Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6114
’’துப்பு இல்­லாத பா.ஜ.க..!’’ மலையகத் தமிழர் 200 குறித்து முரசொலி தலையங்கம் - Madras Murasu
spot_img
More
    முகப்புசெய்திகள்உலகம்’’துப்பு இல்­லாத பா.ஜ.க..!’’ மலையகத் தமிழர் 200 குறித்து முரசொலி தலையங்கம்

    ’’துப்பு இல்­லாத பா.ஜ.க..!’’ மலையகத் தமிழர் 200 குறித்து முரசொலி தலையங்கம்

    மலையகத் தமிழர் 200 

    இலங்­கை­யில் மலை­ய­கத்­தில் தமி­ழர் குடி­யேறி -– அந்த மண்ணை வாழ்­வித்து 200 ஆண்­டு­கள் ஆகி­விட்­டது. இந்த நிலை­யில் மலை­ய­கத் தமிழ் மக்­க­ளுக்கு தனது மன­மார்ந்த வாழ்த்­து­க­ளைத் தெரி­வித்­துக் கொண்­டுள்­ளார் மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள். இத­யத்­தின் அடி­யா­ழத்­தில் இருந்து அன்­பு­ட­னும் அக்­க­றை­யு­ட­னும் தெரி­வித்த வாழ்த்­து­கள் ஆகும் இவை.

    *மனி­தன் வாழ்ந்­தி­ராத மலைக்­கா­டு­களை மலை­ய­கத் தோட்­டங்­­களாக மாற்­றி­ய­வர்­கள் மலை­ய­கத் தமி­ழர்­கள் ஆவார்­கள்.

    மலை­ய­கத் தமிழ்த் தொழி­லா­ளர்­க­ளின் வர­லாறு இலங்­கை­யில் காப்பி பயிர் செய்­யப்­பட்ட ஆரம்­ப­கட்­டத்­தில் இருந்து தொடங்­கு­கி­றது.

    *இது இலங்­கைப் பொரு­ளா­தா­ரத்­தில் மகத்­தான மாற்­றத்தை உரு­வாக்­கி­யது. பின்­னர், ரப்­பர், தென்னை என அனைத்­துப் பணப் பயிர்­களது உற்­பத்­தி­யும் மலை­ய­கத் தமி­ழர்­க­ளது உழைப்­பால் உரு­வா­ன­து­தான்.

    *பயி­ரி­டப்­ப­டாத நிலத்தை பயி­ரிட்­டும் -– காடு­க­ளாக இருந்த நிலத்தை காசுப் பயிர்­க­ளாக விளை­வித்­தும் பின் தங்­கிய பொரு­ளா­தா­ரத்தை முன்­னணி பொரு­ளா­தா­ர­மாக ஆக்­கி­ய­வர்­கள் மலை­ய­கத் தோட்­டத் தொழி­லா­ளர்­கள் ஆவார்­கள்.

    *இலங்கை நாட்­டுக்­காக தங்­க­ளது உழைப்பை வழங்­கி­ய­வர்­கள் மலை­ய­கத் தமி­ழர்­கள். இலங்கை நாடு உயர உழைத்­த­வர்­கள். தங்­க­ளது ரத்­தத்­தை­யும் வியர்­வை­யை­யும் காலத்­தை­யும் கட­மை­யை­யும் அந்த நாட்­டுக்­கா­கவே ஒப்­ப­டைத்­த­வர்­கள்.

    – – என்று அந்த மக்­க­ளின் மகத்­தான உழைப்­பைப் பாராட்டி இருந்­தார் முத­ல­மைச்­சர் அவர்­கள்.

    “இத்­த­கைய மலை­யக மக்­க­ளின் நீதி­யும் உரி­மை­யும் நிலை­நாட்­டப்­பட வேண்­டும் என்று கேட்­டுக் கொள்­கி­றேன். கல்வி, சுகா­தா­ரம், வாழிட உரி­மை­கள், பொரு­ளா­தார உத­வி­கள், சமூக உரி­மை­கள் அனைத்­தும் வழங்­கப்­பட வேண்­டும்.”என்­ப­தை­யும் வலி­யு­றுத்தி இருந்­தார் முத­ல­மைச்­சர் அவர்­கள். ஏனென்­றால் அம்­மக்­க­ளின் நிலைமை என்­பது பெரி­தாக மாறி­வி­ட­வில்லை. இலங்­கையை உயர்த்­திய, மேம்­ப­டுத்­திய அவர்­க­ளது வாழ்க்கை மேலும் முன்­னேற வேண்­டும் என்­பதை வலி­யு­றுத்­தும் வித­மாக முதல்­வர் அவர்­கள் வலி­யு­றுத்தி இருந்­தார்.

    முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் உரை, இலங்­கை­யில் நடை­பெ­றும் விழா­வுக்­காக தயா­ரிக்­கப்­பட்­டது ஆகும். இலங்­கை­யில் குடி­ய­மர்த்­தப்­பட்ட மலை­ய­கத் தமி­ழர்­க­ளது 200 ஆவது ஆண்­டு­வி­ழாவை முன்­னிட்டு ஒரு விழா ஏற்­பாடு செய்­யப்­பட்­டது.“நாம் 200 – – ஒற்­றுமை, பன்­மு­கத்­தன்மை மற்­றும் பாரம்­பர்­யத்­தின் முழக்­கம்”என்­பது இந்த நிகழ்ச்­சி­யின் பெயர். இந்த நிகழ்ச்­சியை இலங்கை மலை­ய­கத் தமி­ழர்­க­ளுக்­காக இலங்­கை­யின் உள்­நாட்டு தோட்­டத் தொழில் துறை மற்­றும் அரசு தொழில் துறை அமைச்­ச­கம் முன்­னெ­டுத்­தது. அந்த விழா ஏற்­பாட்­டா­ளர்­கள் கேட்­டுக் கொண்­ட­தால் தயா­ரிக்­கப்­பட்ட உரை இது. ஆனால் அந்த உரை, விழா­வில் ஒளி­ப­ரப்­பப்­ப­ட­வில்லை.

    இது குறித்து ‘தி இந்து’ ஆங்­கில நாளி­தழ் வெளி­யிட்­டுள்ள செய்­தி­யில்,‘தமிழ்­நாடு முத­ல­மைச்­ச­ரின் உரையை ஒளி­ப­ரப்­பக் கூடாது என்று இந்­திய பா.ஜ.க. அரசு தடை போட்­டு­விட்­டது’என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதை விட ஜன­நா­யக மறுப்பு, தமி­ழர் விரோ­தச் செய்கை இருக்க முடி­யாது.

    முத­ல­மைச்­சர் உரை­யைத் தடை செய்­வ­தன் மூல­மாக, மலை­ய­கத் தமி­ழர்­கள் மீதான தி.மு.க.வின் பற்­று­தலை மறைக்­கும் சதிச் செயலை ஒன்­றிய பா.ஜ.க. அரசு செய்­துள்­ளது.

    இதே நிகழ்­வில் இன்­னொரு சதி­யை­யும் ஒன்­றிய பா.ஜ.க. அரசு செய்­துள்­ளதை தமிழ்­நாடு நிதி அமைச்­சர் தங்­கம் தென்­ன­ரசு அவர்­கள் அம்­ப­லப்­ப­டுத்தி இருக்­கி­றார்­கள்.

    “அந்த விழா­வில் மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் அவர்­கள் கலந்­து­கொள்ள வேண்­டும் என்­றும் முறை­யான அழைப்பு தமிழ்­நாடு அர­சிற்கு அனுப்­பப்­­ பட்டது. முத­ல­மைச்­சர் அவர்­கள் அந்த நிகழ்­வில் கலந்து கொள்ள இய­லாத நிலை­யில், என்னை அந்த விழா­வில் கலந்து கொள்­ளு­மாறு அவர்­கள் பணித்­தி­ருந்­தார்­கள். இலங்கை பய­ணம் மேற்­கொள்­வ­தற்­காக ஒன்­றிய அர­சின் வெளி­வி­வ­கா­ரத் துறை­யி­லி­ருந்து உரிய அனு­ம­தி­யினை பெறு­ வ­தற்கு கடந்த மாதம் 28-ஆம் தேதி உரிய வழி­மு­றைப்­படி விண்­ணப்­பம் நம்­மு­டைய பொதுத்­து­றை­யால் அனுப்­பப்­பட்­டு­விட்­டது. political clearance என்று சொல்­லக்­கூ­டிய வெளி­வி­வ­கா­ரத்­தின் அனு­மதி கிடைப்­ப­தற்­காக நான் காத்­துக் கொண்­டி­ருந்­தேன்,

    அக்­டோ­பர் 28 ஆம் தேதி அன்று பொதுத் துறை­யின் வாயி­லாக ஒன்­றிய அர­சிற்கு அனுப்­பப்­பட்­டது. விழா நவம்­பர் 2-ஆம் தேதி மதி­யம். ஆனால் 1-ஆம் தேதி இரவு எட்­டரை மணி வரை வர­வில்லை. ஒன்­றிய அர­சி­ட­மி­ருந்து அனு­மதி இது­வரை வராத கார­ணத்­தால் நான் பய­ணத்தை மேற்­கொள்ள இய­லாத நிலை­யில் இருப்­பதை சுட்­டிக்­காட்டி, என்­னு­டைய பயண ஏற்­பா­டு­களை நான் இரத்து செய்­து­விட்டு வீடு திரும்­பி­னேன். அதற்­குப்­பி­றகு ஒன்­ப­தரை மணிக்கு மேல் அனு­மதி வந்­தி­ருக்­கி­றது. ஆனால் அதற்கு முன்­ன­தாக நான் பயண ஏற்­பா­டு­களை எல்­லாம் இரத்து செய்­து­விட்ட கார­ணத்­தி­னால், இரவு 8.30 மணிக்கு மேல் அத்­த­கைய அனு­மதி கிடைப்­ப­தற்கு வாய்ப்பு இல்லை என்று கருதி, முறைப்­படி விழா ஏற்­பாட்­டா­ளர்­க­ளி­டம் இதனை தெரி­வித்­து­விட்டு பயண ஏற்­பா­டு­களை எல்­லாம் இரத்து செய்­து­விட்­டோம்.”என்று சொல்லி இருக்­கி­றார் அமைச்­சர் தங்­கம் தென்­ன­ரசு.

    வெளி­நாட்­டில் நடை­பெ­றும் விழா­வுக்கு அனு­மதி தரு­வ­தில் ஒன்­றிய அரசு எப்­படி நடந்து கொண்­டுள்­ளது என்­ப­தன் மூல­மாக – எத­னால் இப்­படி நடந்து கொண்­டது என்­ப­தை­யும் தெரிந்து கொள்­ள­லாம்.

    குடி­யு­ரி­மைச் சட்­டத்­தின் மூல­மாக இலங்­கைத் தமி­ழர்­களை குடி­யு­ரிமை அற்­ற­வர்­க­ளாக ஆக்­கிய பா.ஜ.க., இப்­போது மலை­ய­கத் தமி­ழர்­கள் விழா­வில் எத்­த­கைய சதிச்­செ­யல்­க­ளில் ஈடு­ப­டு­கி­றது என்­பது புரி­கி­றது. இந்த நிலை­யில் மலை­ய­கத் தமி­ழர் மாநாட்­டில் கலந்து கொள்ள பா.ஜ.க. அமைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன் இலங்கை சென்­றி­ருக்­கி­றார்.

    இன்­ன­மும் இந்­திய மீன­வர்­கள், படும் துன்ப துய­ரங்­க­ளுக்கு முற்­றுப்­புள்ளிவைக்­கத் துப்பு இல்­லாத பா.ஜ.க. இலங்­கைக்­குப் போய் மலை­யக மக்­களை ஏமாற்­ற­லாம் என்று நினைப்­பது காலக் கொடு­மையே ஆகும்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments