த கதையில் எத்தனையோ நாயகர்கள் உண்டு. ஆனால் நானறிந்த தலைநாயகன் தோழர் முத்துராஜ். 1950-களின் தலைமுறை முடிந்து அடுத்த தலைமுறை ஹார்வி மில் நூற்பாலையில் இருந்து மேலெழுந்தபோது அதில் விளைந்து வந்தவர் தோழர் முத்துராஜ். ஆலைத் தொழிலாளியாக பல உரிமைப் போராட்டங்களில் பங்கெடுத்தவர். ஆலையில் பணியாற்றி, தொழிற்சங்கப் பணிகளை பார்த்துக் கொண்டே வீதிகளில் அரசியல் பணியை இமைசோராமல் பார்க்கக் கூடியவர். ஆலையில் இருந்து ஓய்வுபெற்ற பின், கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியராக தன்னை இணைத்துக்கொண்டார். தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பரங்குன்றம் தாலுகா செயலாளராக பணியாற்றினார்.
எனது கல்லூரிக் காலத்தில் என்னை வசீகத்த தலைவர்களில் ஒருவர். மார்க்சிஸ்ட் கட்சியில் நான் இணைந்தபோது எனது கிளையின் செயலாளர். பயிற்சி தரவும் பண்பு பாராட்டவும் அவருக்கு இணைகண்டதில்லை. வழிகாட்டுவதும் வளர்த்தெடுப்பதும் எப்படி என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர் எங்களின் அசைக்க முடியா பேருறுதி தோழர் முத்துராஜ்.
அவரின் நினைவும் புகழும் பங்களிப்பும் நீண்டு நிலைக்கும்.
செங்கொடி ஏந்தி வணங்குகிறேன்.
The post ”வல்லான் வகுத்ததை முறித்த வரலாறு” தோழர் முத்துராஜு க்கு புகழஞ்சலி செலுத்திய சு.வெங்கடேசன் எம்.பி., first appeared on Madras Murasu.
]]>The post ’’அவசரநிலைப் பிரகடனம் நமது வரலாற்றின் இருண்ட காலம்..!’’ குடியரசு துணைத்தலைவர் first appeared on Madras Murasu.
]]>நமது மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகளை பூமியில் உள்ள எந்த சக்தியாலும் பறிக்க முடியாது என்று குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் 09.11.2023 அன்று கூறியுள்ளார். அவசர நிலைப் பிரகடனம் அமல்படுத்தப்பட்டதை “வரலாற்றில் இருண்ட காலம்” என்று வர்ணித்த அவர், அந்தக் காலகட்டத்திலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் மூலம் அனைவரும் முன்னேற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
கோவா ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய தன்கர், ஆளுநரின் முக்கியப் பங்கினை எடுத்துரைத்தார். அரசியலமைப்பைப் பாதுகாப்பது என்ற ஆளுநரின் உறுதிமொழியை குறிப்பிட்ட அவர், நாட்டு மக்களுக்கு சேவை செய்யும் அதே வேளையில், அனைவரும் அரசியலமைப்பிற்கு இணங்க செயல்படுவதை உறுதி செய்வதில் ஆளுநரின் பொறுப்பை அவர் சுட்டிக் காட்டினார்.
பரபரப்பான வாழ்க்கை முறைகளுக்கு மத்தியில் மக்களுக்கு ஆறுதலையும் அமைதியையும் தேடுவதற்கான வழியை வழங்கும் வகையில், சரியான நேரத்தில் இந்தப் புத்தக வெளியீடு வருகிறது என்று குடியரசு துணைத்தலைவர் குறிப்பிட்டார். இந்த புத்தகம் “இயற்கையுடன் இணைவதற்கு அமைதியான இடத்தை” உருவாக்குகிறது என்று அவர் மேலும் கூறினார். போன்சாய் என்பது சீனா மற்றும் ஜப்பானுடன் தொடர்புடையது என்ற பொதுவான நம்பிக்கைக்கு மாறாக, இந்தியாவில் தோன்றிய ஒரு கலை வடிவம் என்றும் அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கோவா ஆளுநர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை, கோவா முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த், நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவருமான டாக்டர் பி.டி.உஷா, ஞானபீட விருது பெற்ற தாமோதர் மௌசோ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
The post ’’அவசரநிலைப் பிரகடனம் நமது வரலாற்றின் இருண்ட காலம்..!’’ குடியரசு துணைத்தலைவர் first appeared on Madras Murasu.
]]>The post ”கார்பன் டை ஆக்சைடை கார்பன் மோனாக்சைடாக மாற்றும் புதிய தொழில்நுட்பம்..!” first appeared on Madras Murasu.
]]>கார்பன் டை ஆக்சைடை கார்பன் மோனாக்சைடாக மாற்றும் புதிய ஆற்றல் திறன் கொண்ட தொழில்நுட்பம் எஃகு துறையில் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. 2070 க்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வுக்கான இந்தியாவின் இலக்கை அடையும் முயற்சிகளில், மும்பை ஐஐடி-யில் உள்ள தேசிய கார்பன் மையம்பல்வேறு புதுமையான, வழிமுறைகளை உருவாக்குவதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இதில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, டாக்டர் அர்னாப் தத்தா மற்றும் டாக்டர் விக்ரம் விஷால் தலைமையிலான ஆய்வாளர்கள் குழு மற்றும் தேசிய மையத்தின் ஆராய்ச்சி மாணவர்கள், கார்பன் டை ஆக்சைடை கார்பன் மோனாக்சைடாக மாற்றும் தொழில்நுட்பத்திற்கான காப்புரிமையை பெற்றுள்ளனர்.
கார்பன் மோனாக்சைடு என்பது தொழில்துறையில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு வேதிப்பொருளாகும். எஃகுத் தொழிலில், வெடிப்பு உலைகளில் இரும்புத் தாதுக்களை உலோக இரும்பாக மாற்றுவதற்கு இது ஒரு இன்றியமையாத மூலப்பொருள் ஆகும். தற்போது, கோக் மற்றும் நிலக்கரியின் ஆக்ஸிஜனேற்றத்தின் மூலம் கார்பன் மோனாக்சைட் உருவாக்கப்படுகிறது.
கார்பன் டை ஆக்சைடை, கார்பன் மோனாக்சைடாக மாற்ற முடிந்தால், கார்பன் தடம் குறைவதுடன் தொடர்புடைய செலவுகளும் குறையும். இந்தத் தொழில்நுட்பம் பல்வேறு தொழில்துறை பயன்பாடுகளுக்கு ஊக்கமளிக்கும்.
The post ”கார்பன் டை ஆக்சைடை கார்பன் மோனாக்சைடாக மாற்றும் புதிய தொழில்நுட்பம்..!” first appeared on Madras Murasu.
]]>